-
24th June 2012, 02:19 AM
#301
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
Pammalaar sir,
You have every right and privilege to dig at me. I object if you try to explain that it is lighter side. Dont worry. I will never take any kind of even slightest offence in what you write. Great stills on Gnana oli. I know one soul will be gleeing and jumping. It will do good for that soul.
Like Rahul mentioned Raghavendar- Swamy-Vasu devan Combo is lifeline for this thread.
மிகமிக நன்றி, அடிகளாரே..!
-
24th June 2012 02:19 AM
# ADS
Circuit advertisement
-
24th June 2012, 02:36 AM
#302
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
"ராஜா" மெகா ஆல்பம் அடியேன் சொன்னதுபோல் செமரகளைதான்..! நிழற்படங்களை வாரி வழங்குவதே பெருஞ்சேவை..! அத்தோடு நில்லாமல் ஃப்ரேம் போட்டு வேறு தருகிறீர்கள்..! தங்களின் மாபெரும் தொண்டுக்கு ஈடு இணை இல்லை..!
நாளை [ஜூன் 24] கவியரசரின் பிறந்த நாள். "ஞான ஒளி"யின் கதையை தாங்கள் கவிதையாக பதித்தபோது அக்கவியரசரே தங்கள் நாவில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார். 'ஆண்டனி' ஆல்பம் ஆல்டைம் ஃபேவரைட்..!
அன்புடன்,
பம்மலார்.
-
24th June 2012, 03:00 AM
#303
Senior Member
Veteran Hubber
நன்றி, ராகவேந்திரன் சார்..!
Thank You, Gnanaguruswamy Sir..!
-
24th June 2012, 03:05 AM
#304
Senior Member
Veteran Hubber

Originally Posted by
J.Radhakrishnan
டியர் பம்மலார் சார்,
தங்களின் ஞான ஒளி "surprise" பதிவு அதி அற்புதம்.
தொடரட்டும் தங்கள் திருப்பணி.
பாராட்டுக்கு நன்றி, ஜேயார் சார்..!
-
24th June 2012, 03:47 AM
#305
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
இரண்டு நாட்களாக இண்ட்டெர்நெட் வேலை செய்யவில்லை. அய்யய்யோ... நம்ம பம்மலார் பாசமலர் ஆவணங்களை அள்ளித்தந்திருப்பாரே, அதைத்தொடர்ந்து என்னுடைய பணிவான வேண்டுகோளையேற்று (பம்மலார் அவர்கள் சொன்னதுபோல கட்டளை அல்ல) 'ராஜா'வின் வெற்றி பவனியை உலவ விட்டிருப்பாரே என்று ஆதங்கப்பட்டு இன்றைக்குத்தான் நெட் இணைப்பு சரியானதும் முதல்வேலையாக நான் செய்தது நமது நடிகர்திலகத்தின் திரிக்கு ஓடோடி வந்ததுதான்.
வந்து பார்த்தால்..... அடேயப்பா ஆவண மழையாகப்பொழிந்து தள்ளி விட்டிருக்கிறீர்கள்.
'பாசமலரின்' வாசம் கமழும் ஆவணப்பொன்னேடுகள் என்ன....
'ராஜா' வின் வெற்றி நடைக்கான சாதனைச்சரித்திரம் என்ன.....
தமிழகத்தை, குறிப்பாக சென்னையை கலங்கடித்த 'ஞான ஒளி'யின் காணக்கிடைக்காத வரலாற்று ஏடுகள் என்ன......
வாய்பிளந்து மலைத்துப்போய் நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை. எனது வேண்டுகோளையேற்று 'ப்ரம்மாஸ்த்திரத்தை' என் கையில் தந்து, அதை மறந்து போகாமலும் இருக்க ஆசீர்வதித்த நவீன பரசுராமரே தங்களூக்கு எண்ணிலடங்கா நன்றிகள். இந்த ப்ரம்மாஸ்திரத்தில் என் நண்பரின் தவறான பிரச்சாரம் அழிந்து மண்ணாகப்போவது திண்ணம்.
சஸ்பென்ஸ் பதிவு என்றதும், என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கையில் எதிர்பாராத விதமாக 'ஞான ஒளி'யை வீசச்செய்து, திரியை ஒளிவெள்ளமாக்கி விட்டீர்கள். ஞான ஒளியின் சென்னை விநியோகஸ்தர்களான ஜெயராமன் பிக்சர்ஸார், ஏதோ கடனே என்று விளம்பரம் செய்யாமல், டிஸைன் டிஸைனாக யோசித்து, யோசித்து, ரசித்து ரசித்து புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக 'ஞான ஒளி' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஓடிக்கொண்டிருந்த படங்களின் பட்டியலை விளம்பரத்திலேயே தந்தது புதுமையான உத்தி மட்டுமல்ல, காலத்திற்கும் அழியாத ஆவணமும் ஆகும். இதுபோல எந்த நடிகரின் படங்களாவது சென்னையில் ஒரே நேரத்தில் 80 சதவீத திரையரங்குகளை ஆக்ரமித்தது உண்டா என்று சவால் விடுகிறோம். பதில் 'இல்லை'யென்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. 1972 - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் கோகினூர் வைரம் அல்லவா.
தாங்கள் தந்த பாசமலர், ராஜா, ஞான ஒளி வெற்றி ஆவணங்களில் சென்னை சாந்தி தியேட்டர் இல்லையென்பது கூடுதல் ஆனந்தம், திருப்தி, மகிழ்ச்சி.
ஒவ்வொரு நண்பரின் பதிவுகளையும் தனித்தனியே நினைவுகூர்ந்து பாராட்டுவதும், நன்றி சொல்வதும் தங்களின் தனிச்சிறப்பு. உங்கள் மந்திர ஜாடிக்குள் இன்னும் என்னென்ன அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.
நீங்கள் வாழிய பல்லாண்டு.
டியர் mr_karthik,
மிகக் குறுகிய காலத்தில் தங்களின் இணையதள இணைப்பு சீரானது மகிழ்ச்சியளிக்கின்றது..!
தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பெற்றது என் பாக்கியம்..!
ஒரு மஹாபண்டிதரிடமிருந்து பாராட்டு பெறும்போது எத்துணை மகிழ்ச்சி ஏற்படுமோ, அதனினும் மேலான மகிழ்ச்சி தாங்கள் பாராட்டும்போது ஏற்படுகின்றது..!
தங்களின் பாராட்டு, அடுத்தடுத்த பதிவுகளை அடியேன் சிறந்த முறையில் அளிப்பதற்கு, ஒரு உற்சாக டானிக்காகவும் திகழ்கின்றது..!
மனமாரப் பாராட்டுதல் எனும் உயர்ந்த பண்பை குணநலனாகக் கொண்டுள்ள புண்ணிய புருஷரே, நீவீர் நீடூழி வாழ்க..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
24th June 2012, 03:55 AM
#306
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தமிழகத் தலைநகரில், கலைத்தாயின் தலைமகனின் "கர்ணன்" [டிஜிட்டல்] காவியத்தினுடைய 100வது நாள் கொண்டாட்டங்கள் திருவிழாக் கோலம் பூண்டு விட்டதை தாங்கள் பதித்துள்ள நிழற்படங்கள் பறைசாற்றுகின்றன. இடுகைகளுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
24th June 2012, 04:55 AM
#307
Junior Member
Junior Hubber
திரு. பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களுக்கு,
உங்களின் இருவரின் பொற்கால ஆட்சி தொடரட்டும். தலைசிறந்த மன்னர்கள் தரணியை ஆட்சி புரியும் போது மக்களுக்கு குறையேது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியங்களாம் ராஜாவையும், ஞான ஒளியையும் பதிவிட்டு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்த தங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் இப்பெறும் சேவைகளுக்கு வெறும் நன்றி ஈடாகிவிடாதுதான். எனினும் அதற்கு ஈடாக உலகில் வார்த்தையில்லை என்கிற காரணத்தினால் அதையே தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
ராஜா
ஸ்டைல் என்றால் என்னவென்று உலக நடிகர்களுக்கு கற்றுத் தந்த படம் அல்ல, அல்ல, பாடம்.
ஞான ஒளி
கருவுற்று மனைவி பிரசவத்திற்காக மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது, நடிகர் திலகம் வீட்டைப் பூட்டிக்கொண்டு புற்ப்படும்போது ஒரு பெரியவர் வந்து அவசரமா ஒரு பெட்டி செய்யனும்பா. சூசை ஆயா இழுத்துக்குனு இருக்குதுபா. முன்னூறுபா தரேன் என்று சொல்லுகிற போது. முன்னூறுபாயா! என் மனைவிக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு என்னா பண்றதுன்னு இருந்தேன். நல்ல வேளை! ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணி தரேன். இந்த ஊர்லேயே யாரும் செய்யாத அளவுக்கு first classஆ ஒரு பொட்டி செஞ்சு தரேன் என்று நடக்கப் போவதை அறியாமல் நடிகர் திலகம் சொல்லுகிறபோதே நெஞ்சு அடைக்க ஆரம்பித்துவிடும். (இருங்க கொஞ்சம் அழுதுக்குறேன்) அப்போ ஆரம்பித்த அந்த நெஞ்சடைப்பு, பொறக்குறத காப்பாத்துரப்போ இருக்குறத கர்த்தர் எடுத்துக்கிட்டாருடா என்று பாதரியார் சொல்லூகிறபோது கண்களில் கண்ணீர் குலமாக மாறி ஓடியிருக்கும். அதோடு நில்லாமல், அடுத்த படம் பார்க்கிறவரை இந்த காட்சியையும், இன்னபிற காட்சிகளையும் நினைவு படுத்தி, நினைவு படுத்தி எத்தனையோ முறை அழுது இருக்கிறேன். இன்றும் அதே நிலைதான். ஒவ்வொறு ஸ்டில்களையும் பார்க்கிறபோது அந்த ஸ்டில்லுக்கு பின்னால் இருக்கும் காட்சி நினைவுக்கு வராமல் இல்லை.
நட்புடன்
-
24th June 2012, 05:16 AM
#308
Senior Member
Veteran Hubber
டியர் சிவாஜிதாசன் சார்,
ராஜமரியாதையுடன் கூடிய தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
தங்களின் பதிவு (குறிப்பாக "ஞான ஒளி" பகுதி), என்னை உணர்ச்சிப்பிழம்பாக்கிவிட்டது..!
உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.
-
24th June 2012, 05:19 AM
#309
Senior Member
Veteran Hubber
-
24th June 2012, 06:13 AM
#310
Junior Member
Veteran Hubber
fantastic presentation dear Pammalar Sir. The seed sown is not wasted, it has now become an ever expanding Banyan Tree with NT as the main root. We normally initiate all our duties with a prayer to Lord Ganesan, Same way, The Tamil Cinema has now seen its dawn after more than 80 years of its history, the one and the only Karnan epotomized by the doyen of Indian Cinema, NT. If properly presented with a sequence of carefully selected and edited versions of NTmovies, no doubt, NT will always be with generations to come as the true legend of all times! We NT fans are grateful to you, sir.
Bookmarks