-
25th June 2012, 04:24 AM
#11
Senior Member
Diamond Hubber
செந்தில்.. மறுபடியும்! ஒன்னே ஒண்ணு சொல்லி முடிச்சிக்கிறேன். எனக்கு நல்ல வரிகள் அமைந்த பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதோடு நல்ல இசை அமைந்தால் கரும்பு தின்னக் கூலியா? கருப்பு வெள்ளை காலத்தில் கோலோச்சிய இசையமைப்பாளர்கள், ராஜா - ரஹ்மான் என்ற நீண்ட சங்கிலியில் சிறப்பான, காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களில் பெரும்பாலானவற்றில் பாடல் வரிகள்தான் (சிறப்பான மற்றும் எளிமையான) எனக்கு முதன்முதலாக தெரிகிறது. ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு தீவுகளாக வைத்துக்கொண்டால் அதன் வரிகள்தான் கலங்கரை விளக்கம். காட்சிகளுக்கு பக்கபலமாக தொடர்கிற பின்னணி இசை என்ற விஷயத்திற்கே நான் போகவில்லை. அதில் ராஜா எப்படிப்பட்டவர் என்பதில் நான் எந்தப் புரிதலில் இதுவரை இருக்கிறேனோ அதையேத்தான் உங்களது விளக்க உரையும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th June 2012 04:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks