-
28th June 2012, 08:06 PM
#381
Devoted Hubber
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:
நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு
Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.
-
28th June 2012 08:06 PM
# ADS
Circuit advertisement
-
29th June 2012, 03:17 PM
#382
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sundararaj
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்துள்ளேன். நலமாய் உள்ளீர்களா மாலா அவர்களே? ஒரு வெண்பாவை இங்கு பதிய விரும்புகிறேன்:
நேரிசை வெண்பா :
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு
வருக வருக, நல்வரவாகுக திரு சுந்தரராஜ் அவர்களே; நீங்கள் நலம்தானே?
நீங்கள் சொல்வது சரிதான். பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் சமமாகாத நிலையில், ஏமாற்று வேலைதான்.
பெண்ணியத்திற்கு உங்களைப்போல் நீதியுணர்வு மிக்க ஆடவர்களின் தார்மீக ஆதரவு என்றும் தேவைப்படுகின்றது.
இப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றக்கூடா தென்றுதான்,
"தந்தையர் நாடென்னும் பேச்சினிலே --ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று பாடிவிட்டார் பாரதியார்.
உங்கள் நேரிசை வெண்பாவும் நன்று. இத்துடன் ஒரு இருநூறாவது பாடிமுடித்திருப்பீர்களா?
Last edited by bis_mala; 29th June 2012 at 03:26 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
1st July 2012, 07:07 AM
#383
Devoted Hubber
Originally Posted by
bis_mala
வருக வருக, நல்வரவாகுக திரு சுந்தரராஜ் அவர்களே; நீங்கள் நலம்தானே?
நீங்கள் சொல்வது சரிதான். பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் சமமாகாத நிலையில், ஏமாற்று வேலைதான்.
பெண்ணியத்திற்கு உங்களைப்போல் நீதியுணர்வு மிக்க ஆடவர்களின் தார்மீக ஆதரவு என்றும் தேவைப்படுகின்றது.
இப்படியெல்லாம் பெண்களை ஏமாற்றக்கூடா தென்றுதான்,
"தந்தையர் நாடென்னும் பேச்சினிலே --ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று பாடிவிட்டார் பாரதியார்.
உங்கள் நேரிசை வெண்பாவும் நன்று. இத்துடன் ஒரு இருநூறாவது பாடிமுடித்திருப்பீர்களா?
மிகவும் நன்றி ...மாலா அவர்களே. இருநூறு பாடல்கள் முடிக்கவில்லை. ஏதோ கொஞ்சம்தான். கடுமையான நீரழிவு நோய், தைரோயடு, இதய நோய் எல்லாம் சேர்ந்து கஷ்டப்பட்டேன். அதிகவேளைப்பளு வேறு. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். ஆக எல்லாம் சேர்ந்து கவிதை எழுதுவதில் கவனம்செலுத்த முடியவில்லை. இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை. எனவே அவ்வப்போது எழுதி வருகிறேன். இன்னும் ஒரு வருடத்தில் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பின்பு முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளேன்.
Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.
-
1st July 2012, 07:19 AM
#384
Devoted Hubber
நம்முடைய நாடறி நீ நன்கு
[இன்னிசை கலிவெண்பா]
ஆண்குழந்தை வேண்டுமென்ற ஆசையிலே நம்நாட்டில்
வீண்கொலைகள் செய்கின்றார் வீணர்கள் பெண்சிசுவை
சொல்கிறதே ஐநாவின் தூற்றுகின்ற ஓரறிக்கை
“கொல்வதுவோ ராயிரமேல்க் கூடுமென்றார் ஒர்நாளும்”
பெண்பிள்ளை வந்துதித்தால் பெற்றோர்கள் பேரிடியால்
மண்ணிடிந்து வீழ்ந்திட்ட மாளிகைபோ லாகிடுவர்
கள்ளிப்பால் ஊட்டிவிட்டுக் கல்நெஞ்சாய் நெல்மணியை
உள்வாயில் தூவிவிட்டே ஓருயிரைத் மாய்த்திடுவர்
இப்படியே செய்வதினால் இங்கோஈர் பால்விகிதம்*
தப்பிதமாய் தான்குறைந்தே தாறுமாறாய் போனதுபார்
சின்னதிலே கல்யாணம் செய்தவளைத் தள்ளிடுவர்
சொன்னபடித் தட்சனையைத் துன்முகமாய்த் தந்திடுவர்
தப்பிதமாய்த் தன்கணவன் தற்செயலாய் மாண்டுவிட்டால்
எப்போதும் கைம்பெண்ணாய் ஏதிலிபோல் வைத்திடுவர்
மும்பையிலும் கொல்கத்தா முன்வளர்ந்த வூர்களிலும்
தம்முடலைத் தந்தலையும் சாக்கடையாய் லட்சம்மேல்
நம்முடைய நாடறிநீ நன்கு
ஈர் பால்விகிதம்* = Male/Female Sex Ratio
-----சுந்தரராஜ் தயாளன்
[முழுவதுமாக நேரில் துவங்கும் காய்ச்சீரில் இக் கலிவெண்பவை எழுதியுள்ளேன். உங்களின் கருத்தை தெரிவிக்கவும். குற்றம் குறைகள் இருப்பேன் தவறாமல் சுட்டவும்.]
Liberty is my religion. Liberty of hand and brain -- of thought and labor. Liberty is the blossom and fruit of justice -- the perfume of mercy. Liberty is the seed and soil, the air and light, the dew and rain of progress, love and joy.
-
1st July 2012, 12:40 PM
#385
Senior Member
Senior Hubber
அன்பின் சுந்தர்ராஜன்.. சின்னக் கண்ணனின் நமஸ்காரங்கள்.. தங்கள் பாடல்கள் அபாரம்..அது என்ன நம் நாட்டில் நல்லதே இல்லையா என்ன
குற்றங்கள் பல்விதமாம் கூச்சலுமே பல்வாறாம்
உற்றுத்தான் பார்த்தாலே எவ்விடமும் தானுளதாம்
விம்மிடுதே நெஞ்சமெலாம் வெற்றிபல பெற்றவரும்
திம்மென்றே தண்மதியாய் நங்கையரும் தானிருக்க
பாட்டுப் பலபாடிப் பேர்பெற்ற பாவலர்கள்
நாட்டமாய் பாடுபட்ட நல்லவரைத் தான்நினைத்தே
உம்மென்றே மற்றவற்றை உன்னிப்பாய் நோக்காமல்
நம்முடைய நாடறிவீர் நன்கு
இப்படி எழுதித் தான் சமாதான்ம கொள்ளவேண்டும்..(சும்மா எழுதிப் பார்த்தேன்..தவறாக எண்ண வேண்டாம்)
Last edited by chinnakkannan; 1st July 2012 at 12:48 PM.
-
1st July 2012, 01:13 PM
#386
Senior Member
Senior Hubber
திரையிட்டுக் கண்மறைகக் செல்வமதைத் தேடி..
..திரைகடலைத் தாண்டிபல அன்னியமண் நாடி
விரைந்தேதான் பலவாறாய் உழைத்ததொரு காலம்..
..வண்ணமய இளமையுந்தான் கரைந்ததுவந் நேரம்..
நிறைகுடமாய் வாழ்ந்தேனா நானுமிந்த ஊரில்
..நினைக்குங்கால் பதைக்குந்தான் நெஞ்சத்தின் ஓரம்..
மறைத்ததெது நான்வாழ்ந்த தேசத்தை இங்கே
..மறக்கத்தான் வைத்ததெது எனக்கொள்ளும் ஏக்கம்...
-
1st July 2012, 01:22 PM
#387
Senior Member
Senior Hubber
மழையே நீபோய் எங்கள் மண்ணில்
..விழுந்தால் எழும்பும் வாசம் வேறு
அலையே நீபோய் வங்கக் கடலில்
..உரசிப் பார்த்தால் உள்ளம் மலர்வாய்
கலையே நீபோய்ப் பாரென் ஊரில்..
..கண்களிவ் வைத்தே போற்றுவர் உன்னை
சிலையாய்ப் போன் நெஞ்சம் எல்லாம்
..சிரித்து மகிழும் பூமி எமது.
-
2nd July 2012, 06:43 PM
#388
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
sundararaj, chinnakkannan
ம.............து.
நன்கு முயன்று எழுதியுள்ளீர்கள். சுந்தரராசு அவர்கட்கும் சின்னக்கண்ணர் அவர்கட்கும் வாழ்த்துக்கள், இனியும் பாடுங்கள், கேட்போம்.
-
4th July 2012, 07:34 PM
#389
Senior Member
Seasoned Hubber
The same old story?
பெண்ணொருத்தி சொல்வது:
கல்யாணம் கட்டி வாழென்று சொன்னார்
கருத்துரை கழறும் பெரியவர்!-- சரி
கல்யாணம் பண்ணிக் கொள்வோமென்றாலே
காதலன் கிடைக்கவில்லை! -- பின்னே
காதலன் நான் என்றுஅவன் வந்த போதினில்
நேரமே கிட்டவும் இல்லை! -- கொஞ்சம்
நேரம் இருந்துநான் வாவென்ற நாளிலே
கூட வேறொரு குட்டி!--பின்
குட்டியை விட்டவன் வர நின்ற வேளையில்
எட்டவே நின்றதென் நெஞ்சம் -- மீண்டும்
வேறொரு பெரியவர் பகர்ந்த மதியுரை
கல்யாணம் கட்டி வாழ் என்று......--சரி
கட்டி முடிக்கலாம் என்று ஒட்டிப் போகையில்
காதலன் யாருமிங் கில்லை.....
Last edited by bis_mala; 4th July 2012 at 09:01 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
4th July 2012, 09:32 PM
#390
Senior Member
Senior Hubber
மனதை வெறுக்காமல் மாயவனை எண்ணுங்
கணத்தினில் வந்திடுவான் காண்..
ம்ம்ம் யார்யாருக்கு என்னென்ன சோகம் இருக்கோ..புரியவே மாட்டேங்குது! (ச்சும்மா நகைச்சுவைங்க)
Last edited by chinnakkannan; 4th July 2012 at 09:38 PM.
Bookmarks