-
14th October 2012, 11:34 PM
#1681
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.
திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.
இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?
ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.
இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?
இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?
இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.
அன்புடன்
-
14th October 2012 11:34 PM
# ADS
Circuit advertisement
-
14th October 2012, 11:37 PM
#1682
நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரு ராமஜெயம் [நமது ஹப்பர் அல்ல] சிவாஜி சமூக நலப் பேரவையில் இணைந்து பணியாற்றுபவர். அவர் தெரிவித்த இரண்டு செய்திகள்.
தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள பார்வையற்றோர் விடுதியில் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அன்னதானமும் விடுதியில் உள்ளவர்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்ற வருடம் அம்பத்தூரை அடுத்து அமைந்துள்ள அய்யப்பபாக்கத்தில் ஒரு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது . அதன் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு அந்த இடத்தில இன்று அன்னதானம் நடத்தப்பட்டது.
அன்புடன்
-
14th October 2012, 11:40 PM
#1683
கோவை டிலைட் திரையரங்கில் தங்கைக்காக திரையிடப்பட்டிருக்கிறது.[இளவல் ராகுல் ராமும் இதை பதிந்திருக்கிறார். நன்றி]
அன்புடன்
-
15th October 2012, 06:34 AM
#1684
Senior Member
Seasoned Hubber
NT movies feast
Ragavendran sir for you...
Tharasu
Thiruppam
Thangaikkaga
Paladai
Thirudan
Illara Jothi
Manamagan Thevai
Avan Oru Sarithiram
-
15th October 2012, 08:34 AM
#1685
Junior Member
Seasoned Hubber
Vasu sir,
Iam a ardent fan of Rajini from childhood so I address him as Thalaivar, NT is like a Godfather so I address him as sir, Aiya when speaking about him. So I said Rajini as Thalaivar
-
15th October 2012, 08:44 AM
#1686
Senior Member
Diamond Hubber
O.K Ragul. Thank u. Glad. I like annamalai, engeyo ketta kural, thillumullu, jani, mullum malarum, nallavanukku nallavan and thai veedu.
-
15th October 2012, 08:49 AM
#1687
Senior Member
Diamond Hubber
அன்பு முரளி சார்
நேற்று இரவுப் பணி முடித்து இன்று காலை வீட்டிற்கு வந்ததும் தங்கள் 'திருவிளையாடல்' கொண்டாட்டங்கள் பற்றிய பதிவை ஒரே மூச்சில் படித்தேன். மனதிற்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. நம் அன்புச் செல்வங்களின் ரகளைகளை அட்டகாசமாய் பதித்து விழாவிற்கு வரமுடியாமல் போன ஏக்கத்தைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி!
-
15th October 2012, 09:13 AM
#1688
Junior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு முரளி சார்
நேற்று இரவுப் பணி முடித்து இன்று காலை வீட்டிற்கு வந்ததும் தங்கள் 'திருவிளையாடல்' கொண்டாட்டங்கள் பற்றிய பதிவை ஒரே மூச்சில் படித்தேன். மனதிற்கு மிக மிக சந்தோஷமாய் இருந்தது. நம் அன்புச் செல்வங்களின் ரகளைகளை அட்டகாசமாய் பதித்து விழாவிற்கு வரமுடியாமல் போன ஏக்கத்தைப் போக்கி விட்டீர்கள். மிக்க நன்றி!
Murali sir. your write up about BABYALBERT THIRUVILAIYADAL 25DAYS CELEBRATIONS superb. Ennai pola vara mudiyavarkalukku
Neril kanbathu pola unarvukalai create panni vittergal.
nadigarthilagam PUGAZL ENDERUNDUM JOLIKKA VENDUM IDHU POLA.
We wish and pray the movie celebrates another 1oodays.
-
15th October 2012, 10:05 AM
#1689
Junior Member
Seasoned Hubber
Dear active hubbers, moderator
Can we have an index for Nt thread because it contains lots of intresting info but finding it difficult to retrieve.
I have been asking this for some time
This is again a gentle remainder
-
15th October 2012, 11:02 AM
#1690
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.
திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.
இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?
ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.
இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?
இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?
இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.
அன்புடன்
சென்னைக்கு வரும் போதெல்லாம், நடிகர் திலகத்தின் படம் வெளியானால், மிஸ் செய்வதில்லை. திருவிளையாடல் வெளியாகி ௫ வாரங்கள் அனாலும் (வூடலண்ட்சில்) சில காரணங்களால் சென்னைக்கு வரமுடியவில்லை.
செப்டம்பர் இறுதில், அக்டோபர் முதல் வாரத்தில் டிக்கெட் புக் செய்து, கேன்சல் செய்து, எப்படியும் திருவிளையாடலை பார்க்க சென்னைக்கு 13 ஆம் தேதி வந்தேன். பேபி ஆல்பர்டில் 6 30 காட்சியில் திருவிளையாடல் பார்க்க நேரிட்டது. கிட்ட தட்ட 50 பேர் இருந்தார்கள். கர்ணனை போல், திரையில் மழை பெய்யவில்லை. புது படம் போல், பிரிண்ட் நன்றாக இருந்தது. கர்ணனை போல் பிளான் பண்ணி வெளியிட்டு இருந்தால், கர்ணனை மிஞ்சி திருவிளையாடல் சரித்திரம் படைத்திருக்கும். இடைவேளையின் பொது நடிகர் திலகத்தின் கோடான கோடி ரசிகர்களில் ஒருவரை சந்திதேன். தன்னை சுப்ரமணியம் என்று அறிமுகபடுத்தி கொண்டார். வூடலண்ட்சில் 13 தடவை பார்த்ததாகவும், பேபி ஆல்பர்டில் 12வது முறை பார்க்க வந்ததாகவும், இரண்டும் சேர்த்து 25 வது முறை பார் பதாக கூறினார். மீண்டும் நாளை (14 ஆம் தேதி) வருவதாக கூறினார். அவருடன், அவருடைய நண்பர்கள் 4 பேர்கள் கூடவே வந்தனர். அவர்களும் 25 வது முறை பார்பதாக கூறினார்கள். படம் முடிந்து வெளியே செல்லும் பொது, நாளை ஹவுஸ் புல் காட்சியுடன், ஒரு புதிய படம் வெளியானால், திரை அரங்கம் எப்படி அமர்க்களம் இருக்குமோ, அப்படியே செய்வதாக கூறினார்கள்.
அவர்கள் மேலும் கூறியது - 2012 ஆம் ஆண்டு, தமிழ் திரை உலகில், மிக முக்கியமான ஆண்டும் - கர்ணன் மிக பிரமாண்டமாக வெளியாகி 150 நாட்கள் ஓடியது. எந்தவித ஆர்பாட்டம் / பிரமாண்டம் இல்லாமல் திருவிளையாடல் 25 நாட்களை கடந்து விட்டது. 50 நாட்கள் ஓடும் என்றும் கூறினார்கள். அடுத்து அவர்கள் சொன்ன செய்தி மிக்க சந்தோசத்தை கொடுத்தது. அது தான், வெற்றி / வெள்ளி விழா படங்களில் ஒன்றான, வசந்த மளிகை நவம்பர் இரண்டாம் / முன்றாம் வாரத்தில் , இதே பேபி ஆல்பர்டில் வெளியிட போவதாக கூறினார்கள்.
சண்டே திற அரங்கு நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய முரளி ஸ்ரீநிவாஸ்ற்கு நன்றி.
Bookmarks