-
18th October 2012, 10:35 AM
#1731
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
ஒரு டூரிங் டாக்கீஸ் அனுபவம்.
பராசக்தியை பெரும்பாலும் பார்த்து பரவசப்பட்டது கிராமத்து டூரிங் கொட்டகைகளில்தான். மல்டி காம்ளெக்ஸ் தியேட்டர்களில் கிடைக்காத மகிழ்ச்சி டூரிங் டாக்கீஸ்களில் கிடைக்கும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். பராசக்தி என்றில்லை நடிகர் திலகத்தின் பெரும்பாலான 'ப' மற்றும் 'பா' வரிசைப் படங்கள், எம்ஜியார் அவர்களின் ஆக்ஷன் படங்கள் என்று அனைத்து ரசிகர்களையும் குதூகலிக்கச் செய்த ஒரு குட்டி சொர்க்கபுரி என்று கூட டூரிங்குகளைத் தட்டிக் கொடுக்கலாம்.
கடலூரை எடுத்துக் கொண்டால் பச்சையான்குப்பம் சுகந்தி, கோண்டூர் லக்ஷ்மி, பாதிரிக்குப்பம் ஜகதாம்பிகா என்ற சுற்றுவட்டாரக் கிராமங்களின் டூரிங் டாக்கீஸ்கள். நன்றாக நினைவிருக்கிறது. கிராமங்களை ஒட்டி இருக்கும் டூரிங் கொட்டகைகள். அதுவும் தென்னங்கீற்று ஓலைகளால் முழுவதும் மிக நெருக்கமாக வேயப்பட்டிருக்கும். டாக்கீஸ்களுக்கு முன்னால் நிச்சயம் நிழல் தரும் மரங்கள் உண்டு. மனிதர்கள் புழங்க இடவசதி தாராளமாய் இருக்கும். காலையில் ஒரு மாடு பூட்டப்பட்ட தட்டு வண்டியின் இரு சைடுகளிலும் படத்தின் போஸ்டரைத் தாங்கிய இரு சிறு பதாகைகள் அலங்கரித்துக் கொண்டிருக்க, வண்டி கிராமவலம் வந்து விளம்பரம் செய்து கொண்டிருக்கும். டூரிங் டாக்கீஸ் பணியாளர்களிடையே வழக்கம் போல சிவாஜி குரூப், எம்ஜியார் குரூப் என இரு குரூப்கள் உண்டு. எனவே இரு திலகங்களின் பட விளம்பரங்களில் கண்டிப்பாக போஸ்ட்டர்களுக்கு மாலைகள் அவரவர்கள் சார்பில் உண்டு. விளம்பர வண்டி கிராமத்து முக்கிய வீதிகளில் சென்று வீதி உலா வரும். "டேய்... நம்மூர்ல பராசக்தி போட்டிருக்காண்டா" என்று காலையிலேயே களேபரம் களை கட்டி விடும். எட்டு மணிக்கெல்லாம் ஊரின் முக்கிய சந்திப்பில் ரசிகர் கூட்டம் தவறாமல் ஆஜராகி விடும். பின் ஆளாளுக்கு இன்னின்ன வேலைகள் என்று பகிர்ந்தளிக்கப்படும். ஒருவர் தேங்காய்கள் கலெக்ட் செய்ய அனுப்பி வைக்கப்படுவார். இன்னொருவர் மாலைகள் வாங்கி வர ரெடியாக்கப் படுவார். இன்னொரு நபர் கொடி வாங்கி வரவேண்டும். கற்பூரம் இத்யாதி இத்யாதிகளுக்கு வேறொருவர். உதிரிப்பூகளுக்கு என்னைப் பணிப்பார்கள். அதனால் கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் என் நண்பனின் வீட்டில் இருக்கும் காகிதப்பூவை பறித்து சாக்கு மூட்டையில் கட்டி வைப்பது என் பணி.
பின் அனைவரும் டூரிங் டாக்கீஸில் ஸ்கூல் முடியும் நேரத்தில் ஒன்று கூடுவோம். விறுவிறுவென சணலில் மைதாமாவு பசையைத் தடவி கொடிகள் கண நேரத்தில் ஒட்டப்படும். கொடியை ஏறி கட்டுவதற்கென்றே ஒரு 'அறுந்த வால்' எங்களிடையே இருக்கும்.(நண்பா ரஹீம்! மன்னிச்சுடுப்பா!) கண்ணிமைக்கும் நேரத்தில் வௌவால் போல அங்குமிங்கும் தாவி கொடிகளை கட்டிவிடும். டூரிங் டாக்கீஸ்களிலெல்லாம் இரண்டு காட்சிகள்தாம். மாலை ஏழுமணிக்கு முதல் காட்சி. இரவு பத்தரை மணிக்கு கிராமத்தார் பாணியில் சொல்வதென்றால் ரெண்டாவது ஆட்டம். பக்கத்து டவுனில் இருந்து ஒரு பதினஞ்சு ரூவா மதிப்புக்கு நல்ல மாலையா நண்பர்கள் வாங்கிட்டு வந்திருப்பாங்க. ஊர்ப் பெரிய தலையின் பிள்ளை கண்டிப்பாக நம் ரசிகராக இருப்பார். அவர் தன் பவுசைக் கட்ட தோட்டக்காரங்களை விட்டு அவுங்களோட தென்னந் தோப்பில் இருந்து பத்துப் பதினைந்து தேங்காய் பறித்துக் கொடுத்தனுப்புவார். (படம் தொடங்கியதற்கு பின் முதல் வகுப்பு சேரில் அமர்ந்து படம் பார்த்து விட்டு படம் முடியும்முன்னரே வேகமாகத் தியேட்டரை விட்டு கௌரவம் கருதி கழன்று கொள்வார்) போன தீபாவளிக்கு பரணில் போட்டு வைத்த பட்டாசுக் கட்டுகளை ஒருத்தர் மெனக்கெட்டு தேடி எடுத்து வருவார். அப்படி இப்படி சைக்கிளில் பரபரப்பாய் போய் வருகையில் எதிரணி கோஷ்டி ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருக்கும். உள்ளுக்குள் உதைப்பு இருந்தாலும் எதையும் சட்டை செய்யாதது போன்ற பாவனையில் நேர்கொண்ட பார்வையுடன் சைக்கிள் பறக்கும்.
இம்..ஆச்சு... சுற்று வட்டாரத்திலிருந்து கும்பல் கும்பலாக மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மந்தை மந்தையாக ஜனக் கூட்டம் திருவிழாவிற்கு வருவது போல வர ஆரம்பிக்கும். சரியாக ஆறுமணிக்கெல்லாம் விநாயகனை வினை தீர்க்க சீர்காழியார் டூரிங் டாக்கீஸ் ஸ்பீக்கரில் வேண்ட ஆரம்பிப்பார். அடுத்து நடிகர் திலகத்தின் படமென்றால் நடிகர் திலக படப்பாட்டு. பாடல்கள் கிராமத்தை தட்டி எழுப்பியவுடன் உள்ளூர் ஜனம் கிளம்ப ரெடியாகும்.
டிக்கெட் கவுண்ட்டரில் ஜனம் ரெடியாக நிற்கும். 40w மஞ்சள் கலர் பல்புகள் ஆண்கள், பெண்கள் கவுண்டர்களில் எரிந்து கொண்டிருக்கும். டிக்கெட் கொடுப்பதற்கு முன்னால் ரசிகர்களின் அட்டகாசங்கள் தொடங்கும். வந்திருக்கும் ஜனம் அமர்க்களங்களைக் காண வேண்டுமே! டாக்கீஸின் பிரதான இடத்தில் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்ட்டரில் மாலைகள் சூட்டப்படும். 'அறுந்த வால்' மேலே ஏறி கற்பூர ஆராதனை காட்டும். திருஷ்டித் தேங்காய்கள் உடைக்கப்பட்டு சிதறியவுடன் பேருக்குக் கூட ஒரு தேங்காய் பீஸை தரையில் காண முடியாது. ஆபரேட்டர் வேறு கட்டிய பூப்போட்ட கைலியுடன் half-அடித்து விட்டு அலட்டலாய் நிற்பார். அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. "தலைவா! பிரிண்ட் எப்படி? பார்த்து ஓட்டு தலைவா... என்று கரிசனத்தோடு ஆபரேட்டர் காதோரம் கிசுகிசுக்கப்படும். பெடல் இல்லாத சைக்கிள்கள் பாதி வந்திருக்கும். டிரிங்...என்று டிக்கெட் கொடுக்க மணி ஒலிக்கும். 'நான் நீ... டமால் டுமீல்' என்று ஒரே அடிதடிதான். டிக்கெட் கொடுப்பவர் பிராணன் போகும். ஒப்பன் கவுண்ட்டராய் இருப்பதனால் கவுண்ட்டரின் பின்புறம் வந்து டிக்கெட் கொடுப்பவரின் முதுகை டிக்கெட் கேட்டு பிராண்டும் ஒரு கூட்டம். ஒரு வழியாக டிக்கெட் கொடுத்து முடித்தவுடன் வார் ரீல்(!) ஆரம்பமாகும். அப்போதைய பிரதமர் (பெரும்பாலும் இந்திரா காந்தியாகத்தான் இருப்பார்) பீகார் வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடுவார். வார் ரீல் சத்தம் வெளியே கேட்டவுடன் தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கும் பலரின் நடை ஓட்டமெடுக்கும். ஒரு வழியாக எல்லா களேபரங்களும் முடிந்து படம் போடுவார்கள். ஆண்கள் பெண்களை தனியே பிரிக்க ஒரு மூன்றடி உயரத்திற்கு இடையே மண்ணாலான தடுப்புச் சுவர். ஒரே கூச்சலும் குழப்பமும்தான். இருட்டில் யார் என்ன எது ஒன்றுமே தெரியாது...
"ஒய்..மாணிக்கம் எங்கடா இருக்க?...
டேய் இங்க பார்ரா...முன்னாடி..முன்னாடி"
என்று குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும்.
முன்னே உட்காருவோர் உயரமாய் இருந்தால் என்ன செய்வது என்று சர்வ முன் ஜாக்கிரதையாக மண்ணைக் கூட்டி மேடாக்கிக்கொண்டு அதன் மேல் அமர்ந்து கொள்ளும் புத்திசாலிகள். (எல்லாருமே அதைத்தான் செய்திருப்பார்கள்) நாற்பத்தஞ்சு பைசா தரை டிக்கெட் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமிக்க அதன் பின்னால் பத்துப் பன்னிரண்டு மர பெஞ்சுகள். அது பெஞ்ச் டிக்கெட். தொண்ணூறு பைசா. அதற்கு பின்னால் முதல் வகுப்பு. தனி சேர்கள். ஒரு ரூபாய் இருபது பைசா. அதுவும் மரத்தினால் ஆனதுதான். மூட்டைப் பூச்சிகளின் அன்புக் கடியில் ஆட்டம் போட்டபடியே படம் பார்க்கலாம். டிக்கெட் இல்லை என்ற பேச்சே இல்லை. ஜனம் வரவர டிக்கெட் உண்டு. அரை மணி நேரம் சென்றதும் டிக்கெட் கவுண்ட்டரில் ஆள் இல்லை என்றால் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் ஆளிடம் காசைக் கொடுத்து சென்று விடலாம். படம் போட்டவுடன் ஒரே விசில் சத்தம்தான். காது ஜவ்வுகள் கிழியும். எப்படிப்பட்ட பிரிண்டாய் இருந்தாலும் இருட்டாகத்தான் படம் ஓடும். நடிகர் திலகம் அல்லது தங்கள் அபிமான நடிகரைக் காட்டியவுடன் காகிதப் பூவாய் பறக்கும். ஒரே ஒரு புரஜெக்டர் தான் இருக்கும். எனவே நான்கு முறை படச் சுருளை லோட் செய்வார்கள். எனவே ஒவ்வொரு படத்திற்கும் மூன்று இடைவேளைகள் இருக்கும். கொட்டகை நிரம்பி வழிந்து சிறுநீர் கழிக்கும் இடங்களில் கூட ஜனம் கூச்சப்படாமல் அமர்ந்து படத்தை ரசிக்கும். இடை வேளைகளின் போது லைட்டைப் போட்டால் எங்கு பார்த்தாலும் வெற்றிலைப் பாக்கு எச்சில்கள்தாம் தெரியும்.
படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே மங்கலாகும். சமயத்தில் ஆடியோ மட்டும் கேட்க படம் மட்டும் தெரியாமல் கூட்டம் கடுப்பாகும். ஆபரேட்டர் என்னன்னவோ அட்ஜஸ்ட் செய்வார். (கார்பன் குச்சிகளை நெருக்கி வைத்து ஒளிர விடுவார்) ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தும் விடுவார். ஆனால் படச் சுருளிடம் இவரைப் போல மாரடிக்க எவராலும் இயலாது. எப்படியும் நான்கைந்து முறையாவது படம் அறுந்து போகும். பின் இடைவேளை. ஒரே சுற்றில் சுற்றப்பட்ட கை முறுக்கு அபாரமாய் விற்பனை ஆகும். புகை வாடை அடிக்கும் டீயைக் குடிக்க ஒரே அடிதடி நடக்கும். டீ என்றால் அரை கிளாஸ் இல்லை முழு கிளாஸும் இருக்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிக் கிடாசி விடுவான். ஜோடா கலரும் தம் பங்கிற்கு அமோக விற்பனை ஆகும். குமட்டிக் கொண்டு வரும் கழிவு வாடைகளையும் மீறி மனம் படத்தில் லயிக்கும். ஒருவழியாகப் படம் முடிந்ததும் ஆபரேட்டருக்கு ரசிகர்கள் சார்பில் ஐந்தோ பத்தோ இனாமாக அளிக்கப்படும். அவருக்கு அடுத்த கட்டிங்கிற்கு காசு ரெடி. படம் முடிந்து மக்கா ஆறேழு கிலோமீட்டர்கள் படத்தின் கதையை விவாதித்தபடியே நடைபயணம் போகும். (விஷேச நாட்களின் போது மேட்னியும் உண்டு. திக்கான சாக்கு படுதாக்களை சைடுகளில் கட்டி உள்ளே இருட்டாக்க முயற்சிகள் செய்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று பகலில் படத்தை ஓட்டுவார்கள்). உள்ளூர் ஜனம் போய் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்க எத்தனிக்கையில் இரண்டாவது ஆட்டத்தில் கல்யாணியும், கிறுக்கண்ணாவும் உரையாடிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகக் காதுகளுக்குக் கேட்டு உறக்கம் வராமல் தடுக்கும்.
ம்...என்ன சொல்லுங்க... அந்த மாதிரி ஒரு பொற்காலம் சுட்டுப் போட்டாக் கூட இப்ப கிடைக்காது... அதெல்லாம் ஒரு சொர்க்கமுங்க...
அன்புடன்,
வாசுதேவன்.
What an unforgetable flashback, magnificient write up! I wish I had that experience.
-
18th October 2012 10:35 AM
# ADS
Circuit advertisement
-
18th October 2012, 10:38 AM
#1732
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
60 ஆண்டுகளுக்கு முன் வந்த பராசக்தி எத்தனை நினைவுகளைக் கிளறி விட்டது. வாசு சார்.... எப்படி சார் உங்களைப் பாராட்டுவது ... நிஜமாகவே வார்த்தை வரவில்லை.. ஏனென்றால் எனக்கும் டூரிங் டாக்கீஸ் அனுபவம் நிறையவே உள்ளது.. விடுமுறை நாட்களில் உறவினர் வீட்டுக்குப் போகும் போது டூரிங் டாக்கீஸ்களில் நடிகர் திலகம் படம் பார்த்து ஊறிப் போய் விட்டது. அவர் படம் மட்டுமல்ல ஒரே பொழுது போக்கு என்பதால் ஓடும் அனைத்துப் படங்களையும் பார்த்து விடுவேன். சில நாட்களில் படங்களை ஓரிரு நாட்களுக்கு மட்டும் போடுவார்கள். அதையும் விடுவதில்லை.. ஆஹா நிறைய நினைவுகள்... பொறுமையாக எழுத வேண்டும் ...
Please write your wonderful experience of watching NT's movies released in the early years, 50's & 60's. I find it very interesting to read.
-
18th October 2012, 10:48 AM
#1733
Junior Member
Devoted Hubber
[QUOTE=RAGHAVENDRA;968623]
1975ல் எந்த நடிகர் திலகத்திற்கு சங்கடங்கள் நேர்ந்ததோ, எந்த சூழ்நிலையில் அவர் செய்யாத தவறுக்கு அவதூறுகளுக்கு ஆளாக்கப் பட்டாரோ
Please tell us about that incident
-
18th October 2012, 05:38 PM
#1734
Senior Member
Diamond Hubber
-
18th October 2012, 07:02 PM
#1735
Senior Member
Seasoned Hubber
சன் லைப் தொலைக்காட்சியில் தற்பொழுது நடிகர் திலகத்தின் மக்களைப் பெற்ற மகராசி ஒளிபரப்பாகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th October 2012, 08:03 PM
#1736
Senior Member
Diamond Hubber
அன்பு நண்பர்களுக்கு
ஒழுங்காகப் பதிவு போட்டுக் கொண்டிருப்பவர்களை கெடுப்பதற்கென்றே ஒருவர் கங்கணம் கட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது. சுதந்திரமாக பதிவுகள் இட வேண்டும் என்றுதான் அன்பு பம்மலார் அவர்கள் இந்த திரியைத் தொடங்கி தற்போது இந்தத் திரி சாதனை சிகரங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வனே என்று பதிவு போடுபவர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று கருமமே கண்ணாக தங்கள் பணியை யாருக்கும் தொந்தரவு தராமல் செய்து வருகிறோம். பதிவிடுவது எனபது சாதாரண விஷயமல்ல. நிறைய கால நேரங்களை விரயம் செய்து, பல உடல் உபாதைகளைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் திலகத்தின்பால் கொண்ட பேரன்பினால் குடும்பத்தைக் கூட இரண்டாம் பட்சமாக வைத்துதான் பதிவுகள் இடுகிறோம். அவரவர்கள் தங்களால் முடிந்த பதிவுகளை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் அளித்து வருகிறோம். எல்லோருமே பதிவுகளை அளித்து விட முடியாது. அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். ஒரு சிலரால்தான் அது முடிகிறது. ஆனால் அதையும் கெடுப்பது போன்ற தோரணையில் இங்கும் வந்து சிலர் கெடுக்க நினைப்பது தெளிவாகப் புரிகிறது. தானும் உருப்படியாக எந்தப் பதிவையும் அளிப்பதில்லை.. ஒழுங்காகப் பதிவிடுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்து வேதனைப்பட வைப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகிப் போய் விட்டது. பதிவிடுபவர்கள் இங்கு யாரும் பொன்னுக்கோ, பொருளுக்கோ, பணத்திற்கோ ஆசைப்பட்டு இங்கே பதிவிடவில்லை. பதிவிடுபவர்கள் யாருமே தங்கள் பதிவுக்கான கருத்துக்களை எதிர்பார்ப்பது நியாயமே! அது போல ஒருவர் பதிவை இடும் போது அவரை பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் ஒரு சரியான நாகரீகமே! யாரும் இங்கு பாராட்டுகளுக்கு ஏங்கிக்கொண்டு நிற்கவில்லை. பிஸ்கட்டுகளுக்காக காத்துக் கிடக்கும் நாய்க் கூட்டமும் அல்ல. சிலர் இதை மிக கேலி செய்து வருவது வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது. நிச்சயமாக சேவை மனப்பான்மையுடன்தான் நாங்கள் பதிவுகள் அளித்து வருகிறோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுதந்திரமாக பதிவுகள் அளிக்கத்தான் இந்தத் திரியை தொடங்கினோம். அதன் வளர்ச்சி பொறுக்க முடியாமல் இங்கேயும் வந்து சிலர் கெடுக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. ஒருநாள் உட்கார்ந்து இப்படிப்பட்டவர்கள் பதிவுகள் இட்டுப் பார்க்கட்டும். அப்போது தெரியும் அருமை! சும்மா பொழுது போக்கிற்காக உட்கார்ந்து அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்க பிறவி எடுத்தவர்கள் போல தெரிகிறது. நான் ஆரம்பத்திலேயே சிலரை இந்தத் திரியில் வரவேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன். 'உங்களுக்கும், இதற்கும் சரிப்பட்டு வராது ... உங்கள் கருத்துகளுக்கு அந்தத் திரி இருக்கிறது... இனி நீங்கள் discussion-களை எந்தத் தடையுமின்றி அங்கு தொடரலாம்" என்றும் கூறினேன். வரக்கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் இரு திரிகளின் நலம் கருதிதான் அவ்வாறு கூறினேன். அப்போது சம்மதித்து விட்டு அங்கேயும் ஒன்றும் செய்யாமல் இங்கேயும் வந்து கெடுக்க நினைப்பது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. நடிகர் திலகம் திரி என்று ஒரே பாதையில் பயணித்த திரியை இரண்டாகப் பிரித்து பிளவுகளையும், பேதங்களையும் உருவாக்கிய இந்த புண்ணியவான்களுக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ தெரியவில்லை. இப்போதுதான் உண்மையிலேயே சந்தேகம் வருகிறது இந்த மேட்டுக்குடி பெருமகன்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்தார்களா அல்லது கெடுக்க வந்தார்களா என்று. நடிகர் திலகத்தையே உயிர் மூச்சென நினைத்து வாழும் எங்களை 'அனுகூல சத்ரு' என்று கூறிய இந்த கெட்ட கலக புத்தி படைத்த நாரத அதிமேதாவிகள் தானும் கெட்டு மற்றவர்களையும் புண்படுத்துவதில் பலே ஆசாமிகளோ! பதிவிடுபவர்களையும், பாராட்டுபவர்களையும் நக்கல் நையாண்டி செய்வதை விட்டு விட்டு இனியாவது உருப்படும் வழியை இவர்கள் பார்க்கட்டும். தப்பும் தவறுமில்லாமல் ஒரே ஒரு பதிவை ஒழுங்காக இடட்டும். இப்படிப்பட்ட புண்ணியவான்கள் செய்கையினால் பதிவுகள் இடும் என்னைப் போன்றோர் பதிவுகள் இட மறு யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நிச்சயம் நஷ்டம் எங்களுக்கல்ல. இனி அந்தத் திரியைக் கெடுத்த புண்ணியவான்களே இந்தத் திரியைக் கெடுத்ததற்கும் காரணகர்த்தா ஆகிறார்கள். திரியில் நாங்கள் பதிவுகள் அளிக்காமல் போகும் துரதிருஷ்டம் நேர்ந்தால் கண்டிப்பாக அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை அருமை ஹப்பர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாய் கிழியப் பேசும் இந்த ஜாம்பவான்கள் இனி இந்தத் திரியில் ஆய்வுக்கட்டுரைகள், ஆவணப் பொக்கிஷங்கள், வீடியோக் காட்சிகள், புகைப்பட ஸ்டில்கள், அப்டேட் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள், தொலைக்காட்சி தலைவர் நிகழ்ச்சிகள், உடனுக்குடனான பத்திரிகை செய்திகள் என்று அனைத்துப் பதிவுகளையும் அனுதினமும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரியையும் கெடுத்து குட்டிச் சுவராக்குவதில் வெற்றி அவர்களுக்கே! யார் யாரெல்லாம் புதிதாக உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் கெடுத்து பிரிவினைகளை உண்டு பண்ணி குட்டிச்சுவராக்கினார்கள் என்று அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். இது வரை இந்த விஷயத்தில் வாய் திறக்காத நான் இப்போது பகிரங்கமாகவே இப்பதிவின் மூலம் என் எண்ணங்களை சொல்லி விட்டேன். மறுபடியும் சொல்கிறேன். இதனால் பதிவிடும் எங்களுக்கு பதிவிட முடியாமால் போனால் எவ்வித நஷ்டமுமில்லை.
வருத்தத்துடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 18th October 2012 at 08:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th October 2012, 09:01 PM
#1737
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
எந்த அளவிற்குத் தங்கள் உள்ளம் காயப் பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. தங்களுக்கு ஆறுதல் சொல்லும் உள்ளமும் உறுதியும் எனக்கும் இல்லை. தங்களுடைய வருத்தத்தில் நானும் பங்கேற்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th October 2012, 10:04 PM
#1738
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்வதைக் கூட இந்நேரம் கிண்டலடித்து களித்துக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.
-
18th October 2012, 10:33 PM
#1739
Senior Member
Devoted Hubber
டியர் வாசு சார்,
தங்களின் பதிவை கண்டதும் மனம் வருந்தினேன், எனினும் "போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் போகட்டும் கண்ணனுக்கே" என்பது போல் எடுத்துக்கொண்டு தங்கள் பணியினை தொடர வேண்டுகிறேன்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
19th October 2012, 06:23 AM
#1740
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னி்ட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ராஜ் டி.வி.யில் இசை நிகழ்ச்சி தொடராக ஒளிபரப்பாக உள்ளது. வாரம் தோறும் ஞாயிறு அன்று காலை 8.00 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இத்தொடரை பின்னணிப் பாடகர் மனோ தொகுத்தளிக்க இருக்கிறார். இளைய திலகம் பிரபு, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு பூமிநாதன் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். முதல் நிகழ்ச்சி வரும் 21.10.2012 அன்று இடம் பெறுகிறது. முகேஷ், சி.ஏ.ராஜா, சங்கீதா, தீபக்ஷிகா, கருணாகரன், மணிமாறன் ஆகியோர் பாடல்களைப் பாடுகின்றனர்.
தவறாமல் காணுங்கள்.
Last edited by RAGHAVENDRA; 19th October 2012 at 06:32 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks