-
10th December 2012, 07:05 AM
#1331
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தின் முதல் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா, இதே அந்தப் படத்திலிருந்து ஒரு சிறு காட்சி. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் தோன்றிடும் காட்சிகளை ஏக்நாத் வீடியோ மேகஸீன் நிறுவனம் 1987ல் வெளியிட்டது. மேலும் பூமாலை வீடியோ மாகசீன் எம்.ஜி.ஆரின் முழு காட்சிகளையும் வெளியிட்டது. யாரிடமேனும் இருந்தால் இணைப்பை அனுப்பங்கள் நன்றி.
Last edited by jaisankar68; 12th December 2012 at 10:43 PM.
-
10th December 2012 07:05 AM
# ADS
Circuit advertisement
-
10th December 2012, 08:20 AM
#1332
Junior Member
Platinum Hubber
ஜெய் சார்
1936 - சதிலீலாவதி
மக்கள் திலகத்தின் முதல் அறிமுக படம் .
அருமையான வீடியோ பதிவுகள் . அரிய ஆவணம் .
நன்றி சார்
-
10th December 2012, 08:31 AM
#1333
Junior Member
Platinum Hubber
courtesy - MR.CHANDRU - FRANCE. THANKS FOR YOUR NICE COMMENTS SIR
Chandru K - paris,பிரான்ஸ்
10-டிச-201204:56:10 IST
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ அல்லது வெறும் அரசியல்வாதியின் பெயரோ அல்ல - அது ஒரு குறியீடு இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே. எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். திரைப்பட துறையில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை அண்ணாவாக இருந்தாலும் சரி, ஆருயிர் நண்பராக இருந்தாலும் சரி, நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம் பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு§ புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர். திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார்.

அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது அவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து 25 ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது இருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும்.
அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. எம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” மற்றும் "இறைவா நீ ஆணையிடு" என்ற பாடல்கள் ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை அமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது? ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார் அரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார்

வாழ்ந்தால் இவரை போல் வாழ வேண்டும் தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் -"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நின்றது யார் என்று கேட்டால்", நிச்சயமாக இவ்வுலகில் ஒருவரைத்தான் சொல்ல முடியும் -அவர்தான், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்" என்று வாழ்ந்து காட்டிய சரித்திர நாயகன் எம். ஜி. ஆர். பிற மாநிலங்களில் மட்டுமில்லாமல் மேல்நாடுகளிலும் எம்.ஜி.ஆர். என்கிற இந்த மூன்றேழுத்துக்கு தனி கூட்டம் இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர் நடிகராக இருந்தபோதும் சரி, அரசியலில் இருந்த போதும் சரி, படிக்காதவர்கள் ஏழைகள் சாமானியர்கள்தான் இவர் படம் பார்ப்பார்கள், இவருக்கு வாக்கு அளிப்பார்கள் என்று ஒரு கருத்து எதிரிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து இருந்ததினால்தான், அன்றும்-இன்றும்-என்றும் தமிழ் மக்கள் மனதில் முதல்வராய் தனிப்பெரும் தலைவராய் வாழ்கிறார் "மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் புரட்சி நடிகர் புரட்சி தலைவர்" எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் வாழ்க்கையாகட்டும், படமாகட்டும், பாடலாகட்டும், "திருக்குறள்" போல் ஒரு வழிகாட்டியாக என்றென்றும் நிலைத்து இருக்கும்
Last edited by esvee; 10th December 2012 at 09:23 AM.
-
10th December 2012, 08:46 AM
#1334
Junior Member
Platinum Hubber
Kathiravan - chennai comments from dinamalar
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவரது புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது . எல்லா தரப்பு மக்களும் அவரை நேசிக்கிறார்கள் .அரசியல் - சினிமா இரண்டு உலகையும் இன்றும் அவரது புகழ் ஆள்கிறது .
அவரின் புகழை விரும்பாத சன் தொலை குழுமம் மற்றும் கருணாநிதி குடும்ப தொலைகாட்சி நிறுவனம் ,காங்கிரஸ் கட்சி மெகா மற்றும் வசந்த் தொலைகாட்சிகள் தினமும் மக்கள் திலகத்தின் படங்களையும் பாடல்களையும் பதிவிட்டு அவரது புகழை மறைமுகமாக வளர்த்து கொண்டு வருவது மக்கள் திலகதிற்கு கிடைத்த வெற்றியே .
-
10th December 2012, 08:52 AM
#1335
Junior Member
Platinum Hubber
-
10th December 2012, 08:52 AM
#1336
Junior Member
Platinum Hubber
-
10th December 2012, 08:54 AM
#1337
Junior Member
Platinum Hubber
-
10th December 2012, 08:55 AM
#1338
Junior Member
Platinum Hubber
-
10th December 2012, 08:55 AM
#1339
Junior Member
Platinum Hubber
-
10th December 2012, 12:15 PM
#1340
Junior Member
Platinum Hubber

DECCAN CHRONICLE-10TH DEC 2012
Chennai: The city is famous for its beach, reputedly the second longest in the world. Besides the white sands of the Marina there are also other attractions on the stretch of Kamaraj Salai, that is bedecked by ancient buildings on one side and the sands on the other.
Long before the sands run out near the Iron Bridge there is an equally famous tourist spot at which many people from Tamil Nadu congregate.
There is a brand new feel now to that place, which is the MGR memorial that pays homage to a long serving Chief minister who began life as a matinee idol.
On Sunday morning, the Chief minister J. Jayalalithaa was present along with her Cabinet colleagues to inaugurate the renovated memorial of AIADMK’s founder, the late MG Ramachandran.
After the refurbishing which cost Rs 8 crore, the memorial sports a majestic entrance with a bronze statue of the winged horse Pegasus in front of the AIADMK symbol of two leaves.
Lush green Korean grass is easy on the feet at a memorial that has the highest footfall on the seafront.
A variety of exotic plants lend a relaxed green ambience while a granite platform shaped like a massive guitar has an overpowering presence.
A waterscaping fountain adds colour and atmosphere to the place, which is also designed to be easy on disabled visitors who have been provided steel grips along the granite platforms for easy movement.
The major contours of the refurbishing project were personally overseen by the charismatic protégé and political heir of MGR, Ms Jayalalithaa.
Bookmarks