-
31st December 2012, 08:57 PM
#1311
Wishing All The Hubbers A Very Happy And Prosperous New Year 2013!
Let this New Year bring all health, wealth and glory to everyone.
Like 2012, let 2013 also see the glorious spectacle of NT films hogging the limelight and being right there at the top!
Regards
-
31st December 2012 08:57 PM
# ADS
Circuit advertisement
-
31st December 2012, 10:37 PM
#1312
Senior Member
Seasoned Hubber
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.
முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.
யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.
வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.
அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st January 2013, 03:36 AM
#1313
Senior Member
Devoted Hubber
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
1st January 2013, 12:59 PM
#1314
Senior Member
Senior Hubber
Dear Friends,
Wish you all a very happy and prosperous New Year.
Regards,
R. Parthasarathy
-
2nd January 2013, 10:51 AM
#1315
Dear Mr. MURALI SRINIVAS,
I gone through the detailed reply given by you, mentioning the participation and contributions of EACH & EVERY hubber here, by mentioning more than 50 names. This is our MURALI sir.
My respect on you increases day by day and by your each and every post.
But you see, the 'one' hubber who blamed me that I am admiring only you and Pammalar, he admired the contribution of only one hubber in his post, leaving other's contributions as 'ambo'.
That is the difference between you and others, and my openion is the same 'You and Pammalar' are matchless, and in fact Mr. CHANDRASEKHAR too, by his public services.
-
2nd January 2013, 12:31 PM
#1316
Senior Member
Diamond Hubber
இந்த மன்றத்தில் நடிகர் திலக்கத்தின் முதல் திரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன்..
நடிகர் திலகத்தின் திரி என்பது முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதற்கும் , தொடர்ந்து அவர் நினைவை அசை போடுவதற்கு ஏற்ற இடமாக பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ளது .பல்வேறு கால கட்டங்களில் பலர் இங்கே பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள் .. காலச்சுழற்சியில் தனி மனித சூழ்நிலைகளின் காரணமாக பலர் தொடர்ந்து நடைபோட முடியாமல் சென்றிருக்கிறார்கள் .மீண்டும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் வந்து தங்கள் பங்களிப்பை தொடர்ந்திருக்கிறார்கள் ..மாறி மாறி பல பேர் வந்து சென்றாலும் நடிகர் திலக்கம் திரி என்ற இந்த தேர் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது ..காரணம் தேரை இழுப்பது தேரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்துக்காக மட்டுமே , தேரை இழுத்துச் செல்லும் நம் ஒவ்வொருவருக்காகவும் அல்ல என்ற புரிதல் மிகபெரும்பான்ன்மையான பேருக்கு இருந்ததாலேயே இது சாத்தியப்பட்டது .
இங்கே அவரவருக்கு அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பு , நேரம் பொறுத்து அற்புதமான பங்களிப்பை பலர் வழங்கி வந்திருக்கிறார்கள் ..அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதி சந்தேகம் இல்லை .அற்புதமான ஒரு எழுத்துப் பங்களிப்பின் போதோ , ஆவண வழங்கலின் போதோ , தகவல் பகிர்தலின் போதோ அதற்காக அவர்களை பாராட்டுவது , நன்றி நவில்வதும் கண்டிப்பாக இயல்பான ஒன்று .அதையும் யாரும் எள்ளளவும் குறை சொல்ல முடியாது . ஆனால் பிரச்சனை ஆரம்பிப்பதே பாராட்டுகளில் ஒப்பீடுகளும் உயர்வு நவிற்சி உச்சங்களும் மலிந்து விடும் போது தனி மனித ஈகோவும் எதிர்பார்ப்பும் முளைத்து விடுவது இயல்பு .
உதாரணத்துக்கு நம்முடைய முரளி சாரை எடுத்துக்கொள்வோம் . எத்தனை எத்தனை ஆண்டுகளாக அற்புதமான பங்களிப்பை அளித்து வருகிறார் . நான் உட்பட அவரை பாராட்டி மகிழாதோர் இல்லை . அவர் சிறப்பான இடுகை ஒன்றை தரும் போது அதற்காக "நன்றி முரளி சார்" என்றோ "மிகச் சிறப்பான எழுத்து .அருமை" என்றோ பாராட்டுவது போதுமானது .. அதை விடுத்து "முரளி சார் ..உங்களைப் போல எழுத உலகத்தில் யாருமில்லை " என்றோ "எழுத்துலக திலகமே " "ரசிக உலகின் உச்சமே" என்றோ அவரே கூச்சப்பட்டு நெளியும் வகையில் சொன்னால் அதை அவரே விரும்ப மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . எனவே இத்தகைய உச்ச பட்ச உயர்வு நவிற்சிகளை தேரிலே வைத்து நாம் இழுத்துக்கொண்டிருக்கும் நடிகர் திலகத்துக்கு மட்டும் சூட்டி , தேரை இழுக்கும் இழுப்போரிடையே இவர் முதல்வர் , இவர் இரண்டாமவர் என குறுக்குசால் ஓட்டாமல் இருப்பது நலம் .
(அப்படியென்றால் இவர் (நான்) இப்படித் தான் சொல்கிறார் . இதைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என வழக்கம் போல பொழிப்புரையும் தீர்ப்பும் வழங்கினாலும் எனக்கொன்றும் இல்லை ..எனக்கு தேரும் தேரில் இருக்கும் நடிகர் திலகமும் தான் நோக்கம் , இங்கு நல்ல பெயர் வாங்குவதோ அல்லது தனி நபர்களை தூக்கிப்பிடிப்பதோ அல்ல .நன்றி)
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
2nd January 2013, 02:53 PM
#1317
Junior Member
Seasoned Hubber
I totally agree with the views expressed by Mr Joe.
-
3rd January 2013, 06:53 AM
#1318
Junior Member
Newbie Hubber
ஆதிராம் சார்,
ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.
-
3rd January 2013, 11:35 AM
#1319
Senior Member
Seasoned Hubber
-
4th January 2013, 12:24 PM
#1320
Senior Member
Senior Hubber
அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வேலை நிமித்தமாகவும் உடல் நிலை காரணமாகவும், ஒரு இடைவெளி விழுந்து விட்டது.
சீனியர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்திரன் போன்றோர் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
திரு. ராகவேந்திரன் அவர்களின் நிழற்படப் பதிவுகளும் 3-d பதிவுகளும் மிக நன்றாக இருந்தன.
திரு. முரளி அவர்கள் வழக்கம் போல எளிய மற்றும் சுவாரஸ்யமான ஈர்ப்புடன் தியாகம் மற்றும் மதுரை மாவட்ட நினைவலைகளை அற்புதமாக எழுதியிருந்தார்.
அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர். அண்மையில், கெளரவம் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" பாத்திரத்தில் அவரது நடிப்பை வேறு கோணத்தில், ஒரு ஹப்பர் அற்புதமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
திரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றியும் அவரது சமூகத் தொண்டினைப் பற்றியும் போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.
திரு. ராகுல் ராம் அவர்களின் ஆய்வுகளும் மிகவும் சுவையாக இருந்தன.
திரு. கோபால் அவர்கள் மறுபடியும் "இரும்புத் திரை" பட ஆய்வு மூலம் துவங்கி இருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. நடிகர் திலகம் வைஜெயந்தி மாலா ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்து, துரதிர்ஷ்ட வசமாக சொற்ப படங்களுடன் முடிந்தது. ஒரு சோலை வனத்தில், இருவருக்கும் நிகழும் இரு சந்திப்புகள் மிகவும் சுவையாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கும். தொடருங்கள்.
சிலரது பெயர் விட்டுப் போயிருந்தால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.
திரு. பம்மலார், திரு. வாசுதேவன் (நெய்வேலி) மற்றும் மற்ற சீனியர்களின் வருகை இந்தத் திரிக்கு மேலும் சுவையும் சுவாரஸ்யமும் கூட்டும்.
இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks