PDA

View Full Version : Raja's Gems - the latest one you heard...Part 3



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14]

Gopal.s
24th August 2014, 07:20 AM
[FONT=arial]
[FONT=arial]யாரோ சொன்னது போல் அப்போதைய காமன் வாகனங்கள் இப்போது கனரக வாகனங்கள் ஆகிவிட்டன..

Good one.:-D

venkkiram
25th August 2014, 10:55 AM
பொன்மேகலை!

Veena Vani--- Ilayaraja & Madurai.T.Srinivasan

https://www.youtube.com/watch?v=hRepoczmhis

:notworthy:

venkkiram
25th August 2014, 11:00 AM
என்னை என்னச் செய்தாய்!
--- சுதா ரகுநாதன்

https://www.youtube.com/watch?v=W5rAYs_1oVE

venkkiram
25th August 2014, 11:20 AM
தாய்மூகாம்பிமை - இசையரசி!

https://www.youtube.com/watch?v=y5GMhSYrJ8U

ராஜாவின் ஆக்கம் சிறப்பு. பாடலின் உச்சக்கட்டமாக "உணர்ச்சிகளின் அரசி" ஜானகியின் குரல் பிரமிப்பு. அதற்கு வாயசைத்த சரிதாவின் நடிப்பு விஸ்வரூபம்.

வரிகளுக்கு வாயசைக்கையில் முகபாவனைகளால் விஸ்வரூபம் எடுத்த நடிகைகளில் முதலிடம் சரிதாவிற்கு!

:notworthy:

venkkiram
25th August 2014, 10:21 PM
கோரஸ் & ஹம்மிங் இரண்டும் ஒரு பாடல் முழுதும் ஆக்கிரமித்து இருப்பது இந்தப் பாடலில்தான்.

வேறு ஏதேனும் இந்த அளவுக்கு வியாபித்திருந்தால் குறிப்பிடலாம்.

அறிமுகமாகி ஐந்து வருடத்திலேயே தமிழ்த் திரையிசையின் மொழியை, போக்கினை பல மடங்கு நவீனப் படுத்திவிட்டார்..

https://www.youtube.com/watch?v=LOpulfZQQJ4

rajaramsgi
26th August 2014, 12:32 AM
கோரஸ் & ஹம்மிங் இரண்டும் ஒரு பாடல் முழுதும் ஆக்கிரமித்து இருப்பது இந்தப் பாடலில்தான்.

வேறு ஏதேனும் இந்த அளவுக்கு வியாபித்திருந்தால் குறிப்பிடலாம்.

அறிமுகமாகி ஐந்து வருடத்திலேயே தமிழ்த் திரையிசையின் மொழியை, போக்கினை பல மடங்கு நவீனப் படுத்திவிட்டார்..


உண்மை. இதே போன்ற எண்ணம் எனக்கு மற்றொரு பாடலிலும் வந்துள்ளது. பாடிய வாசுதேவன் ஜானகியை விட, இந்த பாடலில் பிசிரில்லாமல் அழகாய் கோரஸ் கொடுத்த பெண்மணிகளின் பங்கு அதிகம். எப்போது இதை கேட்டாலும் கோரஸ் மற்றும் வாத்தியகாரர்களை ஒரு சில மணி நேரங்களில் தயார் செய்து எப்படி பாட வைத்தார்கள் என்று மலைப்பாக இருக்கும்.

கரும்பு வில் படத்தில் மலர்களிலே. (http://tamilthiraipaadal.com/index.php?action=song&id=2696)

rajaramsgi
26th August 2014, 12:39 AM
பொன்மேகலை!

Veena vani--- ilayaraja & madurai.t.srinivasan

:notworthy:
இந்த படம் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இதன் ஆடியோ வெளியான சமயத்தில் நான் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல் வீனா வாணி. (ts ராகவேந்தரின் மகள் கல்பனா பாடியது)


இதே படத்தில் பவதாரிணியும் சாதனா சர்கமும் பாடிய 'ஆலாபனை செய்யும் மாலை பொழுது' என்ற பாடலும் பிரமாதம்.

venkkiram
26th August 2014, 01:13 AM
உண்மை. இதே போன்ற எண்ணம் எனக்கு மற்றொரு பாடலிலும் வந்துள்ளது. பாடிய வாசுதேவன் ஜானகியை விட, இந்த பாடலில் பிசிரில்லாமல் அழகாய் கோரஸ் கொடுத்த பெண்மணிகளின் பங்கு அதிகம். எப்போது இதை கேட்டாலும் கோரஸ் மற்றும் வாத்தியகாரர்களை ஒரு சில மணி நேரங்களில் தயார் செய்து எப்படி பாட வைத்தார்கள் என்று மலைப்பாக இருக்கும்.

கரும்பு வில் படத்தில் மலர்களிலே. (http://tamilthiraipaadal.com/index.php?action=song&id=2696)

சிறந்த பாடலாக்கம்.

ரதிமடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனைகள் முடியாதது

யாருங்க இதை எழுதியது? கண்ணதாசனின் நடையை ஒத்ததாக இருக்கு. கிடைத்த கொஞ்ச நேரத்திலும் மலேசியாவின் குரல் மனம் முழுதும் ஊடுருவி பாய்கிறது.

எழுத்து வரிசையில் இந்தப் பாடலும், "மலர்களே நாதஸ்வரம்" பாடலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் எனது செல்பேசிப் பாடல் தொகுப்பில். இரண்டிலுமே ஜானகி, மலேசியா மற்றும் கோரஸ் பாடகர்கள். இரண்டுமே ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் சேமித்துக் கேட்கக் கூடிய பாடலாக்கங்கள்.

"மலர்களே நாதஸ்வரம்" - சரணங்களில் மலேசியாவின் குரலுக்கு இணையாக ஜானகியின் ஹம்மிங்.. விவரிக்க வார்த்தையே இல்லை.

https://www.youtube.com/watch?v=rdnbJCJpDbQ

rajaramsgi
26th August 2014, 03:45 AM
சிறந்த பாடலாக்கம்.

ரதிமடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடுநேரம்
ரசனைகள் முடியாதது

யாருங்க இதை எழுதியது? கண்ணதாசனின் நடையை ஒத்ததாக இருக்கு.


எழுதியவர் கங்கை அமரன். :-)

venkkiram
26th August 2014, 09:16 AM
ஆண்மக்கள் வலம்வரும் பாடல்காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கக்கூடிய பெண்குரல் ஆளுமை ஜானகிக்கே. :notworthy:

பாடலின் ஆரம்பச் சொல்போலவே மந்திரம்தான். இசையும் குரலும் ஒரு மந்திரவாதிபோல நமது உணர்வு நரம்புகளை தட்டியெழுப்பும் சக்தியை இப்பாடலாக்கத்தில் உணரலாம். கங்கை அமரன் சொல்வது போல.. ராஜா பயன்படுத்தும் வாத்தியக்கருவிகள், வாத்தியக்காரர்கள் இன்னொரு இசையமைப்பாருக்கு சென்றாலும், ராஜா கட்டமைக்கும் ஒலிக்கு நிகராக வேறெந்த இசையமைப்பாளரும் வெளிக்கொணர முடியாது. வாத்தியங்கள் ஒவ்வொன்றுடனும், மெலடிக்கான குரலுடனும் தொடர்ந்து உரையாடும் போக்கினை ராஜாவின் இசையில் காணலாம். சிறப்பம்சங்களில் அது மிகமுக்கியமானதும் கூட.

https://www.youtube.com/watch?v=grk6CyJG398

இரவு நேரங்களில் கேட்டுப்பாருங்கள். பரந்த வானத்தை காரிருள் கவ்வுவதுபோல, உங்கள் மனதை ஒரு இனம்புரியாத சோகம் ஆக்கிரமிப்பதை உணரலாம்.

rajaramsgi
27th August 2014, 01:47 AM
இராம நாராயணன் எடுத்த நூத்தி சொச்சம் படங்களில், ராஜா சார் வேலை செய்த 5 அல்லது 6 படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ராஜா சாருக்கு இராம நாராயணனோ, மணிவண்ணனோ, எல்லோரும் ஒன்று தான். அன்று என்ன வருகிறதோ அதை அள்ளி கொடுத்து விடுவார். இதோ, 30 ஆண்டுகளுக்கு முன்னர் உரிமை படத்தில் வந்து மறந்து போன ஒரு டூயட் பாடலை நினைவு படுத்துகிறேன், என்ன ஒரு துல்லியமணா மனதை மயக்கும் சத்தம்.

பாடலை கேட்டவுடன் உங்களுக்கு பதிவிறக்கம் செய்ய தோன்றினால் அதுக்கு தான் பொறுப்பில்லை.

http://www.youtube.com/watch?v=F-FAQ1Uo4Vg

rajaramsgi
28th August 2014, 01:02 AM
மனைவி சொல்லே மந்திரம் படத்தில் இடம் பெற்ற ஆத்தாடி அதிசயம் (http://tamilthiraipaadal.com/index.php?action=song&id=4366) பாடல். நம்ப முடிகிறதா? இதுவும் இராம நாராயணனுக்கு கிடைத்தது தான். வால்யூம் கூட்டி கேட்டு பாருங்கள், ஆரம்பமே ஜோராக இருக்கும்..

பல்லவி வரும் போது மட்டும் அதன் பின்னணியாக ஒரு எலெக்ட்ரிக் கிடாரோ அல்லது வேறு ஒரு கருவி மூலமோ ஒரு அமானுஷிய உணர்வு தருகிறார், ஏன்? ஒரு வேளை , மனைவி சொல் மந்திரமானாலும், அதன் தந்திரத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்பதற்காக இருக்குமோ?

பாடியவர்கள்: ஜேசுதாஸ், உமா ரமணன். (எண்ணிக்கையில் உமா ரமணன் பாடிய பாடல்கள் மிகவும் கம்மி, எல்லாமே சூப்பர் ஹிட்ஸ்)

https://www.youtube.com/watch?v=rdDKxyXgJ1k

venkkiram
11th September 2014, 07:42 PM
பாரதி நினைவுநாள்!
****************

பாரதியார் பாடல்களுக்கு அதுவரை மற்ற இசையமைப்பாளர்களால் சூட்டப்பட்ட இசை மாலைகளுலிருந்து முற்றிலும் மாறான விதத்தில் ராஜா அணிவித்த இசைமாலை "பாரதி" திரைப்படப் பாடல் ஆக்கங்கள்!.

வெந்து தணிந்தது காடு, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

http://www.youtube.com/watch?v=Nh2T8y-JFfw

நாடி நரம்புகளை அசைத்துப் பார்க்கும் ஆர்ப்பரிக்கும் இசையாக்கம்!

:notworthy:

venkkiram
13th September 2014, 06:06 PM
சுவர்ணலதா நினைவுதினம் என்பதை உணரும்போதே ஒருவித துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்ன செய்ய! கொடியநோய் அந்தக் குயிலை அழைத்துக்கொண்டாலும், குரல் மட்டும் வெளியில் சஞ்சரித்துக்கொண்டெ என்றென்றும் இருக்கும். குறிப்பாக ராஜா இசையில் எத்தனை எத்தனை முத்துக்கள் அவர் பாடிய பாடல்கள்! ஒவ்வொன்றுமே மகத்துவமானது.


"நீதானே நாள்தோறும்".. பாஸ் கிடாருடன் சொர்ணலாதாவின் குரல் பயணத்தை கேட்டு லயிப்பது ஒரு சுகானுபவம்.

http://www.youtube.com/watch?v=rQkH7sBWEIY

venkkiram
13th September 2014, 06:30 PM
சின்னஜமீன் -ஒனப்புத்தட்டு புல்லாக்கு

90களில் ராஜா என்ற பாடல்தொகுப்பை நான் எப்போது கேட்க நேர்ந்தாலும் இதை மறக்காமல் கேட்டு மகிழ்வதுண்டு. சுவர்ணலதாவின் குரலில் துள்ளலான ஒரு பாடல். சரணத்தில் நடிகர் கார்த்திக் அங்கங்கே எட்டிப் பார்ப்பார். ஆரம்ப மற்றும் இடையிசைகள் என ஒரு இடம் விடாமல் பின்னணியில் ராஜா! ஆரம்பித்து முடிக்கும்வரை அருவி போல கொட்டுது இசை. ஆனால் அதுக்குள்ள எவ்வளவு விஷயம்! ஓரிருமுறை கேட்டாலே மெலடி மட்டுமில்லாமல் மொத்தப் பாடலையும் சுலபமாக உள்வாங்க்கிவிடலாம். அதுதானே வேறெங்கும் காணக்கிடைக்காத ஆனால் ராஜாவின் இசையில் மட்டுமே காணப்படும் மகத்துவம்.

http://play.raaga.com/tamil/album/chinna-jamin-T0002657

raaga_kann
14th September 2014, 11:10 PM
I do not know how many people are aware of this gem from the Kannada film "Bhoomi Geethae" released in the late 90s. This was the first song for S.P.B Charan. I think the female singer is Sandhya (P.Susheela's sister's daughter). This duet seems to be very unique for me. The orchestration, particularly the rich interludes - are very hard to believe that this score was for a forest / tribal based story set in the 1950s.

http://www.youtube.com/watch?v=jObkG-rNsrQ


The other songs and BGM in the film were simply astonishing - Raaja as usual providing great support to small / budget oriented films with good subject!

irir123
16th September 2014, 07:15 AM
Bhoomigeethe !

"nodirava nodirava" - IR is the ONLY composer (the late Salilda comes close, but IR is heads and shoulders above all) who can customize music to a given region / its cultural moorings - this song is so Coorgish in flavor!

K
16th September 2014, 10:44 PM
https://soundcloud.com/shanmuganagar/1000-births-we-are-happy-together

About the Song
http://rajamanjari.blogspot.in/2011/08/ilaiyaraaja-muti-hued-musician.html

raaga_kann
16th September 2014, 11:14 PM
One more fantastic song from the same period as that of BhoomiGeethe... This was the time when real music started taking a back seat.. Gimmicks overshadowed sweet songs... Sound started dominating melody..Marketing strategy determined the so called HITS.. In such a scenario, I felt that this song did not get its due...(for that matter - most of Raaja's songs from this period)..

http://www.youtube.com/watch?v=hbxVV7A1mjw

I think this was the only full-fledged song for which Raaja lent his voice for Shivaji. There was one more version in the audio cassette sung by SPB and MGSreekumar.

rajaramsgi
18th September 2014, 12:39 AM
ராஜா சார் பீச்சாங்கைலையே எத்தனையோ ஹிட் கொடுத்திருந்தாலும்,அக்கட பூமில போட்ட பாடல் இது. கேட்ட முதன் முறையே பசக்கென்று மனதில் ஒட்டி கொள்ளும்.

படம்: சக்ரவியுகம்
பாடல்: ஆசலு பூசே (பாலசுப்ரமணியன் & சித்ரா)

http://play.raaga.com/telugu/song/album/Chakravyuham-A0000900/Aasalupoose-49258 (http://play.raaga.com/telugu/song/album/Chakravyuham-A0000900/Aasalupoose-49258) (click on Play song)

rajaramsgi
20th September 2014, 01:24 AM
பாடல்: சிரிச்சா கொல்லிமலை குயிலு
படம்: ஜோதி
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் & ஷைலஜா
வரிகள்: வைரமுத்து


மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொல்லிமலைக்கு ஒரு அழகும், ஐய்தீகமும் உண்டு. அங்கு, கொல்லிமலை குயிலு காதலில் விழும் வரை, கழுகுகள் வட்டமிடும் ஊரில் தன்னை பாதுகாத்து கொள்ள கரடு மொரடாக இருக்கிறாள். நாயகன் அழகாய் சொல்கிறான்.

கல்லா கெடந்து பூ ஆனா (ள்)
ரெண்டாந்தடவ ஆளானா (ள்)
கரும்பாறைய போல் இருந்தா (ள்)
சொக மாம்பழமா கனிஞ்சா (ள்)

வழக்கம் போல், ராஜா சாரை என்ன சொல்வது? அவர் இல்லை என்றால் கல் பூ ஆனால் என்ன, பொன் ஆனால் நமக்கென்ன? இன்று மட்டும் இந்த பாடலை 30 முறை கேட்டேன்.

இந்த பாடலை பல நூறு முறை கேட்டு ரசித்திருந்தாலும், பாடல் இடம் பெற்ற ஜோதி படத்தை நான் இது வரை பார்க்கவில்லை. ஒவ்வொரு முறை பாடலை கேட்கும் போதெல்லாம் தியாகராஜனும் சரிதாவும் சேர்ந்து பாடுவது போல எனக்கு ஒரு பிரம்மை ஏற்படும். அருமையான பாடல். சரியாக படமாக்கபடாத பல நூறு பாடல்களில் இதுவும் ஒன்று. முதலாம் இடை இசையை ராட்டினத்தை காட்டி இயக்குனர் மணிவண்ணன் எப்படி வீனடிதிருப்பாரோ, அதே போல், அம்பிகா மோகனுக்கு சாப்பாடு பரிமாறி, இலையை எடுக்கும் வரை உள்ள மொக்கை காட்சிகளுக்கு ஒரு அருமையான BGM குடுத்து, ராஜா சாரும் தன்னுடைய நேரத்தை வீணடித்திருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=9tdoMRZRyAw

rajaramsgi
20th September 2014, 03:17 AM
பாடல்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே...
படம்: காவல் கீதம்
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் & ஜானகி.
வரிகள்: வாலி

இந்த ஜானெரில் ராஜா சார் நிறைய கொடுத்திருக்கிறார். ராமன் அப்துல்லாவில் முத்தமிழே, அதர்மத்தில் முத்துமணி, அரண்மனைகிளியில் ராசாவே உன்னை விட மாட்டேன்.. இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

பிராமண பையன், பிள்ளைமார் பொண்ணு - இவர்களுக்கு கலப்பு திருமணம். மேல்குடி என்பதால் இசையில் செழுமை போங்க, வாலி வார்த்தை ஜாலத்தை அள்ளி தெளிக்கிறார். இந்த பாடலின் காட்சி அமைப்பு மற்றும் வரிகளில், கிடைத்த சூழ்நிலைக்குள் நிறைய பாவங்கள், கிளுகிளுப்பு மற்றும் சந்தோஷத்துக்கு குறைவில்லை. வரிகளின் இடையில் சமூக அக்கறை வேறு. ஆனால் ரம்மியமான இசை, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்க பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றி சுற்றி வந்து துன் புறுத்தும்...

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதமின்றி நீ தான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது, நம்மை யார் தான் தடுக்க?
....

மீண்டும் மீண்டும் விரல் தீண்ட தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல் போல தர ஏன் ஏன் தயக்கம்
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே

http://www.youtube.com/watch?v=peVCy0DMmhw

வேதம் புதிது படத்துக்கு ராஜா சார் வேலை செய்து, இந்த பாடலை அந்த படத்தில் ராஜா அமலாவுக்கு டுயட்டாய் கொடுத்து பாரதிராஜா இயக்கி இருந்தால் எப்படி APT டாக இருந்திருக்கும்? ம்....

rajaramsgi
20th September 2014, 04:24 AM
பாடல்: ஆதாமும் ஏவாளும் போல
படம்: மருதுபாண்டி
பாடியவர்கள்: அருண்மொழி, ஜானகி
வரிகள்: பிறைசூடன்

ஆதாம் ஏவாள் போல், ஆடை கூட பாரமாகும் என நினைக்கும் இரண்டு இளஞ்சிட்டுக்கள் ஆடி பாடி மகிழும் அழகுக்கு அழகு சேர்க்கும் இசையும் வரிகளும். 16 முறை வரும் தம்புரா சத்தம்.. பாடல் முழவதும் வரும் கப்பாஸ், உங்களை விட்டா யாரால சார் இதை இவ்வளவு அழகா பயன்படுத்த முடியும்? வேறு யாராவது கப்பாஸ் சத்தத்தை இவ்வளவு தூய்மையாக தந்திருக்கிறார்களா? செல்வி படத்தில், இளமனது பல கனவு பாடலில் கப்பாஸ் நினைவிருக்கிறதா?

(இந்த ஆதாமும் ஏவாளும் பின்னர் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஹாப்பி கப்புல்சாக இருக்கிறார்கள்.)

படம் பார்த்த முதலே இந்த பாடலுக்கு நான் அடிமை. 24 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எளிமையான இந்த பாடல் தரும் இதமும் சுகமும் எனக்கு மட்டும் தானா இல்லை வேறு யாரேனும் அதை உணர்ந்திருக்கிறீர்களா?

https://www.youtube.com/watch?v=yTr5APsr0Qg

venkkiram
20th September 2014, 05:27 AM
ராஜாராம் அய்யா! ஒரே நாளில் இதுபோல பாடல்மழை பொழிந்தால் திரி தாங்குமா? ஒவ்வொன்றும் முத்துக்கள். வழக்கம் போல உங்கள் வருணனை அருமை.

irir123
20th September 2014, 05:47 AM
listened to Azhagarsamiyin kuthirai entire BGM track!

this man is an impossible genius - what a stupendously eclectiv score to a movie with an entirely unknown cast!

venkkiram
20th September 2014, 06:05 AM
92, 93வரைக்கும்தான் ராஜா என்ற பொய்யை திரும்ப திரும்ப நிறுவி திருப்தி காண்பவர்களுக்கு... கீழ்வரும் பாடல்களில் ராஜா கொடுத்திருக்கும் மேன்மையான இசையை கேட்டுவிட்டு மறுபடியும் பூமிக்குள் முகத்தைப் புதைந்து கொள்ளவும்.

கிழக்கும் மேற்கும் (1998) கத்துங்குயிலே கத்துங்குயிலே - சாதனா சர்கம் குரலில்

https://www.youtube.com/watch?v=dNjQAL84jnI

செந்தூரம் (1998) ஆலமரும் மேலமரும்.. - உன்னி கிருஷ்ணன் -பவதாரிணி குரல்களில்.. இதுபோல ஒரு சரணம் கட்டமைப்பை வேறெந்த ராஜா/ வேறு இசையமைப்பாளர் பாடல்களையும் கேட்டதில்லை..

https://www.youtube.com/watch?v=rOn1us4bq8k

தேசிய கீதம் (1998) - நான் வாக்கப்பட்ட - சுஜாதா குரலில்

https://www.youtube.com/watch?v=Nn-8wjxsgCU

காதல் கவிதை (1998) - காதல் மீது.. ஹரிஹரன்

https://www.youtube.com/watch?v=CbaBoqKl0ps

வீரத் தாலாட்டு (1998) - படிக்கட்டுமா படிக்கட்டுமா.. ஜானகி குரலில்

https://www.youtube.com/watch?v=qgepkjK8y9E

பூந்தோட்டம் (1998) - மீட்டாத ஒரு வீணை - ஹரிஹரன் மகாலட்சுமி குரல்களில்.. (ஹரிஹரனின் இதுவரை நீங்கள் பாடிய பாடல்களிலேயே எதைப் பாடி முடிக்க தாவு தீர்ந்து போனது எனக் கேட்டால் இதைச் சொல்வார் என நினைக்கிறென். பெண்டு எடுத்திருப்பார் ராஜா அவரை.. ). திரையிசையில் ரீதிகௌளை ராகம் என்றால் ராஜாவின் கோட்டை. வெகுசிலரே இதைத் தொட்டிருகிறார்கள். ஆனால் அவர்கள் இந்த ராகத்தில் எழுப்பியிருப்பது என்னவோ வீடுகளே. யாரும் தொடாத/தொட முடியாத ராகத்தின் உள்ளெ புகுந்து வெளியெ வருவது ராஜாவுக்கே எட்டக் கூடிய கலை.

https://www.youtube.com/watch?v=_cAR7GMdSIM

mappi
20th September 2014, 03:46 PM
ராஜாராம் அய்யா! ஒரே நாளில் இதுபோல பாடல்மழை பொழிந்தால் திரி தாங்குமா? ஒவ்வொன்றும் முத்துக்கள். வழக்கம் போல உங்கள் வருணனை அருமை.

Hats off. Absolutely enjoying them all.

rajaramsgi
21st September 2014, 01:41 AM
செந்தூரம் (1998) ஆலமரும் மேலமரும்.. - உன்னி கிருஷ்ணன் -பவதாரிணி குரல்களில்.. இதுபோல ஒரு சரணம் கட்டமைப்பை வேறெந்த ராஜா/ வேறு இசையமைப்பாளர் பாடல்களையும் கேட்டதில்லை..


நன்றி வெங்கிராம். ஆலமரம் மேலமரும் பாடலில் வரும் கோரஸ்க்கு எதை சார் ஈடாக கொடுக்கலாம்? கோரஸ் குயில்கள் தந்தனனா சொல்லும் போதும், இடையில் ஆஆஆஆ படிக்கும் போதும் சுகமாய் இருக்கும். எங்கேயோ கேட்டது போலவே தோணும்.

வன்னார் என்று சொல்லப்படும் டோபிகள் ஆத்தோரத்தில் துணி துவைத்து கொண்டிருக்கும் பின்னணியில், அவர்களுடைய வலியையும் வேதனையையும் சொல்லும் ஒரு சமூக சிந்தனையுள்ள இனிமையான பாடல்.

இரண்டாவது இன்ட்ருலுட் தொடங்கும் போது , ஒரு சின்ன மியுசிகல் ஜெர்க் கொடுத்துவிட்டு,

தந்ததன தந்தாதனா தந்த தன தந்தா தனா (2)
தந்த னன தந்தாதானா தந்தனன தந்தானனா னா.....

ஆஹா.......super

irir123
23rd September 2014, 01:27 AM
venkkiram:

'kathhunguyile' - first interlude !! I would like to know if anyone from the present crop can come up with such 'world-class' stuff !

venkkiram
23rd September 2014, 01:46 AM
venkkiram:

'kathhunguyile' - first interlude !! I would like to know if anyone from the present crop can come up with such 'world-class' stuff !

அற்புதமான இடையிசை அது irir. இன்னும் நூறு வருடங்கள் கழித்துக் கேட்டாலும் அது நம்மை ஆச்சர்யப் படுத்தும், தீராத பிரமிப்பில் ஆழ்த்தும்.

'அன்னக்கிளி'யில் ஆரம்பித்து இன்றைய மெகா, தாரை தப்பட்டை வரை இசையாக்கத்தில் ராஜா எப்படியெல்லாம் புதிது புதிதாக, நவீனமான மாறுதல்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறார் என்பது அவரின் பயணத்தில் (4500 பாடல்கள்) ஒரு சில நூறு பாடல்களைக் கேட்டாலே எளிதில் விளங்கும். தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். இதுபோன்ற பாடல்களில் இந்த இந்த இசைவகைதான் வரும் என யாருமே ராஜாவின் இசைப் போக்கினை கணித்துவிட முடியாது. இசையில் புதுமை என்றாலே ராஜாதான். ஆனால் இசை விமர்சனத்தில் வித்தகர் என சொல்லிக் கொள்ளும் இணையவாதிகள் சிலர் இந்த திமிங்கில உண்மையை உணராமல் ( வீம்புக்கென்றே/அறியாமையால் ) அடம்பிடிப்பது வேடிக்கையில் வேடிக்கை. காலம் கடைசிவரை ராஜாயிசையை ஏந்திச் செல்லும்.

irir123
23rd September 2014, 05:01 AM
Venkkiram - that song was a collaboration with guitarist Prasanna (who also did some memorable work with ARR).

IR's creativity visualizes the electric guitar played like a veena and Prasanna does it beautifully ! and still it is in perfect sync with the song and its mood.

check this out from Malayalam - https://www.youtube.com/watch?v=aeqgu6t4RkI

you dont have to understand the lyrics, but IR takes us to Kerala backwaters with the combination of the tune /melody, and orchestration !

rajaramsgi
24th September 2014, 12:18 AM
படம்: மஞ்சள் நிலா (1982)
பாடல்: பூந்தென்றல் காற்றே வா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
எழுதியவர்: கங்கை அமரன்


இந்த பாடலுக்கு விளக்கமே தேவை இல்லை. இன்று இதை உங்களுக்கு நினைவூட்டுவதில் மிகவும் பெருமை படுகிறேன். கிடார் பயில்வோருக்கு இந்த பாடல் ஒரு பயிற்சி பாடம்
https://www.youtube.com/watch?v=pgScoRhSwJA

venkkiram
24th September 2014, 12:52 AM
படம்: மஞ்சள் நிலா (1982)
பாடல்: பூந்தென்றல் காற்றே வா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
எழுதியவர்: கங்கை அமரன்


இந்த பாடலுக்கு விளக்கமே தேவை இல்லை. இன்று இதை உங்களுக்கு நினைவூட்டுவதில் மிகவும் பெருமை படுகிறேன். கிடார் பயில்வோருக்கு இந்த பாடல் ஒரு பயிற்சி பாடம்
ஆரம்ப இசைக்கு இருக்கிற சொத்தையெல்லாம் எழுதிவைக்கலாம் போல.. அதைக் கேட்கும்போது மனசில் எழும்பும் உணர்ச்சிகளை எப்படி வார்த்தையால் வருணிப்பது என திக்குமுக்காட வைத்துவிடுகிறார் ராஜா. இது காலத்தைக் கடந்து நிற்கும் ஆரம்ப இசை என இயக்குனருக்கும் எடிட்டருக்கும் தெரிந்திருக்கிறது போல.. காணொளியை பார்க்கும் ரசிகர்களுக்கு இரண்டு முறை அந்த ஆரம்ப இசையை கேட்டு ரசிக்கலாம். இதுபோன்ற இசைகளை கடந்துவந்த பிறகு இப்போதைய நடப்பு கால இசையை (புதுமையாம் சிலருக்கு!) rip என சுருக்கமாக விமர்சனம் செய்த சமீபத்தில் வந்த ட்வீட்டர் சரியென்றே தோன்றுகிறது.. .

venkkiram
25th September 2014, 08:26 AM
மூக்கியர மூக்கம்மா..

https://play.spotify.com/album/6p7HKiuTIqlBfS8udzazq5

:notworthy:

ராஜாவின் மற்றுமொரு கொண்டாட்டப் பாடல்.. மண்வாசனை படத்தில் முதலாக இடம்பெறும் பாடல். ஆரம்பித்து முடிக்கும் வரையில் அப்படியொரு ஓட்டம். எனர்ஜி. தெம்மாங்கு இசை வாத்தியக் கருவிகளைக் கொண்டு ஒரு நாட்டுப்புற கதம்ப பூமாலையை மேற்கத்திய கிடார் இசை நாறால் கோர்க்கும் கலை ராஜாவுக்கே கைவரும் கலை. ம.வாசுதேவன் - சசிரேகா குரலில் நகைச்சுவையாக ஒருவரை ஒருவர் கேலிபேசுவதாக அமைக்கப்பட்ட இசையாக்கம். எப்போதெல்லாம் எனக்கு மனதளவில் எனர்ஜி தேவைப்படுகிறதோ , அப்போதெல்லாம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

venkkiram
25th September 2014, 09:29 AM
NSK பாடலொன்றைப் போல ஆரம்பித்து, செண்டைக்கொரு கோலுன்டெட-யில் நின்றாலும் பரவாயில்லை. ஆயிரம்தாமரை மொட்டுக்களே வரை பாயுது ராஜாவின் சந்தவீச்சு.

கச்சேரியில் பகிர்ந்தது..

https://www.youtube.com/watch?v=V2evMbGtZlI

திரைப்பாடல்...

https://www.youtube.com/watch?v=yqaeUgrjPZ8

dochu
25th September 2014, 09:36 AM
@venkkiram,
Could you please provide alternate source (mediafire.com etc) to listen to that track? Spotify says it isn't available in India. Wasn't able to listen, please. Thanks,

venkkiram
25th September 2014, 09:57 AM
@venkkiram,
Could you please provide alternate source (mediafire.com etc) to listen to that track? Spotify says it isn't available in India. Wasn't able to listen, please. Thanks,

Its available in Raaga.com

http://play.raaga.com/tamil/album/mann-vasanai-t0000092

Happy listening!

venkkiram
26th September 2014, 09:55 AM
எனக்குத் தெரிந்து.. நான் வளர்ந்த கிராமப் பகுதியில் ஒரு படம் அதிகநாட்கள் ஓடியது என்றால் 'செண்பகமே செண்பகமே'. 42 நாட்கள் ஓடியது. அப்படியென்ன இந்தப் படத்தில் விசேஷம் என்றால் ராஜாவின் பாடல்கள், ராமராஜன்-ரேகா-விஸ்வம் நடிப்பில் சலிப்படையாமல் செல்லும் திரைக்கதை, நகைச்சுவை காட்சிகள். குறிப்பாக ராமராஜனின் அப்பாவாக விஸ்வம் தனது இயல்பான நடிப்பினால் ஒரு முற்றிலும் எதிர்பாராத பாத்திரமாக வலம்வருவார். மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த அந்தக் கொட்டகைக்கு மாட்டு வண்டியில் குடும்பமாக இரவுக் காட்சிக்கு சென்றுவந்தோம்.

https://www.youtube.com/watch?v=4LzuaKB96cc

'மஞ்சப் போடி தேய்க்கையிலே' - சீம்லஸ் என்பார்களே! அதன் அருஞ்சொற்பொருளாக ராஜா கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒன்று. கங்கை அமரன் வரிகளில் எதுகை மோனை ஓசைநயம் இப்பாடலுக்கு அணி சேர்க்கும். கொள்ளை கொள்ளும் ரேகாவின் அழகு. "தேனாறு உன்னுதடு வந்ததென்ன" (@3.06-3.10) என்ற அந்த வரிகளில் திரைமுழுதும் வியாபித்திருக்கும் ரேகாவின் முகத்திற்கு ஈடு எது? கடலோர கவிதையில் என்னுள் மொட்டுவிட்டு மலர ஆரம்பித்த அந்த ரசிப்பூ தொடர்ந்து நான்கைந்து வருடங்களுக்கு மணம் வீசிக் கொண்டெ இருந்தது.

மஞ்சப்பொடி தேய்க்கையில என் நெஞ்ச தொட்டு தேய்ச்ச புள்ள
தண்ணி தொட்ட பாகம் எல்லாம் இந்த கண்ணன் தொடும் காலம் எப்போ
கண்ணுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள

குத்தால சாரலுக்கு யோகமடி
குண்டுமல்லி பூவுக்கொரு நேரமடி
விட்டாக்கா ஏறுதடி பாரமடி
தொட்டு தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி
ஒன்னோட கையாக நானும் மாறி
பொன்னோட பூவோட கூடி
கண்ணாடி பாராத காயம் தேடி
கண்ணே நான் தெம்மாங்கு பாடி
ஒன்னாச்சேர வந்தா போதும்
ஏறும் மோகம் தானா தீரும்

மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன
தேனாறு உன் உதடு வந்ததென்ன
தேன் எடுத்து நான் அருந்த நேரம் என்ன
ஒன்னோட பூமேனி ஓடும் தேரு
எப்போது ஊர்கோலம் கூறு
பன்னீரு பூவாக தூவும்போது
பஞ்சாங்கம் நாளென்ன கூறு
கையும் கையும் கூடும் நேரம்
காதல் ராகம் காத்தும் பாடும்

நடைக்கு ஓய்வே கிடையாது. தபேலா ஆரம்பிக்கும் போதே அது எங்கிருந்து ஆரம்பித்தது இப்படி பாய்ந்து வருகிறது என்ற கேள்வி எழும். மெலடி நாயகனுக்கு. தபேலா கல்யாணம் செய்தும் அப்பாவினால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் அவனது காதல் பசி.. மறைபொருளாக காமம் இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பாஸ் கிடாராக. முதல் இடையிசையில் வயலின் கற்றைகளால் அலங்கரிப்பு அருமை. குடையில்லாமல் திடிரென பெய்யும் மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவோமே..அதுபோன்ற ஒரு பாடல் இது.. மழை வந்ததும் தெரியாது, நின்றதும் தெரியாது..அதுபோல பாடல் ஆரம்பித்ததும் தெரியாது, முடிந்ததும் தெரியாது. மழை உடலை நனைத்துவிடுவதுபோல, நான்கு நிமிடத்தில் நமது மனம் இப்பாடலில் கரைந்துவிடுகிறது.

K
26th September 2014, 08:46 PM
https://soundcloud.com/shanmuganagar/sky-full-of-golden-stars0

Strings,Drums, Voice,Brass...........Musical Treat.

rajaramsgi
28th September 2014, 04:11 AM
Venkkiram,


மஞ்சபொடி தேக்கையிலே பாடல் ராஜா சாரின் பெஸ்ட் ஒப் தி பெஸ்ட் பாடல்களில் நிச்சயம் இடம் பெரும். ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்க வைக்கும் பாடல்.


RP விஸ்வத்தை நன்றாய் நினைவில் வைத்திருக்கிறீர்களே.. இந்த படம் மட்டுமல்ல, அறுவடை நாளில் ரத்னவேலாக வரும் அவருடைய பாத்திரத்தை மறக்க முடியுமா? பாவம் இளவயதிலேயே மறைந்து விட்டார்.


ரேகா ஒரு விதமான அழகு, பார்க்க சற்று முதிர்க்கன்னி போல் தோன்றும். சிறு சிறு முகபாவங்கள் கொடுத்து அசத்திவிடுவார். கொடியிலே மல்லியப்பூ பாடலில் ரேகாவை உட்கார வைத்துவிட்டு இதோ வருகிறேன் என்று கடலுக்குள் சத்யராஜ் போய் விடுவார். போனவரை காணவில்லையே என்று ரேகா துடிப்புடன் எழுந்து ஓடி பயத்துடன் நிற்க, அவருக்கு பின்புறம் சத்யராஜ் ஒரு பெரிய மீனுடன் நின்று பயம் காட்ட, அடுத்த சில நொடிகளில் பயம், அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தோஷம் என அடுக்கடுக்காய் பாவங்கள் கொடுத்து அசத்தி இருப்பார்.

irir123
28th September 2014, 10:07 PM
the entire bgm of Un samayal araiyil and Azhagarsamiyin kuthirai !

I could hear IR's own versions of the blues, jazz, funk, and what not !!

i feel sorry for those who don't work with this genius

rajaramsgi
30th September 2014, 02:10 AM
the entire bgm of Un samayal araiyil and Azhagarsamiyin kuthirai !

I could hear IR's own versions of the blues, jazz, funk, and what not !!

i feel sorry for those who don't work with this genius

Oh yeah.. SUN TV played Un Samayal Arayil movie yesterday (sunday evening). Nice work Raja sir. I enjoyed listening to that bgm guitar bit of katru veliyil that was repeated twice in the movie, compared to the actual song. listen to few bits from http://www.bgmringtones.com/2014/09/un-samayal-arayil-bgm-free-download.html (the last 3 pieces are some funny danush voices for ringtones, i did not uploaded all these, just searched for the bgm and found this link )

climax suspense bgm during the gramiya kalaignargal dance in the museum is excellent, can't find that one anywhere.

venkkiram
30th September 2014, 08:09 AM
Found this gem in youtube and listening in loop.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ( இதை இப்போது முதன்முதலில் கேட்பவர்களுக்கு)

The narration that Our hubber V_S provided :clap:

With all elements; horns, electric guitar, acoustic drums, husky voice and singing, delectable choirs defining this club song, how about a stranger called 'urumi' for this song. Please hear the first interlude end portion and whole of second interlude with urumi coming in as percussion instead of usual drums providing a perfect backdrop for trumpets and electric guitar.

Only Maestro can think of all possible ways from the improbable!


https://www.youtube.com/watch?v=hvmtUFNKut4&list=UUmdfkecOq0UvoqXZjeDgNFA

வாத்தியக் கருவிகள், சப்தஸ்வரம் இப்படிப்பட்ட சொற்களுக்கு ராஜாவின் அகராதியில் தனி அர்த்தங்கள்.

rajaramsgi
3rd October 2014, 03:56 PM
படம்: மயிலு பாடல்: யாத்தே யாத்தே.
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரிணி
எழுதியவர்: ஜீவன்

21ம் நூற்றாண்டில் இதை விட சிறப்பாய் எப்படி சார் ஒரு கிராமிய மனம் நிரம்பிய பாடலை நவீன இசை கருவிகள் கொண்டு பதிவு செய்ய முடியும்? எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது.

கதையின் தன்மை, போக்கு, வேகம் சூழ்நிலை எல்லாவற்றையும் உள்வாங்கி , அதிலே தன்னுடைய சிக்னேச்சர் சற்றும் குறையாமல், அதிகபிரசங்கமும் செய்யாமல் ஒரு 5 நிமிட மாயம் செய்ய வேண்டும். - அது ராஜா சாரால் மட்டுமே முடியும். எல்லா இசை கருவிகள் இருந்தும் எதுவுமே நம்மை உறுத்தாமல் அழகாய் நகர்ந்து செல்லும் இந்த பாடலில் பவதாரிணி, நிறைய வித்தை தெரிந்த ஸ்ரீராம் பார்த்தசாரதியோடு சரிக்கு சமமாய் நடையை கட்டுகிறார். ஒரு ஊஞ்சலில் ஜாக்கிரதையாய், மெதுவாய் அமர்ந்து, சற்றே காலால் தள்ளிக்கொண்டு அப்பறம் முழு ஸ்விங்கில் போவோமே? இந்த பாடலும் அப்படி தான்.

பாடல் மிக நன்றாய் வந்திருந்தும், காட்சி அமைப்பில் எங்கோ தெரியும் அழகிய மலைகளையும் இயற்கையையும் மறைத்து விட்டு குறுகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

அதிகம் கண்டு கொள்ளப்பாடாத மயிலு படம் வெளிவருவதுக்கு முன்னரே பாடல் பதிவுகளின் துளிகளை யூடியூபில் பார்த்தபோது மூக்கால் சொரனையற்று பாடிய பவதாரினியால், அது என்னை அதிகம் ஆட்கொள்ளவில்லை. பின்னர் முழு வடிவம் பெற்று ஆடியோ வெளியானதிலிருந்து என்னை வசியம் செய்து விட்டது. இதே படத்தில் கிறுக்கி அரை கிறுக்கி, நம்மளோட பாட்டுதாண்டா பாடல்களும் பிரமாதம்.

ராஜா சாருக்கு 71 வயது என்பதை இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் போது நம்ப முடியவில்லை. 80களின் ராஜா என்று யாராவது ராஜா சாரை சொன்னால், வாயை கிழிக்கணும், அவர் எப்போதுமே ராஜா தான். நமக்கு தான் ரசனை குறைந்து விட்டது.

https://www.youtube.com/watch?v=MMoCGaitda4

Russellhaj
3rd October 2014, 09:09 PM
இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்

அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்

நிலைக்கும் கானம் இது… நெடு நாள் வாழும் இது!!!


வான மழை போலே ..... இது நம்ம பூமி படத்தில் இருந்து. K.J.ஜேசுதாசின் அருமையான பாடல். ‘குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் யார்’ வாலியின் வரிகள் soothing

Sorry, I cannot attach the vidio ........sorry about that !!

venkkiram
3rd October 2014, 09:42 PM
படம்: மயிலு பாடல்: யாத்தே யாத்தே.
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரிணி
எழுதியவர்: ஜீவன்

21ம் நூற்றாண்டில் இதை விட சிறப்பாய் எப்படி சார் ஒரு கிராமிய மனம் நிரம்பிய பாடலை நவீன இசை கருவிகள் கொண்டு பதிவு செய்ய முடியும்? எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது.

கதையின் தன்மை, போக்கு, வேகம் சூழ்நிலை எல்லாவற்றையும் உள்வாங்கி , அதிலே தன்னுடைய சிக்னேச்சர் சற்றும் குறையாமல், அதிகபிரசங்கமும் செய்யாமல் ஒரு 5 நிமிட மாயம் செய்ய வேண்டும். - அது ராஜா சாரால் மட்டுமே முடியும். எல்லா இசை கருவிகள் இருந்தும் எதுவுமே நம்மை உறுத்தாமல் அழகாய் நகர்ந்து செல்லும் இந்த பாடலில் பவதாரிணி, நிறைய வித்தை தெரிந்த ஸ்ரீராம் பார்த்தசாரதியோடு சரிக்கு சமமாய் நடையை கட்டுகிறார். ஒரு ஊஞ்சலில் ஜாக்கிரதையாய், மெதுவாய் அமர்ந்து, சற்றே காலால் தள்ளிக்கொண்டு அப்பறம் முழு ஸ்விங்கில் போவோமே? இந்த பாடலும் அப்படி தான்.

ராஜா சாருக்கு 71 வயது என்பதை இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் போது நம்ப முடியவில்லை. 80களின் ராஜா என்று யாராவது ராஜா சாரை சொன்னால், வாயை கிழிக்கணும், அவர் எப்போதுமே ராஜா தான். நமக்கு தான் ரசனை குறைந்து விட்டது.

https://www.youtube.com/watch?v=MMoCGaitda4



ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்திச்சி..
ரெண்டு குடம் தண்ணியெடுத்து ரெண்டு பூ பூத்திச்சி
மூணு குடம் தண்ணியெடுத்து மூணு பூ பூத்திச்சி..
கடசில வர்றவள பூ போட்டு புடிச்சிக்கோ
ஓம்புருஷன் யாரு?
ஓம்புருஷன் யாரு?
ஓம்புருஷன் யாரு?
"செல்லபாண்டி!"


இதுபோன்ற நாட்டுப்புற துண்டுப் பாடல்களெல்லாம் ராஜா யுகத்தோடு மறைந்துபோகும். இனி அதை சினிமா மெட்டோடு ரத்தமும் சதையுமாக நெய்ய ராஜாவே மறுபிறவி எடுத்துதான் வரணும். ராஜாவின் இசை.. வெறும் சுரங்கள் மட்டுமல்ல.. வெறும் இசை வித்தை மட்டுமல்ல.. அதில் நமது கலாச்சாரம், மண்ணின் மனம், பண்பாடு இழையோடிக் கொண்டியிருக்கிறது.

rajaramsgi
3rd October 2014, 09:59 PM
போயம்,

சில பாடல்களை யாராவது எடுத்து சொன்னால் மட்டுமே எனக்கு பிடிக்கிறது, இல்லாவிட்டால் அவை எல்லாம் என்னுடைய "ok-type songs folder"ல் தூங்கும், நானும் சீண்டுவதில்லை.

வானமழை போலே மற்றும் வெங்கிராம் எடுத்து சொல்லிய இது ரோசா பூவு பாடலையும் படம் பார்த்த நாள் முதல் எனக்கு பிடித்ததில்லை . ஆனால் இப்போது உங்கள் இருவரின் புண்ணியத்தில் இந்த இரு பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டிருக்கிறேன்.

நன்றி.

venkkiram
4th October 2014, 07:57 AM
ஒரே மெட்டிற்கு இரண்டு வகையான அலங்கரிப்புகள். இதில் ராஜாவா அடிச்சிக்க ஆளே கிடையாது. இருவேறு காட்சி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் சுரங்களை மீட்டு எடுப்பார். நிறைய சொல்லலாம். ஒரு இசையமைப்பாளருக்கு இதுபோல ஒரு மெட்டு கிடைப்பதே அதிர்ஷ்டம். அப்படி கிடைத்தாலும் அதை பெரும்பாலும் ஒருவகையான சூழ்நிலைக்கு மட்டுமே அமைத்து வேறொரு பாடலுக்கு வேறொரு மெட்டு என தீர்மானிப்பது ஒரு நிலை. ஆனால் ஒரு ரசத்திற்கு மெட்டமைக்கப் பட்ட பாடலை அதற்கு தொடர்பில்லாத இன்னொருவகை ரசத்திற்கு பயன்படுத்துவது.. இரு ரசங்களுக்கும் ஏற்றவாறு வாத்தியக் கருவிகள், குரல் மொழியை திட்டமிடுவது, செயல்படுத்துவது.. இதில் மிகப்பெரிய வெற்றி என்பது ஒரே மெட்டில் இரண்டு பாடல்கள் அதுவும் ஒரே படத்தில்.. ஒரே ஒலித் தகட்டில். கேட்டு ரசிப்பது தெகட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கச் செய்யும் சாமார்த்தியம். இசை மீதான சிறந்த ஆளுமைகளால் மட்டுமே இதைத் துணிச்சலாக முடிவெடுத்து நிறைவேற்றி காவியமாக்க முடியும்.

இந்தவகையில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள். அதில் ஒன்று.. நினைவே ஒரு சங்கீதம் படத்தி அமைந்த "எடுத்த வச்ச பாலும்..".

கண்ணுக்கு முன்னாடி ஒரு மொட்டு மலர்வதுபோல நம் மனதில் பறந்து விரிகிறது.. அதென்னமோ சொல்லுவாங்களே .. ஆர்கானிக்.. ஆர்கானிக்.. இதுதான். இரண்டு வகை ஓவியங்கள்... குறும்புத் தனத்தோடு தாபத்தை வெளிப்படுத்தும் ரசத்தில் ஜானகி.. சோக ரசத்தில் பாலு.

பெண்ணின் சில்மிஷம் கலந்த குரும்புத்தனத்தோடும், காதல் ஏக்கத்தோடும் குழையும் விதவிதமான வாத்தியங்கள்..

எடுத்த வச்ச பாலும்.. பெண் குரல்..

https://www.youtube.com/watch?v=t3UUgsb4PgI

எடுத்த வச்ச பாலும்.. ஆண் குரல்.. மனைவிக்கு ஒரு உயிர்கொல்லிநோய் எனத் தெரியவந்து.. திண்டாடும் மனநிலையில்.. பிழிந்தெடுக்கும். இடையிசைகள்

https://www.youtube.com/watch?v=CGQgN6-yRUc

இந்தத் திரைப்படம் வெளிவந்த வருடங்களில் நடுநிலைப் பள்ளிக் காலம். செங்கல் சூலை ஒன்று அமைத்து சில ஆட்கள் கோடை முழுதும் தொடர்ந்து இரவு பகலாக வேலை செய்துவந்தார்கள். மாலை நேரங்களில் சென்று இரவு நடுசாமத்தில் வீடு திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் அங்கே வேலை செய்கிற ஆட்களுக்கு காலத்தை, வேலையை ஒரு சுமையாக தோணச் செய்யாத வகையில் சிறிய டேப் ரேடியோ.. அதில் இலங்கை மற்றும் விவிதபாரதி அலைவரிசையில் இப்படத்தின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். சுகமான பொழுதுகள்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ராஜா!

venkkiram
4th October 2014, 09:50 AM
ராஜாராம் அய்யா!

யாத்தே யாத்தே பாடல் பதிவுக் கூட நிகழ்ச்சிக்கான காணொளி ஒன்று.. பவதாரிணியின் குரலை செதுக்கும் சிற்பியாக ராஜா..

https://www.youtube.com/watch?v=GYroDRM3XZI&index=14&list=PL5eaq3Tie0_pKyQLRQ0IqHsAjkqMjG9qc

rajaramsgi
5th October 2014, 03:01 AM
படம்: முந்தானை முடிச்சு
பாடல்: வெளக்கு வெச்ச நேரத்திலே
எழுதியவர்: நா. காமராசன்
பாடியவர்கள்: ஜானகி, ராஜா சார்.

படத்துக்கு டைட்டில் சாங் அல்லது டைட்டில் மியூசிக் ரொம்ப முக்கியம். ஒரு முழு நீள படத்துக்கான முன்னோட்டம் மட்டுமல்ல, கதை ஆரம்பிக்கும் முன், உளவியல் ரீதியாக நம்மை தயார் செய்பவையே இவை. எப்போதும் போல், ராஜா சார் தன்னுடைய மாஜிக்கை ஆரம்பத்திலேயே காட்டிவிடுவார். சில சமயம் கிளைமாக்ஸ் சுபம் கார்டு போடும்போது ஏற்படும் உணர்வை ஆரம்பித்திலேயே காட்டுவதும், படம் எடுக்கப்பட்ட கிராமத்தையோ, நகரத்தையோ, ஆனைமலை, கொல்லிமலை, பொள்ளாச்சி, ஊட்டி போன்ற ஊர்களையோ - சூழ்நிலைக்கேற்ப்ப சரியான வாத்தியங்கள் கொண்டு பின்னணி இசையோடு டைட்டில் கார்டிலேயே அசத்தி விடுவதில் அவர் கில்லாடி.

இதோ முந்தானை முடிச்சு படத்தில் வெளக்கு வெச்ச நேரத்திலே.. தலைப்புக்கும், கதைக்கும் ஏற்ற என்ன ஒரு பொருத்தமான பாடல்...

ஆரம்பத்திலேயே ஒரு குறும்பு ஹைக்கூ கவிதை. ஒரு தாத்தாவை கை கழுவ சொல்லிவிட்டு, அவர் கையில் ஒரு கவளம் சாப்பாடு வைக்கிறார் பாட்டி. உழைத்து களைத்த தாத்தா, தான் சாப்பிடாமல், ஒரு கிக் கலந்த புன்முறுவலோடு பாட்டிக்கு ஊட்டி விடுகையில் டைங், ஏவிஎம் மின் முந்தானை முடிச்சு கார்டு.. அப்பறம் ஜானகி கொஞ்சுவதும், சிணுங்குவதும், சிரிப்பதுமாய்... கூடவே ராஜா சார் சேர்ந்து கொள்ள.. அஹா.

பாடலின் முதல் வரி தொடங்கி கடைசியில் முடியும் வரை அக்மார்க் அசைவ சமாச்சாரங்கள். ஆனால் எங்குமே விரசம் தெரியாத வண்ணம் அழகாய் இசையும் வரிகளும் ஆலிங்கனம் செய்யும். ஷெனாயும், குழலும், தாள வாத்தியங்களும் கம்பீரமாக இருக்கும் இந்த பாடலின் இறுதியில் மற்ற தாள வாத்தியங்களை பின்னுக்கு தள்ளி, பாடலை தவில் கையகபடுத்தும் அழகை என்ன சொல்வேன்?

பாடலின் தொடக்கத்தை அருவிக்கரை ஓரத்திலே என்று தான் நா. காமராசன் எழுதி இருக்கிறார். பாடல் பதிவில் 7 அல்லது 8 டேக் போய் கொண்டிருந்த போது பாக்யராஜ் உள்ளே வந்து இந்த வரி சரி இல்லை, அதனால் வெளக்கு வெச்ச நேரத்திலே என்று மாற்றுங்கள் என்று ராஜா சாரிடம் சொல்ல, அவர் கடுப்பாகி சத்தம் போட தயாரிப்பாளர் வந்து சொன்ன பிறகே வரிகளை வெளக்கு வெச்ச நேரத்திலே என்று மாற்றினார்களாம்.

https://www.youtube.com/watch?v=BiURPJLGOu8

Kimrep
6th October 2014, 07:49 PM
it would be awesome to get hold of IR's stand-in tracks like this one for yathe... some of the NEPV tracks and the sandhams he sang in the videos GVM played in the audio release were incredible.

Russellhaj
9th October 2014, 06:50 AM
பூங்கோதை மௌனம் தான் பரிபாஷையோ
புரியாத ஜாடை என்ன மரியாதையோ
துடிப்பிலே பிள்ளைதானோ
தோகையின் பாவமோ !!


ஜெயச்சந்திரனின் அருமையான இனிமையான குரல். ராஜாவின் இசை ....ராஜா கையை வச்ச பின்னே wronga போகுமா ??:)

http://www.youtube.com/watch?v=8h5LAUySlk8

venkkiram
17th October 2014, 09:14 AM
2011-ல் சென்னையில் நடந்த ராஜாயிசைக் கச்சேரியில் இடம்பெற்ற, பாடல் தேர்வில் என்னை இன்னமும் பிரமிப்பை ஆழ்த்தும் ஒரு பாடல்.. 'ஒரு ராகம் பாடலோடு' - ஆனந்த ராகம் படத்திலிருந்து. சிங்கம் (தாசண்ணா) வயதாகிவிட்டாலும் பாடலின் மெட்டமைப்பில் ராஜா பொதித்து வைத்திருக்கும் ஸ்விங்-தனத்தை எதிர்பார்ப்பிற்கும் மேலேயே நன்றாகவே செய்தார். தனது இளமைக் காலத்தில் எப்படியெல்லாம் வீறு கொண்டு நடந்த சிங்கம் அது. வியப்பு இன்றுவரை அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் நான் இப்போது பார்த்து கண்டுகளிக்கும் 2011- சென்னைக் கச்சேரி பாடல்களில் அது ஒன்று.

https://www.youtube.com/watch?v=lcd9RqPHE3s

இதுபோன்ற ஒருபாடலை வைத்தே ராஜாவை எந்தக் கோபுரத்தின் உச்சத்தில் வைத்தும் பாராட்டலாம். ஒரு மெட்டையே டூயட் வடிவத்தில் காதல் ரசத்திற்கும், சோலோவாக சோக ரசத்திற்கும் விருந்து படைத்திருந்தார். தன் ஆக்கத்தின் மீது ஒரு படைப்பாளிக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் அது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரே மெட்டு இரண்டு விதமான எதிரெதிர் உணர்வுகளை கொண்டு செல்லப் பயன்படனும் என்பது எவ்வளவு கடினமான வேலை. ஜானகி, தாசர் போன்ற ஆளுமைகள் இருந்தால் கவலைப்படாமல் ராஜா துணிச்சலாகவே இறங்குவார் இதுபோன்ற முயற்சிகளில். தனிப் பாடலைக் கூட தாசருக்கு ஒன்று.. ஜானகிக்கு ஒன்று என சமமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை வெவ்வேறு நிறங்களில்.

டூயட் பாடலுக்கு.. தாசரும், ஜானகியும்.. என்பதே அழகான தேர்வு! இருவரும் ஒவ்வொரு சொல்லையும் உச்சரிக்கும் தொனியிருக்கிறதெ! அந்த வித்தைக்கு சொத்தையே எழுதி வைக்கலாம். தனித்தனியே பார்த்தால் பல்லவியும் சரணமும் இரண்டு வெவ்வேறு தளத்தில் இயங்குவதாக தெரியும். ஆனால் ராகதேவன் இரண்டுக்கும் மிக அற்புதமாக பாலம் கட்டியிருப்பார். அப்பப்பா! பூமாலை அலங்கரிப்பதில் ராஜாவும் அவரே. கோரஸ்ஸை எவ்வளவு நேர்த்தியாக கட்டமைத்திருக்கிறார். நாம் இப்பாடலின் பல்லவியை தனியாக ஹம் செய்தாலும் கோரஸ்ஸையும் கூடவே ஹம் செய்ய மனம் விழையும். பல்லவி ஒரு ஊஞ்சலாகவே நம்மைச் சுமந்து இன்பத்தில் ஆழ்த்துகிறது. "ஒ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது!" என்ற வரிக்கு பிறகு ஊஞ்சலின் வேகம் குறைந்து சமநிலைக்கு வரத் தொடங்கும். காவியப் பாடல்.

https://www.youtube.com/watch?v=GGekCjufNWY

சரி.. டூயட் பாடல் இப்படி என்றால்.. தாசரும் ஜானகியும் தனித்தனியே பாடியது சோகரசப் பாடல்களின் விஸ்வரூபம் எனலாம். சரணத்தை அவர்களின் குரல் கையாளும் விதம் இருக்கிறதே.. என்னவென்று சொல்வது! சாஸ்டாங்கமாக விழுந்துவிடலாம். ஒரு இடத்தில் கூட சோகத்தை வலியக்க திணிக்காமல்.. ஒரு கயிறு மேல் நடப்பது போல சரணத்தை குரல் கடந்து சென்று சோகத்தை நம்மீது ஊற்றிவிடுகிறது.

https://www.youtube.com/watch?v=spOC5b7hg1s

https://www.youtube.com/watch?v=57W890fBvME

:notworthy:

venkkiram
22nd October 2014, 08:49 AM
பட்டாச சுத்தி சுத்தி போடட்டுமா!

http://www.youtube.com/watch?v=FwVNR2AanW4

அன்பர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் !

sivasub
2nd November 2014, 02:07 AM
A very unheard song from Telugu... https://www.youtube.com/watch?v=g4qB9p_ix5A

sivasub
2nd November 2014, 02:37 AM
Another one....

https://www.youtube.com/watch?v=yt_4XWGOiy8

venkkiram
9th November 2014, 10:03 PM
ராஜாவின் இசையில் ஜானகியின் ஹம்மிங் இடம்பெற்ற பாடல்கள்...ஒரு தொகுப்பு!

https://www.youtube.com/watch?v=zEqGFjUgnoI

இது உலகெங்கும் பரவியிருக்கும் ராஜா - ஜானகி ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான்.

சிறப்பானதொரு சேவை. நன்றிகள் கோடி Venkateswaran Ganesan!

Russellhaj
9th November 2014, 10:48 PM
ILAIYARAJA -JOHNY FULL BGM



http://www.youtube.com/watch?v=XWRIubHXkPE&feature=youtu.be

rajaramsgi
10th November 2014, 12:37 AM
பாடல்: ஆனந்த மாலை
படம்: தூரத்து பச்சை (1987)
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஜானகி, கிருஷ்ணசந்தர்

500 தடவைக்கு மேல் நான் கேட்டு ரசித்த பாடல்களை கூட எப்போது கேட்டாலும், பாடலுக்கு இடையில் ஏதாவது ஒரு புது சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது. வெறும் மிட்டாய் கிடங்கு அல்ல அவர்.. அட்ச்சய பாத்திரம்.

இந்த பாடலுக்கான யூடியூப் கருத்துக்கள் பகுதியில் போகன் R என்பவர் இப்படி எழுதி இருக்கிறார். "இளையராஜாவைத் தோண்டினால் இன்னமும் இது மாதிரி அற்புதங்கள் கிடைக்கின்றன என்பது வியப்பாய் இருக்கிறது.தீரவே தீராதோ இந்த மிட்டாய்க் கிடங்கு?"

https://www.youtube.com/watch?v=3RlKPvr8crk

rajaramsgi
10th November 2014, 12:58 AM
படம்: இல்லம் (1987)
பாடல்: நந்தவனம் பூத்திருக்குது
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: பாலசுப்ரமணியம்

ஏற்கனவே இந்த பாடலை பற்றி பேசியாகி விட்டது. என்னால் இதை விட முடியவில்லை. மறுபடியும் கேளுங்களேன். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் தபேலா மற்றும் ட்ரம்ஸ் மாற்றம் (ட்ரான்சிஷன்) எவ்வளவு அருமையாக இருக்கிறது தெரியுமா? தடதடவென ட்ரம்ஸ் வரும் இடமெல்லாம் உங்கள் இதயம் குதுகூளித்தால், உங்களை போன்றே நானும் அதை அனுபவித்தேன் என்று எடுத்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=m5VdNnsIELE

rajaramsgi
10th November 2014, 01:28 AM
படம்: சாமி போட்ட முடிச்சு (1991)
பாடல்: மாதுளம் கனியே
பாடியவர்கள்: ராஜா சார், ஜானகி
எழுதியவர்: கங்கை அமரன்

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை ஆரம்ப காலம் தொட்டு கேட்டு வந்தாலும், படம் பார்க்காததால் இது ஒரு தாலாட்டு பாடல் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். டூயட் பாடல் என்று சமீபத்தில் தான் தெரிந்தது. முரளியும் சிந்துவும் மறைந்து விட்டார்கள், ஆனால் அவர்கள் வாயசைத்த இந்த பாடலுக்கு மரணம் இல்லை..

பாடல் பதிவு செய்து அன்று ஆர்கஸ்டிரா புல் ஹவுஸ் என்று நினைக்கிறேன், அவ்வளவு வாத்தியங்கள், அள்ளி தெளித்துவிட்டார்.

இந்த பாடலை அழகான ஆழியாறு அணை பகுதிகளில் படம் பிடித்திருக்கிறார்கள். ஊருக்கு போகும்போதெல்லாம் ஆழியாறு மற்றும் வால்பாறைக்கு செல்வதை ஒரு யாத்திரையாகவே செய்து வருகிறேன். எத்தனை பாடல்கள்? இந்த மலைகளும், மலை சார்ந்த இடங்களும் எத்தனை முறை அவருடைய பாடல்களுக்கு தலையாட்டி இருக்கும்? ம்.....

https://www.youtube.com/watch?v=IRD9LOU4YfM

K
13th November 2014, 03:05 AM
a song from Sathya which was not Included in the movie

https://soundcloud.com/shanmuganagar/here-and-there-same-joy

https://www.youtube.com/watch?v=yt_4XWGOiy8

Thanks to Mr.Venkateswaran Ganesan.

venkkiram
13th November 2014, 03:18 AM
a song from Sathya which was not Included in the movie

https://soundcloud.com/shanmuganagar/here-and-there-same-joy

https://www.youtube.com/watch?v=yt_4XWGOiy8

Thanks to Mr.Venkateswaran Ganesan.

Wonderful composition from Raja. I also mentioned about this song here.

http://www.mayyam.com/talk/showthread.php?10454-Why-I-Consider-IR-Unparalleled&p=1149653&viewfull=1#post1149653

venkkiram
14th November 2014, 08:37 AM
ராஜா. ஜானகி. பாஸ் கிடார். கோரஸ். சொர்க்கம்.

:notworthy:

https://www.youtube.com/watch?v=7Tcw9huYZ8s

rajaramsgi
1st December 2014, 01:26 AM
பாடல்: பூ என்றும் பொன்னே என்றும்
படம்: துருவ நட்ச்சத்திரம் (1993)
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம், சித்ரா

https://www.youtube.com/watch?v=NxiciFBFoZU

raagadevan
1st December 2014, 12:01 PM
தும்பீ வா தும்பக் குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்சாலிடாம்...

ஓளங்கள் (1982) / அமோல் பலேகர் /பூர்ணிமா ஜெயராம் / பாலு மகேந்திரா / ஓ. என். வி. குருப் / இளையராஜா / எஸ். ஜானகி...

https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I

rajaramsgi
1st December 2014, 03:33 PM
தும்பீ வா தும்பக் குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்சாலிடாம்...

ஓளங்கள் (1982) / அமோல் பலேகர் /பூர்ணிமா ஜெயராம் / பாலு மகேந்திரா / ஓ. என். வி. குருப் / இளையராஜா / எஸ். ஜானகி...


ராகதேவன்,

சரியான நேரத்தில் இதை பகிர்ந்துள்ளீர்கள். நேற்று காலை (2014-11-30) சன் டிவியில் ஒளிப்பரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியில் கிட்டார் சதா சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நீங்களும் பார்தீர்களா? நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் கிட்டாரில் தும்பி வா பாடலை வாசித்தார். நிகழ்ச்சியில் சதா அதிகம் பேசவில்லை . சிறிது நொடியே வரும் அந்த இசை தெய்வீக ஒலி, அருமை, கேட்க தவறியவர்களுக்கு இதோ லிங்க்:

மலையாளத்தில் வந்த இந்த அசல் பாடலை ராஜா சார் அப்படியே விட்டிருக்கலாமோ?

DOWNLOAD THE MP3 VERSION OF SADHA PLAYING THUMBI VA (1 min 35 seconds) (https://www.dropbox.com/s/g3h7ljjntnzs8yk/Sadha%20Playing%20Thumbi%20Va.mp3?dl=0) (no need to have dropbox account, just download without sign up option)

https://www.youtube.com/watch?v=TFnw4-23P0g

raagadevan
1st December 2014, 07:35 PM
Thank you for the link, rajaramsgi! :) The guitar rendition is really great.

venkkiram
3rd December 2014, 11:04 AM
பிறந்த நாள் வாழ்த்துகள் சில்க். December 2.

உன்னைப் போல இன்னொருத்தி வருவாளா என்பது சந்தேகம். ராஜாவின் இசையின் மூலம் நாம் நித்தமும் நினைக்கும் சினிமாக் கலைஞர்களில் குறிப்பாக நடிகைகளில் முக்கியமானவர் சில்க். அதுவும் ஜானகி குரல் பல நடிகைகளை அடையாளம் காண ஒத்துழைத்திருக்கிறது. சர்வ உணர்வுகளையும் இசையினால் வடிக்கும் திறமைகொண்ட ராஜா பாலுணர்வு பொங்கும் பாடல்களையும் அதியற்புதமாக படைத்திருக்கிறார். அதிலும் மெதுவான, மிதமான, வேகமான தாளக்கட்டுகளில்.. இந்தத் தளத்தில் ராஜாவை அடித்துக்கொள்ள இன்னும் யாருமே பிறக்கவில்லை.. அதற்கு முன்பும் யாருமே கிடையாது.. சரி.. இன்று சிலாகிக்கப்பட வேண்டியவர் சில்க் என்பதால் ராஜாவை இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம். ஒரு (திராவிட) தக்காண பீடபூமிப் பெண்முகம் என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் முகத்தை உதாரணமாகச் சொல்லலாம். காந்தக் கண்கள். நடனத்திலும் பெயர் போனவர். நடை, உடை, தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு. குணச்சித்திரப் பாத்திரத்திலும் திறமையானவர். ஆனால் தீனிபோட சரியான படைப்பாளிகள் இல்லை. கவர்ச்சி என்ற தளத்தில் இவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் காலியாகவே இருக்கின்றது..

https://pbs.twimg.com/media/B32lWK2CQAIqJbU.jpg

http://2.bp.blogspot.com/-zYdmm2dPtlE/T2n9nB_j1iI/AAAAAAAAAI8/R1V5xqrtnVA/s400/Silk-Smitha.jpg

https://www.youtube.com/watch?v=83w9zJHcjGA

https://www.youtube.com/watch?v=54DqqHH_lRA

https://www.youtube.com/watch?v=cxeCf4a2k1k

venkkiram
3rd December 2014, 11:17 AM
https://www.youtube.com/watch?v=AMc_ZAqqAno

https://www.youtube.com/watch?v=dIrKnoB42Oo

https://www.youtube.com/watch?v=217EGqxtq9E

venkkiram
3rd December 2014, 11:18 AM
https://www.youtube.com/watch?v=iM4hXOpYAcM

https://www.youtube.com/watch?v=JZyw5iFgTYs

https://www.youtube.com/watch?v=Qveg840rPDY

rajaramsgi
9th December 2014, 09:23 PM
ஹீரோயினி அறிமுக பாடல்கள் எத்தனையோ இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. அந்த பாடல்களை யார் அமைத்திருந்தாலும், ராஜா சார் மட்டும் தான் கதையில் அந்த ஹீரோயினிக்கு கொடுக்கபட்டிருக்கும் பாத்திரத்துக்கும், கதை களத்துக்கும் ஏற்றவாறு இன்ட்ரொடுக்க்ஷன் சாங் கொடுத்து அசத்த முடியும் . (பவதாரிணி பாடி கெடுத்த பாடல்களை விட்டுவிடுவோம்)

அறுவடை நாள் படத்தில் வந்த இந்த பாடலை யாராவது மறக்க முடியுமா? படத்தில், இந்த விளையாட்டு பெண் வளர்ந்து, ஆளாகி, ஆங்காங்கே சந்திக்க போகும் துரதிர்ஷ்ட வசமான நிகழ்ச்சிகளை பாடலும், பாடலில் வரும் சத்தங்களும் நம்மை தயார் செய்து விடும். நான் அதிகமுறை கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

https://www.youtube.com/watch?v=DRQJnp1v4UY

rajaramsgi
11th December 2014, 03:18 AM
பாடல்: வானத்துல வெள்ளி ரதம் படம்: எங்க ஊரு மாப்பிள்ளை (1989)
பாடியவர்கள்: மனோ, சித்ரா
எழுதியவர்: வாலி

பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது.

நதியில் எழும் நீர் அலை போல்
நினைவில் எழும் நாயகி நான்..
ஆஹா.....

ராமராஜன் பாடல் என்று பாடலை கேட்காமல் விட்டு விடாதீர்கள்.. ராஜா சாரின் டிபிகல் விண்டேஜ் பாடல், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த பாடலை மறந்து போனவர்கள் மீண்டும் ஒரு முறை கேட்டால் மகிழ்வீர்கள்.

சமீபத்தில் நளினியின் மகன் திருமண பதிவை பார்த்த போது ராமராஜனின் நிலையை பார்த்து மிகவும் பரிதாப பட்டேன். பாவம்.

(https://www.youtube.com/watch?v=InGis3MPuso)https://www.youtube.com/watch?v=InGis3MPuso

Russellhaj
11th December 2014, 06:44 AM
இதே நாளில் 1882 வருடம் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதியாரை பற்றி படமெடுக்க பலர் முயன்றனர்.பாலச்சந்தர் ,கமலஹாசன் மற்றும் பலர் ..ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் 2000 ஆம் ஆண்டு தான் அது சாத்திய மாயிற்று ..இந்த திரை படத்தை நானும் எனது நண்பனும் இது திரை இடப்பட்ட ,தேவி பாலா திரைஅரங்கில், நூறாவது நாளில் தான் சென்று பார்த்தோம் .பெயர் போட ஆரம்பித்ததுமே ஒரு கிளாசிகல் முகப்பு இசை ..ஒரு அமைதியான மெலடி இல் ஆரம்பித்து ஒரு பெருந்துயரத்தில் முடிந்தது .
பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் எப்படி இந்த ஜாதி ,மதம் ,பந்தபாசம் ,பணம்,சடங்குகள் ,இப்படிதான் இருக்க வேண்டும் என்று சமூகம் உருவாக்கி வைத்த நியதிகள் போன்ற அற்ப விசயங்களில் இருந்து விடுபட்டு ஒரு மஹா மனிதனாக ,இயற்கையை இரசிப்பவனாக,கலகக்காரனாக ,ஒரு மகாகவியாக மாறுகின்றான் என்பதையும் பிறகு எல்லாவற்றையும் வெறுத்து ,சமூகத்தால் புறகணிக்க பட்டு,சொந்த குடும்பத்தால் கூட புரிந்து கொள்ள படாமல் தன் காலத்திற்கு முன்னரே மரணத்தை தழுவுகின்ற சோகத்தை முடிந்த வரையில் நேர்மையாகவும் ,சுவாரசியமாகவும் ,உணர்ச்சிமயமாகவும் பதிவு செய்தது இந்த திரைப்படம் .
"Amadeus " திரைபடத்தின் இறுதி காட்சியில் மொசார்ட் இறந்ததும் அவரது கடைசி இசை குறிப்பான "lacrimosa " பின்னணியில் ஒலிக்க அவரது இறுதி சடங்கு நடைபெறும,கண்ணீர் மல்கும் தருணம் அது. ..
அதே போல இந்த படத்தில் பாரதி இறந்ததும் அவரின் இறுதி சடங்கு ஆரம்பிக்கும் போது "நல்லதோர் வீணை ..பாடல் அந்த மொத்த சோகத்தையும் இசைக்க ...அதுவரையில் திரைஅரங்கில் ஒரு விதமான தயக்கத்துடனும் ,சலசலப்புடனும் இருந்த கூட்டத்தினுள் ..ஒரு ஆழ்ந்த நிசப்தம் உருவாகியது..எல்லோர் கண்களும் நீரால் நிரம்பியது .பல பெண்கள் அழ ஆரம்பித்து விட்டனர்.ஆனால் நாங்களோ 'ச்சே ஆண்கள் கண்ணீர் சிந்துவதா ' என்று எங்களை கட்டுபடுத்தி கொண்டு இருக்க ..மேஸ்ட்ரோ இளையராஜா "வல்லமை தாராயோ என்று ஆரம்பிக்க எங்களையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது ..எனது நண்பன் என்னை பார்த்து "That ,My Friend, is Music "என்று சொன்னது இன்னும் கூட என்னால் மறக்க முடியவில்லை ..மொசார்ட்டின் 'lacrimosa 'இசைக்கு சற்றும் குறைவில்லா ஒரு இசை ..
இதுவும் ஒரு 'period' பிலிம் தான்.இது மாத்ரி திரைப்படங்களுக்கு எப்படி பின்னணி இசை இருக்க வேண்டும் என்று இந்த திரைபடத்தின் பின்னணி இசையை கேட்டால் உங்களுக்கே புரியும் .முகப்பு இசை ,காசியில் பாரதி இருக்கும் போது வரும் சம்ஸ்கிருத பாடல்.பாரதி இதுதான் எனது அடையாளம் என்று முடிவு செய்யும் போது வரும் இசை ,ஆரம்பத்தில் கர்நாடிக் வடிவில் இருக்கும் பின்னணி இசை .பாரதி, ஷெல்லியின் கவிதையை வாசிக்கும் போது வெஸ்டேர்ன் க்லஸ்ஸிகல் இசையாக மாறி ஒலிப்பது என்று படம் முழுவதும் பின்னணி இசையில் பின்னி இருப்பார் ..
மயில் போல பாடலை பாடிய பவதாரிணிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது ..ஆனால் அந்த பாடலுக்கும்,படத்தின் மற்ற மறக்க முடியா பாடல்களுக்கும் ,இந்த பின்னணி இசை கோர்வைகளுக்கு இசைஅமைத்த மேஸ்ட்ரோ விற்கு தேசிய விருது கிடைக்காதது எப்படி என்று தான் தெரியவில்லை ..படத்தின் முழு பின்னணி இசை தொகுப்பு..

https://soundcloud.com/navinmozart/illayaraja-bharathi-2000-soundtrack-original-complete-score

Russellhaj
12th December 2014, 07:33 AM
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10628348_10205800974488076_2760342693888087584_n.j pg?oh=d5e08227a6f5ae74759a40eb6fdf51e1&oe=55097BCF&__gda__=1430613721_7c12249332bf9b539cf1bafd8bea843 2

rajaramsgi
15th December 2014, 12:23 AM
பாடல்: புதிய பறவை பறந்ததே..
படம்: தென்றல் வரும் தெரு (1994)
பாடியவர்: சொர்ணலதா
எழுதியவர்: மு. மேத்தா

இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் குரலை வருத்தி பாடும் கோரஸ் குயில்களும், உடல் வலிக்க குழுவாக ஆடும் நடன மங்கைகளுமே என் நினைவில் வருவார்கள். இரு பிரிவினருக்குமே அங்கீகாரம் அதிகம் கிடைப்பதில்லை. ஊதியமும் அதிகம் தருவார்களா என தெரியவில்லை.

ரொம்ப நல்ல பாடல். நல்ல சுத்தமான ஒலியில் பாடலை கேட்க கேட்க சுகமான வலி வரும். பாடலில் வரும் மஞ்சள் மற்றும் சிவப்பு கஸ்தூரி பறவை போலவே இருப்பார்கள்.. படம் வெளிவந்து 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. நேற்று பார்த்தது போலவே நினைவு.

https://www.youtube.com/watch?v=aEJrAr1otBc

Raga's steaming audio of this song: http://play.raaga.com/tamil/song/album/Thendral-Varum-Theru-T0002971/Puthiya-Paravai-266300

Russellhaj
15th December 2014, 08:19 PM
Short and sweet speech from the Pithamagan of Carnatic music Shri Semmangudi Srinivasa Iyer on Shri. Ilayaraja.


செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பூஜை அறையில் ராஜாவின் படம் உண்டு என்று இரு வேறு நபர்கள் இரு வேறு இடங்களில் எழுதி படித்து உள்ளேன். இதை யாரவது confirm பண்ண முடியுமா ? Thanks in advance. :)



https://www.youtube.com/watch?v=UOSNvACZ0vI&feature=youtu.be

Russellhaj
15th December 2014, 08:33 PM
Ilayaraja is not a musician , He is a Music Lesson:


https://www.youtube.com/watch?v=biX7yhynhrQ&feature=youtu.be

venkkiram
16th December 2014, 06:57 AM
"மாமியார் வீடு" பாடல்களின் தரம் சார்பாக இங்கே எழுதியிருக்கிறேன்.. வாய்ப்பு கொடுத்த தோழருக்கு நன்றி.

http://www.mayyam.com/talk/showthread.php?8707-Oscar-Thamizhan-Isaipuyal-AR-Rahman-News-Updates&p=1191581&viewfull=1#post1191581

"மாமியார் வீடு" பாடல்கள் இங்கே.. இத்தளம் www.ilayaraja.in மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது... ரசிகர்களுக்கு வரம்.

http://www.ilayaraja.in/tamil-songs/player.php?moviename=mamiyaar-veedu

venkkiram
17th December 2014, 12:49 AM
இந்த முறை: "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்கு நானே நீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.

http://www.mayyam.com/talk/showthread.php?8707-Oscar-Thamizhan-Isaipuyal-AR-Rahman-News-Updates&p=1191806&viewfull=1#post1191806

http://ilayaraja.in/tamil-songs/player.php?moviename=enakku-nane-neethipathi

வாய்ப்பு கொடுத்த தோழருக்கு மீண்டும் நன்றி.

K
19th December 2014, 08:45 AM
Devathai Sound Track- Master Piece

https://soundcloud.com/navin-mozart/illayaraja-devathai-1997-soundtrack-original-complete-score

venkkiram
20th December 2014, 10:45 PM
காற்றுக்கென்ன வேலி பாணியில் அடி பெண்ணே..
-- திரு கோபால்.

ஹலோ.. போறபோக்குல எப்படி அதுக்கும் இதுக்கும் முடிச்சி போடுறிங்க? இரண்டு பாடலுமே திருமண ஒப்பந்தம் / சம்பந்தத்தை இருபாலினரும் உணர்கையில் தொடர்கிறது. ஆனால் அதுபோல சூழ்நிலையில் பெண் குரலில் நிறையப் பாடல்கள் வந்திருப்பதாக நினைக்கிறென். அனு - வள்ளி. இருவரின் கதாபாத்திரமும் முற்றிலும் வேறான தன்மை கொண்டவை. வாழும் இடம்/சூழ்நிலை, பழகும் மனிதர்கள், தனிப்பட்ட குணம், இளமையின் ஏக்கங்கள், உலகம்/இயற்கை மீதான தனது அபிப்ராயங்கள் எல்லாமே வெவ்வேறு தளங்கள். இரண்டு பாடல் வரிகள் (குரு-கண்ணதாசன், சிஷ்யர்-பஞ்சு அருணாசலம்) வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் வழி மிக எளிதாகவே இதை உணரலாம். ராஜா தனது முத்திரையை "அடிப்பெண்ணே" மெட்டமைப்பிலும், பின்னணி இசையிலும் பாத்திரத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப மிக அழகாக நெய்திருப்பார். அந்த இசை வகையை குறிப்பிட்டு ஒரு குடைக்குள் அடைக்க முடியாது. அது "ராஜா" என்ற அவரே அறிமுகப் படுத்தி வைத்த இசை வகை.

https://www.youtube.com/watch?v=k0F8PvI9vLQ

venkkiram
23rd December 2014, 02:17 AM
இன்று "கண்ணில் என்ன கார்காலம்" பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கையில் ட்வீட்டரில் இச்செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. புல்லரித்துவிட்டது. என்னே ஒரு தற்செயல் நிகழ்வு! கண்ணில் நீர்த்திவலைகள் கோர்த்தது. உணர்ச்சிகள் குவியலாக கொட்டிக்கிடக்கும் ஜாடியிலிருந்து காலப் பெருவெள்ளத்தில் ராஜா நிகழ்தகவு சோழிகளை உருட்டிவிட்டுக் கொண்டெ இருக்கிறார் போலும். இதுபோல சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெறுவதை ஒவ்வொரு ராஜா ரசிகரும் அவ்வப்போது ஏதாவது ஒரு தருணத்தில் உணரலாம்.

https://pbs.twimg.com/media/B5e9cGkIAAIvsj-.jpg

https://www.youtube.com/watch?v=oCBhFFBylUM

கண்ணில் என்ன கார்காலம் பாடலை இன்று ஏன் கேட்க நேர்ந்தது எனப் பார்த்தால்.. போன வெள்ளியன்று திரு விக்கி அவர்கள் இப்பாடலின் ஆரம்ப இசையை மட்டுமே அவரது மகனுடன் இசைப்பதை யூடியூபில் பார்க்கநேரிட்டு, அது தொடர்த்தியாக மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=BmT4wlX2PlI&feature=youtu.be


When you can write a multi-part score at your will, you know you are in a league of your own.

The prelude of "Kannil enna Kaarkaalam" is one of my fascinations. Musically, there are so many layers in that song that every time I listen to it, it tells me how little I know and how much more I still need to go to appreciate this giant called Maestro Ilaiyaraaja.

If you look at each of the track in this multi-part harmony, its so simple. So perhaps its not such a big deal to find such a simple composition in Western classical tradition. But you look closer and you will see that the prelude operates in such a narrow range of notes of the major scale. If a composer is able to pack so many tracks with these notes and is still able to balance each of them and give them their place within the prelude without making a clutter out of it, it shows the mark of his genius.

And what is certainly a big deal is the seamless transition of ideas.. The composer thinks of a multi-part Western classical prelude for the first 30 seconds and then eases into an indian melody (With strong mohanam notes in the first few lines) set for a tisra nadai tabla rhythm without even you noticing it. Composing with such musical zeal song after song makes this man truly one of a kind!

This song is one of those comforting type that makes you slow down, take a deep breadth, close your eyes and listen to it. Melodywise the song is nothing special but SPB and Janaki take this to the next level due to only one factor.. The factor misused by every talent show judge nowadays - Singing with Soul, expression, feeling etc etc. Next time you listen to the song please pay attention to the emotion expressed by the singers and you will understand what truly "singing with feel" means.

The song's visuals for once do justice to music. That's because its picturized song by the master story teller Balu Mahendra. Its such a complete song, that even superstar Rajnikanth is not standing out in a song (like he usually does, even if its a sad song) but let the song be bigger than him. According to me, this song should be in the same league of best of Raaja - Balu Mahendra combinations but somehow didn't attain that cult status, which I hope posts like this will rectify.

I already mentioned the song is for a sorrow situation, but if you are a composer you know that its difficult to bring out that emotion in a major scale. But if you do handle it right, it sounds so soothing.. Especially that second chord of C#dim in strings ensemble towards the end of the prelude cuts me into two every time. A similar song of companionship that makes an equal impact is Simon and Garfunkel's "Bridge over troubled waters".

irir123
1st January 2015, 09:13 PM
venkkiram - the same album has two more gems "malarey malarey" - with top-notch interludes - perfect song to listen during an afternoon rain !

and 'yenna desamo' - KJY perfect choice for that kind of a melody.

Rajini in this film - was such a casually endearing performance !

IMHO, had he chosen to play such roles - in-between his 'mass' roles (with Deva's thundering 'aiy aiy aiy' chorus background OMG!), one film a year with such roles showing his depth - would have given us all a super foil to Kamal's 'armageddon-like' creative run - putting Tamil cinema elsewhere.

Rajini had all the makings of our own cross between Billy Bob Thornton & Philip Seymour Hoffman - recently watching Thornton in A Simple Plan as a stuttering / stammering younger brother along with elder brother and friend involved in a stolen-money-greed plan gone wrong murder story - was nothing short of brilliant - https://www.youtube.com/watch?v=gNtGI_D85mQ -

Rajini had all the charisma of a Hoffman and the talent of a Thornton IMHO - instead caricaturing himself over 10 years - under/unutilized

rajaramsgi
8th March 2015, 03:22 PM
இன்று உலக மகளிர் தினம்.

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்,
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்.

உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடிவதில்லை!

https://www.youtube.com/watch?v=K0MNzaOonMI
(https://www.youtube.com/watch?v=udbwN2VTgPE)

irir123
10th March 2015, 05:08 AM
top notch editing - and an underrated song (of the many songs of IR!)

venkkiram
9th April 2015, 08:28 AM
ஹனிபா மறைந்துவிட்டார். மறக்கமுடியுமா அந்தக் குரலை எந்நாளும்!

நட்டநடு கடல் மீது..
https://www.youtube.com/watch?v=5GtNSb6YQtA

உன் மதமா என் மதமா..
https://www.youtube.com/watch?v=9CeKP6a55AY

mappi
17th April 2015, 02:09 PM
https://www.youtube.com/watch?v=H2-_HOk_D-o

mappi
17th April 2015, 02:13 PM
Been listening to Rudrama Devi, a wonderful album and it provoked me to pick up several other IR songs. Been listening esp., to these 2 collection and juggling Rudrama Devi songs inbetween, a glad year so far :

https://www.youtube.com/watch?v=qSt3kZ--BDk

https://www.youtube.com/watch?v=zEqGFjUgnoI

PS : Thanks to the person who collected and concatenated this awesome series of musical bits, and also for providing an index to easily acess various pieces.

mappi
17th April 2015, 05:43 PM
https://www.youtube.com/watch?v=13ZDJbGhnOs

https://www.youtube.com/watch?v=rnQDQkRIwDQ

BGM :

https://www.youtube.com/watch?v=msKe6bl05Ks

mappi
17th April 2015, 05:58 PM
https://www.youtube.com/watch?v=ag2EftOjFPI

Joannepx
1st May 2015, 08:12 PM
Movie name: Karagatakkari

Villupattu gets a new dimension in Maestro's composition.

https://www.youtube.com/watch?v=8GK-o7Egt2k

K
19th May 2015, 10:52 PM
https://www.youtube.com/watch?v=xPBiw1wEqC4

sri kanaka mahalakshmi recording dance troupe

Songs

rajaramsgi
26th May 2015, 01:10 AM
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்...
https://www.youtube.com/watch?v=ZcckP3nk-YQ (https://www.youtube.com/watch?v=ZcckP3nk-YQ)


1982'ல் மேற்படி பாடலில் கார்த்திக்கை நினைத்து அருணாவை உருக வைத்த ராஜா சார்... பின்னாளில், (1990)சொர்கத்தின் வாசற்படியில்..
இரண்டு பாடலும் ஒரே ராகமோ என்னமோ தெரியவில்லை, ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது..
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg

venkkiram
2nd June 2015, 07:31 AM
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா!

தெரிந்த மொழியில், நடையில் எனது எண்ணக் குவியல் இங்கே.
http://venkkiramweb.blogspot.com/2015/06/blog-post.html

https://www.youtube.com/watch?v=wc1JJ89o6wc

venkkiram
2nd June 2015, 07:41 AM
நமது மண்ணின் இறைவழிபாடு, சடங்குமுறைகளை இசையில் ஆவணப்படுத்த உன் அளவுக்கு யாருமே இங்கே இல்லை.

https://www.youtube.com/watch?v=-LRLXF2j1ps

:notworthy:

rajaramsgi
2nd June 2015, 09:52 PM
அமுதா, உனக்காக நான் அலைந்த அந்த
நான்கு ஆண்டுகள் ஓடியதே தவிர
நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆனால், கல்லூரியின் கடைசி நாளில்
நான் அவர் பாடல் ஒன்றை பாட,
கண் விரிய முதன் முதலில் என்னை பார்த்தாயே
அட, நீயும் ராஜா ரசிகனா என்பது போல்?
உன் முறை வந்த போது
சிலிர்த்தெழுந்து அவர் பாடல் ஒன்றை
பாடிய உன்னை மறப்பேனா?


அமுதா, உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்
அவர் நினைவுக்கு வருகிறார்.
அவரை கேட்கும் போதெல்லாம் நீ நினைவில் வருகிறாய்.
உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை.
எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய்.
உன்னை பார்த்து இருப்பத்திமூன்று ஆண்டுகள் ஓடி விட்டது.
இருந்தால் என்ன?
நாம் இருவருமே அவரை தானே அன்றாடம் கேட்கிறோம்.
இன்று அவருக்கு பிறந்த நாள், உளமார வாழ்த்தி இருப்பாய்..
உன்னுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.


https://www.youtube.com/watch?v=tRPch8z7-ac (https://www.youtube.com/watch?v=tRPch8z7-ac)


https://www.youtube.com/watch?v=crO9G1iUzGI (https://www.youtube.com/watch?v=crO9G1iUzGI)

Joannepx
4th June 2015, 05:18 AM
இவர் ஒரு அமுதசுரபி..
கிருஷ்ணச்சந்தர் ஜானகி அவர்களின் இனிமயான குரலில் ஆனந்தமாய் நம் மனதுக்குள் சென்று நடனம் ஆடுகின்றது
ஏன் இம்மாதிரி பாடல்கள் எல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரும் பாட முன்வரவில்லை?
https://www.youtube.com/watch?v=3RlKPvr8crk

rajaramsgi
13th June 2015, 11:30 PM
ராஜா சாரின் துள்ளளான பாடல், மைனா மைனா மாமன் புடிச்ச மைனா..

இந்த பாடலில், வாத்தியங்களின் அமைப்பும், இசை கோர்வையும் இன்றைய தொழில்நுட்பம் மற்றும் காலகட்டத்துக்கு சற்றும் சளைத்தது இல்லை.


https://www.youtube.com/watch?v=VLGL7ekWEW0

rajaramsgi
26th June 2015, 10:46 PM
சில வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி தொடராக வந்த பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணுக்காக, ராஜா சார் போட்டு கொடுத்த பாடல். இதுக்கு என்ன சார் கொறைச்சல்?

https://www.youtube.com/watch?v=DHEm0vMGmCo

Joannepx
6th September 2015, 05:52 AM
Film movie: Mella pesungal
Wish Deepan chakravarthy could have sung many more songs.

https://www.youtube.com/watch?v=iCdkj4jlygA

Joannepx
14th October 2015, 08:07 AM
A gem of a song. Kaanada fusion with top class interludes
https://www.youtube.com/watch?v=oKAaQcNwNOs

venkkiram
18th October 2015, 08:10 AM
பிரபஞ்சக் கூத்து! இளையராஜா.

பாடல்களின் பின்னணி இசையை கேட்போர் நாடி நரம்பினுள் செலுத்திய ராகதேவன்.

https://www.youtube.com/watch?v=WGZT2dDx5zY

irir123
20th November 2015, 04:59 AM
Guitar Prasanna performs 'Ilamai itho itho'!

https://www.youtube.com/watch?v=_cgO2ABdHXs

K
10th January 2016, 06:49 PM
Madha Un kovil and Thaalattu Greatest hits of "Ilaiya"Raaja. Original Official Version.


https://www.youtube.com/watch?v=LXgyi7lLbR4

suivipa
11th January 2016, 01:07 PM
K
Thank you for bringing this song.
Thalaattu.. What a tune and the complete song flows so nice in its entirety. Orchestration and arrangements at its best. Imagine bringing so many variations and scheme of emotions from various instruments those days when we had just single track recording live with everyone present with a specific call sheet?. Mindblowing to even just think of it.
Only Raaja fossible.
This composition will be 4 decades old very soon.
I still remember listening to the Panasonic radio with all the hissing disturbing noises which came as complimentary. I say this as I listened to it in a suburb of bangalore and my mother religiously turned to radio at beetime and listened to Thiruchi and Ceylon stations each day and night.
I wish I could take a time machine and transcend again to those glorious days.

Thanks for taking me on this short trip.

venkkiram
11th January 2016, 10:20 PM
மாதா உன் கோயிலில் பாடல் ஒலிப்பதிவின்போது ஜானகி அழுதுவிட்டாராம் துக்கம் தாளாமல்.. இப்பாடலில் தாய்மையோடு கலந்து நிற்கும் பக்தி ரசம் வேறு மதத்தவர்கள் கேட்கும்போதும் மெய்மறந்து போவது தனிச்சிறப்பு. மெலடிக்கும், பின்னணி இசைக்கும் ராஜா கட்டமைக்கும் பாலம் வேறுயாராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. அதனால்தான் காலம் கடந்தும் இப்படைப்பாக்கம் செழுமையோடு நிற்கிறது.. பல உள்ளங்களை அசைத்துப் பார்க்கிறது.

irir123
12th January 2016, 12:20 AM
Guitar Prasanna and "chinna kannan azhaikkiraan" !

https://www.youtube.com/watch?v=dwXIo2VcRS8

thumburu
12th January 2016, 12:53 AM
Thank you K and Rasayya for taking us through the lane of nostalgia. :)
"thAlAttu" is such an exquisitely crafted MadhyamAvathi beauty by Raja, well sung by SPB and PS.

rajaramsgi
19th February 2016, 09:03 PM
வய்யாரி கோடாரம்மா (பிரேமிஞ்ச்சு பெள்ளடு)

***இந்த திரி சற்றே தொய்வடைந்து விட்டது, தயவு செய்து நீங்கள் கேட்டு ரசித்த பாடல்களை மற்றவர்களுக்கு சொல்லலாமே..

இந்த தெலுங்கு பாடலில் ஜானகியும் , பாலசுப்ரமணியமும் மாற்றி மாற்றி ஹொ ஹொ ... ஹொ எனும்போது என்னால் பரவசபடுவதை நிறுத்த முடியவில்லை (ராஜா சாரை என்றென்றும் நான் நேசிக்க எத்தனை காரணங்களை சொன்னாலும் இது போன்ற சங்கதி அள்ளி அள்ளி தந்திருக்கிறாரே மனிதர் !! )

இரண்டு முறை கல...வரம் என்று பாலு பிரித்து பாடும் போதும் கவனிக்க ! இடை இசையில் ஒலிக்கும் சப்தங்கள் 1984-1986 காலகட்டங்களை யாருக்கேனும் நினைவு படுத்தலாம்.

நவ்வேட்டி நக்ஷத்ராலு என்று தொடங்கி ராதிகா என்று முடியும் வரை ஒரே வாக்கியமாய் இடை விடாமல் வருவதை ஆச்சர்யத்தோடு கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்த சரணத்திலும் அதே மேஜிக்.

இன்று காலை தான் இந்த பாடலுக்கான வீடியோவை முதல் முறையாக பார்த்தேன், ஒரு வாரமாய் ஐடியூன்சில் பாடலை மட்டுமே கேட்டு, என் மனக்கண்ணால் நான் பார்த்து வைத்திருந்த காட்சிகள் அனைத்தையும் நொறுக்கி தள்ளி விட்டார்கள் ராஜேந்திர பாபுவும், பானுப்ரியாவும். ராஜா சார் பாடல்களுக்கு அப்படி ஒரு கதி அமைந்து விடுவதை இன்று வரை நிறுத்த முடியவில்லை.

(http://http://www.dailymotion.com/video/x17uqb5_vayyari-godaramma_music)dailymotion video of the song: http://www.dailymotion.com/video/x17uqb5_vayyari-godaramma_music

https://www.youtube.com/watch?v=O3PoBNexENY

suivipa
20th February 2016, 09:28 AM
Very true.
Has happened to him time and again.
That is what I cant digest.
Sappa situations solli directors have got great output from him.
The Ki & Ka song with its hype created by the journalist is good that common man will get to hear once it climbs the charts.

rsubras
22nd February 2016, 02:34 PM
Very true.
Has happened to him time and again.
That is what I cant digest.
Sappa situations solli directors have got great output from him.
The Ki & Ka song with its hype created by the journalist is good that common man will get to hear once it climbs the charts.

Rasaiyya, it is more like, in many instances, music flows out of him irrespective of the situations the director narrates to him..... very few times (esp with Kamal hassan and may be with BR, BM, MR) the directors inspire his music..........

suivipa
22nd February 2016, 07:24 PM
rsubras
Welcome back.
Longtime ......

Yeah the guys you mentioned all of them got more than they visualized or envisioned. They competed with IR to outperform him with concentrating on the visual appeal . Used best choreographers , grand sets and lighting and better locales to give some justice.
But again IR is the clear winner with all of the.
They can only try to compete in the race .
When recently asked if we was satisfied with any of the visuals with songs and their picturization so far he was not happy man. He still has not got the right director to showcase his strength on celluloid media?

What an apathy.
1000+ movies and still he is looking for the right guy ?

This should not happen to anyone. I pray

rsubras
23rd February 2016, 02:05 PM
it will not be that he is looking for the right guy...... i doubt he might have ever looked for (except may be in the initial years)............ some best things showcases itself and gets the ideal platform on its own......even the dappa movies which had some of his most enjoyable scores were like Sachin's centuries in some irrelevant exhibition matches.. it delighted the targeted audiences despite the medium.

venkkiram
7th October 2016, 07:48 PM
கொம்பேறி மூக்கன் (தமிழ்) - ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
உணரு (மலையாளம்) - தீரம் தேடி

இரண்டும் ஒரே மெட்டுதான். ஆனாலும் இருவேறு விதமான இசை அலங்கரிப்புகள்.. அதான் ராஜா!

இசையின் இருகரைகளுமே பச்சைதான் எனக்கு.

தவழ்ந்துவரும் வயலின் கற்றைகளும், மிதமான தபேலா தாள இசையும் இரண்டு பாடல்களிலும் சுகானுபவத்தை வழங்கிக்கொண்டே இருக்கின்றன.

https://www.youtube.com/watch?v=z24WOjMy_6w

https://www.youtube.com/watch?v=9RHxgORPkzg

mappi
25th November 2016, 04:27 AM
Movie : Thambikku Entha Ooru
Year : 1984, Tamil.
Song : En Vaazhvile Varum Anbe Vaa

https://www.youtube.com/watch?v=QUw86lKY2Sk

Movie : Dear Zindagi
Year : 2016, Hindi
Song : Ae Zindagi Gale Laga

https://www.youtube.com/watch?v=xQx5H14YTyQ

Credits :
Original Composer - ILAIYARAAJA
Lyricist - Gulzar
Singer - Arijit Singh
Produced & Arranged by - Amit Trivedi

raagadevan
25th November 2016, 05:56 AM
Raja's original "ae zindagi..." from SADMA (1983), sung by Suresh Wadkar...

https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ

rajaramsgi
3rd December 2016, 09:02 PM
1987 காலகட்டத்தில் இது ஒரு தொடர்கதை படத்தில் இடம் பெற்ற "ஏ வென்னிலா".. எழுதி இசையமைத்தவர் கங்கை அமரன் என்று படத்தின் டைட்டில் கார்டு போட்டு விட்டதால் நம்ப வேண்டி இருக்கிறது. இந்த பாடலை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த பாடலை கேட்க கேட்க, இசை அமைத்தவர் ராஜா சாரோ அல்லது அவர் சாயலில் இவர் போட்டதா என்கிற எண்ணம் ஏற்படுவதால், இந்த பாடலை இந்த பகுதியில் அறிமுகப்படுத்த எனக்கு சற்று தடுமாற்றம். இருந்தாலும், இசை கோர்ப்பிலும், பாலு மற்றும் ஜானகியின் குழைவிலும் இந்த பாடல் பிரமாதம்.

https://www.youtube.com/watch?v=SRQfJFqstJw

rajaramsgi
1st January 2017, 11:38 PM
சசிகலாவை நினைவிருக்கிறதா?

1985ல் வெளிவந்த அன்பின் முகவரியில் "உயிரே உறவே"..

ஜானகி சிறு இடைவெளி விட்டு உச்சரிக்கும் உயிரே உறவே அழகல்லவா? பாடலின் இடையில் ஓரிரு நொடிகளே வரும் ஆண்கள் கோரசை குறித்து கொள்ள தவறியவர்கள் பாவிகள். பெண்கள் கோரசும் மென்மையான தென்றல் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஊட்டி, வால்பாறை பின்னணியில் படக்காட்சிகள் எடுத்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்கலாம். இந்த பாடலை ஒரு முறை முழுமையாய் கேட்பவர்களை மேலும் சில முறை கேட்க தூண்டும்.

இதை ஜோடிக்கு இளமை காலங்களில் ராஜா சார் கொடுத்த ஹிட் பத்தாதென இதையும் கொடுத்திருக்கிறார். இந்த வகை பாடல்களுக்கு நான் அடிமை.

https://www.youtube.com/watch?v=fHCL5rjYvrM

rajaramsgi
6th January 2017, 03:43 PM
ராஜா சார் ஏற்கனவே இசை அமைத்த பாடலை மறுசுழற்ச்சி செய்ய ஏதோ காரணம் இருந்தால் அதை அவர் அழகாக செய்து விடுவார். ஒரே ராகத்தில் 50 பாடல்கள் இசை அமைத்தாலும், 50க்கும் வெவ்வேறு ஆடை ஆபரண அணிகலன்களை அணிவித்து நம்மால் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கமுடியாதபடி ஆக்கி விடுவதில் கெட்டிக்காரர். வகை தொகை இல்லாமல் எத்தனையோ பாடல்களை இதற்க்கு உதாரணமாய் சொல்ல முடியும்.

ராஜா மகள் பாடல் பிள்ளை நிலா படத்தில் 1985ல் வெளிவந்தது. இதற்க்கு முன்னர் நான் அளித்த உயிரே உறவே பாடலுக்கும் ராஜா மகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நான் "சொல்லவில்லை". சொடக்கு போட்டு சொன்னாலும் 3 வித்யாசங்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை..

அங்கு ஜானகி பாலு, இங்கு ஜானகி ஜெயச்சந்திரன்.
அங்கு மோகன் சசிகலா, இங்கு மோகன் ராதிகா.
வார்த்தைகள் வேறு , பாடலுக்கான சூழ்நிலை வேறு.

ரிஷிவானியோ கீரவாணியோ... கேட்பதற்கு சுகமாக இருக்கிறது அல்லவா? ராஜாவை கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..

https://www.youtube.com/watch?v=WKv1OE2v7A0

rajaramsgi
23rd January 2017, 04:05 PM
உறவெனும் புதிய வானில் (நெஞ்சத்தை கிள்ளாதே 1981).. பாடல் பிரமாதம்.. நான் எதேச்சையாய் கேட்க நேரிட்டு, பிடித்து போய் இங்கே தரும் பாடல்களில் எல்லாம் மோகனோ ராமராஜனோ இடம் பெற்று விடுகிறார்கள், அதற்காக நான் அவர்களுடைய ரசிகன் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சரி, பாடலுக்கான திருஷ்டி பொட்டு என்னவென்று நான் சொல்ல வேண்டுமா? சுஹாசினி என்று யாரேனும் முடிவு செய்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல :-)

https://www.youtube.com/watch?v=I0UFU8LzcTk

rajaramsgi
31st January 2017, 04:44 PM
ஏம்ப்பா... இந்த இடத்தை எல்லோரும் ஊத்தி மூடிட்டிங்களா? இங்க வந்தா ஏதாச்சுச்சும் ராஜா சாரோட பொக்கிஷம் கிடைக்கும்ங்கற நம்பிக்கை பொய்யாகாதுன்னு நினைக்கிறேன்.. மற்ற சமூக வலை தலங்களுக்கு என்று விட்டீர்கள் போல, இங்கேயும் அப்பப்போ வந்து நீங்க கேட்ட ஒரு ராஜ சாரோட பாடலை பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

SVN
4th February 2017, 02:02 AM
Here's a rare song in German composed by Ilaiyaraaja and sung by S. Janaki. It's from the movie, 'Pudhu Paattu', released in 1990.
"Ich Liebe Dich".


There's no female singer who is as versatile as S. Janaki in the Indian Music field. Not even Asha Bhosle. Sadly, Janaki Amma has not received the recognition she deserves across India.

Enjoy the song...
https://www.youtube.com/watch?v=52CgcDqgGP4

rajaramsgi
5th February 2017, 03:12 PM
Thank you SVN and mappi, you brought a bit of relief and signs of life to this place.

All of you, please post more, share a song, there are many desperate people like me waiting.

SVN
15th February 2017, 01:02 AM
Whenever Jayachandran and Susheela have rendered duets composed by Ilaiyaraja, they've always created magic. Some songs that instantly come to our mind are 'Thalaattuthe Vaanam' (Film: Kadal meengaL), 'Poovile Medai Naan Podavaa' (Film: Pagal Nilavu).

Here are three more beauties.
1. 'Manjal Nilaavukku' (Film: Muthal Iravu - 1979).
A haunting humming by Susheela, mimicking the sound of train, a very creative handling of Raga Mayamalava Gowla, the 'train' rhythm, flute, guitar strumming, amazing violins in the first interlude, with a scale change in the second interlude... Exceptional rendition by the singers. Notice the fun the composer has had in finishing the song, with a slight elongation of the line by Susheela, followed by a shorter follow-up line from flute at 4.12. Oh, what a wholesome feast!
https://www.youtube.com/watch?v=WxdZxedjPzE

The song Manjal Nila leads me to a song from the movie of the same name:

2. 'Poonthendral Kaatre Vaa Vaa' (Film:Manjal Nila, 1982).
A great song with excellent orchestration. Ignore the awful visuals and choreography. Close your eyes and enjoy the song. I think it was featured a few years ago in this thread.
https://www.youtube.com/watch?v=dPvSQV-yL4M

2. Mayanginen Solla Thayanginen (Film: Naane Raja Naane Manthiri, 1985)
Yet another composition by Raja in Raga Charukesi, but with a completely different flavour. A great lesson in use of counterpoints. Effortless singing at the higher notes by the colossal talent that is Jayachandran.

https://www.youtube.com/watch?v=5pWIoNwpLcA

mappi
25th February 2017, 03:18 PM
Raja of Western and Eastern Classicism

5/ Vaanam Niram - Dhavani Kanavugal - Janaki/SPB

https://www.youtube.com/watch?v=g8o2qKYXo7Y

4/ Maan Kanden - Rajarishi - Vani Jairam/Yesudas

https://www.youtube.com/watch?v=drc8hA8XJoE

3/ Or poomaalai adhil - Iniya Uravu Poothadhi - Chitra/Mano

https://www.youtube.com/watch?v=ECbmn7EFt_o

2/ Raga Deepam Eatrum - Payanangal Mudivathillai - SPB

https://www.youtube.com/watch?v=esyrXNKsBzc

1/ Putham Puthu Poo - Thalapathi - Janaki/Yesudas

https://www.youtube.com/watch?v=GvJmI1u9Kv8

Maan Kandaen Maan Kandaen,
Maanaedhaan Naan Kandaen.
Pulli Maanaa Maanida Maanae !
- Illaiyaraja

rajaramsgi
26th February 2017, 02:55 PM
மஞ்சள் நிலா: ரயில் வரும் ஓசையை கொண்டே பல்லவியை ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கிறார். முதல் இரவு படம் நான் பார்க்கவில்லை, இது போன்ற பாடல்கள் அனைத்தும் lp ரிகார்டுகளில் கேட்டு வளர்ந்ததால், இந்த கால கட்டத்தில் வந்த ராஜா சாரின் பாடல் அனைத்தும் தேசிய கீதத்தை விட அதிகம் எனக்கு அத்துப்படி. பல்லவி வருமிடமெல்லாம் காட்சியின் பின்னணியில் ரயில் போவது போல் அமைத்திருப்பார்கள் என்கிற எண்ணத்தில் தான் இது நாள் வரையில் இருந்தேன். முதல் முறையாய் இந்த பாடலின் காட்சியமைப்பை இன்று யூடியூபில் பார்த்தேன். இயற்க்கை அழகை அழகாக காட்டி இருந்தாலும், மருந்துக்கு பாடலின் தொடக்கத்தில் 4 நாடிகளும் இறுதியில் 4 நொடிகளுமே ரயிலை காட்டுவது ஏமாற்றம் தான்.


பூந்தென்றல் காற்றே வா: ஒலி விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது..ஆனால் கோயில் மணி போன்ற கம்பீரத்தை வழங்கும் இந்த சப்தங்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. இந்த பாடலின் தெளிவான mp3 யாரிடமாவது இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


வானம் நிறம் மாறும்: இது போன்ற எத்தனை எத்தனை பீல் குட் பாடல்கள்? அந்தாளுக்கு நான் அடிமைங்க.. மிக சரியான இசை கோர்வை.. எங்குமே பிசிறில்லை.


மான் கண்டேன்: சங்கதிகள் அதிகம். யேசுதாஸின் குரலும், தபேலாவும் கம்பீரம். ஆஹா.. ராஜா சார் அவர்களை தவிர இது போன்ற ஒரு பாடலை யார் தர முடியும்?

rajaramsgi
26th February 2017, 08:48 PM
1986 ஆம் ஆண்டு வெளிவந்த மொக்கை படம் எனக்கு நானே நீதிபதி. இந்த படத்தில் இரண்டு முத்துக்கள்.. எளிமையான டியூன் தான், கேட்க கேட்க இனிமையாய் இருக்கிறது. ஏனோ இவை அதிகம் பேசப்படவில்லை. tamiltunes.com'ல் இந்த பாடல்களின் முழு mp3 இருக்கிறது.. பாப் அப்களை தாண்டி டவுன்லோட் செய்ய வேண்டும்

https://www.youtube.com/watch?v=pCB5CmrBZ9Y


(https://www.youtube.com/watch?v=zFEJ25gTiN4)https://www.youtube.com/watch?v=zFEJ25gTiN4

mappi
27th February 2017, 03:46 AM
Raja Fusion

Kanavu Ondru Thoonudhey From Oru Odai Nadhiaagirathu (1983)

https://www.youtube.com/watch?v=ObXMskXRnwQ

In today's world of music, where EDM has taken a clean sweep over anything called musical, the above song, even after another couple of decades, will still be considered as an advanced composition. It looks Funk with a stylized Disco. The drum beats are replaced on and off with tabla. Baroque violin, initially, duets with the vocal and then, with a cello. Janaki’s voice is haunting (as always), yet, in a completely distinct modulation.

The music transcript, the arrangement and the orchestra blend into a fusion within a fusion where Hindustani meets Revathi.

Beyond the universe of music world, maybe, this Genre is known as Gnanam.

rajaramsgi
27th February 2017, 04:18 PM
At last I am seeing some life here.. thanks mappi and SVN.. others please welcome back.. let us push hard to keep this forum alive. I am so used to coming here for about 18 years, longer than my wedding anniversaries . I really do not want to abandon this place.

இந்த இடம் விட்டு நான் நகர மனம் இல்லாததிற்கு ஒரு காரணம் சொல்கிறேன்.

ஒரு ஓடை நதியாகிறது திரை படத்தில் நான் அதிகம் விரும்பிய பாடல்களாக 'தலையை குனியும் தாமரையே' மற்றும் 'தென்றல் என்னை முத்தமிட்டது' ஆகிய பாடல்களை வகை தொகை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டிருந்தாலும், mappi எடுத்து சொன்ன பிறகு தான் 'கனவு ஒன்று தோன்றுதே' என்கிற பாடல் இருப்பதையும், அதனுள் அவ்வளவு சங்கதிகள் இருப்பதையும் புரிந்து கொண்டேன். இன்று காலை முதல் ரிபீட் மோடில் அந்த பாடலை கேட்க கேட்க என் மனம் திங்கள் கிழமை ப்ளூ இல்லாமல் குதூகலிக்கிறது.

இது போல் எத்தனையோ பாடல்களை இங்கிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நண்பர்களே... கலப்படமில்லாத, மாசற்ற (unpoluted) இந்த பகுதியில், 'அந்தாளோட' பாடல் ஏதேனும் நீங்கள் ரசித்திருந்தால் இங்கு சொல்லுங்களேன்.

lydayaxobia976
28th February 2017, 10:20 PM
[QUOTE=rajaramsgi;

ஒரு ஓடை நத mappi எடுத்து சொன்ன பிறகு தான் 'கனவு ஒன்று தோன்றுதே' என்கிற பாடல் இருப்பதையும், அதனுள் அவ்வளவு சங்கதிகள் இருப்பதையும் புரிந்து கொண்டேன். இன்று காலை முதல் ரிபீட் மோடில்

Wow what a song , I haven't come across it for many years. Almost forgot its existence.
Thank you Mappi for sharing it.
And Rajaramsgi thank you for your contribution and keeping this place alive.

lydayaxobia976
28th February 2017, 10:29 PM
I would like to share this song , which I saw in vikatan list . I don't even remember hearing this song before. Sorry if someone already shared it.
https://youtu.be/ycax3YIRh0s

mappi
28th February 2017, 11:34 PM
'Manjal Nilaavukku' (Film: Muthal Iravu - 1979).
A haunting humming by Susheela, mimicking the sound of train


மஞ்சள் நிலா: ரயில் வரும் ஓசையை கொண்டே பல்லவியை ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கிறார்.

An Odyssey of Rhythm

There are several songs composed by Ilayaraja assuming the sound made by a locomotive. His collaboration with Mani Rathnam has quite a few blends of the train noises (inside the cabin, as well as from the platform) knitted together into a fabulous rhythm. Couple of examples : Raja Rajathi Raja from Agni Natchathiram, Chinna Thai Aval from Thalapathi. Other than that, Ilayaraja had often associated himself to pick up the grainy noises and turn them into music, one such song is Thaalaattu Ketkatha from Paattukku Naan Adimai.

Ilayaraja, apart from being a versatile composer and an enthusiastic conductor, is an excellent director of music (I always admire this golden profile of the Maestro).

The opening of the film Gopura Vaasalile is the departure of a train. We hear the industrial noises of the engine, train whistle and wheels screeching on the metal tracks. Once the locomotive wheels out of the platform, the whistle is replaced by a flute, the engine and the wheel sounds are taken over by keys. Pattern of a moving train sound is not broken, but arranged into a fabulous rhythm. As the title of the movie suggests - an entrance - the journey of the train moves into several tunnels, and the acute beats mingle with the flute. Throughout the crossing, different instruments cover the tracks and finally the entrance of the train passing through a misty atmosphere (the past) into a dark tunnel (symbolizing the entrance into a new stage of life) is welcomed by violins that slowly opens to a bright gateway - the other entrance of the tunnel.

Ilayaraja would have gone through the silent visuals. Without any other inputs, just understanding the theme of the movie, the magician produces a music transcript. When each musician follows his arrangement, An Odyssey of Rhythm is what the viewers cherish:

https://www.youtube.com/watch?v=ppNDnGyrw-0

mappi
1st March 2017, 12:22 AM
Whistling Raja

https://www.youtube.com/watch?v=T_-KwWylNuM

From Kan Sivanthal Man Sivakkum

mappi
1st March 2017, 12:25 AM
Raja Fusion

Sandha Kavigal Paadidum from Metti

https://www.youtube.com/watch?v=g2XXZauk94I

rajaramsgi
1st March 2017, 03:33 PM
வெட்டவெளி பொட்டலிலே -- நல்ல நாள் - 1984.

சின்னப்பா தேவர் மறைந்த பின்னர், அவர் மாப்பிள்ளை தியாகராஜனும் மகன் தண்டாயுதபாணியும் மொக்கை மற்றும் தோல்வியை அள்ளி அள்ளி கொடுத்து தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டனர். இந்த நிறுவனத்துக்காக, தர்மத்தின் தலைவன் வரை 6 படங்களுக்கு ராஜா சார் இசை அமைத்திருக்கிறார்.

ஆவி சம்பத்தப்பட்ட தேவர் பிலிம்ஸின் "நல்ல நாள்" திரைப்படத்திலிருந்து இந்த பாடல்: வரப்போகும் திகிலுக்கு அடையாளமாய் ஒரு ஹம்மிங் மற்றும் அதை ஒட்டிய சோகத்துக்கு இசை வடிவமாய் முன்னுரை, டிரம்ஸ் சற்று தூக்கலாக போட்டு, வயலின் சோகத்துடன் இடை இசை, குழல் மற்றும் ஆர்கன் பல சேர்த்து, ஜானகி குரலில் ஓங்கி ஒலிக்கும் "வெட்டவெளி பொட்டலிலே...... ஜானகி மூச்சு விட இடைவெளி விடும்பொழுதெல்லாம் ஜில் ஜில் கிடார் சத்தம்..

இந்த பாடலுக்கு மயங்காதோர் ஒரு பாடலுக்கும் மயங்க மாட்டார். பீரியட்

https://www.youtube.com/watch?v=urMWGRIDYpA

rajaramsgi
1st March 2017, 10:20 PM
சந்த கவிகள் இன்னொரு பீல் குட் பாடல். ஆரபி ராகத்தில் அமைந்துள்ளதாக இசை தெரிந்தவர்கள் வலை தளங்களில் ஏற்கனவே சிலாகித்திருக்கிறார்கள். பிரம்மானந்தம் வேறு படங்களில் பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.. கர்நாடகம் மிளிரும் அந்த குரலில் ஆரபி ஜொலிக்கிறது.. இன்றைய ரிப்பீட் எனக்கு :-) இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்: ஆசை கிளியே (தம்பிக்கு எந்த ஊரு) மற்றும் மன்னவனே மன்னவனே (தந்துவிட்டேன் என்னை)

கோபுர வாசலிலே பற்றி என்ன சொல்வது? இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கும்பகோணத்தில் பார்த்த படம். இன்றளவும் நான் வியக்கும் விந்தைகளில் இந்த டைட்டில் இசை கோர்வையும் ஒன்று. ஊட்டி மலைக்கும் ரயிலுக்கும் ராஜா சார் தீட்டிய ஓவியம். ஆர்கனும் புல்லாங்குழலும் நீட்டி முழக்குவதில் ஏதோ ஒரு சோகம் அப்பி கொள்ளும்.

SVN
2nd March 2017, 11:26 PM
வெட்டவெளி பொட்டலிலே - Listening to this haunting solo by S Janaki Amma for the first time. Thank you rajaramsgi.

Amazing tune.. The 2nd interlude had some very unsettling portions.

Janaki Amma of course excels in her rendition. Be it her emotions, clarity of words or perfect intonation..


Thank you mappi for the unsung gem, 'Vandhaale Allippoo' from Kan Sivanthal maN sivakkum. If the original master is still available, it can be easily used as is, without any change in today's movies, even after 35 years!! Guitar, sitar, drums and a smooth-as-silk voice of a young Raja! Wow!

ThrumagaL varugayil manamuruguthu vegu naaLaaga naaLaaga..

Did you notice that the scene starts with two gurus teaching Bharatanatyam. They are none other than the legendary dance couple, Smt Shanta and Sri Dhananjayan.

While K P. Brahmanandan's rendition of 'Santhak KavigaL Padidum' is great, can't help wondering what it would have sounded like had Jayachandran sung it? Especially with regards to the pronunciation and the precision in finishing the lines of charanam :)

I think Brahmanndan has sung a song with Yesudas under Dakshinamurthy's music direction in the film, 'Sri Guruvayurappan'.

mappi
2nd March 2017, 11:58 PM
Did you notice that the scene starts with two gurus teaching Bharatanatyam. They are none other than the legendary dance couple, Smt Shanta and Sri Dhananjayan.

Thank you, a wonderful information.

Janaki is my favourite, and I am inclined towards the vocal, redention and modulation of Malaysia Vasudevan.

Here is a song Payum Puli from Kuva Kuva Vathugal that I listen to regularly just for the arrangements for wind instruments and Janaki's pitch which she seems to casually vary throughout the song :

https://www.youtube.com/watch?v=VybVHJCqVWc

One for Malaysia Vasudevan - Ananda Thein Katru from Manipoor Mamiyar

https://www.youtube.com/watch?v=eEqNxMvBfM8

And I still whistle to this song (Rajini dance chumma pichikum) : Oru Ooril From Garjanai

https://www.youtube.com/watch?v=uI4-U-TDR_U

rajaramsgi
5th March 2017, 01:04 AM
மாமே மச்சான்...

முரட்டுக்காளையில் இடம்பெற்ற மற்ற பாடல்கள் அதிகம் பேசப்பட்டுவிட்டதால் அதிகம் கவனிக்கப்படாத மாமே மச்சானுக்கு தான் எப்போதுமே என் ஒட்டு. என்ன தான் பெரிய பேனர் படம் என்றாலும்,1980 களின் இறுதியில் வெளிவந்த இந்த பாட்டுக்கான சூழ்நிலையை ராஜா சாரிடம் முத்துராமன் எவ்வளவு தான் சொல்லி இருக்கமுடியும்? காட்டுக்குள் பதுங்கி இருக்கும் நாயகனை தேடி வில்லனின் தங்கை போகும் போது அவள் பாடுவது போல் ஒரு பாடல் வேண்டும் என்பதை தவிர, சிறப்பாக எதையும் சொல்லி இருக்க மாட்டார் என்று பாடலை அவர் படமாக்கிய விதத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

பாடலின் பின்புலத்தில் வரும் "டட் டட் டட்" தாளத்தில் இருக்கும் கம்பீரத்தை எதனோடு ஒப்பிடுவது? இதற்க்கு முன்னரும் பின்னரும் யார் இப்படி இந்த வாத்தியங்களை கையாண்டிருக்கிறார்கள்? பாடலில் வயலின் தரும் பயங்கர உணர்வும், புல்லாங்குழலின் சோகத்தையும், சைலஜாவின் அப்பாவி குரலும் .. அப்பப்பா.. இப்படி இதை அமைக்க வேண்டும் என்று இந்த மனிதருக்கு எப்படி தோன்றியது?

ராஜா சாரை நினைக்காத நாளில்லை என்று நான் சொல்வதை விட, இவரை நினைத்து நான் மலைக்காத நாளில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

https://www.youtube.com/watch?v=zTxj_YjD49c

rajaramsgi
5th March 2017, 03:12 AM
முடிவல்ல ஆரம்பம்..

உங்களில் எத்தனை பேருக்கு முடிவல்ல ஆரம்பம் (1984) நினைவிருக்கிறது?

பாடி வா தென்றலே...மிகவும் தெளிவான பதிப்பு இது. ஜெயச்சந்திரனின் ஒன் ஆப் தி பெஸ்ட் மற்றும் சதாவின் கிட்டார் ஸ்பெஷல்..
1:40 - 1:53 கைத்தட்டல் வருகிறதே.. இந்த நிஜ ஒலியை இப்போதைய பாடல்களில் கேட்க முடியுமா?
2:07 - 2:12 & 3:30 - 3:05 வரும் ப்ளூட் இடை செருகல் சுகம்.


https://www.youtube.com/watch?v=Ym0BqiOJRPg

mappi
6th March 2017, 01:24 AM
Raja Bits

Eera Vizhi Kaaviyangal (1982)

https://www.youtube.com/watch?v=y_YXNab3If8

https://www.youtube.com/watch?v=F89FaLSvNTE

https://www.youtube.com/watch?v=wq95lP9MA60

Vanamugil vaganathil,
Nan avalai yetri vaithu,
Vanulagil devathaigal,
Nanumvarai poivarava.

Ponaram ondru, kai serum indrum,
Inbhathin mel thunbathuku kathal varum.

Oor tharagai yennai parthathu
Naan parthathum athu vizhunthathu.

rajaramsgi
6th March 2017, 03:15 PM
தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் MG வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும், கிட்டாரும், ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது. இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. நினைவு படுத்திய mappi க்கு நன்றி. சாதாரண அர்த்தம் தான், ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி, தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது? அப்லாஸ்!

வானமுகில் வாகனத்தில்
நான் அவளை ஏற்றிவைத்தது
வானுலகில் தேவதைகள்
நாணும்வரை போய் வரவா?

rajaramsgi
6th March 2017, 03:41 PM
மஹாராணி உன்னை தேடி (ஆயிரம் வாசல் இதயம்)

சென்ற வார இறுதி முழுவது என்னை ஆட்கொண்டது இந்த பாடல் தான். 1980 ஜனவரியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது, அப்படியென்றால் 1979லியே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் என்ன ஒரு நுணுக்கம்? சிறு தொய்வும் பிசிறும் இல்லாமல் அழகாக, நவீனமாக பின்னப்பட்ட இசை கோர்வையில் ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கி அருவியாய் கொட்டுகிறது இசை. தொடர்ந்து ஜெயச்சந்திரன் மஹாராணி என்று ஓங்கி விளித்து புலமைபித்தனின் வரிகளை மெய்க்கீர்த்தி போல் ஆரம்பித்து ஜானகியுடன் பாடும் இந்த டூயட் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்.

https://www.youtube.com/watch?v=ZHz5einmj9I

mappi
8th March 2017, 12:09 AM
சாதாரண அர்த்தம் தான், ஆனால் கவிதை நிரம்பிய வரிகள். மேகம் என்கிற வாகனத்தில் என் காதலியை ஏற்றி, தேவதைகள் வெட்கப்படும் வரை சென்று வரவா என்கிற சிந்தனை

Absolutely, +1


தென்றலிடை தோரணங்கள் எழுதியவர் MG வல்லபன். சந்தத்திற்க்கு எழுதிய பாடலா அல்லது வரிகளுக்காக இசை அமைக்க பட்ட பாடலா? அவ்வளவு பொருத்தம். கடல் அலை ஓசையும், கிட்டாரும், ஒரு கிறக்கத்தில் ராஜா சார் பாடுவதும் நாம் கடலோரத்தில் இருந்து ஏக்கத்துடன் கனவு காண்பது போன்ற உணர்வை தருகிறது.

Western (International) musicians take enormous time to release a single. It comes out with a bonus - Making of the Song - which also gets equal popularity where the musicians and lyricists talk about the song in general including their discussion while the composition.

Namba Mottai, silent-a tune onu pottu, 'next film' nu poita irruparu. I agree to get hold of all their discussions during the pre-production and also, on the composition table. Few films like Guna did try to document the audio of the film, also few interactions with The Great Poet Valli, but it stopped there abruptly and we are bound to beleive whatever is spoken on decorative stages/honorary functions.

Music without lyrics is still music, but lyrics without music is poetry. It depends on the music genre too, for instance, Jazz does not require lyrics to be drowned in divinity.

Singing is more inclined to the lyrics, where the music breaks the sounds (voice and instruments). Vocal and lyrics are more subjective, which are not an object of thought but a placed emphasis on one's mood. Whereas, Music is more responsive - for instance an instrumental of the same song can bias with the current mood, while with lyrics embedded shall force to think otherwise.

Here is an exemple :

BGM Aan Pavam (1985)

https://www.youtube.com/watch?v=_6gqG8SgUkw

Konji Konji from Veera (1994)

https://www.youtube.com/watch?v=2yEKwU3QUAQ

You can realise that Aan Pavam melody can be twisted by the mind, but for Konji Konji with the lyrics embeded it hooks a particular emotion inside the mind.

Be it lyrics or vocal or music, I treat them all as sounds. For me language itself is a sound. A music director arranges all, mixing them to vibrate together, sometime by the direction shown by the lyrics or the mood of the vocal or by hooking them together with a memorable music.

mappi
8th March 2017, 12:19 AM
Aanantha Maalai Thol Serum Velai from Dhoorathu Pachai (1987)

https://www.youtube.com/watch?v=8ZoMGE1UH5o

rajaramsgi
12th March 2017, 05:09 PM
ஒரு தேவதை வந்தது..

இந்த பாடல் நா. காமராசன் அவர்கள் நான் சொன்னதே சட்டம் என்கிற திரைப்படத்தில் எழுதியது. பாலசுப்ரமணியமும் ஆஷா போஷ்லேயும் இனைந்து பாட 1988ல் வெளிவந்தது. இந்த ஜானரில் ஒரு டஜன் பாடல்கள் ராஜா சார் வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் கோயில் குளங்களின் பின்னணியில் நடன மங்கையர் புடை சூழ நாயகன் நாயகி வெள்ளை ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடி பாடுவர், இது கொஞ்சம் விதி விலக்கு. சிறப்பாக படமாக்கப்படவில்லை என்றாலும் பாட்டில் எந்த சுவைக்கும் குறைவில்லை

https://www.youtube.com/watch?v=ttteKN3ofZk

raagadevan
17th March 2017, 10:23 AM
Solo - Shreya Ghoshal: https://www.youtube.com/watch?v=FLPLOI6KpGE
Solo: Vijay Yesudas: https://www.youtube.com/watch?v=BtPMy_XsyF0
Duet: https://www.youtube.com/watch?v=GH8sElojr7M

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா

மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

மெல்ல நெருங்கிடும்போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

பித்துப் பிடித்ததைப் போலே
அடி பேச்சுக் குளறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக்கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டீனால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே...

mappi
19th March 2017, 03:19 AM
Raja Bits

Kannai Thirandha Karunai Kaarmaeghamae from Veera (1994)

Recently I watched the tamil film Kattappava Kanom. A newly married couple move into their appratment and the following evening, the young man waits for his wife, while being seated on a sofa watching television. The visuals that play before him is from the film Veera, where Rajini drenched in rain knocks the doors of Meena.

Veera released in the year 1994 is unfortunately the last film of the fabulous combo IR-Rajini. Illayaraja music in the film runs parrallel with the screenplay, as well as, effortlessly matches with the director Suresh Krissna's visuals.

Veera is an young man who is under a false impression that women as mere sex toys. Eventhough being talented and gifted with an amazing vocal, he takes up a crash course on singing just to bed the daughter of his guru, Devayani. That evening, along with his friends, he plots a perverted plan and knocks the doors of Devayani. His move would be when she is close to him, permiting him a chance to drop a fish inside her blouse. He imagines to create an erotic suituation inside the room and gets very much aroused when he finds Devayani readily co-operating with him.

Moments later, he realises that Devayani had eavesdropped his conversation with his firends at the temple lake and she feels ashamed of herself for being just an object for his desire. Her repetance becomes a revelation for Veera. He moves towards the string instrument, the veena, and drops the fish over the stings.

What follows should be experienced with IR's musical score :

https://www.youtube.com/watch?v=gFnE3atW7cM

As a music director, IR has elegantly taken another route than being melodramatic. A set of crying violins or blown out trumpets could have also suited the suituation. But IR elegantly transforms the scene into a form of art, where he portrays through his music the bleeding heart beating in guilt just like the fish out of the water. The direction of Suresh Krisnna readily motivates IR to get such an idea, as 'a fish out of water' symbolises someone being uncomfortable of the suituation.

A fanstatic scene which serves as a tutorial for scoring a BGM that narrates the proceeding within a limited time space, apart from visual expression.

Kalai maghal yen naavil thunai vandhadhum
Alaiyaai oli veesi arul seidhadhum
Ainthidam sirakka arul valam nilaikka
Kannai thirandha karunai kaarmaeghamae

mappi
23rd March 2017, 12:25 AM
Indha Maan from Karagatakaran

https://www.youtube.com/watch?v=pjHy60xg7P0

mappi
31st March 2017, 10:57 PM
Raja [whammy] Bass Guitar Vol. 1

5/ Sing Swing from Moodu Pani (1980)

https://www.youtube.com/watch?v=rnQDQkRIwDQ

4/ Endrendrum Aanandame from Kadal Meengal (1991)

https://www.youtube.com/watch?v=Hj1cwidcJBI

3/ Roja Poo from Agni Natchathiram (1988)

https://www.youtube.com/watch?v=n7yQYSbhn_g

2/ Vegam Vegam from Anjali (1990)

https://www.youtube.com/watch?v=ZD-1Ffo36Qo

1/ Kanni Ilam from Ayiram Nilave Vaa (1983)
[Silk + Janaki + Bass Guitar = aa haaa!]

https://www.youtube.com/watch?v=jDuC-wO_9nA

Bonus :

https://www.youtube.com/watch?v=PIKNyzq38nw

rajaramsgi
1st April 2017, 08:36 PM
அருமை mappi.

மற்ற பாடல்களை அதிக அளவில் கேட்டிருக்கிறேன். ஆனால் சில்க் ஸ்மிதாவின் 'கன்னி இளம்' எனக்கு ரொம்ப புதுசு. இதுவரை கேட்டதில்லை. இதே பாணியில் அமைந்த ராஜா சாரின் சில பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தபடியால், இதை கேட்டவுடன் டக்கென்று என்னுடன் ஒட்டி கொண்டது. நன்றி.

சில்க் பற்றி வெங்கிராம் ஏற்கனவே இங்கே பதிவு செய்திருக்கிறார். அவர் நினைவாக இங்கே பாயும் புலி படத்திலிருந்து ஆடி மாசம் பாடலை பதிவு செய்ய விரும்புகிறேன். வாரம் ஒரு முறையேனும் நான் கேட்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலின் நடன அசைவுகள் இன்றளவும் பிரபலம்.

https://www.youtube.com/watch?v=4o-lYMrKHqM

mappi
2nd April 2017, 12:08 AM
If I get started about Silk, there will be no end to it. Saturday evening, chill weather, a glass of bourbon for a change from single malt - Silk merits much more than just be assosiated as a symbol of sexual desires coined by perverts. She attracts with her charm by speaking without allowing the two lips to meet and there is an ounce of flirtatious smile sticking to both corners eternally. And when she winks both her eyes ... well, ... lets listen to a song :

Mella Mella Ennai Thottu from Vazhkai (1994).

Recognised for singing more songs by Guinness Book of Records, Gaana Saraswathi P. Susheela renders her enchanting voice for my most favourite artist Silk Smitha.

https://www.youtube.com/watch?v=Qveg840rPDY

mappi
2nd April 2017, 12:17 AM
Moving to a soulful song :

Onakena Thaane Innerama from Ponnu Oorukku Pudhusu (1979)

https://www.youtube.com/watch?v=3VpJD2U46M8

rajaramsgi
27th April 2017, 03:07 PM
ராஜா சாரின் ஒரு வித்யாசமான டூயட். தாய்க்கொரு தாலாட்டு படத்தில் அமைந்த இந்த பாடலுக்கு இரெண்டே வரிகள் தான் பல்லவி.

காதலா காதலா கண்களால் என்னை தீண்டு (என்று அவள் வசனமாய் கெஞ்சுவாள்)
காதலி காதலி கண்களால் என்னை தீண்டு (அதையே அவர் ராகமாக கொஞ்சுவார்)

காதல் ஒரு வேதம், கண்கள் அதை ஓதும் (வேறொரு கெஞ்சலான வசனம்)
காதலி காதலி கண்களால் என்னை தீண்டு (மறுபடியும் அவர் ராகமாக கொஞ்சுவார்)

அவளோ தான் . அப்பறம் கோயில் மணியோடு ஹை பிட்ச்சில் புல்லாங்குழல் வாசிக்க, அதை தொடர்ந்து சில நொடிகளே ஆர்ப்பரிக்கும் ஸ்ட்ரிங்ஸ். அதுவும் அவளோ தான். சீக்கிரம் பாடிவிட்டு அடிச்சு பிடிச்சு ரயிலை பிடிக்க போகிற அவசரத்தில் ஒரு துள்ளலான சரணம். டிவைன்! அதை தொடர்ந்து வருவதெல்லாம், லெட் அஸ் பினிஷ் திஸ் குயிக் என்பது போல் டாப் கியர் தான். இரண்டாவது இடை இசை வருவதே தெரியாதுங்க.. மொத்தமே மூனே கால் நிமிடத்தில் இந்த டூயட் முடிந்து விடும். முப்பது வருடமாய் என்னை வருடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

https://www.youtube.com/watch?v=0AaO_FMwF8o

rajaramsgi
28th April 2017, 12:40 AM
முந்தைய பதிவில் நான் சொன்ன தாய்க்கொரு தாலாட்டு படத்தை திருச்சி ரம்பா ஊர்வசியில் பார்த்தேன். மலரும் நினைவாய் மற்றொரு பாடலையும் தர ஆசை.

வாழ்க்கை: இது தஞ்சை சாந்தி கமலா திரை அரங்கில் வெளிவந்த முதல் படம். திரை அரங்கை முதல் நாள் எம்.ஜி.ஆர் திறந்தது வைக்க, மறுநாள் அங்கே வாழ்க்கை படம் பார்க்க சென்றோம். புனித அந்தோனியாரில் 9ம் வகுப்பு படித்த சமயம். அந்த சமயத்திலேயே என்னை மே சிலிர்க்க வைத்த பாடல்கள் இவை எல்லாம்.

இன்றைய தேதியில் இந்த பாடல்கள் எல்லாம் படமாக்கப்பட்ட விதமும், நடிகர்களின் ஒப்பனையும், நடிப்பும் நமக்கு மொக்கையாக தெரிந்தாலும்.. அன்றைய தேதியில் இவை எதுவும் எங்களுக்கு புரியவில்லை. ஆனால் அன்று ரசித்த பாடல்களை, இன்றைய தேதி வரை எந்த குறையும் சொல்ல முடியவில்லை.. இதோ பாலு & வாணி ஜெயராம் -- ராஜா சாரின் 'காலம் மாறலாம்'.

https://www.youtube.com/watch?v=iKt3vHiRJkg

rajaramsgi
29th April 2017, 03:36 PM
இந்த பாடலை இங்கு இதற்க்கு முன்பு சொல்லி இருக்கிறேனா என்று நினைவில்லை...

இந்த பாடலும் படமும் அதிகம் பிரபலம் ஆகவில்லை. நம்மில் இங்கு இந்த பாடலை அறிந்து வைத்திருப்பவர்கள் கம்மியாக தான் இருக்க வேண்டும். எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த இளமை கோலம் திரை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் ஒரு கிளாசிக்.

இந்த படம் நான் பார்க்கவில்லை. பாடலுக்கான சூழ்நிலையை பார்க்கும் போது, ஒரு பிளேபாய்க்கு நடக்கும் நிச்சயதார்த்த விருந்தில், மாப்பிள்ளையை வெறுப்பேற்ற, அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாடி ஆடுவது போல் இருக்கிறது. அவனுக்கு பயத்தில் வியர்த்து கொட்ட வேண்டும்.. விருந்தும் நடக்க வேண்டும். ஆட்டமும் பாட்டும் நேர்த்தியாய் அமைய பின்புலத்தில் இசை சிறப்பாய் வேண்டும்..எல்லா அம்சங்களையும் பொருத்தி இந்த பாடலை அமைத்திருக்கிறார் ராஜா சார். ஜானகியின் ஆலாபனை அமோகம்.

https://www.youtube.com/watch?v=K2vE71ix3vw

rajaramsgi
30th April 2017, 01:26 PM
காதல் ஓவியம் தந்த பொருளாதார இம்சையின் உச்சத்தில் பாரதிராஜா அடுத்து எடுத்த மொக்கை படம் வாலிபமே வா வா.. மறுபடியும் அடி.. மனுஷன் பாடம் எதுவும் கற்று கொண்ட பாடில்லை. இதே கருவை வேறொரு கதையில் வேறு வகையாக பன்னெடுங்காலம் கழித்து அன்னக்கொடியிழும் நுழைத்து தோல்வியில் முடிந்தது தான் மிச்சம். . அது போகட்டும். கொடுமை என்னவென்றால் ஒரே கருவில் முதலில் வந்த வாலிபமே வா வா படத்தில் ராதா நாயகி என்றால், பின்னர் வந்த அன்னக்கொடியில் ராதாவின் மகள் நாயகி.

வாலிபமே வா வா திரைப்படம் எப்படி பலருக்கு நினைவிருக்காதோ, அதே போல் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'அழகே உன்னை கண்கள் எழுத வா' பாடலும் மறந்து போயிருக்கும். அருமையான பாடல். சுஷீலாவும் வாசுதேவனும் பாட, ராஜா சாரின் அழகே உன்னை... ( கொசுறு: பை தி வே, இந்த பாட்டின் ஒளியும் ஒலியில் ராதாவின் இன்னொசென்ஸ் சுட் பி நோட்டட்... ஹீஹீ )

https://www.youtube.com/watch?v=wb_qyFZKxzU

rajaramsgi
30th April 2017, 02:26 PM
நாலு க்ளாஸிக் சொல்லி இருக்கேன்.. கேட்டு என்ஜாய் பண்றதோட நிறுத்தாமல் பதிலுக்கு ஒரு யாரேனும் ஒரு பாடலை இங்கு பதிவு செய்தால் தான் என்னிடம் கைவசம் இருக்கும் அதிகம் பேசப்படாத ஒரு ஜானகி பாடலை அடுத்ததாக எடுத்து விடுவேன். ஒய் ஆர் யு வெயிட்டிங்?

SVN
1st May 2017, 01:30 AM
Here are a couple of songs from 'Salangayil Oru Sangeetham', the dubbed version from the hugely popular Telugu film starring Bhanupriya and Mohan, 'Alaapana'.

My neighbourhood cassette recording guy, recorded these two songs as a 'filler' to my customised playlist of songs to be recorded on a 'Meltrack' cassette.. It was a pleasant surprise indeed.

The first song is "Yaarodu Yaaro Nee Entha Ooro" - I think the raga is closest to "Karnataka Kamas" and reminds you of Kootathile Kovil Pura from Idhaya Kovil.

https://www.youtube.com/watch?v=E_aN6qzzKC4


The second is 'Kanavaa Idhu Unmayaa". SPB and S. Janaki have both rendered dozens of compositions by Raja in the raga Mayamalava Gowla.. But this song has a very unique structure and brings yet another flavour of the Raga. The way he has composed the charanams are pure genius.. 'Un Salangai Osayellam Yaaradi", quips SPB and Janaki replies with a beautiful alaap..

https://www.youtube.com/watch?v=weT87rJdnlk

Enjoy!

rajaramsgi
1st May 2017, 02:41 PM
நன்றி SVN. நீங்கள் தந்த 'கனவா இது' சூப்பர். பாலுவும், ஜானகியும் ஆலாப்பில் உரையாடுவது பிரமாதம். நீங்கள் எடுத்து சொன்ன பிறகு இந்த பாடலை நான் கேட்க்கும் விதமே மாறி விட்டது.

நான் தரும் பாடல் வேறு ஜானர். கிராமிய வகை. ஜானகியின் அரிய பொக்கிஷம் இது. அதிகம் பேசப்படவில்லை. எளிதான ராகம். சோக பாடல் போல் தெரிந்தாலும், இது அந்த வகை இல்லை. மணமகளே வா திரைப்படத்தில், ராஜா சாரின் 'கன்னி மனம் கெட்டு போச்சு'. ஜானகியின் குரலில் நெளிவு சுளிவு அதிகம்.

https://youtu.be/Qf730IzTw68

rajaramsgi
21st May 2017, 10:29 PM
ஆலங்கட்டி மாமழையாம்...

காட்சி அமைப்பை விட்டு தள்ளுங்கள். படம் மொக்கையா இல்லையா என்பதெல்லாம் இங்கு விஷயம் இல்லை. வழக்கம் போல் இந்த பாடலிலும் தொடக்கம் முதல் முடிவு வரை அடுத்த கட்டத்திற்கு நம்மை சுவாரஸ்யம் குறையாமல் அழைத்து செல்கிறார் ராஜா சார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த எழுதாத சட்டங்கள் படம் மறந்து விட்டது, ஆனால் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் மனம் துள்ளுவதை யாரிடம் சொன்னால் அதை நம்புவார்கள்?


எந்த அவசரத்தில் ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கக்கூடும்? பாடலின் பின்புலத்தில் அமைந்த வாத்தியங்களின் வேகத்தை கவனித்தீர்களா?


https://www.youtube.com/watch?v=V48vz3TcD0g

rajaramsgi
28th May 2017, 03:29 PM
1982 கண்ணே ராதாவில் இடம் பெற்ற இந்த பிரமாதமான பாடல் அதிகம் பேச படவில்லை. நோட் ப்ளீஸ்: ஒளியில் கார்த்திக்கின் மீசையும், ஒலியில் ஷைலஜாவின் குரலும் என்னை இம்சிப்பதை மறுக்க முடியவில்லை

https://youtu.be/5AYclydPFRs

rajaramsgi
28th May 2017, 07:03 PM
அமைதியாக, கண்ணை மூடி கொண்டு கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.

உறங்காத நினைவுகள் (1983) திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த FIRST CLASS பாடலின் தொடக்கத்தில் ராஜா சாரும், யேசுதாசும் சம்பாஷணை செய்வது செம ஜோர். யேசுதாஸ் 'நெஞ்சில் நாளும் நீ எழுதும்' என்று பாடும் போதெல்லாம் புல்லரிக்கிறது.

பாடலுக்கான ஸ்கோர்: டென் அவுட் ஆப் டென்.. சராசரி பாடல் என்று நினைக்காமல் காது கொடுத்து கேளுங்க...

https://youtu.be/fuA11g8UnDI

SVN
1st June 2017, 06:46 PM
Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha.

It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines :)

https://www.youtube.com/watch?v=wESeJrZdJ6c

Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?

mappi
2nd June 2017, 03:56 AM
the other male lead (don't know who)

Don't know the name of the artist. His role is to fall in love with actress Geetha (plays as Rajini's sister Rekha), and out of nowhere the couple join into the song actually started by Rajini & Madhavi after a love lesson. He does not get much screen presence, the next scene he appears will be close to the interval during his marriage with Geetha and then gets hospitalised.


Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?

Think this is the only playback song they performed for Rajini. But I always welcome someone well informed to confirm it.

Thanks for the song SVN. There is a similarity with this song :

https://www.youtube.com/watch?v=dN0fDWShag4

mappi
2nd June 2017, 03:59 AM
Raja's Beats of the Beast - Vol. 1

5/ Puthiya Ulagille from Apoorva Sakthi 369 (1992)

https://www.youtube.com/watch?v=WuREF72V5AM

4/ Aala Asathum Malliyae From Kanni Rasi (1985)

https://www.youtube.com/watch?v=1H_AwNEig94

3/ Eduthu Tha from Kaadhal Devadhai (1990)
[Dhinakkuta from Jagadeka Veerudu Atiloka Sundari]

https://www.youtube.com/watch?v=ilXbgzy57Go

2/ Oororama Athupakkam from Idhaya Koil (1985)

https://www.youtube.com/watch?v=tj_NN2uuOkM

1/ Singaari Pyaari from Athisaya Piravi (1990)

https://www.youtube.com/watch?v=3dhxJag8ZJg

Bonus :

https://www.youtube.com/watch?v=osR87B335HE

rajaramsgi
4th June 2017, 07:54 PM
வருவாய் அன்பே பாடலை ராஜா சாரே பாடி இருக்கலாமே.. பிரமாதம். கூடவே எந்தன் நெஞ்சில் ஏழுலகங்கள் பாடலும் கேட்க கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்கிறது. பைன் மியூசிக் என்று சொல்வார்களே...இரண்டு பாடல்களும் தொடக்கத்தின் முதல் நொடியே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. மிச்சத்தையும் சொல்ல வேண்டுமா என்ன?

ஊரோரமா ஆத்து பக்கம் சார் பாடிய துள்ளலான பல பாடல்களில் ஒன்று. ஆள அசத்தும் பாடலில் அந்த குயில் குரல் ஆஹா... ஏனோ வாணி ஜெயராமை சார் அதிகம் பயன் படுத்திக்கொள்ளவில்லை.இருப்பினும் வாணி ஜெயராம், உமா ரமணன்,ஜென்சி, சுனந்தா, சசிரேகா ஆகியோர் ராஜா சாருக்காக பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்.

இன்று எங்க வீட்ல ஒரு நல்ல விஷேசம்..காலை முதலே கொஞ்சம் பிஸி.. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடை இடையே வந்து இந்த பாடல்களை கேட்டு என்னை நானே ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன்.

இவற்றை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி மக்களே...

mappi
5th June 2017, 02:41 PM
Raja's Haunting Collection Vol. 1

5/ Oliyile Therivadhu Devadhaya from Azhagi (2002)

https://www.youtube.com/watch?v=itKjfUV_47U

4/ Ekantha Velai from Paadum Paravaigal (1985)

https://www.youtube.com/watch?v=XETdjUmVpfA

3/ Aayiram Malargale Malarunga from Niram Maaradha Pookkal (1978)

https://www.youtube.com/watch?v=dzaukYrlDSE

2/ Vetta Veli Pottalile from Nalla Naal (1984)

https://www.youtube.com/watch?v=WRSGW_OdJL4

1/ Anbe Vaa from Kilipechu Kekava (1993)

https://www.youtube.com/watch?v=dT9X-BLWbO8

mappi
5th June 2017, 02:43 PM
Raja's Haunting Collection Vol. 2

5/ Om Namaha from Geethanjali (1989)
[Tamil - Idhayathai Thirudathe]

https://www.youtube.com/watch?v=uUJZLb4uxU4

4/ En Jeevan Paaduthu Unnai Thaan Theduthu from Neethana Andha Kuyil (1986)

https://www.youtube.com/watch?v=64v5kIbag5g

3/ Kodiyile Malloigai Poo from Kadalora Kavithaigal (1986)

https://www.youtube.com/watch?v=lN14AlRHqSY

2/ Yedho Mogam from Kozhi Koovuthu (1982)

https://www.youtube.com/watch?v=SX3m9XC7ZWA

1/ Deiveega Ragam from Ullasa Paravaigal (1980)

https://www.youtube.com/watch?v=rGgjdVCOF0U

rajaramsgi
8th June 2017, 05:01 PM
அள்ளி கொடுக்காதீங்க, கிள்ளி கொடுங்க..
என்னால் தாங்க முடியவில்லை.
என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பதால் ஒரே நேரத்தில்
இத்தனை சுகமான பாடல்களை கிரகிக்க முடியவில்லை.
ஒன்னு ஒண்னா தாங்களேன்... ஹிஹி

அனைத்தும் அருமை..
சாதித்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே ராஜா சார் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் அப்போதெல்லாம்.

mappi
8th June 2017, 11:34 PM
Rajaram,

... LoL ...

https://www.youtube.com/watch?v=9BIScB-grKs

... riya ... ragariya ... ragariya ... ragariya ... ragariya

rajaramsgi
10th June 2017, 03:27 PM
அது 1995, 96 காலகட்டம். மும்பை ஐ.ஐ.டியில் பணியாற்றிய நேரம். வாரம்தோறும் போவையில் இருந்து மாட்டுங்கா சென்று ராமர் கோயிலில் சம்ப்ரதாயத்துக்காக சாமி கும்பிட்டுவிட்டு, சவுத் இந்தியன் கன்சாரனில் சாப்பாடு முடித்து, அப்படியே தமிழ் கடைகளில் வார பத்திரிக்கைகள் மற்றும் ராஜா சாரின் ஆடியோ கேசட் ஏதாவது வாங்கி வருவது வழக்கம். அப்போது வாங்கி கேட்டு மகிழ்ந்தவை தான் அவதாரம், காலாபானி, கார்த்திக்ராஜாவின் மாணிக்கம், பாலுமஹேந்திராவின் ஆர் ஏக் பிரேம் கஹானி, ராசய்யா, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி எல்லாம். என் பழைய நினைவுகளை இந்த ஒரு பாடல் மூலம் நினைவு படுத்தி விட்டீர்கள்.

அவதாரத்தில், அரிதாரத்தை பூசி கொள்ள ஆசை மாற்று தென்றல் வந்து தீண்டும் பொது பாடலும் அளவுக்கு அதிகமாய் பேசப்பட்டுவிட்டதால், சந்திரரும் சூரியரும் பாடல் அதிகம் கவனிக்கப்படாமல் போயி விட்டது. சிம்பனியை அள்ளி தூவி, ஒரு அப்பாவி நாயகனுக்காக பாடப்பட்ட பாடல். ராஜா சார் குரலை எடுத்து விட்டு, ஒரு காரோக்கியாக, இந்த பாடலின் பின்புல இசையை ஒரு ஆல்பமாகவே போடலாம்.


மறுபடியும்.. கண்ணை மூடி கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. நன்றி நன்றி..

mappi
10th June 2017, 04:24 PM
அவதாரத்தில், அரிதாரத்தை பூசி கொள்ள ஆசை மாற்று தென்றல் வந்து தீண்டும் பொது பாடலும் அளவுக்கு அதிகமாய் பேசப்பட்டுவிட்டதால், சந்திரரும் சூரியரும் பாடல் அதிகம் கவனிக்கப்படாமல் போயி விட்டது.

Unmai. Even getting the idea and materialising symphony with folk was overlooked. Raja's redention is this song is just amazing, esp., towards the end.


ராஜா சார் குரலை எடுத்து விட்டு, ஒரு காரோக்கியாக

+1. While discussing with Venkkiram (he does not connect here anymore, he has got a huge database of IR songs and he writes lovely), he informed me about his interest towards the song "Veetukku Veetukku Vaasappadi" from Kizhakku Vaasal (1990)

https://www.youtube.com/watch?v=1mhqrpCTmfQ

I would ask him to include Chandirarum Soriyarum in his playlist, also.

mappi
10th June 2017, 04:35 PM
Raja's Haunting Collection Vol. 3

Ennulle Ennulle - Valli (1993)

https://www.youtube.com/watch?v=x6CvQf2xLNs

Naan Paadum Mouna Ragam - Idhaya Koil (1985)

https://www.youtube.com/watch?v=uE6cFfnLdcM

Thalattum Poongatru - Gopura Vasalile (1991)

https://www.youtube.com/watch?v=326Usof7ZOQ

Thanga Changili - Thooral Ninnu Pochu (1982)

https://www.youtube.com/watch?v=4XJF2CYUHwI

Oru Kaaviyam - Aruvadai Naal (1986)

https://www.youtube.com/watch?v=t2SnqxrAbJs

rajaramsgi
11th June 2017, 05:32 PM
எண்பதுகளில் பிரபு உட்பட பலரை தூக்கி நிறுத்திய படமான அறுவடை நாளின் ஒரு காவியம், நிச்சயம் ஒரு காவியமே.. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வகை தொகை இல்லாமல் வழங்கி இருப்பார் ராஜா சார். கணீரென்று அவர் ஹிந்துஸ்தானி சாயலில் ஒரு காவியம் பாடுவதை கேட்க மனசு வலிக்கும். அறுவடை நாள் படம் பற்றிய சிந்தனை வரும்போதெல்லாம், எனக்கு மிகவும் பிடித்த RP விஸ்வத்தை தமிழ் சினிமா இழந்துவிட்டதை நினைவு கொள்வேன். இருந்திருந்தால் விஸ்வத்துடன் GM குமாரும், லிவிங்ஸ்டனும் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்கள்.

இதே காலகட்டத்தில் வந்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் கூட இந்த ஹிந்துஸ்தானி வடிவில் கண்ணா வருவாயா பாடலை அமைத்திருப்பார். இரண்டும் ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்ததா என்று தெரியவில்லை, ஆனால் இதில் எதை நான் கேட்டாலும் மற்றொன்று நினைவில் வரும். ஒரு காவியம் பாடல் சோகம் என்றால், கண்ணா வருவாயா வேறு வகை. கதைப்படி நாயகியின் குடும்பம் தரித்திரம் நிரம்பியது. என்ன சொல்லி பாலச்சந்தர் ராஜா சாரிடம் பாடல் வாங்கினார் என்று தெரியவில்லை, கண்ணா வருவாயா அவ்வளவு ரிச். மீராவும் கண்ணனும் பாடுவது போல் அமைந்த இந்த பாடலில், உதய்பூரின் தாஜ் லேக் அரண்மனையில் பிரமாதமாக படமாக்கிருப்பார்கள். ராயல் ரகம். ஒவ்வொரு நொடியிலும் ராஜா சார் இந்த பாடலை படைக்கும் நேரத்தில் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என்றே எனக்கு தோணும்.


வெங்கிராமுக்கு என் மரியாதையை தெரியபடுத்தவும்.

https://www.youtube.com/watch?v=P4tKjpj-ecQ

rajaramsgi
12th June 2017, 09:55 PM
தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து தனக்கு வேண்டுவதை ராஜா சாரிடம் கேட்டு வாங்கி கொள்ளும் வித்தை தெரிந்தவர் அவர்.

சரி, பாடலுக்கு வருவோம்.

தங்கச்சங்கிலி பாடல் ஒரு கம்பீரமான கீரவாணி டூயட். அசோக் குமார், ராஜா சார் , வைரமுத்து மூவரும் இனைந்து பாக்கியராஜ், சுலக்ஷனாவுக்கு இந்த பாடல் மூலம் சொர்கத்தை காட்டி இருக்கிறார்கள், நமக்கும் தான்.

வார்த்தை பிரயோகமும் , வாத்திய அணிவகுப்பும் நொடிக்கு நொடி அசர வைக்கும். பல்லவி சரணமெல்லாம் தெய்வீகம், அது பற்றி நான் பிதற்றுவதை விட. இந்த பாடலின் மூண்டு முக்கிய 30 நொடிகள் பற்றி பேசியே தீரணும்..

பயந்த சுபாவம் உள்ள அந்த பெண், மாப்பிள்ளையின் பொய்யான மிரட்டலுக்காக பயந்து, தயங்கி தயங்கி வருகிறாள். சின்ன வயசு வேறு..சில பல உரசலுக்கு பிறகு அட்ரீனலின் ரஷ் (adrenaline rush) விறு விறுவென எட்டி பார்க்கிறது..பாடலும் தொடங்குறது..

ஆரம்பமே ஜானகியின் குரல் ஏதோ பனிப்பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பூத்த ரோஜா போல் பிரெஷாக ஜொலிக்கிறது இல்லியா? அதை தொடர்ந்து வரும் அந்த மியூசிக்ல் ஸ்பிளாஷ் 30 நொடிகள் உயிரை கொள்ளை கொள்ளும் ... பிறகு முதல் மற்றும் இரண்டாம் இடை இசையும் அப்படியே.. முப்பது முப்பது நொடிகள் இரண்டும். அட்ரீனலின் ரஷ் பீச்சி அடிப்பதை இசையால் சொல்லி இருப்பார் ராஜா சார்.. இரண்டாவது இடை இசையில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும். நமக்கு நரம்புகள் புடைக்கும்.

ராஜா சார் 1982ல், தன்னுடைய 39ம் வயதில் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். தஞ்சாவூர் அருள் திரையரங்கில், 7ம் வகுப்பு மாணவனான நான் அன்றைய தேதியில் பார்த்த படம். என் மலைப்பு இன்னமும் அடங்கவே இல்லை. நன்றி MAPPI.

priya32
16th June 2017, 02:33 AM
Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha.

It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines :)

https://www.youtube.com/watch?v=wESeJrZdJ6c

Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?

I believe his name is Shanavas, who acted mostly in Malayalam movies!

rajaramsgi
16th June 2017, 07:19 PM
>>>>>> Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha. It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines :smile:

இந்த பாடலை ராஜா சார் அல்லது அட் லீஸ்ட் கிருஷ்னச்சந்திரன் , ஜெயச்சந்திரன் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

rajaramsgi
18th June 2017, 02:41 PM
ராகங்களின் அடிப்படையில் அமைந்த ராஜா சாரின் பாடல்களை எளிமையான தமிழில் இந்த நண்பர் பதிவு செய்துள்ளார். அவருடைய பேச்சில் எவ்வளவு ஆர்வம்.. விஷயம் தெரிந்திருப்பதால், பாடல்களில் உள்ள விஷயத்தை அவர் அனுபவித்து பேசுகிறார். நீங்களும் இதை கேட்டு சுவையுங்களேன். சில பாடல்களை சொல்லிவிட்டு இவர் சிறு குழந்தை போல் குதூகலிப்பது கவிதை.

(மத்தியமாவதி ராகத்தில் யேசுதாஸின் அய்யப்பன் பாடல் பற்றி இவர் கொடுப்பது ஒரு முன்னுரை தான், ராஜா இசை அமைத்த பாடல் என்று அவர் சொல்லுவதாக எடுத்து கொள்ள வேண்டாம்)

https://www.youtube.com/channel/UCnvsH5gOw2qHPjymSSIbRcA

mappi
18th June 2017, 04:33 PM
Raja's Haunting Collection Vol. 4

5/ Oru Kunguma Chengamalam from Aaradhanai (1981)

https://www.youtube.com/watch?v=S00hlR2NzAo

4/ Adhikaalai Nerame from Meendum Oru Kaathal Kathai (1985)

https://www.youtube.com/watch?v=7JUY0spxqf4

3/ Ananda Raagam from Panneer Pushpangal (1981)

https://www.youtube.com/watch?v=HR3BpAQmzrQ

2/ Moham Endra from Sindhu Bhairavi (1985)

https://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs

1/ Mazhai Varuvathu from Rishi Moolam (1980)

https://www.youtube.com/watch?v=nbJ91JLfziQ

mappi
18th June 2017, 04:39 PM
Raja Alap Vol. One

5/ Ilanjolai Poothatha from Unakkaagave Vaazhgiren (1985)

https://www.youtube.com/watch?v=W8FK4vGmKLY

4/ Radha Radha Nee Enge from Meendum Kokila (1981)

https://www.youtube.com/watch?v=95CtzLql8xs

3/ Adhikaalai Nilave from Urudhi Mozhi (1990)

https://www.youtube.com/watch?v=oIsXiheQzCc

2/ Indraikku Yen Indha from Vaidhegi Kaathirundhaal (1984)

https://www.youtube.com/watch?v=J-zhpMAEbY4

1/ Poo Malai from Sindu Bairavi (1985)

https://www.youtube.com/watch?v=DZZ6cfm0AS0

rajaramsgi
20th June 2017, 01:26 PM
நன்றி MAPPI. ஆல் ஆர் ஜெம்ஸ், பர்டிகுலர்லி அந்த "ராதா ராதா நீ எங்கே" -- சொக்கி போய் விட்டேன்.
சுனந்தா நினைவாக.. அவர் என் மதிப்பிற்குரிய ஜெயச்சந்திரனுடன் பாடிய புதுமை பெண்ணின் காதல் மயக்கம்....

https://www.youtube.com/watch?v=D8cGFRJzoWM

rajaramsgi
22nd June 2017, 09:02 PM
சாதனை திரைப்படத்தை நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எங்கேயோ செல்லும் வழியில் பொன்னமராவதி நகரில் இறங்கி, இரவு இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு சென்றேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை தவிர சாதனை படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு அத்துப்படி. என்னுடைய அறியாமையால் இந்த பாடல் நன்றாய் இருக்காது என்று நானே நினைத்து கொண்டு இதை மட்டும் தவிர்த்துவிடுவது வழக்கம்.

நேற்று ஜெயா மாக்ஸ்ல் என்றென்றும் ராஜா நிகழ்ச்சியில் பார்க்க நேரிட்டது, பாடல் பிரமாதமாய் இருக்க, என் இக்னோரன்ஸை நினைத்து வருந்தினேன். இது மாதிரியான ஹை பிட்ச் இசையின் பின்னணியில் வரும் சில வகை பாடல்கள் 85ம் வருட கால கட்டத்தில் வந்திருக்கிறது, டாப் கிளாஸ்.

வாழ்வே வா... வாழ்வோம் வா.. (சாதனை)

http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Saathanai/Vazhvey%20Vaa%20-%20TamilWire.com.mp3

rajaramsgi
26th June 2017, 01:57 PM
அத்தை மக தங்கத்தை எத்தனை பேருக்கு தெரியும்?

http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thangamadi%20Thangam/Athai%20Iaga%20Thangathukku%20-%20TamilWire.com.mp3 (http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thangamadi%20Thangam/Athai%20Iaga%20Thangathukku%20-%20TamilWire.com.mp3)

mappi
2nd July 2017, 11:53 PM
Ilamanathu Palakkanavu from Selvi (1985)

https://www.youtube.com/watch?v=beviiYX1cVE

rajaramsgi
5th July 2017, 03:38 PM
[QUOTE=mappi;1322416]Ilamanathu Palakkanavu from Selvi (1985)
/QUOTE]

இளமனது பலக்கனவு பிரமாதமான பாடல். ரிக்கார்டிங் வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் எனக்கு ஏதோ ஒன்று புதியதாக புலப்படும். அன்று முதல் இன்று வரை எனக்கு சற்றும் சலிப்பை தராத பல பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றி MAPPI

பாடல் படமாக்கப்பட்ட விதம் தான் மொக்கை.

rajaramsgi
5th July 2017, 06:19 PM
தேவர் பிலிம்ஸ்க்கு கிடைத்த இளமானது பலக்கனவுக்கு பதில் பாடலாக நான் எதுவும் தர வேண்டாமா?

நான் தருபவை பெரும்பாலும் அதிகம் பிரபலம் ஆகாத பாடல்கள் தான். ஏதோ ஒரு வகையில் எனக்கு பிடித்திருக்கும்.


இது தேவர் பிலிம்ஸ்/தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த அதிகம் பேசப்படாத அன்னை பூமி என்கிற திரைப்படத்தில் அமைந்த நேத்து தான் பூத்தது டூயட்...இந்த பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தற்போது தான் ரிலீசானது போல கேட்டு பாருங்கள், உங்களுக்கு பிடிக்கும்.

http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Annai%20Bhoomi/Nethuthan%20-%20TamilWire.com.mp3

https://www.youtube.com/watch?v=kj9HM7bf6yc

rajaramsgi
7th July 2017, 08:53 PM
தாவணி கனவுகளின் ஒரு நாயகன்....

http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thavani%20Kanavugal/Oru%20Nayagan%20-%20TamilWire.com.mp3 (http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Thavani%20Kanavugal/Oru%20Nayagan%20-%20TamilWire.com.mp3)

mappi
8th July 2017, 02:57 AM
Raja Rocks

Funk Rock

The mixture of funk and indian light music created by Illayaraja sets up a whole new genre characterized by fat rock sound, tricky beats, funky guitar licks, lustrous and metallic violin, acute wind instruments and pulsating basslines.

Netru Indha Neram from Tik Tik Tik is doubtlessly pure groove.

https://www.youtube.com/watch?v=Uqdo5vgeeRI

Classical music battles with Western music under a deep integration of many styles and instruments. The combination of elements of different genres stylises the fusion. The alap is steady pulpsed and increases the tempo before passing the hand back to the groovy beats.

Idhu Oru Nila Kaalam from Tik Tik Tik is indubitably lush.

https://www.youtube.com/watch?v=OOE8Ogxrqo4

rajaramsgi
9th July 2017, 01:39 PM
Another fine song that went unnoticed...
From Anbin Mugavari (1985)

https://youtu.be/ZaSQ64P7JjU

rajaramsgi
9th July 2017, 02:17 PM
அன்று அடித்த புயலில் மறைக்கப்பட்ட மற்றொரு பொக்கிஷம் அன்பே வா ... ....

வித்யாசமாக இருக்கட்டுமே என பேத்தோஸ் ஒன்று தருகிறேன். மின்மினியின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் ஏழை ஜாதி (1993) திரைபடத்தில் இடம்பெற்றது. நாயகனுக்காக ஏங்கி அவள் பாடினாலும், அடுத்து நடக்க போகும் பயங்கரத்துக்கு நம்மை தயார் செய்யும் விதமாய் வாத்தியங்களையம் தாள அமைப்புகளையும் ராஜா சார் அமைத்திருப்பது உங்களை நிச்சயம் கவரும். படமாக்கப்பட்ட நேரத்தில் ஜெயப்ரதாவுக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். தாண்டவ ஆட்டத்தை அதகளப்படுத்தி இருக்கிறார்.

சமீப காலத்தில் நான் அதிகம் கேட்டு என்னை கவர்ந்த இந்த பாடலுக்கான உங்கள் விமர்சனத்தை காண காத்திருக்கிறேன். பாடல் பதிவு மற்றும் படமாக்க பட்ட விதம், ராஜா சாரின் கற்பனை என்று யாருக்கேனும் தோன்றியதை எழுதுங்களேன்.

கல்லூரி முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்து இறங்கிய சமயத்தில் அசோக் பில்லரில் இந்த படத்துக்கான ஒரு கார் சேசிங் காட்சி எடுத்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்த நினைவில் மூழ்கி விட்டேன். நோட்: ஏழை ஜாதியின் மற்றொரு பொக்கிஷமான அதோ அந்த நதியோரம் (http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Ezhai%20Jaadhi/Atho%20Antha%20Nadhiyoram%20-%20TamilWire.com.mp3) உங்களுக்கு நினைவிருக்கும்.

better quality MP3 link here. (http://download.tamiltunes.com/songs/__A_E_By_Movies/Ezhai%20Jaadhi/Anbe%20Va%20Anbae%20Va%20-%20TamilWire.com.mp3)

https://www.youtube.com/watch?v=2pXumyxZXEI

rajaramsgi
12th July 2017, 05:10 PM
ராஜா சார் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் ஒரு 500 பாடல்களை அவராலேயே ரிப்ரொடியூஸ் பண்ண முடியாது என்று சொல்வதில் எனக்கொன்றும் அச்சமில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில் எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் எல்லா அம்சங்களும் பொருத்தி அளித்த எத்தனையோ பாடல்களில் அறுவடை நாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். அறுவடை நாள் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் பாடல்கள் மீது சற்றும் எனக்கு மோகம் குறையவில்லை.

தேவனின் கோயில் மூடிய வேளையில்: எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த பாடல்? ஒரு முழு படத்தின் சோகத்தை ஒரு பாடலில் சொல்லிவிட முடியுமா? சந்தோஷ நிகழ்வுகளும் இருக்கிறது தம்பி என்று சொல்லிவிட அதே பாடலில் ரொமான்டிக்கான ஹாப்பி பீட்ஸ் வைத்து விட முடியுமா? எந்த சோக பாடலுக்கான இலக்கணத்தையும் ரெபெரென்ஸ் செய்யாமல் தொடக்கத்திலேயே சர்ச் ஆர்கன் பின்னணியில் நாலைந்து டிராக்குகளில் சுலோகம் சொல்லி சிக்ஸர் அடித்து விடுகிறார் ராஜா சார்.. பிறகு பல்லவியை தொடர்ந்து வரும் முதல் இடை இசையில் சுகமாய் அடிக்கும் சர்ச் மணியோசை ஸ்ட்ரிங்ஸ்க்கும் குழலோசைக்கும் இசையில் இழைந்து வருவது டிவைன் அல்லவா? இரண்டாவது இடை இசையோ சொர்கம்.அதில் ராஜா சார் ஓங்கி உயர்ந்து ஹே தந்தன தந்தன தந்தனா சொல்வதை எதனுடன் ஒப்பிடுவது? கிட்டாரும், புல்லாங்குழலும், கிட்டாரும், தாள அமைப்புகளும் போட்டி போடுகிறதே? கங்கை அமரனையும், சித்ராவையும் நினைத்து பெருமை பட இந்த ஒரு பாடல் போதும்.

இந்த பாடல் என்னை அழ செய்திருக்கிறது.. துள்ளி இருக்கிறேன். இது தான் முடிவு என தெரியாமல் துவண்டு போயிருந்த வேளைகளில் இந்த பாடல் மூலம் தேவனிடம் புலம்பி இருக்கிறேன். தேவாலய மணிகள் ஒலிக்கும் போதெல்லாம் இந்த பாடலும் ரீங்காரம் இடுவதை இன்றளவும் தவிர்க்க முடிவதில்லை.

ராஜா சார், நீங்க இல்லாமல் போயிருந்தால், நான் இன்று இருந்திருக்க மாட்டேன்.

click here for the MP3 version (http://tamildownloads.net/tamilmp3/load/Full%20Mp3/Ilayaraja%20Hits/Aruvadai%20Naal/Devanin%20Kovil%20-%20Ilayaraja%20-%20Chitra%20-%20Chorus-Tamildownloads.Net.mp3)

https://www.youtube.com/watch?v=mReUJ80KifA

rajaramsgi
16th July 2017, 06:36 PM
எ பியூர் டிலைட்....


வாசுகி படம் 1997 வெளியாகி இருக்கிறது. ராஜா சார் இசை அமைத்த படங்களும், பாடல்களும் எனக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் வாசுகி படம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்தூரி ராஜா படமாம். எதேச்சையாக இந்த பாடலை கேட்க நேரிட, அசந்து விட்டேன். ஜனகராஜ் ஒரு அண்ணனாக தன்னுடைய தங்கை ஊர்வசிக்கு பாடுவது போல் அமைக்க பட்டிருக்கிறது. கிளாசிக்.

Clich here to listen to the (http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Vasugi/Pozhuthu%20Vidigiradhu%20-%20TamilWire.com.mp3)MP3 (http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Vasugi/Pozhuthu%20Vidigiradhu%20-%20TamilWire.com.mp3) version (http://download.tamiltunes.com/songs/__U_Z_By_Movies/Vasugi/Pozhuthu%20Vidigiradhu%20-%20TamilWire.com.mp3)

with good quality sound but only stills:
https://www.youtube.com/watch?v=GQogornS5SA

Actual movie (this is the title song for the movie)
https://www.youtube.com/watch?v=697WOp1ySBE

rajaramsgi
23rd July 2017, 04:30 PM
இங்கு யாருமே வருவதில்லையா? போவதற்கு எனக்கு சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும், இருபதாண்டுகளாக இந்த TFMPAGE வந்து சென்ற என் கால்கள், பழக்கத்தின் காரணமாய் வராமல் இருக்க மறுக்கின்றன, அதனாலேயே நாளொன்றுக்கு இரு முறை வந்து தினம் தினம் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.

ஒரு ஆயுள் தண்டனைக்கு மேலான காலத்தை இந்த பகுதில் நான் செலவு செய்திருக்கிறேன். அது தண்டனையாக அல்ல, மகிழ்ச்சியாக! யாரும் இந்த பக்கம் வராத காரணத்தால் இந்த பகுதிகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டன என்று என்றேனும் என் பார்வையில் பட்டால் நான் மிகவும் வருந்த கூடும். எவரும் இங்கு வருவதற்கான எந்த தடயமும் இங்கு இல்லை.

ராஜா சார் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை, மேன்மை தாங்கிய மக்கள் இங்கு எழுதியதை எல்லாம் மறக்க முடியவில்லை. இந்த இடத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களும் பாடல்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இங்கு எழுதிய, வந்து போன மக்களுக்கு என் நன்றி. இப்போது விடை பெறுகிறேன். நான் புண்ணியம் செய்தவனாய் இருப்பின் எங்கேனும் நீங்கள் எழுதிதை படிக்க நேரிடும். உங்களை பார்க்க நேரிடும். அது வரை.................................... இப்போதைக்கு பை!

வாழ்க ராஜா சார்! வளர்க அவர் புகழ் !

https://www.youtube.com/watch?v=7pWe7L6qBYE

apewenodurug
27th July 2017, 08:29 AM
இங்கு யாருமே வருவதில்லையா?


ஐய்யா Indiaவில் மய்யம் தடை - that is why there is nobody here.

rajaramsgi
5th August 2017, 07:54 PM
உயிரே உறவில் கலந்து:

மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.

மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி பூக்களில்.. ஆனால் அதே படத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாடல் தான் 'உயிரே உறவில்'.. இது சோக பாடல் அல்ல, அதை ஒட்டிய ஏதோ ஒரு உணர்வை ஜானகியின் குரலில் கேட்க முடிகிறது. இந்த ஜானரில் வாலிபமே வா வா படத்தில் அழகே உன்னை என்கிற பாடலிலும் அமைத்திருப்பார் ராஜா சார். கேளுங்க!

https://www.youtube.com/watch?v=YpPKJnc4Xr0

jaiganes
9th August 2017, 02:33 AM
உயிரே உறவில் கலந்து:

மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.

மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி பூக்களில்.. ஆனால் அதே படத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாடல் தான் 'உயிரே உறவில்'.. இது சோக பாடல் அல்ல, அதை ஒட்டிய ஏதோ ஒரு உணர்வை ஜானகியின் குரலில் கேட்க முடிகிறது. இந்த ஜானரில் வாலிபமே வா வா படத்தில் அழகே உன்னை என்கிற பாடலிலும் அமைத்திருப்பார் ராஜா சார். கேளுங்க!

https://www.youtube.com/watch?v=YpPKJnc4Xr0

அதியற்புதமான பாடல்களின் வரிசையில் இதற்கு ஒரு இதமான இடம் உண்டு.

மனதை ஏதோ செய்யும் பாடல் மெட்டு.அதற்குக்காரணம் இந்த படத்தின் கதை. படம் பாருங்கள் இந்த மெட்டின் இழை சோகம் புரியும்.

rajaramsgi
9th August 2017, 08:33 PM
நன்றி மாப்பி, ஜெய்கணேஷ் அண்ட் பன்னையபுரத்தார் அவர்களே. ஏதோ நான் மட்டும் இங்கே தனியே உலாவி கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தேன். உங்கள் மூவரின் ப்ரெசென்சை இங்கே காட்டியதற்கு நன்றி சொல்ல ஒரு பழைய பாடலை உங்களுக்கு நினைவு படுத்த போகிறேன், நீங்களும் ரசிப்பீர்கள். GN ரங்கராஜன் இயக்கத்தில் 1982ல் வெளிவந்த ராணி தேனீ படத்திலிருந்து ஒரு பாடல். GNR இயக்கிய 9 படங்களுக்கும் ராஜா சார் சம்பளமே வாங்கவில்லையாம், இது கொசுறு செய்தி.

இங்கே நம்ம ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஒரு டூயட் போட வேண்டும். பாடலுக்கான சூழ்நிலை என்னவோ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் தான். ஆனால் ராஜா சார் இந்த பாடலை அமைத்தற்கான உந்துதல் அந்த கதாபாத்திரங்களாக தான் இருந்திருக்க வேண்டுமே தவிர பாடலுக்கான சூழ்நிலை இல்லை. அழகாய் சேலை கட்டி, சீதையாகவே தெய்வீகமாய் காட்சி தரும் அந்த பெண், தான் மணமுடிக்க போகிறவரை ராமனாகவே பார்க்க கூடியவள். . ஹீரோ மெத்த படித்த ஜென்டில்மேன், இது தான் பாத்திரங்கள். ராஜா சாருக்கு இது மட்டுமே போதாதா? அருமை அருமை.

https://www.youtube.com/watch?v=YLr-AD3-ih4

SVN
9th September 2017, 10:07 AM
Don't know if this song has been discussed in this thread before.

The movie Panchami was never released, however the 4 songs were nothing short of masterpieces, which used to be featured in Ilangai Oliparappuk Koottuthaabanam Tamizhchevai 2 (Radio Ceylon), under the programme, 'Maranthum Malaraathavai'.

The relatively well-known song from this movie is the P Susheela solo, 'Udhaya Kalame Nanaintha Meghame'.

The song I am talking about today is a rare duet by S Janaki and TV Gopalakrsihan (the veteran music maestro, violinst, mridangist and guru, who taught Carnatic music to Ilaiyaraja).

S. Janaki once again takes a masterclass to today's so-called playback singers on how to expressively sing, with the right feel and clarity of diction.

Here's the Youtube link (audio quality is not good though).
https://www.youtube.com/watch?v=15VGgjhW-zY

The same user has uploaded a better quality track on soundcloud here (thanks Narayanan)

https://soundcloud.com/narayanan-1/margazhi-madham-munpani-velaiyile-panchami

Enjoy!

The song is set to Raga 'Karnataka Kamas' (remember 'Ponnil Vaanam POttathu kOlangaLe' from Villuppaattukkaaran, 'Brochevarevarura' from Shankarabharanam)

rajaramsgi
17th September 2017, 03:42 PM
நன்றி SVN. பஞ்சமி பிரமாதம், இந்த படத்தின் மற்ற பாடல்களும் கிடைத்தால் தேவலாம்.

நானும் தருகிறேன். இது றேர் இல்லை, பாப்புலர் தான். புலமைப்பித்தனின் வரிகளில் வெள்ள மனம் உள்ள மச்சான் (சின்ன வீடு)

குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்கும் வாசுதேவனும், மன்னிக்கும் சுனந்தாவும் கம்பீரத்துடன் உச்சியில் ஜொலிக்கிறார்கள். இன்று காலை மட்டும் 25 முறை கேட்க...
இதயம் கனத்தது., கண்ணீர் வந்தது..

எண்பதுகளிலேயே என் உலகம் சுற்றுவது நின்றிருக்கக்கூடாதா?

1985ல் தஞ்சை சாந்தி கமலாவில் என் அப்பாவுடன் நான் பார்த்த முதல் படம். சின்ன வீடு. இரண்டாவதாக அவருடன் நான் பார்த்தது சென்னை தேவி பேரடைஸில் தேவர் மகன், வேறு படங்கள் அவருடன் இனைந்து பார்த்ததில்லை.

https://www.youtube.com/watch?v=1tqMdyIB-a4

mappi
17th September 2017, 11:40 PM
Rathiri Unakkena Aadatuma from Vasanthame Varuga (1983)

https://www.youtube.com/watch?v=K7Xfou6--pQ

Punnagai Poo Thuvuthe from Vasanthame Varuga (1983)

https://www.youtube.com/watch?v=1avMceSzVVI

mappi
17th September 2017, 11:48 PM
Rajaramsgi,

Nee Kannil Vaazhum from Agal Vilakku (1979)

https://www.youtube.com/watch?v=WQ8fKzTa57E

mappi
17th September 2017, 11:58 PM
SVN,

Sangeethame En Deivame from Koil Pura (1981)

https://www.youtube.com/watch?v=Acp2xiVjLKk

rajaramsgi
18th September 2017, 08:57 PM
நன்றி mappi. தாங்கள் அளித்த நான்கு பாடல்களில் என் மனதை கவர்ந்தது கோயில் புறா.. படத்தின் அனைத்து பாடல்களும் பிரமாதமாக இருக்கும். இந்த பாடல்களை ரி-மாஸ்டர் செய்ய வேண்டும், நம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொக்கிஷங்கள் இவை.

கொசுறு: சரிதா நமக்கு தெரிந்தவர் தான், இவருக்காக மௌன கீதங்களை எண்ணெற்ற முறை பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் நாயகனும், இந்த பாடலில் நாதஸ்வரம் வாசிப்பவருமான ராஜ்பகதூர், பழைய பிரபலம் pu சின்னப்பாவின் மகன். மிகவும் வறுமை நிலையில் இருந்தவர் சில படங்களில் வில்லனாக நடித்தாலும் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. பாவம்.

mappi
19th September 2017, 03:59 AM
Yaar Mamano from Vetrikku Oruvan (1979)

https://www.youtube.com/watch?v=mPTe5GAUXQQ

rajaramsgi
19th September 2017, 02:49 PM
yaar mamano from vetrikku oruvan (1979)


சபாஷ்.... யார் மாமன் நச்சென்று என் மனதில் ஒட்டிக்கொண்டது.. காபரே என்று எதையோ போட்டு தாளித்து கொடுத்து விடாமல், நேர்த்தியான கோர்வையில் 1979லேயே ஒரு சிறப்பான மெலோடியை கொடுத்திருக்கிறார் ராஜா சார். . கண்ணை மூடி கேட்க, வாத்தியங்கள் ஒவ்வொன்றும் போட்டி போட்டுகொண்டு, ஜானகியின் குரலோடு ரேஸிங் போவது போல் இருக்கிறது. பாடலோ இரண்டே முக்கால் நிமிஷம் தான்.. இன்னும் கொஞ்சம் நீடித்திருக்க கூடாதா?

பாதம் காட்டுங்கள் mappi, இந்த பாடலை கை காட்டிய உங்களை நமஸ்கரித்து கொள்கிறேன்..

rajaramsgi
19th September 2017, 03:06 PM
ஊரெல்லாம் உன் பாட்டு தான்.. துல்லியமான ரி மாஸ்டர்ட் பதிவில் யேசுதாஸின் குரல் உங்களை வச படுத்தும். இதே பாடல் வெவ்வேறு வெர்ஷனில் சித்ரா மற்றும் ராஜா சாரி குரலிலும் காசெட்டில் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ யேசுதாஸின் வெர்ஷன் தான் பிடிக்கும்.

https://www.youtube.com/watch?v=opgarAM0Pw0

rajaramsgi
19th September 2017, 04:40 PM
யார் மாமனுக்கு சற்றும் குறைவில்லாத 1 அண்ட் 2 chachacha.... நல்லதொரு குடும்பம் படத்தை 1ம் வகுப்பு படிக்கும் பொது தஞ்சை யாகப்பாவில் பார்த்தது கூட எனக்கு நினைவிருப்பதை பீற்றி கொள்ளாமல் இருக்க முடியவில்லை :-)

இந்த பாடலை கம்போஸ்/கண்டக்ட் செய்யும் பொது ராஜா சார் ஹிப்பி தலையுடன், பெரிய காலர் வைத்த ஷர்ட் டக்கின் செய்து, பெல் பாட்டம்ஸ் ட்ரொவுசரோடு முரட்டு பெல்ட் அணிந்து பக்காவாக இருந்திருக்க வேண்டும்..

லைவ் ரிகார்டிங், பெரிய படம், வி ஐ பி சிங்கர்ஸ் -- அன்றைய தினம் எப்படி இருந்திருக்கும்?

https://www.youtube.com/watch?v=Nxga0FxCI10

mappi
19th September 2017, 10:50 PM
Prathi Dinam Nee Dharshanam from Anumanaspadam (Telugu, 2007)

After Tabla, enjoy miruthangam.

https://www.youtube.com/watch?v=Q7mqoUasGgI

My favourite from the album:

Raa Raa Raa Gumma Raa Thulle Komma from Anumanaspadam (Telugu, 2007)

https://www.youtube.com/watch?v=FV1d0X9QguQ

Bonus:

Swalpa Soundu from Suryakanthi (Kanada, 2010)

https://www.youtube.com/watch?v=HN2qDcVkYdo

mappi
21st September 2017, 01:19 AM
Ilamai Rathathil from Ninaikka Therintha Maname (1987)

https://www.youtube.com/watch?v=QDxbxo2GkIU

mappi
21st September 2017, 01:52 AM
Maalai Mudhal Kaalai Manmathanin Leelai from Unnai Thedi Varuven (1985)

(Single not available on YouTube; the song starts at 12m30s in the below album)

https://youtu.be/_0a7y6IWSCA

rajaramsgi
22nd September 2017, 08:23 PM
நன்றி MAPPI ..

இளமை ரதத்தை முதல் முறை கேட்கிறேன்.. தெளிவான இசை.

உன்னை தேடி வருவேன் : ஒரு நாளில் வளர்ந்தேனே மற்றும் என் அன்பே அன்பே அப்போதே பாப்புலர்..

ஏண்டி அம்மா, ஒரிய ஒரிய ஒரியா, மாலை முதல் பாடல்கள் பிரமாதம். இப்போது தான் முதல் முறை கேட்கிறேன், , பிடித்து போய் விட்டது :-)


இந்த படத்தின் சூப்பர் டைட்டில் ஸ்கோர்: https://soundcloud.com/navin-mozart/illayaraja-unnai-thedi-varuven1985-soundtrack-title-score

mappi
22nd September 2017, 11:48 PM
Puzhayorathil from Adhavaram (1989)

https://www.youtube.com/watch?v=DL1N60bPkrA

mappi
23rd September 2017, 12:17 AM
Kanpaarum Devi from Kokkarakko (1983)

https://www.youtube.com/watch?v=udS8vK9IeJY

mappi
29th September 2017, 02:33 AM
Alaigale Vaa from Kavithai Malar (1982)

https://www.youtube.com/watch?v=VTa9zEenWlU

Got to find that violin and exhibit it in the museum inside the gallery named Sultan of Strings.

raagadevan
17th November 2017, 10:30 AM
https://www.youtube.com/watch?v=5pWIoNwpLcA

Vaali/Ilaiyaraja/Charukesi raagam/Jayachandran/Sushila/Vijayakanth/Radhika

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ...

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே

இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ

மணவறையில் நீயும் நானும் தான் பூச் சூடும் நாளும் தோன்றுமோ

ஒன்றாகும் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே

இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...

rajaramsgi
28th April 2020, 01:20 AM
நண்பர்களே.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு ராகதேவன் அருள் புரிந்து இரண்டரை வருடமாகி விட்டது. யாரும் இங்கு வருகிறார்களா என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு குசலம் விசாரித்து விட்டு, நேற்று நான் கிழித்ததை பீத்தி கொள்ளலாமென வந்தேன்.

நேற்று ஞாயிற்று கிழமை.. கொரோனா கொடுமையால், உடற்பயிற்சிக்காக ஒரு முறை செல்லலாம் என்கிற சலுகையை காலையிலேயே 15 மைல் சைக்கிள் ஒட்டி கழித்து விட்டேன். கார்டனில் புல் வெட்டியாகி விட்டது. மதியம் மீன் குழம்பு சாப்பாட்டில் அதிகம் நாட்டமில்லை, வேண்டா வெறுப்பாக மாலையில் தான் அதை சாப்பிட்டேன். காலை முதல் கை அரிக்கிறது என்று தலையை சொரிந்து கொண்டே இருக்கும் குடிமகன் போல நானும் அங்கும் இங்குமாக இருந்தேன். மனம் ஒருநிலை படவில்லை.

நான் கேட்டிராத ராஜா சாரின் ஒரு பாடலை தேடி கண்டு பிடிக்கலாமே என எழுந்தேன். பாடல் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும். வழக்கமான டூயட்டாக இருக்க கூடாது. அதில் ஜானகியும், பாலுவும், ராஜா சாரும் மாறி மாறி உரையாடி கொண்டிருக்க வேண்டும். நான் இது வரை இந்த பாடலை கேட்டிருக்க கூடாது. கேட்டதும் என் மனதில் நச்சென்று பதிய வேண்டும். பின்னணியில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வேகமெடுக்க வேண்டும். கேட்க கேட்க . ஹாப்பி ஹார்மோன்ஸ் ததும்ப வேண்டும். -- இது தான் கண்டிஷன்ஸ்.

3 மணி நேர தேடலுக்கு பின்என் கையில் சிக்கிய இந்த செம தெலுகு பாடல், 24 மணி நேரமாய் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.

படம்: வம்சியின் ஸ்ரீ கனக மஹாலக்ஷ்மி ரிக்கார்டிங் டான்ஸ் ட்ரூப். வெளியான வருடம்: 1988

https://www.youtube.com/watch?v=2fvrWBi9VE4