டியர் பார்த்தசாரதி சார்,
தொடர் பாராட்டுதல்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !
'மலர்ந்தும் மலராத பாதி மலரை, பொன்னொன்று கண்டேன்' என்று வியந்து நோக்கும் போது, அது நம்மை நோக்கி 'நலந்தானா' என்ற விசாரித்தால் எத்தகைய அதிசயமும், ஆச்சரியமும், இன்பமும், உவகையும் மேலிடுமோ அத்தகைய அனைத்தும் தங்கள் பாடல் பதிவுகளில் பரிமளிக்கின்றன.
இந்தப் பாடல்கள் எல்லாம் அன்றே பதிவாகி(Record) விட்டன. மீண்டும் இவற்றை அதன் ஒரிஜினாலிடியோடு கனக்கச்சிதமாக தாங்கள் பதிவு(Post) செய்வது என்ன அற்புதமான ரீமிக்ஸ்.
ரீமிக்ஸ் செய்பவர்கள் தங்களிடம் பாடம் படிக்க வேண்டும் !
தாங்கள் பார்த்தசாரதி மட்டுமல்ல, பாராட்டுக்கென்றே பிறந்த சாரதி !
வாழ்க தங்களின் திருத்தொண்டு !
அன்புடன்,
பம்மலார்.