Yaarumilla teaser
Printable View
Full Song
Kaaviyathalaivan - Yaarumilla Lyric | A.R.Rahman | Siddharth, Prithviraj
People and especially ARR fans in general should be delighted as there's a whooping 47 seconds interlude and it's probably the longest out of Rahman Ji's recent stuff.
Shweta Mohan does a stellar job. The song however evokes pleasant memories of "Jashn-E-Bahaara" and this might be due to use of raga... Sorry, I no idea what raga it might be, although I'm guessing raga darbari kanada?! Rahman Ji has pressed the right buttons in the preludes, interludes, etc. and it surely will be a success. Being a patient ARR fan this year has definitely paid off. This year is just getting better and better by everyday!
https://www.youtube.com/watch?v=idZ-5amTsHA
I dont find songs very catchy. I like Solli vidu song. Other songs so so... But will be good to watch it with visuals. Well for me as a Tamil music fan this year is a big let down by ARR. Kochadaiyan, and Kaviyathalaivan. One of them is Cartoon disaster.
But for this movie, Im sure the songs and bgm will take this movie to next level. But its big disappointment for me ass ARR fan this year(Tamil music only as I dont listen to Hindi songs). Only 2 movies, both doesn't give full freedom for catchy songs. Would be good if ARR commit more Tamil movies.
ARR haters-ikku ellam KAAVIYA THALAIVAN album oru 'marana seruppadi'
love u thalaiva!!!!thanx for kaviya thalaivan album..
ஆனந்த் சார், எனக்கும் பிடித்திருந்தது. வெறுப்பவர்கள் வெறுத்துக் கொண்டே தான் இருப்பர். அவர்களை பற்றி நமக்கென்ன? இவர்களது காட்டு கூச்சலால் சூரியன் போல் விளங்கும் இசைப்புயலுக்கு எந்த இழுக்கும் இல்லை.
எனக்கு கேட்டவுடன் மிகவும் பிடித்தது "யாருமில்லா" மற்றும் "ஏ மிஸ்டர் மைனர்" இரண்டும். மற்ற பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆனால் நாசர்தான் பாவம். இசை வெளியீட்டு விழாவில் கொஞ்சம் உளறிவிட்டாரோ என்று தோன்றியது. தேவையே இல்லாமல் இசைஞானி பற்றி பேசியிருக்க வேண்டாம். அதுவும் "என்னால் உடனே நேரடியாக வர இயலாது. ஏனென்றால் நான் இசைஞானி மேல் கொண்டுள்ள மதிப்பு அப்படி" என்று கூறியதற்கு என்ன அர்த்தம்? இவர் வந்தாலே ஆயிற்று என்று இரஹ்மான் அடம்பிடித்தாரா? அதுவும் அது என்ன நேரடியா? முதலில் ஹாரீஸ், ஜி.வி.பிரகாஷ் அப்புறம் இரஹ்மானிடம் வருவாரா?
இது கூட பரவாயில்லை. இரஹ்மானின் பிரபலமான ஆஸ்கர் பேச்சை குறிப்பிட்ட அவர், குறிப்பாக அன்பு வழியை தேர்ந்தெடுத்ததை பற்றி கூறினார். "இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது இசையை விட அன்பு உயர்ந்தது" என்று வேறு கூறியிருக்கிறார். ஒரு சாராரிடம் இருந்து நல்லா வாங்கி கட்டிக்க போறார்.
After so long posting here.. My thoughts
http://www.backgroundscore.com/2014/...-arrahman.html
Kaviya Thalaivan | A.R.Rahman
https://www.youtube.com/watch?v=GWJzWPu1ojI
AUDIO LUNCH
Vaali sir. pls come back
I'm listening kaaviyathalivan song for past two days and completely love it..... My picks are sandi kuthirai, yaarumilla and alli arjuna.... Haricharan did fantastic job in Sandi kuthirai... it remembers me the song "rambam bum" from michel madana kamarajan....I hope the director justifies the quality of songs through the visuals...
Vasanta Balan
இசையமைப்பாளர் ரகுமானிடம் பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தேன்.
காவியத்தலைவன் / ஐ இரண்டு படங்களிலிலும் ரகுமான் அவர்கள் பாடாததைக்குறிப்பிட்டு
நீங்கள் ஏன் இந்த இரண்டு படங்களிலிலும் பாடவில்லை என்று கேட்டேன்.
கண்டிப்பா பாடனுமுனு கட்டாயமா என்ன.
ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களே என்று சொன்னேன்.
என் இசையை ஒழுங்கா பண்ணா போதும் என்று காட்டமாக பதில் சொன்னார்.
நான் விடவில்லை,
காவியத்தலைவனில் பாட இடம் இல்லை .
ஐ திரைப்படத்தில் பாடியிருக்கலாமே என்று கேட்டேன்.
சிறிது மௌனம்.
பாடியிருக்கலாம் என்னோடு நீ இருந்தால் https://www.youtube.com/watch?v=Xqw8DWZ-cNQ பாடலை பாடியிருக்கலாம்.
ஆனால் பாடகர் சித் ஸ்ரீராம் என்னை விட நன்றாக பாடியுள்ளார். அவருக்கு கடல் திரைப்படத்தில் பாடியபோது
அந்த அளவு கவனிப்பு கிடைக்கவில்லை.
இந்த பாடல் ஹிட் ஆனால் அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் அதனால் தான் நான் பாடவில்லை.
அவருக்கு கிடைக்கவேண்டியதை நான் பிடிங்கிக்கொள்ளகூடாதுல்ல பாலன் என்றார்.ஒரு நல்இதயம் எப்படி இயங்குகிறது பாருங்கள்.
"என் இசையை ஒழுங்கா பண்ணா போதும் என்று காட்டமாக பதில் சொன்னார்."
தலைவர் அப்படி எல்லாம் காட்டமாக பதில் சொல்லக்கூடிய ஆள் இல்லையே. ஏதாவது உள்குத்து இருக்கா பாலன்?;)
இன்னொரு திரியில் ஒருவர் காவியத்தலைவன் படம் பற்றி கருத்திட்டிருக்கிறார். அதாவது படம் இசை சம்பத்தப்பட்ட படம். இதற்கு தவறான கலைஞர்களை உபயோகித்திருக்கிறார்களே. இயக்குனர் எந்த அடிப்படையில் நடிகர்களையும் இன்ன பிற தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்ந்தெடுக்கிறார் என்று. அதாவது சூசகமாக ரஹ்மான் இந்த படத்திற்கு தவறான தேர்வு என்று கூறியிருக்கிறார். அதாவது படத்தை இயக்கிய வசந்தபாலன், அவரை இசையமைக்க அழைக்கலாம் என்று யோசனை கூறிய சித்தார்த், இதற்கு மேல் பணம் போட்டு படத்தை தயாரித்தவர் எல்லோரையும் விட அறிவாளியாக தன்னையே கற்பனை செய்து கொண்டிருக்கும் ஒரு வாய்ச்சொல் வீரருக்கு எல்லாம் தெரியுமாம். அபத்தம். இதற்கு ஒத்து ஊதியிருக்கிறார் இளையராஜாவை பெருமைமிக்க நாயன்மார்களில் ஒருவராக சேர்த்த சிவனின் நேரடி ஏஜென்ட்.
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இவர்களை நம்பி திரைத்துறை இல்லை. திறமைசாலிகளை என்றுமே ஊக்குவிக்கும் தமிழ்த்திரை ரசிகர்கள் ரஹ்மானுக்கும் வாய்ப்பளித்து இன்று அவர் உலகப்பெருமை அடைந்ததை கண்டு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். வயிற்றெரிச்சல் பேர்வழிகள் வயிரெரிந்து கொண்டே இருக்கலாம்:-d
// இதற்கு ஒத்து ஊதியிருக்கிறார் இளையராஜாவை பெருமைமிக்க நாயன்மார்களில் ஒருவராக சேர்த்த சிவனின் நேரடி ஏஜென்ட். //
ஆஹா! வாசிக்கிறதுக்கு இதுவும் நல்லா இருக்கே! அங்கே அவரது எந்தக் கருத்திற்கு நான் மறுமொழி சொல்லியிருக்கிறேன் என இன்னொருமுறை வாசித்துதான் பாருங்களேன் தோழர். ஒத்து ஊதியிருக்கிறார் என எதைவைத்து சொல்றிங்கன்னு புரியல. காவியத்தலைவன் படப் பாடல்கள் மீதான எனது அதிருப்தியை (எந்த அடிப்படையில் என்றும்) நான் என்றைக்கோ பதிவு செய்துவிட்டேன் தோழரே. ரஹ்மான் பாடல்கள் எனக்குப் பிடித்திருந்தால் ஓடோடிப் போய் பதிவு செய்துவிடுவேன். என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
பரத்வாஜ் ரங்கன் ராஜாவை விட ரஹ்மானிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார், எப்போதெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் அவரது இசை அறிவின் ஆழமின்மையை அம்பலப்படுத்துகின்றனரோ, அப்போதுதான் அவர் தன்னை ராஜா ரசிகர் என்று அறிவிக்கின்றார் என்று தாங்கள் கூறிய கருத்து எனக்கு அந்த* அதிமேதாவியின் கருத்தை ஆமோதிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. அப்படி நீங்கள் செய்யாத பட்சத்தில் நான் எனது பகிரங்க மன்னிப்பையும் இங்கே பதிவு செய்கிறேன். மன்னியுங்கள்.
அவசியமே இல்லை. அந்த நபரின் கருத்தை பற்றி எனக்கு பெரிதாக அக்கறை இல்லை. ஆனால் நீங்கள் ராஜா ரசிகராக இருந்தாலும் ரஹ்மானின் இசையையும் கேட்பவர். உங்களுக்கு பிடித்திருந்தால் அதையும் பதிவு செய்பவர். தங்களுக்கு காவியத்தலைவன் பாடல்கள் திருப்தி தரவில்லை என்பது உங்கள் தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை, எனது கருத்துக்கு மாறுபட்டு இருந்தாலும், நான் மதிக்கிறேன்.Quote:
என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
ஆனால் இளையராஜாவை நாயன்மார்களில் ஒருவராக தாங்கள் கூறியது சைவ மதத்தை ஏற்றிருக்கும் என்னை போன்றோருக்கு வேதனை அளித்திருக்கிறது என்பதும் உண்மை. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் ரஹ்மானின் இந்த ரசிகனுக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் நான் அனு தினமும் உளமாற வணங்கும் தெய்வத்தின் திருத்தொண்டர்கள் பட்டியலில் இளையராஜாவையும் இணைத்தது ஏற்புடையதன்று. ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பெருமை மிக்க பட்டியலில் சேர சிறந்த இசையமைப்பாளர் என்ற தகுதி மட்டும் போதுமா? நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். வேறு மதத்தில் கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படுவோரின் பட்டியலில் ஒரு திரை இசையமைப்பாளரை சேர்க்க முடியுமா?
காவியத் தலைவன்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி. ஆனால் மோசமான திரைக்கதை எழுத்தாக்கம், தவறான நடிகர்/நடிகைகள் தேர்வு காரணமாக தடுமாறுகிறது. சித்தார்த், ப்ரித்விராஜ் ஆகியோர் சிறப்பாகவே நடித்திருந்தாலும் நகரத்து freaky கதாபாத்திரங்களிலேயே பார்த்து பழக்கப்பட்ட சித்தார்த்தும் மலையாள வாடையுடன் செந்தமிழ் பேசும் ப்ரித்வியும் அந்த கதாபாத்திரங்களில் இருந்து அன்னியப்பட்டே இருக்கின்றனர்.
கதாநாயகிகளாக வருபவர்களில் வேதிகா மட்டும் பளிச்சென்று இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். அனைக்கா சோட்டிக்கு கடைசி படமாக இது அமையாமல் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.
நாசர்,தம்பி ராமையா,பொன்வண்ணன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்பொழுதும் போல் நன்றாக செய்துள்ளனர்.
மனதை கனமாக்க வேண்டிய அந்த க்ளைமேக்ஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து விடுவதே படத்தின் பெரிய தோல்வி. இப்படியே பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. படத்தில் இருக்கும் மிகச்சில நல்ல காட்சிகளையும் மிதமிஞ்சி நிற்கும் அறுவை காட்சிகள் மறைத்து விடுகின்றன.
1930களில் நடைபெறுவதாக இருக்கும் கதையில் வேகமான திரைக்கதையை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கையாண்ட 'இருவர்' இன்றளவிலும் பேசப்படவில்லையா? அந்த மாதிரியான உருவாக்கம் கா.தலைவனில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே..
// சிவனின் நேரடி ஏஜென்ட்// என்னடா நம்மீது இப்படி ஒரு பதிவா இதன் காரணம் எதுவாக இருக்கும் என ஒரளவுக்கு கணித்தது சரிதான் போல. நாயன்மார்கள் வரிசையில் இளையராஜாவை சேர்க்கலாமா வேண்டாமா என்ற எனது அபிப்ராயத்தை உணர்வுப் பூர்வமான தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன். இன்னொரு அன்பருக்கு அத்திரியிலேயே சொன்னதுபோல கொஞ்சம் கொஞ்சமாக எனது பார்வைகளை அங்கே பதிய வைக்க உள்ளேன். நாயன்மார்கள் ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் நூல்கள் மூலமே வாசித்திருக்கிறோம். தர்க்கத்திற்கு இடம்கொடுக்காமல் அதை அப்படியே பக்திபூர்வமாக ஏற்றுக்கொண்டு உயர்ந்த இடத்தில் வைத்துவிடுகிறோம். அதுபோலவே ராஜாவின் பக்திப் பாடல்கள் என வரும்போது இசை என்ற தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு மற்ற பிற தர்க்கங்களுக்கு இடம்கொடுக்காமல் உரையாடலாம். நாளைக்கே ( எப்போது எனத் தெரியா!) ரஹ்மானும் தன்னை மிகவும் தொடர்புபடுத்திக் கொள்ளும் இஸ்லாமிய பக்திமார்க்கத்திற்கு பலவித இசைப் பாடல்களை உருவாக்கும்போது அவரையும் இதுபோலவே உயர்ந்த இடத்தில் இன்னொருவர் வைத்து அழகுபார்க்க முடியும். காலமும் ஆக்கங்களும் மலரட்டும். ரஹ்மான் திரியில் ராஜாவைப் பற்றி மேலும் எழுதவேண்டாமென்று நினைக்கிறென்.
இந்த மாதிரியான படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைக்க ஒரு பெயர் தேவைப்பட்டது. அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே ரஹ்மான் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். டைட்டில் கார்டில் அவர் பெயர் வரும்போது எழுந்த கரகோஷமே அதற்கு சாட்சி. வேறு யார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும் இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த விஷயத்தில் வசந்தபாலன் வெற்றி பெற்றுவிட்டார். :)
படம் முழுக்க ரஹ்மானின் இசைத் தோரணம்தான். ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் படத்தை தூக்கிப் பிடிப்பது அவரின் பாடல்களும், பின்னணி இசையும்தான். எனக்கென்னவோ அவர் மெருகேறிக் கொண்டே இருப்பது மாதிரி ஒரு உணர்வு.
பரத்வாஜ் ரங்கன் சொல்வது போல் அந்தக் கால இசையை அப்படியே கொடுத்திருந்தால் இப்போதைய ரசிகர்கள் திரையை கிழித்து விட்டிருப்பர். ஆனால் ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் இலக்கணம் மீறாத இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மான் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.
காவியத்தலைவன் - காவியம் இல்லை. ஆனால் தலைவன் (ரஹ்மான்) இருக்கிறார். :)
திரைப்படங்களுக்கு நன்றாக இசையமைத்து அதற்கு ஊதியமும் பெற்றுக் கொண்டவருக்கு, அதன் மூலம் பேரும் புகழும் பெற்றவருக்கு இந்த ஸ்தானம் உகந்ததல்ல. தமிழில் சரியான சொல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதைத்தான் ப்ளாஸ்ஃபெமி என்பார்கள். நாயன்மார்கள் பலர் மிகவும் எளியவர்கள். இறைவன் மேல் கொண்ட கலப்படமற்ற, எதையும் எதிர்பார்க்காத பக்தியாலேயே அந்த உயர்ந்த இடத்தை அவர்கள் எட்டினர். விடமுண்ட கண்டனின் திருக்கோயில்களிலும் அவர்களுக்கு இடம் கிடைத்தது. ராஜாவிற்கு தகுதி இருக்கிறதா என்பது பிறகு, அவருக்கு அந்த தகுதியை அளிக்க முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
நான் செய்வது தர்க்கமல்ல. ஒரு சிவபக்தனின் வேதனையின் வெளிப்பாடு. நீங்கள் கூறுவது போல் இத்திரி இவ்விவாதத்திற்கு உகந்த இடமல்ல. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் ஒன்றே ஒன்று. இசையை விடவும் மேலானது அன்பு. ஏனென்றால் அன்பே சிவம். அந்த அன்பை போதிக்காமல் ஒருவருக்கு தனது "மேலான ரசனை"யின் மேல் கர்வத்தை மட்டுமே வரவழைக்கும் இசை ஒரு சிறந்த இசையாக முடியாது. அதை அமைப்பவர் திருத்தொண்டராகவும் முடியாது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அஜய், பார்த்துட்டீங்களா? நான் இருக்கும் ஊரில் படம் வெளியாகவில்லை. ஆனால் உங்கள் விமர்சனத்தை படிக்கும் போது, படம் சீக்கிரம் தொலைக்காட்சிக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது. அப்போது இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் போல:-d
அனைகா சோதிக்கு ரசிகர் மன்றமே அமைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே:-d அந்தளவுக்கா அந்த பொன்னு நல்லா நடிச்சிருக்கு?
ரஹ்மான் தவிர யார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும் படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்காது. "காயாத கானகத்தே" என்று ஹரிசரன் பாடியிருந்தால் நீங்கள் கூறியது போல் திரையரங்க உரிமையாளர்கள் பாடு கஷ்டம்தான். அந்த வகையில் ரஹ்மானின் தேர்வு மிகச் சரியானது.
நெத்தியடி.Quote:
ஆனால் ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் இலக்கணம் மீறாத இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மான் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.
காவியத்தலைவன் - காவியம் இல்லை. ஆனால் தலைவன் (ரஹ்மான்) இருக்கிறார். :)
சந்தேகமே இல்லை. 90களின் ரஹ்மான் பாடல்கள் போல் இல்லை என்று பலர் அங்கலாயிக்கின்றனர் (90களில் ரஹ்மான் இசை எவ்வளவு விமர்சிக்கப்பட்டது என்பதும் எங்களுக்கு தெரியும். காய்ச்ச மரம் தானே கல்லடி படும்:-d). எனக்கு என்னவோ ரஹ்மானின் இசை இப்போது மேலும் பிடித்திருக்கிறது. பின்னனி இசையில் அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் தோன்றுகிறது.
குறுந்தகடில் பதிவான பாடல்கள் தவிர சிறிது சிறிதாக பல பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதாக படித்தேன். அவை எப்படி உள்ளன?
தோழர்,
அனைகா பார்க்கவும் நன்றாக இல்லை. நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை. 1,2 படங்கள் நடித்தால் கொஞ்சம் சம்பாதிக்கவாவது செய்யலாமே என்கிற ஆதங்கம்தான் அப்பதிவு. :)
சிறிய பாடல்கள் என்று எதுவும் இல்லை. அல்லி அர்ஜூனா பாடல்தான் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது
True...valid point.......... If i remember right, for Karuthamma film review, vikatan had said.... gramathil maati kondu irukkum pattanathu Pomeranian naai kutti pola Rahman-in music thavikkirathu...... this hurted Rahman himself very much since one of his favorite score was poraale ponnuthaayi from that film
For Duet songs, Kungumam had said something like pulithu pona paadalgalai thanthirukkirar (Kalki for the same movie said, forget watching the film..instead go and buy an audio cassette and enjoy this film)
These are somethings that i can remember....... not sure what was the initial take on films like May Maadham, etc
Watched KT with NOV & Mahen... just average :( Poor casting & second half independent porattam big sothapal :banghead:
Media ellam nalla review than varuthu!ingga yen eppadi..
கருத்தம்மா இசைக்கு என்ன குறை என்று இன்று வரை எனக்கு புரிந்ததில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் கிராமத்தில் வாழும் மனிதர்களே அந்த இசையை ஏற்றுக் கொண்டனர். அந்த படத்தில் வேலை செய்த "நாம் தமிழர்" கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கூட கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட "போறாளே பொன்னுத்தாயி" பாடலை மிகவும் பாராட்டியிருந்தார். ஆனால் நகரத்தில் வாழும் சில அதிமேதாவிகளே அதை விமர்சித்தனர். விகடன் தனது தரத்தை இழந்து பல காலம் ஆகிவிட்டது, அதாவது 90களுக்கு முன்பே. இதில் ரஹ்மானை வெறுக்கும் சிலர் அவரின் வெற்றிக்கு காரணம் அவருக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமே அன்றி அவரது இசை திறமை அல்ல, அவர் ஒரு டெக்னீஷியன் தான் இசையமைப்பாளர் அல்ல என்று உளறிக் கொண்டிருக்கின்றனர்.
"டூயட்" ஒரு மொக்கை படம். ஆனால் அதன் இசை இன்று வரை பாராட்டப்படுகிறது. அவற்றை புளித்து போன பாடல்கள் என்று விமர்சிப்பது விமர்சிப்பவரின் அறியாமையையே பறை சாற்றுகிறது.
உண்மையை கூற வேண்டுமென்றால், 90களில் ரஹ்மானின் இசையை தரமற்ற முறையில் தேவையில்லாமல் விமர்சனம் செய்த ஊடகங்களே அதிகம். அதையும் தாண்டி அவர் வெற்றி பெற்றதற்கு காரணம் ரசிகர்கள் அவரது இசையை விரும்பியதால்தான்.
சிறிது மாதங்களுக்கு முன் கூட, ஒரு பிரபல வார இதழில், "அஞ்சான்" படம் நன்று எனவும், "ஜிகர்தண்டா" ஓகே எனவும் ஒரு "விமர்சனம்" வந்தது. ஆனால் ரசிகர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அந்த படங்களின் வெற்றி தோல்வியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ரசிகர்கள் ஒன்றும் ஆட்டு மந்தைகள் அல்ல. சிலர் அப்படி இருக்கலாம். அதற்காக அனைத்து ரசிகர்களும் ஊடகங்களின் மதிப்பீட்டையும், விளம்பரங்களை வைத்து மட்டும் ஒருவரை ஏற்றுக் கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ இல்லை. அதுவும் ரஹ்மான் பெற்ற மாபெரும் வெற்றிக்கு விளம்பரம் மட்டும் தான் காரண*மென்று சிலர் கூறுவது கேனத்தனம்.
media solradhu vachu ippo entha mudivum edukka mudiyaathu anand sir. "anjaan" supernnu sonnaanga. padam marana mokkai. ippo ellam they are paid to say nice things about the movie.
naan kelvipatta varaikkum KT oru nalla attempt but screenplay romba slow, adhanaala padam bore appadinnuthaan. it might be artistically nice but definitely not a entertainer (and obv I don't mean and/or expect a typical masala movie). AFAIK, Rahmanin isai marupadiyum "vizhalukku iraitha neer"dhaan:-(
rendum illainna eppadi. vera edhaavadhu "wood"ukku poga vendiyathuthaan, kollywood pizhaichu pogatume:-) kollywoodla thaan yerkanave nadikkavum theriyaama paarkavum sumaaraa irukkira nadigaigal nirayaa irukkaangale. edhukku innonnu?
I know Vedika is a good actress. She did a great job in "Paradesi". Most of the credit for that must go to Bala but she must have learnt a lot from that experience. Here is hoping she gets more opportunities to showcase her acting skills. She is a big fan of thalaivar's music too, btw:-)
etho eppadiyo..yaarumilla song, song of the year 2014
https://www.youtube.com/watch?v=idZ-5amTsHA
“Kaaviyathalaivan”… A great premise that doesn’t fulfill its potential
https://baradwajrangan.wordpress.com...its-potential/
Kaaviya Thalaivan - stage drama nu oru premise eduthuttu, there were only few sequences dedicated for stage plays.... and those few scenes showed why the drama sequences were limited........ Sivaji sir padam lam paarthuttu, these stage dramas in a film dedicated to that art looked like a kid show only......... Sid looked good in that Bhagat singh role in the Rang De basanti film but here in this film there was something missing....... some one like a Dhanush could have done justice to that character........ Prithvi role than irukkarathulaye scope niraya ulla role......... to enact as some one who does lots of hardwork and does so many right things but still does not give natural performance is a very tough thing......... i dont think he did that justifiably...
songs were too good........ but i am not sure if the BGM was as good as the movie demanded....... may be multiple viewing would make things clear
Sify review la 'music out of the world'dame..konjam killi paatukiren..
எதிர்பார்ப்பு குறைவாக இருந்ததாலோ என்னவோ படம் ஓரளவு பரவாயில்லை என்றே தோன்றியது. திரைக்கதை ஆமை வேகம்தான் என்றாலும், ஒளிப்பதிவும் ரஹ்மானின் இசையும் நன்றாக இருந்தது. எனக்கு பின்னனி இசையும் பிடித்திருந்தது. பாடலாக கேட்கும்போது அவ்வளவு ஒட்டாத பாடல் கூட படத்தோடு பார்க்கும்போது நன்றாகவே இருந்தது.
பொதுவாக இரண்டாம் பாகமும், குறிப்பாக பிருத்விராஜும் சித்தார்த்தும் சந்தித்துக் கொள்ளும் கடைசி காட்சியும் சொதப்பல். சொல்லவே தேவையில்லை. இந்த படத்திற்கு மிகப் பெரிய பலமே ரஹ்மானின் இசை, இல்லை, இல்லை, "சங்கீத இயக்கம்"தான்:**) பின்னனி இசை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்சியை பின் தள்ளாமல் அளவோடு இருந்தது சரி என்றே எனக்கு பட்டது.
நல்ல தைரியமான ஒரு படைப்புதான். இப்போது வரும் நிறைய மசாலா படங்களுக்கு மத்தியில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். அதற்காகவே படக்குழுவினருக்கு பாராட்டுகள்.
See the ad kaviya in malaysia nanban news paper today..'musical hero'puyal la vida ithu nacchu.
Anand, newspaper cuttinga inga post pannungalen.
"Musical Hero" or "Musical Storm"? puyal vanthu oru kaattu kaattittu poidum. avar yerkanave storma vanthu 22 varushathukku mela aachu. ennikko vera title vachirukkanum. Thamizhanukku title vaikka solliya tharanum. aanaal ennavo thalaivar titlea mattum innum yaarum maathave illai. "musical hero" nallave irukku.
isaipuyal was conferred by Sun TV i suppose, in the first program done on A.R.Rahman for the pongal of year 1994......... not sure though...... i dont think he is interested in this title et.al....... musical hero inniku nu illa...1999 la kandukondein release laye Ajith sonnaru... intha padathukku naano, illa abbas oh illa mamooty oh hero kidayathu, the real hero of this movie is A.R.Rahman than........ nu...........and it was coming from heart...
AR Rahman's act reconfirms his humility...
Dec 07, 2014
AR Rahman, the pride of India, despite his numerous awards, including the two Oscars, has always stayed humble and grounded. Last night, his status update, in his official Facebook page, only reconfirmed his humility. It read:
Love and Respect to my amazing team members for having worked with me in these last four months tirelessly and sometimes with little sleep, yet fueling with undying passion and commitment for the projects - PELE, Kaaviyathalaivan, I, Everest and Lingaa.
Enjoy the rest of this month and catch up with your families..
May God shower happiness on you and your loved ones..
May God shower happiness on you too, Rahman Sir.