எங்க ஊர் ராஜா - Thanks to Mr.Murali for the Excellent piece
Printable View
எங்க ஊர் ராஜா - Thanks to Mr.Murali for the Excellent piece
Dear Subramanian,Quote:
Not sure if this was discussed earlier here.....
It has become a routine for the current crop of heroes (and affordable for the producers / directors) to do one film at a time that makes it easier for them to dedicate themselves to that role, study their character, make the appropriate changes to their physique, voice modulation etc and deliver a good performance on screen. While even this is pretty hard and takes a lot out of the particular actor...... it is really hard to imagine that NT while doing multiple films at the same time was able to do the same kind of homework and prepare himself both mentally and physically..and that too to switch between diametrically opposite roles and fit into that character (from a icy cool Madhan character in Galatta Kalyanam to a egoist talented nadhaswara expert shanmuga sundaram)....... to think of it today, it is humanely impossible but NT was able to pull it off for a very long time......... The Hardwork he had put in while commendable could also be shared for the general public to take cue from NT on what it takes to excel in each one's field.
You have come to the exact point. This is what we the fans of NT here, in this thread, have been emphasizing. Mr. Y.Gee.Mahendra, in his talk show in Vasanth TV, shared the same views. And his words can be authenticated since he is from the same profession. YGM had always maintained that the "switching" off and on various characters was possible only to NT. Imagine, NT was doing three shifts a day and all the three were contrasting. In fact, it will be extremely difficult for the crew including the Director, to come out of those characters, but not NT. As a Fan, I too had the opportunity to witness a few shootings. Until the very second he takes the camera on, he would be a common man, but once he puts on his robes and the camera roles on, you can not find the Sivaji Ganesan, the man. And the very next second the take is over, he would return to normalcy, which we can not. There lies his success and prophecy.
Raghavendran
மிகச் சரியான அப்ஸர்வேஷன் சுப்பு,
நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயம் ஏற்கெனவே இங்கு பேசப்பட்டிருந்த போதிலும் இப்போது நீங்கள் சொல்லும் விஷயம் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. முரளி அவர்கள் கூட இதுபற்றிச் சொல்லும்போது, ராமன் எத்தனை ராமனடி படத்தில் 'சித்திரை மாதம்' பாடலை காலையில் ஒரே ஷெட்யூலில் முடித்து விட்டு மதியம், எங்கிருந்தோ வந்தாளுக்காக பைத்தியம் ரோலில் புகுந்துகொண்டார் என்று சொல்லியிருந்தார். அதேபோல காலையில் சாப்பாட்டு ராமனாக சிறுவர்களுடன் 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிவிட்டு, மதியம் பிரிஸ்டிஜ் பத்மனாபனாக பிராமண பாஷை சகிதம் மாறினார்.
படத்தில் பார்க்கும்போது நமக்கு இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக ஓடும். ஆனால் அது எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை இடங்களில் படமாக்கப்பட்டதோ. ஆனால் ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக அந்தந்த ரோல்களுக்குள் புகுந்துகொள்வதற்கு எவ்வளவு திறமை வேண்டும்?. எல்லாப்படங்களிலும் ஒரே மாதிரி நடித்துவிட்டுப்போகிறவர்களுக்கு இது சிரமம் இல்லை. ஆனால் ஒவ்வொரு ரோலுக்கும் மிக அதிக வித்தியாசம் காட்டும் இவருக்கு எப்படி இது சாத்தியமானது?.
அதேபோல ஒரு நண்பர் இங்கு குறிப்பிட்டதைப்போல, திருவிளையாடலில் 'பாட்டும் நானே' பாடல் காட்சியின்போது, ஒரு சிவாஜி பாடிக்கொண்டிருக்க, அல்லது வீணை வாசித்துக்கொண்டிருக்க, அல்லது புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்க, அல்லது கொன்னக்கோல் சொல்லிக்கொண்டிருக்க, அல்லது மிருதங்கம் வாசித்துக்கொண்டிருக்க..... அதற்கேற்றாற்போல மற்ற நால்வரும் தங்கள் முகபாவங்களையும் உடல் அசைவையும் காண்பித்துக்கொண்டிப்பதைப் பார்க்கும்போது அது படமாக்கப்பட்ட விதம் பிரமிப்பூட்டுகிறது.
நிச்சயமாக அதில் ஒவ்வொரு ரோலுக்கும் முழுப்பாடலையும் ஓடவிட்டுப்படமாக்க்கி பின்னர் இணைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். இன்றைக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸை கையில் வைத்துக்கொண்டு செப்படி வித்தை காட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் கூட இது பிரமிப்பூட்டும் சாதனையே.
பேசப்பேச வியந்துகொண்டே போகலாம். அவ்வளவு விஷயம் இருக்கு இவரிடம்.
டியர் முரளி சார்,
எங்க ஊர் ராஜா திறனாய்வு வழக்கம் போல் அருமை, ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம், இது போல NT அவர்களின் பிரபல படங்களை ஆய்வு செய்யும் அதேவேளையில் அதிகம் பேசப்படாத மற்றும் dvd கிடைக்காத தங்கை, பாலாடை, அன்பளிப்பு, தங்கைகாக, அருணோதயம், தாய், சத்யம் போன்ற படங்களையும் ஆய்வு செய்யும்படி கேட்டுகொள்கிறேன். தங்கை,சத்யம் திறனாய்வு படித்தபோதும் தமிழில் படிப்பது போல் திருப்தி இல்லை.
மீண்டும் சொல்வது என்னவென்றால் இந்த வேண்டுகோள் என் கருத்தே தவிர, என்னை நீங்கள் தவறாக எண்ணிவிடவேண்டாம்.
டியர் முரளி சார்,
'எங்க திரி ராஜா'வாகிய நீங்கள் "எங்க ஊர் ராஜா"வை அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.
கதை, Double நடிகர் திலகம் உள்ளிட்ட அனைவரது performance, பாடல் & பாக்ஸ்-ஆபீஸ் என ஒவ்வொரு பாகப்பதிவும் அருமை மட்டுமல்ல அசத்தல் !
எங்க ஊர் ராஜாவுக்கு முன்னும்-பின்னும் போட்டிப் படங்களாக தில்லானா, லக்ஷ்மி கல்யாணம், உயர்ந்த மனிதன், அன்பளிப்பு ஆகிய புதிய படங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், சற்றேறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு - திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கத் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்த நேரம் - அக்மார்க் புத்தம் புதிய படமாக நமது நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" சென்னை மற்றும் தென்னகமெங்கும் 15.8.1968 சுதந்திரத் திருநாள் முதல் வெளியாகி எல்லா புதிய படங்களோடும் போட்டாபோட்டி போட்டதையும் அவசியம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெளியீட்டில் "பராசக்தி" சென்னையிலும் இதர இடங்களிலும் இணைந்த 100வது நாள் விழாவும் கொண்டாடியது. இது தவிர அந்தந்த நேரங்களில் வரும் அவரது பழைய படங்கள் வேறு போட்டியைக் கடுமையாக்கும்.
சிக்கலாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது வடிவாம்பாள் மாத்திரமல்ல, விஜய ரகுநாதரும் தான் ! 14 அரங்குகளில் தனது வாசிப்புக்கு (நூறு நாள்) விழாக் கொண்டாடியிருக்க வேண்டிய சண்முகசுந்தரம் 7 அரங்குகளாக இறங்கியதற்கு சேதுபதியும் கொஞ்சம் பாதகாதிபதியாக வந்ததனால் தான். சேலம், கரூர், கடலூர், பாண்டி, குடந்தை, தஞ்சாவூர், நெல்லை என இந்த எழு ஊர்தோறும் எண்ணிக்கையில் 86ஐ எட்டிய நேரத்தில் சிக்கலார் தனது சங்கீதத்தை விஜய ரகுநாதருக்காக விட்டுக் கொடுத்தார்.
நமது காவியங்களே நமது காவியங்களுக்குப் போட்டி, என்ன செய்வது !
அன்புடன்,
பம்மலார்.
Just imagine.... had there been restrictions in place like how it is today (there should be a min of 1 month gap between a particular actor's movies and if the first released movie is a success wait for some more months)..... Mudhal Mariyaadhai would have been releasing wide across tamilnadu for 2011 Diwali only :)
முரளி சார்,
உங்கள் எழுத்துக்களில் 'எங்க ஊர் ராஜா'வை மீண்டும் படித்தோம். முழுமையான ஆய்வு மற்றும் படம் தொடர்பான செய்திகள் அனைத்தும் அருமை. அதென்ன அந்தக்காலக்கட்டத்தில் ஒரு பெரிய நடிகரின் படங்கள் 15 நாளைக்கொரு படம், 20 நாளைக்கொரு படம் என்று வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்?. ஏ.எல்.சீனிவாசனும், ஏ.வி.எம்.செட்டியாரும் கொஞ்சம் மனது வைத்து தங்கள் படத்தை தாமத்தித்திருந்தால், எங்க ஊர் ராஜாவும் 100 என்ற வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கும். ஒருபக்கம் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. அடுத்த ஆண்டு (1969) துவக்கத்திலும் புற்றீசல்கள் போல வரிசையாகப்படங்கள். அந்த ரேஸில் தங்கச்சுரங்கம், அஞ்சல்பெட்டி 520, நிறைகுடம் போன்ற நல்ல படங்கள் அடிபட்டன. (காவல் தெய்வமும், குருதட்சணையும் தனியாக வந்திருந்தாலும் அவ்வளவுதான் ஓடியிருக்கும்).
உங்கள் பதிவைத்தொடர்ந்து அப்படம் சம்பந்தமாக கூடுதல் தகவல்களைத் தந்த ராகவேந்தர் சார், சாரதா, பம்மலார் ஆகியோரின் பதிவுகளும் சுவையாக உள்ளன.
நேற்றிரவு வசந்த் தொலைக்காட்சியில் முதன்முறையாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் 'நீதியின் நிழல்' படம் பார்த்தேன். இளைய திலகத்தின் நடிப்பு நன்றாக இருந்தது. நடிகர்திலகம் கௌரவத்தோற்றத்தில் நடித்திருந்தார். திரு வி.சி.சண்முகம் அவர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட கடைசிப்படம் என்று நினைக்கிறேன்
இன்றைய முன்னணி நடிகர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு படம் சராசரியாக நடிக்கிறார்கள். வித்தியாசமான கேரக்டர் என்று வரும்போது கூடுதலாக கேரக்டர் ஸ்டடி, ஹோம் ஒர்க் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மேல் கூட இடைவெளி வந்துவிடுகிறது
ஆனால் 250 படங்களில் கதாநாயகனாக நடிக்க nt க்கு ( 1952 முதல் 1985 வரை ) 33 ஆண்டுகள் தான் தேவைப்பட்டது. அதாவது ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் உள்ள சராசரி இடைவெளி வெறும் 48 நாட்கள் தான்.
இந்த 48 நாள் இடைவெளியில் தான் இவ்வளவு வித்யாசமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் இரட்டை வேடம், மூன்று வேடம் வேறு.
இவ்வளவு ஏன், 9 வேடங்களில் நடித்த நவராத்திரி படம் வெளிவந்த அதே நாளில் இன்னொரு படம் முரடன் முத்துவும் வருகிறது. முந்தைய படமான புதிய பறவைக்கும் இந்த இரு படங்களுக்கும் உள்ள இடைவெளி 51 நாட்கள் மட்டுமே.
51 நாட்களில் - 10 ௦ மாறுபட்ட வேடங்கள் செய்ய முடிந்திருக்கிறது. . அதனால்தான் அவரை பிறவி நடிகர் என்கிறார்கள்.