ஸ்டைல் சக்கரவர்த்தியின் அவன் தான் மனிதன் படத்தைக் காண விருக்கும் நெல்லை ரசிகர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தகவலைத் தந்த ராம ஜெயம், முத்துக் குமார், மற்றும் பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்
Printable View
ஸ்டைல் சக்கரவர்த்தியின் அவன் தான் மனிதன் படத்தைக் காண விருக்கும் நெல்லை ரசிகர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தகவலைத் தந்த ராம ஜெயம், முத்துக் குமார், மற்றும் பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்
அன்புள்ள திரு ராகவேந்தர் அவர்களே,
தாங்களும், பம்மலாரும் இந்தத் திரியின் வேகத்தையும் சிறப்பையும் சிகரத்திற்கே இட்டுச் சென்று விட்டீர்கள்.
எழுபதுகளின் இறுதியில், பொம்மை இதழில், காலஞ்சென்ற a.s.a. சாமி அவர்கள் அவருடைய படங்கள் பற்றி நீண்ட கட்டுரையை தொடராக எழுதி வந்த போது, "துளி விஷம்" படம் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். சிவாஜி கணேசன் அவர்களின் அனல் பறக்கும் வசன நடிப்புக்குப் பெயர் போன படம். இந்தப் படத்தில், தர்பாரில், அவருக்கும் கே.ஆர். ராமசாமி அவர்களுக்கும் இடையே நடக்கும் வசனப்போர் ஒன்று இடம் பெறும். அந்தக் காட்சி அவ்வளவு அற்புதமாக இருக்கும். நடிகர் திலகம் மற்றும் ராமசாமி அவர்களும் நடத்திய வசனப்போர், மயிர்க்கூச்செரியும்படி அமைந்து, ரசிகர்கள் அந்தக் காட்சியில் தங்களை மறந்து, அதற்கு முன் நடந்த கதையை மறந்து, அதற்குப்பின் நடக்கும் கதையில், மனதை செலுத்தமுடியாமல் போனது. அதனாலேயே, அந்தப் படம் பெரிய வெற்றியை அடைய முடியாமல் போனது என்று எழுதியிருந்தார். என் தந்தையும் இந்தப் படத்தைப் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்லுவார். (அவர் mgr ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.).
நினைவு கூர வைத்ததற்கு நன்றி.
1954 - நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில், மிக மிக முக்கியமான வருடம். இந்த வருடத்தில் தான் அவர் எத்தனை அற்புதமான படங்களில், வித்தியாசமான வேடங்களில் அற்புதமாக நடித்தார்! மனோகரா, இல்லற ஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, துளி விஷம், கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி மற்றும் எதிர்பாராதது. அனைவரும் எதிர்பார்த்தது போல், அவரே அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றார். எல்லோரும் அவர் "மனோகரா" படத்திற்குத் தான் விருது வாங்குவார் என்று நினைத்த போது, மிகச் சரியாக, விருதுக் கமிட்டியினர், "தூக்குத் தூக்கி" படத்திற்குக் கொடுத்தனர். அதில்தான், அவருடைய நடிப்பு அனைத்து அம்சங்களிலும் அற்புதமாகப் பரிமளிக்க வழி வகுத்ததால்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள பம்மலார் சார்,
தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி. 'யாம் பெற்ற இன்பம்' என்று தன்னடக்கத்தோடு ஒரே வரியில் நீங்கள் முடித்துக்கொண்டாலும் உங்கள் சேவை மகத்தானது.
ஒருபடம் 100 நாட்களைக்கடந்து ஓடியது என்பதற்கு செய்தித்தாள் விளமபரங்களைப்போல் ஆதாரங்கள் வேறில்லை.
முன்பு நமது முரளி சீனிவாஸ் அவர்கள் நடிகர்திலகத்தின் சாதனைகளைத் தொடராக எழுதியபோது, 'சும்மா இஷ்ட்டத்துக்கு அளக்கிறீர்களே இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா' என்று சிலர் கேள்வியெழுப்பினார்கள். அந்த கேலிகளை முறியடிக்கத்தான் இப்போது திகட்ட திகட்ட ஆதாரங்களை வழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இம்மாதம் (ஜூலை) 3-ம் தேதி துவங்கி, இதுவரை எத்தனை படங்களின் '100-வது நாள்' விளம்பரங்கள், அவை ஓடிய தியேட்டர் பெயர்களுடன் அணிவகுத்து வந்து விட்டன....
சவாலே சமாளி
தெய்வ மகன்
சிவந்த மண்
எங்கள் தங்க ராஜா
கை கொடுத்த தெய்வம்
கௌரவம்
அந்தமான் காதலி
தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல் (வெள்ளி விழா)
இவற்றோடு கூடவே அன்பு, துளிவிஷம், குழந்தைகள் கண்ட குடியரசு, தேனும் பாலும், திருவருட்செல்வர், தர்மம் எங்கே போன்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள். ரொம்ப ரொம்ப அற்புதம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி.
இங்கும் அதே நிலைதான். நானும் லோயர் மிடில் கிளாஸ்லிருந்து வந்தவன்தான். அப்போதெல்லாம் தினமும் தினத்தந்தி, தினகரன் செய்தித்தாள்களை கார்ப்பரேஷன் லைப்ரரியில்தான் படிக்க முடியும். பேசும் படம், பொம்மை, பிலிமாலயா பத்திரிகைகளை உடனுக்குடன் சுடச்சுட படிக்க முடியாது. மாநகராட்சி நூலகங்களில் அவற்றை வாங்க மாட்டார்கள். யாராவது பணக்கார மாணவர்கள் கொண்டுவந்தால் ஓசியில் படிப்பதுதான். சொந்தமாக வாங்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்கள் கழித்து பழைய பேப்பர் கடைகளுக்கு வரும்போதுதான் வாங்கிப்படிக்க முடியும். ஒரிஜினலாக 90 பைசா விலையுள்ள 'பொம்மை' அங்கு 25 பைசாவுக்குக் கிடைக்கும்.
இதற்காக நான் தொடர்ந்து சென்னை த்ம்புச்செட்டித்தெரு, பவளக்காரத்தெரு சந்திப்பிலுள்ள பழைய பேப்பர் கடையில்தான் வாங்குவது வழக்கம். நான் தொடர்ந்து பேசும் படம், பொம்மை இதழ்களையே வாங்குவதைக்கண்ட கடைக்காரர் திரு ராமசாமி, இம்மாதிரி புத்தகங்கள் வரும்போது அவற்றை வெளியில் தொங்க விடாமல் எனக்காக தனியே எடுத்து வைத்து விடுவார்.
படம் பார்க்கச்செல்லும்போதும் அப்படித்தான். கிரௌன் தியேட்டரில் 1.25 டிக்கட் ஃபுல் ஆகிவிட்டால், அதற்கடுத்த 1.66 கட்டணத்தில் போக காசு பத்தாது. திரும்பி வந்து விட்டு, அடுத்த காட்சி அல்லது அடுத்த நாள் மீண்டும் 1.25 கியூவில் போய் நிற்பது வழக்கம். ஆனால் எப்படியேனும் நடிகர்திலகத்தின் படம் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவது வழக்கம். நான் நன்றாகப்படித்து நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணியதற்கும் மறைமுகமாக நடிகர்திலகம் காரணம் எனலாம்.
அதாவது நான் நிறைய சினிமா பார்ப்பதை வீட்டில் பெற்றோர் கண்டிக்காமல், தடுக்காமல் இருக்க வேண்டுமானால் படிப்பில் நல்லமாதிரியாக இருக்க வேண்டும். மார்க் ஷீட்டில் நல்ல மார்க்குகளைப் பார்த்து விட்டால் மற்ற குறைகள் பெரிதாகத் தோன்றாது என்று கணக்குப்போட்டேன். அதுபோலவே நடந்தது. நன்றாகப்படித்து தொடர்ந்து முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்துகொண்டிருந்ததால், 'சினிமா பார்த்தாலும் பையன் படிப்பில் சோடை போகலை. அதான் நல்ல மார்க் எடுக்கிறான்ல அதுபோதும், மற்றபடி எப்படியும் போகட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.
பின்னர் கையில் ஓரளவு காசு புழங்கத் துவங்கியபிறகுதான், பஸ் ஏறி மவுண்ட் ரோடு வந்து ரசிகர்களின் தாய் வீடான 'சாந்தி ஜோதி'யில் சங்கமமாகத்துவங்கினேன். பின்னர் நடந்தவற்றை அவ்வப்போது இங்கே சொல்லியிருக்கிறேன். இனிமேலும் சொல்லிக்கொண்டிருப்பேன்.
சுவாமி/ராகவேந்தர் சார்,
ஒரு யாத்ரா மொழி 1997 ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானதாக நினைவு. ஒரு யாத்ரா மொழி திரைப்படத்தை பொறுத்தவரை முதலில் வேறு கதையை படமாக்குவதாக இருந்தது. 1995-ல் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்க, தந்தை கதாபாத்திரம் ஒரு நோயினால் தாக்கப்பட, அது குணமாக கூடிய வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் தந்தை மிகுந்த உடல் வேதனையை அனுபவிக்க, கருணை கொலை என்ற தீர்வு மகன் முன்னால் வைக்கப்பட, தந்தை மீது உயிரையே வைத்திருக்க கூடிய மகன் அனுபவிக்க கூடிய மன வேதனையை மையமாக கொண்ட படமாக உருவாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஹெவி சப்ஜெக்ட்-ஐ ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் அந்த கதை ட்ராப் செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக பிரியதர்சன் எழுதிய இந்த கதை தேர்வு செய்யப்பட்டு அதை பிரதாப் போத்தன் இயக்கினார். 1996 ஜனவரியில் பொள்ளாச்சி பகுதியில் வைத்து படப்பிடிப்பு தொடங்கிய இந்த படம் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன் அவர்கள் [இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். contractor ஆக வரும் நடிகர் திலகத்திடம் தனது ஆட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என தகராறு செய்து அடி வாங்கி கொண்டு போகும் யூனியன் தலைவராக வருவார்] சற்று பொருளாதார சிரம தசையில் இருந்ததால் படப்பிடிப்பு இடை இடையில் நின்று போய் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. உடல் நலம் ஒத்துழைக்காத அந்த காலக் கட்டத்திலும் கூட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று தகவல் சொல்லியவுடன் உடனே வந்து நடிகர் திலகம் நடித்துக் கொடுத்ததை இப்போதும் மேனனும் லாலும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். [மாப்பிளை, நீங்க பிஸி ஆர்டிஸ்ட். உங்களுக்கு கால்ஷீட் கிளாஷ் வந்துடக் கூடாது. நான் கரெக்டாக வந்திர்றேன் என்று லாலிடம் சொல்வாரம் நடிகர் திலகம்].
இன்னொரு குறிப்பிட்ட தக்க விஷயம் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் நடிகர் திலகன் அவர்கள். தன்மானத்தை பெரிதாக மதிக்கும் திலகன், நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதற்காக ஒரே ஒரே காட்சி என்ற போதிலும் தானே வலிய சென்று தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடித்ததை இப்போதும் பெருமையுடன் சொல்வார். அது போன்றே நெடுமுடி வேணு அவர்களும் இந்த படத்தில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்ததை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.
இனி மீண்டும் ரிலீஸ் தேதிக்கு வருவோம். [அப்போது நான் கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்] அந்த வருடம் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் வந்ததாக நினைவு. அந்த நேரத்தில் மோகன்லாலின் மற்றொரு படமான சந்திரலேகா வெளியாவதாக இருந்தது. மம்மூட்டி நடித்த களியூஞ்சால் [விளையாட்டு ஊஞ்சல் என்று தமிழில் மேலோட்டமாக சொல்லலாம்] மற்றும் ஜெயராம், சுரேஷ் கோபி போன்றவர்களின் படங்களும் வெளியாவதாக இருந்ததால் திரை அரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே திரையிடப்பட்டது இந்தப் படம். விளம்பரமின்றி, பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் மலையாள திரைப்பட உலகம் சார்பில் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு ஒரு பெரிய பாராட்டு விழா அதே ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி [24-08-1997] அன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் நடைபெற்றது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து சிறப்பித்த விழா அது.[தமிழ் திரையுலகமோ அன்றைய தமிழக அரசோ செய்ய தவறியதை அவர்கள் அழகாய் செய்தார்கள்].
அன்புடன்
Message Deleted
டியர் ராகவேந்திரன் சார், மனமார்ந்த நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கும் பதிவிற்கும் நன்றி !
டியர் mr_karthik, நெஞ்சார்ந்த நன்றி !
டியர் முரளி சார், விளக்கமான பதிவிற்கும் அதில் பின்னிப் பிணைந்துள்ள அபூர்வ தகவல்களுக்கும் கனிவான நன்றி !
Dear goldstar Satish, Nellai Alapparai will arrive shortly in our thread.
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"
[31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்
லீலா வினோதங்கள் விரிந்து நிறைகின்றன...
வெண்திரை : ஜூன் 1965 : அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4237a.jpg
[தனது தொடக்க இதழான 'ஜூன் 1965' இதழின் அட்டையில், "திருவிளையாடல்" திரைக்காவியத்தினுடைய புகைப்படத்தை வெளியிட்டு முதல் இதழிலேயே பெருமை தேடிக் கொண்டது 'வெண்திரை' சினிமா மாத இதழ்]
இதே இதழின் உள்ளே பிரசுரமான காவியக்காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4241a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4242a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4243a.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
முப்பெரும் ஜோதி
திருமயிலையில் திவ்யமான 'இல்லற' ஜோதி
இன்று 31.7.2011 ஞாயிறு மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, நான் பயின்ற பள்ளிக்கூடமான, பெண்ணத்தூர் சுப்ரமண்யம் உயர்நிலைப்பள்ளியின் [P.S. HIGHER SECONDARY SCHOOL], விவேகானந்தா ஹாலில் உள்ள மினி திரையரங்கில் [நான் படிக்கும் போது இந்த இடம் வகுப்பறைகளாக இருந்தது], "VINTAGE HERITAGE" அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட கலையுலக ஜோதியின் "இல்லற ஜோதி" காவியத்தைப் பார்த்தது மெய்சிலிர்க்கும் அனுபவம். அதுவும் நமது மேன்மைமிகு திரித்திலகங்கள் ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார் ஆகியோரோடு பார்த்ததில் அளவிலா மகிழ்ச்சி. இந்த வெளியீடு குறித்து பட விவரங்களுடன் ஏற்கனவே நமது திரியில் தகவல் அளித்த ராகவேந்திரன் சாருக்கு முதற்கண் நன்றி. 1990லிருந்து இருபது ஆண்டுகளாக பம்மலில் வசித்தாலும், 1980களில் மயிலாப்பூரில் இருந்ததை மறக்கவே முடியாது. அனைத்தும் திரும்பவும் பெற முடியாத பள்ளி நாட்கள் ஆயிற்றே ! பள்ளியினுள்ளே நுழைந்ததுமே ஒரு முப்பது வயது குறைந்ததாக நினைந்தேன். 1982 ஜூனிலிருந்து 1989 ஏப்ரல் வரை [ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை], பள்ளியில் பயின்ற நாட்களெல்லாம் நினைவுத் திரையில் விஸ்வருபமெடுத்தன. பள்ளிக்கு எதிர்முனையில் உள்ள ஒரு சந்துத்தெருவில் வியாழக்கிழமைதோறும் கபாலி, காமதேனு அரங்குகளில் வெள்ளி முதல் என்ன படம் என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அதனை ஒவ்வொரு வியாழன் மாலையும் பள்ளி முடிந்ததும் பார்த்து விட்டு அந்த வாரம் நடிகர் திலகத்தின் படம் என்றால், ஞாயிறு மேட்னி நிச்சயம், எனது மாமாவுடனோ / எனது அன்னை மற்றும் அன்னையாரின் குடும்பத்தினருடனோ பார்த்து விடுவேன். அன்று மாலைவேறு சென்னைத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் படம் இருந்தால் எனக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் எனது படிக்கும் அட்டவணையையும் சரி செய்து கொள்வேன். [mr_karthikகைப் போல் அடியேனும் படிப்பில் சுட்டி என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்]. இப்படிப் பற்பல நினைவலைகளில் நீந்திக் கொண்டே இருந்தேன் "இல்லற ஜோதி" படம் தொடங்கும் வரை. இனி இக்காவியத்திற்கு வருவோம்:
"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!]. ராகப்பிரவாகம் திரு.சுந்தர் அவர்களின் தமிழ்ப்பிரவாகமான முன்னறிவிப்போடு திரைக்காவியம் பெரிய திரையில் உன்னதமாக ஓடத் தொடங்கியது. முதல் படத்திலேயே முந்நூறு படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியவர், 11வது படத்தில் ஓராயிரம் படங்களில் நடித்திருந்த நடிப்பு முதிர்ச்சியைக் காண்பித்தார் என்று குறிப்பிட்டால் அது மிகையன்று. அவரது ஒவ்வொரு திரைக்காவியமுமே ஓராயிரம் திரைப்படங்களுக்குச் சமம் என்பது வேறு விஷயம். ஒரு படைப்பாளியாக [கவிஞன்-எழுத்தாளனாக] தனது பாத்திரத்தை செவ்வனே படைத்திருந்தார். அவரது அறிமுக சீனே அமர்க்களம். அவரது வீட்டு மாடி அறையில் அவர் குரல் மட்டும் கேட்கும். தனது படைப்பை தனிமையில் லயித்து உரக்க முழங்கிக் கொண்டிருப்பார். கீழே இருக்கும் அவரது பெற்றோர் [சிகேசரஸ்வதி-கேஏதங்கவேலு], மாடியில் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கிறதே என்றவர்களாய் படிகளில் ஏறிச் சென்று அறைக்க்தவைத் தட்ட, திறந்து அவர்களுக்கும், நமக்கும் ஒரு திவ்ய தரிசனம் அளிப்பார் பாருங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம். என்னே ஒரு Screen Presence ! படம் முழுவதும் நம்மவரின் காஸ்ட்யூம் கலக்கல். ஒரு படைப்பாளிக்கேற்ற ஒரு Pant, Full Hand Shirt மற்றும் அதன் மேல் Sweater போல் ஒரு Half Jacket. இந்தக் காஸ்ட்யூமில் தலைவர் Smart & Cute ! [எந்தக் காஸ்ட்யூமில்தான் அவர் நன்றாக இருக்க மாட்டார். எல்லாவற்றிலுமே அவர் சிறப்பாகத் தான் இருப்பார்]. மனைவியாக ஸ்ரீரஞ்சனியும், காதலியாக பத்மினியும் அமைய இருவருக்குமே தோற்றத்தில் பொருத்தமாக - Convincingஆக - இருப்பதே அவரது ஸ்பெஷாலிட்டி. NTயின் படைப்புத்திறனால் ஈர்க்கப்பட்ட பத்மினி அவரிடம் இதயத்தை பறிகொடுக்க, மணமான மனோகரும் [NT பாத்திரப் பெயர்] மனதை 'கப்'பென்று பப்பியிடம் மாற்றுகிறார்.
அனார்க்கலி-சலீம் ஓரங்க நாடகத்தின் தொடக்கமாக வரும் 'களங்கமில்லா காதலிலே' பாடல் இசையமுதம். ராகதேவன் ராமநாதன் அவர்களின் இசையில், ராஜா-ஜிக்கி குரல்களில், சிவாஜி-பத்மினி நடிப்பில், கண்ணதாசனின் வைர வரிகள் ஜொலிஜொலிக்கின்றன. NT & NP made for each other romantic pair என்பதனை இப்பாடல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. படம் முழுவதற்கும் கவியரசர் வசனம், இந்த ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் வசனம். [கௌவரத் தோற்றமேற்கின்ற NT, கதாநாயகனையே தூக்கி சாப்பிட்டுவிடுவது போல், கௌரவமாக வரும் கலைஞர் இப்படத்தில் கவியரசரை வசனப்பந்தயத்தில் Photo-Finishல் மிஞ்சுகிறார் ; மகேஷ் சார் கோபித்துக் கொள்ள வேண்டாம்]. படத்தின் இன்னொரு ஹைலைட் பாடல் பத்மினிக்காக பி.லீலாவின் குரலில் ஒலிக்கும் 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே'. ராமநாதன் ஸ்வரப்பிரவாகத்தில் விளையாட, லீலா அதற்கு குரல் கொடுத்து தூக்கிவிட, நாட்டியப் பேரொளியின் நடனமும், நடிகர் திலகத்தின் வாத்திய இசையும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது. இப்பாடலில் பத்மினி ஆட, கற்பனையாக அவருக்கு இருபுறமும் NTக்கள் அமர்ந்து, இடதுபுற NT வீணை வாசிப்பதாகவும், வலதுபுற NT வயலினில் வெளுத்துக் வாங்குவதாகவும் காண்போருக்கு செம Treat. படத்தின் கிளைமாக்ஸில், பத்மினியுடனான தனது காதலை அங்கீகரிக்கும் தியாகச்சுடராக தனதருமை மனைவி இருப்பதை உணர்ந்த மனோகர், தன் காதலைத் துறந்து, "இல்லற ஜோதி"யான ஸ்ரீரஞ்சனியுடன் இணைகிறார் என படம் திருப்திகரமாகவே நிறைகிறது. படத்தின் ஆங்காங்கே வரும் தங்கவேலு-சரஸ்வதி சரவெடிகள் சீரியஸான படத்தில் சிரிப்புக்கும் பஞ்சம் வைக்காமல் திகழ்கிறது. ராகதேவனின் BGM பிரமாதம். ஹார்மோனியத்தையும், வயலினையும் இழையோடச் செய்கிறார். நடிகர் அசோகன் நம்மவருடன் நடித்த முதல் படம் இது. பத்மினியின் முறைமாப்பிள்ளையாக அளவான பாத்திரத்தில் அளவோடு செய்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி படத்தின் Emotional touch என்றால் பத்மினி Romantic-cum-emotional brilliance. 'இரு மாதருடன் நம்மவர்' என்ற Themeல் பின்னாளில் வெளியான எத்தனையோ படங்களுக்கு இப்படம் முன்னோடி. மொத்தத்தில் சகோதரி சாரதாவிற்கு மிகவும் பிடித்த எடுப்பான, துடிப்பான, கனக்கச்சிதமான, ஸ்வீட்டான சிவாஜியின் திவ்யமான "இல்லற ஜோதி"யை, நான் பயின்ற பள்ளியில், நமது ஹப் நண்பர்கள் புடைசூழ பார்த்து மகிழ்ந்தது எனக்கு ஒரு LIFETIME RECHARGE !
திரையிட்ட "VINTAGE HERITAGE" அமைப்பிற்கு இதயபூர்வமான நன்றிகள் !
மகாலட்சுமியில் மகோன்னத 'மகர' ஜோதி
இன்று 31.7.2011 ஞாயிறு மாலை பெரம்பூர்-ஓட்டேரி பகுதி கிடுகிடுத்திருக்கிறது. பாரிஸ்டரின் வழக்காடு தொடங்குவதற்கு முன், 'மகாலட்சுமி' அரங்கம் இருக்கும் நெடுஞ்சாலை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பரவசப்படுத்தும் பதாகைகள் என்ன, வாலாக்களின் விண்ணதிரும் சப்தங்கள் என்ன, மாலை அலங்காரங்கள் என்ன, மஹாதீபாராதனை என்ன என அந்த ஏரியாவே அமர்க்களப்பட்டிருக்கிறது. சில மணித்துளிகள் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கூறவும் வேண்டுமோ! பின்னர் உள்ளேயும் உச்சக்கட்டக் கொண்டாட்டம் தான் ! சற்றேறக்குறைய அரங்கம் நிறைந்திருந்ததாகவும் எமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களுமே [ஜுலை 29,30,31], ஒவ்வொரு காட்சியும், நல்ல கூட்டத்தோடு நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மகோன்னத மகர ஜோதியை மகாலட்சுமியில் தரிசித்துக் கொண்டாடிய ரசிக மன்னர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.பி.கணேசன் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !
நெல்லைச்சீமையில் ஆட்கொள்ளும் 'அருட்'ஜோதி
'சென்ட்ரல்' அரங்கை ஒட்டிய சாலை இன்று [31.7.2011 : ஞாயிறு] மாலை, விளம்பரம் தேடா வள்ளல் ரவிக்குமாரின் திக்விஜயத்தால் திக்குமுக்காடியிருக்கிறது. அவ்வழியாக போவோர்-வருவோர் அனைவருக்கும் மற்றும் அரங்கில் இருந்தவர்களுக்கும் லட்டுகளும், பால் கோவா கேக்குகளும் அன்புள்ளங்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 வாலா முழங்க, கட்-அவுட்டுக்கு மலர் மாலை அலங்காரங்கள் நிரம்பி வழிய, மஹாதீபாராதனை மகத்தான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. காட்சியின் போதும் அதிக அளப்பரையாம். எல்லாப் பாடல் காட்சிகளுக்கும் கூரை கிழிந்திருக்கிறது. குறிப்பாக 'ஜெலிதா வனிதா' பாடல் காட்சியில் ஆரவாரம் உச்சாணிக் கொம்பைத் தொட்டிருக்கிறது. மாலைக் காட்சிக்கு கணிசமான அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்திருக்கிறது. ரவிக்குமாரின் அருட்ஜோதியில் ஆட்கொள்ளப்பட்டு அன்புள்ளங்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர் !
ஸ்வீட்டான இச்செய்திகளை வழங்கிய அன்புள்ளம் திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமாருக்கு நன்றி முத்தாரங்கள் !
பக்தியுடன்,
பம்மலார்.
Pammalar sir, our Madurai people got special bond with our NT and he is only REAL "Vasool Chakravarthy" in Madurai. NT movie will be houseful in any given day and any where in Madurai.
Our NT has created lots of unique records in Madurai which no actor broken till now and I don't think any thing can do it.
cheers,
Sathish
டியர் பம்மலார்,
நம் எல்லோரையும் திலக ஜோதியில் ஐக்கியமாக்கி விட்டீர்கள். திருவிளையாடல் படங்களென்ன, இல்லற ஜோதி பகிர்வுகளென்ன, கௌரவம் ஹாட் நியூஸ் என்ன, ரவிகுமாரின் பெருமை என்ன என்று எல்லாவற்றையும் சூப்பராக அளித்து வி்ட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்..
அன்புடன்
ஆகஸ்ட் அணிவகுப்பு ஆரம்பம்....
குங்குமம்
வெளியான நாள் 02.08.1963
பேசும் படம் ஆக்ஸட் 1963 இதழில் வெளி வந்த குங்குமம் பட விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...damAug63fw.jpg
மன்னவன் வந்தானடி
வெளியான நாள் 02.08.1975
திரைவானம் சிறப்பு மலர் பக்கங்கள்
http://i872.photobucket.com/albums/a...namMalar01.jpg
http://i872.photobucket.com/albums/a...namMalar02.jpg
தொடரும்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் சிலை அமைக்க, கும்பகோணம் நகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. அதற்காக அந்த நகராட்சி தலைவர் மற்றும் கவுசிலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வோம். தமிழ்நாட்டிலேயே 1980 - ஆம் ஆண்டுகளில் சிவாஜி மன்றம் சார்பில் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுத்த நகரம் கும்பகோணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நகராட்சி தலைவரிடம் (திரு. தமிழழகன், தி.மு.க) தொலைபேசியில் பேசியபோது விரைவில் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் சிலை அமைப்பு வேலை துவங்கப்படும் என்று கூறினார்.
முரளி சார்,
'ஒரு யாத்ரா மொழி' படத்தைப்பற்றிய பல அரிய தகவல்களைத்தந்துள்ளீர்கள். இவை இதுவரை நாங்கள் அறியாதது. மோகன்லால், தன் நண்பன் பாலாஜியின் சொந்த மாப்பிள்ளை என்பதால் நடிகர்திலகமும் அவரை 'மாப்பிள்ளை' என்றே அழைப்பார் என்பது மட்டும் தெரியும். திலகன் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகினர் அனைவருமே நடிகர்திலகத்திடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். தெலுங்கு, கன்னட, இந்தி திரையுலகினரும் அப்படியே. (சொந்த மானிலத்தில் மட்டும்தான் அவர் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார். அவர்களும் அவரது மறைவுக்குப்பின் புகழ்கின்றனர்).
ராகவேந்தர் சார்,
ஆகஸ்ட் வரிசையை நெற்றியில் 'குங்குமம்' இட்டு துவக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அட்டகாசம்.
பம்மலார் சார்,
மயிலைக்கு வர இயலாதோரை உங்கள் எழுத்துக்களால் நிகழ்ச்சியைக் காணச்செய்து விட்டீர்கள். ஏற்கெனவே பார்த்திருந்த 'இல்லற ஜோதி'யை, தங்கள் விரிவுரையைப் படித்த பின் மீண்டும் பார்க்க மனம் விழைகிறது. தாங்கள் படித்த பள்ளியில் நுழைந்ததும் தங்கள் மன நெகிழ்வுடன் கூடிய மலரும் நினைவுகள் எங்களையும் எங்கள் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றன. இல்லற ஜோதியின் கதைச்சுருக்கத்தையே (கிட்டத்தட்ட) தந்துவிட்டீர்கள். முன்னதாக தந்திருக்கும் 'திருவிளையாடல்' நிறைவுப்பகுதியும் வெகு ஜோர்.
மகாலட்சுமியில் பாரிஸ்டரின் வெற்றிநடைபற்றிய தகவலும் அருமை. ஞாயிறு கொண்டாட்டங்க்கள் பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி. மகாலட்சுமியில் இரு திலகங்களின் படங்கள் மாறி மாறி திரையிடப்படுவதால் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆவலில் ஞாயிறு கொண்டாட்டங்களால், வரவர 'மகாலட்சுமி' நட்சத்திர அந்தஸ்தைப்பெற்று வருகிறது. எதிரே இருந்த சரஸ்வதிதான் நம் நெஞ்சங்களில் மட்டும் நினைவிலிருக்கிறது.
பெரம்பூரில் பாரிஸ்ட்டர் கலக்குவதற்கு சற்றும் குறையாமல், நெல்லையில் மேயர் கலக்கி வரும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. நெல்லைக்கொண்டாட்டங்கள் பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.
முரளி சார் யாத்ரா மொழி திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அருமை. திருவிளையாடலை சிறப்பாக நிறைவுசெய்து, இல்லற ஜோதியை இனிதே ரசிக்கவைத்த பம்மலாருக்கு நன்றி. ஆகஸ்ட் அணிவகுப்பை குங்குமம், மன்னவன் வந்தானடி -யோடு அட்டகாசமாகத் துவக்கியிருக்கும் திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு ஒரு சபாஷ்.
கெளரவம் மகாலட்சுமி திரை அரங்கில் கண்ட காட்சியை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை .
முதலில் திரு ராகவேந்திர சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மகாலட்சுமி திரை அரங்கிற்கு செல்ல வழி சொல்லியது கூகுளே மாப பிச்சை வாங்க வேண்டும் என்னிடம் கேமரா இல்லாததால் அந்த கொண்டாட்டங்களை படம் பிடிக்க முடியவில்லை
சாந்தியில் நாம் கொண்டாடுவது நம்முடைய பிறந்த வீட்டு பண்டிகை என்றல் மற்ற திரை அரங்கில் கொண்டாடுவது புகுந்த வீட்டு பண்டிகை என்று சொன்னால் அது மிகை ஆகாது . சாந்தியில் கண்ட பல முகங்களை அங்கே கண்டேன் ஆனால் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை .அதற்குள் திரை அரங்கிற்கு உள்ளே சென்று விட்டேன் . மகாலட்சுமியில் இருந்து மாம்பலம் ஸ்ரீநிவசவிற்கு அடுத்த வாரம் barrister விஜயம் என்று கேள்வி பட்டேன் சாந்தியில் மிஸ் செய்த தவறை மகாலக்ஷ்மியில் பார்த்து கிளியர் செய்து விட்டேன்
மன்னவன் வந்தானடி சிறப்பு மலர் நமது கண்மணி பம்மலர்/ராகவேந்தர் அவர்களால் பதிவேட்டேறம் செய்தது எனுடைய ஒரு சந்தேகம் தெளிந்தது. jayar மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் அவர்கள் தன முதலில் மஞ்சுளா அவர்களை நடிகர் திலகம் அவர்களடிம் அறிமுகம் செய்தார்கள் என்று அறிந்து கொண்டேன் . செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்த தருமி (தவறான பாட்டு அல்ல) போல் என்னுடைய சந்தேகத்தை பம்மலர்/ராகவேந்தர் சார் தீர்த்து வைத்தார்கள் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
கிருஷ்ணாஜி,
மஞ்சுளா நடிகர்திலகத்துடன் நடிக்க முதலில் ஒப்பந்தமானது 'மன்னவன் வந்தானடி' படத்துக்காகத்தான். ஞான ஒளி ஐம்பது நாட்களைக்கடந்தபோதே, மன்னவன் வந்தானடி துவங்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களால், இதன்பின்னர் ஒப்பந்தமான எங்கள் தங்க ராஜா, என் மகன், அவன்தான் மனிதன் ஆகிய படங்கள் முதலில் ரிலீஸாகி விட்டன.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களை மிகமிக மங்களகரமாக "குங்குமம்" காவியத்துடன் துவக்கியுள்ளீர்கள். "குங்குமம்", "மன்னவன் வந்தானடி" அணிவகுப்பு மிக அருமை.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
குடந்தை நகரில் கலைக்குரிசிலின் சிலை நிறுவ சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தித்திக்கும் தகவலை வழங்கிய தங்களுக்கு இனிப்பான நன்றிகள் ! சிலை விரைவில் அமைய செழிப்பான வாழ்த்துக்கள் !
டியர் mr_karthik, தங்களின் பாராட்டுதல்களுக்கு பசுமையான நன்றிகள் !
Thanks, goldstar Satish.
டியர் கிருஷ்ணாஜி, மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
'தாதா சாஹேப் பால்கே விருது' பெற்றமைக்காக நடிகர் திலகத்துக்கு கேரளத் திரையுலகம் நடத்திய பிரம்மாண்டமான பாராட்டு விழா
24.8.1997 : ஞாயிறு : திருவனந்தபுரம்
வரலாற்று ஆவணங்கள்
24.8.1997 & 25.8.1997 தேதியிட்ட செய்தித்தாள் நிழற்படங்கள்
http://i1094.photobucket.com/albums/...EDC4247a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4250a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...GEDC4251-1.jpg
http://i1094.photobucket.com/albums/...GEDC4252-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
குங்குமம் : [2.8.1963 - 2.8.2011] : 49வது உதயம்
பொக்கிஷப் புதையல்
First Release Ad : The Hindu : 28.7.1963
http://i1094.photobucket.com/albums/...EDC4246a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1963
http://i1094.photobucket.com/albums/...EDC4245a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 206
கே: 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று நடிகர் திலகத்தை கடந்த சில மாதங்களாக 'முரசொலி' தூக்கி வைத்து எழுதுகிறதே, பார்த்தீர்களா? (மு.சிவாஜி சுந்தர், திண்டுக்கல்-2)
ப: பார்த்தேன், மகிழ்ந்தேன் !
(ஆதாரம் : திரைவானம், நவம்பர் 1973, "கௌரவம்" திரைப்பட சிறப்பு மலர்)
குறிப்பு:
1963-ல் இதே 'முரசொலி' தனது கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவரின் கேள்வியான "குங்குமம் படம் பார்த்தீர்களா?" என்ற கேள்விக்கு "இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்று பதிலளித்திருந்தது. இத்தகவலை சில மாதங்களுக்கு முன் எழுதிய எமது பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் என்றாலும், "குங்குமம்" வெளியீட்டு தினத்தையொட்டி மீண்டும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. 1963-ல் அப்படி, 1973-ல் இப்படி, என்ன செய்வது !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மன்னவன் வந்தானடி : [2.8.1975 - 2.8.2011] : 37வது திக்விஜயம்
சாதனை செப்பேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 2.8.1975
http://i1094.photobucket.com/albums/...EDC4253a-1.jpg
100வது நாள் : தினத்தந்தி : 9.11.1975
http://i1094.photobucket.com/albums/...NE_0002a-1.jpg
மன்னவன் வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
"மர்ம வீரன்" 56வது ஜெயந்தி காண்கிறார்
[3.8.1956 - 3.8.2011]
நான்காவது வார விளம்பரம் : தினமணி : 24.8.1956
http://i1094.photobucket.com/albums/...EDC4255a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
சூப்பரோ சூப்பர், கலக்கலோ கலக்கல், அசத்தலோ அசத்தல்.... சொல்லிக் கொண்டே போகலாம். முரளி சார் சொன்னது போல் தங்களுக்கு நன்றி கூறுவதற்கென்று ஆரம்பித்தால் அதற்கே தனி திரி தேவைப்படும். கீப் இட் அப்.
1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு நடிகர் திலகம் விஜயம் செய்த போது எடுக்கப் பட்ட நிழற் படங்களில் சில குங்குமம் திரைக்காவியத்தின் டைட்டிலில் காண்பிக்கப் பட்டன. இது பெரும் பாலான ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரியாத அல்லது இது வரை அத்திரைக்காவியத்தைப் பார்த்திராத புதிய தலைமுறையினருக்காக அந்த டைட்டில் கார்டில் இருந்து சில நிழற் படங்கள்-
http://i872.photobucket.com/albums/a...umamcard01.jpg
http://i872.photobucket.com/albums/a...umamcard02.jpg
அன்புடன்
திரைவானம் சிறப்பு மலர் பக்கங்கள் (தொடர்ச்சி)
மன்னவன் வந்தானடி தொடக்க விழா காட்சிகள்
http://i872.photobucket.com/albums/a...namMalar08.jpg
இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar05.jpg
நடன இயக்குநர் சலீம் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar04.jpg
வி.சி.குகநாதன் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar03.jpg
நடிகர் திலகத்தை தேவன் கோயில் மணியோசை படத்திற்காக இயக்கிய இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar09.jpg
இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar05.jpg
தொடரும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கருத்துரை
http://i872.photobucket.com/albums/a...namMalar07.jpg
http://i872.photobucket.com/albums/a...namMalar06.jpg
அன்புடன்
டியர் பம்மலார் சார்,
மலையாள திரையுலகினர் ntஅவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது பற்றிய செய்திதொகுப்புக்கு நன்றி, மர்மவீரன் படத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு கௌரவ வேடம் தானே? இதில் கதாநாயகன் யார்?
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !
'திரைவானம்' "மன்னவன் வந்தானடி" [ஜூலை 1975] சிறப்பு மலர் பக்கங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் ! இங்கே பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மன்னவன் வந்தானடி : [2.8.1975 - 2.8.2011] : 37வது திக்விஜயம்
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : திரைவானம் : நவம்பர் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/...EDC4268a-1.jpg
படத்துவக்கவிழாக் காட்சிகள் : பேசும் படம் : நவம்பர் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4267a-1.jpg
படம் வெளிவரும் செய்தி : மதி ஒளி : 7.3.1975
http://i1094.photobucket.com/albums/...EDC4265a-1.jpg
அட்டைப்பட விளம்பரம் : பேசும் படம் : ஜூலை 1975
http://i1094.photobucket.com/albums/...EDC4266a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Thanks Pammalar and Ragavendran sir for every day treat... Hats off to you guys for your dedication to make us happy.
Cheers,
Sathish
Dear Raghavendra sir and Pammal sir
you are really great i have no words to praise you, everyday i love to see about different news on my NT, keep it up.
Raghavendra sir/ pammal sir
by any chance u have the video coverage of Ponvila, savalasamale function, Chavlier functions videos sir
kumareshan prabhu
hi shek
nice to hear on kumbakonam statue
Dear Sathish, Kumaresh Prabhu and friends,
Thank you all for the support and encouragement, which makes us more energetic and enthusiastic to dedicate ourselves to glorify NT.
Regards,
Raghavendran
http://cdn1.supergoodmovies.com/File...c64b46fe20.jpg
(source: http://www.supergoodmovies.com/13344...d-news-Details)Quote:
The veteran actor of 60 years stay in theatre and 50 years in cinema MS Umesh is known for his simplicity and humbleness. He has taken a strong step to politely hand over one and half acre of land presented to him by producer of ‘Hori’ Kannada film Linge Gowda.
I am not able to maintain this piece of land in Mandya district given to me at the audio release of ‘Hori’ Kannada film. I am staying in Bangalore and leading a life of hand to mouth. How can I till the land or develop it at this stage. So I have decided to give back the land. I am not expecting anything and in case they think of alternative I welcome it said MS Umesh. Explaining further MS Umesh who is really in financial constraints said it is appropriate to get first for the work done and secondly it is right to maintain the house I have in Bangalore.
M.S. Umesh was introduced as the child artiste in the film Makkala Rajya (Pillalu Techina Chellani Rajya in Telugu, Kuzandaigal Kanda Kudiyarasu in Tamil), NT in Guest appearance.
Makkala Rajya was released on 05.08.1960 and enters 52nd year on 05.08.2011.
http://cdn1.supergoodmovies.com/File...8ec77663ad.jpg
http://www.hindu.com/fr/2010/11/12/i...1250870301.jpg
Quote:
M.S. Umesh, who followed Puttanna to Madras to play a part in “Makkala Rajya” produced by Padmini Pictures, was directed by B.R. Pantulu. M.V. Rajamma, B.R. Pantulu, Nadigar Tailagam Sivaji Ganesan, Narasimharaju, Kala, Balakrishna, Kanchana, Dikki Madhava Rao and Lakshmidevi were also part of the film.
Source:The Hindu)Quote:
“Makkala Rajya”, a film in which children played the lead roles, was a huge hit in the sixties and got appreciation from all quarters.
For those who are well informed of Kannada cinema, please point out any correction or mistake. Thank you.
Raghavendran
The super hit song from Makkala Rajya sung by Jikki and A.P. Komala, penned by K.P. Sastri and composed by T.G. Lingappa:
Aaduva Aasaiya
சமீபத்தில் படித்த ஒரு செய்தி
தினமணி மற்றும் வண்ணத்திரை மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்கள் கூறியது
அந்திமத்தில் அணையும் விளக்குகள்
நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.
நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.
இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.
ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.
பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.