"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.
Printable View
"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி
"கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி"
"மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
...................... பார்த்தால் என்ன? "
அண்ணே! வாங்க அண்ணே. உங்க பதிவு பார்த்து ரொம்ப நாளாச்சி! நமக்கு ஒரு நடிகரை பிடிக்கவில்லை என்றால் அந்த நடிகரின் படம் ஓடவில்லையென்றால் அந்த நடிகர் ஒரு தோல்வி நடிகர் என்று சொல்வதும், அதே நடிகரின் படம் வெற்றி அடைந்தால் அது ஒன்றும் நல்ல படம் இல்லை என்று சொல்வதும் நாம் காலம் காலமாக கடைப்பிடிக்கும் பாணிதானே. இந்த மாதிரி பாணி யாருக்காவது இருக்குதா?
அப்புறம் கேட்டீங்களே அண்ணே ஒரு கேள்வி. இப்ப எங்க தில்லானா மோகனாம்பாள் ஓடிக்கிட்டு இருக்குன்னு? யாராவது பதில் சொன்னார்களா? உங்க கிட்ட இதே மாதிரி வேற யாராவது கேட்டிருந்தால், ஓடிக்கிட்டு இருக்குன்னு நிரூபிக்க முடியலைன்னா சொல்லியிருக்க மாட்டீங்களா ... வீடுகளில் டி*வி*டி-யில் ஓடிக்கிட்டு இருக்குன்னு. அடுத்து நீங்க சொன்ன கருத்து தாண்ணே ரொம்ப முக்கியம். அதுக்கு மேல நம்மால் கருத்து விளக்கம் சொல்ல முடியாது அண்ணே. உங்க கிட்டயே வந்து வெற்றிக்கு விளக்கம் கேட்பார்கள். நீங்க கொடுத்ததுதான் விளக்கம்-னு நீங்க விடாப்பிடியா இருங்க.அப்பதான் நவராத்திரி, தெய்வ மகன் படமெல்லாம் தோல்வின்னு நீங்க நிரூபிக்க முடியும். அப்புறம் ஒண்ணு அண்ணே. நாம சொல்றதுக்கு எல்லாம் யாரும் ஆதாரம் கேட்கிறது இல்லை. அது நமக்கு நல்ல வசதியா போச்சு.
உங்களால் நெறைய பேருக்கு நெறய கருத்துக்கள் இப்பிடியெல்லாம் தெரியணும்,
அடிக்கடி வாங்கண்ணே.
அற்புதமான பதிவு அண்ணே. புகழை எவ்வாறு அளக்கிறோம்-னு சொல்லிக்கொடுங்க அண்ணே. அப்பவாவது யாரு யாருக்கு எவ்வளவு புகழ் இருக்குன்னு அளந்து தெரிஞ்சிக்கட்டும். அதுக்கு பின்னாடி யாராவது இந்த அண்ணனை, புகழை மறப்பாங்களா? யாரோ ஒருத்தர், ஒரு ஊரிலே சிவாஜி-யை தெரியுமா-ன்னு கேட்டாராம். யாரு அது மராட்டிய மன்னந்தானே-ன்னு சொன்னாங்களாம். (எந்த ஊருன்னு எனக்கு தெரியவில்லை.சுமாரா வட கிழக்கு நாட்டுப்பக்கம்-நு வச்சிக்கோங்க). இதுல இருந்து என்ன தெரியுது???
RAJA SIR,
We know you are MGR Fan.I understood your anger .But your anger is not aceptable.Our acting god nadigarthilagam uncomparable.His style,Acting his dialoge deleivery are unimaginable by your favourite.May be some /few movies of our nadigarthilagam not successfully running at that time because of no of our god movies are released every month/sometimes even 15 days after 2nd run/subsequent release they are collected as more than your favorite star movie.our nadigarthilagam act never fails my dear rajaji
The first Tamil film to have rock ‘n’ roll dance.
From Times of India website at: http://timesofindia.indiatimes.com/e...w/20858743.cms
Quote:
http://timesofindia.indiatimes.com/t...hiran_1958.jpg
TNN | Jul 1, 2013, 04.01 PM IST
Sivaji Ganesan's Uthama Puthiran was the first Tamil film to have rock 'n' roll dance. The song — the classic Yaaradi Nee Mohini featuring Helen which was sung by T M Soundararajan, A P Komala, K Jamuna Rani, Jikki
Uthama Puthiran is a 1958 Indian Tamil historical fiction film directed by Tatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan, Padmini and M N Nambiar in the lead roles, while K A Thangavelu, Ragini and P. Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.
நண்பர் கோபால் அவர்களே,
இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..
1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.
முடிவாக ஒரு குறிப்பு.
Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.
விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.
விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.
பாசத்திற்குரிய அருமை இளவல் ராஜாராம் அவர்களுக்கு,
இரண்டு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். மதுரையில் சட்டம் என் கையில் ஓடிய நாட்களைப் பற்றிய ஒரு விவாதம் நம்மிடையே நடந்தது [43 நாட்கள் ஓடிய படத்தை நீங்கள் 100 நாட்கள் என்று சொன்னீர்கள்]. அதன் தொடர்ச்சியாக வேறு சில பல படங்களைப் பற்றியும் அவை ஓடிய நாட்களைப் பற்றியும் விவாதம் தொடர்ந்து இறுதியில் நீங்கள் என்னிடம் "நாம் இருவரும் ஒரே ஊர்காரர்கள். என்னை ஏன் எதிரி போல பார்கிறீர்கள்? என்னை உங்கள் இளைய சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்றீர்கள். நானும் அன்று முதல் உங்களிடம் எந்த வாதப் பிரதிவாதங்களிலும் ஈடுபடவில்லை. இப்போதும் என் நிலையில் மாற்றமில்லை. உங்கள் comment-ற்கு எனது பதில் no comments.
வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகத்தின் திரிக்கு வந்ததற்கும், கருத்து சொன்னதற்கும் என்னை "பாராட்டியதற்கும்" நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்
திரி நண்பர்கள் கவனத்திற்கு,
நமது திரியில் வரும் பதிவுகளில் என்றுமே நிலைப் பெற்றிருப்பது நேர்மை, உண்மை மற்றும் பொய்மை கலவாமை. இங்குள்ள பதிவாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் குணங்கள் இவை. இதுவரை வந்த பதிவுகளிலும் சரி, இனி வரும் பதிவுகளிலும் அது தொடரும்.
அன்புள்ள காட்டுப் பூச்சி சார்,
உங்களது பதிவு நல்ல பதிவு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் உள்ளசுத்தியோடு வரும் கேள்வி அல்ல அது. நம்மை கேள்வி கேட்போருக்கு உண்டான பதில் நமது முன் பதிவுகளிலேயே இருக்கிறது ஆனால் கேட்பவர்களுக்கு பதில் தேவையில்லை. காராணம் நோக்கம் வேறு.
இதையே இன்னும் சிறிது விளக்கமாக உங்களுக்கு இரண்டொரு நாட்களில் சொல்கிறேன்.
அன்புடன்
வாசு,
என் பிரிய பின்னழகியை சுவைக்க ஒரு நாள் போதாததால் ,சிறிதே தாமதம். பின்னழகி, நடிப்பழகி ஆனது பாக பிரிவினை, பாலும் பழமும், இருவர் உள்ளம் ஆகியவற்றால்தான்.
அஞ்சல் பெட்டி பத்து பதினாறு பாட்டில் திராவிட அழகனும் ,கறுப்பு பின்னழகியும் அவ்வளவு பொருத்தமாக இழைவார்கள்.
அடுத்து ultimate pair கவனித்து விட்டு ,இரண்டாவது அண்ணியிடம் தாராளமாக செல்லலாம்.(seniority பார்க்க தேவையில்லை.)
Am sorry Mr.Ramesh
He is NOT AN MGR Fan....He is just using that Shield to create a problem in our thread. He is a fan of some other actor. His objective is, by using the sheild of MGR, he wants to mudsling Nadigar Thilagam in the process many a time, he has slinged Mud on his own face.
சுருங்க சொன்னால்.....
எங்களிடம் வர வேஷம் வேண்டியதில்லை. எடுத்து கொண்ட காரியத்தின் தன்மை அப்படி...அப்படி.. பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை......
முரளியால் பெருமை பெரும் மதுரை ,இந்த எட்டப்பனால் நமக்கு எட்டிக்காயாய் கசப்பதை என் சொல்ல? தனக்காகவும் புரியாமல்,சொன்னாலும் தெரியாமல்......
சுப்ரமண்யம் சார்,
நான் எப்பவும் சிவாஜியை கீழ் தரமாக விமர்சனம் கிடையாது. ஆனால் எனக்கு சரி என்று பட்டதை கூற எனக்கு உரிமை இருக்கிறது.
இங்கே பதிவு செய்யும் சிவாஜி ரசிகர்கள் அனைவருக்கும் நிச்சயம் 50 வயதை கடந்து இருக்கும். ஆனால் அவர்களின் பதிவை படித்தால் 10 வயது சிறுவர்களின் பதிவைப் போல் இருக்கிறது.
முரளி சார்,
சட்டம் என் கையில் ஓடிய நாட்களை நான் தவறாக கூறி இருந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் அதற்கு இப்பொழுது சம்பந்தமே கிடையாது.
1968ம் ஆண்டில் யார் படங்கள் நன்றாக ஓடியது என்பதுதான் இப்பொழுது பிரச்சனையே. அதற்கு எனக்கு சரியான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். (அப்படியே வீரபாண்டிய கட்டபொம்மன் 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது என்று கூறினீர்கள்.அதற்கும் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்).
நான் எம்.ஜி.ஆர் ரசிகரா இல்லை கமல் ரசிகரா என்று கூறி என்ற விவாதம் வேண்டாம். முடிந்தால் எந்த சிவாஜி ரசிகராவது எனது கேள்விக்கு சரியான பதில் தெரிந்தால் கொடுங்கள்.
அற்புதம் அண்ணே!!!
நானும் ரொம்ப நாளா சொல்லிப்பாத்துட்டேன் அண்ணே. எங்க அண்ணன் யாருக்கு ரசிகரா இருந்தா உங்களுக்கு என்ன - அப்படின்னு. கேக்கலை. ஆனா அவங்க பக்கம் நியாயம் இருக்கு அண்ணே. நீங்க பாட்டுக்கு சாதாரணமா சொல்லிட்டீங்க, இங்க எல்லாரும் அண்ணன் யாரு ரசிகர்-னு சொல்லுவாருன்னு அந்த காலத்து ரிலீஸ் படம் பாக்க வந்த கூட்டம் போல கால் தேய காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க அந்த விவாதம் வேண்டாம்-னு அம்புட்டு பேரையும் ரசிகர்களை அடக்குற நடிகர் மாதிரி அடக்குறீங்களே!!!
அப்புறம் அண்ணே, உங்க கேள்விக்கு அவங்க பதில் சொல்றதுக்கு முன்னாலே, சிவாஜிக்கு, கமலஹாசனின் புகழில் பாதி அளவு கூட கிடைக்க வில்லைன்னு எடுத்து விட்டீங்களே அண்ணே, அதை எப்படி அளந்தீங்க-ன்னு எல்லோருக்கும் தெரியும்படி நச்-னு எடுத்து சொல்லுங்க அண்ணே!!! சொல்லுங்க.
போன பதிவிலே சொன்னீங்களே அண்ணே, எல்லோருக்கும் 50 வயது கடந்து இருக்கும், ஆனா 10 வயசு பசங்க போல பதிவு பண்றாங்கன்னு. மன்னிச்சு விட்டுருங்க அண்ணே. உங்களை, உங்க வயசை புரிஞ்சிக்காம சொல்லிட்டாங்க. உங்களுக்கு வயசு கிட்டத்தட்ட ஒரு நூறாவது இருக்குமாண்ணே? கம்மியா சொல்லியிருந்தா இந்த தம்பியயும் மன்னிச்சிடுங்க.
மற்றபடி எல்லோருக்கும் சொல்லிக்கிறேன். எங்க அண்ணன் சொல்வது தப்புன்னு தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தால் உடனே ஏற்றுக் கொள்வார். இல்லைன்னா கஷ்டம்தான். எங்க அண்ணன் சொல்றதை நீங்க கேட்டுக்க வேண்டியதுதான். எங்க அண்ணன் எந்த ஆதாரமும் தரவேண்டிய அவசியமில்லை. அது சரி படம் ஓடைலைன்னு சொல்றதுக்கு அவர் எப்படி ஆதாரம் தருவாரு? ஓடின படத்துக்கே அண்ணன் ஒத்துக்கற ஆதாரம் இங்க இல்லை. அதெப்படி அண்ணே, உங்களால மட்டும் முடியுது - 1968 விவகாரத்துக்கு 1959 விவகாரத்தை இழுக்க.
The name and fame of NT being immortal, even after his attaining heaven, his movies prove their rerun value, Karnan being the classic example. There is no need to measure or compare the degree of fame of NT with any other actor in this world. From minus infinity to plus infinity NT has made his indelible mark as the integral of all sorts of acting while the other actors with whom NT is 'compared' find it very difficult to prove their rerun values. You enjoy the acting of your star but keep it in mind their actings are only differentials depicting a certain level of NT only. Navarathiri and Deivamagan.... incomparable!
ராஜா சார்
நீங்கள் சிவாஜி அவர்களை மேல்தரமாகவே விமர்சனம் செய்யுங்கள் ! விமர்சனம் செய்வது உங்கள் உரிமை என்று கூறிவிட்டீர்களே !
இங்கே 10 வயது சமாஜாரமாகவாவது இருக்கிறது...அனால் தங்களுடைய பதிவை படிக்கும்போது தங்களுக்கு அதுகூட இருகிறதா என்பது சந்தேகமே. உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் கூற தேவை இல்லை. காரணம் காலம் காலமாக நீங்கள் யார் ..எப்படிபட்டவர் ...எந்தவகை சார்ந்தவர் என்பதை உலகறியும்...நாங்களும் அறிவோம். !
உங்களுக்கு சந்தேகம் என்றால் நீங்களே அவற்றை தீர்த்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுடைய சந்தேகங்களை தீர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி அவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் கருதினால், நாங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயம் தீர்ப்போம் ஆனால் ஓசியில் அல்ல.
ஒரு சந்தேகத்தை தீர்க்க எங்களுடைய Consultation Fees Rs.2,500 ஆகும். கொடுப்பதற்கு தயார் என்றால் சொல்லுங்கள் என்னுடைய பேங்க் அக்கௌண்ட் அனுப்புகிறேன். எவ்வளவு சந்தேகங்களோ அதற்க்கு தக்க Consultation Fees. ஆதாரங்களுடன் உங்களுடய சந்தேகம் தீர்க்கப்படும். காரணம் எங்களுடைய நேரத்திற்கு மதிப்பு உண்டு...மேலும் சந்தேகம் என்ற வியாதி உங்களுக்கு தான். எங்களுக்கு அல்ல. ஆகையால் ஓசியில் எங்கள் சேவை அதுவும் உங்களுக்கு நிச்சயமாக செய்யமுடியாது !
எப்படி உங்களுக்கு சரி என்று பட்டதை கூற உங்களுக்கு உரிமை இருக்கிறதோ , எங்களுக்கும் உங்கள் சந்தேகம் என்ற வியாதியை அதுவும் முற்றிய நிலையில் உள்ள வியாதியை சரி செய்ய பணம் கேட்கும் உரிமை இருக்கிறது. ஓசியில் TV, MIXIE, GRINDER, மற்றும் வியாதியை மருத்துவரிடம் சரிசெய்யும் இன்சூரன்ஸ் கொடுக்க நாங்கள் அரசாங்கம் அல்ல !
We are private consultants ! So, you have to pay to get your doubts cleared.
OK என்றால் என்னுடைய தொலைபேசி 9841285626. என்னுடைய வங்கி அக்கௌண்டில் பணம் வந்தவுடன் Consultation with Medication தரப்படும். அப்படி நீங்கள் தயார் இல்லை என்றால் எடத்தை காலிசெய்யவும் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல்.
காசுகுடுக்க முடியும்னா சரியான பதில் குடுக்க சொல்லு...இல்லையா விலகி நில்லு. !
ஓசிலே இங்க ஒன்னும் வாங்கமுடியாது ! அப்படி செலவுபண்ணாம உங்க சந்தேகம் தீரனும்னா Connemara Library ல போய் நீங்களே தேடி எடுத்து உங்க சந்தேகத்த தீத்துகோங்க !
ஞாயப்படி இதுக்குமே நாங்க CONSULTATION உங்களிடம் வாங்கவேண்டும்..இருந்தாலும்..பிழைத்துபோகட்டும் என்று வழிகாட்டி கொடுக்கிறோம். இதற்கும் ஏதாவது சொல்கிறேன் பேர்வழி என்று "பிச்சையிலும் பிச்சை அதிகாரபிச்சை எடுக்க முயர்ச்சிக்கவேண்டாம்.
தொண்டு செய்கிறேன் தொண்டு செய்கிறேன் என்று துண்டு விரித்து ஏமாற்றுபவர்கள் மத்தியில்,
தான் நடிக்கும் திரைப்படம் மக்கள் கொடுக்கும் பணத்தால் தான் பெருகி வருகிறது..அதற்க்கு மக்களுக்கு தார்மீக ஆத்மார்த்த அடிப்படையில் அவர்களுக்கு நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்று உண்மையான நோக்கத்தோடு
...திரை உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களை விட அதிகமான கதாபாத்திரங்களை அதாவது
தமிழறிஞர்கள்,
தேசத்தலைவர்கள்,
விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்,
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள்,
வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள்,
கலை விற்பன்னர்கள்,
புராண நாயகர்கள்,
சமுதாய சீர்திருத்தவாதிகள்
என பல நல்லவர்களை அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை மக்கள் முன் தன் திரைப்படம் வாயிலாக கொண்டுசென்றவர் நடிகர் திலகம் ஒருவர் தான் !
இந்த கால தலைமுறையினர், பொய்களை, போலிகளை, பித்தலாட்டங்களை அடையாளம் கண்டுகொண்டு, உண்மையான விஷயங்களை ஆதாரங்களோடு பார்த்து, படித்து நமது நடிகர் திலகம் என்ற உன்னத கலைஞனை, அவரின் அரும்பணியினை அவருக்கு சமுதாயத்தின் மேல் மற்ற எந்த நடிகரையும் விட ஒருபடி மேல் அக்கறை உள்ளது என்ற உண்மையை உணரும் விதமாக இந்த கட்டுரை இன்று முதல் புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :
முன்னுரை
1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !
உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....
இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் தமிழ் திரைப்படத்தில் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும், தமிழை, முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்
நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்
http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0
http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4
http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM
ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!
அந்த உடல் தான் நடிகன் !
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!
தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!
உதாரணமாக :
ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...
அதுதான் தமிழின் வலிமை...!
1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.
அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று அவரை பற்றி அறியாதவர், அறிந்தும் தாழ்புனற்சியால் தூற்றுபவர், பலர் நினைக்கலாம்...
அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகர் திலகத்தை படத்தை விட்டு தூக்கவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம்.
PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.
என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் ! ஒரு தயாரிப்பாளர் ஒரு புதுமுகத்தின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்தது திரை உலகம் அகில உலகத்திலும் நாம் கேள்விபடாத நடக்காத ஒரு சாதனை.
இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...
ஒரு நடிகனுக்கு பல படங்களில் சிறு சிறு வாயிப்புகள் வந்து நடித்துகொண்டிருந்தால் கூட பரவாஇல்லை,அது மிக மிக நல்ல விஷயம் காரணம், திரை துறையில் இருக்கிறோம் என்ற ஒரு ஆறுதல், தொடர்ந்து கிடைக்கும் (சிறு வேடமானாலும் )வாய்ப்பு இவற்றால் கிடைக்கும் வாழ்வாதாரம் இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் தான்.
ஆனால் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் தோல்வி அடைந்தாலோ அல்லது தயாரிப்பாளர் அந்த நாயகனை பாதியில் தூக்கி எறிந்தாலோ முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் ஒரு வழியாக 8 மாத இடைவெளிக்கு பிறகு படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...
அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , திரையுலகில் ஒரு புரட்சி புயலாய், "புரட்சி" என்ற வார்த்தையை திரைஉலகில் அனைவரையும் பராசக்தி என்ற பெருவெற்றியின் மூலம் முதன் முதலில் பேசவைத்ததே, அதை நடைமுறையில் கொண்டுவந்ததே, நம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்கள் தான் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ யாராலும் முடியாது ! ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.
முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !
முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=KsqfDbJv33U
கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=B2ai_eNPkCs
அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.
அவரது திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.
இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள்.
நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .
பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!
அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் :
நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !
உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !
http://www.youtube.com/watch?feature...&v=eCVQAzG8_14
நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.
நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,
கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!
இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார்
அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !
பக்கம் பக்கமாக வசனம் என்று கேள்விப்பட்டவுடன் ஆளவிடு சாமி என்று கொடுத்தவரிடம் காரணமே சொல்லாமல் பயந்தோடிய நடிகர்கள் மத்தியில், ஒன்ற, இரேண்டா, மூன்றா, பத்துபக்கமா..? கொடு வசனத்தை...பிடி முதல் takilayae ஓகே என்ற ரீதியில் கலை களஞ்சியமாக விளங்கியவர் திரை உலகில் நடிகர் திலகம் மட்டுமே என்றால் அது மிகையாகாது !
அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !
http://www.youtube.com/watch?feature...&v=SdnOlP94x2g
வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் இந்த புவியில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அந்த திறம் ...அடேயப்பா..! !
தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !
இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...
தொடரும் ....
Respected NTTHREESIXTY SIR,
WHAT A FUNTASTIC PRESENTATION.I WONDER YOUR WRITEUP.WHAT A VIDAL KNOWING THINGS YOU HAVE.OUR ACTING GOD FAME ESTABLISH ALL WORLD THOROUGH THIS TYPE OF EXCELLENT REPLY GIFT OF PRESENTATION. LONGLIVE MY DEAR SIR.THANKS THANKS THANKS LOT
Gopal sir , i accept your point
Today, July 3rd marks the birthday of Mr.Ramkumar, the eldest son of the house Annai Illam and Nadigar Thilagam -
We wish him many more happy returns of the day and may the almighty grant him all the wishes of his life and give the house of nation's pride all the laurels. - Many More Happy Returns of the Day Sir ! A scene from his first film Aruvadai Naal. Class Scene, Composed Performance !!
http://www.youtube.com/watch?v=GqJcC...YTtioEu1D8gNAR
Dear Ramesh Sir,
Am not that much old....am only 42...so " respected sir " ellam dhayavuseidhu vendaam...Subbu endre koopidungal.
Thankyou so much for your kind words and appreciation. Infact, it is the motivation like this from you and our friends like Mr.Raghavender, Mr.Neyveliyar, Mr.Gopal, Mr.Murali, Mr.Rahulram, and our good friends from the other thread Mr.Esvee etc., making all of us to contribute whatever we are capable of. I will compare this with the Squirrel that helped SriRama to form a bridge.
I would be happy if you also write your experiences on Nadigar Thilagam and we all will be happy too about it.
Regards
Dear Mr.Subhu - it was nice talking to you today - really hats off to your time and passion in articulating a wonderful write up . Sometime criticisms are blessing in disguise - they may induce us to do further R&D to make the history believable ,they:) may distort the flow but we can be back on track with new energy - Regards
Ravi-hyderabad
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'புகுந்த வீடு' திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் கலைஞர்களுக்கு நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் வழங்கும் பேசும்படம் புகைப்பட தொகுப்பு மிகவும் அருமை. தான் பங்கேற்காத ஒரு படத்தின் வெற்றி விழாவிலும் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்புடன் அவர் பரிசு வழங்கும் அழகே அழகு.
பரிசுபெறும் கலைஞர்களான இயக்குனர் பட்டு, ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், சோ, வி.எஸ்.ராகவன், சாவித்திரி, லக்ஷ்மி, சந்திரகலா, ரமாபிரபா. சகுந்தலா, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், சங்கர் - கணேஷ் அனைவரின் முகத்திலும், ஒரு மாபெரும் கலைஞரின் கையால் வெற்றிக்கேடயம் பெறுகிறோம் என்னும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.
அரிய ஆவணத்தை அளித்த தங்களுக்கு நன்றி...
அன்புள்ள சௌரி சார்,
தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். தங்கள் புனைப்பெயருக்கு ஏற்றார்போல நடிகர்திலகத்தின் திறமையை 360 கோணங்களிலும் அலசுவதாக அமைந்துள்ளது. 'பராசக்தி' அலசல் துவக்கமே வெகு அருமை. தொடர்ந்து பிளந்து கட்டுங்கள். வாழ்த்துக்கள்.
சவுரி,
பராசக்தி ரொம்ப ரசித்தேன்.
அடடா! காணொளியின் விருந்தே படைத்து விட்டீர்களே!! நன்றி த்ரீசிக்ஸ்டி சார்.
திரை உலக சித்தர் சிவாஜி
இன்றைய சினிமா என்பது, தெருக்கூத்து, தெருமுனை நாடகம், அரங்க நாடகம் இவற்றின் அடுத்த தலைமுறை விஞ்ஞான வளர்ச்சிதான் ! நாடகத்தில் நன்கு சோபித்தவரே திரையில் எந்த வித கடினமான கதாபாத்திரத்தையும் லாவகமாக கய்யாளகூடிய திறன் படைத்தவராக உலாவரமுடியும். ஆகையால்தான் பிறர் நடிக்க பயந்த கதாபாத்திரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளி, திரை உலகையே வெறுத்த திராவிட தந்தை பெரியார் அவர்களையே கவர்ந்து, நடித்த மேடயிலயே அவர் வாயாலயே "சிவாஜி" என்ற பட்டமும் கொடுக்க வைத்த நடிப்பு நம்முடைய தமிழகத்தின் பெருமையாம் திரை உலக சித்தர் சிவாஜி கணேசன் அவர்களுடையது.
ஒரு மன்னனாக வேடமிட்டால் ..அந்த அலங்காரம் செய்து உடையுடுத்திய வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது ! மன்னனிடம் கம்பீரம் என்ற ஒரு விஷயம், அந்த நடை, உடை, பாவனையில் இருக்கவேண்டும்...! அப்படி இருந்தால் தான் ஏற்றுகொண்ட வேடம் திறம்பட அமையும்.
எந்த மனிதனும் அந்த மன்னர் அழகா இருந்தார் என்று கூறமாட்டார்கள். மாறாக அந்த ராஜாவுக்கு என்ன கம்பீரம் பாருடா ! என்ன ஒரு நடை, என்ன ஒரு bodylanguage ...இப்படி தான் எல்லாரும் உரைப்பார்கள் ! கம்பீரம் இல்லாமல் பேசட்டும் பார்க்காலாம் - என்னடா ஒரு ராஜ என்கிற கம்பீரமே இல்லாம சாதாரணமா பேசறாரு...ராஜான்னா பேச்சுலயே ஒரு கெத்து வேணாம்? ஹய்யோ..ஹய்யோ ! என்று தலையிலடித்து கூறுவார்கள்.
உதாரணமாக ...கட்டபொம்மனை எடுத்துகொண்டால், ஒரு சாமானிய குடிமகன் போல செய்யவேண்டும் என்று
பேரில் சாதாரணமா சாதாரனமனிதரைபோல "இயற்கையாய்" "இதோபாருங்கள் british officer இந்த கிஸ்தி, திரை, வரி வட்டி இதெல்லாம் எதற்கு கொடுக்கவேண்டும்..எனக்கு ஒன்றும் புரியவில்லை ....ஏனென்றால் வானம் அதுபாட்டுக்கு பொழியுது..பூமி அதுபாட்டுக்கு விளையுது ? என்ற ரீதியில் இயற்கையான நடிப்பு என்று சப்பைகட்டுகட்டி, முகபாவம் என்ற ஒன்றை மறந்து, body language என்ற ஒன்றை பற்றி துளி கூட கவலை படாமல் வசனம் பேசினால்,
படம் பார்க்கும் மனிதர்கள்...என்னடா இது...கட்டபொம்மன் நல்ல நறுக்குன்னு நாலு சத்தம் போட்டு கேள்விகேகரதவிட்டு சொரனகெட்டபொம்மனால்ல பேசறான் ? என்று எள்ளி நகையாடமாட்டார்கள் ?
ஆனால் நம் நடிகர் திலகம் அந்த வசனம் பேசும்போது 90 வயது கெழவன் கூட நரம்பு முறுக்கேறி..மனதளவில்.." அப்படி கேள்வி கேள்ளுட என் சிங்கக்குட்டி ! " என்று நினைக்கும் வண்ணம் வசனத்தை அதற்குரிய விதத்தில் பேசி நடித்திருப்பார்.
அந்த காட்சியை பாருங்கள் ....இதில் நடிப்பு மட்டும் அல்ல ! பல பரிமாங்களும் எக்கால நடிகர்களும் கற்றுக்கொள்ள அவர்கள் இயற்கையாய் நடிப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நிமிடம் ஆடிபோய்தான் விடுவார்கள், விட்டிருப்பார்கள் !
இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகத்தின், mannerism , body language , gesture இவை அனைத்தும் ஒரு சேர வழங்கியிருப்பார். !
முக்கியமாக அந்த அதிகாரி இவருக்கு நாற்காலி இடாமல் அவமானபடுத்த நினைக்கையில் சற்று தன்னை மறந்து அதிகார தோரணையில் எழும்போது, நடிகர் திலகம் அந்த நாற்காலியை தன பக்கம் இழுக்கும் அந்த தோரணை , இழுத்தபின் அமர்ந்து ஒரு SUPERIOR என்ற ஒரு gesturai காண்பிக்கும் திறம் பாருங்கள்...
பிறகு, அந்த அதிகாரி...நட்பு வேண்டும் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம் என்று கூறும்போது ..ஒரு நொடி கோபம் அந்த காலை தரையில் வைத்து எழ எத்தனிக்கும்போது அந்த கோபம் சற்று அடக்கி பேச்சுவார்த்தையை தொடரும் அந்த லாவகம்....!
இயற்கையாய் நடிக்கிறோம் என்று சப்பைகட்டுகட்டும் எந்த நடிகருக்கும் அவர் இந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சரி ..எந்தனாட்டினைசேர்ந்தவராக இருந்தாலும் சரி ஏழு ஜென்மம் எடுத்தாலும் வராது !
http://www.youtube.com/watch?v=rmrUECaXoCc
ஆனால் நடிப்பை பற்றி ஒரு ABCD கூட தெரியாத தாழ்புனற்சிகொண்ட ஒரு சிலர், அதை கூட மிகைநடிப்பு என்று விமர்சனம் செய்திரிகிறார்கள் அந்த காலத்தில் !.
பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை. அடிமட்ட மக்கள் அல்லவா......?
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் "
முக்கால்வாசி எல்லா படத்திலும் ஒரே ஒரு சாதாரண மசாலா கதை,
அதில் தங்களுக்கு பிடித்த நடிகர்,
கதாநாயகி என்ற ஒருவர் டூயட் பாடுவதற்கு மட்டும் கவர்ச்சி பொருளாய் இருப்பார்,
ஒரு காமெடியன் இருப்பார்-இடையிடையே கதை தோய்ந்துபோகும் போது தனுடைய தமாஷ் நடிப்பின் மூலம் சரிகட்ட ,
ஒன்றோ இரேண்டோ வில்லன்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 5 - 10 அடியாட்கள்.
இவர்களும் படத்தின் விறுவிறுப்பை கூட்ட அடிகடி வந்து கதாநாயகனிடம் டிஷ்யூம் டிஷ்யூம் என்று அடி மட்டும் வாங்கி கொண்டு போவார்கள்.
கடைசியில் போலீஸ் வந்த இவர்களை கைதுசெய்து, வழக்கம்போல கதாநாயகனை வானளாவ புகழ்ந்து கைதிகளை அழைத்துசெல்ல...சுபம் !
இவர்களைப்போல் உள்ளவர்களுக்கு கட்டபொம்மன் உயிரை கொடுத்து சுதந்திரத்திற்கு வித்திடான் என்றாலும் ஒன்றுதான் .....ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்றாலும் ஒன்றுதான் ! பாவம் !
ஒரு நடிகன் என்பவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மக்கள் முன் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவனாக இருந்தால் தான் மக்கள் அதை ஏற்றுக்கொண்டு "இவரைப்போல நடிக்க இனி ஒருவர் பிறந்தால் கூட முடியாது என்று மனதார வாழ்திகூறுவர். அப்படி மக்களுடைய ஒருமித்த குரலில் வாழ்த்து பெற்று இவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவரும் வரமுடியாது என்று அகில உலகமும் ஏகமனதாக ஒத்துகொண்ட நடிகர் தான் "நடிகர் திலகம்".
இன்றளவும் தமிழகத்தில் பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய குழந்தைக்கு பள்ளி விழாக்களில் FANCY DRESS போட்டியில் கலந்துகொள்ளும்போது நடிகர் திலகம் கட்டபொம்மனாக வாழ்ந்த காவியத்தின் பாதிப்பில் தங்கள் குழந்தைக்கு கட்டபொம்மன் வேடம் புனைந்து போட்டிக்கு அனுப்பி வைகிறார்கள் !
ஏன் அவர்கள் நினைத்தால் இயற்கையாக நடிக்கிறோம் என்ற தவறான நினைப்புடன் நடிக்கும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருகிறார்கள் அவர்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒரு சாமானிய மனிதன், சாதாரண மனிதன் வேடம் இயற்கையாக இருக்கிறது என்று அதை செய்திருக்கலாமே ! அப்படி செய்தார்கள ?
இல்லை ! காரணம் அவர்களுக்கு தெரியும் நல்லது எது கெட்டது எது என்று ! அதனால் தான் கட்டபொம்மனை தேர்ந்தெடுகிறார்கள் ! அதற்க்கு காரணம் அவர்கள் மனதில் நம் நடிகர் திலகம் நிரந்தரமாக கட்டபொம்மனாக குடிகொண்டதுதான் ! அதற்க்கு சாட்சி இந்த காட்சி !!!!
http://www.youtube.com/watch?v=JXr2UuSwb-U
இந்த மழலை இந்த வசனத்தை உரைக்கும்போது அதுவும் " அங்கே கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா " எனும்போதும் , "துடிக்கிறது மீசை "என்று கூறும்போது பாருங்கள்....நம் நடிகர் திலகத்தின் செய்கை அப்படியே செய்யும் அழகை காண கண் கோடி வேண்டும் ! - அது தான் திரை உலக சித்தரின் நடிப்பின் வலிமை..!
அதுமட்டும் அல்ல ! வீட்டில் உள்ளவர்கள் கூட தங்கள் குழந்தைக்கு நம் நடிகர் திலகத்தின் கட்டபொம்மனை சொல்லிகொடுக்கும் அழகை பாருங்கள் !! இது எந்த இயற்க்கை நடிகரின் திரை கதாபாத்திரத்திற்கும் எக்காலத்திலும் கிடைக்காத ஒரு பாக்கியம் !
http://www.youtube.com/watch?v=0vjMN4NRGUs
http://www.youtube.com/watch?v=3RL3PFaufaA
இன்னும் தாழ்புணர்ச்சி கொண்டவர்களுக்கு உறைக்கும்படி கூறவேண்டும் என்றால் " வயிற்றெரிசலால் பொய்யை அந்த காலம் போல எல்லா காலங்களிலும் சொல்கிறார்களே "மிகைபடுத்தப்பட்ட" நடிப்பு என்று ! அதனால் தான் கற்றோர் மனதில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் திரை உலக சித்தராக கோயில் கொண்டுள்ளார் !
அதனால் தான் அவர் திரை உலக சித்தர் என்று கருதபடுகிறார்.
சுருக்கமாக சொன்னால்......."உலகம் இதிலே அடங்குது...உண்மையும் பொய்யும் விளங்குது........கலகம் வருது...தீருது....அச்சு கலையால் நிலைமை மாறுது......!!
http://www.youtube.com/watch?v=ePriq_xpWLo
மீண்டும் சந்திப்போம் !!!!
Dear Ravi Sir,
Thanks a ton for your kind gesture. It was so nice to have received your call complimenting the contribution.
It is not only me, but also our greatest contributors Mr.Neyveli Vasudevan, Mr.Raghavender, Mr.Pammalar, and who can forget our Mr.Gopal of Vietnam, Mr.Murali Srinivas and am sure you would have loved reading Mr.Karthik's contribution in all the threads.... They are all much more seasoned veterans than me.
As a matter of fact, Mr.Vasudevan, Mr.Gopal and Mr.Raghavender spends too much time only on this and publishes a very high quality contributions about our nadigar thilagam.
I shall also convey your appreciations to them here when you mentioned over the phone during our telecon.
Thanks once again sir...! We would be glad to see your contribution too ...in your view !
Regards
Subbu
திரு. கார்த்திக் அவர்களே
மிகவும் நன்றி தங்களுடைய பாராட்டிற்கு ! தங்களுடைய Contribution திரு.நெய்வேலியார், திரு.ராகவேந்திரர், திரு.கோபால், திரு.முரளி (on madurai related statistics) திரு.பம்மலர் இவர்களை விட பெரிதாக ஒன்றும் நான் இங்கு செய்துவிடவில்லை என்றே நினைகிறேன் !
உங்கள் அனைவருடைய ஊக்கமும் உந்துதலும் இருக்கின்றவரையில் என்னுடைய பங்களிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும்.
எல்லா பாராட்டும் நம் சித்தர் பொற்பாதங்களில் !
கோபால் சார்,
மிகவும் நன்றி !
என்னுடைய பதிவு மிக மிக சாதாரணம் ஆனால் தங்களுடைய "ஸ்கூல் ஒப் அக்டிங் " ஓவொன்றும் விலைமதிக்கமுடியாதவை. யாரேனும் பதிவெடுத்து நிஜமாகவே ஒரு சில changes செய்து புத்தகமாக போட்டுவிடபோகிரார்கள். !
The biggest theft happening these days is "Information Theft". May be you can copyright the same if there is a way out. !
Dear SR sir,
I sincerely extend my thanks for your appreciation and motivation. Mine is only an ordinary contribution when compared to Mr.Neyveliyaar, Mr.Raghavender or Mr.Gopal. Honestly, they inspired me to write and infact taught me how to write in Tamil here !
Similarly, "The Gentleman of Thread", Esvee Sir of our other thread also taught me how to do it in Tamil. I should thank him too !
Thanks once again !