http://i812.photobucket.com/albums/z...ps4e1e0444.jpg
Printable View
நண்பர்கள் ஜோ ரவிகிரண் சூரியா
தயவு செய்து தர்க்கத்தை நிறுத்துங்கள்
அத்துடன் உங்கள் தர்கப் பதிவுகளையும் நீக்கிவிடுங்கள்
Received Email from one of our Hub Reader
Sir please.thread is running smoothly.but why both hubbers fight unnecessarily.please stop the war.I am the regular reader to read this hub only.t.u
(Venu gopal)
venugopal93.a14@gmail.com
செலுலாய்ட் சோழன் – 68
(From Mr.Sudhangan's Facebook)
1963 வருடம் வந்த அத்தனை சிவாஜி படங்களுமே வித்யாசமானவை!
இரத்தத்திலகம் தவிர, இருவர் உள்ளம், கல்யாணியின் கணவன், குங்குமம், குலமகள் ராதை,நான் வணங்கும் தெய்வம், பார் மகளே பார்,
இதில் ` இருவர் உள்ளம்’ படம் எழுத்தாளர் லட்சுமியின் ` பெண் மனம்’ நாவல் தான் இந்தப் படம்!
படத்தின் தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்!
அதுவரையில் சிவாஜி நடித்த படங்களிலிருந்து, வித்யாசமாக சிவாஜி வித்யாசமாக நடித்திருந்த படம்!
இந்தப் படத்தில் எல்லோருக்குமே ஒரு வித்யாசமான கதாபாத்திரம்!
எம்.ஆர். ராதா இதில் ஒரு அடக்கமான குடும்பத்தலைவர் பாத்திரத்தில் நடித்திருப்பார்!
இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் மு. கருணாநிதி!
மு,கருணாநிதி எம்.எல்.ஏ. என்று டைட்டிலில் வரும்!
சிவாஜி ஒரு காதல் மன்னன்! அப்படித்தான் டைட்டிலில் பாட்டிலேயே அறிமுகமாவார்!
`பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! கொண்டாட்டம் பலவிதன், நான் அதிலே ஒருவிதம்!
இந்த பாடலிலேயே சிவாஜி ஒரு ப்ளேபாய் என்பதும், அவர் ஒவ்வொரு பெண்களோடும் ஆடுகிற மாதிரியும் வரும்!
பின்னாளில் பல பாலசந்தர் படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக உலா வந்த ஜெயந்தி இந்த பாடலில் ஒரு சில வரிகளுக்கு சிவாஜியுடம் நடனமாடிவிட்டுப் போவார்! பார்க்கிற பெண்களையெல்லாம் மடக்கி தன் வலையில் போட்டு அவர்களை ஏமாற்றுகிற பணக்கார வீட்டுப் பிள்ளை சிவாஜி! அப்போதுதான் படத்தின் கதாநாயகி சரோஜாதேவி அவர் கண்களில் படுவார்! மிகவும் ஒழுக்கமான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் வேடம் அவருக்கும்!
அவரை தன் வலையில் சிக்க வைக்க முயலுவார் சிவாஜி! அவர் லேசில் சிக்க மாட்டார்! இப்போது சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வருவார் சரோஜாதேவி! அது சிவாஜியின் வீடு என்பது அவருக்குத் தெரியாது!
முதல் நாள் ட்யூஷன் சொல்லிகொடுக்கும்போது அந்த அறையிலேயே உட்கார்ந்திருப்பார் சிவாஜி! கணக்கு சொல்லிக் கொடுக்க வந்த சரோஜாதேவி, சிவாஜி எதிரில் இருப்பதை பார்த்ததும், தன் மாணவியான சிவாஜியின் தங்கையிடம் சரோஜாதேவி, ` கணக்கை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல தமிழ் புத்தகத்தை எடு’ அந்த பெண் புத்தகத்தை எடுக்கும்போது சிவாஜியை பார்த்து ` நல்ல பாடம் கற்பிக்கிறேன்’ என்பார்! புத்தகத்தை எடுத்து, `மகாபாரதத்தில ஒரு சம்பவம்! யாசகம் பெறுவதல்ல காதல்! என்றறிவாய் மூட கீசகா ! செல்வாய் என்றாள்! கீசகன் சிரித்தான் ( லேசாக எதிரே இருக்கும் சிவாஜியைப் பார்ப்பார் ) இந்த வாசகம் போதுமென்றான் ! மங்கையை தொடவும் வந்தான்! ஆசையில் விழந்த அந்த அரக்கனே அழிந்தானம்மா ! என்று மெல்லிய குரலில் பாடுவார் சரோஜாதேவி! இந்தக் காட்சியின் இந்த வசனமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!
காரணம் படத்திற்கு வசனம் எழுதியது மு. கருணாநிதி! அவருடைய கட்சியும், கொள்கைகளும் ராமாயண, மகாபாரத்ததை ஏற்றுக்கொள்ளாதவர்கள்! அவர் இந்தக் காட்சியில் இப்படி எழுதியதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது! சரோஜாதேவி பாடியதும் எதிரே இருந்த சிவாஜி கைதட்டிப் பாராட்டுவார்! உடனே சரோஜாதேவி, சிவாஜியின் தங்கையான தன் மாணவியைப் பார்த்து பத்மா உனக்கு இதன் அர்த்தம் புரியலை போலிருக்கு! சொல்றேன் கேளு! திரெளபதி கிட்ட தவறாக நடக்க முயற்சித்தான் அந்த கீசகன்! அவள் இப்ப என்ன சொன்னாள் தெரியுமா ? என்பார்! உடனே சிவாஜி, ஒண்ணும் சொல்ல வேண்டாம் ! அவன் அங்கிருந்தே போய்விட்டான் என்று அந்த அறையை விட்டு நகருவார்! இப்படி மோதலில் ஆரம்பித்து இருவருக்கும் திருமணம் நடக்கும்!
சந்தர்ப்பவசத்தால் ஒரு பணக்காரனுக்கு மனைவியாகிவிட்ட சரோஜாதேவியால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! முதலிரவில் உங்கள் பணத்தினால் என்னை வாங்கி விட்டீர்கள்! நான் உங்கள் மனைவி! என் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால் என் உள்ளத்தை உங்களால் வாங்க முடியாது’ என்பார்!
அதுவரையில் விளையாட்டுப் பிள்ளையாக, பல பெண்களோடு விளையாடிய சிவாஜி, கெஞ்சுவார்! உன் உடல் தான் எனக்குத் தேவை என்றால் அது திருமணம் வரையில் வந்திருக்காது! சரி நீயாக விரும்புகிறவரையில் நான் உன்னை தொடமாட்டேன் ‘ என்று சபதமேற்பார்! படத்தின் விறுவிறுப்பு அப்போது கூடும்!
இந்தப் படத்திற்கு இசை கே.வி, மகாதேவன்!
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்!
ஆதிகாலத்தில் மனிதனுகு மொழி கிடையாது! அவனுக்கு துன்பம் வரும்போது அவன் அழுவான்!
கண்களில் கண்ணீர் வரும்போது அதை அழகை என்றார்கள்!
அவனுக்கு சந்தோஷம் வரும் போது அவன் துள்ளிக்குதித்தான்!
இப்படி மாறுபட்ட மனநிலைகளில் மனிதன் சத்தம் எழுப்பினான்!
அந்த வாயொலி தான் பின்னால் ஒழங்குபடுத்தப்பட்டு பாடல் என்றானது!
பாட்டை கேட்டதும் குழந்தை தூங்குகிறது! மகுடியின் இசைக்கு பாம்பு மயங்குகிறது!
பாட்டுக்கு அப்படி ஒரு அற்புத சக்தி உண்டு! பாவேந்தர் பாரதிதாசன் ` பாடாத தேனீக்கள், உலவாத தென்றல்! பசியாத நல்வயிறு பார்த்ததுண்டா!’ என்பார்! பாட்டுக்கு அந்த நாளில் அத்தனை முக்கியத்துவம் இருந்தது!
இருவர் உள்ளம் படமும் அதற்கு விதிவிலக்கல்ல! அத்தனை பாடல்களும் அதி அற்புதம்! இப்போது படத்தில் சிவாஜி, சரோஜாதேவி இருவரும் தம்பதிகள்! ஆனால் அவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது!’ அவர்களுக்குள் நடக்கும் இந்த பனிப்போர் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்குத் தெரியாது! இப்போது வீட்டில் ஒரு விசேஷம் !
அதில் மருமகள் சரோஜாதேவியைப் பாடச் சொல்வார்கள்! அப்போது அந்த சூழுலுக்கு அற்புதமான வரிகளை கொட்டியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!
` இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா !
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா!
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா!
உருவம் போடும் வேஷம் உண்மையாகுமா !
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா !
வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா !
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே!
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே!
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே!
இந்தப் பாடலும், அதற்கான காட்சியும் ரசிகர்களை சுண்டியிழுத்தது!
வானொலியில் ஒரு நாளைக்கு பலமுறை இந்த பாடலை ஒளிபரப்பினார்கள்!
ஏன் இப்படி இந்த வரிகள்! என்று பாட்டைக் கேட்டவர்கள் யோசித்தார்கள்!
( தொடரும்)
http://www.thehindu.com/news/cities/...cle7097711.ece
The Hindu
Sivaji’s film Santhi celebrates 50 years
Fifty years ago, Sivaji Ganesan’s film, Santhi, marked the end of a popular combination in Tamil cinema.
It was the last film in which Sivaji and M.R. Radha shared space on the silver screen.
This snippet was shared by T. Murali of Nadikar Thilakam Films Appreciation Association which organised a function on Sunday to the mark the 50 year of Santhi.
The film that was to be released on April 10 in 1965 was delayed by 12 days as the makers wanted a ‘U’ certificate instead of an ‘A’.
“Earlier, the Central Board of Film Certification thought of giving it an ‘A’. The makers thought such a certificate for those times would deter people from bringing their families to the film. So, it took them a little while to get a ‘U’ certificate,” he said.
Jayanthi Kannappan, daughter-in-law of A.L. Srinivasan who produced Santhi, brought the camera using which the film was shot 50 years ago.
“My father-in-law had the privilege of paying salaries to four Chief Ministers, including M. Karunanidhi, Jayalalithaa, M.G. Ramachandran and N.T. Rama Rao, for various films. Not just that, he also introduced five directors, including A. Bhim Singh and K.S. Gopalakrishnan,” she said.
The programme was followed by the screening of the film. The film’s cast included Sivaji, C.R. Vijayakumari, Devika and S.S. Rajendran, and was directed by Bhim Singh.
அவன் ஒரு சரித்திரம் 004:
கப்பலோட்டிய தமிழன். வெள்ளையரை எதிர்த்து கடல்வழி வாணிபம் செய்ய சொந்தமாக கப்பல் வாங்கி வணிகம் செய்தவர். தென்னிந்தியாவின் தென்பகுதி மாவட்டங்களில் வெள்ளையரை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்டவர். இவரை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் அவர் பல்வேறு கடின வேலைகளை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார். கல் உடைத்தார். செக்கிழுத்தார். "செக்கிழுத்த செம்மல்" என்றும் இவரை கூறுவர். நடிகர் திலகம் இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தபோது இருந்த கம்பீரத்தையும், சிறையில் கடின உழைப்பின் மூலம் வாடுவதையும், நம் கண் முன்னே நிறுத்தினார். வ உ சி யின் மகனே, நடிகர் திலகத்தைப் பார்த்தால் எங்கள் தந்தையாரைப் பார்த்தது போலவே இருக்கிறது என்று பாராட்டும் அளவுக்கு இவரது நடிப்பு இருந்தது. சிறையில் இவர் வாடும் காட்சிகள் கொண்ட "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்" என்ற பாடல் உங்களுடன் பகிர்கின்றேன்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...ab68bfde81bf6c
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...b6&oe=55A50868
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://www.facebook.com/video.php?v=1524395341170158
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
நடிகர்திலகம் புகழ் உரைக்கும் அனைத்து திரி நண்பர்களுக்கும் என்றும் புன்முறுவல் தவழ்ந்திட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
திரு,தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் பத்திரிகையில் நடிகர்திலகம் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் தொடர்ந்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை பற்றி எழுதுகிறார். அனைவரும் வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்,
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...d49f49b80b5a22
https://scontent-sin.xx.fbcdn.net/hp...74&oe=55AF6D74
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...3dc15124c79213
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...9f&oe=55DF866B
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
ஜோ,
நாம் பலமுறை இங்கே விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். குறிப்பாக அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறோம். காரசாரமாக விவாதித்திருக்கிறோம். ஆனால் ஒரு நாளும் நீங்கள் தரம் தாழ்ந்தோ அல்லது ஒருமை விளிகளை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால் நேற்று நீங்கள் பயன்படுத்திய வாக்குகளும் உங்கள் பதிவின் தொனியும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்பதை சொல்ல விரும்புகிறேன்.
அன்புடன்
ஆர்கேஎஸ்,
உங்கள் பங்கிற்கு நீங்களும் தரம் தாழ்ந்து வார்த்தைகளை கொட்டியிருக்கிறீர்கள். அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என நீங்கள் சொல்லலாம். இருந்தாலும் கூட நீங்கள் பொறுமை காத்திருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த திரியில் அரசியல் தேவையா என்று கேள்வி கேட்ட நீங்களே அந்த அரசியலை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டாம். இனி மேலாவது நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட கலையுலக செய்திகளை மட்டும் பதிவிடுங்கள்..
அன்புடன்
எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
செல்வகுமார் சார்,
சத்தியமாக இப்படி ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் நட்பான முறையில்தான் உங்களிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தேன். கோபாலுக்கு வக்காலத்து வாங்கி எழுப்பட்ட கேள்விகள் அல்ல அது. பல நாட்களாக உங்கள் இருவரிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்ததுதான். கோபாலுக்கு நீங்கள் போட்ட பதில் அதற்கு ஒரு காரணியாக அமைந்திருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் உங்கள் பதிலை பார்த்தவுடன்தான் அதில் தெறிக்கும் கோபத்தை பார்த்தவுடன்தான் என் தவறு எனக்கு புரிந்தது. உங்களை கேள்வி கேட்க கூடாது என்று எனக்கு தெரியாது. தெரியாமல் நடந்த தவறை மன்னிக்கவும்.
என் செய்கைக்கு ஒரு உள்நோக்கமும் கற்பித்திருக்கிறீர்கள். சிவாஜியை திட்டினாலும் பரவாயில்லை. எம்ஜிஆரை குறை கூறுவதால் கோபாலை ஆதரிக்கிறேன் என்று. நான் யாரையும் என்றுமே திட்டியதில்லை. இந்த இணையதளத்தில் 9 வருடங்களாக பயணிக்கிறேன். நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை நான் நேரிடையாகவே சொல்லி விடுவேன் எனக்கு வேறு யார் துணையும் தேவையில்லை. இங்கே தொடர்ந்து வருபவர்களுக்கு நான் சொலவது புரியும்.
இனி நீங்களும் சரி கலைவேந்தனும் சரி சென்ற வாரம் கோபால் எழுதிய சில பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டு நான் அதை கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். உண்மையில் நடந்தது என்ன என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடப்பது ஏப்ரல் 3 வெள்ளியன்று. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்தேன். சென்ற இடத்தில கணினி இல்லை. என்னிடம் laptop மற்றும் mobile-ல் படிக்கும் வசதிகளும் இல்லாததால் என்னால் மய்யம் இணையதளத்தை பார்க்க முடியவில்லை. சென்ற இடத்தில அலைபேசி சிக்னலும் இல்லை என்பதால் நான் எவருடனும் அல்லது மற்றவர்கள் என்னிடமோ தொடர்பு கொள்ள இயலாத சூழல். இரவு 10 மணிக்கு மேல் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியில் வந்தபோது அலைபேசியில் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் திரியில் பதியப்பட்ட சில விரும்பத்தகாத பதிவுகளைப் பற்றி குறிப்பிட்டார், என்னால் access பண்ண முடியாத காரணத்தினால் உடனே மலேசியாவில் வசிக்கும் ஹப் அட்மினை (Hub Admin ) சார்ந்த சீனியர் மாடரேட்டரான NOV அவர்களை தொடர்பு கொண்டு (மலேசியாவில் அப்போது நள்ளிரவு) விஷயத்தை விளக்கி பதிவுகளை நீக்கி விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் நமது இந்திய நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலை சர்ச்சைக்குரிய பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட்டார். நான் ஞாயிறு நள்ளிரவுதான் சென்னை வந்தேன். என்னால் திங்கள் மாலைதான் ஹப் பர்ர்க்க முடிந்தது. பதிவுகள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தினங்கள் ஆன நிலையில் மீண்டும் நடந்தவற்றைப் பற்றி பகிரங்கமாக குத்தி கிளற விரும்பவில்லை. இவை அனைத்தும் ராகவேந்தர் சாருக்கு தெரியும். மற்ற பல ஹாப் உறுப்பினர்களுக்கும் தெரியும்.
இப்போதும் கூட இவற்றையெல்லாம் சொல்லித்தான் என் நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த விவரங்களெல்லாம் தெரியாத திரியின் வாசகர்கள் ஒரு சிலருக்கேனும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருக்குமானால் அவர்களுக்காகவே இந்த விளக்கம்.
நான் மாடரேட்டர் ஆன பிறகு மிக அதிகமாக எடிட் செய்தது கோபாலின் பதிவுகளைத்தான். அதையும் நான் திரியில் பதிவு செய்திருக்கிறேன். ஆக கோபாலுக்கு சலுகை என்பதெல்லாம் அவரவர் கற்பனையே தவிர வேறொன்றில்லை
Current Affairs section பற்றி சொன்னது உங்களை அங்கே போய் எழுத் சொல்லவில்லை. அரசியல் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் இடம் என்பதை மட்டுமே சுட்டிக் காட்டினேன்.
அதே போல் எம்ஜிஆர் பற்றி விமர்சனம் வந்தால் எதிர்ப்போம். ஆனால் கருணாநிதி பற்றி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். புரிந்துக் கொண்டேன்.
அதே போல் இந்த திரியில் காங்கிரஸ்காரர்கள் யாருமில்லை. ஆகவே இன்றைய தமிழக காங்கிரஸில் நடைபெறும் விஷயங்களை நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளார்களோடு தொடர்புபடுத்துவதை தவிர்க்கலாமே என்றுதான் சொன்னேன். அதற்கும் நீங்கள் தொடர்பேயில்லாமல் ஏதோ சொல்லியிருக்கிறீர்கள்.
இறுதியில் முக்கியமான ஒன்றை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த திரியின் நடுநிலை பற்றி. அந்த வார்த்தைக்கு அர்த்தமே இந்த நடிகர் திலகம் திரிதான். நீங்கள் கலைவேந்தன் இளைய சகோதரர் யுகேஷ் பாபு போன்றவர்கள் பலமுறை கடுமையான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவை அனைத்தும் இன்னமும் அதே போல்தான் இருக்கிறது. இவ்வளவு ஏன், நண்பர் கலைவேந்தனின் பதிவுகளில் இருந்த ஒரு சில முரண்களை நான் சுட்டிக் காட்டியபோது என் மீது கோவம் கொண்டு என்னை வரலாறு தெரியாதவன் என்று எழுதினார். அதைகூட நீக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறோம். நடிகர் திலகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூட நாங்கள் நீக்கியதில்லை.
என்னால் இனி உங்களுக்கு தொந்தரவு இருக்காது. வருகை தந்து பதில் சொன்னதற்கு நன்றி!
அன்புடன்
எம்ஜிஆர் திரியின் பங்களிப்பாளர் திரு c.s..குமார் அவர்களுக்கு,
என்னைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய பதிவை படித்தேன்.
நான் உங்களைப் பார்த்ததில்லை. பேசியதில்லை. பழகியதில்லை. ஆனால் நண்பர் சுவாமி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் அண்மையில்தான் ஹப்பில் சேர்ந்திருந்தாலும் பல வருடங்களாக திரிகளை வாசித்து வருபவர் என்று சொல்யிருக்கிறார். அப்படி இருந்தும் உங்கள் புரிதலில் நான் மாறுபட்டு நிற்கிறேன் என்று புரிகிறது. என்னைப் பற்றி எழுதியதற்கும், உங்கள் புரிதலுக்கும் அந்த புரிதலுக்கு காரணமாக இருந்த உங்கள் நல்ல மனதுக்கும் என் நன்றி!
அன்புடன்
நண்பர் கலைவேந்தன்,
நான் சொல்லுவதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. இல்லை உங்களைப் போல் என்னால் தெளிவாக எழுத முடியாததும் அதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். 1972 ஆகஸ்ட் மதுரை திமுக மாநாட்டில் எம்ஜிஆர் அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டேன். அவர் பேசியது உண்மை. அதை நீங்கள் மறுக்கவில்லை. அதற்கு சிவாஜியும் ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கினார் என்று சொன்னீர்கள். ஒரு தவறு மற்றொரு தவறை நியாயப்படுத்திவிடாது என்பது என் எண்ணம். இருப்பினும் ஒரு விவாதம் என்ற முறையில் அதை ஒப்புக் கொண்டாலும் கூட அதை தொடர்ந்து சிவாஜி பற்றி கருணாநிதி சொன்னதாக நீங்கள் சொன்னதைத்தான் நான் எதிர்த்தேன். அதை சொல்வதற்கு என்ன தேவை வந்தது? அதை சுட்டிக் காட்டியும் கூட நீங்கள் அதை நீக்கவில்லை. பிறகு மதுர கானங்கள் திரியில் வாசுவிடமும் ராகவேந்தர் சாரிடமும் மன்னிப்பு கேட்டீர்கள் (விஷயம் என்னவென்று சொல்லாமலே). பரவாயில்லை.
எம்ஜிஆரைப் பற்றி ஒன்று சொல்லி விட்டார் ஆகவே நாமும் பதிலுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது போலதான் நடந்து கொள்கிறீர்கள் என்பதுதான் நான் குறிப்பிட்டது. எம்ஜிஆரைப் பற்றி நாங்கள் எதாவது சொன்னால் நீங்கள் எதிர் வினையாற்றக் கூடாது என்று சொல்லவில்லை. காரண காரியங்களோடு பதில் இருந்தால் ஏன் இதை சொல்லப் போகிறோம்?.
1971 தேர்தல் பற்றி ரஷ்ய மை பற்றி நான் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டுகிறீர்கள். அது நான் இட்டுக் கட்டிய கட்டுக் கதையல்ல நண்பரே! அன்றைய தினம் பல்வேறு பத்திரிக்கைகளில் பருவ இதழ்களில் வெளி வந்த தகவல்களைதான் நான் குறிப்பிட்டேன். அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன என்பதுதான் அதன் சாரம். இவ்வளவு ஏன் அன்றைய பொதுத் தேர்தலில் சென்னையில் நடிகர் திலகம் அவர்களின் வாக்கையே வேறு ஆளை வைத்து கள்ள ஓட்டுப் போட்டது உலகம் அறிந்த ஒன்றுதானே!
"ரஷ்ய மையெல்லாம் இல்லேனேன்! மக்கள் நமக்கு ஓட்டுப் போடலனேன்! அவ்வளவுதான்" என்று பெருந்தலைவர் குறிப்பிட்டது உண்மை. அது அவரின் பெருந்தன்மை. இப்படி பெருந்தலைவர் சொன்னதையும் இதே நடிகர் திலகம் திரியில் நான் பதிவு செய்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வது?
எவரையும் வேண்டுமென்றே குற்றம் சொல்வது எனது நோக்கம் அல்ல. சில விஷயங்களைப் பற்றி எழுதும்போது உங்களுக்கு அது தர்மசங்கடமான கோணமாக இருக்கலாம். ஒவ்வாமையாக இருக்கலாம். அதற்காக எழுதியவர்கலைப் பழிப்பது என்பது சரியா எனபதுதான் என் கேள்வி?
1975 அக்டோபர் 2 -கு முன்பு இருந்த காங்கிரஸ் பற்றி ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயமாக அதற்கான நேரம் காலம் கூடி வரும்போது செய்வோம்
செலவகுமார் சாருக்கும் உங்களுக்கு இத்தனை விளக்கமாக பதில் எழுதுவது நிலைப்பாட்டை விளக்கவே! விவாதங்களை வளர்க்க அல்ல!
புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்
அன்புடன்
உலகெங்கும் வாழும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இந்த திரி பங்களிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
சென்ற வாரம் என் மகன் படம் முரசு tv யில் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.இரட்டை வேடத்தை மிக அழகாக,எளிதாக கையாண்டதை இந்த வயதில்தான் புரிந்து ரசிக்க முடிந்தது.நாம் எவ்வளவுதான் படித்திருந்தாலும் எத்தனை முறை தான் பார்த்து ரசித்தாலும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு புது படம் பார்த்ததை போன்றே உணர்வை தருபது தான் நடிகர்திலகம் படங்கள்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...c3&oe=559DF051
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
திரு முரளி அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .நான் கடந்த 9 வருடங்களாக மையம் திரியில் இடம் பெற்ற பல் வேறு திரிகளை தொடர்ந்து படித்து வருகிறேன் .நடிகர் திலகம் திரியில் உள்ள 36 திரிகளில் 40,993 பதிவுகளை படித்து உள்ளேன் . திரு ராகவேந்திரன் , திரு பம்மலார் ,திரு கார்த்திக் , நெய்வேலி திரு வாசுதேவன், திரு கோபால் மற்றும் உங்கள் பதிவுகளை படித்து ரசித்தவன் . பல அரிய தகவல்கள் , கட்டுரைகள் , ஆவணங்கள் , அபூர்வ விளம்பரங்கள் கண்டு மகிழ்ந்தவன் .
ஆரோக்கியமான விவாதங்கள் , விளக்கங்கள் என்றுமே பயன் தரும் . ஆனால் தேவை இல்லாமல்ஒருவரை பிடிக்கவில்லை [ அரசியல் அல்லது சினிமா ] என்றால் அவரை பற்றி ஒரு எல்லைக்குள் விமர்சனம் செய்தால் எந்த பாதிப்பும் வராது . எல்லை மீறும் போது மனத்தாங்கல் உண்டாகும் அளவிற்கு சென்று விடுகிறது . இது இருவருக்கும் பொருந்தும் . இனி வரும் காலத்தில் அவரவர் புகழ் பற்றி பதிவிட்டு வந்தால் இரு தரப்பினருக்கும் நல்ல புரிதல் தொடரும் என்பது என் கருத்து .
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.
https://lh3.googleusercontent.com/-7...672-no/lig.jpg
சகோதரி சாரதா
என்னை உங்களுக்கு தெரியாது
நான் ஹப்பில் இணைந்தபொழுது
தாங்கள் ஹப்பில் வருவது நின்றுவிட்டது
தங்கள் எழுத்துக்கள் மிகவும் பாரட்டதக்கவை
மிகவும் ரசித்து வாசித்துள்ளேன்
நீண்ட நாட்களின் பின்
தாங்கள் இணையத்தக்கு வந்துள்ளீர்கள்
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்
நடிகர் திலகம் பற்றிய
தங்களின் புதிய படைப்புகளை
ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
நன்றி
Quote:
saradhaa_sn http://www.mayyam.com/talk/images/st...ser-online.png
Senior Member
Veteran Hubber http://www.mayyam.com/talk/images/misc/unknown.gif
- http://www.mayyam.com/talk/images/site_icons/add.png Add as Friend
- http://www.mayyam.com/talk/images/si...ns/message.png Send Private Message
- http://www.mayyam.com/talk/images/site_icons/ignore.png Add to Ignore List
- http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png Find latest posts
- http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png Find latest started threads
- http://www.mayyam.com/talk/images/site_icons/forum.png View Conversations
Mini Statistics
Join Date 13th July 2005
Last Activity Today 10:56 AM
- Avatar
http://www.mayyam.com/talk/image.php...642&type=thumb
அனைத்து திரி பங்களிப்பாளர்களுக்கும் ,வாசிப்பாளர்களுக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் திரியில் வந்த பிறகு சாரதா அவர்களின் பதிவு வரவே இல்லை. இப்போது வருகை தரும் கட்டியம் வந்து விட்டது. அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் என்ற வகையில் அவருக்கு எனது சிறப்பான பிரத்யேக வாழ்த்துக்களை தெரிவித்து.அவர் திரிக்கு மீண்டும் வரும் நாளை எதிர்நோக்கி இருப்பேன்.
முரளி சார்
முதற்க்கண் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தெரிவிக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். அனைவரும் அனைத்து நலமும் பெற இறைவனோடு கலந்திட்ட நடிகர் திலகம் அவர்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.
உங்கள் பதிவை படித்தேன். நான் பதில் புனைந்திருக்க கூடாதுதான். என்ன செய்ய ?
அதர்மம் தலைவிரித்தாடும்போது தர்மம் தானாக முன்வந்து அதனை அழிப்பதும் இயற்கையாக நடக்கும் ஒரு சம்பவம்தானே. அதுபோல இதுவும் நடந்துவிட்டது...! வருந்துகிறேன்..நீங்கள் வருந்தியதர்க்காக மட்டும் !
நிச்சயம் கட்டுபடுத்திகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் திரும்பவும் ஆசியா நாடுகளில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து அநியாயத்திற்கு ஆதரவான தவறான குரல் வரும்பட்சத்தில் ...எப்படி கட்டுபடுத்திகொள்வது சார்..
விளக்கின் ஒளியில் நல்ல புத்தகங்களை படித்து அறிவுபசியும் ஆறலாம்...அல்லது அந்த ஒளியில் இருந்து ஒரு தீக்குச்சியை பற்றவைத்து குடிசையும் எரிக்கலாம்....அவர் அவர்கள் மன நிலை பொறுத்த விஷயமாகிறது.
நடிகர் திலகத்தை critic என்ற பெயரில் போர்வையில் எவன் வசைபாடினாலும் எனது இசையிலிருந்து மட்டும் நிச்சயம் தப்ப முடியாது. இங்கிருப்பவராக இருந்தாலும் சரி...என்கிருப்பவராக இருந்தாலும் சரி..!
காரணம் ! நடிகர் திலகம் அவர்களை வசை பாடும் வாய்கள் நடுநிலை கடைபிடிக்காதவை. ஆகவே..அவர்களை தாலோலிப்பது கடினமாகிறது. !
மூட்டிவிடும் நாரத குணம் கொண்டவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக்கொண்டு தம்முடைய வரையறைக்குள் இருந்தால் எனது இசை இசையாக இருக்கும், இல்லையென்றால் வசையாக மாறாமல் என்ன செய்ய முடியும் சார் ..!
என் பதிவு மற்றவர் பதிவினை பொறுத்து அமைவதே. நடிகர் திலகம் அவர்களை, அவர் ரசிகர்களை மறைமுகமாக தாக்கி எழுதாமல் இருக்கும் வரை இந்த கிரணின் கதிர்கள் அவர்களை தாக்காது ! இது என்னுடைய வாக்கு !
Rks
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
திரு.முரளி, உங்களுக்கு நேற்று இரவே மக்கள் திலகம் திரியில் பதில் அளித்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், திரு.சந்திரசேகர் நேற்று ஒரு இமெயில் பதிவிட்டிருந்தார். அதில் திரு.வேணுகோபால் என்பவர் இந்த திரியை மட்டுமே படிப்பதாக கூறியிருந்தார். அதுபோல, இந்த திரியை மட்டுமே படிப்பவர்கள், என் மீதான உங்கள் குற்றச்சாட்டை பார்த்து விட்டு என்னை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக, எனது விளக்கத்தை இங்கேயும் பதிவிடுகிறேன். அதை கீழே தருகிறேன். நன்றி.
------------------
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி மக்கள் திலகம் திரியில் உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?
என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜி படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். ‘அவமானப்பட்டு விடுவோம்’ என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.
அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.
மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு கடுமையாக பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்றும் என்னை தவறாக நினைக்கக் கூடாதே என்றும் மன்னிப்பு கோரினேன்.
நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?
ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?
அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :
முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.
எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.
ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.
அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.
எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !
சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?
என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.
சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.
நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.
நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.
ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்
http://i57.tinypic.com/r0basp.png
யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.
நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.
நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சிங்க நாதம் 1 : வீரபாண்டிய கட்டபொம்மன் புகழாரம்
இன்று மாலை ராஜ் டிவியில் ஒளிபரப்பான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மீள் வெளியீட்டு டிரைலர் விழாவில் பங்கெடுத்த அனைவரும் நடிகர்திலகத்தின்
புகழை மேம்பட உரைத்தனர். தமிழ் திரையுலகின் திலகப் படமான கட்டபொம்மன் சிறப்பான மறு வெளியீட்டு வசூல் சாதனை படைத்திட விழைகிறேன்.
கருத்துவேறுபாடுகளின்றி நடிகர்திலகத்தின் புகழை நிலைநிறுத்துவோம்
Quote:
Braveheart surrendering to Sweetheart?!
இரும்பு நெஞ்சுக்குள்ளும் இளக்கம் உண்டே ! இமை மூடித் தூங்க வேண்டுமே !!
NT the soft centered steel ! The Sleeping Volcano!! A Blazing Magnum!!! The dormant Geyser !!!
But....What a hands up surrender by the braveheart roaring lion to this sweetheart child warrior !
https://www.youtube.com/watch?v=p1Vgm2Mbvkw
http://i1098.photobucket.com/albums/...hangi00001.jpg
ராணி லலிதாங்கி
http://i1098.photobucket.com/albums/...hangi00003.jpg
ராணி லலிதாங்கி
அன்பிற்கினிய பேராசிரியர் அவர்களுக்கு
திராவிட இயக்கங்கள் பற்றி மோசமான விமர்சனம் என்று ஒரு வாக்கியம் படித்ததால் விமர்சித்தது நான் ஒருவனும் கூட என்கிற காரணத்தால் இதற்க்கு பதில் கூற கடமைபட்டுள்ளேன்.
நடிகர் திலகம் அவர்களை தவறாக விமர்சித்து திராவிட இயக்கத்தை தூக்கி பிட்ப்பவர்களுக்கு என்னுடைய விமர்சனம் காட்டமாக தான் தெரியும். காரணம் அது குற்ற உணர்ச்சி. வேறு ஒன்றும் இல்லை.
தெருத்தெருவாக சென்று இவர்களின் நாடகங்களின் வசனம் பேசி வசூல் செய்து கட்சி நிதி கொடுக்க, சம்பாதித்ததில் ஒரு பங்கு, நாடகம் நடித்து அதில் ஒரு பங்கு, தெருத்தெருவாக வசனம் பேசி அதன் முழுபங்கு, இப்படி காசுக்கு மட்டும் கணேசன் தேவைப்பட்டார் ஒரு காலத்தில் திராவிட தலைவர்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும்.
புகழின் உச்சியில் எவரைகாட்டிலும் அதிவேகமாக பயணித்து மக்கள் அன்பிற்கு அதிக அளவில் பாத்திரமாகி..திரும்பும் திக்கெல்லாம் கணேசன்..கணேசன்...என்ற ஒரு நாமம். எங்கே கட்சி இவன் வசமாகிவிடுமோ என்ற ஒரு பயத்தில் குழிதோண்டி அவமானபடுத்தி அவரே கட்சியை விட்டு வெளியேறும் அளவிற்கு ஒரு குடைச்சல் கொடுக்கல் !
சரி...கட்சியில் இருந்து போயாகிவிட்டது ...அதற்க்கு பிறகு சும்மா விட்டார்களா...துரத்தி ..துரத்தி...character assassination வேறு...! சிவாஜி காசு குடுக்கமாட்டார்...அவர் கருமி...இத்தியாதி..இத்தியாதி...இந்த பல்லவி ....நடிகர் திலகத்திடம் வாங்கிய பணம்...அவரால் கட்சிக்கு அதுவரை வசூலித்து கொடுக்கப்பட்ட அதிக அளவு நிதி.....இதெல்லாம் திமுக விற்கு வேறு யார் செய்து கொடுத்தது நடிகர் திலகம் அல்லாமல் ? சினிமாவிற்குள் அரசியல் புகுத்தியது திராவிட கலாசாரம் ..! கலையை கிண்டல் அடிப்பார்கள்...ஆனால் காசு மட்டும் கலைத்துறை கொட்டி கொடுக்கவேண்டும்...இது திராவிட நியதி !
இப்படி...ஒவ்வொரு தருணத்திலும் நடிகர் திலகத்தை மற்ற எவரை காட்டிலும் அதிக பிஸியாக 20 மணி நேரம்...மூன்று ஷிப்ட் தேமேன வேலை செய்துகொண்டிருப்பவரை, வேண்டுமென்றே வம்புக்கிழுத்து வீம்பளன்தது இதே திராவிட இயக்கம் அதன் தலைகள் தான் !
பேரறிஞரை நான் ஒரு போதும் குறை கூறமாட்டேன்...காரணம், அவர் ஒரு அப்ரானியாக இருந்தார் ஒரு வட்டத்திற்குள். எல்லாம் தெரிந்தும் எடுக்கவேண்டிய முடிவுகளை அவர் தலைவராக நிச்சயம் எடுக்கவில்லை. அப்படி அவர் எடுத்திருந்தால் நடிகர் திலகம் அவர்களுக்கு பதிலாக முதல் முதலில் மேடையில் அறிமுகபடுத்தப்படும் மக்கள் திலகம் அவர்கள் வரவேற்றுவிட்டு...அதிக நிதி வசூல் செய்து கொடுத்தது சிவாஜி கணேசன் என்ற உண்மையை அவர் கூறியிருக்கவேண்டும் ! அதை அவர் செய்யவில்லை...!
நடிகர் திலகம் அவர்கள் உலகபுகழ் அடைந்தபோதுகூட, நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு வழி அனுப்ப யாரும் இல்லை...அவரை மரியாதை செய்து வழி அனுப்பியது ஹிந்தி திரை உலகம் ! இதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை....இதன் வெளிப்பாடாக நடிகர் திலகம் திரும்பி வரும்போது வேறு வழியில்லாமல் அவரை வரவேற்க இசைந்தனர் ! இதுதானே உண்மை ? காலையில் அரசியல் புகுத்தியது யார்...? மக்கள் திலகமா ? இல்லையே ! திராவிட தலைவர்கள் தானே ?
அமெரிக்க அதிபராம் john f kennedy தமிழகத்தில் உள்ள ஒரு நடிகனை பற்றி விசாரித்து தகுதி அறிந்து அவரை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக அழைக்கிறார்...அதுவும் இந்திய நடிகர்களில் அதுவரை எவரையும் இதுபோல மரியாதை செய்ததில்லை. அப்படி ஒரு புகழ் ஒரு அமெரிக்க அதிபர் கொடுக்கும்போது...வாழ்த்தி வழியனுப்பாமல் அரசியல் காழ்புணர்ச்சி காட்டியது...திராவிட பாரம்பர்யம்...!
இது போல எவ்வளவோ சம்பவங்கள் சார் ...! இதனால் நான் விமர்சனம் செய்யவில்லை.
உண்மை இப்படி இருக்க...நடிகர் திலகம் அவர்களை அவதூறு பேசி...தமிழ்....தமிழன்....திராவிடம்..திராவிடம ் என்று கூறுபவர்கள் ஒரு தமிழனை ...இவர்களை விட ஒருபடி மேலான agmark தமிழ் வித்தை கிண்டல் செய்யும் போதும் கேவலபடுத்தும்போதும் திராவிட மூட கொள்கைகளை ஞ்யயபடுத்தும்போது நான் விமர்சனம் செய்துள்ளேன். கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். இல்லை என்று கூறவில்லை. இதுபோல செயல்கள் தொடரும் பட்சத்தில் இனியும் தங்களை போல நானும் மனசாட்சிபடி பதில் பதிவிடும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறேன்
இதுதான் இதுவரை நடந்துகொண்டிருந்தது..! நான் விமர்சனம் செய்த காரணம் இதுவே !
Rks
முதன் முறையாக நடிகர் திலகத்தின் திரிக்கு வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவு செய்த திரு சி.எஸ். குமார் அவர்களே உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்
ஆர்கேஎஸ்,
மீண்டும் ஒரு மோதல் தொனியில் பதிவுகள் இட வேண்டாமே! நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று நீங்கள் சொல்லும்போது மொத்த திராவிட இயக்கத்தையும் பழிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை குறிப்பிடுங்கள் என்கிறார்கள்.
நான் நேற்றே சொன்னதுபோல் அரசியல் தவிர்த்து (அது தேவைப்படும் நேரத்தில் மட்டும் பேசலாமே) நடிகர் திலகத்தின் கலைப் பயணம் பற்றி பேசலாம்.
அன்புடன்
நண்பர் கலைவேந்தன் அவர்களே,
உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
எனக்கு தெரிந்து நமக்குள் நடக்கும் விவாதம் முடிவடையாமல் நீண்டு கொண்டே போகும். நான் சொல்ல வருவதை உங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதற்கு ஒரு வேளை நான் நேற்று குறிப்பிட்டது போல் உங்கள் அளவிற்கு எழுத்து திறமை என்னிடம் இல்லாமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆகவே நாம் மாறி மாறி இதைப் பற்றி விவாதம் செய்து திரியின் வாசகர்களை சோதிக்க வேண்டாம்.
நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொண்டால் விஷயம் முடிந்து விடும் அல்லவா? ஆகவே தவறு என்னுடையதாகவே இருக்கட்டும். இதை நான் விட்டுக் கொடுப்பதாக நினைத்து சொல்லவில்லை. நான் நேற்றே குறிப்பிட்டது போல் நான் சொல்லுகின்ற கோணம் உங்களுக்கு தவறாக எதிர்மறையாக தோன்றுகின்ற வாய்ப்பு இருப்பதனால் சொல்கிறேன்.
ஒரே ஒரு சிறு விளக்கம் மட்டும். உங்கள் முரணை நான் சுட்டிக் காட்டினேன் என்பதும் அதன் காரணமாக நீங்கள் ஒரு வாசகத்தை பயன்படுத்தினீர்கள் என்பதும் உண்மை.
நான் சுட்டிக் காட்டிய முரண்
நீங்கள் ஒரு முறை கண்ணியம் பற்றி கோபாலுக்கு அறிவுரை சொன்னீர்கள். அதற்கு நான் சொன்னேன் ராஜ ராஜ சோழன் சென்னை ராம் திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்று நீங்கள் (கலைவேந்தன்) சொன்னீர்கள். அது தவறு, ராஜ ராஜ சோழன் ராம் திரையரங்கிலே வெளியாகவேயில்லை என்று பத்திரிக்கை விளம்பரம் மூலம் நிரூபித்த பிறகும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் கண்ணியம் உங்களுக்கு இல்லையே என்று நான் குறிப்பிட்டிருந்தேன். உடனே அடுத்த நாளே நீங்கள் சிவாஜி, எம்ஜிஆர் திரிகளிலும் ஒரே போன்ற பதிலை பதிவு செய்தீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தீர்கள் "சித்ரா கிருஷ்ணசுவாமிக்கும் சக்தி கிருஷ்ணசுவாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களைப் (அதாவது என்னை சொல்கிறீர்கள்) போய் உங்கள் நண்பர்கள் வரலாற்று களஞ்சியம் என்று சொல்கிறார்கள்" என்று எழுதினீர்கள்.
அதற்கு நான் கூட " என்னை நான் அப்படி நினைத்துக் கொளவதில்லை. அன்பின்பால் நண்பர்கள் அப்படி சொன்னாலும் அதை தலையில் ஏற்றிக் கொளவதில்லை. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி" என்று பதில் சொல்லியிருந்தேன். இந்த விஷயத்தைதான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். உங்கள் அளவிற்கு நினைவாற்றல் இல்லையென்றாலும் கூட ஏதோ ஒரளவிற்கு ஞாபக சக்தி இருக்கிறது சார்.
முதல் பாராவில் குறிப்பிட்டிருந்தது போல் எதையும் மீண்டும் விளக்கமளித்து விவாதம் செய்ய வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் திரியின் வாசகர்கள் நீங்கள் சொல்வது போல் நான் ஏதோ பொய்யுரைத்தேன் என்று நினைத்து விடக் கூடாதே என்பதற்காகவே இந்த விளக்கம் மட்டும் அளித்தேன்.
நான் முதலில் குறிப்பிட்டது போல் தவறுகள் என்னுடையதாகவே இருக்கட்டும். நாம் விவாதத்தை விட்டு விட்டு நண்பர்களாக தொடர்வோம்.
அன்புடன்
செல்வகுமார் சார்,
உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு சொன்னது போல் ஏதோ ஒரு communication gap நமக்குள் அதாவது திரிகளுக்குள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே நாம் விவாதம் முடிவடையாமல் நீண்டுக் கொண்டே போகிறது. அவரிடம் சொன்னது போல் விவாதங்களை வளர்க்காமல் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில அடிப்படையான குற்றசாட்டுகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கமளிக்க விரும்புகிறேன்.
கோபால் பற்றிய குற்றசாட்டு. நான் நேற்றே சொன்னது போல் மிக அதிகமாக எடிட் செய்ததும் கோபாலின் பதிவுகளைத்தான். அதிகமாக அறிவுரை சொன்னதும் அல்லது கண்டிப்பு வார்த்தைகளை பயன்படுத்தியதும் கோபாலிடம்தான். இதற்கும் மேலாக நேற்று கண்டிக்கவில்லையே அதற்கு முதல் நாள் கண்டிக்கவில்லையே என்று சொன்னால் என்ன சொல்வது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் இனி மேல் நீங்கள் சுட்டிக் காட்டும்படியான யார் மனதையும் புண்படுத்தும் பதிவுகள் எதுவும் கோபால் தரப்பிலிருந்து வராது.
திரு ரவி அவர்கள் பற்றி கோபால் எழுதிய பதிவை குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமென்றால் அந்த வரிகள்/வார்த்தைகள நீக்கப்பட்டு விட்டன. இல்லை அது நீக்கப்படாமல் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் அதை தேடித் பிடித்து நீக்கி விடுகிறேன். இதில் எந்த பாகுபாடும் இல்லை. காரணம் எந்த பதிவாவது எவரையேனும் காயப்படுத்தும் விதம் இருந்தால் அதை நீக்குவதற்கும் அதை பதிவிட்டவரை அப்படி செய்யாதீர்கள் என சொல்வதற்கும் நான் தயங்கியதேயில்லை.
உதாரணமாக இதே திரு ரவி அவர்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் செய்தபோது கர்ணன் படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு பதிவை போட்டபோது அதை படித்துவிட்டு நீங்களும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களும் நடிகர் திலகம் திரிக்கு வந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தபோது உங்களை ஆதரித்து ரவி அவர்கள் எழுதியது தவறுதான் என்று சொன்னவனும் நான்தான் என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.
இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.
தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.
உங்கள் பதிலுக்கு நன்றி!
அன்புடன்