நூற்றுக்கு நூறென மார்க்கு வாங்கிய (சின்னக்கண்ணன் சார்)நூர்ஜஹானுக்கு வாட்சு
தவப்புதல்வனின்
கிண்கிணி பாடலின் இடையில் வரும் வரி
Printable View
நூற்றுக்கு நூறென மார்க்கு வாங்கிய (சின்னக்கண்ணன் சார்)நூர்ஜஹானுக்கு வாட்சு
தவப்புதல்வனின்
கிண்கிணி பாடலின் இடையில் வரும் வரி
சின்னாவை ஒரே ஒரு சந்தேகம் தானே கேட்கிறோம் ராகவேந்திரன் சார்? அவர் நம்மை யாராக்கும் கேட்டு மண்டை காய வைக்கிறார்தானே! அதான்! வேற ஒண்ணுமில்ல.
சக்தி லீலை 1972. கங்கா கௌரி 1973. இரண்டிலும் ஜெமினி சிவன். மேடம் பார்வதி. உறுவ ஒட்ட்ருமையும் ஒன்றாக இருக்கும். சிவனுக்கும் ஒரே காஸ்ட்யூம். பார்வதிக்கும் கிட்டத்தட்ட அப்படியே. ஏன் சந்தேகம்? படத்தைப் பார்த்து முடிவு கட்டிடுவோம். எனக்கும் அந்த சந்தேகம் ஓடிட்டிருக்கு.
ராட்சஸி பற்றி காலையில சொல்லலைன்னா வேலை ஓடாது. அப்படியே பக்தி பாட்டுமாச்சு. மேடத்துக்கு ஈஸ்வரிதான் எவ்வளவு பொருத்தம்!
அந்த ஆக்ரோஷ பாட்டு. மறக்க முடியாது. மேடம் பார்வதி நாட்டியமும்தான் புன்னகை அரசிக்கு முன்னால். புன்னகை அரசி முன்னாடியே வேற சக்தியா? நெய்வேலிக்கே கரியா? பண்ரூட்டிக்கே பலாப்பழமா?
'சக்தி வந்தாளடி
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும்
நல்வாக்கு தந்தாளடி'
https://youtu.be/ralchqn-28A
ராகவேந்திரன் சார்,
ரங்கா ராட்டினம் ஸ்டில் தந்து ஆனந்தமாக சுற்ற வைத்து விட்டீர்கள். நிஜமாகவே கற்பக விருட்சம் தாங்கள். தன்னைத் தானே மறந்திருந்த சௌகார் அருகில் அந்த ரவிச்சந்திரன் டிரைவர் ஸ்டில். இப்போது நன்றாக நினைவுக்கு வந்து விட்டது. மறந்திருந்த பழைய விஷயங்கள் நினைவுக்கு வரும் போது அதன் சுகமே அலாதிதான் சார்.
வாசு சார்
சக்தி லீலை என்றாலே முதலில் இந்தப் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது. சிலோன் ரேடியோவில் போட்டு தாளிச்சிட்டாங்க.. இந்தப் பாட்டை தினமும் காலையில் போடாமல் இருந்ததே இல்லை.
இங்கே யாரோ சரோ விசிறி இருக்காங்க இல்லே... அவங்களுக்காகன்னு வெச்சிக்கலாம்.. காலைப் பொழுதை வரவேற்கிற மாதிரியும் வெச்சுக்கலாம்.
https://www.youtube.com/watch?v=MfzOncU6UnY
சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே
செந்தில்வேல்,
உங்கள் நினைவு சக்திக்கு நான் தரும் மார்க்கும் அதுவே.:)
ஒரு வேலையாக போக வேண்டியுள்ளது.
மதியம் சந்திப்போம்...
உண்மைதான் சார். மறக்க முடியுமா? மண் குடத்தில் ஆற்றில் குடத்தில் தண்ணீர் எடுக்க செல்லும் போது வானில் தேரில் சென்று காமுறும் காத்தவீரியன் (சரியா?) சௌந்தர்யத்தில் மனம் தடுமாறும் சரோ... ஆற்றோடு கரைந்து போகும் மண்பாண்டம்...கோப முனி பதி மேஜர் , தந்தை சொல் தட்டாமல் தவறு செய்த தாயின் தலை வெட்டும் ஓவர் மகன் பரசுராமன் ஸ்ரீதர். அருமையான வண்ணம். ஆரம்பமே சூடு.
கடலூர் துறைமுகம் கமரில் இரண்டு மூன்று தடவை பார்த்த ஞாபகம். படத்தின் எல்லாக் காட்சிகளும் நினைவில் நிற்கின்றன. உஷாநந்தினி கூட பார்வதியாக வருவார். சிவக்குமார் நாரதர். ராமண்ணா இயக்கம். எனக்குப் பிடித்த பக்திப் படம்.
appo fulla ingathaan irukkanum. samarthonno!:)
'saro' nnaa like saramaariyaa vizhuthe!:)
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 27: காதலர்களின் இசைவழித் துணை!
சிறிய படங்கள், பெரிய படங்கள், நட்சத்திர நடிகர்களின் படங்கள், புதுமுகங்கள் நடித்தவை என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல், தான் இசையமைத்த எல்லா படங்களுக்கும் அற்புதமான பாடல்களை வாரி வழங்கியவர் இளையராஜா. அவரே தயாரித்த படத்தில் பாடல்களின் இனிமைக்குக் கேட்கவும் வேண்டுமா? ‘இளையராஜா பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கப்பட்ட ‘ஆனந்த கும்மி’ (1983) படம் முழுவதும் பொங்கி வழிந்தது இன்னிசை.
பிற்காலத்தில் பார்த்திபனின் ‘பொண்டாட்டி தேவை’ படத்தின் மூலம் அறியப்பட்ட அஸ்வினியும் புதுமுக நடிகரும் நடித்த இந்தப் படத்துக்குக் கதை வசனம் வைரமுத்து. இயக்கம் கோகுல கிருஷ்ணன். பல காரணங்களால் தோல்வியடைந்த இப்படம், இன்றும் அதன் பாடல்களுக்காக நினைவுகூரப்படுகிறது.
எண்பதுகளில் இளம் பிராயத்தைக் கடந்து வந்தவர்களை, உருவமற்ற ஆன்மா போல் பற்றிக்கொண்டுவிட்ட பாடல் ‘ஒரு கிளி உருகுது’. எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா இணைந்து பாடிய இப்பாடல், நாயகன் மற்றும் நாயகியின் இளம் பிராயத்தைக் காட்டும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல். கள்ளமற்ற பிஞ்சு உள்ளங்களுக்கு இடையே துளிர்க்கும் அன்பின் பாடல். அடர்ந்த மரங்களின் இடைவெளி வழியே பரவும் தென்றலின் குளுமையுடன் ஒலிக்கும் புல்லாங்குழலுடன் பாடல் தொடங்கும்.
கிளிகளையும் மைனாவையும் பற்றிப் பாடும் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஆக்கிரமித்திருப்பது குயில்தான். குறிப்பாக முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழலும், அதைப் பிரதியெடுக்கும் குரலில் ஜானகியும், ஷைலஜாவும் பாடும் ‘குக்கூ… குகுகூ’ எனும் ஹம்மிங்கும் ஏதோ ஒரு நதிக்கரையின் மரக்கிளைகளில் அமர்ந்து பாடும் குயிலைக் காட்சிப்படுத்தும். இரண்டாவது நிரவல் இசையில் அன்பின் நெகிழ்வை உணர்த்தும் சாரங்கி இசையை வழியவிட்டிருப்பார் இளையராஜா.
பிள்ளைப் பிராயத்துப் பாடல் என்பதால், ஜானகி, ஷைலஜாவின் குரல்களிலும் குழந்தமையின் குதூகலம் தொனிக்கும். இப்பாடலின் இன்னொரு வடிவத்தை எஸ்.பி.பி. பாடியிருப்பார். ‘தளிருக்கும் மலருக்கும் காதல்… தனிமையில் சிறு சிறு ஊடல்’ எனும் வரிகளில் எஸ்.பி.பி.யின் குரலில் தொனிக்கும் பாந்தம் ஆத்மார்த்தமானது.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘ஓ வெண்ணிலாவே… வா ஓடி வா’ பாடலை எஸ்.பி.பி. - ஜானகி ஜோடி பாடியிருக்கும். காதலுக்கு ஏற்படும் தடையால் மனமுடைந்து நிற்கும் நாயகனையும் நாயகியையும் ஆற்றுப்படுத்தும் கனவுப் பாடல் இது. டூயட் பாடல் என்றாலும், பாடல் முழுவதும் இனம்புரியாத வலியை உணர முடியும். இந்தப் பாடலையும் தொடங்கி வைப்பவர் ஷைலஜாதான். ‘ஆனந்த கும்மியடி… வானமெல்லாம் கேட்கட்டும்’ எனும் தொகையறாவுக்குப் பின்னர், ஆர்ப்பாட்டமான தாளமும், நெகிழ்வூட்டும் ஷெனாயும் சேர்ந்து ஒலிக்கும்.
தற்காலிகச் சந்தோஷ மனநிலையில் திளைக்கும் காதலர்களின் உணர்வைப் பாடலின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவார் இளையராஜா. முதல் நிரவல் இசையில் ஷெனாய், கிட்டார் என்று வரிசையாகத் தொடரும் இசைக் கருவிகளுக்குப் பிறகு, ரணங்களை வருடும் மயிலிறகின் மென்மையுடன் வளமான வயலின் கூட்டிசை ஒலிக்கும். வருத்தமான மனநிலையில் இப்பாடலைக் கேட்கும்போது இந்த ஒற்றைக் கணத்தில் நம் மனது உணரும் உணர்வுகள் வார்த்தையில் அடங்காதவை. இரண்டாவது சரணத்தில், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை அற்றுவிட்டதுபோன்ற அழுகைக் குரலில் ‘இனிமேல் பிறவி வாராது’ என்று பாடுவார் ஜானகி.
அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக, ‘காதல் மாலை சூடும் வேளை… அழுகை ஏனோ, கூடாது’ என்று எஸ்.பி.பி. பாடுவார். காதலனின் ஆறுதல் வார்த்தைக்காக அழுகையை அடக்கிக்கொண்டாலும், ஆற்றாமையில் தவிக்கும் மனதின் தேம்பும் குரலில், ‘நிலவே நீயும் தூங்காதே…’ என்பார் ஜானகி. எழுதப்பட்ட பாடல் வரிகளை இசையுடன் பாடுவது மட்டும் பாடகர்களின் பணியல்ல; கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை நுட்பமாக வெளிப்படுத்தும் கலை அது என்பதை ஆத்மார்த்தமாகப் பதிவுசெய்திருப்பார் ஜானகி. இசை ரசிகர்களால் அவர் ஆராதிக்கப்படுவதன் முக்கியக் காரணம் ஆத்மார்த்தமான பாடும் முறைதான்.
குதூகலமும் குறும்பும் நிரம்பித் ததும்பும் குரலில் எஸ்.பி.பி. பாடும் ‘தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி’ பாடல், உற்சாகம் வழியும் இசையமைப்பைக் கொண்டது. மிகத் துல்லியமான ஒலிப்பதிவைக் கொண்ட இப்பாடலில் ஆர்ப்பாட்டமான ட்ரம்ஸ், புத்துணர்வூட்டும் கிட்டார், மவுத்தார்கன், சாக்ஸபோன் என்று இசைக் கருவிகளின் அற்புதமான கலவை இப்பாடலில் உண்டு. கண்ணாடி இழைகளால் உருவாக்கப்பட்ட உலகில் பயணம் செய்யும் உணர்வைத் தரும் பாடல் இது. ‘பாடல் நூலில் தினம் செல்வி துணை என்று எழுதினேன்’ எனும் வரிகளில் வைரமுத்துவின் குறும்பு மின்னும்.
ஜானகி, எஸ்பிபி பாடும் ‘ஊமை நெஞ்சின் ஓசைகள்’ பாடல் காதலின் பிரிவு தரும் வேதனையைப் பதிவுசெய்த பாடல்களில் ஒன்று. இப்பாடலின் நிரவல் இசையில் நெகிழ்ந்துருகும் சாரங்கி கண்களை நனைத்துவிடும். எதிர்ப்புகளால் மருகிக் கிடக்கும் காதல் ஜோடி மீதான இரக்கத்துடன் இளையராஜா பாடும் ‘திண்டாடுதே ரெண்டு கிளியே’ பாடலும் இப்படத்தில் உண்டு. அந்த வகையில் காதலர்களின் இசைவழித்துணையான இளையராஜா அவர்களுக்குத் தந்த ஆறுதல் பரிசு இந்த ஆல்பம்!
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: பூக்கள் தடுமாறுகின்றன
ஒன்றுபோலவே தோன்றினாலும் கற்பனையும் வர்ணனையும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டவை. மலராகவும் நிலவாகவும் பெண்களை உருவகப்படுத்திப் பாடுவது கற்பனை. அந்த மலரும் நிலவும் உன்னை விட மேலானது அல்ல. அதை விட நீ அழகானவள். சிறந்தவள் என்று பாடுவது வர்ணனை. இப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சூழலில் தன் காதலியை வர்ணிக்கும் இந்தி, தமிழ்ப் பார்வைகளைப் பார்ப்போம்.
இந்திப் பாட்டு.
படம். பூல் பனே அங்காரே (பூ ஒன்று புயலானது)
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி. பாடியவர்: முகேஷ்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி.
பாடல்:
சாந்த் ஆஹே பரேங்கே
பூல் தாம்லேங்கே
ஹுஸ்னிக்கி பாத் சலேதோ
சப் ஆப் கி நாம் லேங்கே
பொருள்:
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர்
கண்ணே உன் முக அழகு
காலையில் தோன்றும் கதிரொளி
எங்கு நீ இல்லையோ அங்கெல்லாம்
தங்குவது காரிருள் மட்டுமே
எப்படி பிறகு நீ இல்லாத பிரிவு
உன் நினைவைப் பற்றிக் களங்கம் கூறும்
அரும்பை விட மென்மையான் கண்கள்
விரும்புகின்ற கற்கண்டு போல பேச்சு
கங்கை நதி தீரம் உன் கன்னங்கள்
மங்கையின் கூந்தல் சொர்க்கத்தின் பாதை
தேவதைகள் உன் பொருட்டுத் தம் தலையில்
பாவத்தின் பழியைப் பரிசாய் ஏற்கும்
இனிய தென்றலும் வீசாமல் இராது
இடிக்கும் மேகமும் பேசாமல் இராது
நேர்த்தியான உன் உள்ளம் கண்டு
சாத்தியமாக்குவான் இறைவன் அப்போழ்தில்
பாறைகள் அதனால் மென் நரம்புகள் ஆகும்
நிலவு பெரு மூச்சுவிடுகிறது
பூக்கள் தடுமாறுகின்றன
அழகைப் பற்றிப் பேசினால்
அனைவரும் உன் பெயரைச் சொல்கின்றனர் .
இதே அளவு மென்மையான ஏக்கத்தைத் தமிழுக்கே உரிய நடையில் வெளிப்படுத்துகிறது தமிழ்ப் பாடல். இந்திப் பாடல் காதலியின் அழகைக் கண்டு பிரமித்துப்போன பாவனையில் அமைந்திருக்க, தமிழ்ப் பாடலோ காதலியின் அழகைக் கண்டு உற்சாகத்தில் துள்ளுகிறது. இரண்டு பாடல்களுமே இயற்கையின் அழகைவிடவும் தன் காதலியின் அழகை மேலாகச் சொல்கின்றன. “உன் அழகைப் பார்த்து நிலவு பெருமூச்சு விடுகிறது, பூக்கள் தடுமாறுகின்றன” என்று ஒரு காதலன் சொல்ல, “உன்னுடைய குளிர்ச்சி நிலவுக்கு இல்லை, நீ சிந்தும் ஒளியை அந்த மலர் சிந்தவில்லை” என்று இன்னொரு காதலன் உருகுகிறான்.
படம்: தெய்வத் தாய். இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
பாடல்: வாலி. பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப்
பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன் மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நான் இல்லை
நானில்லாமல் அவள் இல்லை.....
கொடி மின்னல் போல் ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயில் ஓசை போல் ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சைச் சேர்த்தாள்
தீயோடு பஞ்சைச் சேர்த்தாள் ...
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
கலை அன்னம் போல் அவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போல் அவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னைச் சேர்த்தாள்
தன்னோடு என்னைச் சேர்த்தாள் ....
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
Raghav ji saronna enakku pidikkumnu directaaa sollalame :)
சின்னா!
http://sim01.in.com/3ec5f91f5dcf4428...28d23dac_m.jpg
'இந்திரன் சந்திரன்.(தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு'...'இந்தியில் "மேயர் சாப்")
நேற்று மாதிரியே கமல் நடித்த தெலுகு படத்தின் 'டப்'. அதே இளையராஜா இசை. ஆனா ஜோடி விஜயசாந்தி. கமல் ஹீரோ. மேயர் மற்றும் நாயகன்.
சின்னா சொன்னா 'நூறு' இதில் வரும். இதுவும் எனக்கு மிக மிக மிக பிடித்தமான பட்டு.
'நூறு நூறு நூறு முத்தம் பூப்போலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
கேளு கேளு கேக்கும் போது தந்தாலே
ஹொயன்னா ஹொய்ன்னா...
காதல் மன்னா கை மேல் மெய் பட்டு
கனியும் மொட்டு வாய்யா நீதான்
சூடும் இங்கு ஏற பாய் போட
நானும் இங்கு ஆனேன் ....
http://4.bp.blogspot.com/-nGvMEZvO6A...n-Chandran.jpg
ஆரம்பத்தில் கமலும், விஜயசாந்தியும் பரிமாற்றுக் கொள்ளும் முத்தப் பரிமாற்றங்களுக்குதான் எவ்வவளவு சப்தம்! (முத்த சத்தம் கொடுத்த 'ராஜா' வுக்குத்தான் முத்தம் தர வேண்டும்... கையில்):)
பாலாவும் சித்ராவும் கலக்கல்.
சரண டியூன் அமர்க்களம்.
'அந்தியில் தென்றலில் பூ மணக்கும் நாழியாச்சு (சித்ரா பின்னுவார்)
தேன்துளி நான் தர தீண்டி மெல்ல ஆசையாச்சு
ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ
சின்ன மலர் தென் சொட்டாதோ
வண்ண மலர் தோள் தொத்தாதோ'
சித்ரா தொடர,
பாலா,
'பொன்னான ஒரே முத்தம் தந்து
புண்ணாச்சா மலர்ப்பாவை இதழே!' (என்னா ஒரு மொழி பெயர்ப்பு!):-D
என்று அமர்க்களம் பண்ணுவார்.
சின்னா! பாலாவின் அந்த 'ச்சீ ச்சீ' வெட்கம் பொம்பளை மாதிரி அடி தூள். கமல் கால்களை அப்படி அகட்டி வைப்பார்.
தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல.
அருமையான ராகமும், அமர்க்களமான மியூஸிக்கும் கொண்ட
ரொம்ப அற்புதமான சாங்.
'வாடைதான் என் நரம்பை வீணையாக மீட்டுமம்மா
கோதையின் பாட்டுதான் ஆசை அம்பு போடுமம்மா'
'நானும்தான் காணத்தான் ராஜலீலை
தாகமே கூடுது தொட்ட வேளை'
ரொம்ப அருமையான சாங்.
பி.எல்.நாராயணா
https://i.ytimg.com/vi/AGha2qaljoc/mqdefault.jpg
நடுநடுவில் இருவரையும் மறைந்து வாட்ச் பண்ணி கண்டக்டர் விசில் ஊதி டைரெக்ட் பண்ணப் பார்க்கும் அந்த ஒல்லி தெலுகு நடிகர் பி.எல்.நாராயணா செம இன்ட்ரெஸ்ட்டிங்:)
https://youtu.be/QO09_Dk2Ru0
இதுவே தெலுங்கு ஒரிஜினல் 'இந்த்ருடு சந்த்ருடு' வில். பெண்குரல் ஜானகி.
'Dora Dora Donga Muddu Dobuchi in Indrudu Chandrudu'
http://2.bp.blogspot.com/-jYkF_C6XzN...uChandrudu.jpg
https://youtu.be/e_czt3mnK_0
தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!:)
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு.:) பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.:)
indran chandran songs vaali .. nooru nooru & kadhal ragamum :thumbsup:
தை பிறந்தால் வழி பிறக்கும் தெலுங்கு வடிவம்
மாதவபெத்தி சத்யம் மற்றும் இசையரசி
https://www.youtube.com/watch?v=ZEwNQIcY6sU
ஆகாயம் கொண்டாடும் .. யேசுதாஸ் இசையரசி குரல்களில் நல்ல பாடல்
இசை இளையகங்கை (இளையராஜா அல்ல)
https://www.youtube.com/watch?v=oq1XdLfdAc0
//cika tanku tanku .. ippadi oru varnanai enakka enakke enakka// You deserve more than this rajesh.
//சின்னா!
இது யாராக்கும்?//
//வாசு சார்
சின்னாவின் தலையை ரங்கராட்டினம் போல சுற்ற வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே..//
வாசு, ராகவேந்தர்..
கன்ன மிளைத்திருக்க கண்களிலோ மின்னலென
வண்ணப் படமிலையே வாகாக – எண்ணத்தில்
மிஞ்சி மலர்ந்தென்றும் மேனி சிலிர்க்கவைக்கும்
மஞ்சுளா என்றவொரு மான்…
ஹி ஹி..அப்படின்னு வாசு சொல்வார்.. ஆன்ஸர் கரீட்டா..
செந்தில்வேல் … நூறு நூறு முத்தம் கொடுத்தாயே ஹொய்யன்ன ஹொய்யன்னா (ஒய்னு கேக்காம ஹொய்னு கன்னடால்ல கேக்கறாங்களோ) பாட்டுக்கு நன்றி.. ஹச்சோ.. கமலோட இளமைக்குறும்பு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்..கொய்ங்க் கொய்ங்க்னு மேலேற்றப்பார்க்க விஜயசாந்தி அம்மணி நாசூக்காய் விலக்குவது…ம்ம்..அப்புறம் அந்த ஜெயலலிதா என்று இன்னொரு அம்மணி உண்டு படத்துல இல்லியோ..
நூறு மார்க்கு வாங்கிய நூர்ஜஹானுக்கு வாட்ச்சு.. இந்த வரி வராம.. நூர்ஜஹான்னு ஒரு பாட்டுல வரி வருமேன்னு மனசுக்குள்ள குடைந்து கொண்டிருந்தேன்..சமர்த்தாய் அதைச் சொல்லிவிட்டீர்கள் செந்தில்வேல் தாங்க்ஸ்..
//சி.க. சார் இந்தப் பாட்டில் நூறு வராங்காட்டியும் நூறு ஆயிரம் முறை ரேடியோவில் கேட்டிருக்கோமில்லே.. அப்போ அதில் நூறு அடங்கும் தானே// ராகவேந்தர் சார்..யெஸ் கேட்டிருக்கோம்..பட் யூ டோண்ட் பிலிவ் இட்.. இதே பாட்டை ராஜேஷீக்கு த் தரலாம்னு சில நாள் முன்பு எடுத்துப் பார்த்தேன்..பட் கொஞ்சம் சர்ரூக்கு இளமை கம்மியா எனக்குப்பட்டதால விட்டுப்புட்டேன்.. நீங்க கொடுத்துட்டீங்க.. (ராஜேஷ் ஹாப்பி அண்ணாச்சி!)
வாசுவிற்காக..
போட்டாச் பாட் ஒண்ணு..
பார்த்தாலும் பார்த்தேன் நான் உம்மைப்போலப் பார்க்கலை
https://youtu.be/Wrav2EzFvEA
அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் இன்னும் சாப்பிடலை.. என்ன பண்ணலாம்..கமல் வழியை ஃபாலோ பண்ணலாம்..
பசி எடுக்கற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்.. பட்டாம் பூச்சி..கமல் ஜெய்சித்ரா..எஸ்பிபி வர்றச்சே நீங்க பட்டாம்பூச்சி படத்தப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதுங்க..இப்ப நான் தர்றேன் உங்களுக்கு பரிசாக..வாசு..
https://youtu.be/VvvpS7fyp4g
வரிகள் புலமைப் பித்தனாம்..இது ரொம்ப நாள் முன்னாலேயே கேட்டு பாடல் வரிகளை க் கேட்டு டைப்பண்ணி வச்சுருந்தேன் (புலமைப் பித்தன் இல்லாமலும் இருக்கலாம்..(இப்போதே சேஃபா சொல்லி வச்சுக்கறது நல்லது)
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னைக் கேக்கனும்
அடி ராஜாத்தி புது ரோஜாப்பூ அதைக் கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொல்லக்கூடாதோ
இள ராஜாத்தி புது ரோஜாப்பூ இதைத் தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுப பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
சின்னக் கொடியிடை என்னைப் பிடியென ஆடும் அழகென்ன
சேலைத் திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
கன்னப்பழம் இது தின்னத்தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமையில் கூடும் ரகசியம் காட்டித்தரலாமோ
கண்டவர் கண்படும் முன்னாலே என் கைப்பட ஆறிடும் தன்னாலே
காலநேரம் பார்க்காம மேளச்சத்தம் கேட்காம
ஆசை மட்டும் வந்தால் என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் பெண்னானது
நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் உந்தன் முன்பே கொஞ்சம் போராடவா
இன்றொரு பாதி நாளை பாதி
பாதியில் நில்லாது வாலிப வேகம்
ஹோப் யூ ஆல் வில் லைக் த ஸாங்..
பின்ன வாரேன்
**
வாசு எல்லார்க்கும் சேர்த்து அலசி ஹோம் வொர்க் செய்யறச்சே சைலண்ட்டா கமல் விஜ்சாந்த் பாட் போட்டுட்டேளே.. படிச்சுட்டு வாரேன்..
சில படங்கள் பெரிய இயக்குனரே இருந்தாலும் மொக்கையாக அமைந்து விடும்
அப்படி ஸ்ரீதரே இயக்கிய தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை ஆனால் பாடல்கள் அருமையோ அருமை
அப்படி மதுரை வானொலி அடிக்கடி ஒலிபரப்பியே எனக்கு பிடிக்கவைத்த பாடல்
மன்னவனே மன்னவனே
பாலு ஜானகி
https://www.youtube.com/watch?v=SzDmhozbmSk
சாமி போட்ட முடிச்சு
நீலவேணி அம்மா நீலவேணி
முரளி சிந்து மற்றும் ஆர் சுந்தர்ராஜன்
https://www.youtube.com/watch?v=KjdNIzFjavM
ஆசை நூறு வகை
//தமிழ்ப் பாட்டுக்கு ஈஸியா அலசி பதிவு போட்டுடலாம் சின்னா! ஆனா இந்த தெலுகு டப்பிங் பாட்டிற்கு பா(ட்)டு பட வேண்டியதா இருக்கு. ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து தப்பில்லாம தரணுமே!
எனக்குப் புடிச்ச பாடல் அப்படிங்கறதால பாலா பாடல் ஆய்வு போல பெரிசாப் போச்சு. பாலா பாடல் ஆய்வு போலவும் ஆச்சு.// நைஸ் வாசு.. ரொம்பக் கஷ்டம் தான் அலசறது..
இந்திரன் சந்திரன் துபாயில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி வீடியோவில் பார்த்த படம்..விமர்சனமெல்லாம் படிக்காமல் பார்த்த நினைவு.. சடனாக வந்த நல்ல மசாலாப் படம்..
ஏடாகூடமாகக் கமல் குறும்பு செய்வார்.. அது போல க்ளைமாக்ஸ் ... என்ன தான் மேயர் கமலின் குளிர்சாதன அறையில் வைத்த உடலை மாற்றி வைத்தாலும் யாருக்குமே தெரியாதா என்ன என மிகப் பெரிய லாஜிக் ஓட்டை இருக்கும்.. பட் சுவாரஸ்யமாகப் போகும்..
தாங்க்ஸ் வாசு..
//தெலுங்கு வார்த்தைகளுக்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழில் வார்த்தைகள் போடுவது ரொம்பக் கடினம்தான். தெலுங்கில் அர்த்தம் வேறு. தமிழில் அர்த்தம் வேறு என்று இருக்கும். அதனால் நடிக நடிகையர் செய்யும் பாவனைகளுக்கும், பாட்டிற்கும் சில சமயங்களில் சம்பந்தம் இருக்காது.
'ஆசையின் ஒத்திகை இப்பதானோ
அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ'
வரிகளுக்கு கமல் செய்வதில் சம்பந்தமே இருக்காது. பின்னால் கையை சுட்டிக் காட்டுவார். தெலுங்கில் அர்த்தத்துக்குத் தக்கபடி அது சரியாக இருக்கும். (அங்கே 'நானாகாரு' வாட்ச் பண்றார் என்பது போல அர்த்தம்) தமிழில் 'அட்டை போல் ஒட்டிடும் எண்ணம்தானோ?' என்று சம்பந்தமில்லாத வரிகள் உதட்டசைவுக்காக வேற மாதிரி வந்து உட்கார்ந்து இருக்கும். அதனால் தமிழில் பார்க்கும் போது நடிப்பசைவுகள் மாறுவது போல் தெரியும்
எப்படியிருந்தால் என்ன! இசைக்கும், ரசனைக்கும் மொழி ஒருதடையே அல்ல. //
வெரி ட்ரூ வாசு.. இசைக்கும் ரசனைக்கும் மொழி ஒரு தடையே அல்ல.. என்னா வாக்கியம்.. அட்சர லட்சம் பெறும்..
ஆனாக்க…
ரொம்ப நாளைக்கு முன்னால் சலங்கை ஒலி பாடல்கள் அத்தனையும் எழுதியது வைரமுத்து என்றாலும்..சாகர சங்கமம் பாடல்கள் – மொத்தமா ஒரு சிலவா என நினைவில்லை..மொழிபெயர்ப்பு படிக்க நேர்ந்தது..
அப்படியே ஸ்ட்ரெய்ட் ட்ரான்ஸ்லேஷன்.. வைரமுத்து அப்படியே ட்ரான்ஸ்லேட் செய்தாரா அல்லது தமிழிலிருந்து தெலுங்கு போச்சா தெரியாது..
தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு..
ஆனா புதுசா பாட் எழுதி வார்த்தைகளை மடக்கி ஓரளவிற்குப் பொருத்தமா எழுதறதுல தமிழ்ப் பாடலாசிரியர்கள் கெட்டிக்காரர்கள் – தமிழ்ப்படங்களுக்கு – இல்லியோ..
//தென்றலே என்னை தொடு படம் மகா மொக்கை//
ஜி!
அது லாஜிக் இல்லாத ஜாலியான காமெடி கலகலப்பு. அப்போ ரொம்ப எல்லோராலும் ரசிக்கப்பட்டது. செம வெற்றியும் கூட. உங்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது? தேங்காய், மோகன், மூர்த்தி என்று செம காமெடி. அப்புறம் ஜெயஸ்ரீ, பபிதா என்று இளவட்டங்கள். மைக் மோகன். ஜாலி படம்ஜி!
சர்ப்ரைஸா நீலவேணி அம்மா நீலவேணி பாட்டு
கூட ரெண்டு வரி எழுதியிருக்கலாம் ராஜேஷ்.. படம் பார்க்கும்போது ரசித்துக் கேட்ட பாட்டு..இப்பத்தான் மறுபடி பார்க்கறேன் கேக்கறேன்.. தாங்க்ஸ்
லிரிக்ஸ் கீழே
தோணி மீது பாடும்குயிலு
தோழியோடு போகும் மயிலு
ஜாடை காண ஆளை காண ராகம் கூட்டிப் போனதோ
ஆத்து மேல போகும் தோணி
அதுக்கு மேல ராஜா ராணி
பாட்டுக் கேட்டு நோட்டம் போட
பார்வை தேடிப் பாயுதோ (சிந்து அழகா இருக்காங்க இல்லியோ)
தேடித் தேடிப் பாரய்யா
சின்ன மயிலு நானய்யா
தேவலோக ராணி போல வாழுகின்ற ஆளய்யா
கூந்தலென்ன ஆலம் விழுதோ
குங்குமம் தான் காலைப் பொழுதோ (வாவ் சிம்ப்பிள் அண்ட் பியூட்டிஃபுல் வர்ணனை)
சேர்ந்த ரெண்டு சேரன் வில்லு
புருவமாகிப் போனதோ..
கண்கள் ரெண்டும் மீனோ மானோ
கன்னம் ரெண்டும் பூவோ பொன்னோ
சின்ன வாயில் என்ன சாயல்
பவளமாக ஆனதோ..(அனதர் வாவ்..)
பார்த்தது தான் இல்லையே
பறித்திடாத முல்லையே
பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் கேட்டிடாத கேள்வியே..
நீலவேணி அம்மா நீலவேணி
(ஆஹா காலங்கார்த்தால லிரிக்ஸ டைப்பண்ண வச்சுட்டீரே ராஜேஷ்..உம்மை..சிந்து மாக்கடல்ல தான் நீந்த வைக்கணும்!)
சிந்து அழகான நடிகை..பட் சின்னவயதில் மரணித்தது சோகம் தான்..
வாசு.. அவர் தெ.எ.தொ ந்னு சொல்லி போட்ட படம் தந்துவிட்டேன் என்னை.. அது தான் மொக்கை என்றார் ( நான் பார்த்ததில்லை) ஆனால் படத்தில் இன்னொரு பாட் போட்டிருக்கிறேன் பாகம் 3ல்..
தெ எ தொ போர் தான்..ஆனால் பாடல்களினால் போர் தெரியாமல் போயிருக்கும்.. திடீர்னு திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்..
சின்னா! உங்ககிட்ட பிடிச்ச குணம் எல்லா வரிகளையும் ஒண்ணு விடாம படிச்சு கருத்து சொல்றது. அது பதிவு போடறவங்களுக்கு உற்சாக மன நிலையைக் கொடுக்கும்தானே! அதுக்காக உமக்கு என்னுடைய தேங்க்ஸ்.
//தெனாலி யை டப்பிங்க் செய்து எஸ்பிபி தெலுங்கில் வெளியிட்டார்.. கமலுக்கு அவர் வாய்ஸ்கொடுத்திருப்பார்..அவ்வளவாகப் பொருந்தாதிருந்த நினைவு.?//
'சிப்பிக்குள் முத்து' படத்திலேயே சுத்தமா பாலா குரல் கமலுக்கு பொருந்தலை. கமல் கொஞ்சம் கிரீச். பாலா பேஸ். பாடல்களுக்கு சரி! வாய்ஸ் டப்பிங்ற்கு ம்ஹூம்.
பசி எடுக்கிற நேரம் வந்துடுச்சு. உம்மா லிரிக்ஸ் பார்த்ததும் பறந்து போயிடுச்சு.
மஞ்சு செல்லத்தை மறக்காம ஞாபகம் வச்சு என் வாயை அடைச்சி சூப்பரா எங்க ஆளைப் பத்தி ஒரு கவிதையும் எழுதிட்டீரே! உமக்கு விரைவிலேயே தெலுங்கிலே மஞ்சுவோட பாட்டு ஒன்னு போடறேன்.
//திரு நீர் மலை காமெடி கடைசியா வரும் என நினைவு.. அதில் படம் போர் என்பதையே மறந்து விடுவோம்.//
ஆமா சின்னா! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடும். லாரி மழைத் தண்ணியிலே போகும் போது தேங்காய் டிரைவரை சொல்றது.
'ஓசியிலேயே லாரி கழுவுறான் பார்':)
சின்னா!
கண்டு பிடிச்சுக்கோங்க:)
ஊரெங்கும் பாரு
உல்லாச டூரு
நூற்றுக்கு நூறு
எல்லாமே ஜோரு
அடுத்தது
நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா (2)
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம் (2)
..........ஆசை நூறு வகை.........
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு
ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவே
..........ஆசை நூறு வகை.........
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்
..........ஆசை நூறு வகை........
//சின்னக்கண்ணன் சார்
உங்களுக்காக
ஓபனிங்இசையில் உற்சாகத்தை அளித்த பாடல் முடியும் வரை உற்சாகத்தை கூட்டினாலுமஅந்தஓபனிங் இசையே காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்.
இசைக்கப்பட்ட வாத்தியங்கள்தான்.ஆனாலும் புதிது புதிதாக வித்தியாசமாக கொண்டு வந்தார் பாருங்கள் அங்கே தான் இளையராஜா இனியராஜா.பாடலின் சிறப்பே வித்தியாசமான இசை சேர்ப்புகள்.//
தாங்க்ஸ் செந்தில்வேல் ஷார்ட் அண்ட் ஸ்வீட்.. நமக்கு இசையும் பிடிக்கும்..பட் லிரிக்ஸ் கொஞ்சம் பார்ப்பேன்..
ஒட்டப்பாலம் சாத்து நாயருக்கும் பாப்புல்லி அம்மாளுவிற்கும் மலேஷியாவில் பிறந்தவர் மலேஷியா வாசுதேவன் என அழைக்கப்பட்ட வாசுதேவன்.. குடும்பத்தில் எட்டாவது பையன்..இருப்பினும் என்ன பாடலில் இண்ட்ரஸ்ட்
அப்படி இப்படி என்று இருந்துவிட்டு சென்னையில் நடித்த படம் ரத்தப் பேய்... வந்ததா தெரியாது..
முதலாய் ப் பாடிய பாடல் பாலு விக்கிற பத்மா.. என்ற பாட்டாம்..கேட்டீர்கள் என்றால் ஏ. எல் ராகவன் என்று நினைப்பீர்கள்..
https://youtu.be/0iX_zxJ5bB0
ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு இல் ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியஸ் ரஜினியாய் வித்யாசமாக இருப்பார் ரஜினி..அப்படி ஆடும் பாடல் இந்த ஆ. நூ. வ.. கொஞ்சம் பயந்து பயந்து தான் பாடினாராம் ம.வா.. ( எனப் படித்த நினைவு)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ... என்னும் பாட்டில் திறமை நன்னாவே தெரியும்..காடு பொட்டக்காடு பாட்டில் டிஃபரண்ட்டாகப் பாடியிருப்பார்..
சரி.. நமக்கு ஆசை நூறுவகை பாட் போட்டுடலாமா..
https://youtu.be/W5UURAXGN50
எல்லோரும் கொண்டாடுவோம் பாட் நினைவுக்கு வருது வாசு..அடுத்த பாட் தெரிலை..
அப்புறம்..
செந்தில்வேல்..
என்னை/ நம்மைப் பொறுத்தவரை என்னன்னாக்க...( நைசா எல்லாரையும் சேர்த்துக்கிட்டேன்) தேவிகாவையும் ரசிக்கணும் தேவிஸ்ரீயும் தெரியும்னு சொல்லணும்
விஜயலட்சுமி எல் லும் தெரியணும் விஜய லட்சுமி விஷாலும் தெரியணும்
கவிதாவும் தெரியணும் காதம்பரி நயனையும் பிடிக்கணும்
ஸ்ரீதேவியும் பிடிக்கும் ஸ்ரீ திவ்யாவும் பிடிக்கணும் இல்லியோ ( ஹப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )
இதோ விக்ரம் ப்ரபு, ஸ்ரீதிவ்யா இன் வெள்ளைக் காரத் துரை.. நல்லபாட் அண்ட் லிரிக்ஸ்.
https://youtu.be/RU-JANr5GtU
[QUOTE=chinnakkannan;1263065]//சின்னக்கண்ணன் சார்
"ஏதோ ஒரு பேட்டியில் சொன்ன நினைவு.. ரஜினிக்காக முதன் முதலாகப் பாடிய பாடல் ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை பார்.. யூ நோ..அடுத்த வாரிசு "
தர்யுத்தம் படத்தில் ரஜினிக்காக ஒரு தங்கரதத்தில்பொன் மஞ்சள் நிலவு பாடியிருக்கிறாரே அதற்கு முன்பே.அதற்கு முன்பும் கூட பாடி இருக்கலாம்..
நான் தவறாகச் சொல்கிறேனோ
ஏனெனில்
உங்களுக்குத் தெரியாத பாடல்களா?
எனக்குத்தெரியாத பாடல்கள்(கேட்டது காதளவு..கேட்காதது உலகளவு!) சொல்லத் தான் ஜாம்பவான் போலக் குயில்களாய் வாசுமதுண்ணாராகவேந்தர் ஆதிராம் இருக்கிறார்களே.. நீர் சொல்வதும் சரியாக இருக்கலாம்.. லெட்ஸ் வெய்ட் அண்ட் ஸீ..உங்களுக்காக இளையராஜா ரெண்டு பாட் போடட்டா... ஏற்கனவே போட்டாச் தான்..பட் எப்பக் கேட்டாலும் எங்கிட்டோ போய்டுவோம்..
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட..
https://youtu.be/SkVXuZtN3Js
என்னைத் தொட்டு அள்ளிக்க்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. ஆபேரி ராகம்..(ஹை..ராகதேவனை இழுக்கலாம் :) )
https://youtu.be/qPXU269QmK8
ரெண்டுமே கார்த்திக் மோனிஷா.
இதுபற்றி நானும் ராகவேந்திரா சாரும் பேசியிருக்கோம் பாகம் மூணு என நினைவு..
spellbound..
சரியாக இதே நேரத்தில் இதே இரண்டு பாடல்களை நான் நினைத்து, யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரம் வேறு வேலை பார்த்து விட்டு வந்து பார்த்தால் அதே நேரத்தில் தாங்களும் இதே இரண்டு பாடல்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள்..
இந்தப் படமே மனதில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
பெட்டியில் விளையாட்டாக நாயகியை அடைத்து வைத்து அதிலேயே அவள் மாண்டு போவதாகத் தானே கதை சி.க. சார்?