No wonder they are world class
Printable View
இந்த H .R ஆளுங்க மட்டும் திருந்தவே மாட்டாங்க போல. சில நினைவுகள்------
1987 ஆம் ஆண்டு..... ஒரு வெள்ளிக்கிழமை......(அன்றுதான் H .R வாரந்திர meetings )
புதியதாய் வந்த C .E .O உலக துன்பத்துக்கெல்லாம் புத்தரை போல் ஒரு காரணம் கண்டிருந்தார். நாம் நினைப்பதை தொழிலாளர்களிடம் ,கொண்டு செல்ல இயலாலததே என்று கண்டு பிடித்தார். எல்லாருமே அசட்டு தனமாக மையமாக தலையாட்ட,ஆரம்பித்தது வினை.
எல்லா department இலும் jargons கொண்ட prominent sign boards வைப்பது என்று முடிவானது.
அதற்கு ஒரு task force headed by Executive -Labour relations (என்னுடைய உயிர் நண்பன்தான்)
எதோ நப்பாசையில் அவனிடம் சொன்னேன். எங்கள் department இலேயே தேர்ந்த கவிஞர்கள் உண்டு(house magazine உபயத்தில் ). நாங்களே மொழி பெயர்க்கிறோம் என்று . ஆனால் நண்பனின் task force குழுவோ எங்கள் மேல் நம்பிக்கையின்றி professional மொழி பெயர்ப்பாளர்களை கூட்டி வர முடிவு செய்தது.
அந்த நாளும் வந்தது. அந்த நபரும் வந்தார். எனக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் சந்தேகம்.அசப்பில் நான் சிறுவயதில் நெய்வேலியில் பார்த்த சுவிசேஷ போதகர் சாயலில் இருந்தார்.
jargons ஆங்கிலத்தில் முடிவானது. மொழிபெயர்ப்பாளரின் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில்,தமிழில் மொழி பெயர்க்க பட்டு , யாரும் சரி பார்க்காமலே sign boards வரை சென்றது. கொடுத்த fees தெலுங்கு பட dubbing expert புரட்சி தாசன் மூன்று படங்களுக்கு வாங்குவது.
Spirited teamwork leads to fruit of progress என்பது ஆங்கிலம்.
வைக்க பட்ட sign board
"பரிசுத்த ஆவி நிறைந்த ஒற்றுமை குழுக்களுக்கே பழங்கள் வழங்க படும்."
தி.மோகனாம்பாள் படைப்பின் கதை, கதாபாத்திரங்கள், எது சிறந்த கலை என்ற தளத்தில் இங்கே உரையாடல் எழும்பியதால் "தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை" என்ற பிபிசி தமிழில் சில வருடங்களுக்கு முன்பு பதிவாகிய பெட்டகத் தொடரை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மொத்தம் பதினாரு பெட்டகங்கள். ஒரு திரைப்படம் ரசிக்க எவ்வளவு நேரம் செலவழிப்பீர்களோ அப்படியொரு நேரத்தை ஒதுக்கி ஒரே மூச்சில் கேட்டுப் பாருங்கள். கர்நாடக இசை, தமிழிசை என எந்த பாரபட்சமுமின்றி இதைக் கேட்டாலும், கேட்டு முடிக்கும்போது தமிழிசை வளரவிடாமல் குறுகிய நோக்குடன் திட்டமிட்டு எப்படி சில கூட்டங்கள் கடந்த நூறாண்டு காலமாக தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் எனப் புலப்படும். தொகுத்த மதிப்பிற்குரிய மூத்தப் பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
http://www.bbc.co.uk/tamil/highlight...amilisai.shtml
மிக்க நன்றி வெங்கி ராம் .
ஆழ்ந்து, அனுபவித்து, ஆராய்ந்து போட்ட பதிலுக்கு நன்றி.மிக ரசித்தேன்.
தில்லானா மோகனம்பாள் என்ற சாம்ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வந்து விட்டோம்.
இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இன்னொரு நாட்டில் கொண்டுபோய்விடும்.
அது தேவையில்லை.நம் நோக்கமும் இல்லை.
மீண்டும் தலைநகர் திரும்பி தலைவர் புகழ் பாடுவோம்.
மறக்காமல், "அண்ணா பல்கலை கழக முன்னாள் மாணவர் சங்க"த்தின் உணவகத்தில்,"தேனும் தினைமாவும்" சேர்க்க சொல்லி விடுகிறேன். :smile:
Watch Anbalippu in Murasu TV on 13.04.13 at 7.30 pm
NT's family entertainer.
நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பின் வந்ததில் திரியில் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. பம்மலார் அவர்களின் பதிவுகளையே காண முடியவில்லை. கிளாஸிக் பகுதியில் அவரால் துவங்கப்பட்டு வளமாக வளர்ந்து வந்த திரி பூட்டப்பட்டுள்ளது. முரளி சார் அவர்களின் பதிவுகளும் ரொம்பவே அபூர்வமாக தென்படுகிறது. என்ன காரணம் என்பது தெரியவில்லை.
ஏதோ நடந்திருக்கிறது.
இருப்பினும் இந்த திரியை உயிர்ப்புடன் நடத்திக்கொண்டிருக்கும் ராகவேந்தர் சார், வாசுதேவன் சார், கோபால் சார், கண்பட் சார், ஆதிராம் சார், சந்திரசேகர் சார், செந்தில் சார், பார்த்தசாரதி சார் ஆகியோருக்கு மிக்க நன்றி.
விடுபட்டவர்களின் பதிவுகளை மீண்டும் காண ஆவல்.
என் விருப்பம்
ஒருமுறை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது முதல் முறையாக கேட்டபோதே ஒரு பாடல் என் மனத்தைக் கவர்ந்தது. அது 1973-ம் ஆண்டு மத்தியில். அப்போது டிவி.கிடையாது. கேசட் ரிககர்டர்களும் அவ்வளவாக பிரபலமாகாத நேரம். ஊரில் ஸ்பீக்கர் செட் கடை நடத்தும் இருவர் சென்னையில் இருந்து புதிய ரிக்கார்ட் பிளேயரும் அப்போது வெளியாகியிருந்த புதிய இசைத்தட்டுக்களும் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் பயணிகள் உறக்கத்தில் இருந்த நேரத்தில், இரண்டு கம்பர்ட்மெண்ட்களுக்கு மத்தியில் இருக்கும் பாதையில் அமர்ந்து அவர்கள் வாங்கி வந்திருந்த இசைத்தட்டுக்களை பிளேயரில் பாடவிட்டுக் கொண்டிருந்தனர். பாதைக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நான் அவற்றை சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது "மேள தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண்பார்க்க வந்தேனடி" என்ற ஒரு புதிய பாடலை ஒலிபரப்பியபோது, முதல்முறையாக கேட்ட மாத்திரத்திலேயே மனதில் 'சக்'கென்று ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அந்தப்பாடல் எந்தப்படம் என்பது கூடத் தெரியாது. கேட்டதும் கிறங்கிப்போன நான் பாடல் முடியும் வரை மெய்மறந்து கேட்டு விட்டு, மெல்ல எழுந்து முன் அறிமுகமில்லாத அந்த நண்பர்களிடம் சென்று, அந்தப்பாடல் எந்தப்படம் என்று கேட்டபோது அவர்கள் அந்த இசைத்தட்டையே என் கையில் எடுத்து தந்தனர். படத்தின் பெயர் சிவகாமியின் செல்வன் என்று படித்ததும் மனது ஜிவ்வென்று பறந்தது. ஏனென்றால் எந்தப்படம் என்று தெரியாதபோதே மனத்தைக் கவர்ந்த அந்தப்பாடல் இப்போது தலைவர் படத்தில் என்றால் ஏன் மனம் குதியாட்டம் போடாது?.
அந்த நண்பர்களிடம் மீண்டும் அந்தப்பாடலை பிளே பண்ணும்படி கேட்டேன். அவர்கள் எனக்காக மீண்டும் இரண்டு முறை ஓடவிட்டனர். மனம் குளிரக் கேட்டுவிட்டு அந்த இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன்.
சென்னை திரும்பியதும், 'ஜுக் பாக்ஸ்' இருந்த ஹோட்டலில் சென்று பட்டியலில் தேடியபோது அந்தப்பாடல் இருந்தது. ஒருமுறை பிளே பண்ண 25 பைசா கட்டணம். அடிக்கடி அந்த ஹோட்டலுக்குப் போய் அந்தப்பாடலையே திரும்பத் திரும்ப கேட்டு அதன்மீது பித்தனானேன்.
படம் வெளியானபோது தியேட்டரில் 'மேளதாளம்' பாடல் வந்தபோது மெய்மறந்து ரசித்தேன். அந்தப்படத்தின் எல்லாப்பாடல்களும் அருமை என்றாலும் இந்தப்பாடலுக்கு என் மனதில் தனியிடம் எப்போதும் உண்டு. இன்றைக்கும் இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கம்பன் எக்ஸ்பிரஸில் எனக்கு இந்தப்பாடலை அறிமுகப்படுத்திய அந்த நண்பர்கள் நினைவுக்கு வருவார்கள். ஏனென்றால் இது என் விருப்பம்.
ஆஹா!! இன்று எங்களது அதிர்ஷ்ட தினம் .
திரியின் அங்கத்தினர்கள் எனக்கு தனி தனியாக நன்றி தெரிவிக்க வேண்டும்
எனது அயராத முயற்சியினால் காணாமல் போனவர் வந்தே விட்டார்.
வருகவே, வருகவே.
நமக்கு வேலை வைக்காமல் , அவரே மேளதாளத்துடன் வந்து விட்டார்.