வினோத் சார் , பாராட்ட வார்த்தைகள் இல்லை . உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது , " கருத்து வேற்றுமைகள் வரலாம் , சில தேவைகளுக்காக பல உண்மைகள் மறைக்கப்படலாம் ,ஆனால் அவைகள் ஒரு நல்ல நட்பை பாதிக்காது , அது வேறு , இது வேறு " . மற்றவர்களை பாராட்டுவதில் நீங்கள் வகிக்கும் முதன்மைத்தன்மையை யாராலும் எட்டி பிடிக்கமுடியாது . நல்ல தேக ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன் .
===========
நன்றி திரு.ரவி சார்,
கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள் காரணமாக மக்கள் திலகத்தின் சாதனைகளை, சாதாரண நடிகனாக இருந்து மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த உலகின் முதல் நடிகரின் பெருமைகளை மறைக்க சிலர் முயற்சி செய்யலாம். அதற்கு நாங்கள் கண்ணியம் கெடாதபடி, நாகரிகமாக ஆதாரங்களுடன் பதில் அளிக்கலாம். அது வேறு.
அவை எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நமது நட்புக்கு பழுது ஏற்படாதபடி, எங்கள் திரிக்கு வந்து திரு.வினோத் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தங்களின் பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் தலைவணங்குகிறேன். நன்றி. பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
======================
திரு கலை சார் - நீங்கள் கேட்டுக்கொண்டதை மீறினால் நான் ஒரு நல்ல நண்பனாக இருக்க தகுதி அற்றவன் . உங்களுக்கு முடிந்தபோது அங்கும் வாருங்கள் - பொதுவாக பேச , யார் மனமும் புண் படாமல் பேச மதுர காணத் திரியைப்போல அருமையான திரி ஒன்று எங்குமே இருக்க முடியாது - இந்த மகத்தான சேவையை செய்த திரு வாசுவை புகழ வார்த்தைகள் இனி தமிழில் கிடைத்தால் தான் உண்டு .
நாம் எல்லோரும் இணைந்து இருவரில் ஒருவரை மட்டும் புகழ்ந்து , உண்மைகளை மட்டுமே பதிவிட்டு சந்தோஷமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஆரோக்கியம் குறைந்துகொண்டே வருகிறதே என்றுதான் நான் மிகவும் வருந்துகிறேன் . "என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ? " என்று கேட்டோம் ஒரு நாள் - பல வருடங்களுக்கு பிறகு அந்த கேள்விக்கு நல்ல பதில் கிடைத்தது . ஆனால் அப்படி கேள்விகேட்டவ்ர்கள் நம்மிடையே இன்று இல்லை . இன்று வேறு விதமான கேள்வி , அதே தாக்கத்துடன் , அதே வேதனையுடன் !! என்று தணியும் இந்த மனகசப்புகள் நம் இருவரிடையே ?? நல்ல பதில் நாம் மறைந்த பிறகு கிடைத்தால் , நாம் படும் வேதனைகள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பிரயோசனம் ? தூக்கி எரிய வேண்டிய இந்த மனகசப்புக்களை ஏன் நாம் இருவரும் உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம் ?? இருவருமே ஒத்துக்கொள்ள முடியாத சில உண்மைகள் - அவைகள் அப்படியே இருந்து விட்டு போகட்டும் - அவைகளை தர்பாரில் இழுத்து கொண்டுவந்து ஏன் தலை குனிய வைக்க வேண்டும் ?
போதும் கலை சார் - நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளும் ( காஷ்மீர் உட்பட ) தீர்ந்து விடும் ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை போல தெரிகின்றது . எவ்வளவு நாட்கள் இன்னும் நாம் மனத்தால் ஒன்று படாமல் இருக்கப்போகிறோம் ?
உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் - அதற்கு எனக்கு திறமையோ , தகுதியோ இல்லை - எல்லாம் தெரிந்த நீங்கள் ஒரு பாலமாக இந்த இரண்டு திரிகளுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் ஆசை . நட்பு என்பது கட்டப்பட வேண்டிய ஒன்று , கலைக்க பட வேண்டிய ஒன்று அல்ல .
அன்புடன்
ரவி
===============
நன்றி திரு.ரவி சார்,
தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. சர்ச்சைகள் எனக்கும் பிடிக்கவில்லை சார். நேற்று முன் தினம் மீனவ நண்பன் படம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சர்ச்சைகளால் முடியவில்லை.
நான் எல்லாம் தெரிந்தவன் அல்ல சார். உங்களைப் போன்ற நல்லவர்கள் தெரிவிக்கும் உயர்ந்த கருத்துக்களை நான் மனதில் பதிய வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போது எடுத்து விடுகிறேன், அவ்வளவுதான். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பணிகள் காரணமாக மதுரகானத்துக்கு வரமுடியவில்லை. ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டபடி, தங்களின் அற்புதமான ‘திருக்குறளும் திரை இசையும்’ தொடரை மீண்டும் தொடங்கி விட்டீர்களா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
======================