Dear Senthil Sir,
Thanks for your accolades !
Warm Wishes & Regards,
Pammalar.
Printable View
சகோதரர் வாசுதேவன்,
தங்களின் பாராட்டுதல்களுக்கும், புகழுரைகளுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க எனக்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.
தாங்கள் வழங்கிய விஷூவல் பதிவுகளான மதுரை 'மதி'யில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்கள் [இதற்கு தங்களது சகோதரியின் கணவருக்கு ஸ்பெஷல் நன்றிகள் !] மற்றும் சென்னை 'ஏவிஎம் ராஜேஸ்வரி'யில் கொண்டாடப்பட்ட 25வது நாள் விழா வீடியோ முதலியவை பாராட்டுக்களுக்கும், நன்றிகளுக்கும் அப்பாற்பட்டவை.
பெருந்தன்மையில் நடிகர் திலகத்தின் மறுவடிவம் தாங்கள் என்பது அறிந்த ஒன்று. கடுங்கோபத்தில் துர்வாசரும்-பரசுராமரும் தங்களிடம் தோற்றோடிவிடுவார்கள் போலிருக்கிறதே ! தங்களின் இதயம் 'அன்பு' என்னும் ஊற்றுப்பெருக்கால் நிறைந்ததல்லவா !
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி உன் மனச பாத்துக்க நல்லபடி"
இந்த வைரவரிகளை நினைவில் நிறுத்துங்கள், வருத்தங்களை விலக்குங்கள், திரிக்கு திரும்புங்கள்.
ஒரு அருணோதயத்தை நாங்கள் காண்போம் !
"காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு"
என்கின்ற "ராஜா" பாடல் வரிகளைப் பாடிக்காட்டி பம்மலார் ஆகிய எனக்கே 'அல்வா' கொடுக்கக் கூடாது.
அல்வா என்றவுடன் நினைவுக்கு வருகிறது,
திரிக்கு சில தினங்களாக இதுபோன்று 'அல்வா' கொடுத்தது போதும், எப்பொழுதும்போல் நிஜமான இனிப்பு 'அல்வா' கொடுக்க வீறுகொண்டு வாருங்கள் !
இது ஆண்டவன் கட்டளையோ, அரசகட்டளையோ அல்ல, உங்கள் பம்மலாரின் பாசக்கட்டளை !
உரிமையுடன்,
உங்கள் இளைய சகோதரன்,
பம்மலார்.
டியர் கோபால் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், இதயபூர்வமான பாராட்டுக்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள் !
"தெய்வப்பிறவி", "ஹரிச்சந்திரா" திரைக்காவியங்களின் ஆய்வுகள் சுருக்கமாகவும், சுவையாகவும், சிறப்பாகவும் உள்ளன. பாராட்டுக்கள் !
முதல் ஆய்வை எனக்கும், அடுத்த ஆய்வை நமது சகோதரர் நெய்வேலியாருக்கும் அர்ப்பணம் செய்த தங்களின் பெரிய மனதுக்கு பவித்ரமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கிருஷ்ணாஜி,
Welcome Back !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
"பரிட்சைக்கு நேரமாச்சு" நெடுந்தகடு வருகை நெஞ்சுக்கு களிப்பூட்டுகிறது. வெகு நாட்களாக எதிர்பார்த்தது அல்லவா ?! தகவலுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
நான் வணங்கும் தெய்வம்
[12.4.1963 - 12.4.2012] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 12.4.1963
http://i1110.photobucket.com/albums/...GEDC5684-1.jpg
குறிப்பு:
தென்னகமெங்கும் 12.4.1963 வெள்ளியன்று வெளியான இக்காவியம், சென்னையில் மட்டும் 27.4.1963 சனிக்கிழமையன்று வெளியானது. [அரங்குகள் : காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா].
பக்தியுடன்,
பம்மலார்.