சுந்தர்ராஜன் சார்
நீங்கள் ஒரு முகம் காட்டும் கண்ணாடி மாதிரி என்று கூறும்போது நீங்கள் நம்பவில்லை.
இப்போது பாருங்கள் உங்கள் முன் இந்த பாடலை திரு கலைவேந்தன் அவர்கள் பாடி அற்பனிகிறார்
நன்றி கூறுங்கள் சார் !
Rks
Printable View
லட்சுமி கல்யாணம் - Part II
கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான AL. ஸ்ரீனிவாசன் தயாரித்த படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான கதாபாத்திரங்கள் கூட அவர் கை பட்டால் மின்னும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாசத்தையும் மனித நேயத்தையும் அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட அவரது எந்த ரோலும் சோடை போனதில்லை. இந்த கதிர்வேலுவும் அப்படித்தான். கதிர்வேலு என்ற பெயரே ஒரு புதுமை. இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ இது போன்ற ஒரு பெயர் தாங்கிய காரக்டர் அவர் செய்ததாக நினைவில்லை.
அந்த காலக்கட்டத்தில் [60 -70 களில்] பொது விழாக்களில் எப்படி தோன்றுவாரோ அது போன்ற ஜிப்பா குர்தா உடையில் சில காட்சிகளில் வருவார். மற்றப்படி அணியும் உடை சாதாரண பாண்ட்-ஷர்ட், லைட் மேக்கப். ஒரிஜினல் சுருண்ட முடி. ஜோடி கிடையாது.
அவரின் அறிமுக காட்சியிலே லட்சுமியை எப்படி ஒரு தங்கையாக பாவிக்கிறார் என்பதை உணர்த்தி விடுவார். நகைச்சுவையாக நக்கல் பண்ணுவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளே கிடையாது. கிராம முனுஸிப் பதவியை பயன்படுத்திக் கொண்டு சிரித்த முகம் காட்டும் நரி குணமுள்ள நம்பியாரை அவர் கிண்டலாக வெறுப்பேற்றுவது எல்லாமே டைமிங்காக இருக்கும். தன்னை பற்றி ஊர் பெண்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நம்பியார் சொல்லும் போது அங்கே ஒரு பெண்மணி விளக்குமாறு வாங்கிக் கொண்டு வர உங்களுக்காக இல்லேங்க, அவங்க வீட்டிற்கு வாங்கிட்டு போறாங்க என்பது, பிறந்த நாள் விழாவில் இவர்தான் கிராமத்திற்கே பெரிய ஆள் என்பது போல் இவர் ஒருத்தர் போதும் என்பது, சொந்தக்கார மாப்பிள்ளையிடம் எப்படியாவது லட்சுமியைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்று சுத்தி சுத்தி வரும் நம்பியாரை அவர் டீல் செய்யும் அழகே அழகு.
இது இப்படியென்றால் ஒவ்வொரு முறை கல்யாணம் நடத்த முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், அப்போது அவரின் உணர்வுகள்!
நம்பியாரின் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்தும் வி.எஸ். ராகவனிடம் அவர் பேசம் தொனி மாறிக் கொண்டே வரும். முதலில் சாதாரணமாக நியாயத்தை எடுத்துக் கூறும் அவர் ராகவனின் பிடிவாதத்தை பார்த்துவிட்டு கெஞ்சலும் கோபமுமாக பேசுவதை சொல்வதா, அதையும் மீறி ராகவன் வெளியே சென்று விட நீ பேசினதால்தான் அவர்கள் கிளம்பி போகிறார்கள் என்று சௌகார் சொன்னதும் ஓடிப் போய் அவர்களை கெஞ்சி காலில் விழ முயற்சிப்பதை சொல்வதா, ஒரேடியாக மறுத்துவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றவுடன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் அவர்களை சபிப்பதும் மண்ணை வாரி தூற்றுவதையும் சொல்வதா, பின்னியிருப்பார் பின்னி.
இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறை எஸ்.வி. ராமதாஸ் தன் தாயோடு கல்யாணத்தன்று காலையில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போய் விட, லட்சுமி வீட்டிற்கு விஷயம் சொல்ல வரும் அந்தக் காட்சி! இவர் மாப்பிளையுடன் வரப்போகிறார் என மகிழ்ச்சியாய் காத்திருக்கும் சௌகார், தலை தாழ்ந்து கலங்கிய முகத்துடன் வரும் நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் என்ன விஷயம் என்று பார்வையாலே கேள்வி கேட்க வசனமே இல்லாமல் கண்ணீர் நிறைந்திருக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் முகபாவத்தையும் மட்டுமே வைத்து நடந்ததை வெளிப்படுத்தும் நடிகர் திலகம், உள்ளிருந்து வரும் லட்சுமி, அவளைப் பார்த்ததும் அவள் அருகில் நெருங்கி அவளிடமும் வசனமே பேசாமல் கண் அசைவிலேயே விவரம் சொல்லும் நடிகர் திலகம், பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த தவிக்கும் லட்சுமி, இனி என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி அப்போதும் அந்த கண்கள் மட்டுமே தன் இயலாமையை வெளிப்படுத்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, நடிகர் திலகத்தின் நடிப்பு வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று. வசனமே இல்லாமல் இதற்கு முன்பும் நவராத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தாலும் கூட இது சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
அவரின் இயல்பான நடிப்பிற்கு உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நண்பனின் வீதியில் வைத்து அவன் தங்கையை பற்றியும் அவளின் வெட்கத்துடன் கூடிய நடையைப் பற்றியும் விசாரிக்க உள் அறையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி! நண்பனும் தாயும் சினிமா பாணியில் முகம் திருப்பி அழ, அங்கேயும் எந்த வசனமும் இல்லாமல் நண்பனின் தாயிடம் என்ன இது என்பது போல் கையை மட்டும் நீட்டி கேட்கும் இடம் இருக்கிறதே, சூப்பர்!
முதல் இரண்டு திருமண முயற்சிகளிலும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை காட்டிய நடிகர் திலகம், வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் போது எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தலேனாலும் நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்று அனுப்பி வைக்கும் காட்சியில் இன்னொரு முகம் தெரியும்.
கதாபாத்திரமாக அவர் கோவப்படும்போது எப்போதுமே அது பார்வையாளனுக்கு பளிச்சென்று மனதில் பதியும்! இதிலும் அப்படியே! கல்யாணத்தை நடத்த விடாமல் தடை போடும் நம்பியாரை கொல்ல அரிவாளுடன் கிளம்பும் ஆவேசம், நம்பியாரின் ஆட்களுடன் சிலம்பு சண்டை போடுவது, அனைத்து மனிதர்கள் மீதும் கோவப்பட்டு மனிதனே இங்கே இல்லையே என்று யாரடா மனிதன் இங்கே என்று பாட்டாய் வெடிப்பது, எத்தனை முயற்சி எடுத்தும் பலன் இல்லையே எனும்போது விரக்தியில் கோயில் சன்னதியில் ஆத்திரப்படுவது இவைகளின் மூலம் ரௌத்திர பாவத்தை தரிசிக்கலாம் என்றால் ஜாலியான சிவாஜியை போட்டாளே பாடலிலும் தங்கத் தேரோடும் வீதியிலே பாடலிலும் பார்க்கலாம்.
படத்தில் மிகுந்த இளமையாக இருப்பார் நடிகர் திலகம். மேக்கப் இல்லாமலே வசீகரிப்பார்.போலீஸ் குண்டடிப்பட்டு மயங்கி கிடக்கும் வெயிட்டான மேஜரை தன் தோள் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அண்டர் கிரௌண்ட் tunnel-இல் நடப்பது அவரது உடல் வலிமையை பறைசாற்றும்.
நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் சௌகார். பொதுவாகவே சௌகார் பற்றி அழுது வடிந்து சோகத்தை பிழிவார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படிபட்ட சோகத்திற்கு ஸ்கோப் இருந்தும் அந்த trap-ல் சிக்கி விடாமல், கணவன் இல்லாமல் பலபேர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியும் கூட தைரியத்தை கைவிடாத ஒரு பெண்மணியின் குணாதிசயத்தை நன்றாக வெளிக் கொணர்ந்திருப்பார். அழுகை தவிர்த்து அவர் காட்டும் அந்த தைரியம் அதிலும் மகளே தன்னை சந்தேகப்படும் போது அதை சமாளிக்கும் திறன் எல்லாமே சௌகார் எவ்வளவு தேர்ந்த நடிகை என்பதை காட்டும்.
வெண்ணிற ஆடை நிர்மலா, கதையின் நாயகியாக வருவார். குறைவின்றி செய்திருப்பார். சுருட்டு சுந்தரம் பிள்ளையாக நம்பியார். இதில் வித்தியாச வில்லன். வழக்கம் போல் கண்ணை உருட்டி உள்ளங்கையை பிசையும் வில்லத்தனம் இல்லாமல் வீண் பொல்லாப்பு மற்றும் வம்பு பேச்சின் மூலமாக வில்லத்தனம் செய்யும் ரோல். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி சொல்லவேண்டும். வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் பேச்சை கேட்டு திரும்பி போய் விட நடிகர் திலகத்தின் நண்பன் பாலுவாக வரும் வி.கோபாலகிருஷ்ணன் இவரை போய்யா என்று சொல்லிவிட இடிந்து போய் உட்கார்ந்திருப்பார். கல்யாணத்தன்று அவரை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் அவர் துள்ளிக் குதிக்கும் காட்சியில் நம்பியார் சிறப்பாக செய்திருப்பார்.
முதலில் வந்து பெண் பார்க்கும் மாப்பிள்ளையாகவும் பிறகு இறுதியில் லட்சுமியை திருமணம் செய்துக் கொள்பவராக பாலாஜி, அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவன், சிவாஜியின் தந்தையாக வி.கே.ஆர். அவரவர் பாணி நடிப்பை வழங்கியிருப்பார்கள். இந்த அவரவர் பாணி என்று சொல்லும்போது லட்சுமியின் அத்தையாக வரும் சி.கே சரஸ்வதியையும் அவர் கணவனாக வரும் ஏ.கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமியின் முறைப் பையனாக சோ. அவர் துக்ளக் ஆரம்பிப்பதற்கு முன் வந்த படம் என்பதால் அரசியல் வசனங்கள் இல்லை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக வரும் லட்சுமியின் தந்தை ரகுநாதனாக மேஜர்.
(தொடரும்)
லட்சுமி கல்யாணம் - Part III
ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.
கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.
ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.
கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?
1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்
கண்ணா உன் ஆட்சியிலே
கல்யாண சீசன் வரும்
என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.
2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.
பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.
3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]
இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.
4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.
இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.
5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.
நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.
தெய்வம் ஆளவில்லையென்றால்
பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!
என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]
6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.
கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.
1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.
லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.
தில்லானா -132 நாட்கள்
எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்
உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்
லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.
ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.
ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.
சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.
இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
அன்புடன்
In picking Parasakthi as the movie of the month for July 2001, I mentioned that it marked the beginning of an era in Tamil cinema by introducing 'Sivaji' Ganesan to the silver screen. Sadly, the same month now marks the end of the era as the legendary actor passed away on Saturday, July 21. The bulk of his movie career and most of his memorable performances happened before I was old enough to understand and enjoy movies. But some of his later performances gave ample notice of his immense talent and I have also enjoyed several of his older movies on video. Here is a short tribute to the great actor.
Seeing Parasakthi made me realise that Sivaji's debut was unlike that of the other actors I have known. While actors like his peer MGR and later, Rajnikanth and Kamalhassan, appeared in small roles initially before climbing the rungs of success, Sivaji was perched at the top right from the beginning. His performance in his very first film belied his inexperience in front of the camera as he effortlessly portrayed the youth disgusted at the way society treats him and his sister. While his long monologue in the climactic courtroom scene is legendary, he made his mark with almost every scene he appeared in, be it crying, delivering strong dialogs or dancing a few steps.
Both MGR and Sivaji laid out their cinematic paths clearly with MGR being the mass hero and Sivaji being the class hero. While MGR swept up the adulation of the masses with his 'man of the people' roles and squeaky clean image, Sivaji impressed the connoisseurs with his versatility, wide variety of roles and acting talent. Image was no concern as he played good guy and bad guy, old man and young man, handsome playboy and scarred loner, with equal ease. His rich baritone voice and talent at reeling off pages of dialogs with perfect tone and timing made so many of his roles memorable and his lip-syncing for the songs frequently made people forget that he actually had a playback singer.
Some of his most famous roles early in his career were as historical and mythological personalities. On screen, he was transformed into whoever he was depicting and people began identifying those historical figures based on his portrayal. When we talk about personalities such as 'Chatrapati' Sivaji, Veera Pandiya Katta Bomman or Karnan, the image we conjure up is invariably based on Sivaji's appearance as the character. That is the impact his performances have had on public consciousness. His majestic bearing, stylised walk and booming voice were some of the features that stood him in good stead in mythologicals with his role as Lord Siva in Thiruvilaiyaadal being a prime example.
Among social roles too, there is almost no role that Sivaji has not played in Tamil cinema. Fans looked forward to his movies, confident that he would present them with a new persona, replete with a new getup and unique mannerisms, in each new movie and rarely were they disappointed. The affectionate brother in Paasamalar, the strict police inspector in Thanga Padakkam, the haughty lawyer in Gowravam, the naadaswaram astist in Thillaanaa Mohanaambal and the loyal servant in Padikkaatha Medhai are just a few of the characters that cannot be forgotten that easily by Tamil cinema viewers. He dabbled in double roles as early as Uthama Puthiran, effortlessly distinguishing between the two roles. Multiple roles were handled just as easily, with the three roles in Dheiva Magan and the unprecedented(and unmatched) nine roles in Navarathri.
One of the earliest movies in which I saw Sivaji on the big screen was Vellai Roja, the crime thriller where he portrayed both the calm church father as well as the loud but efficient police inspector. Since Sivaji had his roots in stage dramas, some of his later performances were seen as overacting but he proved that under the right director, he still delivered the goods. Two such memorable performances were in Mudhal Mariyaadhai and Thevar Magan. He displayed sadness and comedy in equal portions in Bharatiraja's Mudhal Mariyaadhai, where he played a man wedded to a shrew and found enjoyment in the company of a younger woman. As Kamalhassan's strict but affectionate father in Thevar Magan, he was majestic and his quick end left us wishing he had a larger role. It was unfortunate that none of the other directors utilised his potential fully. His last significant role turned out to be as Rajnikanth's father in Padaiyappa while his final role was as a good-hearted grandfather trying to unite his grandson with his lover in Poopparikka Varugirom. But neither of these were roles deserving of bringing down the curtain on such an illustrious career.
It was one of the cruel ironies that Sivaji, who found so much fame outside Indian shores, never won the national award for acting from the Indian Government. The only consolation for this is that the awards themselves have become highly politicised, as evident from the fact that MGR won the award for Rickshakkaaran. But there was no shortage of accolades from other sources for Sivaji. He won the Afro-Asian film festival award in 1960 for his performance in Veerapandiya Kattabomman and was awarded the title of Chevalier, the Order of Arts and Literature by the Ministry of Culture, Government of France. At home, he received the Padmashri and the Dadasaheb Phalke award. The only recognition he received at the national lever for his acting was the special jury award for Thevar Magan.
After close to 50 years in the Tamil cinema, the thespian has finally passed away. He will definitely live on in our hearts through his movies but his death is a colossal loss to the Tamil film industry and its millions of fans and he will definitely be missed.
May his soul rest in peace
© 2001 Balaji Balasubramaniam
http://www.bbthots.com/reviews/views/sivaji.html
போதும் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? நண்பர்களே.. மீண்டும் நாங்களாக ஆரம்பிக்காத நிலையில், பிரச்னைகளை கிளப்புவது நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வினாக்களுக்கும் கேலிகளுக்கும் எதிர்விளைவே இந்த பதில்...
கேள்வி கேட்க வந்திருக்கும் ஜோ அவர்களே, ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மட்டும் ஓடியதன் மர்மம் என்ன? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு நான் விளக்கமும் அளித்தேன். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர், முதலில் நான் நேற்று எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூலித்தது என்று சொல்வதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டதற்கு, முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்வி கேளுங்கள்.
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார். 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் பட்டம் கிடைத்ததே. அது ஒன்றே போதுமே உங்கள் நடிகர் ஒரு துணை நடிகர்தான் என்பதற்கு? உடனே, எங்கள் தலைவர் சிறிய வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவில்லையா? என்று கேட்காதீர்கள். திறமையால் முன்னேறி கதாநாயகனாக உயர்ந்தவர் கடைசி வரை கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால்,நீங்கள் வாழ்ந்து கெட்டவர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் பற்றி நீங்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகி ஒரு வாரம் தாக்குப்பிடிப்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஈயாடிய படத்தை, இப்போது உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது... சோகபார்ட் சொங்கித்துரை ஆவதை பார்க்க.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
திரு கலைவேந்தன் ,
உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
உங்கள் பதிலுக்கு நன்றி. சிவாஜி உங்கள் சாப்பாட்டில் மண் அள்ளி போடவில்லை என்பதையாவது ஒப்புக் கொண்டதற்கு மற்றொரு நன்றி. நான் சொன்ன வாசகத்தை எனக்கு திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். நண்பரே நீங்களும் உங்கள் நண்பர்களும் சிவாஜியை தரமற்ற விதத்தில் விமர்சித்தது போல நான் இன்று வரை எம்ஜிஆர் அவர்களை ஏதேனும் ஒரு வார்த்தையேனும் தவறாக பேசியிருக்கின்றேனா? அவர் படங்களைப் பற்றி ஏதேனும் எதிர்மறை கருத்து சொல்லியிருக்கின்றேனா? சிவாஜி எம்ஜிஆர் படங்களின் ஓட்டம் அல்லது வசூல் இவை இரண்டை தவிர வேறு வகையான ஒப்பீடுகளை நான் எழுதியதேயில்லை. எம்ஜிஆர் விரோதம் என்ற மனோபாவத்தை நான் வெளிப்படுத்தியிருந்தால் நீங்கள் சொன்ன வாசகம் எனக்கு பொருந்தியிருக்கும். அப்படியில்லை எனும் பட்சத்தில் உங்கள் திருப்திக்கு இப்படி எழுதி கொள்ளலாம்.
மற்றொரு குற்றச்சாட்டு நான் சில உண்மைகளை மன்னிக்கவும் உங்கள் கருத்துப்படி சில நிகழ்வுகளை பதிவு செய்தது உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜி ரசிகர்களை விட என் எழுத்துக்களை உன்னிப்பாக படிப்பவர்கள் நீங்களும் மற்ற எம்ஜிஆர் ரசிகர்களும் என்பது எனக்கு தெரியும். அதிலும் பழைய வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பீர்கள் என்பதும் தெரியும். நான் பலமுறை சொல்லியிருப்பது போல உண்மைகளை மட்டுமே நான் எழுதுவேன். அதனால்தான் எங்கள் மதுரையில் சவாலே சமாளி 80 காட்சிகளும் ராஜா 78 காட்சிகளும்தான் தொடர்ந்து அரங்கு நிறைந்தது என்பதை நான் மறைக்கவில்லை. அது மட்டுமல்ல ரிக்க்ஷாகாரன் 115 காட்சிகள தொடர்ந்து அரங்கு நிறைந்ததையும் நான் பதிவு செய்திருக்கின்றேன். 43 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள்தானே யாருக்கு தெரியப் போகிறது என்று உண்மையை நான் மறைக்கவில்லை. எப்படி அந்த உண்மைகளை மறைக்கவில்லையோ அதே போல் திரு C .தங்கம் அவர்களுடனான நட்பையும் விவரித்தேன், எனக்கு அவரிடம் பிடித்தது இரண்டு விஷயங்கள். சிவாஜி எம்ஜிஆர் போட்டி உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டத்தில் கூட அவர் எங்களோடு பழகிய முறை. இரண்டாவது விஷயம் எனக்கு 12 வயது என்றால் அவருக்கு அப்போதே 25 வயது இருக்கும். ஆனால் இவன் சிறுவன்தானே என்று நினைக்காமல் அவர் பேசிய பழகிய விதம். உங்களைப் போன்றவர்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. அன்றைய நாட்களில் [எனக்கு தெரிந்தவரை] மதுரையில் எம்ஜிஆர் மன்றங்கள் அதன் செயல் தலைவர்கள் என்று சொன்னால் திரு தங்கம், திரு கிருபானந்தம், திரு ராஜேந்திரன் மற்றும் திரு நவநீதகிருஷ்ணன் ஆகியோர்தான். 1972 செப்டம்பரில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கறுப்புக் துணியில் சிவப்பு தாமரை சின்னம் பொறித்த கொடியை ஏற்றியவர்கள் இவர்கள்தான். ஆனால் அதில் நவநீத கிருஷ்ணனை தவிர அதிமுகவில் மற்ற மூன்று பேர்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான பதவிகளோ வேறு எதுவுமே இறுதி வரை அடைய முடியாமல் போனார்கள். தங்கம் அவர்களைப் பொறுத்தவரை 1978-ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் அவரது சொந்த வார்டான 34-ம் வார்டில் [மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்திருக்கும் கரிம்ஷா பள்ளிவாசல் 1,2 தெருக்களை உள்ளடக்கியது] போட்டியிடக் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் அவர்களிடம் நேரிடையான தொடர்பு உடையவர் என்பதனால் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு வேட்பு மனு வாபஸ் வாங்கும் நாள் வரை சீட் கிடைக்கவில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர் வாபஸ் வாங்கவுமில்லை. ஆனால் எம்ஜிஆர் அவர்கள் மேல் தங்கம் வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக தன்னுடைய சொந்த வாக்கையும் குடும்பத்தினரின் வாக்கையும் கூட தனக்கு அளித்துக் கொள்ளாமல் அதிமுக வேட்பாளரான தாஜுதீன் [என்று நினைவு] அவர்களுக்கு அளித்தவர். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டபோது தங்கம் வாங்கியிருந்த வாக்குகள் 0. [அப்போதைய குமுதம் இதழில் கூட இது பற்றி செய்தி வந்ததாக நினைவு]. எம்ஜிஆர் அபிமானிகளால் கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாக பார்க்கப்பட்ட மதுரை முத்து போன்றவர்கள் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிமுகவின் முதல் மேயராகவும் ஆக்கப்பட்டபோது தங்கம் போன்ற விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டனர். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்ற போதினும் தங்கம் என்ற நண்பருக்காக மனம் வருந்தி நான் எழுதியதுதான் அது. இந்த விளக்கத்தை கூட இப்போது எழுதுவதன் காரணம் எம்ஜிஆரை எப்படியாவது குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது அல்ல அந்த வரிகள் என்ற உண்மையை சொல்லத்தான். இந்த 1978 மதுரை மாநகராட்சி தேர்தல் விஷயங்களை நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடரில் அந்த காலகட்டம் வரும்போது எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எம்ஜிஆர் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று சொல்லும்போது நான் இனி எம்ஜிஆர் தொடர்பான விஷயங்களை அவை வரலாற்று நிகழ்வுகளை சொல்வதாக இருந்தாலும் எழுதாமல் விட்டு விடுகிறேன். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.
இறுதியாக சிவாஜி மேல் நீங்கள் எவ்வளவு "மதிப்பு" வைத்திருகிறீர்கள் என்பதனை நீங்கள் அவரை ஒப்பிட்டிருக்கும் பட்டியல் பார்த்தாலே தெரிகிறது. நண்பரே ஒரு கலைவேந்தன் அவரை எப்படி எடை போடுகிறார் என்பதை வைத்து நடிகர் திலகத்தின் மதிப்பும் தமிழ் திரையுலகில் அவர் இடமும் தமிழ் சமுதாயத்தில் அவர் இடமும் முடிவு செய்யப்படுவதில்லை.
இத்தனை நாள் உங்களுடன் interact செய்தது போதும். உங்கள் விருப்பப்படி நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். நன்றி!
அன்புடன்
நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு,
உங்கள் பதிவிற்கும் கண்ணியமான வார்த்தைகளுக்கும் நன்றி. நடிகர் திலகம் திரியில் பங்களிப்பாளர்கள் யாரும் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டார்கள். நண்பர் RKS அவர்களைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்து அவர் react செய்வாரே தவிர தானாக act செய்ய மாட்டார். அவர் தரப்பிலிருந்து உங்களுக்கு தொந்தரவு இருக்காது என்பதற்கு நான் பொறுப்பு.
உங்களுக்கு பிடித்த நடிகர் திலகத்தின் 25 பாடல் பட்டியலுக்கு ஒரு சிறப்பு நன்றி!
அன்புடன்
முரளி சார்,
கலைவேந்தனுக்கு பிடித்த எஸ்.வீ.சுப்பைய்யா பாணியில் ,ஒரே ஒரு விண்ணப்பம். நான் நாலு வார்த்தை பேசிக்கலாமா?
இந்த நேரத்தில் ,அற்ப காரணங்களுக்காக சுயநலத்திற்காக ,சீதா,நவகிரகம் போன்ற பாடல்களை ஆராய்ந்து கொண்டு யார் எப்படி போனால் என்ன என்று ஒருவர், ஒன்றைரையனா பதிவுகளுக்கு காவியம் பாடி பாராட்டுரையில் ஒருவர், தொலைந்ததை தேடி பாட்டு கொணரும் பணியில் மற்றவர்,மாற்று முகாம் மலர் வேலையில் ஒருவர் என்று பிளவு பட வேண்டிய நேரமா இது சுயநல வாதிகளா?ஒரு தமிழின் பெருமையான உண்மை தமிழனை ,ஒரு பஜனை கூட்டம் இழிவு படுத்தும்
போது ,சும்மாவா இருப்பது? ச்சீ.....
சிவாஜியும், அப்துல் ஹமீதும்...
http://photos1.blogger.com/blogger/7.../320/siv.1.jpg
அடுத்து வரும் தலைமுறைகள் நடிப்பதற்கென்று எந்த ஒரு பாத்திரத்தையும் விட்டு வைக்காது அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடித்து அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அந்தப் பாத்திரங்களின் மூலம், நடிக்க வரும் அத்தனை நடிகர்களுக்குமே பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் அவர்.சிவாஜியைப் போல் தமிழை அழகாகவும், உணர்வு பூர்வமாகவும் உச்சரித்த நடிகர் இன்றுவரை இல்லை. இனியும் பிறக்கப் போவதில்லை என்றார் கவியரசர் கண்ணதாசன்.
தனக்கொரு இமேஜ் என்கின்ற எல்லை கட்டிக் கொள்ளாமல், குரூபியாய், கொள்ளைக் காரனாய், தொழு நோயாளியாய், மூத்துக் சிதைந்த முதியவராய், அத்தனை பாத்திரங்களையும் ஏற்கத் துணிந்த சிவாஜியின் ஆண்மையை வியக்கின்றேன் என்றார் 'கவிப் பேரரசு' வைரமுத்து.
தமது கொஞ்சு தமிழ்ப் பேச்சால் வானொலி மற்றும் தொலைக்காட்சி நேயர்களைக் கொள்ளை கொண்ட பாட்டுக்குப் பாட்டு பி.எச். அப்துல் ஹமீது அவர்கள்.. சிவாஜி பற்றிய தமது நினைவலைகளை, ஒரு ரசிகனின் பெருமிதத்துடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலர் உண்டு.
ஆனால் ஒரு பாமரனும் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் அவர்.
பள்ளி நாடகங்களில் நான் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை, வசன உச்சரிப்பிலும், பாவங்களை வெளிப்படுத்துவதிலும் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது.
'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.
கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.
அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.
கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .
அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.
அவர் சொன்னார்...
என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.
தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.
அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.
அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.
அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.
நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.
நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.
அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..
சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.
பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.
நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :
உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.
ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.
சமீபத்தில் நடிகர் நாசர் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் - சிவாஜி அவர்கள் பராசக்தியில் காட்டிய இயல்பான நடிப்பை இன்றுவரை எவராலும் சாதிக்க முடியவில்லை என்று சொன்னதையும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.
அந்த விழா அமைப்புக்குழுவிலே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.
இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.
சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.
அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.
அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
(அதற்கு சில ஆண்டுகள் முன்புதான், அதே அரங்கில் முதன் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அப்போதே அவரை இழந்தவிட்டோம் என்ற வதந்தி காட்டுத்தீ போல உலகெங்கும் பரவியது)
அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது
...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.
நான் உருகிப் போனேன்.
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.
ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது.
அவரைப் போல் திரையில் சோகத்தைப் பிழிந்து தந்த ஒரு நடிகர் கிடையாது.
அவர் மறைவும் உலகத் தமிழர் இதயங்களில் அந்த அளவுக்கு சோகத்தைப் பிழிந்து தந்தது என்றால் அது மிகையில்லை.
அந்த சோகச் சூழலில், மனம் கசிந்து நான் கொஞ்சம் தடுமாறிய வேளையில் என் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள்.
பின்பு, இயக்குனர் கே.எஸ் .ரவிக்குமாரின் உதவி இயக்குனர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் தமது கைத்தொலைபேசியைக் கொடுத்து நேர்முக வர்ணனை தடையின்றித் தொடர உதவினர்.
இந்த சிறியேனுக்கும், தமது இதயத்தில் நண்பன் என்ற பெரிய அந்த°தைக் கொடுத்து அழகு பார்த்த என் மானசீக குருவுக்கு, என்னால் கடைசியாகச் செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கையாக இந்த நேர்முக வர்ணனை வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினானோ என்னவோ....
நடிகர் திலகத்துடன் திரு B H அப்துல் ஹமீது அவர்கள்
http://www.bhabdulhameed.com/images/sivaji.jpghttp://www.bhabdulhameed.com/galleryima/photo_B_40.jpghttp://www.bhabdulhameed.com/galleryima/photo_B_5.jpg
ஜோ, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுகிறீர்கள். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவனின் சிறப்பை பற்றி நீங்களும் உங்கள் கூட்டமும் தெரியாமல் இருந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. நாங்கள் அந்த ரகம் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே? 5 அறிவுகளுடன் எங்களுக்கு ஏன் விவாதம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலை வேந்தன் அண்ணே!
மக்கள் திலகம் திரிக்கு வாங்கண்ணே .. மொதல்ல அந்த பஞ்சாயத்த முடிப்போம் :)
http://www.mayyam.com/talk/showthread.php?t=11153
Covai ROYAL THEATRE
கலைவேந்தன்,
இரு திரிகளையும் படிப்பவர்களுக்கு ,தர வித்யாசமும் ,எத்தனை அறிவு யாருக்கு எனவும், நன்கு புரியும்.
ஒரு பாபுவால் நெருப்பு நீரினால் அணைக்க பட்டாலும் , இன்னொரு ஆயிரத்தில் ஒரு பாபு ,சத்தியமாய் டிக்கெட் வாங்கி தள்ளியது தெரியாதா?
இப்படி கைகாசு செலவழித்து,ஆள் இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்தி தள்ளுறீங்க?
அண்ணே! கோவிச்சுக்காதீங்க ...Civai Royal --ன்னு ஒரு திரி ..அதுல Civai-ன்னா என்னண்னு புரிஞ்சுக்க 10 நிமிஷம் மண்டைய பிச்சுகிட்டு கண்டு பிடிச்சிருக்கேன் .. இப்படி தனியே ஒரு திரி ..அதுவும் இந்த ரண களத்த்துக்கு இடையில தொடங்கி என்ன சொல்ல வர்றீங்க .. சத்தியமா புரியல்ல.
ஐயோ பாவம்,
சுகாராமின் ஒப்புதல் வாக்கு மூலம். 72-73 வரை தாண்ட முடியலையாம்.அரசியல் என்ற ஒரு துணை இல்லையென்றால் ,என்றைக்குமே அருகில் அல்ல ,தூஊஊஊஊரத்தில் கூட நின்றிருக்க முடியாது.
முரளி சார் வணக்கம்
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இதுவரை
பொறுமை காத்தேன்
இனியும் அது முடியாதுபோல் உள்ளது
இனிமேல் வரும் எனது சில அவர்களுக்கான பதில் பதிவுகள்
அவர்கள் எழுதுவதைவிட
காட்டமாக இருக்கும் என்பதை தெரிவுத்துக்கொள்கின்றேன்
குறை நினைக்காதீர்கள்
தயவுடன் மன்னிக்கவும்
என் ரசனையை புரிந்து கொண்டதற்கு நன்றி கலைவேந்தன் அவர்களே,
என் தலைவன் சிவாஜி அவர்கள் நடித்த படித்தால் மட்டும் போதுமா
படத்தின் பாடல் பிடித்ததாக கூறியதற்கு நன்றி.
அதில் தொடரும் வரிகள்
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது .
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த
பாடலை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது .
உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
சென்ற வாரம் 05-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் நம் நடிக பேரரசின் வெள்ளிவிழா காவியம் "சந்திப்பு" வெளியிடப்பட்டு நல்லதொரு வெற்றியை பெற்றுள்ளது பெற்றுகொண்டிருக்கிறது.
விரைவில் வருகிறது என்று "ஆண்டவன் கட்டளை" திரைப்பட சுவரொட்டி ராயல் திரைஅரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
திரைப்படம் காண வந்த பொதுமக்கள் ஆண்டவன் கட்டளை திரைப்படம் எப்போது திரையிட போகிறீர்கள் என்று திரை அரங்கு நிர்வாகி மற்றும் உரிமையாளரை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்ததை அடுத்து....பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ..."சந்திப்பு" திரைப்படத்தின் தொடர்ச்சியாக "ஆண்டவன் கட்டளை" திரைப்படம் திரையிட முடிவு செய்துள்ளது திரைஅரங்க நிர்வாகம்.
அதனை தொடர்ந்துவரும் வெள்ளிகிழமை 12-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நம் நடிக பேரரசின் "ஆண்டவன் கட்டளை" !
http://i501.photobucket.com/albums/e...ps48f02ad0.jpg
...சமீபகாலத்தில் ராயல் திரை அரங்கில் இது போல தொடர்ந்து (BACK TO BACK) ஒரே நடிகரின் வெவ்வேறு படங்கள் வெளியிட்டதில்லை என்பது கூடுதல் தகவல் தந்துள்ளது திரைஅரங்கு நிர்வாகம் !
நமக்கு தான் இது போல விஷயங்கள் புதிதல்லவே....!
ஒரே நாளில் இரண்டு படங்கள் தைரியமாக திரையிட்டு இரெண்டும் 100 நாட்கள் ஓடிய சாதனை செய்த பாரம்பர்யம் அல்லவா நம்முடையது !
by KalaivendhanQuote:
Quote:
ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார்
அப்படிப் பார்த்தால் திரு பாக்கியராஜ் அவருடைய அவசரபோலீஸ்100 படத்தில் கதையமைப்பிலேயே ஒரு துணைபாத்திரத்தில் எம்ஜியார் வரும்படிதானே வெட்டி ஒட்டி படம் எடுத்திருந்தார்?
Mr. Kalaivendhan. Dont try to open another Pandora's Box to degrade your own icon! When someone from your thread side comes forward reasonably to strike a balance between our threads, your interludes will certainly spoil their attempts and optimism!
.....கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து ....
Dear Kalaivendhan. I request you to kindly regret and withdraw your derogatory remarks with the explicit aim of degrading our NT. otherwise, we can also counter...which may not be palatable.
Dear Mr Kalaivendhan. I reiterate from my earlier posts.
Be it our NT or your MGRamachandran or Gemini Ganesan, they all lived an enviable and admirable life though they originated from poor families and all of them struggled hard to climb up the rungs of success ladder to reach and stabilize their coveted positions of Nadigar Thilagam, Makkal Thilagam and the King of Romance respectively. They all earned well, invested well and were never forced to opt for tiny roles for their livelihood at the ending phases of their famed life! .
NT never lost his market! Don't exhibit your ignorance!!
As a dedicated actor NT wanted to leave behind him a cluster of unforgettable timeless evergreen roles and characterizations and never wanted to restrict his histrionics within a circle, like the Robin Hood type of image MGR built up to become just a seasonal showman on earth rather than a multifaceted actor true to his profession. Next only to NT it was GG who gave us memorable performances on his own originality and individuality. The trinity were all legends in their way even though they are no more now!! After reaching their peaks of career, they never came down to do tiny roles for their survival.
NT and GG did some special appearances to grace those films by their august presence upon request only, as a part of value addition strategy in marketing. No one dared to invite MGR for such honorary roles as he had his ego even at a visibly ageing phase of his career (films like Navarathinam.....)not to do roles other than 'hero'!!
MGRamachandran had to strive hard from post to pillar for over 15 years to get his dream come true as a 'hero' thanks to the helping hand lent by his lifetime friend Kalaignar MuKa.!. It was not an overnight magic for him like NT who by debut itself rocked this world as a top billed superduperstar overnight and sustained that cult status till he left this world. I dont deny the success story of MGR on screen as an actor and off screen as a CM in the political arena. Mine is a reply to some wrong entries trying to project NT in a degrading fashion.
Murali Sir. Kindly bear with me.
Yukesh,
நடிக பேரரசர், வசூல் சக்ரவர்த்தி KARNAN பெருமை இன்டர்நெட்டில் உள்ளது. நானே முடிந்தவரை data mining செய்து கொடுப்பது:
1st Evidence link: http://www.tamilstar.com/news-id-100...-06-122370.htm
Another evidence of Karnan's 5 crore collection: http://m2.facebook.com/galatta?v=tim...C7SvD_Kdxfpys5
மற்ற சில கர்ணன் புகழ் படும் திரிகள்:
Karnan rules: http://www.thehindu.com/features/cin...cle2999234.ece
karnan accrues a lot of collections in all the centres: http://600024.com/karnan-accrues-lot...l-the-centres/
march 2012 month - only 1 hit Karnan: http://tfukannan.wordpress.com/tag/karnan/
karnan to release in the US on july 27 - times of india: http://archive.today/VMW8Z
BO number 2 position: http://www.behindwoods.com/tamil-mov...09/karnan.html
after one month of release
Chennai Box office (march 23-25) Karnan in 3rd place: http://tamilfilmhot.blogspot.com/201...llections.html
after 1 week of release
Karnan in 2nd spot in box office March 16-18 2012: http://www.sify.com/movies/boxoffice...6&cid=13525926
in my view, Karnan should have been no 1 during this week but sify didn't grant this prizy spot due to its rerelease image. In fact, one commentator supported my notion
Karnan in 3rd spot in box office march 23-25: http://www.sify.com/movies/boxoffice...3&cid=13525926
Again, Karnan should have been no 1 spot and the editor seems biased. Again, other fans supported my notion
Karnan in 4th spot in box office march 30-apr 1: http://archive.today/wZiyw
karnan 5th spot during april 6-8: http://www.chalanachithram.com/discu...tml?1334191153
this is almost 1 month after release
நான் பொய் சொல்கிறேன் என்று சொல்கிறீர்கள். மேலே நான் கொடுத்துள்ள திரிகளே என் சாட்சி, நான் பொய் சொல்லவில்லை என்று. AO ஓட்டபடுகிறது என்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை எங்கே சொன்னேன். உங்கள் கலைவேந்தன் தான் என்னை தூண்டி விட்டார் -
என்னை தூண்டிவிட்டதால் நான் AO rerelease flop enkira உண்மை சொன்னேன் - MGR fans தான் கலைவேன்தனை அடக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்னை பொய் சொல்கிறார் என்று உளறுகிறீர்கள். இனியும் கர்ணன் - AO comparison வேண்டாம். நான் முன்னே சொன்னது போல் நீங்கள் தான் இந்த comparison நீங்கள் தான் தோல்வி அடைவீர்கள்.
மேலும், கர்ணன் rerelease என்பது தமிழ் நாட்டில் எப்போதும் ஓடுவது. நான் கர்ணனை எங்கள் ஊரில் 80s rerelease தான் பார்த்தேன். பிறகு, ekadesi நடுநிசி show ஒரு புது தியேட்டரில் பார்த்தேன் (that was a new theater then. They made an exception for Karnan to release old movie. It was a full house show for that 1 show, with rates more than other regular theaters). எங்கள் ஊரில் கர்ணன் மட்டுமல்ல, அனைத்து NT old hits ரெகுலராக வரும். History தெரியாமல் வாயை விடாதீர்கள்; சுடு படுவீர்கள். 80s NT kattabommanaga rerelease செய்து சாதனை படைத்தார். இன்று 2012il மீண்டும் கர்ணனாக மீண்டும் சாதனை படைத்துள்ளார். என்றும் அவர் தான் சாதனை என்பதை ஆரம்பித்து வைப்பார். மற்ற so called actors அவரை follow தான் செய்ய வேண்டும்.
I sincerely hope rerelease karnan vs AO debate should end here. The comparison of any movie with Karnan is a grave sin, karnan is incomparable. As joe said earlier: கர்ணன் கோடியில் ஒருவன்
Regards
regards
http://i59.tinypic.com/2qmls7r.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இது தாண்டா சிவாஜி சாதனை என மலைக்கோட்டை மாநகரம் மார்தட்டி கூறும் மகத்தான சாதனை பாரிர்
இந்த தலை முறை மகுடம் சூட்டிய ஒரே நடிகர் இதயதெய்வம் சிவாஜி அவர்களின் காவிய படைப்புகள் கடந்த ஒரு மாத காலத்தில்
திருச்சி கெயிட்டியில் படைத்திட்ட பட்டய கிளப்பும் சாதனை பாரிர்
வெள்ளை ரோஜா - 5 நாட்கள் -பார்த்த இதயங்கள் 1981 - விநியோகஸ்தர் லாபம் Rs.9984.00
(First day Collection Highest ever for the past 7 Years - Nett Rs.9743)
குடியிருந்த கோவில் - 4 நாட்கள் - பார்த்த இதயங்கள் 1402 -- விநியோகஸ்தர் லாபம் Rs.6875.00
தங்கப்பதக்கம் -- 4 நாட்கள் --பார்த்த இதயங்கள் 1493 ----விநியோகஸ்தர் லாபம் Rs.7932.00
Thanks to Manager -Gaiety theatre
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு வந்தால் உயிர்கள் உன்னை வணங்கும்
எஸ் வீ,
உங்களுக்கே தெரியும். யார் அத்து மீறுகிறார்கள் என்று. நாங்கள் ஒரு பதிவில் கூட ,provocative ஆக எதுவும் எழுதாத போது உங்கள் திரியில் நீங்கள் கண்டிப்பதை விட்டு ,வார்த்தை சித்தர்களை குறை கூறுவது வினோதம். பொம்மை பட சித்தர்களை மூடி கொண்டு இருக்க சொல்லுங்கள். விளம்பரத்திற்காக stunt செய்தே ,எங்கள் சாதனைகளை மனதில் வைத்தே ,உங்கள் இயக்கங்கள் அமைகின்றன. இன்று அறிவு சார் கூட்டத்தின் நடுவே இவை எடு படாது.
உங்களுக்கு,எங்கள் ரசிகர்கள் என்று கூறி கொண்டு இருக்கும் சிலர் தரும் ஆதரவு,உங்கள் இரட்டை வேடத்தை மறைக்காது.
என்னிடம் துக்ளக் பத்திரிகையில் 1972 இல் வந்த மூன்று வார coverage உள்ளது. அத்தனை jury மற்றும் members பேட்டிகளுடன் பாரத் பட்டம் பற்றி. நான் அமைதி காப்பது திரிகளுக்குள் அசிங்கமான குழாயடி சண்டை வேண்டாம் என்றே.
செப்டம்பர் 11 ...
அமரகவி பாரதியின் நினைவு நாள் இன்று..
அவர் பெயரைச் சொன்னாலே நம் நினைவில் உடனே நிழலாடுவது
http://img.youtube.com/vi/EDAIILa8VPw/0.jpg
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்புடையவை. தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒவ்வொரு கட்ட வாழ்விலும் அவருடைய படங்களே நமக்கு பாடங்களாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன. தன் படங்கள் மனிதனுக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும், அவன் எந்நெந்த விதமான சோதனைகளை வாழ்வில் சந்திப்பான், அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து அவற்றை எப்படித் தன் படங்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பதையெல்லாம் கதையின் மூலம் கேட்டறிந்து ஒப்புக் கொண்டு தன் கலையின் மூலம் வாழ்வியலை யதார்த்தமாகவும் ஆக்கபூர்வமாகவும் எதிர்கொள்ள நமக்களித்தவர் நடிகர் திலகம்.
அந்த வரிசையில் தான் மகாகவி பாரதியின் பாடலான மனதில் உறுதி வேண்டும் பாடலும் இடம் பெறுகிறது. காலத்தை வென்று நிற்கும் கலைமகனின் பாடல்களில் இடம் பெற்ற வரிகளும் காலத்தை வென்று நமக்கு பயனளிக்கின்றன.
கள்வனின் காதலி.. நடிகர் திலகம் நடிக்க வந்த மூன்றாவது ஆண்டில் வெளிவந்த படம். நடிகர் திலகத்தின் 25வது படம். இதுவும் கோடீஸ்வரன் திரைப்படமும் வெளியாகி அப்போதே அந்த சிறப்பைத் துவக்கி விட்டதை நிரூபித்த படம். அமரர் கல்கியின் புதினத்தைத் தழுவியது.
இந்த உன்னதத் திரைப்படத்தில் இடம் பெற்ற மனதில் உறுதி வேண்டும் பாடல் இதோ நமக்காக..
அந்த யுகக் கலைஞனின் புன்னகை தவழும் மதிமுகத்தைப் பார்ப்பவர்கள் மனசாட்சியுள்ளவர்களாக இருந்தால் அவரைப் பற்றி கீழ்த்தரமாக சிந்திக்கவும் பேசவும் நிச்சயமாக கனவில் கூட எண்ண மாட்டார்கள்.
http://www.youtube.com/watch?v=OCv-5XuuXaM
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
http://www.youtube.com/watch?v=mgz7Nc-ZZLc
பாரதியார் நீட்டி முழக்கி ஆவேசமாகப் பேசுவதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அவர் வேடத்தில் நடிக்க இவர் தான் என இன்னொரு நடிகரை வேண்டுமென்றே தூக்கிப் பிடித்த காலமும் உண்டு. ஆனால் பாரதி என்னும் மனிதன் ஒரு பிம்பமல்ல, அவர் ஒரு யதார்த்தம், அவர் மனிதனின் பிரதிபலிப்பு என்பதை நிரூபித்து அந்த சராசரி மனிதனின் உள்ளுக்குள் இந்நாட்டைப் பற்றி எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டை கவியாக வடித்து அதனை இயல்பான முறையில் படம் பிடித்து நம் மனதில் ஆழமாக வேரூன்றச் செய்த பெருமை நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள், இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி., பாடகர் திலகம் டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைத்த ஜே.வி. ராகவலு உள்ளிட்ட ஒரு குழுப் பணியையே சாரும். ஒளிப்பதிவாளர், பாடல் ஒலிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக இணைந்து அளித்த இப்பாடல் காலத்தை வென்று நிற்பதோடு மட்டுமின்றி, அமரகவி பாரதியைப் பற்றி காலந்தோறும் பறை சாற்றிக் கொண்டே இருக்கிறதே..
All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....
இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !
அது தான் நடிகர் திலகம்...!
ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!
RKS !!!
Senthilvel Sivaraj Sir,
Please post all the photos here in this thread instead of opening a new thread everytime. I am cut pasting the photos here and closing the other threads.
http://img.tapatalk.com/d/14/09/10/t...l/e5eny6ut.jpg
http://img.tapatalk.com/d/14/09/10/t...l/ymybyma9.jpg
http://img.tapatalk.com/d/14/09/11/t...l/hyqa7a3y.jpg
Regards
அன்பு சிவா சார்,
பதிலுக்கு பதில் வேண்டாம். அது தேவையற்ற மன வருத்தங்களையும் காயங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால்தான் அதை தவிர்க்க சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். ஓரிருவர் [அதிலும் ஒருவர் வேண்டுமென்றே செய்கிறார் என்ற போதினும்] தவறு செய்வதால் நாமும் அது போன்ற தரம் தாழ்ந்த பதிவுகளை போட வேண்டாம் என்பதுதான் என் எண்ணம். நான் பல முறை சொல்வது போல் நமது நடிகர் திலகம் ரசிகர்களுகென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதற்கு மாசு கற்பிப்பது போல் நமது நடத்தை அமைய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. அருமையான் அதே நேரத்தில் சரியான பதில்களாக நமது நண்பர்கள் நேற்றைய தினத்திலும் இன்றைய தினத்திலும் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்..இனியும் அந்த தரப்பிலிருந்து நடிகர் திலகம் மீது அவதூறு வந்தால் நாம் பதிலளிக்கலாம்.
அன்புடன்
murali sir waiting for your reply sir now who begin the issue
இவர்கள் என்னதான் கத்தினாலும்...........நடிப்புக்கு ஒரே ஒருவர் தான் ,.,,,அது நடிகர் திலகம் தான் என்பதை உலகறியும்...!
அடுத்தவன் பெருமைகளை தனது என்று பறைசாற்றிகொள்ளும் குணம் உள்ளவர்கள்.....இவர்களின் இந்த பேப்பர் டாகுமென்ட் சிறிது இவர்களே படித்து பார்த்தால் ....இவர்களே அதை எடுத்துவிடுவார்கள்...!
AUSTRALIAN DIRECTOR தொலை பேசியில் பேசினாராம்..சரி...யாரிடம் பேசினார் ? விருதுபெற்றவரிடமா...அல்லது பத்திரிகை நிருபரிடமா...?
இன்னும் பல அர்த்தமுள்ள லாஜிகல் கேள்விகள் கேட்கமுடியும் நம்மால்...!
All categories of acting viz.. natural...normal....semi normal...abnormal...subtle...below par subtle...standard...silent....heavy tone...mid tone...light tone....
இப்படி பல வகைப்பட்ட நடிப்புக்கலைக்கு ஒரே GALAXY தான் உள்ளது !
அது தான் நடிகர் திலகம்...!
என்னதான் காட்டு கத்தல் கத்தினாலும்...ஒரே சூரியன் ...ஒரே சந்திரன்...மற்றும் இதர ஒரே PLANETS எல்லாம்......நடிகர் திலகம் என்னும் GALAXY யில் தான் உலா வருவது !!!
இதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது ...மறைக்கவும் முடியாது !
RKS !!!
Dear Yukesh Babu Sir,
Please do a similar posting for Mr. RAMAMOORTHY Sir's & Mr. KALAIVENDHAN's Write up First
and THEN...Please do it for my message.
WHY ARE YOU NOT FOLLOWING WHAT WE REQUESTED FOR SIR AND WHY ARE YOU NOT POSTING MESSAGES WHEN Mr.KALAIVENDHAN STARTED THE DISCUSSION FIRST SIR ?
PLEASE READ HOW HE HAS ADDRESSED RAJAPART RANGADURAI FILM & THEN TELL ME !!!!
DO YOU MEAN TO SAY THAT YOU ALL WILL DO WHATEVER YOU WANT AND WE HAVE TO KEEP QUIET LISTENING TO YOUR INSULTS ??????
Regards
RKS