உண்மை கார்த்திக் சார்
இது மாதிரி சில நலல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்ட விதம் நம்மை மிகவும் எரிச்சல் அடைய செய்யும்
நீங்கள் சொல்வது போல் இது போன்ற பாடல்கள் பார்ப்பதை விட கேட்பது நல்லது என்று நினைக்கிறன்
ஆர்கெஸ்ட்ரா composition மிக அருமை
Printable View
கிருஷ்ணா சார்,
ராஜ பாண்டியனையும் பார்த்து விடலாம்.
'டாக்டர் சிவா' படத்தில் ராஜபாண்டியன்.
[IMG]http://i812.photobucket.com/albums/z...ps116cedaa.jpg[/IMG]
கார்த்திக் சார்,
உண்மைதான். அந்தப் பாடல் சரியாகப் படமாக்கப் படவில்லை. ஆனால் பாடல் பட்டை கிளப்பும் சார். அதைவிட 'எங்கிருந்தோ ஆசைகளி' ன் நடுவே இடையிசையாக அதே வரிகளை ஷெனாய் மூலம் மெல்லிசை மன்னர் பின்னி எடுப்பாரே! அருமை சார்.
டியர் கார்த்திக் சார்,
http://s.ecrater.com/stores/47612/48...28d_47612b.jpg
'சுவாதி நட்சத்திரம்' படத்தின் நாயகி உதயசந்திரிகா. கன்னடத்துக்காரர். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. கண் தெரியாத உதய சந்திரிகாவை சண்முகசுந்தரம் கெடுத்து விடுவார். படத்தில் கலர்க் காட்சிகளும் ரம்மியம்.
ஆனால் கல்பனா இருக்கிறாரா தெரியவில்லை. எந்த வேடத்தில் வருகிறார் என்பது நினைவில் இல்லை.
படத்தில் முகவாய்க் கட்டையில் கை வைத்திருப்பவர் உதயசந்திரிகா. (தில்லானா மோகனாம்பாளி'ல் பாலாஜி மனைவி இவர்).
http://3.bp.blogspot.com/-mqO9oK3TRs.../mqdefault.jpg
கிருஷ்ணா சார்
3 தோசை முடிந்து விட்டது
நான்காவது தோசை மாலை ஆறு மணிக்கு.:)
சுவாதி நட்சத்ரம் சூப்பர் போட்டோ
நெல்லை பார்வதி ரிலீஸ் 1974
M/s. Vasu / Krishnaji / Karthik:
Outstanding entertainment. Special thanks to Vasu Sir for that pose from Raja; but, my favourite one is during the fight (before that long but interesting climax) between NT and Balajee in which NT's stance with cream colour shirt and pant with scarf...Wow. I remember Mr. Raghvender also shared some thing about this still photo some time back.
Kalpana committed suicide and died, which was followed by another Kannada actress Vijayasree (NT's love interest in Babu). She was very famous for heroine oriented roles and was groomed by Puttanna Kanagal. However, both got separated. Irulum Oliyum's original was Puttanna's in which Kalpana acted as lead lady. Her way of wearing blouse with almost full sleeves with collar around neck was very famous. When this movie was remade as Irulum Oliyum, this was also copied by Vanisree!
Bharathi only will almost like Saroja Devi; not Kalpana. Kalpana's is a unique face. Good talent; as usual wasted in Tamil.
Regards,
R. Parthasarathy
ராஜ பாண்டியந்தானே மல்லிகை பூபோட்டு கண்ணனுக்கு மங்கல தாலாட்டு?
நினைப்பது நிறைவேறும் -எம்.எல்.ஸ்ரீகாந்த்?
https://lh6.ggpht.com/_bQVMgvwda6DzK...dNUFXoJOQ=s113http://cdn.spicyonion.com/cache/imag...an-175x250.jpg
http://www.tamilstar.com/profile/upl...ishankar_5.jpg
அம்மன் அருள் 1973
அம்பிகா movies தயாரிப்பு
பட்டு என்ற பட்டாபிராமன் இயக்கம்
ஜெய் ஷங்கர்,மஞ்சுளா விஜயகுமார்,நடிப்புசுடர் ஏவிஎம் ராஜன்,
அசோகன் நடித்து வந்த கருப்பு வெள்ளை
இசை இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்
AVM ராஜன் அம்மன் கோயில் பூசாரி அவர் மகள் மஞ்சுளா .அசோகன் அந்த ஊர் பண்ணயார் அவர் மகன் ஜெய்சங்கர் இவர் மேல்நாட்டில் டாக்டர் பட்டம் படித்து விட்டு வரும் பகுத்தறிவு வாதி .கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்கு வாதம் அடிக்கடி நடக்கும்
ஏவிஎம் ராஜன் இந்த படத்தில் இருந்து தான் 'மகமாய் மகமாய் அம்மா கருமாரி ' என்று அடிகடி சொன்னதாக நினவு
இப்போது கிறிஸ்துவ மத போதகர் ஆக இருக்கிறார் .
ஜெய்சங்கர் மஞ்சுளாவை விரும்புவார் ஆனால் இதை அசோகன் விரும்பமாட்டார் . அம்மன் கோயிலில் சீட்டு போட்டு பார்த்து விபுதி வந்த காதலை கை விடுவது ,குங்குமம் வந்தால் காதலியுடன் சேர்வது என்று முடிவாகும் .ஏவிஎம் ராஜனே எல்லா பொட்டலதிலும் விபுதி வைத்து விடுவார் .ஜெய் கோபித்துகொண்டு ஊரை விட்டு போவார் அசோகன் கோபம் கொண்டு கோயிலையும் அம்மன் சிலையையும் உடைக்க முயற்ச்சி செய்வார். இதற்கு நடுவில் ஒரு சங்கிலி ஒன்று காணமல் போகும் . அது அம்மன் கழுத்து சங்கிலியா அல்லது மஞ்சுளா கழுத்து சங்கிலியா என்று நினைவில் இல்லை
முடிவு dvd (கிடச்சா வாங்கி ) பாருங்க
இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும்
radha jayalakshmi சகோதரிகள் குரலில்
'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ' என்ற பாடல்
நவராத்திரி சமயத்தில் எல்லா அம்மன் கோயில்லும்,ஆடி மாத கொடை விழாக்களிலும் கலந்து கட்டிய பாடல்
http://www.mediafire.com/?p9k42abuh9d64p2
பாலா சுசீலா குரல்களில்
கொஞ்சம் மாணவன் "கல்யாண ராமனுக்கும் " பாடலை நினைவு படுத்தும் . ஆனால் பாலாவின் ஆரம்ப குரல் ஹம்மிங் தொடர்ந்து சுசீலாவின் குரல் இனிமை நம்மை மயக்கும் .வழக்கம் போல் கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் வீணை flute கலந்து
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான்தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
பட்டு தளிர் கோடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாலை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னனென்ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென நூறாய் நான் தருவேனே
http://cdn.600024.com/store/image/ca...ul-500x500.jpg
http://www.youtube.com/watch?v=MmUpkPvYd2U
'ராஜா' படத்தின் செய்தித்தாள் விளம்பரங்களில், பாட்டுப்புத்தக அட்டையில், பொம்மை பேசும்படம் பத்திரிகைகளில், தியேட்டர் கட்-அவுட்களில் (மவுண்ட் ரோடு அண்ணாசிலை பின்புறம் வைக்கப்பட்ட கட்-அவுட் ரொம்ப பேமஸ்) இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அந்த போஸ் (மஞ்சள் பேண்ட், மஞ்சள் முழுக்கை ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் இவற்றுடன் இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் தோற்றம்), ஆனால் படத்தில்......??????
கண்மூடித் திறப்பதற்குள், ஒரு செகண்டின் பத்தில் ஒரு பகுதியில் சட்டென வந்து மறைந்துவிடும்...
டியர் கார்த்திக் சார் /பார்த்தசாரதி சார்/ கிருஷ்ணா சார்,
என்னிடம் இருந்த என் இதய தெய்வத்தின், நம் நடிக தெய்வத்தின் அசர வைக்கும் இன்னொரு 'ராஜா' ஸ்டில்.
இதுவரை போடாமல் காத்து வந்தேன். இன்று 'ரா(ஜா)ஜ' நேரம் போல் இருக்கிறது.
இப்போது உங்கள் எல்லோருக்கும் இங்கு முதன் முறையாக.
http://i812.photobucket.com/albums/z...ps5201d7f8.jpg
"come on..... Get up...!"
டியர் வாசு சார்,
என்ன ஒரு அற்புதமான போஸ்.
"உலகத்துக்கே 'ஸ்டைல் கிங்' நான்தான். இல்லையென்பவன் எவனடா" என்று கைநீட்டிக் கேட்கிறாரோ...
dear vasu sir
உன் பையர் என்ன
ராஜா
மெல்லிசை மன்னரின் bgm
டன் டன் டன் டென்
உன் பையர் என்ன
ராஜா
மீண்டும் மெல்லிசை மன்னரின் bgm
டன் டன் டன் டென்
என் பெயர் ராஜா இல்லை
டன் டன் டன் டென்
சேகர்
சந்தர்
லாங் சாட் மனோகர் yellow கலர் pant
கலக்கல் வாசு சார்
4வது தோசை சூப்பர் முறுகல் கருக்காமல்
'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலில் நடிகர் திலகம்.
http://s2.dmcdn.net/ACL8M/x240-4jg.jpg
எப்போது பார்த்தாலும் புதுமையாகவே தெரியும் நடிகர் திலகம்.
இதில் முக்கியமாக ஒன்று கவனித்தேன்.
பொதுவாக நடிகர்கள் கையில் எதுவுமில்லாமல் சும்மா நிற்கும் போது அந்தக் கைகளை, அல்லது கால்களை எப்படி வைத்துக் கொள்வது என்று திண்டாடுவார்கள். எஸ்.எஸ்.ஆர், ஜெமினி தேவயில்லாமல் இடுப்பில் விறைப்பாக கை வைத்துக் கொள்வார்கள்)
(கோபால் கூட ஜெமினியைத் தாக்கியிருப்பார்)
ஆனால் இதில் நடிகர் திலகத்தைப் பார்த்த போது அந்தக் கைகளையும், கால்களையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமல்லாமல் அதையே எவ்வளவு ஸ்டைலாகக் காட்ட வேண்டும் என்றும் பாடம் எடுத்து ஜமாய்க்கிறாரே!
பாடலின் முதல் வரியில் ஜெயலலிதா படிக்கட்டுகளில் ஏறி மேலே ஒரு சிறு நீள்சமதள தரையில் நிற்கும் நடிகர் திலகத்திடம் செல்வார். அப்போது நடிகர் திலகம் ஒரு சிறு அழகிய மெதுவான நடை ஒன்றை நடப்பார். நான்காவது ஸ்டெப் நடக்க ஆரம்பிக்கும் போது கைகளை எடுத்து கோட்டைத் தூக்கி பேண்ட் முன் பாக்கெட்டுகளில் நுழைப்பார். பின் மெதுவாக அந்த நடையை மறுபடி தொடர்வார்.
பாடலின் பல்லவி முடிந்து அருமையான அந்த ஷெனாய் ஓசை வரும் போது நடிகர் திலகம் தன் ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து ஜெயாவிடம் ஒரு 'இச்' கேட்க ஜெயா மறுத்து பாறைகளின் மேலே ஓடி வருவார்.
அப்போது நடிகர் திலகம் 'அடடா! மிஸ் ஆயிடுச்சே' என்பது போல வலது கையை லேசாக உதறி கால் முட்டி மீது வைத்து ஒரு செகண்ட் நிற்பார்.
'இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்' வரியின் போது பாறைகளின் இறக்கத்தில் கால்களை சற்று மடக்கி நின்றபடி ஜெயாவின் கைகளை இங்கிருந்து அங்குவரை மோப்பம் பிடித்தபடி பெட்டியை வாங்குவார்.
'காலமும் நமக்கினி சாதகமே' வரியின் போது பாருங்கள்... பாறைகளின் சரிவென்றாலும் ஜெயாவின் இடுப்பைத் தாங்கிப் பிடித்தபடி நிற்கும் கால்களின் கம்பீர ஸ்டைல்... லாங் ஷாட்டாக இருந்தாலும் கீழே கடல் அலைகள் ஆர்ப்பரிக்க அட்டகாசமாய் இருக்கும்.
இராண்டாவது சரணத்தின் இடையிசையில் பாறையின் மேல் நடந்து வந்து அழகாய் நின்றபடி கை விரல்களைச் சொடுக்கி (சொடுக்கி விட்டு வலது கையை கால் முட்டிமீதும் இடது கையை இடுப்பின் மீதும் வைத்துக் கொள்வார்) பின்னால் நிற்கும் ஜெயாவைக் கூப்பிடுவார். ஜெயா அருகில் வந்ததும் மீண்டும் முன்னால் ஒரு நடை நடந்து கைகளை பின்னே கட்டி விசிலடித்தபடி தலையாலே சைகை செய்து மறுபடி ஜெயாவை அழைப்பார். ஒரு இடத்தில் கூட கை,கால்கள் தவறு பண்ணாது. மாறாக தன்னிகரில்லா ஸ்டைலைத்தான் காட்டும்.
(நடுவில் 'போலீஸிடம் சொல்லி விடுவேன்' என்ற மிரட்டலில் ஜெயாவின் கன்னத்தை அவர் கைகளைக் கொண்டே தன் கைவிரல்களின் பின் பக்கங்களால் வருடச் செய்து காரியம் சாதிப்பார். கன்னம் தொட்ட கை விரல்களுக்கு தானே முத்தம் வேறு கொடுத்துக்கொள்வர்)
'வைரமென்றே எனை நீ பாடு' என்று ஜெயா ஆடியபடி பின்னோக்கி நடக்க, நடிகர் திலகம் படு காஷுவலாக மறுபடியும் சொல்கிறேன் படுபடு காஷுவலாக ஒரு அலட்சிய நடை முன்னோக்கி நடப்பார்.
'உன் மனமும் குணமும் நாடகம்' என்று பாடியபடி ஜெயாவைக் கை கோர்த்துக் கொண்டு கையில் சூட்கேசுடன் உற்சாகம் கொப்பளிக்க ஒரு வேக நடை நடப்பார் பாருங்கள்.
பாடல் முடியும்போது (ஆஹா ஆஹா சுசீலா ஹம்மிங்) பெட்டியைக் கையில் மாற்றியபடியே நடந்து வருவது இன்னும் சூப்பர்.
ஆரம்பத்திலிருந்து இப்பாடலின் இறுதி வரை இந்த அற்புதப் பிறவி கை,கால்கள், நிற்கும் ஸ்டைல், நடக்கும் ஸ்டைல், அலட்சியம், சுறுசுறுப்பு, வேகம், விவேகம், கொப்பளிக்கும் குறும்பு, காதல், அத்தோடு சேர்ந்த ஊடல், நினைத்ததை சாதிக்கும் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம், கிண்டல் கேலி சேர்ந்த நையாண்டி, உடைகளின் அழகு, ஒல்லியான ஸ்லிம்மான பிரம்மிக்க வைக்கும் ஸ்வீட் அழகு என்று ஏகத்துக்கும் இந்த ராஜா நம்மை ஆள்கிறாரே!
கொடுத்து வைத்த குடிமக்கள் நாம் அல்லாமல் வேறென்ன!
http://www.dailymotion.com/video/xi8...m-endru_school
வாசு சார்
ரொம்ப கஷ்ட படுத்துறீங்க (இன்ப கஷ்டம்)
ஒரு பாட்டை எப்படி எல்லாம் கவனிகீறீர்கள் என்பதற்கு இந்த பதிவு மிக சிறந்த உதாரணம்
மன்மத லீலை யை சீன் க்கு சீன் க்கு அலசியது போல் ராஜாவை ஒரு நாள் அலசுவோமா
To an extent Kalpana & bharathi were like SD. Kalpana was introduced by B.R.PAnthulu . If you see Karnan movie She will be the one who played the role of Dharma devathai , she will appear in the end in the battle field as well.
She had relationship with Puttanna and Their combination movies were super duper hit, my fav is sharapanjara (what a performance by kalpana
)
https://www.youtube.com/watch?v=2buMagdSLgA
what a rendition by PS
she was called minugu thare (shining star), her dressing style was class.
Puttanna brought Arthi in the movie NAgarahaavu( rajanagam in tamil) and Kalpana was not given any role and slowly she went into depression and finally committed suicide..
both barathi & Kalpana are extremely talented artists .. Barathi went to act in all languages (including telugu & malayalam & lent her own voice in those languages too)
bad that these 2 were not utilized in tamil that much.
Thanks Rajesh.
Kalpana with Sivakumar in 'kattila thottila'
http://www.dailymotion.com/video/x16sry9_kattila-thottila-1973-oru-vitha-mayakkam_shortfilms
krishna .. yes but it's always a confusion
here is a scene with both of them
https://www.youtube.com/watch?v=x0DT8dpS6qE
kalpana acted in sadhu mirandal, madras to pondicherry,thennangeetru, kattila thottila and few more movies in tamil as well
the best song from kattila thottila "naan nallavar illaram nalamura vendugiren" vaali-PS-Vkumar
http://www.dailymotion.com/video/x16ss72_kattila-thottila-1973-naan-nallavar-illam_shortfilms
ஒரே நாளில் எவ்வளவு பதிவுகள் எத்தனை விஷயங்கள்... கிருஷ்ணா, வாசு, கார்த்திக், என அனைத்து நண்பர்களும் இணைந்து இத்திரியை இம்மய்யத்தின் இசைப் பொக்கிஷமாய் மட்டுமின்றி தகவல் பொக்கிஷமாகவும் உருவாக்கி வருகிறீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
கோபால் சார் செம form ல் இருக்கிறார். யாரை எங்கே எப்படி கலாய்க்கப் போகிறாரோ தெரியவில்லை. நினைத்தாலே அடி வயிறு கலக்குகிறது.. .எனிவே ஜமாயுங்கள்.. தங்கள் இமேஜினேஷன் ரூட்டே தனி....
உங்கள் வழி தனி வழி
மெல்லிசை மன்னரின் இசைக்குழு சில படங்களில் தலை காட்டியிருக்கிறது. சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். இதை விட இன்னும் சிறப்பாக கல்லும் கனியாகும் திரைப்படத்தில் படமாக்கியிருப்பார்கள். அதிலிருந்து நமக்காக சில நிழற்படங்கள்
ட்ரம்ஸ் நோயலும் கணேஷூம்
http://i1146.photobucket.com/albums/...ps57c840e5.jpg
ஏ எல் ராகவன் கிடார் கலைஞராக
http://i1146.photobucket.com/albums/...psb89a28ff.jpg
கோரஸ் குரல் தரும் கணேஷ் மற்றும் புல்லாங்குழல் நஞ்சுண்டையா
http://i1146.photobucket.com/albums/...ps274d25e4.jpg
கிடார் பிலிப்ஸ்
http://i1146.photobucket.com/albums/...ps9649dc20.jpg
குழு
http://i1146.photobucket.com/albums/...psc7a9a396.jpg
அக்கார்டின் கலைஞர்
http://i1146.photobucket.com/albums/...ps4d2dcdb9.jpg
இன்றைய பொழுது இனிமையாக தொடங்க கேளுங்கள் ராசலீலா
http://www.youtube.com/watch?v=rGTF7OtsZfc
இந்த ஆல்பத்தை முழுமையாகக் கேட்க
http://www.youtube.com/watch?v=qp1yaI6ygmI
இந்த ஆல்பம் இப்போது சிடியாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சிடியின் நிழற்படம்
https://lh5.googleusercontent.com/_x...w298-h223-p-no
இன்றைய ஸ்பெஷல் (27)
இன்றைய ஸ்பெஷலில் மனதை பிழிந்தெடுக்கும் ஒரு பாடல்.
இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களை அறியாமலேயே உங்கள் இதயம் கனத்துப் போவதை அறியலாம். கனக்க வைப்பவர் 'பாடகர் திலகம்' சௌந்தரராஜன் அவர்கள்.
இந்தப் பாட்டில் ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது சார். இதை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ இனம்புரியா கலவரம் உண்டாகிறது.
http://www.inbaminge.com/t/e/Ethirkalam/folder.jpg
http://i.ytimg.com/vi/RXKBgnpvuow/0.jpg
தணிகைவேல் பிச்சர்ஸ் தயாரித்த எதிர்காலம் (1970) படத்திலிருந்துதான் இந்தப் பாடல். ஜெமினி கணேஷ், ஜெயசங்கர், பத்மினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ் என்று ஒரே நட்சத்திரப் பட்டாளம். பத்மினிக்கு அடாவடி குப்பத்துப் பெண் வேடம். புடவையை வரிந்து கட்டிக் கொண்டு கேமரா மேதை கர்ணன் படத்தில் வருவது போல சண்டைகள், ஜிம்னாஸ்டிக் வேலைகள் எல்லாம் செய்வார். ஜெமினி இவருக்கு ஜோடி. ஜெமினி நியாயமான ஏழை ரிக்ஷாக்காரர். அவர் தம்பிதான் ஜெய். நேர்வழி வாழ்க்கைக்கு உதவாது என்று வாழ்க்கையில் அடிபட்டு திருடனாகவும், கொள்ளைக்காரனாகவும் ஜெய் மாறி விடுவார். ஜெயக்கு வாணிஸ்ரீ. பாலையா பேட்டை வஸ்தாத்.
பாடல்கள் கவியரசர்.
இசை மெல்லிசை மன்னர். (எல்லாப் பாடல்களும் அற்புதம். எல்லாப் பாடல்களுமே இன்றைய ஸ்பெஷல் தொடரில் வர இருக்கின்றன)
'மௌனம்தான் பேசியதோ'- ராட்சஸி
'வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்'- சௌந்தரராஜன்,ராட்சஸி
'மஜா மஜா மஜா மாப்பிள்ளே'-சௌந்தரராஜன், சுசீலா (கோபாலுக்கு அல்வா பாட்டு)
என்று கலக்கல் பாடல்கள்.
தயாரிப்பு எம்.எஸ்.ராஜேந்திரன். இயக்கம் எம்.எஸ்.சோலைமலை.
குப்பத்துக் காட்சிகளும், நகரத்துக் காட்சிகளும் சம பங்கில் ஆக்கிரமிப்பு செய்யும் படம் இது.
திருடனாகி,கொள்ளைக்காரனாகி திரியும் தம்பியை நீண்ட நாள் சென்று சந்திக்கிறான் ரிக்ஷாக்கார ஏழை அண்ணன். நேர்மையாய் வாழச் சொல்லி பலதடவைகள் அறிவுரை கூறுகிறான். தர்மமே, நியாயமே ஜெயிக்கும் என்றும் கூறுகிறான். தம்பி அதை ஏற்க மறுக்கிறான். வசதியான வாழ்வு வாழ்கிறான். அண்ணனையும் பாசத்தோடு தன்னோடு இருக்க அழைக்கிறான். ஆனால் இதை அண்ணன் மறுக்கிறான்.
உன் பாதை பெரிதா அல்லது என் பாதை பெரிதா என்று இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். நீ என் பாதைக்கு வருவே என்று இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட சிச்சுவேஷனில் வரும் பாடல்தான் இது.
திருந்தாத தம்பியை நினைத்து அண்ணன் வேதனயுடன் பாடுகிறான். என்ன சொன்னாலும் தம்பி திருந்த வில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.
'எக்கேடாவது கெட்டுப் போ... பட்டு அனுபவித்துத் தெளிந்து வா... திருந்தி வா'...என்ற அர்த்தத்தில் மனம் நொந்து பாடுகிறான். 'நாடக மேடை ராஜாதான் தற்போது நீ. வேஷம் கழித்து வெளியே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்கிறான்.
காட்சிக்குத் தகுந்த வரிகளை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி வடிப்பதில் கவிஞருக்கு இணை ஏது?
மெல்லிசை மன்னர். அப்படியே நம் உயிரை இப்பாடலின் டியூன் மூலம் உருக்குகிறார். ஜெமினியும் அம்சம். ஜெமினியின் உள்ளத்தின் வேதனையை நம்முள் பிரதிபலிக்கச் செய்தது பாடகர், கவிஞர், இயக்குனர் இவர்களின் வெற்றி.
ஜெமினியின் மனவேதனையையும், அதை புரிந்து கொள்ளாத ஜெயசங்கரின் உற்சாகக் கேளிக்கைகளையும் மாறி மாறி காட்டுகிறது இப்பாடல் காட்சி
இதயம் கனக்கத் தயாராகுங்கள்.
https://i1.ytimg.com/vi/il5G-qbRlig/mqdefault.jpg
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஆற்றுக்குள் நாணலிட்டால்
காட்டுக்குள் ஆட்டை விட்டால்
என்னென்று முடிவாகும்
ஆசையை முன்னே வைத்து
தர்மத்தை பின்னே வைத்தால்
என்னென்ன விளைவாகும்
நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஓடத்தைப் பார்த்த பின்னும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது
பட்டுத்தான் தேறுமென்றால்
கெட்டுத்தான் மாறுமென்றால்
புத்திக்கு விலையேது
உள்ளத்தில் கோழை
ஊருக்கு வீரன்
இது உந்தன் நிகழ்காலம்
உண்மையைத் தேடி
ஒருநாள் வந்தால்
ஒளி விடும் எதிர்காலம்
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yfx1kel88PE
போனஸ்
இப்பாடலில் மனம் சோகமயமாக, அதற்கு மாற்றாக ஒரு ஜாலி மருந்து இதே படத்திலிருந்து.
'நாட்டியப் பேரொளி' சண்டைப் போராளியாக மாறி நம்மை நடுங்க வைப்பதைப் பார்த்து மகிழுங்கள். யப்பா! இன்னா போடு! இன்னா சாத்து! 'தில்லானா' ஆடுன மோகனா 'தில்'லா என்னாமா செலம்பம் வெள்ளாடுது. ஜாக்கிரதையாவே இருக்கணும் சாமி.
http://www.youtube.com/watch?v=RXKBgnpvuow&feature=player_detailpage
[அனைவருக்கும் காலை வணக்கம்
நேற்று எவ்வளுவு விஷயங்கள்
பாரத விலாஸ் ராஜவேலு சம்பந்தி
-do - ராஜபாண்டியன் போடோக்ராபர்
ராஜா - சாந்தி குமார்
கல்பனா -கட்டில தொட்டில
உதயசந்திரிகா - பல படங்கள்
வாசு சார் சுட சுட தோசை போட்டார்
பின்னாடியே ராஜேஷ் சார் அவர் பங்குக்கு ஏகப்பட்ட தகவல்கள்
கல்பனா, உதய சந்திரிகா பற்றி சுண்டல் மசால் வடை
எல்லோரையும் தூக்கி மோர்னிங் மினி டிபன் ராகவேந்தர் சார்
மெல்லிசை மன்னரின் குழுவையே கொண்டு வந்துட்டார் ,தொட்டுக்க சட்னி சாம்பார் ராசலீலா
விடுவாரா நெய்வேலி வாசுதேவன் கபே
straight லஞ்ச் - எதிர் காலம்
10 நாள் முன்னாடி முரசு வில் பார்த்து கொண்டு இருந்தேன்
'கல்லுக்கு நீதி சொல்ல முடியாது '
நம்ம திரியில் ஆரம்பத்தில் ராட்சசியின் "மௌனம் தான் பேசியதோ "
பற்றி ராகவேந்தர் ஒரு பதிவு போட்டு விட்டார்
இப்ப நைட் டின்னெர் என்ன தெரியலை
ஓய்வு க்கு ஓய்வு கொடுத்து விட்டு நேற்று கோபால் சார் ஒரு பதிவு
சாரதி சார் பதிவு
வாழ்த்துகள் வாசு சார் .
இன்று வெள்ளி
"வெள்ளிகிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் '
http://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg
'அம்மன் அருள்' எல்லோருக்கும் கிடைக்கட்டும்
ராஜேஷ் அவர்களின் பங்களிப்புகள் அருமை. அரிதான, வித்தியாசமான, தகவல்கள் அடங்கிய அவரது பதிவுகள் திரிக்கு பெருமை. அவர் இப்படியே தொடர்ந்து அரிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜேஷ். இரவு நேரம் அழகாகத் திரியையும் முடித்து வைக்கிறீர்கள்.
கிருஷ்ணா சார்
'அம்மன் அருள்' எனக்கும் கிட்டிற்று. மஞ்சுளா ஆயிற்றே! விட்டுவிட முடியுமா? ராஜன் சித்ரவதையை சகித்துக் கொண்டேன்.
அம்மன் அருளை மீண்டும் பெறச் செய்ததற்கு நன்றி. அதை விட ஒன்றே ஒன்று, பாடல் வரிகளுக்கு.
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்.
நாலாவது தோசை இல்லை சார். அமுதம். தேவாமிர்தம். தேவர்களுக்கு மட்டுமே!
ராகவேந்திரன் சார்!
இதெல்லாம் உங்களால் மாத்திரமே முடியும். கல்லையும் கனியாக்கும் இசைக்கலைஞர்களின் நிழற்பட வரிசை நிஜமாக ஜோர். ராசலீலையும் பரம சுகம். அனைத்திற்கும் நன்றி!
கோபால் சார்!
என்னைக் கலாய்க்கும் போது 4 வரி கூட சேர்த்து கலாய்த்து எனக்கு பெருமை தேடித் தர வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ராகவேந்திரன் சாருக்கு திக் திக்கென்று இருக்கிறது. ஆனால் எனக்கு சிரித்து சிரித்து 'விக்' விக்' என்று விக்கலே எடுத்து விட்டது.
ஜமாய் ராஜா.
கிருஷ்ணா சார்
'நீ' படத்தில் வித்தியாசமான அந்தப் பாடல்
'ஒன்டே ஒன் வே ஒன் கேர்ள் ஒன் பாய்'.
பி.பி.எஸ்ஸும், ராட்சஸியும் புகுந்து விளையாடும் வெஸ்டெர்ன் டைப் சாங். செம கிடார் விளையாட்டுக்களுடன்.
ஈஸ்வரி
'வானில் வருவது ஒன்லி மூமூமூ.......ன்' (பாடகியில் வருவது ஒன்லி ஈஸ்வரி)
என்று சொல்லி நம்மை குதூகலிக்கச் செய்யும் ஜாலம்.
நாகேஷின் கால்கள் விரித்து சேர்க்கும் சர்க்கஸ்,
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=m_IlgG88ViM
before going to bed a rare song from Kannamma
gopal sir, vasu sir matrum ellorum indha padathai patri niraya vishayangal solvargal
https://www.youtube.com/watch?v=2-Sli3mwle4
http://i1.ytimg.com/vi/TMXqW-iejHQ/maxresdefault.jpg
'யார் நீ' படத்திலும் இது போல ஒரு பாடல் உண்டு.
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
பக்கம் வந்து பக்கம் வந்து பார்க்க வா
பட்டு இதழ் தொட்டுக் கொள்ளவா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி டாட்டடா
டிக்கிரிக்கி டிக்கிரிக்கி வா
உனக்கென்ன எனக்கென்ன ரகசியம்
ஒருதரம் அருகினில் வா
வா வா அருகே பார்க்கலாம்
கொஞ்சம் வா வா
அதே பி.பி.எஸ்ஸும், ராட்சஸியும்.
'டாட்டடா' கோரஸ் முடிந்தவுடன் ஈஸ்வரி 'ஹஹஹ்ஹஹா' என்று மயில் மாதிரி ஒரு அலட்சியக் கூவல் கூவுவாறே! ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.
கோரஸ், இசை, நடனம் என்று சகலமும் சிறப்பாக வேதாவின் கைவண்ணத்தில் ஆனந்தக் கூத்தாட வைக்கும் பாடல்.
http://www.dailymotion.com/video/x15myft_tikkirikki-tikkirikki-yaar-nee-1966_shortfilms
ராஜேஷ் சார்,
கண்ணம்மா படத்தின் 'தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்' தங்களின் வித்தியாச ரசனையை எங்களுக்கு இன்னொருதரம் உணர்த்தி விட்டது. நன்றி சார்.
நவரசத்திலகம் முத்துராமன் திரியில் நமது அருமை கார்த்திக் சார் நீங்கள் கேட்டிருந்த 'கண்ணம்மா' படத்தைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை ஒன்றை அற்புதமாக எழுதி இருந்தார்.
அதை நான் தங்களுக்காக மறுபதிவு செய்கிறேன்.
அருமையான் தகவல்களுடன் கூடிய அட்டகாசமான கட்டுரை. மேற்கொண்டும் இப்படத்தின் பாடல்களை நாம் அலசலாம்.
இப்போது கார்த்திக் சாரின் 'கண்ணம்மா' கட்டுரை
'கண்ணம்மா (1972)
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று, (தென்னகத்துக்கு தேசிய விருதுகள் குதிரைக் கொம்பாக இருந்த காலத்தில்) தேசிய விருதை அள்ளிய செம்மீன் படத்தை இயக்கிய ராமுகாரியத், தமிழில் தயாரித்த வண்ணப்படம் கண்ணம்மா. இப்படத்தை கதை, வசனம் எழுதி இயக்கியவர் மா. லட்சுமணன்.
நாயகனாக நவரசத்திலகம் முத்துராமன், நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த இப்படத்தில் மிக அருமையான குணசித்திர பாத்திரத்தில் நடித்திருந்தவர்கள் நம்பியாரும், பாலாஜியும். பிற்காலத்தில் நம்பியார் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்துவங்கியபின் வந்த படமல்ல, அவர் வில்லனாக கொடிகட்டிப்பறந்த காலத்தில் வந்த படம். இப்படி ஒரு வேடத்தில் கொஞ்சமும் எதிர்பாராமல் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இன்னொரு திருப்பம் இப்படத்தின் பிரதான வில்லனாக நாகேஷ். அழகான பெண்களை வேட்டையாடுவதையே தொழிலாகக்கொண்ட காமுகன். இவர்தான் எந்த ரோலிலும் தூள் கிளப்புவாரே. அதகளம் பண்ணிட்டார். நீச்சல் குளத்தை ஒட்டிய, கண்ணாடி சுவர் வைத்த பாதாள அறையில் அமர்ந்து, குளிக்கும் பெண்களின் அழகை அவர்கள் அறியாவண்ணம் ரசிப்பது, பின் அவர்களில் ஒருவரை மிரட்டி படுக்கை அறைக்கு வரவழைப்பது போன்ற காமக் கொடுரங்களில் '24 மணிநேரம்' எக்ஸ்.டபிள்யூ.ராமரத்னம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படி ஒரு பிளே-பாய்.
நகைச்சுவை நடிகர் வில்லனாக கோட்டையைப் பிடித்தாரென்றால், வில்லன் நடிகர் குணச்சித்திர ரோலில் கொடிநாட்டினார். இரண்டு பெண்குழந்தைகளில் ஒன்றை இறந்தும், இன்னொன்றை உயிரோடும் பறிகொடுத்துவிட்டு பிள்ளைப்பாசத்தில் துடிக்கும் துடிப்பை நம்பியார் மிக அருமையாக காட்டியிருந்தார்.
அதிலும் பிளாஷ் பேக்கில் காட்டப்படும் காட்சி மனதை அதிர வைக்கும். ரங்கூனிலிருந்து கல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண்குழந்தை இறந்துவிட, சொந்த ஊரில் கொண்டுபோய் இறுதிச்சடங்கு செய்ய கொண்டுவரும்போது, ரயிலில் உடன் பயணம் செய்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிணத்தை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியும்படி வற்புறுத்த, இவர் மறுக்க, இதனிடையே இறந்த குழந்தையின் பிணத்தை பக்கத்தில் கிடத்திவிட்டு, தூங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும்போது, பயணிகள் அனைவரும் தொடர்ந்து விடாமல் நச்சரிக்க, அவசரத்தில் செய்வதறியாமல் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே வீசியெறிய, ஜன்னலைத்தாண்டி விழும்போது குழந்தை 'அப்பா'வென்று காத்த, அதிர்ச்சியில் "கண்ணம்மா" என்று நம்பியார் அலறும்போது தியேட்டர் மொத்தமும் அதிர்ச்சி அலையில்.
இன்னொருபக்கம் பாலாஜி, கண்சிமிட்டும் வக்கீல் பத்திரத்தை மிக அழகாக செய்திருந்தார். முத்துராமனுக்கு அளவான, அமைதியான கதாநாயகன் ரோல், மிக நன்றாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயாதான் வழக்கம்போல கொஞ்சம் ஓவராக அலட்டிக்கொண்டார். டைட்டில் அவர் பெயரிலாச்சே, அதுவும் ஒரு காரணமோ. இவர்களோடு ஆங்கிலோ இந்தியப்பெண்ணாக சுகுமாரி, முஸ்லிம் பெரியவராக ஓ.ஏ.கே.தேவர், நாயகனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக ஜெய்குமாரி நடித்திருந்தனர். (அழகான ஜெய்குமாரியை விட்டுவிட்டு, அவரைப்போல இருமடங்கு உருவம் கொண்ட மொக்கை கே.ஆர்.விஜயாவை நாயகன் காதலிக்கும்போது 'என்னய்யா உன் டேஸ்ட்டு' என்று தோன்றுகிறது நமக்கு).
இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல்கள் அனைத்தும் காதுக்கினிய மதுர கீதங்கள். நீண்ட நெடிய காலத்துக்குப்பிறகு இப்படத்தின் பாடல்கள் தற்போது தொலைக்காட்சிகளில் (குறிப்பாக 'முரசு' சேனலில்) ஒளிபரப்பாகின்றன.
கிராமத்து கல்யாண ரிசப்ஷனில் முத்துராமன் பாடுவதாக அமைந்த "எங்கெங்கும் என் எண்ணம், அங்கெல்லாம் உன் வண்ணம்" பாடல், பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய இறுதிக்காலப் பாடல்களில் ஒன்று. நிஜமான கிராமத்து கல்யாண வரவேற்பு இசை நிகழ்ச்சி போலவே அமைத்திருப்பார் இயக்குனர். மேடையில் அமர்ந்து மடியில் 'புல்-புல்-தராங்' இசைக்கருவியை வைத்து இசைததவாரே ரொம்ப கேஷுவலாக நடித்திருப்பார் முத்துராமன். (இந்த -புல்-புல்-தராங்' இசைக்கருவி எங்கள் வீட்டிலும் ரொம்ப காலம் இருந்தது. இந்த இசைக்கருவியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜா பி.லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' பாடல்தான்).
அடுத்த பாடல் விஜயாவின் கற்பனையில் கே.ஆர்.விஜயா, முத்துராமனுடன் டூயட் பாடுவதாக வரும் "அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து அடைந்த பூச்செண்டு" என்ற சுசீலாவின் சோலோ பாடல். ஊட்டி கார்டனில் கண்களுக்கு குளிர்ச்சியாக படமாக்கியிருப்பார்கள். மெட்டும் அழகான மெட்டு. என்ன ஒன்று, விஜயா பல்வேறு மாடர்ன் உடைகளில் வந்து பாடாய் படுத்துவார். (அவரது கணவர் இப்படத்தின் துணைத்தயாரிப்பாளர் என்பதால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது?).
எனக்குப்பிடித்த இன்னொரு அருமையான பாடல் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா இணைந்து பாடிய "தென்னைமரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்". இப்பாடலில் முத்துராமனும் விஜயாவும் கேரளா முஸ்லிம் பணியில் உடையணிந்திருக்க, கேரளா சூழலில் படமாக்கப்பட்ட அழகான பாடல். கேரள ஏரியில் படகு சவாரி கண்களுக்கு விருந்து.
விஜயாவுக்காக சுசீலா பாடும் மற்றொரு பாடல், "செல்வங்கள் இங்கே, செல்வர்கள் இங்கே, கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே" என்ற பாடல். தன் வளர்ப்புத்தந்தை நம்பியார் அளிக்கும் விருந்தில் செல்வர்கள் கூடியிருக்க, தன் ஏழைக்காதலன் முத்துராமனை நினைத்துப் பாடும் பாடல். அனைத்துப்பாடல்களுமே சங்கர்-கணேஷ் இரட்டையர் உழைத்து உருவாக்கியிருந்தனர்.
படத்தின் டைட்டில் காட்சியில் சென்னை மௌண்ட்ரோட்டில் கேமரா பயணிக்கும்போது சாந்தியில் பட்டிக்காடா பட்டணமா, பிளாசாவில் பிள்ளையோ பிள்ளை, குளோப்பில் நான் ஏன் பிறந்தேன் படங்களின் கட்-அவுட் மற்றும் பேனர்களைக் காணலாம்.
எனது அனுபவம்: பட ரீலீஸின்போதே குளுகுளு மிட்லண்ட் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன். சற்று வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களின் வித்தியாசமான உருவாக்கம், நட்சத்திரங்களின் மாறுபட்ட நடிப்பு, இனிய பாடல்கள் மற்றும் இசை என எல்லாவிதத்திலும் எனக்குப்பிடித்திருந்தது