Raghavender sir please update VPkattabomman news every now and then so that we can enjoy atleast by hearing till we comeback to madras after vacation. preently how many theatres in city and which theatres earmarked.
Printable View
ஜாதி மதபேதமற்ற தேசிய ஒருமைப்பாட்டை நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த பல திரை படங்களில் நான் காணலாம்.
16-03-2015 -
மத நல்லிணக்கத்தையும் ஒருமைபாட்டை வலியுறித்தி மனிதநேயமே மத நேயத்தை விட என்றும் சிறந்தது என்ற மிக உயர்ந்த கருத்துடன் திரு பீம்சிங் இயக்கத்தில் நமது தேசிய தெய்வீக நாயகர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்டு வெள்ளி விழா கொண்டாடிய காவியம் பாவ மனிப்பு.
1961 - நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் வெளிவந்த 67வது காவியம் பாவமன்னிப்பு.
டூரிங் டாகீசில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை, சாதனையை பாவமன்னிப்பு பெற்றது.
தமிழகத்தில் 12 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும்
கேரளாவில் திருவனந்தபுரத்தில் 103 நாட்களும்
பெங்களூரில் ஸ்டேட் சினிமாவில் 154 நாட்களும்
கொழும்பு கிங்க்ஸ்லியில் 106 நாட்களும் , ஆகமொத்தம் 15 திரை அரங்குகளில் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ...அந்த பதினைந்தில் ஒன்றில் 177 நாட்களும் ஓடிய 1961 வருடத்திய பிரம்மாண்ட வெற்றிபெற்ற முதல் காவியம் நம் சரித்திர சகாப்த நாயகரின் பாவமன்னிப்பு திரைப்படமாகும்.
1961இல் வெளிவந்த நடிகர் திலகம் படங்கள் எண்ணிக்கை - 8.
வியாபார ரீதியாக வெற்றிபெற்ற படங்கள் - 7.
முதல் வெளியீட்டில் வெற்றிபெறவில்லை என்றாலும் அதன் பிறகு வந்த வெளியீடுகளில் கோடிகளை குவித்த படம் "கப்பல் ஓட்டிய தமிழன்".
1961 -
2 வெள்ளிவிழா படங்கள் முறையே 1) பாவ மனிப்பு 2) பாசமலர்
2 100 நாட்கள் மேல் ஓடிய படங்கள் 1) மருத நாட்டு வீரன் 2) பாலும் பழமும்
1961இன் நிகரற்ற வசூல் சாதனை புரிந்த காவியம் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் .
1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) பாலும் பழமும்.
தமிழ் திரை உலகின் மூன்றில் ஒரு பங்கு லாப வர்த்தகம் மீண்டும் நடிகர் திலகம் படங்கள் மூலம்.
பாவ மன்னிப்பு வெளிவந்து 53 வருட நிறைவு இன்றுடன். நாளை 54வது வருட உதயம்
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.
http://i501.photobucket.com/albums/e...psmzikfo3w.jpg
100 days & 175 Days Advertisement
http://i501.photobucket.com/albums/e...psevr5c9sh.jpg
நடிகர் தயாரிப்பாளர் - என்ன மேனேஜர் , இன்னைக்கு ரிலீஸுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா..
தயாரிப்பு நிர்வாகி - எல்லாம் சரியாயிருக்குண்ணே.. அத்தனை தியேட்டருக்கும் ஃபோன் போட்டு பேசிட்டேன்... ஒண்ணும் பிரச்சினையில்லை..
ந..த.. - ப்ரிண்ட் எல்லாம் போய் சேந்துடுச்சா..
த.நி. - எல்லா ப்ரிண்டும் போய் சேந்துடுச்சு அண்ணே..
ந.த. - ஃபைனான்ஸியர் ப்ராப்ளம் எதுவுமில்லையே..
த.நி.. அதெல்லாம் ஒண்ணுமே இல்லேண்ணே... தம்பி மாதிரி ஒரு பெர்ஃபெக்டான தயாரிப்பாளர் கிடைக்க அவங்க இல்லே கொடுத்து வெச்சிருக்கணும்.. உங்களுக்கு ஒரு பிரச்சனையும் அவர் வெக்கமாட்டாருண்ணே.. நான் கேக்கறத்துக்கு முன்னாடிேயே ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து முடிச்சுடுவாருண்ணே.. எங்கிட்டே சொல்லிட்டே இருப்பாருண்ணே... அண்ணன் பேர்ல இருக்கிற மரியாதையை கெடுக்கிற மாதிரி நாம எதுவும் மறந்து கூட செஞ்சிடக் கூடாதுன்னு சொல்லுவாரு, அதை செயல்லேயும் காட்டுவாரு.. அதனாலே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்கண்ணே..
ட்ரிங் ..ட்ரிங் ...ஃபோன் அடிக்கிறது..
ந.த. - மேனேஜர் போயி அந்த ஃபோனை எடுப்பா...
த.நி. - அண்ணே உங்களுக்குத் தான் ஃபோன்... இந்தப் படத்திலே நடிச்சிருக்காங்களே அந்த ..... அம்மா.. அவங்க லைன்லே இருக்காங்க..
ந.த.. எடுக்கிறார்.. மறுமுனையில் அந்த .... நடிகை அழுது கொண்டே ... உங்களை இந்த நேரத்திலே தொல்லை பண்றத்துக்கு மன்னிக்கணும்... எங்க வீட்டுக்காரர் காலமாயிட்டாருங்க.. தயங்கித் தயங்கி சொல்கிறார்..
ந.த. .. மிகவும் மன வருத்தப் படுகிறார். ஆறுதல் சொல்லி விட்டு லைனை கட் பண்ணுகிறார்..
த.நி.... என்னவாம்ணே... நீங்க ஏற்கெனவே டென்ஷனாயிருக்கீங்க.. ஃபோன்லே ஏதோ ஒரு மாதிரி சேதியாட்டம் இருக்குதே...
ந.த. ... ஆமாம் மேனேஜர்.. அந்த அம்மாவோட வீட்டுக்காரர் இன்னிக்கு காலமாயிட்டாராம்.. நீ என்ன பண்றே... உடனே நான் சொல்ற அமௌண்ட்டை கேஷா தம்பிகிட்டே வாங்கிட்டு வா...
த.நி.. ஏண்ணே.. செக் வேண்டாமா..
ந.த.... சொல்றது செய்யுங்க மேனேஜர்... இந்த மாதிரி நேரத்திலே தான் நாம அவங்களுக்கு சரியான படி உதவணும்..
த.நி. .. கேஷைக் கொண்டு வந்து தருகிறார்...
ந.த. அதை அப்படியே அந்த வீட்டில் அந்த அம்மாவிடம் சேர்க்கிறார்..
.........
தன்னுடைய சொந்தப் படம் ரிலீஸாகும் அந்த டென்ஷனிலும் சற்றும் கலங்காது சக நடிகையின் துக்கத்தில் பங்கு கொண்டு அதில் சமயத்திற்கேற்றவாறு உதவியும் செய்த அந்த நடிகர் -தயாரிப்பாளர் யாரென நான் சொல்லித் தெரியவேண்டுமா...
அந்தப் படம் வியட்நாம் வீடு..
அந்த நடிகை டி.வி.குமுதினி அவர்கள்.. வியட்நாம் வீடு திரைப்படத்தில் அத்தையாக நடித்தவர்..
எல்லோருக்கும் சிவாஜியை ஒரு பத்து படத்தில் பார்த்து விட்டால் சிறந்த நடிகர் என்று கூறி விடுவர். ஆனால் அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்,, உறங்காத நல்ல உள்ளம்.. என்று நடிகர் திலகத்தின் உதவியை மிகவும் சிலாகித்து சொன்ன திரு சந்திரசேகர் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். அவர் வேறு யாருமல்ல, அந்த டி.வி. குமுதினி அவர்களின் புதல்வர்.
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் இன்றைய நிகழ்ச்சியினைப் பற்றி ஹிந்து நாளிதழில் படித்தறிந்து இன்று நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததோடு மட்டுமின்றி இச்சம்பவத்தை நம் அனைவரிடமும் மறக்காமல் பகிர்ந்து கொண்ட அவருடைய உள்ளமும் நல்ல உள்ளம் என்பதும் உண்மையன்றோ..
மிக்க நன்றி சந்திரசேகர் சார்.. வலது கை கொடுப்பதை இடது கை அறியாது அளிக்கும் உண்மையான கர்ணனின் தயாள குணத்திற்கு மற்றுமோர் சான்று இந்நிகழ்வு.
ராகவேந்திரன் சார்
இந்த நிகழ்ச்சி ஒரு சின்னஞ்சின்றிய சாம்பிள் மட்டுமே. இதுபோல வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் ...எவ்வளவோ...எவ்வளவோ உதவிகள் நடிகர் திலகம் செய்திருக்கிறார்.
இவர் மட்டுமல்ல....திரு வி கே ராமசாமி, திரு சந்திரபாபு , திரு எஸ் வி சுப்பையா, திரு டி ஆர் மகாலிங்கம் இன்னும் எத்தனையோ பேர்உக்கு நடிகர் திலகம் அவர்கள் எந்த விளம்பரம் இன்றி பல அறிய உதவிகள் செய்துள்ளார். இவை அனைத்தும் மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல...நல்ல ஒரு மனிதாபிமானம் கொண்ட மனிதர் என்பதால் தான் !
அரசியலில் அப்போதே அவர் ஒரு குறிக்கோள் மட்டும் வைத்திரிந்தால் இது போல சம்பவங்கள் அனைத்தும் பத்திரிகைகளில் வந்து ...இன்னாரின் கண்ணீரை தொடைத்தார்...உதவி புரிந்தார் கலையுலக வள்ளல் என்றெல்லாம் நாளிதழ்களில் செய்தி வந்திருக்கும்.
அரசியல் குறிக்கோள் எதுவும் இல்லாததால் அது போல பல நிகழ்சிகள் விளம்பரபடுத்தபடவில்லை. நடிகர் திலகம் - அது திரையில் மட்டுமே !
rks
கோவைக்கு அருகேயுள்ளஒரு சிற்றூரில்
கட்டபொம்மனுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
http://i1065.photobucket.com/albums/...psfbi7owzt.jpg
http://www.thehindu.com/multimedia/d...A2_104358e.jpg
இந்தப் பாட்டில் சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்க்கணும்.. ஹப்பா....
போட்டியாளர் ஒருவர் தெய்வமகன் படத்தில் காதல் மலர்க் கூட்டம் ஒன்று பாடலைப்பாடிய போது உள்மனதின் ஆழத்திலிருந்து நடிகர் திலகத்தைப் பாராட்டிய எஸ்.பி.ஷைலஜா ..தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜெயா டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியில்...
நடிகர் திலகம் அவர்களின் உடையலங்காரம் ( SWEDISH COTTON TRANSPARENT SHIRT)......சிகயலன்காரம்.....அடேங்கப்பா...!
ஒரு ஜென்மம் போதாது இதுபோல ஒரு சிறந்த ரசனை கிடைப்பதற்கு !
https://www.youtube.com/watch?v=Josn11_oBqE
இந்த பாடல் காட்சியின் தீம் - அதனைத்தான் அப்படியே தனது "வில்லன்" திரைப்படத்தில் காட்சியாக வைத்து காப்பி அடித்திருப்பார் டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார்.
கதாநாயகிக்கு ஆதரவாக வரும் அவரது நண்பிகள் ஒவ்வொருவரும் நடிகர் திலகம் அவர்கள் அவர் அவர்களை வர்ணிக்கும்போது நடிகர் திலகம் அவர்களிடம் மயங்கி இறுதியில் நாயகி தனியாகிவிடுவார்.
இது பாடலின் தீம்.
இதே கருவை காப்பியடித்து தனது "வில்லன்" திரைப்படத்தில் காட்சியாக வைத்திருப்பார் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார்.
வில்லன் படத்தில் திரு அஜித் அவர்களின் செய்கையும் நளினமாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=YC6qg0GYxKs
http://i1146.photobucket.com/albums/...psk4zgx3sx.jpg
முப்பரிமாண வடிவில் கட்டபொம்மன் நிழற்படம். இதை 3டி கண்ணாடி கொண்டு பார்த்தால் ....
இதில் தனித்து நிற்பது எது அல்லது யார் என்பதை அறிந்தால்...
வியப்பது திண்ணம்...