இல்லையே. பழகி கூட மாற்றுடை தரிக்கவில்லை. தங்கையிடம் பெரும் ஒரே காட்சியில் மட்டும். மாற்றுடையாக atleast ஒரு வேஷ்டி???(சவாலே சமாளி போல தலைவருக்கு அம்சமாய்)
என்னதான் சொல்லுங்கள் சி.வீ.ஆர் ஜொலித்தது கலாட்டா கல்யாணம்,சு.சுந்தரி,ராஜா இவற்றில்தான்.
Printable View
நீதி நடிகர் திலகம் வாசு சாரின் மினி ஆய்வு ... மீள் பதிவு ...
பதிவிட்ட நாள் 7th December 2011, 07:20 PMQuote:
http://i1087.photobucket.com/albums/...n31355/1-6.jpg
'நீதி' நினைவலைகளில் எங்களையும் மூழ்கச் செய்த கார்த்திக் சாருக்கு நன்றி. 'ராஜா' வை எந்த அளவுக்கு மறக்க முடியாதோ அந்த அளவுக்கு நீதியையும் மறக்க முடியாது.
புதுமையான கதைக்களம் கொண்ட அற்புதமான இந்தப் படத்தை ரீமேக் படம் என்று நம்ப முடியாத வகையில் நடிகர் திலகமும்,சி.வி.ராஜேந்திரன் அவர்களும் தங்கள் அபாரத் திறமையால் இமயத்தின் உச்சியில் தூக்கி நிறுத்தி இருப்பார்கள்.
ஒரு சராசரி லாரி டிரைவருக்குரிய குடிகாரன்,(அதுவும் சாராயம்) பெண் பித்தன்,முரடன், அடிதடி கேஸ் என்ற அத்தனை குணங்களையும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதாகட்டும்..
"சாராயம் என்னைக்கு பொறந்ததோ அன்னைக்கு பொறந்தவண்டா நான்" என்று ஜம்பம் அடித்துக் கொள்வதாகட்டும்,
"வாத்தியாரே! மெதுவாப் போங்க... லாரி நெறைய புல்லா லோடு இருக்கு" என்று கிளீனர் கூற, "அத்தேறிக் கழுத! லாரி மட்டுமாடா லோடு, உங்க வாத்தியாரும்(!) லோடு தாண்டா" என்று பீற்றிக் கொள்வதாகட்டும்....
லாரியில் ராமுவை அடித்துவிட்டு நீதி மன்றத்தில் "அத்தேறிக் கழுத! நான் போற ஸ்பீடுக்கு எந்தப் பய என்ன புடிக்க முடியும்?" என்று சவுண்ட் விட, நீதிபதி அதற்கு சத்தம் போடக்கூடாது என எச்சரிக்க, அதே டயலாக்கை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வதாகட்டும்...
தண்டனையை அனுபவிக்க கிராமத்திற்கு செல்லும் போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க, சிலம்பை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும்,
கொஞ்சம் கொஞ்சமாக சௌகாரின் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்தின் பொறுப்பான அண்ணனாக, மகனாக, குழந்தைகளுக்கு மாமாவாக, தம்பியாக தன்னை செதுக்கி புது மனிதனாக்கிக் கொள்வதாகட்டும்....
ஊரை 'மோகினிப் பேய்' என்ற போர்வையில் பயமுறுத்தி உலா வரும் 'பயாஸ்கோப்' காட்டும் பெண்ணை அடக்கி, ஆண்டு, தனக்கு அடிமைப் படுத்திக் கொள்வதாகட்டும்...
தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து திருமணம் செய்து வைத்த தங்கை தனக்கு ஆசையாய் உடுத்திக் கொள்ள வாங்கி வந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுவதாகட்டும்...('நீதி'யில் இவருக்கு இரண்டே இரண்டு உடைகள்தான் என்பது எப்போதும் பேசப்படுகிற வரலாற்று உண்மை ஆயிற்று.)
தங்கைக்கு சீர் செய்ய பாலாஜியிடம் தான் உழைத்ததற்கான ஊதியத்தில் சிறிது வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு அற்புதமான சல்யூட் (இந்த சல்யூட்டுக்கும், சிவந்த மண்ணின் சல்யூட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!) அடித்து அமர்க்களம் செய்வதாகட்டும்...
தான் அண்ணியாக மதிக்கும் சௌகாரின் மானத்தைக் காக்க வில்லன் மனோகரிடம் தொங்க விட்டிருக்கும் இறைச்சிகளுக்கு மத்தியில் போடும் ஆக்ரோஷ சண்டையாகட்டும்...(இந்த அருமையான சண்டைக் காட்சியில் ஐஸ் கட்டிகளின் மீது உண்மையாகவே வழுக்கியபடி வருவார். 'தியாகம்' படத்தில் தொங்க விட்டிருக்கும் மீன்களுக்கு மத்தியில் மீன் மார்க்கெட்டில் ஜஸ்டினுடன் படு ஸ்டைலாக நடிகர் திலகம் போடும் சண்டைக்காட்சிக்கு முன்னோடி இந்த சண்டைக்காட்சி எனலாம்).
இறுதில் நன்னடைத்தைக்காக தனக்கு விடுதலை என்று தெரிந்தவுடன் ஊரையும், உறவுகளையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கிராமத்திலேயே பாச உணர்வுகளில் ஊறி அங்கேயே தங்கி விடுவதாகட்டும்...
நடிகர் திலகம் ஸ்டைலான நடிப்பில் கொடிகட்டிப் பறந்து அந்த மூன்று மணி நேரமும் நம்மை ஆடாமல் அசையாமல் கட்டிப்போட்ட அந்த அற்புதக் காலங்கள் (கார்த்திக் சார் சொன்னது போல அந்த 1971,72-கள்) நமக்கெல்லாம் சொர்க்கபுரி காலங்கள். நம்மை தவிக்க விட்டு, துடிக்க வைத்துவிட்டுப் போய் விட்ட அந்தத் தங்கத் தலைவனின் தன்னிகரில்லா காலங்கள்.
கனத்த இதயத்துடன்,
வாசுதேவன்.
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post779736
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
மீள் பதிவு
பதிவிட்ட நாள் 18th December 2011, 04:14 AMQuote:
நீதி
[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972
http://i1110.photobucket.com/albums/.../Needhi1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/...GEDC5273-1.jpg
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973
http://i1110.photobucket.com/albums/.../Needhi2-1.jpg
காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5274-1.jpg
ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)
http://i1110.photobucket.com/albums/.../Needhi3-1.jpg
'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/.../Needhi4-1.jpg
காவிய விமர்சனம் : குமுதம் :1972
http://i1110.photobucket.com/albums/.../Needhi5-1.jpg
குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்
2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).
3. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் இதர சாதனை விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.
பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post783896
நீதி ... சாரதா அவர்களின் பதிவு..
மீண்டும் இங்கே ..
பதிவிட்ட நாள் - 29th February 2008,
பாகம் 1
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282498
பாகம் 2Quote:
"நீதி"
நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேடுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.
வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் (இதுபற்றி முரளி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்). அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26. (இதே போல சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார்).
இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர்திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார், அதுவும் கூட அவர் தங்கை எடுத்துக் கொடுத்திருப்பார்.
குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப்பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.
நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.
"வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப்போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282502
பாகம் 3Quote:
நீதி - 2
நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.
விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும், குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத்தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.
இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.
வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில் அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடையைதந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.
இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக்கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.
கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282508
Quote:
நீதி – 3
கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப்போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
"நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்"
என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.
இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.
பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
"ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
"வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா?. ரசிகர்களின் கைதட்டலில் தேவிபாரடைஸ் திரையரங்கே அதிர்ந்தது. (திரையிடப்பட்ட எல்லா அரங்கமும் அதிர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை).
கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
"எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடம், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.
செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.
சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....
இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்' PECULIAR SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.
நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
மாப்பிள்ளையைப் பாத்துக்கடி மைனாக் குட்டி
http://youtu.be/3lPK4AoDPnQ
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.
ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.
ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.
திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?
360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்
மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !
நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !
தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!
நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?
நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !
8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..
1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )
இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !
இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !
முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்
ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்
முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.
200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.
1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.
1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.
இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.
1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !
1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.
1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !
மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..
80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.
பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !
நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]
1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !
நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]
ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !
மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]
சென்னை: சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார். சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல் விழாவில் பேசிய கமல் கூறுகையில், நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.
Dear Sir
Fantastic - Marvellous - WHAT A GREAT PERSONALITY SIVAJI IS -AMAZING - SIVAJI IS GOD GIFT TO INDIAN CINEMA
In this we can add following UNBREAKABLE RECORD IN WORLD CINEMA also
IN WORLD WIDE SIVAJI IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS IN A SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS ALL OVER TAMIL NADU.
1. (A) IRUMALARGAL AND (B) OOTI VARAI ORAVU - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH
2. (A) SORGAM AND (B) ENGIRUNDO VANDAL - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH
MY CONFIDENT STATEMENT IS NO ACTOR IN INDIA CREATED THIS RECORD FOR THE PAST 100 YEARS CINEMA
NADIGAR THILAGAM IS GREAT
C.RAMACHANDRAN
Dear Ragavendran sir
Your analysis about NEETHI really superb. I was wondering how it is possible. After vasantha maligai completely different subject but handled by NT to the great extent.
C.Ramachandran.
Dear Gopal Sir
Sorry for the correction
C.Ramachandran
சுகா ராம்,
மற்றவர்களை குற்றம் சொல்லு முன் உங்கள் பதிவுகளையும் நீங்கள் சரி பார்ப்பது நல்லது. திடீரென்று உங்களை இந்த பக்கம் காண்பதே இல்லை?சில படங்களை குறிப்பிட்டு லிங்க் கேட்ட ஞாபகம். எங்களிடம் வர வேஷமிட வேண்டாம்.(கர்ணன் போல.)
.....
’தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது..
வாழைத் தண்டு போலக் காலிரண்டு பின்னால் வருகுது”
என வரதப்பா பாடல் நினைவுக்கு வந்ததும் அழகாய் நடிகர் திலகம் பாட
பின்னால் நளினமாய் (தோலாடை போர்த்தாத) இடைப்பிரதேசம் காட்டி
மெல்லிய அன்ன நடை பயிலும் விஜய ஸ்ரீ வருவதும்
நினைவுக்கு வருவது போல் எதை நினைத்தால் என்ன வருகிறது..
நான் அந்தக்கால மதுரைக்காரன்.. மதுரையில் பிறந்து வளர்ந்து படித்து பின் புலம் பெயர்ந்து
இதோ பல ஆண்டுகள் ஓடிவிட்டன.. பள்ளி கல்லூரிக் காலங்களில்
எனது தமிழ் மெருகேறியதற்கான முழு முதற்காரணம் என்றால் நடிகர் திலகம் என்பேன்..
நடிகர் திலகத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தாலே முட்டி மோதிக் கொண்டு
தவித்த படி வருகின்றன எண்ண அலைகள்..அவற்றைக் கொஞ்சம்
கட்டிப் போட்டு- ச் சும்மா இருங்க அலைகளே..இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி
தீவிரமாக ரசித்து விரிவாக எழுதியிருக்கும் ஜாம்பவான்கள் அடங்கிய இடம்- எனச் சொல்லிக்
கொஞ்சூண்டு இந்தச் சின்ன ரசிகன் எழுதப் பார்க்கிறேன்..
நீதியைப் பற்றிய விவாதம் இருப்பதால் அதைப் பற்றி..
அது வந்த புதிதில் நான் வெகு சிறிய கண்ணன்.. அம்மா, அக்காக்களுடன் தங்கம் தியேட்டர் போய்க் கண்டுவந்தது
வெகு புகையாய் நினைவில்..பின்னர் ப்ளஸ்டூ படிக்கும் சமயம் கல்பனாவோ சாந்தியிலோ
மறுபடி ஓடுகையில் போய்ப் பார்த்திருக்கிறேன். ஒரு சகோதரி ஏதோ ஒரு தொடர்கதை
பைண்ட் செய்து வைத்திருக்கையில் அந்த நீதி விமர்சனத்தைப் படித்திருக்கிறேன்.
.மாப்பிள்ளையைப் பார்த்துக்கடி மைனாக்குட்டி செட் பிரமாதம் என எழுதியிருந்தது இன்றும் நினைவில்.
.அதை மறுபடி இங்கு பார்க்கையில் மனதினில் மகிழ்வு.
கொஞ்சம் சிரிப்பான விஷயம் நன்றாக அழத் தெரியும் என்பதற்காக
செளகாரைப் போட்டு விட்டார்கள் என்றால் பாவம் மனோகரை வைத்து மானபங்கப் படுத்த வைத்து
இன்னும் அவரைப் படுத்தியிருப்பார்கள்..(மனோகரையும் தான்) என் டி வந்து காப்பாற்றுவார் என்பது வேறு விஷயம்.
. மோகினியாக ஜெயலலிதா கொஞ்சம் கக் எனச் சிரிக்க வைப்பார்..அந்த மீசை எடுத்த பொழுதில் என் டியின் முகபாவம்..ஆஹா.
.
இன்னும் என்னென்ன படங்கள் பிடிக்கும் என்று பார்த்தால் பல படங்கள் நான் நீ என்று போட்டி இடுகின்றன..
வித்யாசமாய் நடித்திருந்த சில படங்களெனத் தற்சமயம் என் நினைவுக்கு வருபவை
சத்திய சுந்தரம்(, மனிதனும் தெய்வமாகலாம் (பரங்கிக்காய் ட்ரிங்க் ட்ரிங்க் என்ற காமடி என்று நினைவு),
அன்பைத் தேடி (கத்திரிப் பூவிழியில் கொஞ்சம் கற்பனை கட்டி வைத்தேன்),
அந்த நாள்,,திரும்பிப் பார், குலமகள் ராதையில் தேவிகாவுடனான ரொமான்ஸ்,,
நிறை குடத்தில் ஸோ க்யூட் மருத்துவக் கல்லூரி மாணவர்..இன்னும் பல சொல்லலாம்..
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொல்கிறேனே..
கல்யாணப் பத்திரிகையின் கீழ் வாசக தோஷ சந்தவ்யஹ என எழுதியிருப்பர்.
. அப்படி ஏதேனும் தவறுதலாக எழுதியிருப்பின் மன்னிக்க.
.கொஞ்சம் நகைச்சுவையாக எழுத் முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!
அது சரி ஈ.. ஐட்டம் கேர்ள்ஸ் லிஸ்டில் மஞ்சுபார்கவி, உண்டா..(தீபம் என நினைவு..)
nt360 degree நண்பருக்கு நன்றி.. உங்களது மேற்கண்ட கட்டுரை மிகவும் அழகு..
எங்கள் அன்பு சின்னக்கண்ணன் சார்,
வருக. நாம் பாட்டுக்குப் பாட்டில் பழகிப் பார்த்திருந்தாலும் இவ்விடம் தாங்கள் அன்பு கொண்டு வந்ததால் ஆனந்தமாய் அலறி ஆர்ப்பாட்டமாய் அழைக்கிறேன். தூய உள்ளத்தவரின் தூய தமிழ் நடையில் எங்கள் தூயவரின் புகழ் மேலும் பரவட்டும். நீதியில் மீசை எடுத்த எங்கள் அன்புக் குழந்தையை நினைத்து மகிழும் சின்னக்கண்ணன் நீங்கள் சத்தியமாய் சுந்தரமாய் ஜொலித்த எங்கள் சுந்தர வதனனை வர்ணிக்க வந்தீர்களோ! சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்த எங்கள் சிருங்காரத் தலைவனை, மனிதனும் தெய்வமாகலாம் என்று வாழ்ந்து காட்டியவனை அந்த நாள் முதல் இந்தநாள் வரை நினைத்து மகிழும் எங்களுடன் கலக்க வந்தீரோ! குலமகள் ராதையின் கோமகனை திரும்பிப் பார்க்கிறீரோ! நிறைகுடமாய் வாழ்ந்த நிறைமன நித்ய புருஷனை வாய் நிறைய வாழ்த்த வந்தீரோ! வருக! வருக!
கொஞ்சம் நகைச்சுவையாக எழுத முயல்வது எனது கெட்டப் பழக்கம்..!
என்றீரே! என் தமிழ் நடையை தாங்கள் படிக்க நேர்ந்தது தங்கள் கஷ்ட காலமோ!
மன்னிக்க வேண்டுகிறேன்.
தினம் தினம்
தங்கள் பதிவை வேண்டுகிறேன்.
நல்லதொரு குடும்பத்தில் "கண்ணா உன் லீலா வினோத"த்தில் மஞ்சு பார்கவி எங்கள் கண்ணனுடன் ஐ மீன் எங்கள் கர்ணனுடன் சில நொடிகள் ஜோடி சேர்ந்து ஜோராக மனத்தைக் கவர்ந்தார்.
இதோ ஐந்து ஐட்டம் கேர்ள்ஸ் உடன் எங்கள் கண்ணனின் லீலா வினோதங்கள் எங்கள் சின்னக் கண்ணனுக்காக (மஞ்சுவை பார் கவி)
https://www.youtube.com/watch?v=plmL...yer_detailpage
சின்ன கண்ணன்,
நகைச்சுவை கூடிய non -linear narration .நல்ல தமிழ். கண்பட் சாரும் நீங்களும் சேதுராமன் -பொன்னுசாமி போல எங்களை ஆனந்த வெள்ளத்தில் தள்ள போகிறீர்கள். மஞ்சு , நல்லதொரு குடும்பத்தில் நாலில் ஒருத்தியாக தள்ள பட்டதில் வருத்தமே(அதுவும் பாதி பாடல்) மீதி personification of oozing sensuality என நான் கருதும் வாணிஸ்ரீ.
சுகாராம்,
சஞ்சிகை என்ன நானே, ஒரு பொருளாதார நிபுணன்(கணக்கிட்ட முறை- அன்று நான் ஆரிய பவன் ஹோட்டல் குடித்த காபி. போன மாதம் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை. இதை வைத்து அன்றைய வசூல்(ரூபாய்) இன்றைய மதிப்பில்(vietnam currency) மிக துல்லியமாக மதிப்பிட பட்டுள்ளது)..
என் கணக்கு இதோ(A,B,C,D,E,F centres included)-
பராசக்தி வசூலின் இன்றைய கணக்கு- 90,000 கோடி.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசூலின் இன்றைய கணக்கு- 1,25,000 கோடி.
திருவிளையாடல் படத்தின் வசூலின் இன்றைய கணக்கு-1,50,000 கோடி.
பட்டிக்காடா பட்டணமா- 1,01,000 கோடி.
வசந்த மாளிகை - 1,75,000 கோடி.
திரிசூலம்- 2,50,000 கோடி.
#கணக்கிட்ட முறை-
உதாரணம்- திரிசூலம்- 1979- 2,80,11,398 ரூபாய் . 13பைசா (வெள்ளிவிழா நாள் வரை மட்டும் அனைத்து சென்டர்கள்) .அன்றைய டாலர் மதிப்பில்-40,01,163 U .S .D . அன்றைய காபி விலை 15 பைசா. அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 63 காபி. மொத்தம் காபி மதிப்பில்- மொத்தம்- 25,20,73,269 காபி.
போன முறை நான் மெம்பிஸ் நகரில் குடித்த காபி விலை- 90 U .S .D .
திரிசூலம் வசூல் மொத்த மதிப்பு டாலரில்- 25,20,73,269 காபி 90 ஆல் பெருக்கி வரும் விடை 2268,65,94,210 அமெரிக்க டாலர்கள்(இன்றைய மதிப்பில்).
அதுவரை தமிழில் 1936 இலிருந்து மொத்தம் 1972 வரை வந்த அத்தனை நடிகர்களின் படங்களின் வசூலையும் (நடிகர்திலகம் நீங்கலாக) 1972 வருடத்திய நடிகர்திலகத்தின் படங்களின் வசூல் மிஞ்சி விட்டன என்று பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் ,எதிர் வீட்டில் குடியிருந்த ஒரு விநியோகஸ்தர் இணைந்து கூறினார்.
அது மட்டுமல்ல தொலைக்காட்சி பெட்டி அறிமுக படுத்த பட்டதில் இருந்து இதுவரை நடிகர்திலகத்தின் படங்கள் 2,38,528 முறை திரையிட பட்டுள்ளன என்று என்னுடைய கோடி வீட்டில் வசிக்கும் ஒரு தொலைக்காட்சி ஊழியர் தெரிவித்தார். இது மற்ற எல்லா நடிகர்களின் படங்களின் மொத்த திரையீட்டை போல மூன்று மடங்காம்.
போதுமா? இன்னும் பின் வீட்டு தகவல்கள், பாக்கியுள்ளன.
என்ன நீதி கருத்து கேட்டென்ன பயன், மற்றவர்களை தாழ்த்தி பேசுதல், வீண் வம்புக்கு இழுத்தல், பொய்கள்,பெரும் பொய்கள், மனம் புண் படும் படி நடந்து கொள்ளல்.
பாடல்களும்,கருத்தும் எதைத்தான் மாற்றியுள்ளன?
எஸ்வி சார்,
எங்கள் புலவரின் கற்பனையை குறைத்து மதிப்பிட வேண்டாம் .
தொலைக் காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .. 23.09.2013 - 28.09.2013
23.09.2013 அன்னை இல்லம் பகல் 1 மணி ஜே மூவீஸ்
23.09.2013 எமனுக்கு எமன் பகல் 1 மணி கே டிவி
23.09.2013 தியாகம் பகல் 1 மணி ராஜ் டிவி
24.09.2013 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பகல் 1 மணி ஜே மூவீஸ்
24.09.2013 ஜெனரல் சக்கரவர்த்தி காலை 10 மணி ஜெயா டிவி
24.09.2013 எங்கிருந்தோ வந்தாள் பகல் 1 மணி ராஜ் டிவி
25.09.2013 அருணோதயம் மாலை 4 மணி ராஜ் டிஜிட்டல்
25.09.2013 தீபம் இரவு 9.30 மணி ஜெயா டிவி
25.09.2013 விடுதலை பகல் 2 மணி பாலிமர் டிவி
25.09.2013 சிவகாமியின் செல்வன் பகல் 1 மணி ராஜ் டிவி
26.09.2013 அவன் தான் மனிதன் காலை 10 மணி ஜெயா டிவி
26.09.2013 இமைகள் பகல் 1 மணி ராஜ் டிஜிட்டல்
26.09.2013 நான் வாழ வைப்பேன் பகல் 1 மணி ராஜ் டிவி
27.09.2013 கர்ணன் பகல் 1 மணி ராஜ் டிவி
28.09.2013 முதல் தேதி காலை 6 மணி ஜே மூவீஸ்
28.09.2013 நீதிபதி [?] காலை 10 மணி ஜெயா டிவி
28.09.2013 தாய்க்கு ஒரு தாலாட்டு பகல் 1 மணி ராஜ் டிவி
உங்கள் வீட்டில் உங்கள் செலவில் விழா எடுத்து விட்டு, எங்கள் வீட்டில் மட்டும்தான் தோரணம் தொங்கியது என்று பெருமையடித்து கொள்வது போல உள்ளது. எங்கள் வீட்டில் விசேஷம் நடக்கும் போது,இதே தோரணங்கள் தொங்கின,தொங்கும்.
Quote:
Thanks and I appreciate your point that all the people who are old enough(Above 55) should take the matured roles only instead of doing kissing scenes and bedroom scenes.
சிவாஜியின் தீவிர ரசிகர்களே,Quote:
சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி ...
நீங்கள் கூறுவது உண்மைதான். இருந்தாலும் இந்த 59 வயதிலும் அவரது படங்கள் சாதனை படைக்கிறதே(அதுவும் தனி மனிதனாக).
ஆனால் உங்களது ஹீரோவோ தனது 54வது வயதில் 2வது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். 59 வயதில் அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.
வருக ராஜா(மதுரை மைந்தர் என்று நினைவு??),
ரொம்ப பெயர் பெற்ற எதிர்ப்பாளர் நீங்கள்.
ஒரு காலத்தில் ஆண்களின் சராசரி வயது 40 தான். இன்று? தலைமுறைக்கு தலைமுறை வாழ்வை அணுகும் முறை,மருத்துவம் சார்ந்து இளமை,வயது இவை மாறுபடும்.இது எல்லா தலைமுறைக்கும் பொருந்தும்.
பீ.யு.சின்னப்பா,எம்.கே.டி. - 35 வயது வரையே தொடர்ந்தனர்.
சிவாஜி காலம்- 60 வயது வரை.
கமல்-ரஜினி- 60 +
நாளைய நடிகர்கள்- ????
gene தெரபி மனிதர்களை 1200 வயது இளமையுடன் வாழ வைக்க இயலுமாம்.
வருடத்திற்கு ஒரே படம் நடிக்கும் இக்காலத்தையும், வருடத்திற்கு ஆறு ஏழு படங்கள் நடித்த அக்காலத்தையும் ஒன்று படுத்தாதீர்கள்.
அவர் பிற்காலத்தில் மற்றவர்கள் அவரை வற்புறுத்தும் போது மட்டும் வந்து நடித்து கொடுத்தார். அவருக்குரிய மரியாதை கொடுக்க பட்டே வந்தது. அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய படங்கள் நிறைய.(உடல்நிலை கருதி)
சிவாஜியும்,கமலும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள். குருவையும் ,சிஷ்யரையும் நினைத்து பெருமை கொள்வோம்.
ராஜா, தாங்கள் சிறிதே காலத்தால் பின் சென்று சில படங்களை பார்த்து தாங்கள் கொண்ட பார்வையை மீள் பரிசோதனை செய்யுங்கள். நீங்கள் புத்தி கூர்மை கொண்ட பதிவர். உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு.
வாசுதேவன் சார், தங்களது ஆரவாரமான வரவேற்புக்கு நன்றி.. கோபால் சார் நன்றி.. மஞ்சு பார்கவி நல்லதொரு குடும்பம் என கொஞ்சம் சம்சயம் தான்..தீபத்தில் சத்தியப் ப்ரியாவில்லையோ,,பிற்காலத்தில் அவர் அம்மா ரோல்களில் நடித்தபோது ஏனோ தீபம் ரோல்- அரைகுறை ஆடை தான் நினைவுக்கு வந்து கொஞ்சம் சிரிப்பு வரும்..!
மஞ்சு பார்கவி..மஞ்சு பார் கவி..என்னா சிலேடை..ம்ம் இரவில் பார்க்கிறேன்! மறுபடியும் வருவேன்..
பழங்காலத்தில் எனது ஹார்ட் throbs எல்லாம் இன்று அம்மாவாக உலவும் போது.... சமீபத்தில் ஒரு பள்ளி நண்பியை சந்தித்த போது என்னை பற்றி எல்லா விவரமும் தெரிந்து ஒப்பித்தாள். அப்போது அவள் மேல் கொள்ளை ஆசை இருந்தும் ,approach பண்ணாமல் விட்டேனே என்று நொந்த சம்பவம்....
மஞ்சு பார்கவி விவரம் ,ஒரு நண்பர் மூலம் இன்று கிடைத்தது. PM மூலம் தெரிவிக்கிறேன்.
கோபால் சார்,
முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?
எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.
(நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)
அண்ணே. வணக்கம். பாத்தீங்களா. இப்ப நீங்க சொல்றதுக்கு எதிர் பேச்சே இல்லை. அது மட்டும் இல்லை. நீங்க சொல்றதை வரவேற்று கருத்து சொல்றாங்க. என்ன மாற்றம்!!! அப்புறம் அண்ணே 54-வயசுல 2-வது ஹீரோ-வா நடிச்சாரு-ன்னு சொன்னீங்களே. இப்பிடி நீங்களே எடுத்து குடுக்கலாமா அண்ணே? '2-வது ஹீரோவா நடிக்க அவர் யோசிச்சதே இல்லைன்னு - அவரு அந்த காலத்துல இருந்தே தன் பாத்திரம் என்னன்னு-தான் பார்த்தாரு. கூட நடிக்கிறவங்க யாருன்னு பார்த்ததில்லை' - இப்பிடியெல்லாம் சொல்லிறுவாங்க. உங்களை வரவேற்றதில் மறந்திருப்பாங்க. நம்மளை மாதிரியா 'உட்கார்ந்தால் ஒரு சாதனை, நிமிர்ந்தால் ஒரு சாதனை'ன்னு இவங்களுக்கு சொல்லவே தெரிய வில்லை. அப்புறம் போட்டீங்களே அண்ணே ஒரு போடு - 59 வயசுல அவரை வச்சு படம் எடுக்க ஆளே இல்லைன்னு. நீங்க வேற. வயசான காலத்துல நடிக்கிற பல பேர எம்மாம் பேரு என்னென்ன சொல்லி வையராங்க தெரியுமா? நீங்க இருந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரி இப்பிடி சொல்லியிருக்க கூடாது அண்ணே. நாளைக்கு ஒருத்தர் வந்து உங்களை எல்லாம் தெரிஞ்ச மாதிரி எப்பிடி சொல்லலாம், இவரு கிட்ட எத்தனை தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுத்தால் ஓடாதுனு சொன்னாங்க, 59 வயசுல அவரு படம் ஓடவில்லையா - இப்படியெல்லாம் கேட்டால் ...? கேட்க மாட்டாங்க. அதுதான் உங்களுக்கு வரவேற்பு பத்திரம் வாசிச்சுட்டாங்களே!!!. நல்லது அண்ணே. பார்ப்போம்.
Dear RavichandranQuote:
Dear Sir,excellent coverage of Needhi.But you missed one evergreen word of the baby actress"KOLALKAARA MAAMA".Thanks/regards
This should go to Saradha M'm, whose write up is reproduced in quotes
கார்த்திக் சாரின் ஐட்டம் பெண் கதாபாத்திரம் தொடர், வாசு சாரின் துளிவிஷம் படத்தைப் பற்றிய பதிவு, கோபால் சாரின் அடுத்த தொடர், இவற்றிற்காக நாம் காத்திருக்கும் நேரத்தில்
என் விருப்பம்
http://www.youtube.com/watch?v=7VVFY...lcLpnIKC2q3h3A
என் விருப்பமாக இன்று நான் பகிர்ந்து கொள்வது பாதுகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற நான் கொஞ்சம் ஓவர் பாடல்.
பரிசல் படகுகளை ஓட்டி பிழைப்பு நடத்தி வருபவர் கதாநாயகன். ஓரளவிற்கு கல்வி அறிவு இருந்தாலும் இந்த உழைப்பில் இன்பம் காண்பவர். சந்தர்ப்ப வசத்தால் ஒரு சூழ்ச்சியை கப்பலில் நாயகியுடன் சென்று முறியடிக்கிறார். அப்படி ஒரு சூழலில் வரும் பாடல் இது. இதில் நடிகர் திலகத்தின் நளினமான நடனமும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் அற்புத மேலை பாணி நடனமும், எல்.ஆர்.ஈஸ்வரி, மற்றும் சாய்பாபா வின் குரல்களும் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. ஓ...ஷடஷஷஷடா... என்ற கோரஸ் வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இரண்டாம் சரணமான நதியில் நீந்தி விளையாடும் வரியின் போது நடிகர் திலகம் தன் ஒரு காலை மட்டுமே லேசாக நடமிட்டு திரும்பும் லாவகம் எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. அந்தக் காலத்தில் ஜூக் பாக்ஸில் 25 பைஸா போட்டு அடிக்கடி கேட்ட பாடல் இது. நடிகர் திலகத்திற்கு சாய்பாபா பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று தங்கப் பதக்கம் படத்தில் தத்திச் செல்லும் பாடலாகும்.
இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தோற்றம் .... பார்க்கப் பார்க்கத் திகட்டாத கொள்ளை அழகு. அந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு தன்னுடைய நடன பாணியை அமைத்துக் கொண்டிருப்பார். அதே போல் ஜெயலலிதா அவர்களின் நடனமும் இப்பாடலில் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியதாகும்.
மீ்ண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
Dear Sir
Thank you for this song
After very long time i have seen this song. Good to see. Thalaivar's Dance simply superb. This film speciality is always this film screened in Noon show only and i had seen this film with fans in 1980's. Nice to hear this song. Thanks
C.Ramachandran
NT started his career as a hero and continued till his matured age as a hero only. Upon request from Kamal he acted in Devar Magan and films like that. What about your hero? He acted in thundu-thukkada roles only till he was cast as a hero.how many films he has acted as 2nd, third or fifth hero like that. try to recollect how he climbed up his ladder. No comparisons with NT please! how many of his films will be remembered like NT's Karnan even after 50 years? your hero's films are succumbing to mortality while NT stands like a colossus forever! The person who learned acting bits from NT and promoted by GG.... please poles apart for even a comparison with NT