நீதி நடிகர் திலகம் வாசு சாரின் மினி ஆய்வு ... மீள் பதிவு ...
பதிவிட்ட நாள் 7th December 2011, 07:20 PM
'நீதி' நினைவலைகளில் எங்களையும் மூழ்கச் செய்த கார்த்திக் சாருக்கு நன்றி. 'ராஜா' வை எந்த அளவுக்கு மறக்க முடியாதோ அந்த அளவுக்கு நீதியையும் மறக்க முடியாது.
புதுமையான கதைக்களம் கொண்ட அற்புதமான இந்தப் படத்தை ரீமேக் படம் என்று நம்ப முடியாத வகையில் நடிகர் திலகமும்,சி.வி.ராஜேந்திரன் அவர்களும் தங்கள் அபாரத் திறமையால் இமயத்தின் உச்சியில் தூக்கி நிறுத்தி இருப்பார்கள்.
ஒரு சராசரி லாரி டிரைவருக்குரிய குடிகாரன்,(அதுவும் சாராயம்) பெண் பித்தன்,முரடன், அடிதடி கேஸ் என்ற அத்தனை குணங்களையும் கண் முன்னே கொண்டு நிறுத்துவதாகட்டும்..
"சாராயம் என்னைக்கு பொறந்ததோ அன்னைக்கு பொறந்தவண்டா நான்" என்று ஜம்பம் அடித்துக் கொள்வதாகட்டும்,
"வாத்தியாரே! மெதுவாப் போங்க... லாரி நெறைய புல்லா லோடு இருக்கு" என்று கிளீனர் கூற, "அத்தேறிக் கழுத! லாரி மட்டுமாடா லோடு, உங்க வாத்தியாரும்(!) லோடு தாண்டா" என்று பீற்றிக் கொள்வதாகட்டும்....
லாரியில் ராமுவை அடித்துவிட்டு நீதி மன்றத்தில் "அத்தேறிக் கழுத! நான் போற ஸ்பீடுக்கு எந்தப் பய என்ன புடிக்க முடியும்?" என்று சவுண்ட் விட, நீதிபதி அதற்கு சத்தம் போடக்கூடாது என எச்சரிக்க, அதே டயலாக்கை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வதாகட்டும்...
தண்டனையை அனுபவிக்க கிராமத்திற்கு செல்லும் போது கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க, சிலம்பை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகட்டும்,
கொஞ்சம் கொஞ்சமாக சௌகாரின் குடும்பத்துடன் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்தின் பொறுப்பான அண்ணனாக, மகனாக, குழந்தைகளுக்கு மாமாவாக, தம்பியாக தன்னை செதுக்கி புது மனிதனாக்கிக் கொள்வதாகட்டும்....
ஊரை 'மோகினிப் பேய்' என்ற போர்வையில் பயமுறுத்தி உலா வரும் 'பயாஸ்கோப்' காட்டும் பெண்ணை அடக்கி, ஆண்டு, தனக்கு அடிமைப் படுத்திக் கொள்வதாகட்டும்...
தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து திருமணம் செய்து வைத்த தங்கை தனக்கு ஆசையாய் உடுத்திக் கொள்ள வாங்கி வந்த உடுப்பைப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுவதாகட்டும்...('நீதி'யில் இவருக்கு இரண்டே இரண்டு உடைகள்தான் என்பது எப்போதும் பேசப்படுகிற வரலாற்று உண்மை ஆயிற்று.)
தங்கைக்கு சீர் செய்ய பாலாஜியிடம் தான் உழைத்ததற்கான ஊதியத்தில் சிறிது வாங்கிக் கொண்டு அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஒரு அற்புதமான சல்யூட் (இந்த சல்யூட்டுக்கும், சிவந்த மண்ணின் சல்யூட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்!) அடித்து அமர்க்களம் செய்வதாகட்டும்...
தான் அண்ணியாக மதிக்கும் சௌகாரின் மானத்தைக் காக்க வில்லன் மனோகரிடம் தொங்க விட்டிருக்கும் இறைச்சிகளுக்கு மத்தியில் போடும் ஆக்ரோஷ சண்டையாகட்டும்...(இந்த அருமையான சண்டைக் காட்சியில் ஐஸ் கட்டிகளின் மீது உண்மையாகவே வழுக்கியபடி வருவார். 'தியாகம்' படத்தில் தொங்க விட்டிருக்கும் மீன்களுக்கு மத்தியில் மீன் மார்க்கெட்டில் ஜஸ்டினுடன் படு ஸ்டைலாக நடிகர் திலகம் போடும் சண்டைக்காட்சிக்கு முன்னோடி இந்த சண்டைக்காட்சி எனலாம்).
இறுதில் நன்னடைத்தைக்காக தனக்கு விடுதலை என்று தெரிந்தவுடன் ஊரையும், உறவுகளையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கிராமத்திலேயே பாச உணர்வுகளில் ஊறி அங்கேயே தங்கி விடுவதாகட்டும்...
நடிகர் திலகம் ஸ்டைலான நடிப்பில் கொடிகட்டிப் பறந்து அந்த மூன்று மணி நேரமும் நம்மை ஆடாமல் அசையாமல் கட்டிப்போட்ட அந்த அற்புதக் காலங்கள் (கார்த்திக் சார் சொன்னது போல அந்த 1971,72-கள்) நமக்கெல்லாம் சொர்க்கபுரி காலங்கள். நம்மை தவிக்க விட்டு, துடிக்க வைத்துவிட்டுப் போய் விட்ட அந்தத் தங்கத் தலைவனின் தன்னிகரில்லா காலங்கள்.
கனத்த இதயத்துடன்,
வாசுதேவன்.
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post779736
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
மீள் பதிவு
பதிவிட்ட நாள் 18th December 2011, 04:14 AM
நீதி
[7.12.1972 - 7.12.2011] : 40வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி(மதுரை) : 7.12.1972
முதல் வெளியீட்டு விளம்பரம் : பிலிமாலயா[பொங்கல் மலர்] : ஜனவரி 1973
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : ஜனவரி 1973
காவிய விளம்பரம்
ரசிகர் மன்ற குறும்பிரசுரம்(Notice)
'சென்னை 'தேவிபாரடைஸ்' அரங்கில் 100 CHF' விளம்பரம்
காவிய விமர்சனம் : குமுதம் :1972
குறிப்பு:
1. சிறந்த வெற்றிக்காவியமான "நீதி" 99 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - தேவிபாரடைஸ்
ஆ. சேலம் - சங்கம்
2. "நீதி", சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் மொத்தம் 107 தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் / Continuous House Full shows(CHF).
3. இக்காவியத்தின் 50வது நாள் மற்றும் இதர சாதனை விளம்பரங்கள் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.
பதிவிற்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...l=1#post783896
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
நீதி ... சாரதா அவர்களின் பதிவு..
மீண்டும் இங்கே ..
பதிவிட்ட நாள் - 29th February 2008,
பாகம் 1
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282498
பாகம் 2
"நீதி"
நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேடுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.
வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் (இதுபற்றி முரளி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்). அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26. (இதே போல சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார்).
இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர்திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார், அதுவும் கூட அவர் தங்கை எடுத்துக் கொடுத்திருப்பார்.
குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப்பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.
நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.
தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.
"வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப்போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282502
பாகம் 3
நீதி - 2
நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.
விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும், குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத்தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.
இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.
வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில் அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடையைதந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.
இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக்கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.
தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.
கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).
பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post282508
நீதி – 3
கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப்போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
"நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்"
என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.
இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.
பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
"ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
"வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா?. ரசிகர்களின் கைதட்டலில் தேவிபாரடைஸ் திரையரங்கே அதிர்ந்தது. (திரையிடப்பட்ட எல்லா அரங்கமும் அதிர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை).
கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
"எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடம், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.
செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.
சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....
இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்' PECULIAR SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.
நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மாப்பிள்ளையைப் பாத்துக்கடி மைனாக் குட்டி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு. நடிகர் திலகத்தின் பங்கு இருட்டடிக்கபட்டாலும், முடக்கிவைக்கபட்டாலும் பனியை உருக்கி வெளிவரும் கதிரவன் போல நடிகர் திலகத்தின் பங்கும் சாதனைகளும் ஏதாவது ஒரு விதத்தில் வெளிவரத்தான் செய்யும்.
ஒரு திரைப்படம் 100 நாள் ஓடுவது வெள்ளி விழா ஓடுவது எல்லா நடிகர்கள் வாழ்விலும் உண்டு.
ஆனால் நடிகர் திலகம் என்றுமே நட்சத்திரங்களில் துருவ நட்சத்திரமாக, வான்வெளியில் ஒரு கதிரவனாக, கலையுலக சித்தராக வலம் வந்திருக்கிறார், பல சிகரங்களை சர்வ சாதாரணமாக மிக குறுகிய காலத்திலயே தொட்டு ஆட்சியையும் இன்று வரை செலுத்திகொண்டிருக்கிரார்.
திரை உலகில் அனைவரும் செய்யும் சாதாரண விஷயங்கள் இந்த காலத்தில் சாதனைகளாக கூறப்படும்போது கீழ்கண்டவைகள் எந்த ரகத்தை சார்ந்தவை ?
360 டிகிரி சாதனைகளில் ஒரு சில டிகிரிகள் மட்டும்
மிகபெரிய உலகசாதனை தமிழை எப்படி பேசவேண்டும் என்று திரை உலகிற்கு கற்றுகொடுத்தது ! நடிப்புலகின் ஆசானாக என்றுமே உள்ளது ! நடிப்பிற்க்காக மற்றவர்கள் பார்க்கும் ஒரு ENCYCLOPAEDIA வாக என்றுமே இருப்பது !
நாத்திகமும் அடிதடியும் திரை உலகை ஆக்ரமிக்க தொடங்கிய நேரம் குடும்பபாசம் என்றால் என்ன, பற்று என்றால் என்ன, சகோதர பாசம் என்றால் என்ன, குடும்பத்தை எப்படி கொண்டு நடத்தவேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், தெய்வ பக்தி மேலோங்கவேண்டும், தேசியம் வளரவேண்டும், NATIONAL INTEGRATION எப்படி அமையவேண்டும் என்று பல உயர்ந்த கருத்துக்களை இந்த சமுதாயத்துக்கு தன திரைப்படம் மூலம் அறியசெய்தவர் நடிகர் திலகம். உலக அளவில் எவரும் செய்யாத விஷயம் நடிகர் திலகம் அடிக்கடி இதை செய்தது !
தமிழர்கள், தமிழினம் மத்தியில் சுதந்திரத்திற்கு வித்திட்ட பெரியவர்கள், தமிழ் அறிந்ஞர்கள், விற்பன்னர்கள், மாமன்னர்கள், சைவ சமய வைஷ்ணவ சிதர்கள், மற்றும் பல முன்னோர்களை எப்போதுமே உலக தமிழர்களுக்கு அடிக்கடி நினைவுருத்தியவர் உலகளவில் நடிகர் திலகம் மட்டுமே. இந்த ஒரு செயல் உலக சாதனைகளுக்கெல்லாம் ஒருபடி மேல்..!
நடிகர் திலகம் நடிக்க வந்த ஏழே வருடத்தில் தமிழ் திரையுலகை தமிழ் திரைப்படத்தை உலகறிய செய்ததோடு அல்லாமல் உலகளவில் தமிழ் திரைப்படத்தை முதல் முதலாக விருது வாங்க வைத்தவர் நடிகர் திலகம்.
வருடம் 1959 - திரைப்படம் : வீர பாண்டிய கட்டபொம்மன் - விருதுகள் - ஆசியா ஆப்ரிக்கா கண்டத்தின் சிறந்த நடிகர் மற்றும் பல விருதுகள். - அவர் காலத்தில் வேறு எந்த நடிகர் இந்த உண்மையான உலக சாதனையை நடிக்க வந்த இத்துணை சிறிய வருடத்தில் செய்துகாட்டினார் ?
நடிக்க வந்த வருடம் மட்டும்...அதாவது 1952 மட்டுமே இரண்டு படங்கள்...1953இலிருந்து 1987 வரை ( உடல் நலம் பாதிபடையும் வரை, மருத்துவர்களால் கட்டுப்படுத்தப்பட்டவரை) வருடத்திற்கு நடிகர் திலகத்தை வைத்து சராசரி 8 திரைப்படங்கள் பல தயாரிபாளர்களால் தயாரிக்கப்பட்டன...பல விநியோகஸ்தர்களால் விநியோகிக்கப்பட்டது. இது இனி புதிய உலகம் தோன்றினாலும் தொட முடியாத சாதனயாகதான் இருக்கும் !
8 படங்களுக்கு மேல் தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த ஆண்டுகள்..விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தின் படங்களை விநியோகிப்பதன் மூலம் அடைந்த லாபங்கள் சற்று எண்ணி பார்த்தால் புரியும்..
1954, 1963, 1971, 1982, 1984, 1987 - தலா 10 படங்கள் அதற்க்கு மேலும் ....!
1956, 1957, 1958, 1962, 1969,1970 - தலா 9 படங்கள்....!
( அதிகபட்சமாக 1982இல் 13 படங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு படத்தை விட கூடுதல். இதில் சிவாஜி Productions படம் ஒன்று கூட இல்லை. அத்துனையும் மற்ற தயாரிப்பாளர் படங்கள். )
இவரால் பிழைத்த தயாரிப்பாளர்கள் தான் எவ்வளவு ..விநியோகஸ்தர்களோ கணக்கில் அடங்கா !
இவரால் தமிழ் திரையுலக வர்த்தகம் எவ்வளவு அதனால் ஒவொரு அரசாங்கத்திற்கும் வரி வருமானம் எவ்வளவு என்பதை சற்று கணகெடுத்து பார்த்தால் தெரியும். அதுமட்டுமா ? எத்துனை திரையுலகம் மற்றும் திரை உலகம் அல்லாத தொழிலாளர்கள் இவரால் வாழ்வு, வேலைவாய்ப்பை பெற்றார்கள் ! உலகசாதனை என்ற வார்த்தையே சாதாரணம் இதை சிந்தித்தால். !
முதல் Cinemascope திரைப்படத்தின் கதாநாயகன் - தமிழ் - ராஜ ராஜ சோழன்
முதல் Cinemascope திரைப்படம் மலையாளம் - தச்சோளி அம்பு - கதையின் கரு கதாபாத்திரம்- தச்சோளி உதயணன்
ஐரோப் நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் BLOCKBUSTER படம் - சிவந்த மண்
முதன் முதலில் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்ல அகில உலக திரைப்படங்களில் நவரசம் பிரதிபலிக்கும் 9 கதாபாத்திரம் நடித்த நாயகன் - நடிகர் திலகம் - அகில உலக திரைஉலகமே கண்டு வியந்த ஒரு திறமை எவராலும் இவரை நெருங்க முடியாது என்று அனைவரையும் ஒத்துகொள்ள வைத்த பெருமை வாய்ந்த படம் நவராத்திரி.
200 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சியை சர்வ சாதாரணமாக பல முறை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் திலகம்.
1952இல் இருந்தே பல சாதனைகள் புரிந்தாலும், தில்லான மோகனம்பாள் தொடர்ந்து 200 கூடகை நிறைந்த காட்சிகள் சர்வ சாதாரணமாக கண்டது. வசூலை பொருத்தவரை COLOR படங்களை பார்க்கும்போது 1965, அதுவும் நாத்திகம் தலைதூக்கிய காலத்தில், இந்திய சீனா யுத்தத்தை முன்னிட்டு அரசாங்கம் BLACKOUT அறிவித்த காலத்தில் கூட தமிழ் திரயுலகயே புரட்டிபோட்டு இந்திய திரை உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிளையாடல் சாதனை.
1972, வசந்தமாளிகை சாந்தி, க்ரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்கிலும் ஒவொரு திரை அரங்கிலும் 272 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட படம்.
இந்த சாதனை 1980கலில் வந்த கீழ்வானம் சிவக்கும் திரைப்படம் மட்டுமே சாந்தியில் 288 தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டு முறியடித்தது.
1972ஆம் ஆண்டு பல கலர் படங்கள் வந்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும் கருப்பு வெள்ளையில் திரையிட்டு , கருப்பு வெள்ளை திரைப்பட வராற்றிலயே, மேலான வசூல் உலக மஹா நடிகரின் பட்டிக்காடா பட்டணமா தான் ! இது மறுக்க மறைக்க முடியாத உலக சாதனை !
1974, தங்கபதக்கம் அதற்க்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரி வழங்கியது.
1979, திரிசூலம் திரைப்படம் முதன் முதலாக தமிழ் திரைப்பட வரலாற்றில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம் அப்போது அடாது பெய்த மழையிலும் வசூல் பிரளயம் செய்தது . சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று அரங்கிலும் ஒவொரு திரையரங்கிலும் 300 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு. அதாவது 900 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது. அதாவது மூன்று திரையரங்கிலும் 100 DAYS CONTINUOUS HOUSEFULL . இது போன்ற ஒரு உலக சாதனை அவர் நடிக்கும் காலத்தில் நடந்ததே கிடையாது !
மேலே கூறியவை திரை உலகை பொருத்தவரை அந்தகாலத்தில் சில துளிகளே..
80 வருட தமிழ் திரை உலக வரலாறிலும் சரி...100 வருட இந்திய சினிமா வரலாறிலும் சரி...ஒரு 48 வருட பழைய படம் இந்த காலத்திற்கு ஏற்றார்போல மக்கள் கண்டு கழிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய மெருகூட்டப்பட்டு மறு வெளியீடில் அதுவும் சென்னை போன்ற ஒரு மெட்ரோ வில் அதிநவீன திரையரங்கு வளாகத்தில், வாரம் 5 புது படங்கள் வந்துகொண்டிருக்கும் வேலையில், திருட்டு vcd , dvd யுகத்தில் 157 நாட்கள் ஓடுவதென்பது சாதனை என்ற சொல்லே ஒரு சாதாரண சொல்லாகும்..அப்படிப்பட்ட சாதனையை செய்த திரைக்காவியம் கர்ணன். செய்த ஆண்டு 2011.
பழைய திரைப்படங்கள் நல்ல மெருகூட்டல் படும்போது மக்களுக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திர்கேர்ப்ப PRINT இருக்கவேண்டும் என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் மேருகூட்டபடுகிறது. எப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படம் அவ்வண்ணம் செய்ய படுகிறதோ..அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நல்ல நவீன திரையரங்குகள் அனைத்தும், ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமானால் முண்டியடித்துக்கொண்டு இன்றும் திரையிடுவது நடிகர் திலகத்தின் திரைப்படங்கள். உதாரணம் : கர்ணன் : 72 திரை அரங்குகள் 2) வசந்தமாளிகை : 64 திரை அரங்குகள் 3) பாச மலர் 52 திரை அரங்குகள்.
அத்துணை திரியாரங்கிலும் ஒரு வாரம் ஓடுவது என்பது 72 வாரம் ஒன்றன் பின் ஒன்றாக ஒவொரு திரையரங்கிலும் ஓடுவதற்கு சமம்..! இது உலகளவில் பார்த்தல் கூட எங்குமே நடக்காத ஒரு உலக சாதனையாகும். !
நயக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவி...! இது இன்று வரை பெற்றவர் இரண்டு இந்தியர். ஒருவர் பண்டித நேரு இன்னொருவர் நடிகர் திலகம்...இது உலகசாதனை ! [/SIZE]
1960, JOHN F KENNEDY இன் அமெரிக்க அரசாங்கம் சிறப்பு அழைப்பிதழின் பெயரில் நடிகர் திலகத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக கௌரவிக்கப்பட்டது. இதுதான் உலக சாதனை !
நடிகர் திலகத்தை பற்றி பல மாதங்கள் அவரது தகுதியை அராய்ச்சி செய்து வழங்கிய ஐரோப் சேர்ந்த பிரான்ஸ் மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான மாவீரன் நெப்போலியன் கொண்டுவந்த செவாலிஏ விருது. ]இது உலக சாதனை..! [/SIZE]
ஆக, இந்திய உள்ளடங்கிய, ஆசியா[/COLOR] ஆப்ரிக்கா[/COLOR], ]ஐரோப்[/COLOR], அமெரிக்க[/COLOR] என அகில உலகமும்[/COLOR] போற்றி விருது வழங்கி, பெருமை படுத்திய[/COLOR] உண்மையான[/COLOR], உன்னதமான உலக சாதனையாளர் தமிழ் திரை உலகை சேர்ந்த நடிகர் திலகம் ஒருவரே !
மேலே கூறியது 360 டிகிரி யில் ஒரு சில டிகிரி மட்டுமே ! [/SIZE][/B][/COLOR]
Last edited by NTthreesixty Degree; 22nd September 2013 at 06:54 PM.
சென்னை: சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்த தான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா என்று சினிமா நூற்றாண்டு விழாவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். சினிமா நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருதை ஜெயலலிதா வழங்கினார். சிவாஜியின் மடியில், எம்.ஜி.ஆரின் தோளில் வளர்ந்த நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா?: கமல் விழாவில் பேசிய கமல் கூறுகையில், நான் சினிமா துறையில் 50 ஆண்டுகளாக உள்ளேன். இருப்பினும் நான் இன்னும் சின்ன குழந்தை தான். நான் குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் வெற்றி பெறாமல் இருக்க முடியுமா?. சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் உள்ளனர். ஒருவர் சிவாஜி கணேசன் மற்றொருவர் கே. பாலசந்தர். இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் என்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை நடிகர், நடிகைகள் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும் என்றார்.
Dear Sir
Fantastic - Marvellous - WHAT A GREAT PERSONALITY SIVAJI IS -AMAZING - SIVAJI IS GOD GIFT TO INDIAN CINEMA
In this we can add following UNBREAKABLE RECORD IN WORLD CINEMA also
IN WORLD WIDE SIVAJI IS THE ONLY ACTOR BOLDLY RELEASED HIS TWO FILMS IN A SAME DAY AND BOTH THE FILMS RUN 100 DAYS ALL OVER TAMIL NADU.
1. (A) IRUMALARGAL AND (B) OOTI VARAI ORAVU - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH
2. (A) SORGAM AND (B) ENGIRUNDO VANDAL - BOTH RUN 100 DAYS ALL OVER SOUTH
MY CONFIDENT STATEMENT IS NO ACTOR IN INDIA CREATED THIS RECORD FOR THE PAST 100 YEARS CINEMA
NADIGAR THILAGAM IS GREAT
C.RAMACHANDRAN
Last edited by SPCHOWTHRYRAM; 22nd September 2013 at 08:23 PM.
Bookmarks