இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11
இந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.
1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.
அடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.
அடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை?) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.
இப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்?
---TO be Continued .