அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
புயலெனப் புகுந்துள்ளீர்கள். அலை கடலெனத் தங்களது ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகட்டும்!
நனையத் தயாராயிருக்கும்,
இரா. பார்த்தசாரதி
Printable View
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
புயலெனப் புகுந்துள்ளீர்கள். அலை கடலெனத் தங்களது ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகட்டும்!
நனையத் தயாராயிருக்கும்,
இரா. பார்த்தசாரதி
திரு பம்மல் சார்,
சிறிய இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறோம் .தங்கள் பதிவுகளை மீண்டும் படிப்பதில் மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது.
திரு குமரேசன் அவர்கள் சொன்னது போல வசந்த மளிகை திருவிழாவில் தங்களையும் முரளி சார்,ராகவேந்திரா சார் மற்றும் சில நண்பர்களையும் சந்திக்காததில் எனக்கு மிகவும் வருத்தம் .கர்ணன் கோலாகலத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
வாசு சார்,
ராஜராஜசோழன் மற்றும் பச்சைவிளக்கு நிழல்படங்கள் அருமை.
டியர் பம்மலார்
http://www.farhanadhalla.com/wp-cont...mp-for-joy.jpg
அன்பு நண்பர்களே,
பல்வேறு நெருக்கடியான சூழலுக்கிடையில் சற்று இடைவெளி விட்டு சந்திக்கிறேன். பம்மலார் சூப்பரோ சூப்பர்மேன் என்று பாய்ந்தோடி வந்து கர்ணன் முதலில் தோல்வியடைந்த படம் என்று விவரம் தெரியாமல் கூறுபவர்களுக்கு சரியான நெத்தியடி தந்து விட்டார். இதில் நம்முடைய நண்பர்கள் சிலரும் மேம்போக்காக பேசி வந்தது மன வருத்தமே என்றாலும் பம்மலாருடைய ஆதார பூர்வமான நிழற்படம் அந்த கூற்றுக்களைப் பொய்யாக்கி விட்டது. உண்மையில் சொல்லப் போனால் அப்போதே கர்ணன் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு, அதனுடைய எதிரொலி தமக்கு எங்கே பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் படாத பாடு பட்டு அப்போதைய அரசிடம் மிகுந்த பிரயாசைப் பட்டு நிஜப்புலியைக் கொண்டு வந்து வைத்தது தற்போதைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்காது. காட்டு விலங்கினை பொது மக்கள் கூடும் இடத்தில் காட்சிக்கு வைக்க அப்போதைய அரசு மிகவும் பலமாக மறுத்த போது, அதனை அரசியலாக்க அப்போதே முனைந்த பின் வேறு வழியின்றி நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி அளிக்கப் பட்டது. இந்தத் தகவல்கள் அப்போதே நமது நண்பர்கள் விவாதித்ததுண்டு. அப்போது நான் மிகவும் சிறிய வயதில் இருந்ததால் அந்த அளவிற்கு அதனைப் பற்றித் தெரியவில்லை என்றாலும் இந்த செய்தி மட்டும் அப்போதிலிருந்து நினைவில் உள்ளது. அப்போது சாந்தியில் கர்ணன் பார்க்க வீட்டிலிருந்த பெரியவர்கள் அழைத்துச் சென்றதும், டிக்கெட் கிடைக்காத காரணத்தால் திரும்பி விட்டதும் நினைவில் உள்ளது.
வெளியான போதே வெற்றி நடைபோட்ட படம் கர்ணன். இதை முதலில் நம் சிவாஜி ரசிகர்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப் பதிவு.
பம்மலாருக்கு மீண்டும் நமது உளமார்ந்த நன்றிகள்.
புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.
சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.
You are cent percent right. pudiyaparavai music composing and related work has to be given viswanathan and ramamurthy to get pakka and compelte results. a movie designed for NADIGARTHILAGAM AND MUSICAL BONANZA OF YESTERYEARS SHOULD COME OUT NICELY AND SUCCESSFULLY. HENCE THE REQUEST TO MR CHOKALINGAM SIR.
REGARDING KARNAN.S EARLY RUN
RAGHAVENDRAN HAS NICELY EXPLAINED. I HAVE ALSO MADE A NOTE ON THE ISSUE COFIMING RAGHAVENDER.S STATEMENT.
அன்பு பம்மலார் சார்,
'புதிய பறவை' கோபாலின் ஸ்டைல் ஸ்டில் அருமை.
"நடிப்பும் ஒரு தொண்டுதான்" பொம்மைக் கட்டுரை நம் சாதனைச் சக்கரவர்த்தியின் அடக்கத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பின்னாளைய பேட்டிகளில் அரசியல் சூதுகளில் அவர் சிக்குண்டு தவித்த விதத்தை அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. "நமக்குத் தெரிஞ்சதை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு. சரியில்லைன்னா சரியில்லைதான்"என்ற நடிகர் திலகத்தின் வரிகள் அந்த சாகாவரம் பெற்ற கலைஞரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.
'சிவாஜி சில நினைவலைகள்' கட்டுரையில் நேரம் தவறாமையை எந்த அளவுக்கு கடைப் பிடித்தார் நடிகர் திலகம் என்பது தெளிவாகிறது. நிருபருக்கு அவர் செய்து கொடுத்த உதவி அவரின் கர்ணத்தனத்தை காட்டுகிறது.
அற்புதமான இரு கட்டுரைகளை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.
அன்புடன்,
வாசுதேவன்
Dear kumareshanprabhu Sir,
Thanks for your compliments !
I too missed You.
Vasu Sir's video strongly proves the fact that You & Co. have electrified Bengaluru during the release of the evergreen romantic epic "Vasantha Maaligai". Hats off to You, Sir !
Better luck for me next time !
Warm Wishes & Regards,
Pammalar.
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களது பதிவின் மூலம் என்னை வரவேற்றுப் பாராட்டியமைக்கு இனிய நன்றிகள் !
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு நமது திரிக்கு வருகை புரியும் தங்களையும் 'வருக! வருக!' என உளமார வரவேற்கிறேன்.
தொடரட்டும் தங்களது தீர்க்கமான-தீட்சண்யமான பாடல் ஆய்வுகள் !
அன்புடன்,
பம்மலார்.
வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி
வரலாற்று ஆவணம் : தினமணி கதிர் : 28.8.1994
முதல் இரண்டு பக்கங்கள்
http://i1110.photobucket.com/albums/...GEDC5591-1.jpg
முதல் பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5592-1.jpg
இரண்டாவது பக்கம் (தனியாக)
http://i1110.photobucket.com/albums/...GEDC5593-1.jpg
மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5594-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5595-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5596-1.jpg
[இந்த நேர்காணல் மொத்தம் ஐந்து பக்கங்களை உள்ளடக்கியது].
பக்தியுடன்,
பம்மலார்.
இதயதெய்வம் பற்றி இளைய தலைமுறை
[விருதுகளுக்கு அப்பாற்பட்ட வித்தகருக்கு இந்திய அரசு 'தாதா சாஹேப் பால்கே விருது' வழங்கி கௌரவம் தேடிக் கொண்ட போது 'மாணவர் சக்தி' என்கின்ற இளைஞர் இதழில் வெளிவந்த பாராட்டுக் கட்டுரை]
வரலாற்று ஆவணம் : மாணவர் சக்தி : ஆகஸ்ட் 1997
http://i1110.photobucket.com/albums/...GEDC5590-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
Dear N.T. Fans,
Sorry to post the V.M. Bangalore Pics late. Here is pics to treat your eyes.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear N.T. Fans,
Sorry to post the V.M. Bangalore Pics late. Here is pics to treat your eyes.
JAIHIND
M. Gnanaguruswamy
some more pics
Dear Pammalar,
Welcome back to the thread. Heartfelt thanks for your Valuable posts about Karnan & NT's interviews. Thanks again
Banner photo of Panguni Pongal Thiruvizha at Sathur
http://i1234.photobucket.com/albums/...izhaSathur.jpg
Please click the link to view the news about KARNAN:
http://www.chennailivenews.com/Enter...in-hearts.aspx
Dear Sekar,
Can you brief the details of Karna 25 days celebration ?
அன்பு பம்மலார் சார்,
28.8.1994 தினமணி கதிர் இதழில் வெளிவந்த வாழ்வியல் திலகத்தின் வெளிப்படையான பேட்டி (தமிழன் என்கிற தாழ்வு மனப்பான்ம) கண்களில் நீரை வரவழைத்து விட்டது. அந்த மனம் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் பட்ட பாடு அந்தப் பேட்டியில் மிக நன்றாகப் புரிகிறது. உலக சாதனைகளை சர்வ சாதாரணமாகச் செய்துவிட்டு 'நான் அப்படி ஒன்றும் சாதித்து விட வில்லை' என்று கூறும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை வேறு யாருக்காவது வருமா என்பது கேள்விக்குறியே!
மிக அற்புதமான கட்டுரையை அட்டகாசமாகக் கொடுத்ததற்கு தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஐந்து பக்கங்களும் படித்து முடித்தபின் நடிகர் திலகத்துடன் நேரிடையாக அளவளாவிய உணர்வு ஏற்பட்டதற்கு தங்களுக்கும், கதிருக்கும் நன்றி கூறத்தான் வேண்டும்.
'மாணவர் சக்தி' இளைஞர் இதழில் வெளிவந்த கட்டுரையும் நெஞ்சை அள்ளுகிறது. அதற்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்
டியர் சந்திரசேகரன் சார்,
financial chronIcle இல் வெளிவந்த the reincarnation of karnan கட்டுரையை பதிப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். அதே போல மாலை மலரின் கட்டுரையும் அருமை. கர்ணனின் சாதனைகள் வெளி வராத இதழ்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சாத்தூரில் பங்குனிப் பொங்கல் கோலாகல பேனர்கள் சூப்பர். 'பாரத்' தியேட்டரில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகளை கண் முன் நிறுத்தும் நிழற்படங்களுக்கான லிங்க்கிற்கும் நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்
Attachment 1217
I found this pic on the net.
Hi I am new to this.
I am Mohan from Bangalore.Can any one tell the release date of Karnan here
Dear Mohan,
Welcome . As of now Karnan will be released in other states & US but date is not finalised
Pudhiya Paravai
Since its is said by Divya Fims that Pudhiya Paravai is to be released on 1st Oct 2012 . I would like to share this small piece of information
Arror das (famous writer) was so busy with his commitments that he could not allocate his time to write Pudhiya paravai. So a person from Sivaji films came and asked Whether he could meet NT or shall NT come & meet Arror Das. Aroor Das went to Annai Illam.
On seeing Arror Das NT stood up with folded hands(to make fun) and introduced him to Kamala amma. (Kamala amma laughs). NT asks the reason for not accepting to write for pudhiya paravai.
Aroor Das cites lack of time.
Nt : Cant u?
AD: Sorry lack of time.
NT: So U will not accept?
AD: Sorry , I said I could not.
NT asks Kamala Amma to bring Rs 5000/- & gives it to NT
NT gives the same to Arror das(Those days only directors used to get Rs 5000/- as advance, writers 1000/- as advance.)
NT requests to finish it as quickly as possible .
Aroor Das replied he will write Schedule by schedule to which NT replies that the movie is to be completed in single schedule, all areas sold out. This is my prestige film because its First Colour movie for Sivaji Films.
Aroor Das promises to finish it in a span of 7-10 days.
NT allots his house (sivaji films office), appoints a helper, driver to take care of his needs.
Aroor Das finishes his work in 7 nights.
NT allots a day to hear the complete bound script.
The clock struck 9 O Clock NT sits on the floor and starts listening to script with his cigarette.
No Phone calls, No visitors(Pl note the NT’s dedication)
Its noon time NT’s wife calls for hefty lunch.
NT drinks black coffee after lunch (habit)
Around 4 O clock he resumes to hear the second half
He understood the essence of climax and embraces Aroor Das for his wonderful work.
He also orders him(out of brotherly affection) to be present at shooting spot as Director Dhada Mirasi do not know Tamil
Also the Climax scene was shot after the shooting was over.
Aroor Das felt a sense of incompleteness without “Penmaye nee Vaazga, Ulame unaku en Nandri” and narrates the same to NT
NT immediately calls back the director, cameraman , all others & asks to light for the scene.
Hope U all enjoy this post.
டியர் மோகன் சுப்ரமணியன்
வருக, வருக... நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இக்குடும்பத்தில் மேலும் ஒரு புதிய வரவு.. தங்களுக்கு எங்களின் உளமார்ந்த நல்வரவு..
அன்புடன்
டியர் ஜோ சார்,
திரும்பிப் பார் விளம்பரம் சூப்பர்...
நன்றி
Welcome Mohan. Let your stay here be pleasant and meaningful.
Chandrasekar Sir, thanks for actively coordinating with the Press to highlight the hidden facts of yesteryears'.
Regards
கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்
ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்) [கௌரவத் தோற்றம்]
[3.4.1964 - 3.4.2012] : 49வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5609-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
என்னை வரவேற்று தாங்கள் அளித்த பதிவுக்கும், பாராட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !
சமூக நலப் பேரவை எனும் பெயருக்கு கட்டியம் கூறும் வகையில், கர்ணன் காவிய வெளியீட்டையொட்டி மக்கட் சமுதாயம் பயனுறும் விதம், தங்கள் அமைப்பின் மூலம் ஆற்றப்பட்டு வரும் நற்பணிகள் சிவாஜி பேரவையின் புகழை மட்டுமல்லாது சிவாஜி புகழையும் மேலோங்கச் செய்கிறது. சென்னை என்ன, திருச்சி என்ன, கடலூர் என்ன, திருநெல்வேலி என்ன, என பற்பல ஊர்களிலும் சிவாஜி பேரவையின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் மலைக்க வைக்கின்றன. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் தங்களுக்கும், தங்களது அமைப்புக்கும் எனது பசுமையான பாராட்டுதல்களுடன் கூடிய தலையாய நன்றிகள் !
'Chronicle' மற்றும் 'மாலை மலர்' தகவல்கள் அருமை மட்டுமல்ல, உண்மை ! சாத்தூர் பதாகைகள் பிரமாதம் !
அன்புடன்,
பம்மலார்.