ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
யாரங்கே.. யாராவது இத்திரிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே கூடிக் கொண்டே போகிறது...
Printable View
ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
யாரங்கே.. யாராவது இத்திரிக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். எழுத்தாளர்களின் எண்ணிக்கை இங்கே கூடிக் கொண்டே போகிறது...
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்
30.09.2013 – 06.10.2013 வரை
தியாகம் – ஜே மூவீஸ் – 30.09.2013 – காலை 9 மணி
நீலவானம் – ஜே.மூவீஸ் – 01.10.2013 – பிற்பகல் 1 மணி
விடுதலை – ஜே.மூவீஸ் – 06.10.2013 – இரவு 10 மணி
உத்தம புத்திரன் – ஜெயா டி.வி. – 04.10.2013 – காலை 10 மணி
சொர்க்கம் – கலைஞர் டிவி – 01.10.2013 - பிற்பகல் 1.30 மணி
கீழ்வானம் சிவக்கும் – கே டிவி – 30.09.2013 – பிற்பகல் 1 மணி
நவராத்திரி – கே டிவி – 01.10.2013 – பிற்பகல் 1 மணி
உயர்ந்த மனிதன் - முரசு டிவி – 01.10.2013 – இரவு 7.30 மணி
லக்ஷ்மி கல்யாணம் – முரசு டிவி – 05.10.2013 – இரவு 7.30 மணி
சிவந்த மண் – பாலிமர் டிவி – 02.10.2013 – பிற்பகல் 2 மணி
அஞ்சல் பெட்டி 520 – ராஜ் டிஜிட்டல் – 30.09.2013 – மாலை 4 மணி
எமனுக்கு எமன் – ராஜ் டிவி – 30.09.2013 – பிற்பகல் 1.30 மணி
அம்பிகாபதி – வசந்த் டிவி – 30.09.2013 – பிற்பகல் 2 மணி
திருவருட்செல்வர் – வசந்த் டிவி – 01.10.2013 – பிற்பகல் 2 மணி
எங்கிருந்தோ வந்தாள் – வசந்த் டிவி - 02.10.2013 – பிற்பகல் 2 மணி
படித்தால் மட்டும் போதுமா – வசந்த் டிவி – 03.10.2013 – பிற்பகல் 2 மணி
தியாகம் – வசந்த் டிவி – 04.10.2013 – பிற்பகல் 2 மணி
ஜல்லிக்கட்டு – வசந்த் டிவி – 05.10.2013 – காலை 10.30 மணி
சந்திப்பு – வசந்த் டிவி – 05.10.2013 – பிற்பகல் 2 மணி
திருவிளையாடல் – வசந்த் டிவி – 0610.2013 - காலை 11 மணி
எதிரொலி – வசந்த் டிவி - 06.10.2013 – பிற்பகல் 2.30 மணி
வசந்த் டிவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
காலை 8.30 சிறப்புத் தேனருவி ... நடிகர் திலகம் படப் பாடல்கள்
காலை 11 மணி – சிறப்புப் பட்டிமன்றம்
பகல் 12.30 மணி – என்றென்றும் சிவாஜி
பிற்பகல் 2.30 மணி – திருவருட் செல்வர் திரைப்படம்
மாலை 5 மணி – சக்ஸ்ஸ் சிவாஜி – சிறப்பு நிகழ்ச்சி
மாலை 5.30 மணி – முதல் மரியாதை – திரைப்படக் கலைஞர்கள் நடிகர் திலகத்துக்கு செலுத்தும் மரியாதை
மாலை 7 மணி – மகா நடிகன் சிவாஜி
டியர் கோபால் சார்,
தங்களின் பட்டிக்காடா பட்டணமா பற்றிய கேள்வி பதில் பதிவு பிரமாதம், நீங்கள் கூறிய படி எல்லாவற்றிக்கும் பதில் இ தான் என்றாலும், தங்கள் பதிலை பார்க்கும் வரை 24 வது கேள்விக்கு நெய்வேலி என்று நினைத்திருந்தேன். .
[quote=raghavendra;1078547]ரவி ...
கர்ணன் தான் நடிகர் திலகம், நடிகர் திலகம் தான் கர்ணன் என்பதை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
சத்தியமான உண்மை......
இத இத இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.. விடுமுறையாய் நேற்று, முதல் நாள் இருந்தாலும் உடல் நிலை கொஞ்சூண்டு சரியில்லை..அப்ப்புறமும் ஆஃபீஸ்.. வந்து மாத்திரை போட்டுக் கொண்டு தூக்கம் வராமல் சற்றே சில புத்தகங்கள்..பின் இங்கு வந்தால் கோபால்சார் ரவி அவர்க்ளின் வித்யாச விமர்சனங்கள்.. ராகவேந்தர் சாரின் இதழொலி (விசில்) கச்சேரியைப் பற்றிய ஆய்வு என தெரெட்டே குதூகலமாக ஜொலிக்கிறது.. நடிகர் திலகத்தின் பிறந்த நாள் வருவதால் காரணமா..ம்ஹீம் நோ.. எக்காலத்திலும் கலகலவென்று இந்த இழை இருக்க வேண்டும்..
முதற்கண் மகாகவி காளிதாஸைப் பாராட்டிய ராகவேந்தர் சார், வாசுதேவன் சார், மிஸ்டர் கார்த்திக், கல் நாயக் சார்,சந்திர சேகர் அவர்களுக்கு என் நன்றிகள்..
கோபால் சார் .. ஹி ஹி..சுபாவின் முட்டைக்கண்ணைப் பற்றியும் என்னடி ராக்கம்மா பற்றியும் இன்னும் எழுதியிருக்கலாம். நான் பார்த்ததும் அதே சென் ட்ரல் தான்..ஆனால் சிறுவனாக..
ரவி சார் - கர்ணன் என்.டி ஒப்புமை நன்று
ராகவேந்திரர் சார்.. நெஞ்ச்த்திலே நீ நேற்று வந்தாய் பாட்டுத் தான் நினைவுக்கு வருகிறது.. நன்று..
ராகவேந்தர் சார்,
உங்கள் குசும்பு மிக ரசித்தேன். எல்லாரும் ஈ என்றுதானே சிரிக்க முடியும்? இ என்று சிரிப்பது கஷ்டமாயிற்றே?
நீங்கள் ஒரிஜினல் விசிலுக்கு சென்று விட்டதால், நான் வாழ வைப்பேன் விசில்களை பற்றி யார் எழுதுவது?
வாசு /ராகவேந்தர் சார்,
photoshop மனோகரா பதிவுகள் ரொம்ப ரசிக்க கூடிய நேர்த்தி.(vasu amazing. your hardwork is astonishing) வண்ணமும் அழகு. மனோகரா,உத்தம புத்திரன் படங்களை வண்ண படுத்த முடிந்தால்?
சின்ன கண்ணன்- மகாகவி காளிதாஸ் படத்தில் nativity மிஸ்ஸிங். ராஜபக்தி,சித்தூர் ராணி பத்மினி,இரு துருவம்,புண்ணிய பூமி போல.ஆனால் ம.க.கா.தாஸ் தப்பித்தது சிவாஜி-கே.வீ.எம் இணைவில் நிகழ்ந்தது. சுமார் வெற்றி.உங்கள் ஊர் கல்பனாவில்தான் அதிக நாட்கள். எனக்கு ஒரு குறை. காளிதாசன் சிருங்கார சொல் (ஜொள்)கவிஞன்(உதாரணம் காட்டுவேன்.நண்பர்கள் உதைக்க வருவார்கள்). ஆனால் காளி அம்சம் பிடித்து கொண்டு ,ஜாலி அம்சம் கோட்டை விட்டார்கள்.எனக்கென்னவோ எல்.விஜயலட்சுமி டான்ஸ் பிடித்தாலும்,கொஞ்சம் ஆம்பிளைக்கு பொம்பிளை வேஷம் போட்ட மாதிரி தெரிவார்.(ஆனால் இன்னொன்றுக்கு இது தேவலை)
சுசிலாவின் தேன் மதுர குழலோசையில் ,என்னை மறந்து மலரும் வான் நிலவும் பாட்டை ரசித்து....
சடாரென்று டி.எம்.எஸ் அந்த பாட்டை பாடுவது நன்கு இனிய கனவுகளுடன் தூங்கி சுகம் காணும் ஒருவனை ,காலங்கார்த்தாலே, சிலீரென்று பக்கெட் தண்ணியை கொட்டி எழுப்பி ,பொன்னம்பலம் விகாரமாக இளித்து கொண்டு நின்றால் எப்படி இருக்குமோ அப்படி.....
ரவி- கர்ணன் நடிகர்திலகத்தை நன்கு அமைத்திருந்திருந்தீர்கள்.
கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?
சொல்லும் படி திரியின் ஆழமும் ,அகலமும்,உயரமும் ,நீளமும் பல எழுத்தாளர்களால் கூடி கொண்டே வருகிறது.(ஆலமும் கூடினால் களை கட்டும்.)
ஜோ,
தாங்கள் சொல்ல வருவது புரிகிறது. நானும் ஆரம்பம் முதல் தங்களை கவனித்து வருகிறேன். ருத்ரன் முதல் ராஜநாயகம் வரை தாங்கள் இடையிட்டு நடிகர்திலகத்தின் கொடியை பறக்க விட்டே வருகிறீர்கள். நானும் சில இடங்களில் தங்களை தொடர்ந்துள்ளேன். யாரவது இஷ்டத்திற்கு எழுதும் போது,நாம் இடையிட்டே ஆக வேண்டும்.
ராகவேந்தர் சார்,ஒரு வேண்டுகோள். யாருக்காவது குறையிருப்பின் அவர்கள் எழுதும் போது தங்கள் உபபதிவு அவசியமில்லாதது.எழுதியவரின் நோக்கத்தை திசை திருப்பி ,சிதைத்து விடுகிறது.தவிருங்கள்.
சிவாஜி சிலை(திருபுவனம்)- இப்போதுதான் தோன்றுகிறது.அவர் ஏதாவது பிரத்யேக புற அடையாளங்களை (தன்னையே மறைக்கும் அளவு)வைத்திருந்தால்,சிலை எப்படி இருந்தாலும் அவர் மாதிரியே வந்திருக்குமே?
எல்லோருக்கும் மனம் நிறைந்த (முன்கூட்டிய )பிறந்த நாள் வாழ்த்துக்கள்.(அவர் பிறந்த போது ரசிகர்களும் பிறந்து விட்டோமே?)
வசந்த் டி.வீ க்கு எனது மனம் நிறைந்த நன்றியும்,வாழ்த்தும். அனைத்து சேனல் களும் கொண்டாட கடமை பட்டவை ரசிகர்கள் அனைவரும் வசந்த் டி.வீயை விட்டு அசைய கூடாது
இந்த திரியில் எழுதுபவர்கள் எண்ணிக்கை கூடி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.சின்னக்கண்ணன்,ரவி சார்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் அவா.(இது ஆசையை மட்டும் குறிக்கும் சொல்.)
கோபால் சாரின் பதிவு அ)அற்புதம் ஆ)வழக்கம்போல அற்புதம் இ)எப்பொழுதும் போல அற்புதம் ஈ) 49-o
http://i1.ytimg.com/vi/WngSPSrIRJM/hqdefault.jpg
1.தியேட்டர் கூரைக்கும் மேல்
2. ஈடுஇணையில்லாத பொருத்தம்.
3. சுவாரஸ்யமான சுவாரஸ்யம்.
http://tamildada.com/wp-content/uplo...nama-songs.jpg
4. ஆளை மயக்குவது.
5. மற்ற ஜாலிக் கதைகளை காலியாக்கிய கதை.
6. யூ மீன் கமல் (தசாவதாரம்) நம்பி. அவருக்குப் பிடிக்கும். அவர் தம்பிக்குப் பிடிக்காது. ரங்கராட்டினம் போல் சுழன்று ராஜன் போல நம்பியவர்களையும், நம்பாதவர்களையும் சுருள் சண்டையால் சுருள வைத்த சுருள்முடி அழகன்.
7. ஆர்ப்பாட்டம்.
8. கிராமிய, நகர, இதர ஸ்டெப்ஸ் எதை வேண்டுமானாலும் கொடு. விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். என்னடி ராக்கில்( rocking )உறுமி மேளம் கொட்டி கிடாரில் நல்வாழ்த்துக் கூறி என்னைப் போல் ஈடுஇணை உண்டா என்று உன்னைப் போல பதில்...பதில்...பதில்...கேட்டவர்.
9. வாழ்த்தட்டும் தலைமுறை வா...
10. விவரமானது.
11. நடைமுறைக்கு சாத்தியமில்லை.
12. நாம் செய்ய நினைத்ததை விட சரியாக செய்வார். (அதுதானே தலைவரின் ஸ்பெஷாலிட்டி!)
13. உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயமும்.
14. வாயடைத்துப் போன ஆனந்தம்.
15. சாரி டீச்சர்....கேள்வி புரியல்லே.
16. எதிரிகள் எட்ட ஓடி விட்டனர்.(வில்லன் க்ரூப்பை சொன்னேன்)
17. எதிர்பாராத போக்ரான்.
18. அந்தக் காட்சி நடிப்பு நமக்குக் கிடைத்த வெகுமானம்.
19. சஸ்பென்ஸ் திரில்லருக்கு நிகரானது (பீட்ஸா தேவை)
20. திகட்டாதது.
21. இந்தா வாங்கிக்க கோழிக் குருமா (வயிற்று வலி கண்டு டாக்டரிடம் போனவன் எத்தனை பேர்!) "நடிக்கனும்னு ஊரை விட்டு ஓடி வரவனெல்லாம் சிவாஜி கணேசன் ஆயிட முடியுமா"... இது ஒண்ணு போதாதா! மக்கு டீச்சர்.
22. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த ஒரு படம்
23. பம்மலார். அதில் சந்தேகமென்ன? (யப்பா...இந்த ஒரு கேள்விக்குதான் ஆப்ஷன்ஸ் கரெக்ட்டு. ஹைய்யா! டீச்சர் மார்க்கு போட்டுடுவாங்க. ஜாலி. அப்பத்தான் பம்மலாரும் ரெண்டாவது புக்கு ஒண்ணு போடுவாரு. (டீச்சர்! உங்களுக்கு சாதகமான கேள்வியெல்லாம் கேக்குறீங்க! பொழச்சுப் போங்க.)
24.தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டு ராதாகிருஷ்ணனை பெயில் பண்ண மாதிரி என்னையையும் பண்ணிடாதீங்க.
25. பேரானந்தம். (டீச்சர்! தண்ணி அடிச்சிட்டு கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணீங்களோ! ஒரே போதையாவே இருக்குதே!)
டீச்சர்! எப்படியாவது டாக்டர் பட்டம் குடுக்காட்டாலும் கம்பவுண்டர் பட்டமாவது குடுத்துடு. ஒனக்குப் பிடிக்காத ச்சே ஒனக்குப் புடிச்ச பொம்மை கூடப் போட்டிருக்கேன். என் செல்ல டீச்சர் இல்ல! வாணிஸ்ரீ மிட்டாய் வாங்கித் தாரேன்.
டீச்சர், உனக்கொரு கேள்வி.
வசூலில் பின்னியது பட்டிக்காட்டிலா? பட்டணத்திலா? அல்லது இரண்டிலுமா?
பதில் சரியாச் சொன்னா பம்மலாருக்கு ரெகமண்ட் பண்ணுவேன்.
இனி விஷுவல்.
http://ttsnapshot.com/out.php/i7803_...h40m31s148.pnghttp://ttsnapshot.com/out.php/i7804_...7h42m30s55.png
http://ttsnapshot.com/out.php/i7805_...h42m38s136.pnghttp://ttsnapshot.com/out.php/i7806_...h42m17s188.png
http://ttsnapshot.com/out.php/i7807_...h42m12s137.pnghttp://ttsnapshot.com/out.php/i7808_...7h40m51s88.png
http://www.comedyulagam.com/wp-conte...ayalalitha.jpghttp://i1.ytimg.com/vi/yOoguw_wQ7Y/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/FcHFg54LL_k/hqdefault.jpg
http://www.comedyulagam.com/wp-conte...ayalalitha.jpghttp://i1.ytimg.com/vi/vREh-LENzzc/h...jpg?feature=oghttp://i1.ytimg.com/vi/qVXOtlX-EpM/h...jpg?feature=og
http://i1.ytimg.com/vi/I5dyXY3SVRg/mqdefault.jpg
http://i1098.photobucket.com/albums/...tanama0003.jpghttp://i1098.photobucket.com/albums/...tanama0004.jpg
http://i1098.photobucket.com/albums/...tanama0005.jpghttp://i1098.photobucket.com/albums/...tanama0009.jpg
http://i1098.photobucket.com/albums/...tanama0010.jpghttp://i1098.photobucket.com/albums/...tanama0011.jpg
This is sharing of identical views and not a supplementing ...Quote:
ராகவேந்தர் சார்,ஒரு வேண்டுகோள். யாருக்காவது குறையிருப்பின் அவர்கள் எழுதும் போது தங்கள் உபபதிவு அவசியமில்லாதது.எழுதியவரின் நோக்கத்தை திசை திருப்பி ,சிதைத்து விடுகிறது.தவிருங்கள்.
வாசு சார்
மூக்கையனின் வெற்றி உலா நிழற்படங்களின் மூலம் தங்களுடைய கை வண்ணத்திலும் கோபாலின் எழுத்து வண்ணத்திலும் மிளிர்வது மிகச் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.
ஆவணத் திலகம் பம்மலாரின் நிழற்பட அணிவகுப்பு ...
http://i1110.photobucket.com/albums/...ttanama1-1.jpg
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
Quote:
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பட்டிக்காடா பட்டணமா
...
சாதனைப் பொன்னேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 1.5.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5754-1.jpg
'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 6.5.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5763-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5756-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5757-1.jpg
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 24.6.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5758-1.jpg
[ஆறு வாரங்களின் வசூல் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது]
100வது நாள் விளம்பரம் : தினமணி : 13.8.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5764-1.jpg
வசூல் சாதனை விளம்பரம் : தினமணி : 15.10.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5759-1.jpg
வெள்ளிவிழா விளம்பரம் : தினமணி : 27.10.1972
http://i1110.photobucket.com/albums/...GEDC5765-1.jpg
குறிப்பு:
அ. வெள்ளி விழா கண்ட திரையரங்கம்:
மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள்
ஆ. 100 நாட்களுக்கு மேல் ஓடி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 146 நாட்கள் [பின் 'சித்ரா'வுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு வெள்ளிவிழா]
2. சென்னை - கிரௌன் - 111 நாட்கள்
3. சென்னை - புவனேஸ்வரி - 104 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் சினிமா - 182 நாட்கள் [நேரடியாக வெள்ளிவிழா]
5. சேலம் - ஜெயா - 146 நாட்கள் [பின் 'நடராஜா'வுக்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
6. திருச்சி - ராக்ஸி - 139 நாட்கள் [பின் 'பாலாஜி'க்கு மாற்றப்பட்டு வெள்ளிவிழா]
7. நெல்லை - பார்வதி - 111 நாட்கள்
8. கொழும்பு (இலங்கை) - சென்ட்ரல் - 115 நாட்கள்
9. யாழ்ப்பாணம் (இலங்கை) - ராணி- 100 நாட்கள்
10. கோவை - ராஜா - 90 நாட்கள் [பின் 'வள்ளி'க்கு ஷிஃப்ட் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
11. வேலூர் - அப்ஸரா - 69 நாட்கள் [பின் 'கிரௌன்' அரங்குக்கு மாற்றப்பட்டு 100 நாட்களைக் கடந்தது]
இ. சென்னை 'சாந்தி' மற்றும் சேலம் 'ஜெயா' அரங்குகளில் மிகமிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இக்காவியம், "வசந்த மாளிகை"க்காக வேறு அரங்குகளுக்கு மாற்றப்பட்டது.
ஈ. தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே, முதல் வெளியீட்டில், முழுவதும் ஓடி முடிய, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிய ஒரே கறுப்பு-வெள்ளைக் காவியம்.
உ. இமாலய வெற்றிக்காவியமான "பட்டிக்காடா பட்டணமா", 1972-ம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் பெற்ற காவியம். 1972-ல் பாக்ஸ்-ஆபீஸில் வசூல் சாதனையில் முதலாவது இடத்தைப் பிடித்த திரைக்காவியம் "வசந்த மாளிகை".
ஊ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது 1972-ல் தான். அந்த இரு காவியங்கள் : "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
டியர் வாசுதேவன் சார் / கோபால் சார் / ராகவேந்திரன் சார் (பம்ம்லாரின் ஆவணம்),
நேற்று சிவாஜி சமூகநலப்பேரவை நிகழ்ச்சிக்காக திருப்பூர் சென்றிருந்தேன். பிற்பகலில் அறையில் இருந்தபோது தொலைக்காட்சியைத் திருப்பினேன். மெகா தொலைக்காட்சியில் "பட்டிக்காடா பட்டணமா" ஓடிக்கொண்டிருந்தது. ஒய்வு நேரம் மூக்கையாத் தேவரின் அட்டகாசங்களைப் பார்த்துக்கொண்டே கழிந்தது. நாளை காலை பொய் திரியில் ஏதாவது எழுதாலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தால், திரியில் பட்டிக்காடா பட்டணமா அலசல்களை அட்டகாசமாக வழங்கிவிட்டீர்கள்.
நன்றி.
Many thanks for encouraging my write up - special thanks for bearing with me the translated tamil . I really wonder how so many veterans in this hub are able to write in Tamil so eloquently and fluently without a single error of translation . நடையா இது நடையா - ஒரு நாடகம் அன்றோ நடக்குது என்று வியக்காத நாளிலை - சிவாஜி யின் பாதிப்பு இல்லாத ரசிகர்களே இல்லை எனலாம் - என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள் - 360 டிகிரி சுப்புவுக்கு - "நான் வாழ வைப்பேன்"அவரை வாழ வைக்கட்டும்
:smokesmile::-D
எல்லாமே பிடிக்கும். இன்னும் சில.
1. ரொம்பப் பிடித்தது டைட்டில். நெகடிவ் ஷேட்ஸ் மறைந்து, மறைந்து அழகாய்த் தெரியும் தலைவரின் உருவம். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்.
2. சுருள் சண்டை முடிந்ததும் "சேர்வைடா... சேர்வை" என்றபடி பின்பக்கம் முடிந்துள்ள வேட்டியை அவிழ்த்து விடும் வேகம்.
3. "ஊருக்கெல்லாம் தெரியும்படியா உனக்கு தாலி கட்டினேன். இப்ப யாருக்கும் தெரியாமே நானே உனக்கு புடவை கட்டி விடறேன்" என்ற தயக்க வழிசல்.
4. "விவாகரத்து வெங்கடசாமி! என் விவகாரத்தில தலையிடாத சாமி" மிரட்டல்.
5. எதுவும் முடியாமல் போன பட்சத்தில் தலையில் துண்டை முக்காடாகப் போட்டு தெருவில் 'தேமே' என்று நடந்து வருதல். அதை விட டாப் 'அய்யா வந்துட்டாரு' என்று வேலையாட்கள் கூக்குரலிட, அங்கிருக்கும் முக்காலியை காலால் எட்டிப் பிரட்டி உதைத்து விட்டு (அந்த நாற்காலி கூட அவர் செயலுக்கு எப்படி கட்டுப் படுகிறது!) "எல்லாம் வெளியே போங்க" என்று வெறுப்பாக கூறுதல். வெறுப்பாக கூறினாலும் கம்பீரம் எள்ளளவும் குறையாது. (மூக்கையன் பாதியாகவும் முகேஷ் பாதியாகவும் அட்டகாசமாக இருப்பார்)
6. அந்த சோக "என்னடி ராக்கம்மா". பட்டை உரித்து விடுவார். உட்கார்ந்தபடி தலையை சாய்வாகச் சாய்த்து கொடுக்கும் அற்புத போஸ். அடுத்து கதவை திறந்தபடி நிற்கும் போஸ், "என் பட்டம்... என் திட்டம்... என் சட்டம்" வரிகளின் போது குளோஸ்-அப்பில் லேசான தலையாட்டல்கள். கண்களை ஒரு தடவை இமைத்தபடி பண்ணும் அமர்க்களம். "காற்றாகப் பறந்ததடி"... வரியை இரண்டாம் முறை உச்சரிக்கையில் இடது கையை தலைக்கு மேலே வைத்தவாறு உட்கார்ந்து தரும் இணையே இல்லாத போஸ். பாடலின் முடிவில் படிக்கட்டில் அமர்ந்து பழையனவற்றை நினைத்து வெறித்துப் பார்த்தபடி தரும் போஸ். இந்தப் பாடல் முழுதும் போஸ்களிலேயே பின்னி எடுப்பார். (டிஎம்.எஸ் பண்ணும் அமர்க்களமும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியே அச்சு அசல் தலைவர் குரல்).
http://i1087.photobucket.com/albums/..._003554788.jpg
7. பஞ்சாயத்துக் கதையை அப்பத்தாளிடம் சொல்லும் ஒப்புயர்வற்ற சீன். ("நான் வந்திருக்கேனே... உயிரோட") அப்படியே திரும்பி "கேட்டானே ஒரு கேள்வி... இதுவரைக்கும் யாருமே என்னைக் கேட்காத கேள்வியைக் கேட்டான் அப்பத்தா!" (இந்த இடத்தில் அந்தக் கண்களைப் பார்க்கணுமே!) அவமானம் பிடுங்கித் தின்ன ஆத்திரமும், கோபமும் முகத்தில் நர்த்தனமாட
"கேட்டான் அப்பத்தா! பொஞ்சாதியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்னு கேட்டானே ஒரு கேள்வி என்னை?" குரல் தழுதழுக்க, தொண்டை ஆத்திரத்தில் அடைக்க, கைவிரல்களை விரித்து வைத்துக் குமுறுவர் பாருங்கள்.
இந்த ஒரு காட்சி போதும்யா.
எவருக்கும் விளங்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
//கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?//
ஓலமிட்டு ஏங்கி நிக்கும்
..உள்மனசைத் தேற்று தற்கு
வாளமீனப் போல தேகம்
..வார்த்துவிட்ட பொன்னா மின்னி
கோலமிடப் புள்ளி வச்சு
..கோடுபோடக் காத்தி ருக்க
ஆலமின்னும் வார லையே
..ஆசநெஞ்சு ஓய லையே..! :)
ரவி சார்,
அழகான ஒப்பீடு. கர்ணனையும், நடிகர் திலகத்தையும் உண்மையாகவே ஒப்பிட்டு உள்ளீர்கள். ஆஹா! தலைவரைப் பற்றிய அருமையான புரிதல் தன்மையைத் தங்களிடத்தில் காண்கிறேன். சேர்ந்த இடமெல்லாம் முதுகில் குத்தப்பட்டுதான் வந்தார் என்பதை எவ்வளவு அழகாக் கூறியுள்ளீர்கள்! அதற்கான பலன்களையும் அனுபவிக்கத்தான் போகிறார்கள் என்றும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்.
எவ்வளவு திறமைசாலிகள் திரியில் இருக்கிறீர்கள்! எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்! நினைக்கவே பெருமையாய் இருக்கிறது சார். அடுத்த உங்கள் பதிவை சுவைக்க வெகு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
அருமையான பதிவிற்கு நன்றிகள் சார்.
டியர் ராகவேந்திரன் சார்,
இந்திய விசிலிசைச் சங்கம் நடத்திய செவாலியே சிவாஜிக்கு விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றி தங்களுடைய பதிவு சிறப்பாக இருந்தது.
தாங்கள் குறிப்பிட்டிருப்பது யார் என்பது தெரியவில்லை. ஆனால் தாங்கள் விழாவில் பேசியவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.
நன்றி.
டியர் கோபால் சார்,
பட்டிக்காடா பட்டணமா கேள்வித்தாள் மிகவும் சூப்பர். ரசிகர்கள் அனைவருமே பட்டதாரிகள் ஆகியிருப்பார்கள். இப்படி வித்தியாசமான சிந்தனைகளுடன் பதிவுகள் தயாரிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதை இன்னொருமுறை நிரூபித்து விட்டீர்கள். திரியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் தங்கள் பங்களிப்பு மகத்தானது.
டியர் ரவி சார்,
கர்ணனையும் கணேசரையும் ஒப்பிட்ட தங்கள் பதிவு மிக அற்புதம். நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. அடிக்கடி வந்து இப்படிப்பட்ட அருமையான பதிவுகளை அளியுங்கள்.
டியர் வாசுதேவன் சார்,
கோபால் சாரின் வினாத்தாளுக்கு சுவையூட்டும் வண்ணம் தாங்கள் பதித்த பட்டிக்காடா பட்டணமா நிழற்படங்கள் அனைத்தும் மிக மிக நன்று. அதற்கு முன் வந்திருந்த அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்த மகத்தான காவியத்துக்கு நல்ல நினைவுட்டல். நன்றி.
டியர் ராகவேந்தர் சார்,
சரியான நேரத்தில் பம்மலார் அவர்களின் அறிய 'ஆவணப்பதிவுகளை' மீள்பதிவிட்டு, பல்வேறு 'ஆணவப்பதிவுகளுக்கு' பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் நன்றிகளும். எவ்வளவு அறிய ஆவணங்கள்..!!!. திரட்டி, பாதுகாத்து, அளித்த பம்மலார் அவர்களுக்கு எந்நாளும் நன்றிகள்.....
டியர் ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்துக்கு அளிக்கப்பட விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தங்கள் நேரடி கவரேஜ் நன்றாக உள்ளது. ('இதழொலி' என்ற சொல்லாட்சி அருமை). நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்களில், நடிகர்திலகத்தின் பெயரை 'கவனமாக' தவிர்த்த அந்த பிரகஸ்பதி யாரென்று ஓப்பனாகவே சொல்லியிருக்கலாம். ரசிகர்களின் ஊகங்களுக்கு விட வேண்டியதில்லையே.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையில் வந்த பல பாடல்களில் 'விசில்' இடம்பெற்றுள்ளது. உதாரணத்துக்கு 'அந்த நாள் முதல்' (பாவமன்னிப்பு),, 'கேள்வி பிறந்தது அன்று' (பச்சைவிளக்கு), 'நெஞ்சத்திலே நீ' (சாந்தி), நீரோடும் வைகையிலே (பார்மகளேபார்), என பல பாடல்கள் உண்டு. அவற்றை விளக்க விழாவில் தங்களுக்கு வாய்ப்பு அமையாதது துரதிஷ்டமே....
ஓஞ்சு போகாதே கட்டைகள்
காய காயவே கனன்றெரியும் கங்கனெவே
ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம்
வந்துமென்ன வேரென நின்றவளே ,என்
உடலும் உள்ளமும் விறைப்பாகவே
இன்றும் மிடுக்கோடு ,காளையென் ரேகை
என்றும் ஆருடன் எவனும் அறிந்ததேயில்லை
என் எதிர்காலமே என் கைகளால் அழிவதை
கண் மூடி சுகித்தவன் கதறியே தொழுகிறேன்
காட்டு என் ஆலத்தை ,என் மன ஆழத்தை அறிய
சின்ன கண்களே போதுமே,நன்றி நண்பரே.
புரிந்தவருக்குக் கருமம்
புரியாதவருக்குக் கவிதை.
ஆலத்துக்காக ஒலமிட்டழும்
நீலகண்டனே!
இந்தா! ..... பசியாறு.
http://i.ytimg.com/vi/IekjwOp_tSs/0.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
விசிலாஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு என்னைப் போல வர இயலாதவர்களுக்கு வரப்ரசதமாய் அமைந்துள்ளது. சென்னையில் இது ஒரு வசதி. நிகழ்ச்சியை அருமையாக அளித்த நல்லுள்ளங்கள் வாழ்க. நல்ல தொகுப்பு. நன்றி தங்கள் அம்சமான கவரேஜுக்கு.
சோக "என்னடி ராக்கம்மா"
https://www.youtube.com/watch?featur...&v=ZIpNh34pwsg
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நான் சுட்டிக் காட்டியது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள். நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். சொல்லப் போனால் நான் கிருஷ்ணமூர்த்தி அருகில் அமர்ந்து தான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராமஜெயம் அவர்களும் ஆனந்த் அவர்களும் மேடையில் கௌரவிக்கப் பட்டார்கள்.Quote:
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.
மற்றவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா என்பதில் தான் என் கவனம் சென்றது. அது தொடர்பாகத் தான் என் பதிவும் உள்ளது.
//ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம் // ஹி ஹி
ஆழமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆலம் இருக்கும் அழகு!!
ல ழ வை மாற்றிப் போட்டா
ஆலமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆழம் இருக்கும் அழகு
ஹை..ரெண்டுமே நன்னா இருக்கே :)
பலமணி நேரத்தை பாங்காய் செலவிட்டு
அழகாய்த்தான் படைத்தேன் ஆலத்தின் பதிவுதன்னை
எந்தக்கோப்பில் சேமித்தேன் என இன்னமும் தேடுகிறேன்
கிடைத்ததும் பதிக்கிறேன், இல்லையேல் மீண்டும் படைக்கிறேன்.
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
வசந்தமாளிகை தன்னில் கிண்ணத்தை ஏந்தியவள்
என்னைப்போல் ஒருவனிடம் வேலாலே விழிகளில்
காமம் கலந்த காதலை சிந்தியவள்
மன்னவன் வந்தானடியில் ராஜஸ்தானில் ராஜாவாகப் பொறந்த
யாரோ ஒருவனைத் தேடியவள்... வருவாள் விரைவில்
வராமல் எங்கே போவாள்...... அதுவரை
தூக்கம் வராமல் ஏக்கத்தில் தொலையாதீர்
மன்மத லீலையில் மயக்கம் கொள்ளாதீர்
நான் சொல்ல வந்தது என்னவென்றால்......
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....
Mr. Karthik ஹி ஹி :)
ஊடியே செல்லும் உணர்ச்சிகள் தானுந்தி
தேடிப் பதிவீர் தெளிவு..
NO OTHER WAY
LET GOALJI ...................................
http://youtu.be/n7Qzz_2u-bQ
டியர் கார்த்திக் சார்,
ஆலத்தின் பதிவை
ஆர்வமாகக் கேட்டபோதும்
கோபம் கொப்பளிக்க
கோபால் சார் கேட்டபோதும்
பதிவர்கள் பலரும்
பவ்யமாய் கேட்டபோதும்
அய்ம்பதுக்கு மேல் வரும்
அதீத ஆசை என்றும்
அவ்வப்போது வரும் ஆர்வக் கோளாறு என்றும்
அலட்சியமாய் இருந்துவிட்டேன் - இன்று
ஆலத்தைப் பற்றிய தங்களின்
ஆண்மையான கவிதையால்
எப்போது பதிவு வரும் என்ற
ஏக்கம் எனக்குள்ளும்.
இனிய நண்பர் திரு கோபால் சார்
அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .
நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .
இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]
http://youtu.be/60uvrackjS8