agree. but next to 'thenil aadum roja'.
http://www.youtube.com/watch?v=4RmHJ...yer_detailpage
Printable View
agree. but next to 'thenil aadum roja'.
http://www.youtube.com/watch?v=4RmHJ...yer_detailpage
இயக்குனர் முக்தா சீனிவாசனும் ஒரு பாட்டு ராசிக்காரர். விஸ்வநாதன் ராமமூர்த்தி, அல்லது விஸ்வநாதன் தனியாக, அல்லது ராமமூர்த்தி தனியாக, அல்லது வி.குமார் என்று யார் போட்டாலும் பாடல்கள் அருமையாக அமைந்து விடும்.
அப்படி தேன்மழை படத்தில் டி.கே.ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை, பி.பி.எஸ்ஸின் 'கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம்' உள்பட.
அதில் சுசீலாவின் குரலில் நம் மனதை அள்ளும் பாடல்..
'நெஞ்சே நீ போ சேதியைச்சொல்ல
நானும் வருவேன் மீதியைச்சொல்ல' ..
நன்றி கார்த்திக் சார்.
http://www.photofast.ca/files/products/7767.jpg
'மணப்பந்தல்' பாடல்கள் விவரம் தந்ததற்கு நன்றி!
'உனக்கு மட்டும்' அருமையாக இருக்கும்.
ஆனால் 'உடலுக்கு உயிர்க் காவல்' எரிச்சலாக வரும். அசோகன் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு படுத்துவார். கஷ்டம்டா சாமி.
http://www.youtube.com/watch?v=90JPFjyfIis&feature=player_detailpage
கார்த்திக் சொன்ன மாதிரி தேன் மழையின் சிறந்த பாடல் நெஞ்சே நீ போ. வித்யாசமான பாடல் விழியால் காதல் கடிதம். பிற நல்ல பாடல்கள் ஆரம்பமே இப்படித்தான்,கல்யாண சந்தையிலே.
ரொம்ப நாள் பாக்யலக்ஷ்மி இயக்குனர் முக்தா என்றே எண்ணி கொண்டிருந்தேன். பிறகுதான் அது வேறே ஸ்ரீனிவாசன் என்று தெரிந்தது. நிறைய நல்ல பாடல்கள். எல்லோரும் மாலை பொழுதின் ,காண வந்த காட்சியென்ன என்று தேர்ந்தெடுத்தாலும் எனது நம்பர் ஒன் காதலென்னும் வடிவம் கண்டேன் .
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும் ,இளமைஎன்னும் பூங்காற்று அதே ராகம் என்றாலும் பால் நிலவு better song .முத்து ராமனால் கெட்டது.
ஸ்டெல்லா அவர்களே,
பாராட்டுக்கு நன்றி. எப்போதாவது இப்படி வந்து நான்கு வரிகளில் பாராட்டிவிட்டு போய்விடுகிறீர்கள். அதன்பிறகு ஆளையே காணோம்.
பழைய தமிழ்ப்பாடல்களில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள், உங்களுக்குப்பிடித்த தமிழ்ப்பாடல்கள் பற்றி தங்களுக்கு தெரிந்ததை எழுதலாமே, ஆங்கிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை...
டியர் வாசு சார்,
'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்', 'நெஞ்சே நீ போ' பாடல் வீடியோ காட்சிகளை உடனுக்குடன் 'சுடச்சுட' தந்ததற்கு நன்றி...
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தின் பாடல் புத்தகம் .
நடித்தவர்களின் கையெழுத்துடன் பாடல் புத்தகம் .
உண்மையிலே புதுமை . உங்கள் பார்வைக்கு .
http://i61.tinypic.com/28v87eo.jpghttp://i59.tinypic.com/1124pwj.jpghttp://i60.tinypic.com/208xukx.jpg
முக்குறு மொனகல்லு 1994
சிரஞ்சீவி 3 வேடங்கள்,ரோஜா,ரம்யா கிருஷ்ணன்,நக்மா,ஸ்ரீவித்யா,ரங்கநாத் நடித்து வெளிவந்த தெலுகு படம்
தமிழில் அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது .
https://encrypted-tbn0.gstatic.com/i...nYrE1mzumiasfQhttp://3.bp.blogspot.com/-rM-EzBTzvR...ovieposter.jpg
கே ராகவேந்திர ராவ் இயக்கம்
வித்யா சாகர் இசை
chiru கலக்கி இருப்பார்
ரங்கநாத் ஸ்ரீவித்யா இருவரும் கணவன் மனைவி .ரங்கநாத் வழக்கம் போல் வில்லன் சரத் saxena வால் கொல்லபடுவார்.மூத்த மகன் சிரு ஸ்ரீவித்யாவிடமிருந்து பிரிந்து சென்று விடுவார் பிறகு ஸ்ரீவித்யா 2 குழந்தைகளை ஈன்றுஎடுப்பார். அது இரண்டும் சிரு தான் இதற்கும் அப்பா ரங்கநாத் தான் ஏன் என்றால் ரங்கநாத் இறக்கும் போது ஸ்ரீவித்யா கர்ப்பம் .இரண்டில் ஒன்று ஸ்ரீவித்யா இடம் வளரும் பின்னாட்களில் போலீஸ் அதிகாரியாக வரும் அதற்கு ஜோடி நக்மா .இன்னொரு சிரு கோயில் பூசாரியிடம் வளரும்.அது டான்ஸ் மாஸ்டர் அதற்கு ஜோடி ரம்யா கிருஷ்ணன் .மூத்த சிரு மார்க்கெட் ரவுடி அதற்கு ஜோடி ரோஜா
மூன்று சிருக்களும் எப்படி பின்னாட்களில் சேர்ந்து வில்லனை பழி வாங்குவார்கள் என்பது தான் கதை (டிபிகல் தெலுகு மசாலா )
(இங்கு சிரு என்பதை சிரஞ்சீவி என்று கொள்ளவும் )
பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர்
தெலுகு version 7 பாடல்கள் (6 பாடல்கள் பாலா சித்ரா ஒன்று மற்றும் மனோ சித்ரா )
தமிழ் டப் 6 பாடல்கள் எல்லா பாடல்களும் மனோ சித்ரா
ராஜசேகர ஆகலேனுரா என்று தெலுகு
'ராஜசேகர ஆசை தீர்கவா' என்று தமிழ் வார்த்தைகள் வரும்
http://www.raaga.com/channels/tamil/...p?mid=t0003820
http://www.youtube.com/watch?v=PNrX2ixqd3M
http://www.youtube.com/watch?v=Dh3mvp0UAY8
சூப்பர் எஸ்வி சார் உண்மையில் புதுமை
வினோத் சார்,
நெல்லையில் தற்போது ராயல் டாக்கீஸ்,பாலஸ்-டி-வேல்ஸ்,பார்வதி
டாக்கீஸ் ஆகியவை இல்லை.ஸ்ரீ ரத்னா டாக்கீஸ்,பாப்புலர் டாக்கீஸ்(கணேஷ்
என்ற பெயரில்)ஆகியவை உள்ளன.
கோபு
அய்யய்யோ ,
இது அபாண்டம். நான் அப்படியெல்லாம் சொன்னால் மகிழ கூடியவனா என்ன?ராமண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜி.ராமநாதனிடம் இருந்து வாய்ப்பை பறிப்பது முதல், ராமமூர்த்தி போட்ட டியுனை ராமண்ணா விற்கு ஹார்மோனியத்தில் வாசித்து காட்டி , அவ்வப்போது நிரவலாக இரவில் பிள்ளைகள் கேட்டால் பயந்தலரும் கர்ண கடூரமான குரலில் பாட்டை சொல்லி, பதிவின் போது ரெண்டு மூங்கில் குச்சியை கையில் வைத்து , துரு துரு வென்று இருப்பவரை போய் ,வெத்திலை போட்டு கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பார் என்று சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே படத்தில் இடம் பெற்ற "உருகிடும் வேளையிலும்" பாட்டை எங்கேயும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஜேசுதாஸின் விருத்தத்தைத் தொடர்ந்து எஸ்.ஜானகி பாடியிருப்பார். ஒரு பழைய திரியில் இந்த லிங்க் கிடைத்தது.
http://www.tfmpage.com/cgi-bin/strea...td/urugidum.rm
ஹிந்தோளம் .
உங்கள் அத்தை பெண் ,நீங்கள் வருவதறிந்து ,ஒளிந்து கொண்டு கொண்டு விளையாட்டு காட்டுகிறாள். நீங்கள் அவளிருக்குமிடம் தெரிந்து,பின்னால் சென்று ,காதை திருகி குதூகலிக்கிறீர்கள். அப்போது உங்கள் மனம் படும் இன்ப பாட்டை ராகமாக்கினால் ,அதுவே ஹிந்தோளம்.ஆரம்பம் முதல் உற்சாகமாய் களை கட்டும் ராகம்.
ரிஷப ,பஞ்சமம் இல்லாத ஐந்து சுரம் கொண்ட (ஸ க ம த நி ஸ , ஸ நி த ம க ஸ ) கொண்ட சுலப சமதள ராகம்.இது pentatonic scale என்பதால் ,இந்த ராகத்தின் சாயல் கொண்ட இசை ,சீனா,இந்தோனேசியா முதல் பல நாட்டு பாடல்களில் நான் கண்டதுண்டு.(மோகனமும் அப்படியே). வெஸ்டேர்ன் முதல் நமது பண்டைய பண்கள் வரை இந்த சாயல் கொண்ட ராகங்கள் உண்டு.இதன் மூலம் நட பைரவியா ,அனும தோடியா என்று இன்றும் பட்டி மன்றம் உண்டு.ஹிந்துஸ்தானி மால் கௌன்ஸ் இதன் சகோதரன்.
சிறு வயதில் ராமர் சம்பந்த பட்ட எந்த பண்டிகை வந்தாலும் ,ஒரு கால் மணி நேரம் ஒரே பாடலுக்கு போய் விடும். கொஞ்சம் கடுப்பாகவே இருந்தாலும் போக போக இந்த நீ(ஈ ஈ ஈ ஈ )ண்ட பாடலில் சுவை காண ஆரம்பித்தேன். லவகுசா என்ற படத்தில் "ஜகம் புகழும் புண்ய கதை "(நடுவில் வேறு ராகங்களும் வரும்).
அடுத்த வீட்டு பெண் என்ற அஞ்சலியின் நகைச்சுவை சூப்பர் ஹிட் படம். அவர் கணவர் ஆதி நாராயண ராவ் கொடுத்த பல சூப்பர் ஹிட் பாடல்கள். மூலம் என்னவோ கல்யாணம் பண்ணியும் பிரும்மசாரி பட playback knot தான் என்றாலும் ஜாலிதான்.அதில் டி.ஆர் .ராமசந்திரன் (தங்கவேலு குரலுடன்) பாட்டு வாத்யாருடன் மோதும் சின்ன பாட்டு. பாட்டு வாத்யார் அவசரத்தில் கவிகளும் கண் பாடி விடுவார். படோசன் இதன் remake ."கண்களும் கவி பாடுதே"
அப்போது தெலுங்கு பட வாசனையில் நிறைய தமிழ் படங்கள்.சென்னை ராஜதானி பொட்டி ஸ்ரீராமுலுவினால் பிரியாத காலம்.சில classic பாடல்கள் ராவ் களினால் சுசீலா குரலில் வளம் பெறும் .அப்படி என்னை கவர்ந்த இளம் சுசீலா குரல் பாடல் "அழைக்காதே நினைக்காதே".
இந்த ராகத்தில் மற்ற பாடல்கள்.
ராஜ சேகரா மோடி செய்யலாகுமா,ராஜ தந்த்ரி நீயடா
என்னை விட்டு ஓடி போக முடியுமா- குமுதம்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்- கர்ணன்.
மனமே முருகனின் மயில் வாகனம்- M .S .பிள்ளை.
சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்.
பொத்தி வச்ச மல்லிக மொட்டு -மண் வாசனை.
மார்கழி பூவே மார்கழி பூவே- மே மாதம்.
ஹிந்தோளம் ஒரு மென்மையான ராகம். அத்தை பெண் காதைக் கூட மிருதுவாகத்தான் திருகணும்...
"பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்.. அதில் பஞ்சமம் கலந்தால் சுருதி பேதம்" அப்படின்னு ஒரு சுசீலா பாட்டு கூட இருக்கு இல்லையா ?
மலேஷியா வாசுதேவன் குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் மாதிரி பாடிய "ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே" பாட்டும் "சின்னப்பூவே மெல்லப் பேசு" படத்தில் வரும் "என்னடா காதல் இது" பாட்டும் கூட இதன் சாயல்தானே... Spb & ஜானகி சங்கராபரணத்தில் ( படத்தின் பேர்தான் ) பாடிய "சாமஜவரகமனா" சரிதானா ?.
பஜரே கோபாலம் என்ற பாடலைக் கேட்டுக்கொண்டு கண்ணை மூடினால் கோபால் வந்து இன்னும் விஷயங்கள் சொல்லுவாரோ ?
http://www.youtube.com/watch?v=EvPyaIAQ2io
இந்தப் பாடல் ஹிந்தோளம் தானே
Manapandhal in telugu was Intiki deepam illale (Sarojadevi & EV saroja repeated their roles while NTR played Asokan's role and JAggayya played SSr's role)
here is the same song but by NTR .. what a difference between NTR & Asokan...
https://www.youtube.com/watch?v=3mfhpVTOrJo
ராஜேஷ் சார்,
மதியப் பணி இப்போதுதான் முடிந்தது. நல்ல பதிவுகளை தந்துள்ளீர்கள். நன்றி!
நம் ராஜாத்தி பாடக்கிக்கு வந்து விடுவோம்.
அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.
'தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள்
பொன்வண்டுக் கண்கள்
ஜில்லென்று நீராட ஆடு'
எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S7e7oEdIA_A
இன்னொரு அற்புதமான பாடல் 'ஜிம்போ' படத்திலிருந்து. வெகு ஜோர். இளங்குருத்துக் குரல்.
'அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோரு நான் பார்த்து நின்றாச்சு'
இளமையான குரல். இளநீர் போல சுவை. தேன் லட்டுக் குரல்.
http://www.youtube.com/watch?v=reRmk-XUV6o&feature=player_detailpage
Vasu ji,
AAm arumaiyana padalgal avar ninaivum, en nenju unnai agaladhuu my all time favourite
ippo kooda iphonela adhan kettukondirukkiren
naanum kettukitte padukkiren. G.N Rajesh sir.
Good Night Vasu ji. Andha JAmuna paatu ketteengala.... Romba kashtamana paatu ... PS summa pattaya kelappiruppaanga
kandippa ketkiren rajesh sir.. athai vida enna velai? kettuttu soldren.
நினைவில் நின்ற பசுமையான பல பாடல்கள் - இது வரை கேட்டிராத பாடல்கள் என்று திரியில்'' விரும்பி கேட்டவை ''
''நினைவூட்டல் பாடல்கள் ''- என்று நண்பர்கள் பதிவிடும் பாடல்களும் அதற்கான விளக்கமும் , உடனுக்குடன்
கருத்துக்கள் பரிமாற்றம் - பாட்டுக்கு பாட்டு என்று புதுமையாக திரி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது .
என்னுடைய இன்றைய துவக்க பாடல் - என்கடமை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்
''மீனே மீனே மீனம்மா ''- இசை அரசியின் குரலும் - மெல்லிசை மன்னர்களின் இசையும் மனதை கொள்ளை கொண்ட
பாடல் .
http://youtu.be/Nr86B4RpR7o
இன்றைய ஸ்பெஷல் (43)
சிறு வயது முதற்கொண்டே ஆச்சார அனுஷ்டானங்களில், தெய்வ பக்தியில் ஊறிப் போய் இருக்கும் ஒரு பிராமண குடும்பப் பெண் திருமணம் ஆனாலும் தாம்பத்யத்தில் நாட்டமில்லாமல் குழந்தை போல நடந்து கொண்டு அவள் கணவனை அவளை அறியாமலேயே இம்சிக்கிறாள். கணவன் ஆசையுடன் நெருங்கும் போதெல்லாம் நெருப்பாய்க் கொதிக்கிறாள். தீட்டு, பூஜை புனஸ்காரம் என்று தட்டிக் கழிக்கிறாள்.
இதே போல இளமை உணர்ச்சிகளுடன் கனவு காணும் இன்னொருத்தி தாம்பத்யத்தில் அதிக விருப்பமில்லாத ஒரு ஓவியனை மணந்து விரகதாபத்தில் தவிக்கிறாள்.
பாதிக்கப்பட்ட இரு ஜோடிகளில் அங்கே கணவனும், இங்கே ஓவியன் மனைவியும் தங்கள் விரகதாபத்தை இப்பாடலின் வழியே பரிதாபமாக வெளிப்படுத்துகிறார்கள். .
http://udhayamgold.files.wordpress.c...30varusham.jpg
ஆச்சார மனைவி பாத்திரத்தில் சுமித்ராவும், அவள் அன்புக்கு எங்கும் கணவனாக கமலும், செக்ஸ் நாட்டமில்லாத ஓவியன் ரோலில் விஜயகுமாரும், விரகதாபத்தில் துடிக்கும் அவர் மனைவியாக 'படாபட்' ஜெயலட்சுமியும் நடித்த அழகான ஓவியம் இந்த 'மோகம் முப்பது வருஷம்'. ஆனந்த விகடனில் வெளியாகி லட்சக் கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டிய கதை.
இப்படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட கீழ்க்காணும் லிங்கை சொடுக்குங்கள். முழு விவரமும் கிடைக்கும்.
http://udhayamgold.wordpress.com/201...athu-varusham/
விஜயபாஸ்கரின் அற்புதமான இசையில் பாலாவும், வாணிஜெயராமும் மிக மிக அற்புதமாகப் பாடும் அபூர்வமான ஒரு பாடல். அவ்வளவு இனிமை. ஓர் ஆண்மகனின் விரகதாப வெளிப்பாடுகளை பாலாவைத் தவிர இவ்வளவு நளினமாக யாராலும் தர முடியுமா என்பது சந்தேகமே.
வாணி ஜெயராமும் அற்புதம்.
ராஜேஷ் கூறுவது போல் விரகதாபங்களை விரசமில்லாமல் கண்ணியமாய் வெளிப்படுத்தும் பாடல்.
மிக அதிகமாக என்னைக் கவர்ந்த மத்தியக் காலப் பாடல்களில் இது முக்கியமானது.
http://i.ytimg.com/vi/c4uh5Jd4qvs/hqdefault.jpg
"ம்..சும்மா இருங்க தூக்கம் வருது ' (சுமித்ரா வெறுப்பு)
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம் (கிளி ரிப்பீட்டு)
புண்ணியமா புருஷார்த்தமா
சீதையிடம் ராமன் காணாததா
தேவியரின் வாழ்வில் இல்லாததா
ராதையிடம் கண்ணன் நாடாததா
ராசலீலை என்ன கூடாததா
உலகில் ஒரு பாகம்
உறவு கொள்ளும் தாகம்
புண்ணியமா புருஷார்த்தமா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
சும்மா இரும்மா... don 't disturb me
அடடா... போய்த் தூங்கு (விஜயகுமாரின் நாடாமை பேச்சு)
என் மனதை நானேதான் சொல்வதா
ஏக்கமென்னவென்றே நான் சொல்வதா
ஓவியத்துப் பெண்மை உயிர் கொள்ளுமா
உறவு இல்லப் பெண்மை துயில் கொள்ளுமா
கூட்டறவு இன்பம்
கேட்டுப் பெறும் துன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ஆண்மனது இங்கே அனல் கொண்டது
அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது
பெண் மனது இங்கே தணல் கொண்டது
தேங்கி விட்ட நாணம் தடை கொண்டது
நீந்தி வரும் வெள்ளம்
தாங்கிப் பெறும் உள்ளம்
புண்ணியமா புருஷார்த்தமா.
ம்..
சங்கீதம் ராகங்கள் இல்லாமா
சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா
காதல்... மோகம்... இன்பம்
புண்ணியமா புருஷார்த்தமா
ஹாங்...ஹூம். (பாலா சிணுங்கல்)
http://www.youtube.com/watch?v=c4uh5Jd4qvs&feature=player_detailpage
இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )
கன்னட கதம்பம் தொடர்ச்சி
வாசு ஜி உங்களுக்காகவே....
அக்கமாதேவி என்ற பெண் கவி அவரது வரிகளை வீராங்கனை கிட்டூரு சென்னம்மா பாடுவதாக அமைந்த பாடல்
பி.ஆர்.பந்துலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் “கிட்டூரு சென்னம்மா” .. சென்னம்மா வேடத்தில் சரோஜாதேவி என்ன அழகு. பிரமாதமாக நடித்திருப்பார்
டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் இசையரசியின் குரலில் என்றுமே நம்மை மனம் மகிழ செய்யும் பாடல்
மெய் சிலிர்க்கும்
இதோ
http://www.youtube.com/watch?v=JLAtfq9iMmE
சரோவின் இன்னொரு அருமையான பாடல்
மல்லமனா பாவடா ( நமது பெண்ணின் பெருமையின் கன்னட வடிவம் புட்டண்ணாவின் இயக்கம்) .. இசையரசியின் உருகும் குரலில் விஜயபாஸ்கரின் இசையில் இதோ
http://www.youtube.com/watch?v=MZO0KZQpSYo
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/a/Aada%20Vantha%20Deivam/
நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்...
ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இசையரசியின் இனிமையான குரல் வளத்திற்கு மற்றோர் சான்று...
பாடல் வரிகள் காதலின் மகத்துவத்தைக் கூறும் பாடல்...
பொங்கும் பூம்புனல்
ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்களில் சில சமயம் ஒரே மாதிரி இசையமைப்பில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் பாடலின் சிறப்பு மற்றும் குறைந்ததில்லை.
கல்யாண பரிசு படத்தில் ஆசையினாலே மனம் பாடலை நினைவூட்டும் இந்தப் பாடல் அன்புக்கோர் அண்ணி திரைப்படத்தில் இசையரசியின் குரலில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். கேளுங்கள்.. கேட்டு மெய்மறந்து விடுங்கள்..
தங்கத் தாமரை ஒன்று
http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/
பொங்கும் பூம்புனல்
இந்த பெண்ணுக்கு பச்சை கலர் தான் பிடிக்குமாம். குழந்தை பச்சை சட்டை போடும் இந்த நாள் நல்ல நாளாம்...
கேளுங்களேன்..
அன்புக்கோர் அண்ணி படத்தில் இசையரசியின் மெய் மறக்க வைக்கும் பாடல் நம்மை உருக வைக்கும் பாடல்...
சிட்டு மொட்டு பாப்பா
http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/
ஏ.எம்.ராஜா இசை
பொங்கும் பூம்புனல்
கோவிந்தராஜுலு நாயுடு தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அதிகம் பேசப்படாத சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். ஒரு நாள் முழுதும் ஒதுக்கி இவர் இசையமைத்த பாடல்களைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கலாம்.
இன்றைய பாடல் ப்ரியா சுப்ரமணியத்தின் புண்ணியத்தால் இந்தத் தலைமுறையினரிடம் பரவலாக் சென்று சேர்ந்ததற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.
பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம் பெற்ற சொக்குதே மனம்.. உங்களுக்காக..
http://www.inbaminge.com/t/b/Baghdadh%20Thirudan/