http://i67.tinypic.com/1zeld95.jpg
Printable View
நன்றியுடன் முத்தையன்..
http://i67.tinypic.com/2i8ktmv.jpg
ஐரீன்,
தாங்கள் சொன்னது போல,என் விண்ணப்பத்தை ஏற்று மேலான பதிவை துவங்கியதற்கு மிக்க நன்றி.
ஆனால் ,நீங்கள் எழுதுவது நடிகர்திலகம் என்ற உலக நடிகரை பற்றி, அவருடைய மிக சிறந்த படங்களில் ஒன்றை பற்றி என்பதை நினைவில் நிறுத்தி, தயவு செய்து ,நாங்கள் நினைக்கவும் விரும்பாதவற்றோடு,மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் ஒப்பீடு செய்வதை தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.
தங்கள் மேல் மதிப்பு கொண்டவன் என்ற விதத்தில்,இந்த விண்ணப்பத்தை மதிப்பது நம் நட்புக்கு உகந்தது என்று தெரிவித்து கொண்டு,வேண்டாத ஒப்பீடுகளை தவிர்க்குமாறு மீண்டும் கேட்டு கொள்கிறேன்.
வேண்டாத அந்த பகுதியை நீக்கி விடவும்.
1973 இல் வெளியான மூன்று முற்றிலும் மாறுபட்ட அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களின் ஆய்வுகள்.
ஐரீன்,
பார்த்தீர்களா?வீண் குழப்பம் விளைவிக்க என்னை உபயோக படுத்தி கொண்டு,என் அபிப்ராயத்தில் மிக மிக தாழ்ந்து விட்டீர்கள். இன்னும் கூட உங்களுக்கு வாய்ப்பு உண்டு. நேர்மையானவர் என்று நிரூபிக்க.
எஸ்வி போன்றவர்கள் ,வேண்டாத இடத்தில் ,வேண்டாத விருந்தாளியாய் நுழைவதில் கை தேர்ந்தவர்கள்.
Mr Muthaiyan Ammu,
Thanks for the crystal & clear photos of NT in AOK.
நடிகர்திலகத்தின் உடல்மொழி:
நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.
---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.
---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
---புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"
---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
---நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!
--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.
---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)
--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.
---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
---ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.
---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.
---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.
---பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.
---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.
---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .
---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.
---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.
---வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.
---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.
---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.
"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:
---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?
--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?
---தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
--- "என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
---"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,
--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,
---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,
--அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
---பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
---தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.
--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!
---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..
---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்
---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..
பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.
கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.
தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.
எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .
சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .
தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.
உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.
அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.
அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்.
எங்கள் தங்க ராஜா- 1973.
நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.
இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.
ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.
இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)
ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.
ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.
உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..
வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.
அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.
வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.
கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.
கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.
சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.
முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.
சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.
எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.
இனி நடிகர்திலகம்.
அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)
பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.
வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.
படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.
சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).
தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)
முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).
மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .
கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .
போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.
Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.
எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.
கெளரவம்-1973
கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .
ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?
நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?
தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?
தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?
திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?
ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.
இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.
ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.
ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.
மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.
மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.
நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.
குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.
இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.
கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.
அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!
நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.
நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.
ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.
கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.
இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.
ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....
கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?
ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.
நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
கோபால்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது உங்களுக்கு இருக்கும் எதிர்ப்பை உங்களோடு வைத்து கொள்ளுங்கள் .வீணாக மற்ற பதிவாளர்களுக்கு கட்டளை இடவும் வேண்டாம் . கெஞ்சவும் வேண்டாம் . கிண்டலும் வேண்டாம் . கேலியும் வேண்டாம் .
புரிந்து கொள்ளவும் நண்பரே .
எஸ்வி,
இதை உங்கள் திரியில் வந்து சொல்லி,நீங்கள் எதிர்த்தால் ஞாயம். இது எங்கள் பிரத்யேக திரி. இங்கு எது எங்கள் சுவற்றை அலங்கரிக்க வேண்டும், எந்த குப்பைகள் கொட்ட பட கூடாது என்று சொல்லும் உரிமை,கடமை எங்களுக்கு உண்டு.
கோபால்
மையம் பொதுவான திரி .உங்கள அலங்காரம் குப்பை என்று நான் சொல்லமாட்டேன் .உங்கள் மனதில் இருக்கும் குப்பைகளை முதலில் அகற்றவும் .
ராஜபார்ட் ரங்கதுரை -1973.
ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.
முதலில் கதை பயணிக்கும் திசைகள்......
ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.
ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.
ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).
ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)
இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.
அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.
ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.
அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.
தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .
தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....
நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).
அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.
பலவீனம் என்றால்,
அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .
இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.
குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.
மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.
நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
சோழியன் குடுமி சும்மா ஆடாதே ன்னு பாத்தேன்.....!!!!
நடிகர் திலகம் அவர்களை பற்றி தான் எழுதுவதாக பதிவு செய்ததாகக் ஞாபகம் !
அன்பேவா காட்சியமைப்பும் உயர்திரு மக்கள் திலகம் அவர்களின் அறிமுகம் வேறு முகம் !
புதிய பறவை காட்சியமைப்பும் உயர்திரு நடிகர் திலகம் அவர்களின் அறிமுகமும் வேறு ஒரு முகம் !
இரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!
இரெண்டாம் பாகம் பதிவு செய்யும் முன் உங்களுடைய ஒப்பீடுகளை முதலில் ஒப்பீடு செய்து பதிவிடவும் !
தாங்கள் கோடிட்டு கூறியதற்கும்... காட்சிக்கும் சம்பந்தமே இல்லாத ஒப்பீடுகளை தவிர்க்கவும் திரு ஐரீன் !
நன்றி !
ஆஹா !
என்ன அற்புதமான , ஒரு கலையான, களையான, தேஜஸான முகம் !
திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் !
உலகில் உள்ள அனைத்து முகங்களை வைத்தாலும் .....இந்த திருமுகத்திர்க்கு ஈடும் இணையும் உண்டோ ....யாம் அறியோம் பராபரமே !
முகத்தை பார்த்தாலே அந்த கலைவாணியின் அருள் முப்பெரும் தேவியரின் அனுக்ரஹம் இவருக்குள் தாண்டவமாடுவது நன்கு விளங்குகிறது !
Thanks so much senthilvel sir
கோபால் சார்
வணக்கங்கள் !
மேற்கூறிய உங்களுடைய விமர்சனம் படித்தேன் !
விமர்சனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு பொது நியதி அடிப்படையில் மட்டுமே உங்களுடைய இந்த விமர்சனத்தை பார்க்கமுடியும் !
காரணங்கள் பின்வருவன :
1) ஒரு திரைப்படம் ஓடும் நேரம் இரேண்டேகால் முதல் இரேண்டரை மணிநேரம், பொதுவாக. இரேண்டரை மணிநேரம் என்று வைத்துகொண்டால் கூட நீங்கள் கூறும் முறையில் கதைகள் அமைந்தால் அது கிட்டத்தட்ட நாலு மணிநேரம் தாண்டும் !
2) ஒரு நாடக கலைஞன் பால்ய வயது தொட்டு வளர்ந்து பெரியவன் ஆகி திருமணம் முடிந்து வயாதாகும் வரை ஒரு திரைப்படம் எடுக்கவேண்டுமானால் நாலுமணிநேரம் போதாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் உங்கள் விமர்சனம் அமையவேண்டும் !
3) இந்த இரண்டு மணிநேரத்தில் கதாநாயகனின் நடிப்பு ஆளுமை, மற்ற நடிகர்களுக்கு நடிப்பில் சமவாய்ப்பு வரும் வகையில் பாத்திர படைப்பு, கொஞ்சம் ஹாஸ்யம், நல்ல இசை, செவிக்கினிய பாடல்கள், இடம் இருந்தால் ஒரு சிறு கைகலப்பு கொண்ட சண்டைகாட்சி, சிறிது விறுவிறுப்பு இவை அத்தனையும் ஒரு திரைப்படத்தில் இரேண்டரை மணிநேரத்தில் கொண்டுவரவேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் முதலில்.
4) பெரிய இயக்குனர்கள் என்று மாயையில் வாழ்ந்த திரு பாலச்சந்தர், பாரதிராஜா மற்றும் சிலர் எடுத்த சிறப்பான படங்கள் என்று போற்றி புகழப்பட்ட படங்களில் கூட 60 சதவிகிதம் மேல் உங்கள் பாணியில் கூறவேண்டும் என்றால் ஓட்டை உள்ளது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் !
இரேண்டேகால் மணிநேரத்தில் மக்களை படத்தோடு ஒன்றிவிடவைத்தது ராஜபார்ட் ரங்கதுரையின் மிகபெரிய சாதனை. ஆகையால்தான் 200 தொடர் அரங்கு நிறைவு அனைத்து திரை அரங்கிலும் சாதியமாயிற்று !
சமீபத்தில் வெளிவந்த சித்தார்த் நடித்த காவிய தலைவன் படம் சென்று பாருங்கள்...இதே ராஜபார்ட் ரங்கதுரை எப்படி இவர்கள் சின்னாபின்ன படுத்தியிருக்கிறார்கள் என்பது நன்கு விளங்கும் !
உங்கள் விமர்சனத்திற்கு நான் தரும் மார்க் 0. முதலில் திரைக்களத்தை அதன் நேரத்திற்கு ஏற்ப எப்படி அமைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனியாவது விமர்சனம் எழுத முயற்சி மேற்கொள்ளுங்கள் !
உங்களுடைய விமர்சனம் உங்கள் உரிமை என்ற வரையில் ஒத்துகொள்ளபடுகிறது ...அவ்வளவுதான் !
The content of your review is just falling flat !!!
Rks
புதிய பறவை திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர்கள் கதாபாத்திரம் அப்படி அமைக்கபட்டவிதம் என்று கூறினாலும்....
ஒரு COSMOPOLITAN BODY LANGUAGE ....MANNERISM ....BEHAVIOUR ....ETTIQUETTE ....முக்கிய இடங்களில் ஆங்கிலத்தில் நடிகர் திலகம் உரைக்கும் பாங்கு ...!
உதாரணம் ...சௌகார் அவர்களிடம் நடிகர் திலகம் அவர்களை அறிமுகபடுத்தும் காட்சி..
MEET MR GOPAL ...எ MULTI MILLIONAIRE ....என்றவுடன்...சௌகார் ..OH ...PLEASED TO MEET YOU என்று உரைப்பார் ..!
நடிகர் திலகம் அவர்கள் உடனே ....SO AM I ! என்று பதில் உரைப்பார் !
பிறகு சௌகாரை DROP செய்ய முனையும்போது ..சௌகார்...thankyou என்பார் ...உடனே நடிகர் திலகம் "PLEASURE IS MINE ! என்பார் !
நடிகர் திலகம் ENGLISH PRONUNCIATION ஒரு ஐரோப்பா மற்றும் COSMOPOLITAN ஸ்டைல் தொனிக்கும் !
வேறு எவரிடமும் அது இன்றுவரை தொணித்ததாக எனக்கு தெரியவில்லை ! அதுதான் நடிகர் திலகம் !
தாரை தப்பட்டை
https://upload.wikimedia.org/wikiped...0px-Tharai.jpg
பாலா
http://www.myfirstshow.com/newsimage...0bala_news.jpg
இளையராஜா
http://img01.ibnlive.in/ibnlive/uplo...5/05/rajah.jpg
ஒரு கண்ணோட்டம்...
....
இது விமர்சனமாகக் கருதுவதை விட ஒரு ரசிகரின் கண்ணோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
விமர்சனமாக நினைப்பவர்களுக்கு... துக்ளக் பாணியில் ... ஓர் எச்சரிக்கை..
இப்படித்தான் ஒரு படம் ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் ஒரு படம் பயணிக்க வேண்டும்.. இப்படித்தான் ஒரு படம் முடியவேண்டும் என்கிற அணுகுமுறையை முற்றிலும் மூட்டை கட்டி வைத்து விட்டு வந்தால் மட்டுமே இப்படத்தை ரசிக்க முடியும்.
முதலில் உங்களுக்குத் தோன்றலாம்.. நடிகர் திலகம் திரியில் இந்தப் படத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும்... போகப் போக நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..
சன்னாசி (சசிகுமார்) ஒரு நாட்டுப்புறக் கலைஞர். பல கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். மிகப் பெரிய கலைஞரின் புதல்வரும் கூட. இவருடைய தந்தை சாமிப்புலவர் (ஜி.எம். குமார்) மிகப் பெரிய பாடகர் மற்றும் தவில் வித்வான். தன் வித்தையை உண்மையிலேயே தெய்வமாக மதிப்பவர். சுயமரியாதை மிக்கவர். தன் கலையை விலைக்கு அளிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்.
...
ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா என்ற பழமொழிக்கேற்ப, வயிற்றுப் பிழைப்பிற்காக வணிகரீதியிலாக தன் கலைத் திறமையைப் பயன் படுத்தி குடும்பம் நடத்துகிறான் சன்னாசி. அவனுடைய அத்தை மகள் சூறாவளி (வரலக்ஷ்மி சரத்குமார்) சன்னாசியைத் தன் கணவனாக வரிப்பவள். சிறந்த நாட்டிய நங்கை. அதே சமயம் தன் மாமனான சாமிப்புலவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள்.
சூறாவளியின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் கருப்பையா (சுரேஷ்) அடிக்கடி சன்னாசியைச் சுற்றிச் சுற்றி வந்து அவளைப் பற்றி விசாரிக்கிறான். அவனுடைய நோக்கம் தெரிந்த சன்னாசி அவனை அடித்து விடுகிறான். என்றாலும் கருப்பையா சூறாவளியின் தாயாரை சந்தித்து அவள் மனதைக் கவர்ந்து அவள் மூலமாக சூறாவளியை மணக்க அடிபோடுகிறான்.
சூறாவளியின் ஆட்டத்திறமையைப் பாராட்டி அவர்களுடைய தெரிந்த வட்டத்திலுள்ள சிலர் அவர்களுக்கு அந்தமானில் வாய்ப்புத் தேடித் தருகின்றனர். போன இடத்தில் இவர்களுடைய ஆட்டத்தை அனைவரும் ரசித்துப் பாராட்ட, ஏற்பாடு செய்தவர்களில் சிலர் சூறாவளி மற்றும் குழுப் பெண்களை ரசிக்கின்றனர். அவர்களை காட்டும் படி சன்னாசியிடம் கேட்க, அவனும் அவர்களுடைய உள்நோக்கம் புரிந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அந்தப் பெண்களின் அறைக்கு அழைத்துச் செல்கிறான்.
இவர்களுடைய உள்நோக்கம் புரிந்த பெண்கள், குறிப்பாக சூறாவளி, கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள். அவர்களில் ஒருவனை நையப் புடைத்து விடுகிறாள். அவர்களும் கடும் கோபமுற்று இவர்களுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்வதோடு, பயண டிக்கெட்டுகளையும் கிழித்துப் போட்டு விடுகின்றனர்.
நிகழ்ச்சி ரத்து, டிக்கெட் இல்லை போன்ற காரணங்களால் குழுவினருக்கு மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஏதாவது சம்பாதித்தால் தான் ஊருக்குத் திரும்ப முடியும் எனத் தவிக்கும் போது ஒரு கட்டிட ஒப்பந்தக்காரர் இவர்களுக்கு வேலை வாங்கித் தருகிறார். கட்டிட வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விபத்தால் சூறாவளியின் காலில் அடிபட்டு நகம் பெயர்ந்து விடுகிறது. இதன் நடுவில் களேபரம் ஏற்பட்டு முதலாளியின் கோபத்தின் காரணமாக ஒப்பந்தக்காரர் இவர்களைத் துரத்தி விடுகிறார்.
இந்தக் காரணங்களால் மிகவும் மனம் வருத்தமுற்ற சன்னாசி உண்ணாமல் உறங்காமல் அப்படியே அமர்ந்து விடுகிறான். இதைக் காணும் சூறாவளியும் மனம் வருந்தி, தன் கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆடுகிறாள். இந்த அற்புதமான ஆட்டத்தினால் அவர்களுக்குத் தேவையான பணம் கிடைத்து விடுகிறது. இதனால் மனம் மாறும் சன்னாசிக்கு, அவள் மேல் பதிலுக்கு அன்பும் பாசமும் அதிகமாகிறது. அவளை மருத்துவ மனையில் சிகிக்சை பெற வைத்து திரும்புகிறார்கள்.
இதன் நடுவில் சூறாவளியின் தாயார் கருப்பையாவின் பேச்சில் மயங்கி சன்னாசியிடம் சூறாவளியை கருப்பையாவுக்கு மணம் முடித்து வைக்க வாக்களித்து விட்டதாக்க் கூறி அவனுடைய சம்மத்த்தை வாங்கி விடுகிறாள். அதன் படி கருப்பையாவுக்கும் சூறாவளிக்கும் திருமணம் நடக்கிறது.
மீண்டும் குழுவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட, சன்னாசியின் நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு பிரபலமான பெண்மணியை அதிக பணம் கொடுத்து ஆட அழைக்கின்றனர். அவளும் ஒப்புக் கொள்கிறாள். அந்த நேரத்தில் ஒரு சாவுக்கு இசையும் நடனமும் வேண்டும் என ஒரு கோரிக்கை வர பணத்திற்காக அதை ஏற்றுக் கொள்ளும் சன்னாசி அந்தப் பெண்மணியை ஆடவைத்து நல்ல பணம் சம்பாதிக்கிறான்.
தன் மகன் இப்படி சம்பாதிப்பதை சற்றும் விரும்பாத சாமிப்புலவர் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வார்த்தை தடிக்க, தந்தை என்றும் பாராமல் சன்னாசி மிகவும் கடுமையாக பேசி விடுகிறான். இதனால் சாமிப்புலவர் மிகவும் மனம் நொடிந்து போகிறார். என்றாலும் சன்னாசியும் மனம் நொடிந்து போகிறான்.
இந்த நேரத்தில் சாமிப்புலவனுக்கு ஒரு வெள்ளைக்கார துரை வீட்டில் பாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சாமிப்புலவனின் பாட்டு வெள்ளைக்காரனை மிகவும் மனம் உருக வைத்து விடுகிறது. ஏராளமான பணமும் அணிகலனும் அளிக்க முன் வருகிறான். ஆனால் சாமிப்புலவனோ அதை மறுத்து விடுகிறான்.
தன் மகன் சன்னாசியிடம் இதை பெருமையோடு சொல்லும் சாமிப்புலவன், நான் ஜெயிச்சிட்டேண்டா என்று சொல்லி தலை சாய்கிறான். அதுவே அவனுடைய கடைசி நேரமாகிறது.
அந்த நேரத்தில் சூறாவளியின் தாயாரை சந்திக்கும் சன்னாசி அவளைப் பற்றிக் கேட்க, மனக்குமுறலோடு துக்கம் தொண்டையடைக்க நடந்த்தை சொல்கிறாள் சூறாவளி. பல நாட்களாக சூறாவளியைக் காணாததால் கலெக்டரின் உதவியாளர் என கருப்பையா சொன்னதை நம்பி கலெக்டரிடம் விசாரிக்க, அவரோ அப்படி யாரும் தனக்கு ஓட்டுநர் கிடையாது என சொல்லி அனுப்பி விட, மகளைக் காணாமல் பரிதவிக்கிறாள் சூறாவளியின் தாயார். சன்னாசியோ இதை ஏன் முன்பே சொல்லவில்லை என கடிந்து கொள்கிறான்.
எப்படியோ சூறாவளியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விசாரிக்கும் சன்னாசியிடம் சூறாவளி தன் அனுபவங்களை சொல்கிறாள். முதலிரவில் கணவனுடன் செல்பவள் காலையில் விழித்துப் பார்க்கும் போது படுக்கையில் வேறு யாரோ இருப்ப்தைப் பார்த்து திடுக்கிடுகிறாள். அவனை நன்றாக அடிக்கிறாள். அவனும் அலறி அடித்து ஓடுகிறான். இதைப் பார்த்த கருப்பையா ஓடி வந்து அவளை மிதித்து சித்திரவதை செய்கிறான். முந்தைய இரவில் அவன் போதைப் பழக்கத்திற்கு அடிமைப் பட்டவனாக காட்டப்படுகிறான். இப்போது இதுவும் சேர்ந்து கொண்டதால் சூறாவளி செய்வதறியாது திகைக்கிறாள். அவளை அடித்து உதைக்கும் கருப்பையா அவளை ஒரு அறையில் அடைத்துப் பூட்டி விடுகிறான். சிறிது நேரம் கழித்து மெதுவாக கதவின் இடுக்கு வழியாகப் பார்க்கும் சூறாவளி திடுக்கிட்டுப் போகிறாள். கருப்பையா ஒரு ஒரு விபசார தரகன் என்பதும் அது மட்டுமின்றி பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவன் என்றும் தெரிந்து கொள்கிறாள். அந்தப் பெண்களை சித்ரவதை செய்து சம்மதிக்க வைக்கும் கருப்பையா எதற்கும் தயங்காதவன் என்பது அவளுக்கு புலனாகிறது.
இந்த தருணத்தில் மிகப் பெரிய செல்வந்தர் ஒருவருக்கு ஒரு குழந்தை வாரிசு வேண்டும், அதுவும் அவருடைய கருவிலிருந்து உருவாக வேண்டும் அதற்கு ஒரு வாடகைத்தாய் வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஒரு ஜோதிடர் கருப்பையாவை அணுகுகிறார். அவன் காட்டிய பெண்களில் அந்த செல்வந்தர் சூறாவளியைத் தேர்வு செய்கிறார். வலுக்கட்டாயமாக அவளை அந்தத் திட்டத்திற்கு உட்படுத்தி பணம் வாங்கி விடுகிறான் கருப்பையா.
ஜோதிடர் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என கண்டிப்பாக சொல்லி விடுகிறார்.
இதற்கேற்ப ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்யும் கருப்பையாவிடம் டாக்டரும் செவிலியரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தக் குழந்தையை எடுக்க முடியுமே தவிர, ஜோதிடர் சொல்லும் நேரத்தில் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் ஏதேனும் ஒரு உயிர் நிச்சயமாக ஆபத்தை சந்திக்கும், இறக்கவும் நேரிடலாம் என எச்சரிக்கிறார்கள். இதனால் ஒரு சவக்கிடங்கு ஊழியர் மூலமாக, தாயார் இறந்தாலும் பரவாயில்லை, குழந்தையை அந்த நேரத்தில் எடுத்து விடவேண்டும் என கருப்பையா சொல்லி அதற்கு ஏற்பாடு செய்கிறான்.
இந்த சம்பவங்களை சன்னாசியிடம் சூறாவளி சொல்லும் போது கருப்பையாஅங்கே வந்து விடுகிறான். சன்னாசியும் கருப்பையாவும் அவனுடைய ஆட்களும் ஆக்ரோஷமாக போராடுகிறார்கள்.
முடிவை வெள்ளித் திரையில் காண்க என்கிற வழக்கமான பல்லவியை சொல்வதில் அர்த்தமில்லை. முழு கதையையும் கூறினால் தப்பில்லை. பலத்த அடியை வாங்கிக் கொண்டு, சூறாவளியைக் காப்பாற்றவேண்டும் என்கிற நோக்கத்தினால் மீண்டும் மீண்டும் கருப்பையாவின் ஆட்களுடன் போராடும் சன்னாசி ஒரு கட்டத்தில் கருப்பையாவை மாய்த்து விடுகிறான். சூறாவளியைக் காப்பாற்ற உள்ளே போகும் சன்னாசியை சவக்கிடங்கு ஊழியர் வழிமறிக்க, அவனையும் மாய்த்து விடுகிறான்.
அங்கோ சூறாவளி மாண்டு கிடக்கிறாள்.
அந்தக் குழந்தை சன்னாசியின் கைகளில் தொப்புள் கொடியோடு.
இயக்கம் பாலா என்கிற முத்திரையோடு படம் நிறைவடைகிறது.
தாரை தப்பட்டை - பாலா என்கிற மிகப் பெரிய இயக்குநரின் கிரியேடிவிடியின் புதிய பரிமாணம். அவருக்குள் இருக்கும் நடிகர் திலகம் இப்படத்தில் பாலாவின் ஆசை தீர வெளிப்பட்டிருக்கிறார்... அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார்..
சாமிப் புலவனின் பாத்திரப் படைப்பு சிக்கல் சண்முக சுந்தரத்தை வைத்து உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. என் உள்ளம் கோவில் என்கிற பாடல் ஒரு திருமுறையோடு இணைந்து ஒலிக்கும் காட்சியில் சாமிப்புலவரின் ஒவ்வொரு அசைவிலும் நாம் பாலாவின் உள்ளக்கிடக்கையைக் காண முடிகிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செதுக்கிய விதம் தில்லானா மோகனாம்பாள் நடிகர் திலகத்தின் குணாதிசயத்தையும் அதே சமயம், குங்கும்ம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடலில் நடிகர் திலகத்தின் தோரணையையும் மனதில் வைத்து படமாக்கி யிருக்கிறார் என்பது புலனாகிறது.
அதே போல தன் குழு உறுப்பினர்களுக்காக தன் கொள்கையில் இருந்து இறங்கி வரும் சன்னாசி அப்படியே ரங்கதுரையை நினைவூட்டுகிறார்.
அது மட்டுமின்றி மிகவும் பொருத்தமாக அதே சமயம் மாறுபட்ட கோணத்தில் தங்க பதுமை பாடலை பயன்படுத்தியிருக்கும் பாலாவின் துணிச்சலும் நம்மை வியக்க வைக்கிறது.
கடைசிக் காட்சியில் கையில் குழந்தையோடு சன்னாசி நிற்கும் காட்சியும் அதே போலத் தான் நடிகர் திலகத்தை நினைவூட்டுகிறது.
இளையராஜா என்கிற மிகப் பெரிய இசைக்கலைஞனை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மெல்லிசை மன்னருக்குப் பின் பின்னணி இசையிலும் ஈடு இணையற்றவராக விளங்கும் அவருக்கு இது 1000 வது திரைப்படம் என்பது மிகப் பொருத்தமான பேறு. மேற்கத்திய இசைக்கருவிகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதாகத்தான் இப்படத்தின் இசை நமக்குத் தோற்றுவிக்கிறது.
அத்தனை இசைக்கருவிகளும் பாரம்பரியமான தொன்மையான நமது நாட்டு இசைக்கருவிகளைக் கொண்டே படம் முழுதும் அவர் இசை மழை பொழிந்திருக்கிறார். எந்த இடத்தையும் தனியாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.
குறிப்பாக அவர் பாடிய என் உள்ளம் கோவில்.. உள் மனதில் புகுந்து நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்க வைக்கும் அற்புத அனுபவம்... இந்தப் படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி தனியாக ஒரு முனைவர் பட்டமே ஆய்வு செய்யலாம்.
படம் பார்த்தால் இது போன்ற படங்களைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தது தாரை தப்பட்டை.
தாரை தப்பட்டையோடு மக்கள் மிகப் பெரிய வரவேற்பை அளிக்க வேண்டிய முழுத்தகுதியும் பெற்றது பாலாவின் தாரை தப்பட்டை.
குறைகள் கண்டு பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முற்றிலும் ஒதுக்கி விட்டு ஒரு படைப்பாளியின் அணுகுமுறையில் இதை எழுதியிருக்கிறேன். என்றாலும் இவ்வளவு அருமையான நடிகையான வரலட்சுமிக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
தாரை தப்பட்டை - பின்னூட்டம்...
வரலட்சுமி சரியான தேர்வு - நடனப் புயலாக பின்னுகிறார்.
பாத்திரங்களின் தன்மையை சரியாக சித்தரிக்கும் நோக்கில் அவர்களுடைய உடை வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை குறுகிய நோக்கில் ஆபாசம் என ஒரே வார்த்தையில் கூறுவது. ஏற்கத்தக்கதல். வலுவில் திணிக்கப்படும் குத்தாட்டங்களில் இதைப் போன்று பல மடங்கு எக்ஸ்போஸ் செய்யப்படும் அளவிற்கு இதில் ஒரு சதவீதம் கூட திணிப்பு என சொல்ல முடியாது.
வன்முறை என சிலர் கூறலாம், அந்தக் குழுவினரின் ஆட்டத் தொழில் முறையின் காரணமாக இயல்பாகவே அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் வலு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சண்டைகள் இயல்பாகவே சற்று குரூரமாக அமைந்ததில் எந்தத் தவறுமில்லை. அது ம்டடுமின்றி அந்த நேரத்தில் போராடவேண்டும் என்கிற உத்வேகத்தில் அந்தப் பாத்திரம் சண்டையிடும் போது தானாகவே எதற்கும் துணியும் மனோபாவத்துடன் மோதும்.
உரையாடலும், ஒரு பாடல் காட்சியில் வரும் உரையாடல் கலந்த வரிகளும் உள்மனதில் அந்தந்த பாத்திரங்களில் இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே.
தங்கப் பதுமை பாடலைப் பொறுத்த மட்டில் மெட்டு மட்டுமே பெரும் அளவு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கேற்ப அந்தப் பாத்திரத்தின் சூழலுக்கேற்ப வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பாடல் காட்சியில் சகோதரனும் சகோதரியும் இணைந்து கூத்தாடுவதும், வெளிப்படையாகப் பேசுவதும் மக்கள் மத்தியில் எதிர்ப்பைப் பெறலாம். ஆனால் அதற்கான காரணத்தை அவன் கூறும் போது அந்தப் பாத்திரம் நியாயப்படுத்தப்படுகிறது.
இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் இளையராஜாவின் பின்னணி இசை .. அவருடைய தனி முத்திரையை ஆழமாகப் பதிக்கிறது.
http://i1146.photobucket.com/albums/...psstngi76x.jpg
கோவை மாநகரில் பாவ மன்னிப்பு திரைக்காவிய வெளியீட்டினையொட்டி அர்ச்சனா க்ரூப் சிவாஜி பக்தர்கள் வெளியிடும் பதாகையின் நிழற்படம்.
நன்றி டாக்டர் ரமேஷ் பாபு, கோவை.