The Hindu - Trichy - 23-06-2012
http://www.thehindu.com/news/cities/...cle3562285.ece
Printable View
The Hindu - Trichy - 23-06-2012
http://www.thehindu.com/news/cities/...cle3562285.ece
Dear Vasudhevan Sir,
Raja Stills super. Raja - Rajaathaan.
கோபால்ஜி,
நம்மகிட்டயே டபாய்க்கிறீங்களே... நீங்க கோச்சிக்கிட்டு போய்ட்டா அன்பு பம்மலாருக்கு ரெண்டு வேலை இல்லன்னுதான் நான் சொல்லுவேன். உங்க மெயில திரியில் பதிவு செய்யிறது பம்மலாருக்கு ரொம்ப ஈஸி. ஏன்னா ஒரு வரி ரெண்டு வரியை காப்பி, பேஸ்ட் பண்ணி திரியில் போடுறது ரொம்ப சுலபம்தானே அண்ணாச்சி!... என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு நெனைக்கிறேன். சொல்லுறத சொல்லிப்புட்டேன்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் ராஜ ரசனைக்கு மிக்க நன்றி! திருச்சி கர்ணன் நூறாவது நாளையொட்டி பள்ளி மாணவ மணிகளுக்கு அகராதிகள் வழங்கப் பட்டது மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். நன்றி!
Dear Gnanaguruswamy sir,
Thanks and very kind of u.
கர்ணன் இன் இமாலய வெற்றி, நமக்கு பெருமையை தருகிறதுஇதன் மூலம், அண்ணன் சிவாஜி இன் படங்கள் எல்லா காலத்துக்கும்
பொருத்தமாக, ஒரு போற்ற படகூடிய பொக்கிஷம் என்ற ஒரு கருத்து
இங்கே கர்ணன் மூலம் நிலை நாட்ட படிருக்கிறது
ஞான ஒளி கண்ட எங்கள் 'ஆண்டனி'
http://img823.imageshack.us/img823/1435/gnanaoli21.jpg
'ஞான ஒளி' சற்றே கவிதை நடையில் (நிழற்படங்களோடு)
http://3.bp.blogspot.com/_ZxB6aHS1OL...0/Goli0001.jpg
ஆண்டனி...
முரடன் ஆனால் முத்தானவன்
பாதிரியார் மேல் பக்தி உள்ளவன்...
மாதா கோவில் மணியடித்து
சனம் இறந்தால் சவப்பெட்டி செய்பவன்
கண்டதே காட்சி
கொண்டதே கோலமென
பாதிரியே தெய்வமென
பாங்காய் பணி செய்து வந்தான்
காதலித்தான் ஒரு பெண்ணை
கல்யாணமும் செய்தான் பாதிரி உதவியினால்
சொல்லொணா அன்புகொண்டு கணவன் மனைவி சொர்க்கத்தில் மிதந்தனர்
அன்பின் அடையாளமாக கர்ப்பம் தரித்தாள் மனைவி
பெண் குழந்தையை ஈன்று கணவன் முகம் பாராமல்
விண்ணுலகம் சென்று விட்டாள்.
துடித்தான் துவண்டான் ஆண்டனி
துன்பம் குறைத்தார் பாதிரி.
மகளை வளர்த்து மனக்கவலை சற்று மறந்தான்
பெண்ணைப் படிக்க வைக்க பெருமுயற்சி எடுத்தான்
பால்ய வயது நண்பன் லாரன்ஸ் வந்தான்
காவல்துறை அதிகாரியாய்.
கண்டுகொண்டான் சிறுவயது நண்பனை
களிப்புடன் நட்பைத் தொடர்ந்தான்
பாதிரிக்கு ஒரு லட்சியம்
பூண்டி மாதாவுக்கு ஒரு கோவில்,
மழலையர் கல்வி பயில ஒரு பள்ளி
பிணி தீர்க்க ஒரு மருத்துவமனை
பாதிரியின் மூன்று கனவுகள்
கனவுகளை நனவாக்க முடிவெடுத்தான்
தன் பெண் மூலம் நிறைவேற்ற உறுதியளித்தான்.
ஆனால்...
மகளோ மதிகெட்டாள் மானமிழந்தாள்
மாசு பட்டாள் காதலன் என்ற கயவனுடன்.
கண்டுவிட்டான் மகளை கயவனோடு படுக்கையில்.
கொலை வெறி கொண்டான்
கொடுவாள் எடுத்து கொன்று விடத் துணிந்தான்
தடுத்தான் லாரன்ஸ்
மூன்று உயிர்களையும் காத்தான் தோழன்
அதிகாரியாய் ஆண்டனி முன்னிலையில்
இருவருக்கும் தன் மோதிரத்தால் திருமணம் செய்து வைத்தான்.
கனவு சிதைந்ததே என்று கலங்கினான் ஆண்டனி
கனவை விட மகளின் கற்பு கவலையை அதிகமாக்கியது
கலங்கிய மனத்துடன் அவள் காதலன் வீடு சென்றான்
கண்மணிக்கு வாழ்வுப் பிச்சை கேட்டான்.
கெஞ்சினான் கால் பிடித்தான் கதறினான்
காதலனோ காமுகன் காலால் எட்டி உதைத்தான்
கண்டபடி பேசினான் உன் மகளுக்கு நான் மட்டுமா
என்று ஏளனம் செய்தான் எள்ளி நகையாடினான்.
பொறுத்துப் பார்த்த சிறுத்தை பொங்கி எழுந்தது
நரசிம்மம் ஆனது இழிசொல் தாங்காது இடியென தாக்கியது
ஒரே அடி மருமான் மாண்டான். அறியான் ஆண்டனி
தூக்கினான் உடலை கொண்டு வந்தான் பாதிரியிடம்
மகளும் உடன் இருந்தாள் மருமகன் பிணமாய்க் கிடந்தான்
உண்மை தெரிந்தது
விபரீதக் கோபத்தால் விதவை ஆக்கி விட்டான் தன் செல்வத்தை
எல்லாம் முடிந்தது
கையில் விலங்கு கண்ணெதிரில் லாரன்ஸ்
சிறைத்தண்டனையில் சிதில் சிதிலாய் போனது வாழ்க்கை
அடிபட்ட இடத்திலே மேலும் ஒரு கொடுவாள் வெட்டு
ஆம் மகள் மாண்டாள் என்ற செய்தி
ஒரே உறவும் பறி போனது இப்போது தெய்வம் மட்டுமே பாதிரி வடிவில்
பாதிரிக்கு முடியாத முதுமை தன்
பாலகனைப் பார்க்க ஆசை
வேண்டுகோள் விடுத்தார் லாரன்ஸிடம்
குரு கேட்டதால் தட்சணையைக் கொண்டுவந்தான்
தன் மனத்தை சிறை கொண்டவன்
சிறைக் கைதியாய் எதிரே
பாசமகனைப் பார்த்த மகிழ்ச்சி
பாழ்பட்டுப் போனதில் நெகிழ்ச்சி
சாகும் தருவாயிலும் தன் கனவை எண்ணி
ஆண்டனியின் கை பிடித்தபடி
ஆண்டவனை அடைந்தார்.
கடவுளுக்கு கல்லறை வெட்ட அனுமதி கேட்டான்
மறுத்தான் இன்ஸ்பெக்டர் நண்பன்.
கோபமுறுக்கால் அவனைத் தாக்கி
தப்பி ஓட்டமெடுத்தான் தந்தையின்
தங்கக் கனவை நிறைவேற்ற...
(இடைவேளை)
காதலி, பாதியாருடன் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00002.jpg
கூரையேறிக் காதல் டூயட் பாடும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00003.jpg
காதலி மனைவியாக
http://i1098.photobucket.com/albums/...naOli00004.jpg
அன்பான மனைவி
http://img196.imageshack.us/img196/1793/gnanaoli08.jpg
மனைவி இறந்த அதிர்ச்சியில் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00006.jpg
மனைவியின் சவப்பெட்டி அருகே கதறும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00007.jpg
ஒரே உறவான மகளுடன் ஆண்டனி
http://img214.imageshack.us/img214/4...naoli00014.png
உயிர் சிநேகிதன் லாரன்ஸுடன் ஆண்டனி
http://img690.imageshack.us/img690/3...naoli00016.png
அன்புடன்,
வாசுதேவன்.
நண்பர்கள் பாதிரியாருடன்
http://i1098.photobucket.com/albums/...naOli00008.jpg
மதியிழந்த மகள்
http://img839.imageshack.us/img839/18/gnanaoli16.jpg
http://i1098.photobucket.com/albums/...naOli00010.jpg
கயவனான காதலன்
http://img232.imageshack.us/img232/6898/gnanaoli27.jpg
http://i1098.photobucket.com/albums/...naOli00009.jpg
அதிர்ச்சியில் ஆண்டனி
http://img90.imageshack.us/img90/910...3231104wp6.jpg
அறியாமல் உயிர் பறித்த அதிர்ச்சியில் ஆண்டனி
http://img600.imageshack.us/img600/7290/gnanaoli33.jpg
சிறையில் இருந்து வந்து பாதிரியாரைப் பார்க்கும் ஆண்டனி
http://i1098.photobucket.com/albums/...naOli00011.jpg
ஞான ஒளி பெறும் ஆண்டனி
http://2.bp.blogspot.com/_ZxB6aHS1OL.../s1600/235.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ள பம்மலார் சார்,
இரண்டு நாட்களாக இண்ட்டெர்நெட் வேலை செய்யவில்லை. அய்யய்யோ... நம்ம பம்மலார் பாசமலர் ஆவணங்களை அள்ளித்தந்திருப்பாரே, அதைத்தொடர்ந்து என்னுடைய பணிவான வேண்டுகோளையேற்று (பம்மலார் அவர்கள் சொன்னதுபோல கட்டளை அல்ல) 'ராஜா'வின் வெற்றி பவனியை உலவ விட்டிருப்பாரே என்று ஆதங்கப்பட்டு இன்றைக்குத்தான் நெட் இணைப்பு சரியானதும் முதல்வேலையாக நான் செய்தது நமது நடிகர்திலகத்தின் திரிக்கு ஓடோடி வந்ததுதான்.
வந்து பார்த்தால்..... அடேயப்பா ஆவண மழையாகப்பொழிந்து தள்ளி விட்டிருக்கிறீர்கள்.
'பாசமலரின்' வாசம் கமழும் ஆவணப்பொன்னேடுகள் என்ன....
'ராஜா' வின் வெற்றி நடைக்கான சாதனைச்சரித்திரம் என்ன.....
தமிழகத்தை, குறிப்பாக சென்னையை கலங்கடித்த 'ஞான ஒளி'யின் காணக்கிடைக்காத வரலாற்று ஏடுகள் என்ன......
வாய்பிளந்து மலைத்துப்போய் நிற்பதைத்தவிர வேறொன்றும் தோன்றவில்லை. எனது வேண்டுகோளையேற்று 'ப்ரம்மாஸ்த்திரத்தை' என் கையில் தந்து, அதை மறந்து போகாமலும் இருக்க ஆசீர்வதித்த நவீன பரசுராமரே தங்களூக்கு எண்ணிலடங்கா நன்றிகள். இந்த ப்ரம்மாஸ்திரத்தில் என் நண்பரின் தவறான பிரச்சாரம் அழிந்து மண்ணாகப்போவது திண்ணம்.
சஸ்பென்ஸ் பதிவு என்றதும், என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கையில் எதிர்பாராத விதமாக 'ஞான ஒளி'யை வீசச்செய்து, திரியை ஒளிவெள்ளமாக்கி விட்டீர்கள். ஞான ஒளியின் சென்னை விநியோகஸ்தர்களான ஜெயராமன் பிக்சர்ஸார், ஏதோ கடனே என்று விளம்பரம் செய்யாமல், டிஸைன் டிஸைனாக யோசித்து, யோசித்து, ரசித்து ரசித்து புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்துள்ளனர். குறிப்பாக 'ஞான ஒளி' வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஓடிக்கொண்டிருந்த படங்களின் பட்டியலை விளம்பரத்திலேயே தந்தது புதுமையான உத்தி மட்டுமல்ல, காலத்திற்கும் அழியாத ஆவணமும் ஆகும். இதுபோல எந்த நடிகரின் படங்களாவது சென்னையில் ஒரே நேரத்தில் 80 சதவீத திரையரங்குகளை ஆக்ரமித்தது உண்டா என்று சவால் விடுகிறோம். பதில் 'இல்லை'யென்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. 1972 - நடிகர்திலகத்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் கோகினூர் வைரம் அல்லவா.
தாங்கள் தந்த பாசமலர், ராஜா, ஞான ஒளி வெற்றி ஆவணங்களில் சென்னை சாந்தி தியேட்டர் இல்லையென்பது கூடுதல் ஆனந்தம், திருப்தி, மகிழ்ச்சி.
ஒவ்வொரு நண்பரின் பதிவுகளையும் தனித்தனியே நினைவுகூர்ந்து பாராட்டுவதும், நன்றி சொல்வதும் தங்களின் தனிச்சிறப்பு. உங்கள் மந்திர ஜாடிக்குள் இன்னும் என்னென்ன அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.
நீங்கள் வாழிய பல்லாண்டு.
கலக்கல் வாசு அவர்கள் கவிஞர் வாசுவாகவும் கலக்குகிறாரே....
அவர் 10 வரி எழுதினால் நாம் 100 வரி பாராட்ட வேண்டும். அந்த அளவிற்கு அவருடைய திறமையும் புலமையும் ஒளிர்கின்றன. அவர் அளவிற்கு தமிழ் நமக்கு வரவேண்டும் என்பதே நம் அவா.
வாசு சார் சூப்பர்...கலக்குங்கள்..
http://www.myspacehippo.com/files/co...hippo37915.jpg
கர்ணன் 100வது நாளையொட்டி இன்று மாலை சுமார் 6.00 மணிக்கு எஸ்கேப் திரையரங்கம் அருகில் ரசிகர்கள் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அதனையொட்டி பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...yakumarbnr.jpg
http://i872.photobucket.com/albums/a...erybabubnr.jpg
http://i872.photobucket.com/albums/a...asanbanner.jpg
http://i872.photobucket.com/albums/a...majayambnr.jpg
கர்ணன் 100வது நாளையொட்டி இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் சிவாஜி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...dhaninvite.jpg
நடிகர் திலகத்தின் அபூர்வத் திரைக்காவியம் இளைய தலைமுறை திரைப்படத்தின் நெடுந்தகடு பற்றிய விவரம் வேண்டுவோர் திரு நாஞ்சில் இன்பா அவர்களை 9566274503 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
கணிப்பொறியியலின் தந்தையான
ஏலன் ட்யூரிங்(Alan Turing) அவர்களுக்கும்,
http://i1110.photobucket.com/albums/...ring_photo.jpg
கலையுலகத் தந்தையின் "கர்ணன்" காவியத்துக்கும் என்ன சம்பந்தம்..!!
http://i1110.photobucket.com/albums/.../KarnanDi3.jpg
ஒரு உன்னதமான ஒற்றுமை இருக்கிறது..!!
இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்ட முன்னோடிகளில் மிக முக்கியமானவர் திரு. ஏலன் ட்யூரிங். சற்றேறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான கோட்பாடுகளை(Algorithms) வரையறுத்த முன்னோடி. இந்தப் பெருமகனார் பிறந்தது 23.6.1912. இன்று [23.6.2012] அவருக்கு நூற்றாண்டு விழா நிறைவு..! அதாவது அவரது 100வது பிறந்த நாள் விழா நிறைவு.
டிஜிட்டல் டெக்னாலஜியின் முக்கிய முன்னோடியாகத் திகழ்ந்த கணிப்பொறியியலின் தந்தையின் 100வது பிறந்த நாள் நிறைவடையும் இன்று [23.6.2012], அதே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாக வந்த கலையுலகத் தந்தையின் "கர்ணன்", 100வது வெற்றித் திருநாளைப் பூர்த்தி செய்திருப்பது என்னே ஒரு வியத்தகு rare coincidence..!
இரு தந்தையருக்கும் நமது ஆத்மார்த்தமான நமஸ்காரங்கள்..!!
திரு. ஏலன் ட்யூரிங் அவர்களைப் பற்றி மேலும் அறிய:
http://timesofindia.indiatimes.com/t...w/14353203.cms
http://en.wikipedia.org/wiki/Alan_Turing
பக்தியுடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் சார்,
தங்களின் ஞான ஒளி "surprise" பதிவு அதி அற்புதம்.
தொடரட்டும் தங்கள் திருப்பணி.
டியர் வாசு சார்,
'ராஜா' திரைக்காவியத்தின் அதி அற்புத ஸ்டில்களை பதிவு செய்து எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள். அதே போல் 'ஞான ஒளி' காவியம் பற்றிய கவிதை மற்றும் ஸ்டில்கள் super.
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
"ராஜா" மெகா ஆல்பம் அடியேன் சொன்னதுபோல் செமரகளைதான்..! நிழற்படங்களை வாரி வழங்குவதே பெருஞ்சேவை..! அத்தோடு நில்லாமல் ஃப்ரேம் போட்டு வேறு தருகிறீர்கள்..! தங்களின் மாபெரும் தொண்டுக்கு ஈடு இணை இல்லை..!
நாளை [ஜூன் 24] கவியரசரின் பிறந்த நாள். "ஞான ஒளி"யின் கதையை தாங்கள் கவிதையாக பதித்தபோது அக்கவியரசரே தங்கள் நாவில் வந்து அமர்ந்துகொண்டு விட்டார். 'ஆண்டனி' ஆல்பம் ஆல்டைம் ஃபேவரைட்..!
அன்புடன்,
பம்மலார்.
நன்றி, ராகவேந்திரன் சார்..!
Thank You, Gnanaguruswamy Sir..!
டியர் mr_karthik,
மிகக் குறுகிய காலத்தில் தங்களின் இணையதள இணைப்பு சீரானது மகிழ்ச்சியளிக்கின்றது..!
தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை பெற்றது என் பாக்கியம்..!
ஒரு மஹாபண்டிதரிடமிருந்து பாராட்டு பெறும்போது எத்துணை மகிழ்ச்சி ஏற்படுமோ, அதனினும் மேலான மகிழ்ச்சி தாங்கள் பாராட்டும்போது ஏற்படுகின்றது..!
தங்களின் பாராட்டு, அடுத்தடுத்த பதிவுகளை அடியேன் சிறந்த முறையில் அளிப்பதற்கு, ஒரு உற்சாக டானிக்காகவும் திகழ்கின்றது..!
மனமாரப் பாராட்டுதல் எனும் உயர்ந்த பண்பை குணநலனாகக் கொண்டுள்ள புண்ணிய புருஷரே, நீவீர் நீடூழி வாழ்க..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
தமிழகத் தலைநகரில், கலைத்தாயின் தலைமகனின் "கர்ணன்" [டிஜிட்டல்] காவியத்தினுடைய 100வது நாள் கொண்டாட்டங்கள் திருவிழாக் கோலம் பூண்டு விட்டதை தாங்கள் பதித்துள்ள நிழற்படங்கள் பறைசாற்றுகின்றன. இடுகைகளுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
திரு. பம்மலார் மற்றும் வாசுதேவன் அவர்களுக்கு,
உங்களின் இருவரின் பொற்கால ஆட்சி தொடரட்டும். தலைசிறந்த மன்னர்கள் தரணியை ஆட்சி புரியும் போது மக்களுக்கு குறையேது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரை காவியங்களாம் ராஜாவையும், ஞான ஒளியையும் பதிவிட்டு எல்லையில்லா ஆனந்தத்தை அளித்த தங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் இப்பெறும் சேவைகளுக்கு வெறும் நன்றி ஈடாகிவிடாதுதான். எனினும் அதற்கு ஈடாக உலகில் வார்த்தையில்லை என்கிற காரணத்தினால் அதையே தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
ராஜா
ஸ்டைல் என்றால் என்னவென்று உலக நடிகர்களுக்கு கற்றுத் தந்த படம் அல்ல, அல்ல, பாடம்.
ஞான ஒளி
கருவுற்று மனைவி பிரசவத்திற்காக மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது, நடிகர் திலகம் வீட்டைப் பூட்டிக்கொண்டு புற்ப்படும்போது ஒரு பெரியவர் வந்து அவசரமா ஒரு பெட்டி செய்யனும்பா. சூசை ஆயா இழுத்துக்குனு இருக்குதுபா. முன்னூறுபா தரேன் என்று சொல்லுகிற போது. முன்னூறுபாயா! என் மனைவிக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு என்னா பண்றதுன்னு இருந்தேன். நல்ல வேளை! ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணி தரேன். இந்த ஊர்லேயே யாரும் செய்யாத அளவுக்கு first classஆ ஒரு பொட்டி செஞ்சு தரேன் என்று நடக்கப் போவதை அறியாமல் நடிகர் திலகம் சொல்லுகிறபோதே நெஞ்சு அடைக்க ஆரம்பித்துவிடும். (இருங்க கொஞ்சம் அழுதுக்குறேன்) அப்போ ஆரம்பித்த அந்த நெஞ்சடைப்பு, பொறக்குறத காப்பாத்துரப்போ இருக்குறத கர்த்தர் எடுத்துக்கிட்டாருடா என்று பாதரியார் சொல்லூகிறபோது கண்களில் கண்ணீர் குலமாக மாறி ஓடியிருக்கும். அதோடு நில்லாமல், அடுத்த படம் பார்க்கிறவரை இந்த காட்சியையும், இன்னபிற காட்சிகளையும் நினைவு படுத்தி, நினைவு படுத்தி எத்தனையோ முறை அழுது இருக்கிறேன். இன்றும் அதே நிலைதான். ஒவ்வொறு ஸ்டில்களையும் பார்க்கிறபோது அந்த ஸ்டில்லுக்கு பின்னால் இருக்கும் காட்சி நினைவுக்கு வராமல் இல்லை.
நட்புடன்
டியர் சிவாஜிதாசன் சார்,
ராஜமரியாதையுடன் கூடிய தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!
தங்களின் பதிவு (குறிப்பாக "ஞான ஒளி" பகுதி), என்னை உணர்ச்சிப்பிழம்பாக்கிவிட்டது..!
உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.
"கர்ணன்" [டிஜிட்டல்] 100வது வெற்றித்திருநாள்
சர்ப்ரைஸ் சிறப்புப்பதிவு
பொக்கிஷாதி பொக்கிஷம்
THE MAKING OF KARNAN
"கர்ணன்" செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட வரலாறு
"கர்ணன்" துணைத் தயாரிப்பாளர் திரு.'சித்ரா' கிருஷ்ணசாமி அவர்களின் வாக்குமூலம்
மகாமெகா கட்டுரை : மொத்தம் பத்து பக்கங்கள்
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1964
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5960-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5961-1.jpg
மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5962-1.jpg
நான்காவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5963-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5964-1.jpg
ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5968-1.jpg
ஏழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5969-1.jpg
எட்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5970-1.jpg
ஒன்பதாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5971-1.jpg
பத்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5972-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
fantastic presentation dear Pammalar Sir. The seed sown is not wasted, it has now become an ever expanding Banyan Tree with NT as the main root. We normally initiate all our duties with a prayer to Lord Ganesan, Same way, The Tamil Cinema has now seen its dawn after more than 80 years of its history, the one and the only Karnan epotomized by the doyen of Indian Cinema, NT. If properly presented with a sequence of carefully selected and edited versions of NTmovies, no doubt, NT will always be with generations to come as the true legend of all times! We NT fans are grateful to you, sir.
அன்பு பம்மலார் சார்,
வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலையா என்ன..?. 1964-ல் 'கர்ணன்' மகா காவியம் உருவான வரலாற்று ஏடுகளை கொஞ்சமும் எதிர்பாராவண்ணம் கர்ணனின் 101வது நாளன்று வெளியிட்டு திகைக்க வைத்துவிட்டீர்கள். படம் உருவான வரலாறு வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது.
படித்தபோது மனதில் தோன்றிய சில ஆதங்கங்கள், சில கேள்விகள், சில ஐயங்கள்....
பேசும்படம் இதழில் இந்த விவரங்கள் வெளிவந்ததை அன்றைய மக்கள் படித்துத்தானே இருப்பார்கள்?. அப்படியிருந்தும், சிறுத்தையை வைத்து வித்தை காட்டியவர் பின்னால் போனார்களே அது ஏன்?.
சென்னை, மதுரை தவிர கோவை, சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, குடந்தையின் அன்றைய ரசிகர்களுக்கு எல்லாம் என்னவாயிற்று, ஏன் இப்படத்தை 100 நாட்களைக் கடந்து ஓடச்செய்யவில்லை?. இதைவிட சாதாரண படங்களையெல்லாம் ஓடச்செய்திருக்கிறார்களே. கர்ணனின் தகுதிக்கு குறைந்த பட்சம் பதினைந்து அரங்குகளிலாவது 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டாமா?.
அப்பன் பாட்டன் பட்ட கடன்களை பிள்ளைகள் தீர்ப்பது போல, தங்கள் அப்பன் பாட்டன் செய்த தவறுக்கு பிள்ளைகள் பிராயச்சித்தம் தேடும் முகமாக இன்றைய இளைய சமுதாயம், அதே கர்ணனை (சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமில்லாத) பெரிய திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்து ஓட வைத்து, மறு வெளியீட்டில் யாருக்கும் கிடைக்காத பேரை, பேறை நடிகர்திலகத்துக்கு கிடைக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.
'கர்ணன்' மறு வெளியீட்டின் 100-வது நாள் போஸ்ட்டர்கள் கண்களையும் மனதையும் வருடுகின்றன.
கடைசியாக ஒருகேள்வி....
தற்போது கர்ணன் வெளியான மார்ச் 16 அன்று, போட்டியாக ராயப்பேட்டை தியேட்டர் ஒன்றின் முன் நின்ற 15 பேரடங்கிய சிறு கும்பலைபார்த்துவிட்டு, 'யாரோ' கர்ணனை வென்றுவிட்டதாக எழுதிய பத்திரிகைக்காரன் இருக்கிறானா, செத்தானா?.
அன்புள்ள சிவாஜிதாசன் சார்,
ஞான ஒளியின் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றை உருக்கமாக பதியவைத்து, நெஞ்சை நெகிழ வைத்து விட்டீர்கள். அந்தக்குறிப்பிட்ட காட்சியில் அவருடைய கன்னத்து தசை மட்டும் துடிக்கும் காட்சியை குளோசப்பில் காட்டி நம்மை உணர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்வார் தலைவர். யாருக்காகவோ பார்த்துப்பார்த்து சிறப்பாக உருவாக்கிய சவப்பெட்டி, தன் மனைவிக்கே ஆகிப்போன கொடுமை அறிந்து, சவப்பெட்டியின் மீது வீழ்ந்து அழும்காட்சி என்றைக்கும் நம் மனதை விட்டு அகலாத ஒன்று.
தங்கள் பதிவுக்கு நன்றி.
டியர் பம்மலர் கர்ணன் uruvana vitham, porut selavu, கதை தயாரான கதை,
செட்டிங்க்ஸ், நட்சத்திரங்கள், துணை நட்சத்திரங்கள்,
எவ்வளவு சிரமங்கள் என்பது போன்ற தகவல்கள் பிரமிக்க
வைக்கின்றது. இந்த தகவல்கள் இப்போது நீங்க தந்திருப்பது
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
Dear Mr Pamallar,
Great article by Chitra. Amasing informations.
Dear M/S.Swamy/Vasu/Karthik/Murali/Raghavendar/Sivaji Dasan/Sivaji senthil/Sankar/KCS/Raghu/All other Friends,
My peak work load starts from now and too many business visitors and personal visitors in next 3-4 months. Though,I will be going thru developments of thread whenever time permits but my postings will be infrequent. Kindly excuse me for next 3-4 months and my heart is always with this thread. I was holding on with vigour because of Karnan. All of you are very very enjoyable company and I will be with you with full vigour on the next possible occasion.Thanking you all and I feel very much near to you all.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'ராஜா' திரைப்படத்துக்காக சென்னை வாலாஜா சாலையில் அண்ணா சிலைக்குப்பின்புறமாக வைக்கப்பட்டிருந்த அற்புதமான பேனர் மற்றும் கட்-அவுட் பற்றி எழுதி, நினைவுகளைப் பின்னோக்கித் தட்டி விட்டுவிட்டீர்கள்.
மஞ்சள் பேண்ட் மஞ்சள் ஃபுல்ஷர்ட், கழுத்தில் கருப்பு ஸ்கார்ப் பறக்க, இரண்டு கைகளையும் அகலவிரித்து நிற்கும் போஸ் மிக ஃபேமஸான ஒன்று. பாட்டுப்புத்தகம், பத்திரிகை விளம்பரம் அனைத்திலும் அந்த போஸ்தான் இடம்பெற்றிருக்கும். இத்தனைக்கும் பாலாஜியோடு போடும் சண்டைக்காட்சியில் சில நொடிகளில் வந்துபோகும் கட்டம் அது.
மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த கட்-அவுட், பட்டிக்காடா பட்டணமா படத்தில் மட்டுமல்ல, அப்போது எடுக்கப்பட்ட நடிகர்திலகம் அல்லாத பல படங்களிலும் இடம்பெற்றிருந்தது. மவுண்ட் ரோட்டில் வாகனம் போகும் காட்சியென்றால், நிச்சயம் அந்த பேனரைக்காட்டி ரசிகர்களின் கைதட்டலை அள்ளுவார்கள். கனிமுத்துப்பாப்பாவில் ஜெய்சங்கர் பைக்கில் பாடிக்கொண்டு போகும் 'காலங்களே.. காலங்களே' பாடலில் கூட அந்த பேனரும் கட்-அவுட்டும் இடம்பெற்றிருந்த நினைவு வருகிறது. (நாணல் படத்தில் 'விண்ணுக்கு மேலாடை' பாடலின்போது சாந்தியில் திருவிளையாடல் ஓடிக்கொண்டிருக்கும் பேனரைக்காட்டுவது போல).
நடிகர்திலகத்தின் முழு போஸில் இடுப்புக்கு கீழ்ப்பகுதி பேனரில் வரையப்பட்டு, இடுப்புக்கு மேல்பகுதி பிளைவுட் கட்-அவுட்டில் செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் கருப்புவெள்ளை கேமரா கூட இல்லாததால் அதைப்படம் எடுத்து வைத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது. நினைவுகள் என்னும் கேமராவில் மட்டுமே பதிவாகியுள்ளது.
பல பெரிய பெரிய சாதனைகளை அசாதாரணமாகச்செய்யும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவி பாரடைஸ் திரையரங்கின் ஷீல்டு கேலரியில் இடம்பெற்றிருக்கும் 'ராஜா' 100-வது நாள் கேடயத்தை (கிரஸண்ட் மூவீஸ் வழங்கியது) தங்கள் செல்கேமராவில் எடுத்து, இங்கே பதிப்பிக்க வசதிப்படுமா?. சிரமப்பட வேண்டாம், வசதிப்படும்போது செய்யுங்கள்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
ஞான ஒளி மற்றும் ராஜா படங்களுக்கு தாங்கள் அளித்த ஸ்டில் அணிவகுப்பை மீண்டும் பார்வையிட்டேன். என்ன அழகு புகைப்படங்கள். உங்களுக்குப் பிடித்த ஞான ஒளியும் எனக்குப்பிடித்த ராஜாவும் ஒன்றாக கைகோர்த்து திரியில் வலம் வரும் காட்சி அருமை.
ராஜாவில் தலைவர் இத்தனை ட்ரெஸ் அணிகிறாரா என்பது ஸ்டில்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. அதிலும் லாக்கப்பில், மனோகருக்கு அடுத்த 'செல்'லில் அடைபட்டிருக்கும்போது அணிந்திருக்கும் உடை (அறிமுகக்காட்சி 'போலீஸ்காரனை விரோதம் பண்ணிக்காதே, நண்பனாகவும் பழகாதே. பொறுமையா இரு') சிம்ப்ளி தூள். படம் முழுக்க அட்டகாசமான ஒளிப்பதிவு. தாங்கள் அளித்த கடைசி ஸ்டில்லில் தலைவரும் செல்வியும் எதிரெதிரே அமர்ந்திருக்க, கேமராவை லோ ஆங்கிளில் வைத்து போலீஸாரை மேஜைக்கு கீழே காட்டியிருப்பதெல்லாம் அப்போது புதுமை.
ராஜாவுக்கு சப்போர்ட் செய்தவர்கள் வரிசையில் அந்த ஆரஞ்சு முடிக்காரரைக்கூட (அவர் பெயர் என்ன?) சேர்த்துள்ளீர்கள். மனோகரையும், கே.கண்ணனையும் சண்டைக்காட்சியைத் தரவேற்றும்போது சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்து விட்டீர்களா?. அதுவும் சரிதான். 'ட்ரிப்பிள் சந்திரபாபு' மட்டுமே மிஸ்ஸிங்.
சிரமப்பட்டு தொகுத்த தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.
The movie Raja, we all know that was a remake of Hindi Johny Mera Naam starring Dev Anand and Hemamalini. But, NT has taken this movie on his shoulders with a different style and acting originality of his own. Be it the climax scene where the villains beat his mother and NT was unable to reveal but Balaji suddenly bursts out, we were spell bound on NT's acting which was not done upto the mark by Dev Anand. Besides, NT had sported a very slim, stylish, handsome and youthful look with fantastic and decent costumes in line with movies like Enga Mama, Sumathi En Sundari.... The song picturization of Kalyanapponnu and Irandil Ondru always linger in our minds. MSV's riproaring title music was on par with the James Bond theme music. The film was in toto a clean family entertainer that can be enjoyable all times. Chandrababu's tripe roles was also quite amusing and hilarious. At that time Raja was receiving accolades as a fast moving action movie with a right mix of sentiments. The supporting characters Rangarao, Manohar, Balaji.... all had done a neat job. Another movie in which NT excelled Shammi Kapoor's Brammachari was Enga Mama. What an array of sweet songs and touching narration!
Dear Pammalar Sir/Vasudevan Sir/Raghavendran Sir,
Unfortunately, due to ill-health of my father whom i discharged from Vijaya Health Center yesterday late evening, I could not come for the event today at Sathyam. I missed an opportunity to meet all of you at one venue today. I am glad my friend Mr.Anand,(Nick Name here is SPChoudry)met all of you had was sharing with me the discussion. He is lucky to have met all of you. Am not that much lucky i guess. Anyway, I am confident that one or the other day, I will be able to meet you all.
I was also told that KanDrishti Padaamal irukka oru sila Divya Filmsai patriya Kandana poster were stuck near Sathyam by the same old bunch of Jokers?