மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்றைய சின்ன திரை விருந்து .
பகல் -1 மணிக்கு - நம்நாடு - கே டிவி
இரவு 10 மணிக்கு - தாயை காத்த தனயன் - சன் டிவி
Printable View
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்றைய சின்ன திரை விருந்து .
பகல் -1 மணிக்கு - நம்நாடு - கே டிவி
இரவு 10 மணிக்கு - தாயை காத்த தனயன் - சன் டிவி
http://i50.tinypic.com/21cfi4x.jpg
"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.
தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"
"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.
மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.
அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.
எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.
எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.
குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Makkal thilagam in siriththu vaazhavendum rereleased in madurai - arasadi - vellaikkannu - theatre.
1974 makkal thilagam all three movies celebrated super hit at our madurai
1. Netru indru naalai - chinthamani - 125 days .
2. Urimaikkural cinip priya silver jubilee-
3. Sirithtu vazhavendum - new cinema . 100 days-
Dear selvakumar sir
very nice article about your experience by seeing makkal thilagam movies at your young age ,begining with makkal thilagam in kudiyiruntha koil 1968 and how you are turned as hardcore mgr fan . Really you are a great makkal thilagam mgr fan .
15.3.1968
குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .
வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -ஜஸ்டின் - காந்தாராவ் - நடராசன்
ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
குடியிருந்த கோயில் விளம்பரம்.
http://i125.photobucket.com/albums/p...psb8837903.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
செல்வகுமார் மற்றும் வினோத் சார் இருவரும் தங்களின் முதல் அனுபவத்தை வெளியிட்டதற்கு நன்றி. முதல் முறையாக வெளியிடப்படும் தலைவர் படம் அன்று பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து தலைவர் படத்தின் முதல் வெளியீடு அறிந்தது மீனவ நண்பன் படத்தில் தான். அப்போது எனது சகோதரர் மீனவ நண்பன் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
ஆஹா என்ன ஒரு அற்புதமான தலைவனின் எங்க வீட்டுப் பிள்ளை போஸ்டர்கள் அருமை அருமை நன்றி கலியபெருமாள் சார் உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்
இந்த பதிவு நீங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் நேரத்தில் பதிவு செய்கிறேன் காரணம் அந்த நேரத்தில் போனில் நீங்கள் மற்றும் தலைவரின் பக்தர்கள் அனைவரின் கைத்தட்டல்கள்
விசில் சத்தம் கரகோஷம் அனைத்தும் விண்ணை பிளந்தது
நல்லா தலைவனின் படத்தை enjoy பண்ணுங்க
குடியிருந்த கோயில் படத்தின் 100வது நாள் விளம்பரம்
http://i125.photobucket.com/albums/p...ps37292aef.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
நன்றி - முல்லை - இனைய தளம்
நான் யார்? நான் யார்? நீ யார்?
எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.
குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.
அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.
https://www.youtube.com/watch?v=IED4SXkugA4
மென்மையான கதாநாயகனின் காதல் பாடல்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
https://www.youtube.com/watch?v=sGt9qA26sLo
முரட்டு கதாநாயகனின் காதல் பாடல்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
இரண்டு கதாநாயகனும் நம் கதாநாயகன் தான். அது தான் நமது எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Matador உடையில் நமது தலைவர் மிக அழகாக இருப்பார்.
துள்ளுவதோ இளமை.
https://www.youtube.com/watch?v=IPPZYul_9Rk
நமது தலைவர் எத்தனையோ உடை அணிந்து நடித்திருந்தாலும் இந்த ஒரு உடையை நான் அணிந்து பார்க்க வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டு இருக்கிறேன்.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
சென்ற வருடம் குடியிருந்த கோயில் திரைபடம் உட்லாண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அப்போது சத்யா அவர்களால் எடுக்கபட்ட விடியோ.
https://www.youtube.com/watch?v=tRls..._x7dQ&index=39
மேற்படி நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம்.
https://www.youtube.com/watch?v=4J3q..._x7dQ&index=38
பெண்கள் கூட்டம் வராத திரையரங்கில் இன்று பெண்கள் கூட்டம் அலைமோதும் அளவிற்கு நமது மக்கள்திலகத்தின்
எங்க வீட்டுப் பிள்ளை படம் ஓடி கொண்டிருகிறது என்று படம் பார்த்துக்கொண்டே தகவள் தந்த திரு புதுச்சேரி கலியபெருமாள் சார் உங்களுக்கு எனது நன்றிகள்
அதனால் தான் அவர் மக்கள்திலகம்
தலைவரின் பங்கரா நடனம் HD-யில்
https://www.youtube.com/watch?v=4IZCUvcKSGQ
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகள் எல்லாவற்றையும் பொருத்தமான தலைப்புடன் பதிவிட்ட இனிய நண்பர் ரூப் சார்
மிக்க நன்றி .
http://youtu.be/gAWvdFytCzoஇந்த பாடல் ..... மறக்க முடியாத உண்மை காதல் உள்ளங்களின் உள்ளுணர்வு பாடல்
அன்பு நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு,
மக்கள் திலகத்தைத்போல் ஒரு மகத்தான மாமனிதர் இப்புவியில் இனி தோன்றப்போவதில்லை. இந்தப்பிறப்பில் நாம் அவருக்கு ரசிகராக இருப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும். தங்களின் அனுபவத்தை இந்த திரியில் பகிர்ந்து கொண்டதற்கு அனைத்து மக்கள் திலகத்தின் அபிமானிகள் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் புகழ் ஓங்குக
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------
https://www.youtube.com/watch?v=OCWdo1ZH2-o
ALIBABAVUM NARPATHU THIRUDARGALUM
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 01
http://youtu.be/FTNLl1hGv9M
நடிகர் பேரரசரின் நவரச நடிப்பு 02
http://youtu.be/0fYPLkjPlpI
http://www.dailymotion.com/playlist/...6#video=xrihzi
VIKRAMATHITHAN - 1
http://www.dailymotion.com/playlist/...6#video=xriig2
VIKRAMATHITHAN-2
http://www.dailymotion.com/playlist/...5#video=xriiru
VIKRAMATHITHAN - 3
1962-1967-1971 தமிழக பொது தேர்தல்கள்
1973 திண்டுக்கல் இடை தேர்தல்
1974 கோவை மேற்கு சட்ட மன்ற இடை தேர்தல்
1974 கோவை பாராளுமன்ற தேர்தல்
மேற்கண்ட வருடங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசார மேடையில் எதிரும் புதிருமாக
மக்கள் திலகமும் - நடிகர்திலகமும் அவர்கள் சார்ந்த கட்சியின் மேடையில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர் .
1977 இந்திய பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் அண்ணா திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது .
திரை உலகில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும் பல்வேறு நிகழ்சிகளில் ஒன்றாக கலந்து விழாக்களை சிறப்பித்து வந்தனர் .
முதல் முறையாக அரசியல் மேடையில் .....
16.3.1977 அன்று சென்னை பனகல் பார்க்கில்
தென்சென்னை பாராளுமன்ற கூட்டணி வேட்பாளரான -இந்திரா காங்கிரஸ் திரு ஆர் .வெங்கட்ராமனை ஆதரித்து நடை பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல் முறையாக அண்ணா திமுக தலைவரும் .புரட்சி தலைவருமான மக்கள் திலகமும் -காங்கிரஸ் சார்பாக நடிகர் திலகமும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்த நாள் இன்று .
courtesy- pradeep balu sir
http://i47.tinypic.com/166nhus.jpg
1977 மார்ச் மாதம் நடை பெற்ற பொது தேர்தலில் அண்ணா திமுக - காங் கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றியினை தொடர்ந்து 1977 ஜூன் மாதம் சட்ட சபை தேர்தலிலும் இந்தகூட்டணி தொடரும் என்று எதிர் பார்க்கப்பட்டது .
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி காட்சிகள் மாறியது .
மக்கள் திலகம் தலைமையில் அண்ணாதிமுக
திமுக
காங்கிரஸ்
ஜனதா
4 முனை போட்டி .அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்
முடிவு
மக்கள் திலகம் தலைமையிலான அண்ணா திமுக
மாபெரும் வெற்றி பெற்றது .
அன்புள்ள தெய்வத்தின் பக்தர்களுக்கு
நேற்று நமது புரட்சியாரின் எங்கவீட்டு பிள்ளை வெளியீட்டு விழா புதுச்சேரி நியூடோனில் நடைபெற்றது..
http://i45.tinypic.com/b7bfkk.jpg
மாலை 5.00 மணிக்கு தொடங்கிய விழாவின் முதல் நிகழ்ச்சியாக படப்பெட்டிக்கு தீபாராதனை நடைபெற்றது.தீபாராதனையில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்..
http://i50.tinypic.com/9tq3oz.jpg
இரண்டு நாட்களாக பொது மக்களுக்கு எங்க வீட்டுப் பிள்ளையின் சாதனை நோட்டீஸ் வழங்கப்பட்டது..இதில் விசேஷம் என்னவென்றால் தலைவரின் படத்தை பார்க்க வந்த ஒரு வெளிநாட்டினர் அந்த நோட்டிசை விநியோகித்தார்..படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..தியேட்டர் எதிரில் ரசிகர்கள் கூட்டம் பட்டாசு வெடித்து கொண்டாடியது..இந்த நிகழ்ச்சியில் பொன்மனச்செம்மல் அறக்கட்டளையின் நிர்வாகிகளும், மொரட்டாண்டி பிரத்தியங்கிரா காளியின் பீடாதிபதி பூஜ்யஸ்ரீ நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரு. பாலமுருகன், +2 மாணவன் பாரதி.. கந்தா, ராமகிருஷ்ணன் நடராஜன், காந்தி, கண்ணன், முருகசாமி, ஜெபமணி, நாகராஜ் சோமசுந்தரம், பாரத எம்.ஜி.ஆர் சமூக நலப்பேரவை சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களின் விசேஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
நடாதூர் ஜனார்த்தன சுவாமிகளை பற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்..அவர் சிறு வயதிலிருந்தே தலைவரின் மேல் பற்று கொண்டவர்..நான் சிறுவயதில் தலைவரின் படங்களை பார்க்க போகும்போது எனக்கு முன்பு தியேட்டரில் இருப்பார். அப்போதிலிருந்து அவரை நான் அறிவேன். ஆனால் பேசி பழக்கமில்லை. கடந்த 5 வருடங்களாகத்தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது..அவருடைய கோயிலில் அவர் முகத்தை பார்க்கவும் அவர் காலில் விழுந்தும் ஆசி வாங்குவதற்கும் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் காலில் விழுவதை அவர் நாசூக்காக தவிர்ப்பார் அப்படிப்பட்ட அவர் தலைவரின் படத்துக்காக இரண்டு நாட்களாக தியேட்டர் வாசலில் இருந்து பேனர், வாழைமரம், தென்னை மட்டை, கொடி, மாலை ஆகியவற்றை கட்டி அழகு பார்த்தார். அவரை தியேட்டர்ல பார்த்ததில் எல்லோருக்கும் ஆச்சர்யம்..சாமி உங்களை கோயில் பார்பதற்கே கஷ்டம்..இங்கே எப்படி..என்று எல்லோரும் அதிசயித்து போனார்கள்..நம் தலைவருக்கு நான் எங்கும் வருவேன்..எதுவும் செய்வேன்..என் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னதும் நாங்கள் அனைவரும் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு போனோம்.
http://i50.tinypic.com/2q9z22s.jpg
http://i50.tinypic.com/sv288n.jpg
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).
http://i46.tinypic.com/mll0yo.jpg
3. அடுத்ததாக நமது +2 மாணவன் பாரதி..அவனுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது..படம் விளம்பரத்தை பார்த்ததிலிருந்து அவனும் ஆர்வமாகி விட்டான். 14ந்தேதி கணக்கு தேர்வு..அதை எழுதி விட்டு அன்று மாலையே தியேட்டரில் மாலை, கொடி, பேனர் கட்ட வந்துவிட்டான்..நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்..இது உன்னுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் தேர்வு என்று சொல்லியும் கேட்காமல் அங்கே வந்துவிட்டான் .கேட்டதற்கு இதோடு எனக்கு திங்கள்தான் எக்ஸாம் என்றான். கூடவே இருந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்றான்..மறுநாள் மாலை 5 மணிக்கு தியேட்டர் வந்துவிட்டான்..ஸ்க்ரீன் முன்பு ஆட்டம் பட்டம் போட்டுவிட்டு அதற்கு பிறகு ஹோட்டல் போய் 11 மணிக்கு வீட்டுக்கு சென்றான்..அவன் பத்தாம் வகுப்பில் 550 மார்க் எடுத்தான்..இந்த முறை 1000த்தை தாண்டிதான் என் மார்க் இருக்கும் என்கிறான்..நாம் அனைவரும் அவன் அதிக மார்க் எடுக்க பிரார்த்திப்போம்
http://i46.tinypic.com/3480uo7.jpg
ஆட்டோ பக்கத்தில் அமெரிக்கரின் பக்கத்தில் கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவன்தான் பாரதி
4. அடுத்ததாக நம் விழாவிற்கு வந்தவர் நான் பணிபுரியும் தற்போதைய புதுச்சேரி அரசின் சபாநாயகர் அவர்களின் பெரிய மகன் அவர்களும் அவருடைய இரண்டு பிள்ளைகளும்..அதில் ஒரு பிள்ளைதான் படப்பெட்டிக்கு தீபாராதனையில் படப்பெட்டியை பிடித்திருப்பவன்..அவனும் எம்ஜிஆரின் ரசிகன்..4வது படிக்கிறான்..யாருமே படம் பார்க்க அஞ்சும் ஒரு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்..
மொத்தத்தில் இந்த தியேட்டரில் நம்முடைய தலைவர் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்றால்..அதுதான் அவருடைய சக்தி..என்பது..புதுச்சேரி மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது உண்மை.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் இனிமேல் இந்த தியேட்டருக்கு தலைவர் படத்தை கொடுக்காமல் பார்த்துக்கொள்ள முடியுமா...