Happy Krishna Jayanthi
http://i61.tinypic.com/oi7x3d.jpg
Printable View
Happy Krishna Jayanthi
http://i61.tinypic.com/oi7x3d.jpg
TODAY 11.00AM WATCH 'NAVARATHINAM' SUNLIFE TV
http://i59.tinypic.com/wjdj5i.jpg http://i62.tinypic.com/2nc2mhf.jpg http://i61.tinypic.com/6gihkp.jpg
http://i62.tinypic.com/2ch1cuh.jpg http://i57.tinypic.com/dysmps.jpg http://i62.tinypic.com/fo1v8x.jpg
http://i58.tinypic.com/otols6.jpg http://i58.tinypic.com/az79eu.jpg http://i57.tinypic.com/2m43o20.jpg
கீதையின் நாயகன் அன்று தர்மத்தை காக்க
துவாபர யுகத்தில் அவதரித்தான் கண்ணனாக
கலி யுகத்தில் இன்று தர்மத்தை காக்க அவதரித்தான்
கொடுத்து சிவந்த கரங்களின் எங்கள் மன்னாதி மன்னன்
கீதையை சொன்னவன் அந்த பரந்தாமன்
கீதத்தில் கடமையை இசைத்தவன் இன்று
நம் பரங்கி மலை பாரி வள்ளல்
காவிய நாயகன், கடமையின் வீரன், கலங்கரை விளக்கம்,
காலத்தை வென்றவன், காவல்காரன், கொடை வள்ளல்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை, கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்.
Courtesy : Muthaiyan Ammu Sir !!
http://i58.tinypic.com/14vtq3n.jpg
http://i61.tinypic.com/ngrcl3.jpg
சத்யா மூவிசின் ''காவல்காரன் '' இன்று 48 ஆண்டுகள் நிறைவு நாள் .
http://i60.tinypic.com/zu5v7m.jpg
1967ல் வசூலில் மாபெரும் சாதனைகள் நிகழ்த்திய காவல்காரன் .
''காவல்காரன் '' 7.9.1967
100 நாட்கள் .
சென்னை - குளோப் - அகஸ்தியா - மேகலா
மதுரை - சிந்தாமணி
திருச்சி - ஜுபிடர்
சேலம் - ஒரியன்டல்
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது.
சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது. - See more at: http://www.noolulagam.com/product/?p....xuGEaDwK.dpuf
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .
courtesy - facebook
திரு.சுஹராம் சார்,
சென்னை சாந்தி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாயும் புலி என்ற புதிய படம் வெளியாகியுள்ளது. சாய் சாந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலை மற்றும் மதியக் காட்சியாக சவாலே சமாளி என்ற புதிய படமும் மாலை, இரவுக் காட்சியாக டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கில படமும் ஓடுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் நீங்கள் கூறியிருப்பது போல, சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் காலைக் காட்சியாக ஓடுகிறது. பேபி ஆல்பட்டில் மதிய காட்சி மட்டும் நடக்கிறது.
இருந்தாலும் நாளிதழில் ஓடாத திரையரங்குகளின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது வேண்டுமென்றே நடந்திருக்கும் என்று நினைக்க முடியவில்லை. விநியோகஸ்தர் கொடுக்கும் விளம்பரத்தை நாளிதழ்களில் வெளியிடுகிறார்கள். அதில் தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு சுஹர்ரம்
உங்களது நண்பர்கள் நடிகர் திலகம் திரைப்படம் காண்பதில் ஆர்வம் காட்டுவதை உங்கள் பதிவின் மூலம் படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
Anyway, தகவலுக்கு நன்றி. விசாரித்ததில் சரியான விளம்பர தகவல் கொடுக்கபட்டதேன்றும், பதிப்பாளர் ( DAILY THANTHI) உரிய IMAGE ஐ பதிவில் பதிவு செய்யும்போது தவறு நேர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
இன்றைய தின தந்தி யில் இதன் சரியான விளம்பரம் அதற்க்கு ஈடாக ( COMPENSATION) தந்தி குழுமம் இலவசமாக கொடுத்துள்ளார்கள் தவறுக்காக.
விஷயம் இவ்வளவுதான்..அதற்குள் என்னமோ தவறான தகவல் தெரிந்தே பதிவிட்டுள்ளனர் என்பதுபோன்ற எப்போதும் போல உங்களுடைய தவறான கண்ணோட்ட காழ்புணர்ச்சி கொண்ட தங்களுடைய அவசர அவியல் இங்கு...!
http://i501.photobucket.com/albums/e...pswqkgxm4g.jpg
இன்று காலை 10 மணி காட்சியும் சத்யம் வளாகம் 6 DEGREES அரங்கு நிறைவு கண்டுள்ளது உங்களுக்கு உபரி தகவல்..!
திரு. ஆர்.கே.எஸ்.
தாங்களின் விளக்கத்துக்கு நன்றி.
திரு.சுஹராம் அவர்கள், நீங்கள் கூறியிருப்பது போல வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் சொல்லியிருக்க மாட்டார். தாங்களும் அவ்வாறு நினைக்க வேண்டாம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வசூல் பற்றி அவர் கூறியிருந்ததும் கூட தியேட்டர் மேலாளர் சொல்லிய தகவல் என்றுதான் கூறியிருந்தார். அவராக சொல்லவில்லை.
இங்கு எல்லாருமே பரஸ்பர நம்பிக்கையோடுதான் பழகுகிறோம். அவருக்கு கிடைத்த தகவலை அவர் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நன்றி.
164 இருக்கைகள் கொண்ட சத்யம் 6 டிகிரிஸில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் இன்று காலை அரங்கு நிறைவு கண்டிருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் sir
அவர் கூறிய வசூல் தகவல் முற்றிலும் கற்பனை அல்லது தவறான தகவல் என்று நானும் அப்போதே FACTS உடன் பதிலும் தந்துவிட்டேனே சார் ! அப்படி அவர் உண்மையிலேயே காழ்புணர்ச்சியில் கூறியில்லாத பட்சத்தில் உங்கள் வாக்கினை ஏற்று என்னுடைய வரிகளும் நான் பின் வலித்து கொள்கிறேன் !
சுமார் 100 இருக்கைகள் மற்றும் ஒரு டிக்கெட் விலை 120 ருபாய் கொண்ட STUDIO 5 அரங்கில் இருந்து ....164 இருக்கைகள் கொண்ட 6 DEGREES திரை அரங்கில் ஒரு டிக்கெட் விலை 150 ரூபாய்கள் என்ற நிலையிலும் ஞாயிறு இளம் காலை காட்சி 10 மணி அரங்கு நிறைவு என்றால் .......இதற்க்கு பெயர் சாதனை அன்றி வேறு என்னவென்று கூறுவது :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி !
RKS
தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.
அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது mgrஎம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.
ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)
தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.
தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக போட்டி நடிகர் விளங்கிய நிலையில் இவ்வாறு வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல. ' நடிக்கவே தெரியாத நடிகன்', '' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.
அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.
'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.
அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.
1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !
அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!
அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!
இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.
Mgrஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 38 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 27 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.
reproduced.
கலைவேந்தன் சார்,
நீங்கள் தவறாக கூறமாடீர்கள் அது எனக்கு புரிகிறது.
புதிய படங்களுக்கு திரை அரங்குகள் ஒதுக்கப்படும்போது digital வெளியீடுகளுக்கு என்றுமே "சித்தி" கொடுமைதான் நடக்கிறது.
இல்லையென்றால் யாராவது அதிகாலை காட்சி..இளம்காலை காட்சி கொடுப்பார்களா ?
மதிய காட்சி கூட கொடுக்காமல்...atleast காலை காட்சியாவது கொடுக்கலாம்...இப்படி ஒரு out of syllabus arrangement எதற்குதான் செய்கிறார்களோ தெரியவில்லை.
இளம் காலை காட்சி...அதிகாலை காட்சி அரங்கு நிறைகிறது என்பது digital படமாக இருந்தாலும் பார்பதற்கு ஆவல் கொண்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது தெள்ளம் தெளிவாக ஒரு எடுத்துக்காட்டு...
மற்ற படங்கள் அதே வளாகத்தில் இன்று இளம் காலை காட்சியோ அல்லது அதிகாலை காட்சியோ ஒன்று கூட அரங்கு நிறைவை காணவில்லை...புதிய படங்களான தனி ஒருவன், பாயும் புலி உட்பட !!
அப்படி இருக்கும்பட்சத்தில் நமக்கு மட்டும் இப்படி.
திரை அரங்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய படங்கள் அனைத்தும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன...இது வரும் வாரம் மற்றும் விநாயகச்சதுர்த்தி வரை தொடர்தான் செய்யும்..!
கிடைத்ததை வைத்து சந்தோஷப்படும் நிலையில் நாம் உள்ளோம் !
Rks
விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
நிலைமைகளை புரிந்து கொள்ள முடிகிறது. புதிய படங்களின் ஆக்கிரமிப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் ‘சித்தி’ கொடுமையும் புரிகிறது.
மற்ற திரையரங்குகளை விடுங்கள். சத்தியத்திலாவது சனி, ஞாயிறு மட்டுமாவது காலைக் காட்சி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கிலேயே படத்தையே எடுத்து விட்டார்களே? என்ன காரணம் என்று தெரியுமா? அதிலும் கட்டபொம்மன் படத்தை எடுத்து விட்டு டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஆங்கிலப்படத்தை போட வேண்டிய அவசியம் என்ன?
சிவந்த மண், நம்நாடு படங்கள் பற்றிய தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ். திரு.ஸ்ரீதர் அவர்கள் கல்கி பத்திரிகையில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார். நண்பர்கள் அதைப் படித்திருப்பார்கள். சிவந்த மண் படம் தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். தேவைப்பட்டால் பின்னர் தருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
அண்ணா அவர்கள் சொல்லி டி.வீ.நாராயணசாமி அவர்கள் தொலைபேசியில்
கேட்கிறார்கள் என்ன செய்வது என்று. அங்கே சிவாஜி கணேசன் என்ற பெயரில் - அப்பொழுது "கணேசன்", என்று ஒருவர் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், அவரை தேர்ந்தேடுங்கள் அவர்தான் இந்த பாத்திரத்துக்குப் பொருத்தமானவர்என்று நான் சொன்னேன் என்று ஏன் டைரியும் கூறும். நடிகர் டி.வீ.நாராயனசமிக்குத் தெரியும்; ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர் அவர்களுக்கு தெரியும்; இது சிவாஜிக்கும் தெரியும்.
-புரட்சிதலைவர் கௌரவ டாக்டர் பட்டம் விழாவில்.
உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதி வரை அந்த லட்சியம் நிறைவேறும் வர அதற்காகப் பாடுபட வேண்டும்.
- புரட்சித்தலைவர்
கலைவேந்தன் சார்
உங்களுடைய சாதுர்யமான கேள்வியை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் இல்லை. :-)
இருந்தாலும் நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியது பல உள்ளன..உங்களை போலவே பலருக்கும் ஒரு தவறான எண்ணம் உள்ளது ...அவரது திரை அரங்கில் அவருடைய படம் நூறு நாள், வெள்ளிவிழா சர்வ சாதாரணமாக ஓடும் என்பது...!
உண்மையில் நிலைமை vice versa சாந்தியை பொறுத்தவரையில் ! அவருடைய படங்கள்..அந்த காலத்திலும் சரி...எந்த காலத்திலும் சரி...மற்ற திரை அரங்கு போலதான் நிர்வாகம் என்று வரும்போது நடந்துகொள்ளும்..!
உதாரணம்...அவருடைய பல படங்கள்...150 - 170 நாட்களில் எல்லாம் சாந்தி அரங்கில் இருந்து மற்ற படங்களுக்காக எடுத்த வரலாறு நிறைய உண்டு..!
இன்றும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நினைத்தால் நடிகர் திலகத்தின் பழைய படங்களை மாதம் ஒன்றாவது திரை இடலாம் ..வசூலும் சிறந்த மகசூலாக இருக்கும்.
சாந்தி எங்கள் திரை அரங்குதான் ...! ஆனால் நான் கூறுவது நடைபெறுகிறதா என்று நீங்களே விசாரித்து பாருங்கள் !
உண்மை விளங்கும் !
ஷாந்தியிலும் மற்ற திரை அரங்குகள் எப்படி நடக்கின்றனவோ அப்படிதான் !
உங்களுக்கு சொந்த திரை அரங்கு இல்லாததும் ஒன்றுதான் எங்களுக்கு சொந்த திரை அரங்கு இருந்தும் உங்கள் நிலை தான் !
கட்டபொம்மனை பொறுத்தவரையில் சாந்தி வளாகத்தில் வியாழகிழமை மாலை 7 மணி வரை திரு வேணுகோபால் அவர்கள் விநியோகஸ்தர் வருகைக்காக காத்திருந்தார்.
QUBE extension வரும் வாரத்திற்கும் தொடர கொடுத்துள்ளார்களா இல்லையா என்ற தகவல் அவர்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து. ஆனால் எந்த தகவலும் SAI GANESH நிறுவனத்திடம் இருந்து வராததால் வெள்ளி முதல் புதிய படங்களுக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டன !
இதுதான் நடந்தது SAI SHANTHI விவகாரத்தை பொருத்தவரை..! தவறு விநியோகச்தருடயது !
Rks
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம்.ஜி.யார் என்றும் முத்தே
எம் தமிழின் சொந்த சொத்தே
சிம்மமென உயர்ந்து நின்று
சிரிக்கின்ற கண்ணே முத்தே
சாதுர்யமெல்லாம் இல்லை திரு.ஆர்.கே.எஸ்., சாந்தியிலேயே ஏன் இந்த நிலை? என்று உண்மையாகத்தான் கேட்டேன். சத்தியத்தில் எக்ஸ்டன்ஷன் கொடுத்தவர் இங்கும் கொடுத்திருக்கலாம். விளக்கத்துக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மாற்று திரிக்கு பதில் சொல்வதா நமது வேலை...அவர்களும் நமது ரத்தத்தின் ரத்தம்தான்..தலைவர் சொல்லியது..உங்கள் புள்ளி விபரங்கள் தேவையா?..தேவையில்லாமல் பக்கங்களை வீனடிகாதீர்கள் ..அருமையான தலைவர் பற்றிய விசயங்களை ஆதாரத்தோடு பதிவுகளை மேற்கொள்ளுங்கள்..அதுவே போதும்..விளக்கம் சொல்வதிருக்கு இந்த திரி தேவையில்லை..நம்மால் தலைவரின் புகழை வெளிபடுதுவர்த்திர்க்கு இந்த திரியை பயன்படுத்துவோம்..நான் தெளிவாக இருக்கிறேன்..நீங்கள்..வாருங்கள் நண்பர்களே..நமதே தலைவரின் புகழை பரப்புவோம்..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i61.tinypic.com/2qsnj4n.jpg
The story behind 4777.
http://mgrroop.blogspot.in/2015/09/4777.html
Screen capture for 4777.
http://i125.photobucket.com/albums/p...psx1n4oyhb.jpg
Added snake and hip belt..
http://i60.tinypic.com/2ex25h0.jpg