சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலாறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
இது சரியா ? madhu sir
Printable View
எனக்கும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது.. ஃபடாபட் ஜெயலட்சுமி.. நிறைய ஆண்டு வாழ்ந்து நிறைய படத்தில் நல்ல நடிப்பைத் தந்திருக்கக் கூடியவர்..காதல் வழியாகக் காலன் வந்தணைத்துக் கொண்டு விட்டான்..
காளி விமர்சனத்தில் விகடன் - வழக்கமாய் இழுத்துப் போர்த்திக் கொண்டுவரும் படாபட்டுக்கு இப்படி ஒரு பாட்டு..சீமாவிற்கு இ.போ தோற்றம் என எழுதியிருந்தது நினைவில்..
அதை விட ரகசியம் - கண்ணதாசன் கதை பார்த்ததில்லை.. பாட்டு கேட்டிருக்கிறேன்..செங்கரும்பு தங்கக்கட்டி படத்திலும் படாஃப்ட் உண்டில்லையோ..
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே - இதன் அர்த்தம் விளக்க முடியுமா?
மோகம் முப்பது வருஷமும் படாஃபட் என நினைவு.. மேனகா ரோல்..
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..
அதெப்படி ஓடிக்கிட்டிருக்க ரிவர்ல ஃபிஷ் நிக்கும்..சம்திங்க் ஃபிஷியோனோ.. ஓ.. நோ..அப்படி இல்லை.. நீரோடிக் கொண்டிருக்கும் வைகை நதியிலே (ஒரு காலத்தில்) எப்போதும் துள்ளித்துள்ளி ஆடியும் ஓடியும் கொண்டிருக்கும் மீனைப் போன்றவளே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
கானகத்துல நெய்யா..இல்லை..அவ்வப்போது காத்தோடு பூவுரச கூட மரமுரச மரத்தோட மரமுரச டபக்குனு ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு நெருப்பு பத்திக்கும்..அதை அந்த மான்களுக்குத் தான் தெரியுமாம்..சமத்தா சோம்பேறியா மெஞ்சுகினு இருக்கலாம்னு பாத்தா..என்னப்பா இது..ஏன் இந்த உஷ்ணம் நு சுத்தி முத்திப்பார்த்துட்டு - இளம்பெண்ணுன்னா வீல்னு அலறுவாங்க..இதுங்க இளம் மான்.. கத்தவும் வராது ..ஸோ வேகமா ஓடிவிடும்..அதைப்பார்த்த மற்ற மிருகங்கள்ளாம அவற்றைத் தொடருமாம்..
அது போல எனக்கு ஒருதுன்பம் இருந்தால் அதை ஓட்டிவிட வழிகாட்டும் கானகத்து மானைப் போன்றவளேன்னு அர்த்தம் வருமோ..
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே
இதுவும் இனிமையான வ்ரிகள் தான்..
கோபால் சார் ரைட்டா..
http://mmimages.maalaimalar.com/Arti...c_S_secvpf.gif
கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.
என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.
பிரபல பட அதிபர் ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.
இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.
ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.
நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.
கண்ணதாசன் பாராட்டு
வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.
இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.
"கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் ஜெயராமன்
வாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.
வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.
இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.
தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.
காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.
கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் "ஆகா! அற்புதம்!'' என்றார்.
உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, "தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?'' என்று கேட்டார்.
"ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.
"நான் இப்போது பாடியது என்ன ராகம்?'' என்று ஜெயராமன் கேட்டார்.
"காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.
"பலே!'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.
பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, "இது ஹரி காம்போதி'', "இது பைரவி'', "இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.
மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், "தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?'' என்று வாலியை பாராட்டினார்.
பிறகு, "தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.
"பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், "அப்படியா!'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.
பிறகு, "கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா?'' என்று கேட்டார்.
டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.
"சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார், சி.எஸ்.ஜெயராமன்.
டி.எம்.எஸ். பாடிய - "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', "ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய "இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.
பரவசப்பட்டுப்போன ஜெயராமன், "உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, "தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.
"அண்ணே...!'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:
"தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, "அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.
எவனோ ஒருத்தன் வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது.
டிரைவர் டீ குடிக்கப்போனார்.
வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், "டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.
ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, "நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.
மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, "தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று பாசத்தோடு கேட்டார்.
"என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.
சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்
அய்யகோ ! ரொம்ப டீப்பா அர்த்தம் எல்லாம் கேட்காதீங்க சாரே ! நான் சாதா ரணமானவன். என்னை பயங்கர ரணமாக்கிடாதீங்க...
சேல் என்றால் மீன். அதனால் கண்ணுக்கு உவமையாக சுலபமாக சொல்லிடலாம். அந்தக் கண்ணில் ஊறும் நீரும் அதன் வெணமை நிறத்தால் பால் போலத் தெரியுதுன்னு சொல்றாங்களோ என்னவோ ?
THAILAND ACTRESS - METHA
ONLY ONE FILM -AND ONLY ONE SONG
http://i62.tinypic.com/vyy4j5.jpg
http://youtu.be/fEF22pJ1qPY
சமீபத்தில் பாங்காக் போயிருந்தபோது அங்கே ஒருவரிடம் மேத்தா பற்றி கேட்டேன். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஓ.. மீத் ரூங்ராத்.. அவங்க ஒரு காலத்தில் பிரபல நடிகை. இப்போ குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாங்க" என்றார். பச்சைக்கிளி கூட்டுக்குள் போயிடிச்சாம்.
மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.
மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..
http://www.thehindu.com/thehindu/fr/...1501440201.jpghttp://2.bp.blogspot.com/-dmlzMGlCr9....Meiyappan.jpghttp://www.indiacatalog.com/images/l...cal/th_avm.jpg
AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
அவரது நினைவாக
http://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo
மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..
வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...
பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..
சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...
எஸ்.வரலக்ஷ்மியின் இனிமையான குரலில் வேலைக்காரன் படத்தில் ஆர்.சுதர்ஸனம் இசையில்...
என்னது வேலைக்காரனில் எஸ்.வரலக்ஷ்மியா சுதர்ஸனமா... ன்னு கேட்டுடாதீங்க..
1952ல் வெளிவந்த வேலைக்காரன் படத்திலிருந்து சார் இந்தப் பாட்டு.
நானே ராணி...
http://www.inbaminge.com/t/v/Velaikkaran%201952/
நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/v/Valaiyapathi/
குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
ஓடையிலே குளிர் ஓடையைக் கண்டேன்
இந்தப் பாட்டில் உள்ள மொத்த வரிகளை எண்ணி விடலாம்...
உலவும் தென்றல் காற்றை மெட்டில் மட்டுமல்ல கருத்திலும் நினைவூட்டும் பாடல்..
குலுங்கிடும் பூவிதனால் தேனருவி கண்டதனால் என்ற பாட்டால் புகழ் பெற்ற வளையாபதியிலிருந்து தான் இந்தப் பாடலும்.
தக்ஷிணாமூர்த்தி இசையில் இனிமையான பாடல்
chinnakannan sir
சூரியகலா- [வயது-72] பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. ஜே.பி.சந்திரபாபுவுடன் குமார ராஜா, ஏ.வீரப்பனுடன் சாது மிரண்டால், இல்லறமே நல்லறம் படத்தில் எஸ்.வி.ராம்தாஸின் காதலியாக இருந்துகொண்டே சித்தூர் வி.நாகையாவை மயக்கி தன் வலையில் வீழ்த்தும் நடனக்காரியாகவும் அன்பு எங்கே, கண் திறந்தது உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும் பெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான “சொர்ண சுந்தரி”, 1957-இல் வெளிவந்த “பலே அம்மாயிலு” போன்ற தெலுங்குப் படங்களிலும் கன்னட மொழியில் சில படங்களிலுமாக மும்மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சூரியகலா. இவர் கடந்த 30.06.2014 அன்று இரவு 10.00 மணியளவில் சென்னையில் தனது 72-ஆவது வயதில் காலமானார்.
http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=348http://antrukandamugam.files.wordpre...pg?w=593&h=341
இவர் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் ரஜினி காந்துடன் 'அன்பரே உங்களை ஒருமுறை பார்த்தேன் பாரத்ததும் பரம ரசிகை ஆகி விட்டேன் "
என்ற குரலுக்கு சொந்தகாரர் போல் காமெடி செய்து ஏமாற்றுவார் .
இந்த படத்தில் ரூம் clearner வேடத்தில் வருவார் drums விசு (ராஜப்பா) இவரை 'நம்ம ஊர் குப்பம்மா ' என்று கூறுவார்
நான் எம்எஸ்வி ரசிகனாக்கும்... எனக்கு 22 இன்னும் முடியலே...
http://www.inbaminge.com/t/j/Jaathagam/
சிந்தனை ஏன் செல்வமே....
இன்ப துன்பம் இரண்டும் வாழ்வில்
மாறி மாறி வருமே..
சார் இது என் பஞ்ச் இல்லை... பி.பி.ஸ்ரீநிவாஸின் முதல் படமான ஜாதகம் திரைப்படத்தில் பாடிய பாட்டில் வரும் வரிகள்..
என்னது நான் கோவக்காரனா...
எவன்யா சொன்னது...
இந்த நேரத்திலே கையிலெ எதுவும் மாட்டமாட்டேங்குதே...
எவனாவது கோவக்காரன் சொல்லியிருப்பான்...
இருக்கட்டும் அவனை ஒரு கை பாத்துக்கறேன்..
இன்னொரு கை..
போனால் போகுது விட்டுடலாம்.. இங்கே எழுதணுமே...
சூரியகலா பற்றிய தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணா சார்..ம்ம்
இப்போ மனசுக்குள்ள ஒலிக்கிற பாட்டு டி.ஆர் மகாலிங்கம் சுசீலா பாடிய பாட்டாக்கும்..இசையரசியின் துள்ளல் குரல் அண்ட் டி.ஆர்.எம்மின் கணீர்க் குரல்.. நல்ல கெமிஸ்ட்ரி..அந்தக்காலத்திய..
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ
.
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்
முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
மதுண்ணா கொஞ்சம் பெரிய இடம் குசும்புன்னுல்லாம் கேக்காதீங்க... என்ன ஊரா.. மன்னார் குடி :)
பொங்கும் பூம்புனல்
வருங்காலத் தலைவன் நீயே பாப்பா வளர் தமிழ் நாட்டிலே பிறந்ததினாலே...
இது எந்த நேரத்தில் எழுதிய வரியோ... ஏகப் பட்ட அர்த்தமிருக்குது இந்தப் பாட்டிலே...
தலைவரின் கண்கள் திரைப்படத்தில் எம்.எல்.வி. அவர்கள் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாடிய மதுர கானம்...
மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
http://www.inbaminge.com/t/k/Kangal/
நிச்சயம் ... மறக்க முடியுமா... அதற்கப் பிறகு நாம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை... முரளி சார் தங்களை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தாரே...
அருமையான பாடல் சின்னகண்ணன் சார்
வேந்தர் சூரிய லோகத்தில் இருந்து பிடிக்கிறார் என்றல் நீங்கள் சந்திர லோகத்தில் இருந்து பாடல்களை பிடிக்கிறீர்கள் .நாங்கள் எல்லாம் எங்கே செல்வது ?
ஜோ அவர்களை சந்தித்தேன் அதன் பிறகு.. அதுவும் முரளி சாரின் தயவால் தான்...
பொங்கும் பூம்புனல்
போவோமே புது உலகம்...சொல்லப் போனால் போய்க்கொண்டிருக்கிறோம்..
மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே... புதுப்புது சந்தோஷங்களை மனம் தேடிக்கொண்டு தானிருக்கிறது
http://www.youtube.com/watch?v=PTtsuCeODvU
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. டி.ஜி.லிங்கப்பா நம்மை அழைத்துச் செல்கிறார், ஏ.எம்.ராஜா பி.சுசீலா குரல்கள் மூலமாக
பொங்கும் பூம்புனல்
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...
பின்னாளில் வந்த தேன்கிண்ணம் ஹலோ பார்ட்னர் படங்களின் கலப்படப் பாட்டு சூழ்நிலைக்கு முன்னோடியான பாட்டு.
கடன் வாங்கி கல்யாணம்..
எஸ். ராஜேஸ்வர ராவின் இசையில் ஒரு சிறப்பம்சம்... மேண்டலின் பிரயோகம்... சூப்பராக இருக்கும்...
http://www.youtube.com/watch?v=dGDz7PcW3Co
பொங்கும் பூம்புனல்
சூர்யகலா பற்றி இவ்வளவு பதிவுகள் வந்திருக்கும் போது நாம் ஒன்றாவது போடக் கூடாதா...
மாடர்ண் தியேட்டர்ஸ் வேதா கூட்டணி ஆரம்பித்து வைத்த படம்... அன்பு எங்கே..
வேதா இசையில் ஜிக்கி பாடிய அபூர்வமான பாடல்களில் ஒன்று இடம் பெற்ற படம் அன்பு எங்கே...
சூர்யகலாவின் அற்புத நடனம் இடம் பெற்ற பாடல் இடம் பெற்ற படம் அன்பு எங்கே..
மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு..
அந்த காலத்திலேயே இந்த மாதிரி வரிகளா. என்று கேட்கிறீர்களா..
அதான் இருக்கவே இருக்காரே தஞ்சை ராமய்யாதாஸ் என்று அந்த காலத்தில் கூறுவார்களாம்..
நான் சொல்லவில்லை சாமி.
ராக் அண்ட் ரோல் மெட்டில் தூள் கிளப்பிய பாடல்...
ஹௌரா ப்ரிட்ஜ் படப் பாடலை அப்படியே நினைவூட்டும் மெட்டு..
https://www.youtube.com/watch?v=mHJfDtPa8Pw
இந்தப் பாட்டில் குரல் கொடுத்திருப்பவர்களில் ஒருவர் கே.ஜமுனாராணி. இன்னொருவர் டெஸ்மாண்ட்..இவர் மெல்லிசை மன்னரின் இசையிலும் சிலபாடல்களில் கோரஸ் குரல் தந்திருக்கிறார்...
இப்பாட்டில் இசையமைப்பாளர் வேதாவின் இசைக்குழு இடம் பெற்றிருக்கிறது.. அவரும் இப்பாட்டில் தலையைக் காட்டியிருக்கிறார்.
கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.. கேட்டிருப்பவர் இப்பாடலை இணையத்தில் தரவேற்றிய நமது மய்ய நண்பர் பேராசிரியர் சேக்கரக்குடி கந்தசாமி அவர்கள்..
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..
மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..:)
*
டி.ஆர்.எம் சுசீலா காம்பினேஷன் ஒரு டைப் என்றால்
சீர்காழி எஸ்.ஜி அண்ட் சுசீலாம்மா வேறொரு டைப்..
மதுரையில் தெப்பக்குளம் போகும்வழியில் இருந்தது அந்ததியேட்டர்.. கணேஷ் தியேட்டர் என நினைவு.. அங்கு என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..மேட்னி ஷோ...
சரித்திரகாலப் படம் தான் ஆனந்தன் சரோஜா தேவி..படப்பெயர் நினைவு வந்திருக்குமே.. யானைப்பாகன்..
இனி பாடல்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே..
பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் உருவம்
சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்
கன்னியின் ஆவல் தனைகடைக்கண் சொல்லும்கண்ணே
எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லும் முன்னே
அலை மோதும் உணர்வாலே கனலாகவே
உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே
நிழலாகி உருவான காதல் தன்னை
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
**
நல்ல பாட்டு தானே..