அதனால் தானே எம்ஜிஆர் அவர்கள், மக்கள் திலகம் என்று போற்றப் படுகிறார்.
Printable View
இனிய நண்பர் செல்வகணேஷ் சார்
நீங்கள் சொல்லியது நூற்றுக்கு நூறு சரியே.மக்கள் எப்போதும் தனிப்பட்ட சமூக ஆவலர்களை துல்லியமாக எடை போட்டு ஆதரித்து வந்துள்ளனர் .மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் கடந்து சென்றாலும் அவருடைய புகழின் செல்வாக்கும் , அவரது உண்மையான லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது [ 1991-2001 -2011 மூன்று பொது தேர்தலில் அமோக வெற்றி மூலம் அறியலாம் ] வரலாறாகும் .
உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய சக்தி கொண்ட ,தனி மனிதனின் அழியா புகழ் வரலாறு கிடையாது . ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் பெற்ற புகழை ஜீரணித்து கொள்ள முடியாத ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்துக்கள் -
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .
எம்ஜிஆர் - ரசிகர்கள் - ஒன்றை நினைத்தோம் - 1972
நினைத்தை முடித்தோம் -1977
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ?
மக்கள் என்றுமே புத்திசாலிகள் ...
நன்றி மறவாதவர்கள் .
பகைவனுக்கும் அருளிய பரமாத்மா.
http://i43.tinypic.com/10wtwfa.jpg
நம் இதய தெய்வத்தின் வெற்றியும், புகழும் எளிதில் கிட்டியதல்ல. சிறு வயதிலிருந்தே அவரது அயராத உழைப்பும், திரையிலும், பொது வாழ்விலும் அவர் காட்டிய உண்மையும், நேர்மையுமே அவரை திரையில் முதல் இடத்திலும், அரசியலில் முதல்வராகவும் ஆக்கியது. அவரது வெற்றியும் இன்று வரை தொடர்கதையாக உள்ளது. அவர் திரையில் கூறியவற்றை எல்லாம் பொது வாழ்வில் செய்து காட்டினார். அதில் உண்மைதான் இருந்ததே தவிர எள்ளளவும் நடிப்பில்லை என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதில் ஒரு வரலாற்று உண்மையை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நமது மக்கள் திலகம் 1967ம் ஆண்டு குண்டடிபட்டபோது நடந்தபோது பத்திரிகைகளிலும் வெளிவந்து கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் அறிந்த நிகழ்வுதான் என்றாலும் அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். திரு. எம்ஜிஆர் அவர்களும் எம்.ஆர். ராதா அவர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஆர். ராதா அவர்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக தன் கைத்துப்பக்கியால் எம்ஜிஆரை நோக்கி சுடும்போது, எம்ஜிஆர் சற்று குனிந்ததால் அந்த குண்டுகள் கழுத்தில் பாய்ந்தன. அப்போது எம்ஜிஆர் அவர்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டே, எம்.ஆர்.ராதாவை பார்த்து கேட்ட கேள்வி 'என்னண்ணே இப்படி செய்துட்டீங்க'. இப்படி கேட்க யாரால் முடியும். ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுங்கள் என்று இயேசுபிரான் சொன்னதைப்போல, தன் உயிருக்கு ஆபத்து விளைவித்துவிட்டார் என்று தெரிந்தும், அவர் மீது இருந்த மரியாதை மாறாமல், அவரை தூற்றாமல், என்னண்ணே இப்படி செய்துட்டீங்க என்று கேட்டிருக்கிறாரே இதற்குமேல் அவரது உள்ளமும் அதிலிருந்த உண்மையையும் கூற உதாரணங்கள் வேண்டுமோ. ஒவ்வொரு மனிதன் என்னதான் பொது வாழ்வில் நடித்தாலும், அவன் உணர்ச்சிவசப்படும்போதும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும், அவன் காட்டுகின்ற வெளிப்பாடு அவனைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் தன் உயிருக்கு ஆபத்து என்றபோதும், அவர் சொன்ன வார்த்தைகள், அதிலிருந்த மரியாதை ஒன்றே போதும் அவர் எத்தகைய மாமனிதர் என்று.
எம்ஜிஆரை சுட்டுவிட்டோம்- இனி என்ன நடக்குமோ என்று பயந்து எம் ஆர் ராதா அவர்களும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மயங்கி வீழ்ந்தார். திடீரென்று நடந்த, அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த படத்தயாரிப்பாளர் வாசு மற்றும் அவருடைய உதவியாளரும், வீட்டில் இருந்த உதவியாளர்களும் விபரீதத்தை உணர்ந்து எம்ஜிஆரை தூக்கிக்கொண்டு காரில் ஏற்றும்போது, நம் இதய தெய்வம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? 'என்னையே எல்லோரும் பார்க்கறீங்க', அங்கே அண்ணன் கிடக்கிறார் அவரையும் பாருங்க' என்று சொன்ன மனித நேயம் மிக்க மாமனிதர்தான் புரட்சிதலைவர் எம்ஜிஆர். இதற்கு மேல் நம் மக்கள் திலகத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது..அப்படிப்பட்ட மாமனிதரை, பகைவனுக்கும் அருளிய பரமாத்மாவை தெய்வமாக வணங்கும் நாம், பாக்கியம் செய்த பக்தர்கள். இன்னும் வள்ளலைப் புரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்ப படியுங்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
1967 ல் நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி மிகவும் தெளிவாக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள் .
1967 ஜனவரி - மக்கள் திலகம் குண்டடி பட்ட செய்தியினை அன்று இரவு வானொலி செய்தி மூலம்
அறிந்து எங்கள் கிராமமே அதிர்ந்தது . மறுநாள் செய்தியில் அவருடைய உயிருக்கு ஆபத்தில்லை
என்றதும் நிம்மதி அடைந்தனர் .அவருடைய குரலில் பாதிப்பு இருந்ததால் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - இயக்குனர்கள் - ரசிகர்கள் - பொதுமக்கள் மத்தியில் ஒரு வித கலக்கம் இருந்தது .
மக்கள் திலகம் அவர்களின் கடுமையான முயற்சியினாலும் , தன்னம்பிக்கை யாலும் தன்னுடைய சொந்தக்குரலில் பேசி வெற்றி பெற்றார் .
பலர் கிண்டல் கேலி பேசினார்கள் . எதையும் மக்கள் - ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை .
வெற்றி மேல் வெற்றி - 1967- 1977
11 ஆண்டுகளில் 44 படங்கள் தந்து 22 வெற்றி காவியங்களை வழங்கியவர் நம் மக்கள் திலகம் .
1972 ல் பாரத் - பட்டம்
1972ல் புரட்சி நடிகர் - புரட்சி தலைவராக உருவானார்
1977-1987 தமிழக முதல்வராக பணியாற்றினார் .
1988ல் பாரதரத்னா - பட்டம்
மக்கள் திலகத்தின் உழைப்பிற்கும் , மனிதநேயத்திற்கும் , கிடைத்த விருதுகள் .
இன்றும் திரையுலகை ஆளும் இதயக்கனி
http://i44.tinypic.com/206let1.jpg
சமீபத்தில் வந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'தேசிங்கு ராஜா' படத்தில், படத்தின் நாயகன் (விமல்) பெயர் இதயக்கனி. அவர் வைத்திருக்கும் கடையில் எம்ஜிஆரின் இதயக்கனி படம் போட்ட விளம்பர பலகை வைத்திருப்பார். அதை இரண்டு காட்சிகளில் காட்டுவார்கள். மேலும் ஒரு காட்சியில் விமல் கதாநாயகியைப் பிரிந்திருக்கும்போது, படகோட்டியின் 'பாட்டுக்கு பாட்டெடுத்து' பாடலைக் கேட்டு ஆறுதலடைவார். மக்கள் திலகத்தின் தாக்கம் இன்றைய புது படங்களிலும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
திரு வினோத் சார், சாதாரண சின்ன நடிகர்களே லட்சகணக்கில் பேசும்போது உண்மையாக அதிர்காரபூர்வமாக கோடானுகோடி பொதுமக்கள் ரசிகர்களை மறைந்த பின்னும் பெற்றிருக்கும் மக்கள்திலகம் அவர்களை யாரால் எவரால் எடை போட இயலும்? ஒரு திருத்தம் - பாரதரத்னா விருது திரு mgr -இக்கு தரப்பட்ட வருடம்-1988. மற்றபடி குண்டடி பட்ட பிறகும் அந்த பழுது பட்ட -ஒரு நடிகனுக்குரிய முக்கிய அம்சமாக கருதப்பட்ட குரலோடு திரைஉலகில் ஈடுபட்டு மிக பெரிய வெற்றியை ஆதாரபூர்வமாக பதிவு செய்தது -உலக அளவில் யாராலும் ஒப்புமை இல்லா வெற்றியாக தான் அனைவராலும் கருதபடுகிறது .....
மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். தேவர், மக்கள் திலகம் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!
குண்டடிப்பட்ட பின்னர் தான், மக்கள் திலகம் இன்னும் பெரும் வெற்றிகளெல்லாம் குவித்தார் என்பது வரலாற்று உண்மை.
உண்மை திரு. வினோத் சார். மக்கள் திலகத்தை அவருடைய ரசிகர்கள் நடிகராகப் பார்க்கவில்லை. தங்கள் வீட்டில் ஒருவராக, ஒரு அண்ணனாக, தம்பியாக, தாய்க்கும்-தந்தைக்கும் ஒரு மகனாக, பாசமுள்ள சகோதரனாக பார்த்து எங்க வீட்டுப்பிள்ளை என போற்றி மகிழ்ந்தார்கள். அதனால் அவருக்கு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பையும் தங்களுக்கு ஏற்பட்டதாக பாதிப்பாக கருதி, இன்றும் அவரை இதய தெய்வமாய் வணங்குகிறார்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்
.......
ஒவ்வொரு நடிகர் நடிகையர் -அரசியல் தலைவர் - இப்படி ரசிகர்கள் தொண்டர்கள் அனுதாபிகள் வேறுபட்வும் அவ்விஷயத்தை யாரோடும் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் அதற்கு மாறான தகவல்களை தான் கூறிகொண்டிருக்கிறார்கள் என என் நண்பர் உறுதியாக சொனதை இங்கு தெரிய படுத்துகிறேன் தோழர்களே -இது சரியா? தவறா?டுத்தான் இருப்பர். ஆனாலும் அவர்களின் அடிமனதிலும், முக்கியமாக மனசாட்சி- படியும் உண்மையான ஒரு அளவுகோல் இருக்கும்,
1967 -1977
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் நிகழ்த்திய சாதனைகள் .
1967 - சிறந்த படமாக ''காவல்காரன் '' தேர்வு - அந்த ஆண்டில் அதிக வசூல் பெற்ற படம் .
1968- குடியிருந்தகோயில் - சிறந்த நடிகர் - 10 அரங்கில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை .
1969- அடிமைப்பெண் - சிறந்த படம் விருது - பிலிம் பேர் -வெள்ளிவிழா - 14 அரங்கில் 100 நாட்கள் .
1970 - மாட்டுக்காரவேலன் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை
1971- ரிக்ஷாக்காரன் - 23 வாரங்கள் - வசூலில் சாதனை - பாரத் பட்டம் .
1972 - சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் .nalla neram
1973- உலகம் சுற்றும் வாலிபன் - மகத்தான சாதனைகள்
1974- உரிமைக்குரல் - வெள்ளிவிழா - வசூலில் சாதனை
1975- இதயக்கனி 10 அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்
வசூலில் சாதனை .
1976- நீதிக்கு தலை வணங்கு - 100 நாட்கள் ஓடியது
1977 - இன்றுபோல என்றும் வாழ்க - மீனவ நண்பன் வெற்றி படங்கள் .
நம்நாடு திரைப்படம் - அன்றைய, இன்றைய அரசியல் என்று இல்லாமல் என்றைக்கும் உள்ள அரசியல் நிலவரத்தை நீக்கமற சித்தரித்த படம். இது கூட மக்கள்திலகத்தின் சொந்த தயாரிப்பு போன்ற விஜய வாகினி பெயரில் வந்தது என கூறலாம் , நாட்டு நடப்பு வசனங்கள் காட்சி அமைபைபுகள் விளங்கியது...வாங்கையா பாடல் பின் வரும் எதிர்கால நிகழ்வுகளை கோடிட்டு காட்டியது எனவும் கூறலாம் ...
டாக்டர் எம்.ஜி.ஆர். வகித்த முக்கிய பதவிகள்
தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டம் துணை தலைவர் - 1967
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்- 1962 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் - 5 முறை 1967, 1972, 1977, 1980 மற்றும் 1984
தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர் -
திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளர் - 6 ஆண்டுகள்
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - 16 ஆண்டுகள்
(உச்சமாக) தமிழக முதல் அமைச்சர் மூன்று முறை - 1977, 1980, 1984
தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாட்கள் - 04/07/1977,09/06/1980,10/02/1984
நடிகர் சங்க பதவிகளில் இருந்த வருடங்கள்-
தலைவர் 1958, 1961
துணைத் தலைவர் 1952,1953
செயலாளர் 1955
பொதுச் செயலாளர் 1954, 1957
மதுரை - மீனாக்ஷி பாரடைஸ் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''அடிமைப்பெண் ''
படம் திரையிடப்பட்டுள்ளது .
கோவை - நகரில் ''நம்நாடு '' ஓடிகொண்டிருக்கிறது .
1969ல் வெளியான இந்த இரண்டு படங்களும் 44 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .
மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை நகரில் 4 அரங்கில் ஓடிய விபரம்
மதுரை வீரன் -1956
அடிமைப்பெண் -1969
மாட்டுக்கார வேலன் - 1970
நல்ல நேரம் -1972
from 30.08.2013 chennai mahalakshmi
dharmam thalai kakkum
msg from mr.loganathan, chennai
http://i43.tinypic.com/2e2dk7d.jpg
திரு மாசானம் அவர்களுக்கு, மக்கள்திலகம் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் ஆக 1971-ஆம் வருடம் இருந்தார். சரி , மற்ற பதிவாளர்கள் இங்கு எப்போதும் போல அரிய ஆவணங்களை முறையாக பதிந்து அனைவரும் படித்து பார்த்து பலன் அடையலாமே!!! யாவரின் கருத்துக்களை பாசத்துடனும் அன்புடனும் எதிர்பார்க்கும் உறுப்பினன் ...
MIMICRY ARTISTS & LEGENDS... FYI
http://devimanian.blogspot.in/2013/0...post_5820.html
From Net posted by Tenali Rajan.
http://i125.photobucket.com/albums/p...ps2d0d6cfe.jpg
MGR as James Bond
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் இனிய தகவல் .
நம் ஆவணதிலகம் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான ''மக்கள் திலகம் மலர் மாலை ''-1
முதல் பதிப்பு வெற்றிகரமாக பெங்களுர் நகரில் 14.4.2013ல் நடந்தேறியது .
தற்போது மக்கள் திலகத்தின் மலர்மாலை -1 இரண்டாம் பதிப்பு விற்பனைக்கு வர உள்ளது .
1.9.2013 ''இதயக்கனி '' மாத இதழின் பின் அட்டையின் உள் புற அட்டை படத்தில்
மக்கள் திலகத்தின் மலர் மாலை -1 விளம்பரம் வந்துள்ளது
http://i1273.photobucket.com/albums/...ps8f610845.jpg
மக்கள் திலகம் மலர் மாலை -1 புத்தக விமர்சனம் .
எம்ஜியார் ரசிகர்கள் கூறிய கருத்துக்கள்
.
வின்ஸ்டன் டான் - என்னுடைய நீண்ட நாள் கனவு இந்த மலர் மாலை புத்தகம் மூலம் நிறை வேறி உள்ளது .
ரவி .- மக்கள் திலகத்தின் அட்டகாசமான .இது வரை பார்க்காத நிழற் படங்கள் அடங்கிய தொகுப்பு பிரமாதம் .
நீலகண்டன் - திரு பம்மலாரின் தலையங்கம் - வைர வரிகள் .
முரளி - 134 எம்ஜிஆர் படங்களும் மனதை கொள்ளை அடிக்கிறது .
வெங்கடேஷ் - எம்ஜிஆருக்கு இந்த மாதிரி யாரும் இது வரை புத்தகம் போடவில்லை .
மோகன் குமார் - உலக தரம் வாய்ந்த உன்னத புத்தகம் .
http://i39.tinypic.com/6tp7o5.jpg
மணி - எம்ஜிஆரை நேரில் பார்ப்பது போல உணர்வு தூண்டுகிறது .
கண்ணன் - புதுமையான முயற்சி -திரு பம்மலாரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி .
கஜநாத் சிங்- எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்யும் இந்த காலத்தில் இப்படி ஒரு மெகா சைசில் மக்கள் திலகத்தின் சினிமா படங்கள் வந்திருப்பது சாதனையே .
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
தாமஸ் - எங்கள் எம்ஜிஆரின் எல்லா போஸ் படங்களும் சூப்பர் .
யூனுஸ் - உலக வரலாற்றில் முதல் முறையாக மாஸ் ஹீரோ எம்ஜிஆருக்கு இப்படி ஒரு பிரமாண்ட மலர் படைத்த திருபம்மலாரை எப்படி பாராட்டினாலும் தகும் .
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடரும் ....
வினோத் சார்,
பம்மலாரின் புத்தகத்தை பாராட்டி தங்களிடம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.
குறிப்பாக
இந்தப் பாராட்டளித்த ஜெய் சாருக்கும் என் நன்றிகள்.Quote:
ஜெய் - நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவர் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மலர் மாலை புத்தகம்
வெளியிட்டிருப்பது மூலம் அவருடைய பெருந்தன்மை புலப்படுகிறது .
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இக்காலத்தில், இது போன்ற புத்தகத்தை பம்மலார் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களோடு நிறுத்தி விடாமல் அந்தக் காலத்துக் கலைஞர்கள் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
நேற்று (31.08.2013) புதுச்சேரி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகியின் இல்ல பிறந்த நாள் நிகழ்ச்சி. அறக்கட்டளையின் நிர்வாகி திரு. முருகவேல் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் திரு.வெற்றிவேல், தன்னுடைய அன்பு மகள் ஸ்ரீசந்த்யாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடினார். அவர் இல்லத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் திரு. வெற்றிவேல் அவர்களுடன் அறக்கட்டளையின் மற்றுமொரு நிர்வாகி திரு.உ. காந்தி.
http://i43.tinypic.com/2q39fs0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
திரு பம்மலார் அவர்களின்
சீரிய முயற்சியால்
உருவான உன்னத ஆல்பம்
மக்கள் திலகத்தின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் இரண்டாம் பதிப்பு வருவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் உழைப்புக்கு பொன்மனச்செம்மலின் ரசிகர்கள் உரிய மரியாதை தருவார்கள் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை. இந்த செய்தியை பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி.
வாழ்த்துகளுடன்
எஸ் ரவிச்சந்திரன்
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
மக்கள் திலகம் மலர் மாலை பற்றிய ரசிகர்களின் விமர்சனங்களை பாராட்டிய உங்களுக்கு நன்றி .
இரண்டாம் பதிப்பின் மூலம் விற்பனையாக உள்ள மலர்மாலை -1 நிச்சயம் எல்லோரின் அமோக
ஆதரவையும் பெற்று புத்தக உலக வரலாற்றில் ஒரு சாதனை படைக்க போவது திண்ணம் .
இனிய நண்பர் திரு பம்மலாரின் அயராத உழைப்பு - மலர் மாலைக்கு கிடைத்த வெற்றி .
விரைவில் மக்கள் திலகம் மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் ஒரு பிரமாண்டமான அரிய
தகவல் பெட்டகமாக வர இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் .
இனிய நண்பர் திரு ரவி சார்
ஜெமினி சினிமா இதழில் மக்கள் திலகத்தின் அட்டை படம் சூப்பர் . கட்டுரையும் அருமை .
சென்னை - மஹாலக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் தர்மம் தலைகாக்கும் நடை பெறுகிறது
என்ற தகவலுக்கு நன்றி
http://i41.tinypic.com/2e512ys.jpg
சோதனைகள் பலவென்று முதல்வராகி ஏழைகளின்
வேதனைகள் தீர்த்த வெற்றி நாயகன் எம்ஜிஆரின்
சாதனை மலர் மாலை-2 காணும் பம்மலார்க்கு-இப்
பாதனை வாழ்த்தாக்கி மகிழ்கின்றேன்!
கடந்த திங்கட்கிழமை (26.08.2013) பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகி திரு.ராஜாராம்-ஹேமலதா இணையரின் திருமணம் புதுச்சேரியில் இனிதே நடந்தேறியது. திருமணத்திற்கு மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் நடிகர் சார்லி, இதயக்கனி இதழ் ஆசிரியர் விஜயன், பிரான்ஸ் பேரவைத் தலைவர் திரு. முருகு. பத்மநாபனின் சகோதரரும், எம்ஜிஆர் பக்தருமான திரு. முருகசாமி (UDC, PWD, Puducherry) மற்றும் பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவை நிர்வாகிகள் பலரும் வந்திருந்து வாழ்த்தினர். திருமணத்திற்கு சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மனிதப்புனிதர் எம்ஜிஆர் விழா வருகின்ற 28.09.2013 அன்று பிரான்சில் நடைபெறவிருப்பதால் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாரத்தில் பிரான்ஸ் செல்லவிருக்கின்றனர்.
http://i44.tinypic.com/16k25av.jpg
http://i39.tinypic.com/2q317k4.jpg
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன்மகளே!
வாழைக்கன்று போல தலைவன் பக்கம்
நின்றிருக்கும் குலமகளே!