-
18th December 2014, 09:17 AM
#11
Junior Member
Newbie Hubber
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
நமது நாட்டில் வதந்தி போல பிம்பங்களை உருவாக்குவது சுலபம்.(சிறிய வயதில் ஜம்புலிங்கம் என்ற திருநெல்வேலி சேர்ந்த கொள்ளைக் காரனை பற்றி ராபின்ஹூட் ரேஞ்சில் படிக்காத முன்னோர்கள் பேசி கேட்டிருக்கிறேன்)இங்கு ஊர் பார்த்த உண்மைகள் என்று பரப்ப படுபவை பெரும்பாலும் வதந்திகளே. புறம் பேசியும்,ஊர் வதந்தி பேசியுமே வாழ்ந்த முன்னோர்களை கொண்ட ,பகுத்தறிவில்லா இனங்களை, அதே word of others ' mouth ,மற்றவர்கள் கேள்வி பட்டதில் இருந்து கேள்விபட்டதில் இருந்து சில சுயத்தை இணைத்து மற்றோர் காதுக்கு செய்தியாக்குவது.இதற்கு நாம் செய்ய வேண்டியது சொல்லளவில் இனிமை.(செயல் எப்படி இருப்பினும்).சில விளம்பரங்கள் தரும் நிலையிலுள்ள பத்திரிகையாளர் ,பொது வாழ்விலுள்ளோர்,எல்லோர் கண் படும் படி சில சாதா மனிதர்கள் இப்படி சிலருக்கு சராசரி உதவிகள் முதலீடு போல செய்து,அவர்கள் மூலம் ஊதி , சுய பிம்பத்தை பெரிதாக்கி, வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற புலிகேசி பாணி செயல் பாடு. ஒரு மூடநம்பிக்கையான கடவுளை தகர்த்து,அதற்கு பிரதியாக வசதியான தலைவர்களின் பதிலீடு. இங்கு மக்களுக்கு உணர்த்த வேண்டிய பத்திரிகையார்கள் ,சிறிய சலுகைகளுக்கு வாலாட்டி,அல்லது ஓஹோவென நரஸ்துதி செய்யும் அர்ச்சசையாளர்களாக மாற்ற பட்ட விந்தை.தனி பட்ட விபத்துகளை ,தேச பிரச்சினை போல ஊதி மக்களிடையே கொண்டு சென்று ஒரு இனைத்தையே மூளை சலவை செய்தது.நல்லவேளை செத்தவர்களுக்கும் வேட்பாளர்களாகும் உரிமை இருந்திருந்தால் நம் கதி???(நல்ல வேளை அம்பேத்கர் காப்பாற்றினார்)
இப்போது சொல்லுங்கள்,இங்கு பறிக்க படும் வெற்றி கனிகள் பாராட்ட தக்கதா?
தொடருவோம் கொண்டாட்ட தோல்விகளை.
டி.ஜி.லிங்கப்பா.
திருச்சியை சேர்ந்த கோவிந்த ராஜுலு லிங்கப்பா ,குடும்ப வழியில் சங்கீதம் பெற்ற மேதை. எல்லா இசையமைப்பாளர்களையும் மேதைகள் என்று புகழ்வதில்லை.(புகழ் பெற்று உச்சம் தொட்டவர்களை விட்டு விடுங்கள்).தக்ஷினாமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா போன்ற ஒரு சிலருக்கே அந்த புகழ் உண்டு. சி.ஆர் .சுப்பரமனுக்கு உதவி கொண்டிருந்த (ராமமூர்த்தி ,லிங்கப்பா இசை உதவி.ஆபிஸ் துடைக்கெவென்று சிலர்)லிங்கப்பாவுக்கு முதல் வாய்ப்பு டி.ஆர்.மகாலிங்கத்தின் சுகுமார் கம்பெனி மூலம்.வந்தது. டி.ஆர் மகாலிங்கத்தின் தயாரிப்பில் உதவியாக இருந்து பிற்கால பிரபலம் பந்துலுவுடன் தொடர்பு. அவர் தயாரிப்பாளரானதும்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியில் இருந்து பத்மினி பிக்சர்ஸ் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளர்.
ஹிந்துஸ்தானி இசை,கர்நாடக இசை,மேற்கத்திய இசை குத்து பாடல்கள்,கிராமிய பாடல்கள், என்று இவர் தொட்டு வெற்றியடையாத சங்கதிகளே இல்லை .கமாஸ் என்ற ராகத்தை இவர் சித்திரம் பேசுதடி ஆக்கிய விந்தை இன்றளவும் பேச படுகிறது.54 முதல் 60 வரை வருடம் ஒரு படம்,இரு படம் என்று பண்ணி கொண்டிருந்தவர் ,இங்கு விலை போகாமல்,கன்னடம் தாவி 1988 வரை தொடர்ந்தார். நடிகர்திலகத்திற்கு கிட்டத்தட்ட 6 படங்கள் பண்ணியுள்ளார்.நடிகர்திலகம்-பந்துலு இணைவின் கடைசி படமான முரடன் முத்துவுக்கும் இசை இவர்தான்.பிறகு 70 களில் கடவுள் மாமா என்ற பந்துலு படத்தில் பங்கேற்றார்.
குறிப்பிட தக்க பாடல்கள் (பெரும்பாலும் நடிகர்திலகம்)வெண்ணிலாவும் வானும்,கவியின் கனவில்,அதிமதுரா அனுராதா,காதல் உள்ளம்,ஒண்ணிலே இருந்து,தென்றலே வாராயோ,அமுதை பொழியும்,இகலோகமே,ராதா மாதவா,என்னருமை காதலிக்கு,சித்திரம் பேசுதடி,காணா இன்பம்,ஆசையில் ஊஞ்சலில்,கோட்டையிலே ,கல்யாண ஊர்வலம் பாரு,தாமரை பூ கொளத்திலே ,பொன்னாசை கொண்டோருக்கு,சந்திரபாபுவின் சில ஆங்கில மேற்கத்திய சாயல் பாடல்கள்.(ஒன்று நடிகர்திலகத்துக்கு)
இவர் யாருக்கு பாட முதல் வாய்ப்பு கொடுத்தாரோ ,அதே சந்திர பாபுவால் மோசடி செய்ய பட்டு ,இவர் இசையமைத்த குங்கும பூவே எஸ்.எம்.எஸ் பெயரில் வந்து பிரபலம் கண்டது. ரீதி கவுளையில் இவர் செய்த அற்புத பாடல் புத்தம் புது மேனி கே.வீ.எம் பெயரில் வந்து பெயர் பெற்றது.
இவரை ஒரு ,இரண்டாம் நிலை இசையமைப்பாளராக கூட அங்கீகரித்து பயன் படுத்தி கொள்ளாத குற்றத்தை தமிழ் பட உலகம் செய்தது. இவரும்,பந்துலுவும் ,கன்னடமும் போதும் என்று இருந்து விட்டார்.
இன்றும் நம் நெஞ்சில் மறையாமல். மோகனமாய் ,நிலவாய் அமுதை பொழிந்து நம்மை குளிர்வித்து கொண்டிருக்கும் தோல்வி.
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
18th December 2014 09:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks