-
21st April 2015, 09:44 AM
#1221
Junior Member
Newbie Hubber
உண்மை ஜோ. அற்புதமான பதிவு. மலையாளத்தில் வீட்டில் சம்சாரித்தவர்கள்,கன்னடத்தில் மாத்தாடியவர்கள்,தெலுங்கில் செப்பியவர்கள் அனைவரும் கொண்டாட பட்ட தமிழ் சமூகத்தால் ,நமது கலைஞர்கள்,கவிஞர்கள்,அரசியல் தலைவர்கள் ஜாதி சார்ந்த புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இதில் ,வு.வே.சா வும் ,பாரதியும், சிவாஜியும் கூட தப்பவில்லை என்பது கசப்பான உண்மை.
இன்றும் கூட கண்ணதாசனை கொண்டாடுபவர்கள் நகரத்தார் சமூகத்தினர். ஆனால் இரண்டாம் கம்பன் வாலி அவரை விட அதிகம் சாதித்தும் புறக்கணிக்க பட காரணம் அவர் சாதியே.
இதில் மிக அதிகம் பாதிக்க பட்டவர் நமது நடிகர்திலகம் என்ற உலக மேதையே. சொந்த சமூகத்தாரேலேயே கூட புறக்கணிக்க பட்ட அவலம் சொல்லி மாளாது.(இதற்கு பசும் பொன்-காமராஜ் ஊடல் முக்கிய காரணி)
கலைஞர் கூட இதில் விலக்கில்லை.தமிழ்த்தாத்தா வு.வே.சா பற்றியோ, பாரதி பற்றியோ மூச்சு விட மாட்டார். எம்.எஸ். இறந்த போது பத்தி எழுதும் இவர் எம்.எல்.வீ, டீ .கே.பீ (தமிழிசை பிரபலமாக உழைத்தவர்) பற்றி கண்டு கொள்ள மாட்டார்.
என்னை பொறுத்த வரை திருவள்ளுவர், கம்பர்,பாரதி,பெரியார்,புதுமை பித்தன்,சிவாஜி, காமராஜ்,கலைஞர் ,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,பாலசந்தர்,மகேந்திரன்,சோ, கமல் ஹாசன்,அசோகமித்திரன் போன்ற மேதைகள் ஜாதி வித்தியாசமின்றி ,தமிழறிந்த ,தமிழை மதமாகவும்,மொழியாகவும் பார்க்கும் அனைவராலும் கொண்டாட பட வேண்டிய உலக மேதைகள்.
இவ்வளவு சொல்லி இவ்வளவு தமிழ் எழுதி தமிழை தவிர வேறு மொழி அறியாத நானே தமிழனாக திராவிடம் அங்கீகரிக்கவில்லையே?வீட்டில் கன்னடமும்,தெலுங்கும் பேசும் நண்பர்கள்தான் உண்மை தமிழர்களாம்.
இந்த சாதி வெறிக்கு வித்திட்டது ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சிகள்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற குறுகிய நோக்கம் கொண்டவையே.எல்லோரையும் சாதியை சொல்லி பழிக்கும் நவீன தீண்டாமை இவர்களால் உருவானது.(மனுவின் பெரும் கொடுமை தீர்ந்து படும் நாளில் வெறுப்பு சார்ந்த இந்த திருப்பணி அரசியல் காரணங்களுக்காக நடந்தேறி நிறுவன மயமாக்க பட்டு சாதி கட்சிகள் கொடி கட்டி பறக்கின்றன)
பூணல் மறுத்து, மக்களை கலப்பு மணம் செய்வித்து பெரியாரை கொண்டாடும் எங்கள் போன்றோர் மூலையில் வேடிக்கை பார்க்கின்றோம்.என்ன ஒரு இழிவு. தமிழர்கள் இப்படியா பிரிந்து நிற்பது?கற்றறிந்தோர் இன்னும் அழ்ழமாக இந்த வெறியில் திளைப்பது இன்னும் ஆபத்தான போக்கு .(கல்யாண மாலை கண்டதில்லை?)
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
21st April 2015 09:44 AM
# ADS
Circuit advertisement
-
21st April 2015, 09:54 AM
#1222
Junior Member
Junior Hubber
Originally Posted by
SUNDARAJAN
அவன் ஒரு சரித்திரம் 007.
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன் செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா"
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
நான்... எனது.... என்ற அகந்தை கலந்த சுயகௌரவம் பாரிஸ்டரையே சாய்த்தது. நான்தான் சட்டம்... நான்தான் எல்லாம் என்று மூச்சுக்கு முன்னூறு தரம் தனக்கு 'இணை'யில்லை என்று பெருமைப்படுத்திகொள்ளும் கௌரவப்பித்து பிடித்த ஆணவக்காரர்களின் ஒட்டுமொத்தத் திமிரையும் ஒரே ஒரு சிவாஜி ரஜினிகாந்தாக எப்போதோ நமக்குக் காட்டிவிட்டார் சுந்தரராஜன். அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தானே இப்போது சிலர் போடும் 'அறிவாளி' ஆட்டங்களையும் பார்க்கிறோம்.
வெறுப்பு கொள்ள வைக்கும் கேரக்டரின் மீது அனைவரையும் வெறி கொள்ள வைக்க நம் வேங்கை சிவாஜியால் மட்டும்தானே முடியும்?
தங்கள் பணி போற்றத்தகுந்தது. தொடருங்கள் சுந்தர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st April 2015, 12:41 PM
#1223
Junior Member
Seasoned Hubber
Unprecedented audience turnedup for the occasion of Shanthi 50 Golden Years function. Inspite of ill health on that day I have
attended the function and witnessed the celebration. In one way this movie broke the record of PP in terms of attendance of the
audiences.
-
21st April 2015, 06:13 PM
#1224
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:15 PM
#1225
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:16 PM
#1226
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:18 PM
#1227
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:18 PM
#1228
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:20 PM
#1229
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 06:21 PM
#1230
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks