-
21st July 2016, 09:04 AM
#11
Senior Member
Diamond Hubber
நீ பிறந்தாய் உலகம் உன்னதமானது
நீ சிரித்தாய் உலகம் உவகையடைந்தது
நீ நடந்தாய் உலகம் கர்வப்பட்டது
நீ அழுதாய் உலகம் அழுது புரண்டது
நீ பேசினாய் உலகம் அளவளாவி மகிழ்ந்தது
நீ மறைந்தாய் உலகம் இருண்டு போனது
அசையும் பொருளை நிற்கவும், நின்ற பொருளை அசையவும் செய்த அசகாய சூரனே!
மரணம் உன்னை பிரிக்கலாம்
மனதிலிருந்து பிரிக்க எவரால் இயலும்?
கண்களில் கண்ணீரையும், பன்னீரையும் ஒருசேர வரவழைக்க உன் ஒருவனால் மட்டும்தானே இயலும்.
அப்பா.... அம்மா என்று உச்சரித்ததைவிட உன் பெயரைத்தான் அதிகம் உச்சரித்திருக்கிறோம். கோவிலில் தெய்வங்களை பார்த்தத்தைவிட உன்னைத்தானே அதிகம் தரிசித்திருக்கிறோம்.
மரணத்திற்கு மரணம் நிகழலாம்
உனக்கேது?
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
21st July 2016 09:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks