-
13th May 2017, 07:24 PM
#11
Senior Member
Devoted Hubber
நான் +1 படித்துக் கொண்டிருந்த காலம் வருடம் 1987 விடுதியில் தங்கி படித்து வந்திருந்தேன், அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை தோறும் " ஒளியும் ஒலியும் என்ற அரை மணி நேர நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலில் இருக்கும் என்பதனால் நாங்கள் விடுதியை விட்டு தெருவின் கோடியில் அமைந்திருந்த பஞ்சாயத்து டிவியில் பார்ப்பது வழக்கம், அப்போதெல்லாம் எல்லோருடைய வீட்டிலும் டிவி என்பது கிடையாது, அதனால் கூட்டம் நிரம்பி வழியும், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியில் ஐந்து முதல் ஆறு பாடல்கள் மட்டுமே இடம் பெறும், அந்த ஐ...ந்து பாடல்களில் நடிகர் திலகம் பாடல் ஒன்றாவது இடம் பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும்,
அன்றைய நிகழ்ச்சியில் நான்கு புதிய பாடலுடன் நடிகர்திலகத்தின் " சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே" எங்கிருந்தோ வந்தாள் படப் பாடல் இடம் பெற்றது, பாடல் ஓடிக் கொண்டிருந்த போது ஒருவர் நையாண்டி செய்தார், "சிவாஜி எதுக்கு பைத்தியம் பிடித்தவர் போல் நடிக்கிறார்"
நாங்கள் விடுதிக்கு வந்து அந்தப் பாடலை பற்றியே பேசிக் கொண்டோம் எதற்காக நடிகர் திலகம் அப்படி நடிக்கிறார், நாங்கள் யாரும் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பார்க்கவில்லை எனவே நடிகர் திலகம் கேரக்டர் பற்றி தெரிய வாய்ப்பில்லை,
ஆனால் நடிகர் திலகம் பாருங்கள் ஒரு பாடல் காட்சியிலேயே சாதாரண பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய நடிப்பை கொடுத்து இருக்கிறார்..
(முகநூல் பதிவு சிலரது பின்னூட்டங்களுடன்)
கதாபாத்திரத்தை தாண்டி நடிகன் தெரியக்கூடாது,,, சிவாஜி அவர்களின் நடிப்பின் சூட்ஷமமே அதில்தான் அடங்கி உள்ளது,,, இன்ன வேஷம் என்ற கூடு ஒன்று செய்து வைத்திருப்பார்கள்,,, அதற்குள்ளே போய் அழகாக உட்கார்ந்து கொண்டு பர்ஃபாமென்ஸ் செய்வார்,,, சுறுக்கமாக சொன்னால் கூடுவிட்டு கூடு பாயும் மாயாவி,,,,
.................................................. ..........
ஒரே பாடல் உன்னை அழைக்கும்.!பாடலில்
அண்ணன் ரொம்ப அழகாக
அவருக்கு பிடித்த உடையில்
கண்களில் நீர் ததும்ப நடித்திருப்பார். படத்தில் திருப்பு முனை காட்சி அது.!.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th May 2017 07:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks