Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan


    நாய்..நரிக்கெல்லாம்.. சிலை இருக்கும்.. இம் மண்ணில்!’ - சிவாஜி சிலையும் சேரனின் கவிதைச் சீற்றமும்!


    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரம் எல்லா திசைகளிலும் ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அரசும் நடிகர் சங்கமும் சிலை விவகாரத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. சிவாஜிக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை வெளிப்படுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் முடங்கிக்கிடக்க, சிவாஜி ரசிகர் மன்றங்கள், சிவாஜி சமூக நலப்பேரவை ஆகிய அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.

    இதனிடையே மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜிசிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் சேரன் காட்டமாக ஓர் கவிதையை எழுதியுள்ளார். தம் நண்பர்களுக்கும் நெருங்கிய வட்டத்துக்கும் அனுப்பிவைத்துள்ள அந்தக் கவிதை சிலை அரசியலை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழக மக்களால் பேசியும் பேசப்படாமலும் விடப்பட்ட ஷோபன்பாபுவையும் அவர் தன் கவிதையில் விட்டுவைக்கவில்லை.
    அந்தப்பாடல் இதோ...

    நாய்..நரிக்கெல்லாம்..
    சிலை இருக்கும்..
    இம் மண்ணில்..
    எம் காவிய நாயகனுக்கு
    சிலை இருக்கக் கூடாதா..?
    கடற்கரை முழுக்க
    ஊழல் கறைப் பட்டோர்
    கல்லறைகளாய் கிடக்க..
    இம் மண்ணின்
    வைர மகனுக்கு
    எம் மண்ணில்
    சிலை இருக்கக்
    கூடாதா..
    சோபன்பாபுக்கு சிலை..
    வீரம் பேசி கலை
    வளர்த்த எம்
    திரைத் திலகத்திற்கு
    சிலை இருக்கக் கூடாதா..

    காறித் துப்பக்கூட
    வெறுப்பாக இருக்கிறது..
    உள்ளுக்குள் சினமேறி
    நெருப்பாக கொதிக்கிறது...


    கவிதையோடு மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று பல விரக்தியான பதிவுகளை இட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிலை அகற்றப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை கறுப்பு நாள் என வர்ணித்துள்ள சேரனின் இன்னொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டுல கைய நீட்டிக்கிட்டு தப்பா வழிகாமிச்சவுங்க சிலை நூறுஇருக்கு இதுல சிவாஜி சிலைமட்டும் இடஞ்சலாம்?” என கொதித்திருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட சிவாஜி நினைவுதினமான 21-ம் தேதி சிவாஜி பற்றிய 5 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். சிவாஜியின் நடிப்பு ஆளுமையை சிறப்பாகக்கூறும் இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டது.




    இந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக குறிப்பிடும் சேரன், வீடியோவுக்கான ஒவ்வொரு ஷாட்களையும் தேடித்தேடி எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவனமாக பார்ப்பவர்களுக்கு அது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
    நடிகர்கள் சிவகுமார், மனோபாலா , YGM , MS பாஸ்கர், , விக்ரம்பிரபு, ஜெயப்ரகாஷ் இயக்குநர்கள் ரவிகுமார் சார், உதயகுமார், பிரபுசாலமன் மீரா கதிரவன் ஆகியோர் வீடியோவைப் பார்த்துவிட்டு உடனடியாக சேரனைத்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.

    “வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடான மனிதர்களுள் ஒரேமுகமாய் வாழ்ந்துகாட்டியவர் நடிகர்திலகம். அவர் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமையே” என வீடியோவை வெளியிடுவதற்கு முன் சேரன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை அகற்றத்துக்கு காட்டமான கவிதை எழுதும் அளவுக்குச் சென்ற சேரனின் சிவாஜிப்பற்று எத்தகையது என்பது கவிதையைப் பார்க்கும்போது தெரிகிறது.

    சிவாஜி குறித்து சேரன் வெளியிட்டுள்ள வீடியோ...


  2. Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •