-
11th December 2013, 10:18 PM
#40
Senior Member
Seasoned Hubber
நெல்சன் மண்டேலா
இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்
இன்னொரு காந்தியென
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்மரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?
நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று நாட்டுவரோ?
மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க
நிறைந்துயரந்த தமிழ்ப்பாவால்
நின்றுபணிந்தேத்திடுவோம்.
Last edited by bis_mala; 12th December 2013 at 06:42 AM.
B.I. Sivamaalaa (Ms)
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks