Scintillating Seventies - Folk
Scintillating Seventies - Light & Semi-Classical
Scintillating Seventies - Advent of WCM Technical Depth
Exhilirating Eighties - Early 80's fusion
Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration
Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)
New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)
New Age Nineties - The Malayalam Majesty
Maestro's Magic - 2000's
நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்.. பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். அதன் ஆரம்ப இசையே மகத்துவமானது.. நான் கவனித்த வரையில்.. அந்த ஆரம்ப இசையை கேட்க ஆரம்பிக்கையில் ரொம்ப குறைவான நேரத்தில் அது இசைக்கப்பட்டு முடிவடையப் போகிறதே என்ற ஏக்கம் தொக்கிக் கொள்கிறது. ஆனால் ராஜா கூடுமான வரையில் அதை நீட்டித்துக் கொண்டெ செல்லும் அழகு இருக்கிறதே! ஒவ்வொரு முறை அதைக் கேட்கும்போதும் அடையும் பரவச நிலையை வார்த்தையால் விவரிக்க முடியாது. வானில் வெகு நேர்த்தியாக ஒரு ஓவியத்தை இசையால் வரைகிறார் ராஜா.
ஆரம்ப இசையை லயித்து கேட்பதிலேயே பாடலின் சாராம்சம் கிடைத்து விடுகிறது. எதிர்பார்ப்பு - லாபம்(ப்ரேக் ஈவன்). அதிலிருந்து தொடங்கும் பாலு-ஜானகி உரையாடல் எல்லாமே அளவுக்கு மீறிய லாபம்.
இப்படி ஒரு இசையை வேறு எங்கிலும் காணமுடியாது என அதீதப் பற்றுடன் சொல்லலாம். ஆனால், யாரும் இதுபோல ஒன்றை இதுவரை தரவேயில்லை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
Last edited by venkkiram; 18th August 2014 at 06:55 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள்... (வருடம் 1992)
ராஜாவின் இசை ஒரு திருக்குறள்.. புறநானூறு, அகநானூறு, கம்பராமாயணம்..குரான்.. பைபிள் போல.. நூலின் ஏதேனும் ஒரு பக்கத்தை திறந்து ஒரு சிறிய பத்தியை வாசித்தாலும் அதைவைத்தே அன்றைய பொழுதினை நகர்த்த ஏதுவாறு சிந்தனைகளை அசைபோட பயனுள்ளதாக இருப்பதுபோல ராஜா என்ற இசை அருவியில் எந்த பருவகாலத்தில் குளித்தாலும் உடலும் மனமும் ஆரோக்யப்படும்.
ரம்மியமான பாடல் அமைப்பு!
இது என்ன ராகம், இதில் வேறெந்த இசையமைப்பாளர்கள் இதுபோன்ற ஒரு சிறப்பான பாடலை தந்திருக்கிறார்கள் என்ற அலசலை இலக்கண அறிவு கொண்ட மக்களிடமே விட்டுவிடுகிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
திரு விக்கியின் இணையப் பக்கத்திலிருந்து..
________________________________________________
How much can one count in one bar of music convey...?
An eternity..
கண்ணா வா கவிதை சொல்வேன் வா!
Watch that phrase 'bE' in the word 'MunbE' @ 1:27. (It's the opening words of First stanza - "Sruthi sErum munbE").
There is a micro pause between 'Mun' and 'bE'. That pause actually makes me skip a beat inside every time I listen to it!
First of all there is the pause..
And then the musical clarity of that phrase 'bE' (descending notes of 'mgsn')..
And then the continuity is still maintained as if that pause wasn't there...
And then there is the emotion of that phrase which can drain your soul..
Try singing that line with all these ingredients and you will begin to realize why there is only one S Janaki..
http://www.saavn.com/p/song/tamil/Ma...aa/HgRaSCJxD2o
_________________________________________
Last edited by venkkiram; 23rd August 2014 at 09:45 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
'தமிழ்த் திரை இசை' என்ற தேரில் சாரதியாக ராஜா! சீறி ஓடும் குதிரைகளாக ஜானகி, பாலு, யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், சித்ரா (இன்னொரு குதிரையாகவும் ராஜா என்ற பாடகர்), தேரில் கூடவே பயணிக்கும் பலப்பல வாத்தியக் கருவிகள் ( முக்கியமாக வயலின், புல்லாங்குழல், தபேலா, ட்ரம்ஸ், லீட் கிடார், பாஸ் கிடார், ஆர்கன் இப்படி நிறைய ), மற்றப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் .. இப்படி ஒரு கற்பனைச் சித்திரம் என்னிடம் சமீப காலங்களில் வந்து வந்து மறைகிறது. இதை வாசிக்கும் திறமையான ஒவியர்கள் எனது கற்பனையை நிறத்தில் வடிக்கலாம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
ஆஹா ,ஆஹா, நானே சுமாரான ஓவியன்.(தியரி நன்றாக தெரியும்)
கிருஷ்ண பரமாத்மா தேரில் இருக்கும் படம் வரைந்து பாகங்கள் குறித்து விடுகிறேன். கூடவே ,எதிரிகளின் மீது அம்பு விடும் அர்ஜுனனாக தாங்கள்.(சிறிது முத்து ராமன் சாயல் ஒகே யா?)ஜானகியை சற்றே வயதான அராபிய குதிரை ரேஞ்சில் அசத்தி விடுகிறேன். மலேசியா வாசுதேவனை குதிரையாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.
மன்னரே,பரிசு உண்டுதானே?
Last edited by Gopal.s; 23rd August 2014 at 06:52 PM.
நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting
வானொலிக்காக இளையராஜா இசையில் பி. சுசீலா பாடிய பாடலாம் இது, ‘அன்னக்கிளி’க்கு முன்பா, பின்பா என்று தெரியவில்லை
பொன்மேகலை!
Veena Vani--- Ilayaraja & Madurai.T.Srinivasan
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
இந்த படம் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இதன் ஆடியோ வெளியான சமயத்தில் நான் அடிக்கடி கேட்ட இனிமையான பாடல் வீனா வாணி. (ts ராகவேந்தரின் மகள் கல்பனா பாடியது)
இதே படத்தில் பவதாரிணியும் சாதனா சர்கமும் பாடிய 'ஆலாபனை செய்யும் மாலை பொழுது' என்ற பாடலும் பிரமாதம்.
Bookmarks