வரம் வேண்டி வந்தவள்
வாய்மூடி மௌனித்து
கைகூப்பி தொழுது
இதயம் கனிந்தே
இறையோடு இழைகிறாள்
பொல்லா உலகையும்
பூபோல ரசித்து
நில்லாமல் செல்லும்
காலத்தை வென்று
கூட்டுக்குள் குறுகாது
பரந்து விரிகிறாள் - தன்
சிறகை விரித்து
பிரபஞ்சம் அளக்கிறாள்.