-
15th March 2013, 06:21 AM
#3201
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்றைய சின்ன திரை விருந்து .
பகல் -1 மணிக்கு - நம்நாடு - கே டிவி
இரவு 10 மணிக்கு - தாயை காத்த தனயன் - சன் டிவி
-
15th March 2013 06:21 AM
# ADS
Circuit advertisement
-
15th March 2013, 04:39 PM
#3202
Junior Member
Veteran Hubber

"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.
தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"
"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.
மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.
அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.
எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.
எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.
குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 15th March 2013 at 04:44 PM.
-
15th March 2013, 04:40 PM
#3203
Junior Member
Platinum Hubber
Makkal thilagam in siriththu vaazhavendum rereleased in madurai - arasadi - vellaikkannu - theatre.
1974 makkal thilagam all three movies celebrated super hit at our madurai
1. Netru indru naalai - chinthamani - 125 days .
2. Urimaikkural cinip priya silver jubilee-
3. Sirithtu vazhavendum - new cinema . 100 days-
-
15th March 2013, 04:54 PM
#3204
Junior Member
Platinum Hubber
Dear selvakumar sir
very nice article about your experience by seeing makkal thilagam movies at your young age ,begining with makkal thilagam in kudiyiruntha koil 1968 and how you are turned as hardcore mgr fan . Really you are a great makkal thilagam mgr fan .
-
15th March 2013, 07:54 PM
#3205
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
"குடியிருந்த கோயில்" திரைப்படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 15-03-1968ல், என்னுடைய 12வது வயதில், முதன் முறையாக வெளியீடு செய்யப்பட்ட போதே இப்படத்தினை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். இந்த படத்தில் நமது மக்கள் திலகம் அவர்களின் அற்புதமான நடிப்பும், செவிக்கினிய பாடல்களும், அருமையான கதையும், காட்சி அமைப்பும், தாய் மீது கொண்ட பாசமும் என்னை அவரது ரசிகனாக, அந்த பால பருவத்தில், மாற்றியது.
தொடர்ந்து அவரது புதிய படங்களை முதல் நாளன்றே பார்க்க தொடங்கினேன். மறு வெளியீட்டில் திரையிடப்பட்ட பழைய படங்களையும் மீண்டும் மீண்டும் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். இது நிதர்சனமான உண்மை. எனது மனங்கவர்ந்த நாயகனின் மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பும், இளமை துடிப்பும், தாய்மைக்கு அவர் தரும் மரியாதையும், அண்ணன் - தங்கைப் பாசத்தையொட்டி பின்னாளில் வெளி வந்த மற்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக, வந்து, வெள்ளி விழா கொண்டாடி, வரலாற்று சாதனை படைத்து, அண்ணன் - தங்கை பாசத்தை தமிழ் திரை உலகத்துக்கு இதை விட சிறந்த முறையில் எவரும் உரைத்திட முடியாது என்ற உண்மையை உணர்த்திய "என் தங்கை", 1958 கால கட்டத்திலேயே மிக பிரமண்டாமாக எடுக்கப்பட்ட "நாடோடி மன்னன்", மற்றும் "மலைக்கள்ளன்", "மகாதேவி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", குலேபகாவலி"
"மர்மயோகி", "மந்திரிகுமாரி", "மன்னாதி மன்னன்" போன்ற படங்களின் மூலம் மேலும் ஈர்க்கப்பட்டு, அவரது தீவிர அபிமானியாக மாறினேன். ஒரு உழைக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் அல்லல்களையும், விவசாயி காணும், துயரங்களையும், மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், ஏழைகள் படும் அவஸ்தைகளையும் இவரைப்போல் திரைப்படங்கள் மூலம் எவருமே வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் இவர் மட்டுமே "ஏழைப்பங்காளன்" என்றழைக்கப்படுகிறார்.
மேற்கூறிய திரைப்படங்கள் மட்டுமல்ல அவரது அனைத்து படங்களிலும் ஒரு தனி முத்திரை படைத்திருப்பார். " தாலி பாக்கியம்" என்ற படத்தின் நேர்த்தியான காட்சி அமைப்புக்களும், கதையம்சமும், அப்படத்தில் இடம் பெற்ற "கோல் சண்டை" யும் பிரசித்தம் பெற்றவை. "தேர்த்திருவிழா" படத்தின் கருப்பு-வெள்ளை வெளிப்புறப் படபிடிப்பு காட்சிகளும், தேனினும் இனிய பாடல்களுக்காகவும் பல முறை பார்க்கலாம். அதே போன்று, "புதுமைப் பித்தன்" படத்தினை தொடர்ந்து,"காதல் வாகனம்" படத்தில் புரட்சித் தலைவர் பெண் வேடமிட்டு நடித்ததும் ஒரு புதுமையே. வெற்றி பெறாத ஒரு சில படங்களும் கூட ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றாத ஒரே நடிகர் உலகில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
நடிப்புக்கு மட்டும் வாங்கும் ஊதியத்திற்கேற்ப வெறுமனே நடிப்பதுடன் தனது கடமை முடிந்து விட்டதாக என்றுமே நமது பொன்மனச்செம்மல் கருதியது கிடையாது. அந்த படம் வெற்றி பெற, தனக்கு தெரிந்த ஏனைய தொழில் நுட்பங்களையும் படத்தில் புகுத்த வேண்டும் என்ற தணியாத ஆவலினால், பாடல்கள், எடிட்டிங், கதை காட்சி அமைப்பு மற்றும் இதர அலுவல்களில் அவரது முழுமையான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் இருக்கும். இதற்கென்று அவருக்கு தனி சம்பளம் கிடையாது. ஆனால், திரையுலகில் அவரது வளர்ச்சியை கண்டு பொறாமை படைத்த பொல்லாங்கு கூட்டம், அவரது தலையீடுகளும், குறுக்கீடுகளும் படங்களில் இருக்கும் என்று இட்டுக்கட்டியோரை, அவரது அந்த செய்கைகளினால் தான் படம் வெற்றிகரமாக அமைந்தது என்று உணர வைத்து, வாயடைத்த சம்பவங்கள் பல உண்டு.
அவர் படங்களில் வலியுறுத்தும் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டேன்.
எனது வாழ்க்கையில், நான் உயரிய சமூக அந்தஸ்து பெற்றுள்ளேன் என்றால் அதற்கு முழு காரணமும் நான் அனு தினமும் வணங்கி போற்றும் எனது குல தெய்வம் எம். ஜி.ஆர். அவர்கள்தான்.
எல்லாப் புகழும் எங்கள் இறைவன் எம். ஜி. ஆர். அவர்களுக்கே.
குடியிருந்த கோயில்" படம் வெளியான நாள் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய நாள் என்ற நினைவுகளுடன் இந்த தொகுப்பினை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
முதலில் இப்படத்துக்கு "இரு துருவம்" என்று பெயரிடப்பட்டு, பின்னர் "சங்கமம்" என மாற்றப்பட்டு பின்னர் "குடியிருந்த கோயில்" என இறுதி வடிவம் பெற்றது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மிக்க நன்றி செல்வகுமார் சார் .
என்ன ஒரு அற்புதமான பதிவுகளை வழங்கி உள்ளீர்கள்
தங்களின் ஈர்ப்பு தலைவன் மீது எப்படி வந்தது எப்பொழுது வந்தது என்பதனை மிகவும் அருமையாக நேர்த்தியாக உண்மையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்
-
15th March 2013, 08:04 PM
#3206
Junior Member
Platinum Hubber
குடியிருந்த கோயில்
15.3.1968
குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .
வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -ஜஸ்டின் - காந்தாராவ் - நடராசன்
ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
Last edited by esvee; 15th March 2013 at 09:29 PM.
-
15th March 2013, 08:06 PM
#3207
Junior Member
Veteran Hubber
குடியிருந்த கோயில் விளம்பரம்.

-
15th March 2013, 08:13 PM
#3208
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
15.3.1968
குடியிருந்த கோயில் முதல் நாள் பார்த்த அனுபவம் .
வேலூர் - ராஜா அரங்கில் முதல் நாள் மாலை காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது .
ராஜா அரங்கு முழுவதும் தோரணங்களாலும் , ஸ்டார் களாலும் அமர்க்கள பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் திருவிழாவாக காட்சி அளித்தது . ஒரு வழியாக நீண்ட போராட்டத்துக்கு பின் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது படமும் ஆரம்பமாகி விசில் சத்தமும் ஆரவாரமும் காதைபிளந்தது .
படம் துவங்கி சில நிமிடங்கள் கழித்து மக்கள் திலகம் அறிமுகமாகும் காட்சியில் துவங்கி ஆரம்ப சண்டை காட்சியில் தூள் கிளப்பும் மக்கள் திலகம் பின்னர்
உன் விழியும் என் வாளும்
என்னை தெரியுமா ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் யார் .. நான்யார் ..நீ யார்
துள்ளு வதோ இளமை
ஆடலுடன் பாடலை
குங்கும பொட்டின் மங்கலம்
அட்டகாசமான பாடல்களும் , மக்கள் திலகம் -குண்டுமணி - ஜஸ்டின் - காந்தாராவ் ஆகியோருடன் நடத்தும் சண்டை காட்சிகளும் இறுதி காட்சியில் நம்பியாருடன் போடும் சண்டைகாட்சிகளும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் .
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஒரு இனிய விருந்து படைத்தார் மக்கள் திலகம் .
அன்றும் இன்றும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மதுரை மீனாக்ஷி கோயில் புகழ் போல் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
செல்வகுமார் மற்றும் வினோத் சார் இருவரும் தங்களின் முதல் அனுபவத்தை வெளியிட்டதற்கு நன்றி. முதல் முறையாக வெளியிடப்படும் தலைவர் படம் அன்று பார்க்கும் அனுபவம் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து தலைவர் படத்தின் முதல் வெளியீடு அறிந்தது மீனவ நண்பன் படத்தில் தான். அப்போது எனது சகோதரர் மீனவ நண்பன் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்.
-
15th March 2013, 08:13 PM
#3209
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
ஆஹா என்ன ஒரு அற்புதமான தலைவனின் எங்க வீட்டுப் பிள்ளை போஸ்டர்கள் அருமை அருமை நன்றி கலியபெருமாள் சார் உங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்
இந்த பதிவு நீங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் நேரத்தில் பதிவு செய்கிறேன் காரணம் அந்த நேரத்தில் போனில் நீங்கள் மற்றும் தலைவரின் பக்தர்கள் அனைவரின் கைத்தட்டல்கள்
விசில் சத்தம் கரகோஷம் அனைத்தும் விண்ணை பிளந்தது
நல்லா தலைவனின் படத்தை enjoy பண்ணுங்க
-
15th March 2013, 08:15 PM
#3210
Junior Member
Veteran Hubber
குடியிருந்த கோயில் படத்தின் 100வது நாள் விளம்பரம்

Bookmarks