Page 32 of 51 FirstFirst ... 22303132333442 ... LastLast
Results 311 to 320 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #311
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பெறிய குயிலும் சிரிய குட்டியும்

    உள்ளே நுழைந்த போது
    இசைத் தென்றல்
    தாடியுடன் வரவேற்றது..
    ‘வாம்மா வா..
    பயிற்சி பண்ணிட்டயா..”” “

    மெல்லிய நகை சிந்தி
    ‘பண்ணிட்டேங்க..
    நீங்க செய்திருந்த
    மொத இரண்டு வரி பிரமாதம்
    அதுவும் சுபபந்து வராளில்ல
    விளையாடியிருக்கீங்க..”

    “என்ன பந்தோம்மா..
    உன் வரியைப் பாடிப் பாத்தியா...

    ஓ பாடட்டுமா..
    சுகமான தமிழ்ப்பாடல் நீயே...ஆஆ.
    “இல்லைம்மா. தப்பாப் பாடறே..
    ஆங்கிலத்தில எழுதிக் கொடுத்ததைத்
    தான் பாடறேன்..”
    “இல்ல அத அப்படியே பாடணும்..
    எங்க பாடு..
    ஸ்ஸோகமான்..தமில்ப்பாடள்...நீர்ர்ர்யேஹ்..”
    “.......” “
    ம்.. இப்படித் தான்..
    நீக்கும் யேக்கும் நடுல்ல
    நெறய ஈஈ போட்டுக்குங்க..
    வாங்க பதிவு செய்யும் அறைக்குப் போங்க..
    “............”
    இதாம்மா ஒங்ககிட்ட
    எனக்கு ரொம்பப் பிடிச்சது..
    பாட்ட அப்படியே ஆன்மால
    உள்வாங்கிட்டு
    படக்குன்னு கொடுக்கறீங்க பாருங்க” ” “
    அறையில் இருந்து வெளிவந்தவுடன்
    மலர்ச்சிரிப்புடன தயாரிப்பு சொல்ல
    “”எல்லாம் சரிங்க..
    சொன்னது நினைவிருக்கா..
    கொஞ்சம் பத்து கூடச் சொன்னேனே” “
    மலர் வாடி
    “இருக்கும்மா..வீட்டுக்குப் போங்க
    காசோலை வரும்..”

    காரில் ஏறுகையில்
    செயலாளினி சே..செகரட்ரி
    நினைவு படுத்தினாள்..
    இப்போ அந்த டிவிக்குப் போணும் மேடம்
    நீங்க தலைமை..போட்டிக்கு..
    ச்ரி..வண்டியத் தொலைக்காட்சி அலுவலக்த்துக்கு விடுப்பா..

    ஜம்மென்று கவுனும்
    முகமெல்லாம் சிரிப்புமாக
    சின்னப் பெண் அரங்கில் நின்று
    ‘இனிய மாலை மேடம்”
    “சரி பாடும்மா” “
    “........” “

    இதப் பாரும்மா
    நன்னாப் பாடறே நல்ல குரல்
    கொஞ்சம் மறுபடி அந்த வரி பாடு...
    “”பலகும் தமிலே பார்த்திபன் மகனே
    அழுகிய மேனி சொகமா..””
    “சே..இது இப்படியா இருக்கும்..”
    “இது கலந்திசை மேடம்.. நீங்க பாடினது..”
    “தமிழ்ல ரீ மிக்ஸ்னு தெளிவாச் சொல்லு...
    யா.. நான்பாடினது தான் இப்படி இல்லை
    பளகும் டாமிலே..பார்த்திபன் மகன்ன்னே ந்னு
    வரும்...
    சரியா.. நல்லா பயிற்சி பண்ணும்மா..
    அடுத்த முறை...”
    “ நன்றி மேடம்” “

    எதற்கோ வெளியில் வந்தால்
    சின்னது அன்னையிடம்
    சொல்லிக்கொண்டிருந்தது..
    “தப்பு என் மேல தான் மம்மி..
    அவங்க பாட்டு வேறயா
    அப்செட் ஆகிட்டாங்க..
    அடுத்த தடவை அவங்களோட
    புதுப்பாட்டு பாடி தகுதி பெற்றுடுவேன்..”
    “என்ன பாட்டுடீ..”
    “பொன் எலிழ் போத்தது புது ஸ்கையில்..””

    அருகில் சென்று
    சின்னவளை
    தனியாக வரச்சொல்லி..
    “திரைப்பாட்டெல்லாம் வேணாம்மா..
    நல்ல குரல்..
    கர்னாடிக்ல கொஞ்சம் பயிற்சி பண்ணு..” “

    சின்னது சென்றதும்
    மனதில் படர்ந்தது நிம்மதி..

    ***

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #312
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி சிவமாலா..முன்பு போல் மரபு எழுத ஏனோ கொஞ்சம் சோம்பல் எனில் தான் மனக்கொதிப்பு வந்த்து..இப்பொழுது மாறுமென நினைக்கிறேன்...

  4. #313
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நன்றுசெய்தீர் நகைச்சுவை! வென்றீரே! கேட்போரின்
    னொன்றுதாரீர் என்றென்றும் உகந்திடும் வண்ணமாய்!

    type of verse: தாழிசை
    Last edited by bis_mala; 3rd December 2011 at 12:22 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #314
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    இதையே உங்களுக்குக் குறள்வெண்பாவாக:

    நன்றுசெய்தீர் வென்றீர் நகைச்சுவையால் கேட்போர்இன்
    னொன்றென் றுகந்து நிற் பார்!

    மரபும் மகிழ்வு தருவதே.
    மறவாமல் --
    இயலும் போதெலாம்
    எடுத்துக்கொள்ளுங்களேன்!
    Last edited by bis_mala; 3rd December 2011 at 12:16 AM. Reason: line space
    B.I. Sivamaalaa (Ms)

  6. #315
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    வயிற்றுப் பிழைப்புக்கு வாய்த்ததொழில் தன்னை
    உயர்த்திப் பிடித்தல் கடன்.

    வேலையின் நீங்கியது யாதெனினும் நாளைப்போய்
    நன்கமையச் செய்தல் நலம்.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #316
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ந்கச் சுற்று

    பெண்ணே பெண்ணே
    எத்தனைநகங்களை நீ வளர்த்தாய்
    எத்தனை நகங்கள் நீ அழித்தாய்
    வளர்ப்பதும் நீதான் அழிப்பதும் நீ தான்
    உலகினில் முதன்மை நீ தானே

    வாழ்க்கை என்னும் நாடகத்தில்
    பிரச்னைக ளெல்லாம் நகச்சுற்று
    எலுமிச்சம் பழத்தை
    விரலினில் வைத்து
    தீர்ப்பது நமது பெண்ணினமே.
    *.*
    கட் பண்ணினா
    **
    ஒண்ணாம் சுற்று
    **
    கட் பண்ணினா..
    **
    வாம்மா பவித்ரா வா
    வெள்ளிக்கிழமையும் அதுவுமா
    வ்ந்திருக்க “
    “ மஹாதேவன்
    ஒங்கள பாக்க வரலை
    எங்க நித்யா...”
    “உள்ள பூஜைல்ல இருக்கா”” “
    “சொல்லு பவி.பிரசாதம் எடுத்துக்கோ””” “.”
    “நித்தி..
    ந்ல்லா நடிக்கிற..” என் வாழ்க்கைய
    அழிச்ச நீ உருப்பட மாட்டே“
    “ நா எதுக்கு நடிக்கணும்” “
    “லுக்..
    உன்னோட ரெண்டாவ்து புருஷனை
    நான் காதலிப்பது உண்மை தான்
    அதுக்காக
    என் புருஷன் நீ மாட்டி விட்டா..
    நா ஒண்ணும் சும்மா இருக்க மாட்டேன்..”
    “பவி.. பேசறதப் பார்த்துப் பேசு..
    சாதாரணமா இருந்தா அது அரிசி..
    வெந்துச்சுன்னா அது சாதம்..” “
    “பவித்ரா கோச்சுக்காதம்மா..
    இப்போ நித்தி என்ன பண்ணிட்டா..” “
    “மஹாதேவன்
    ஒங்களுக்குச் சொன்னா புரியாது...
    ஆஆ..”ன் “
    “ ப்வி என்னாச்சு....
    ஒக்காரு நெஞ்ச நீவி விடறேன்
    இந்தா மாத்திரை..” “

    *
    கட் பண்ணினா
    *
    முன்னால ஒங்க தலை
    வழுக்கையா இருந்தது
    தொட்டா வழுக்கும்
    இப்போ
    இந்த ஆயில் யூஸ் ப்ண்ணினதுக்கப்புறம்
    பாருங்க
    முடி வளராட்டாலும்
    நல்லா சொரசொரப்பாயிடுச்சுல்ல...
    எங்கே
    ஒங்க தலையில கைய வச்சு
    சொல்லுங்க *
    *
    கட் பண்ணினா
    *
    சொல்லு ராஜ் எப்படி இருக்கே
    ஏதோ சோகமாப் போறது பாஸ்
    இப்ப என்ன சோகம் உனக்கு
    நா அவளக்காதலிக்கறேன்
    ஆனா அவ தங்க என்னைக் காதலிக்கிறா
    அவ அப்பாவோ
    “ என்னடா சொல்ற
    அவ அப்பாவும் உன்னைக் காதலிக்கிறாரா
    ச்... அவ அப்பா பணத்த்க் காதலிக்கிறார்
    இதோ அவரே வராரே..””
    “ஹலோ மகாதேவன் சார்”
    “ ராஜ் ஒன்னால என்னோட
    மகள்கள் படற கஷ்டம் இருக்கே..”
    நீங்க சொல்றது புரிலை..
    டேய் எங்க வாழ்க்கையில ஏன் விளையாடறே
    என்ன சார் மரியாத தவறுது
    ஒங்க வாழ்க்கை என்ன கிரிக்கெட் கிரெள்ண்டா..
    ஆமாடா ஆமா அதான் நீ
    வைட் வைடா போடற பாயுறே
    ராஜ் நீங்க ரெண்டு பேரும்
    பேசிக்கறது சுத்தமாப் புரியலை..
    ”மஹாதேவன் காம் டவுன்
    .” என்னத்தடா காம்டவுன்
    இதோ கத்தி இவனக் குத்தறேன் பாரு..
    ஆஆஆ
    *
    கட் பண்ணினா.
    *
    ஹேய்
    டயர்டா இருக்கீங்களா..
    ஏன் பேசமாட்டேங்கறீங்க..
    இந்தாங்க க்ரூ காபி...
    வாவ் ரொம்ப நல்லா இருக்கு
    டிகாக்*ஷனா..
    போங்க..ஒரு சேஞ்ச்க்கு
    கொஞ்சம் டீத்தூள் கலந்தேன்...
    வாழ்க்கையில் சேஞ்ச் வர
    க்ரூ காப்பி அருந்துங்கள்...
    *
    கட் பண்ணினா
    *
    ” பெண்ணே பெண்ணே
    எத்தனைநகங்களை நீ வளர்த்தாய்
    எத்தனை நகங்கள் நீ அழித்தாய் *
    *
    இரண்டாம் சுற்று
    *
    அச்சச்சோ
    அதுக்குள்ள ரெண்டாவதா
    யாருப்பா அது
    மலேசியா தோழிய
    மரபுக்கவித போடச்சொல்லு
    *

  8. #317
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்றைய முன் தினம் சந்திரகிரகணம்..அலுவலகத்திலிருந்து திரும்பும் போது முக்கால் வாசி மறந்திருந்தது நிலா –இரவுஆறரை மணிவாக்கிலேயே... வீடு வந்து கிரகணம்விலகவிலக அப்பாடா விட்டுட்டான்யா விட்டுட்டானென மகிழ்வோடு சிரித்தது போலிருந்தது..அன்றே எழுதிப் பார்த்தது தான்.. நேற்று வலையுள்ளேயே வரமுடியவில்லை..இன்று தானிட முடிந்தது
    புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி அருகே என்பது அதிகரீணி..தேமாங்கனி என எழுதிப்பார்த்தேன்

    ஆங்கேநிலா மெதுவாகவே அகத்தைமறைத் திடவே
    தூங்காமனத் துயர்போலவே இருள்கூடிய வானும்
    நீங்கும்மணித் துளியாலதும் நிறைவாகவே வெளிற
    தீங்கேயிலா பால்போலவே திதிப்பாய்மதி சிரிக்கும்

  9. #318
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நே........................
    புளிமாங்கனி புளிமாங்கனி புளிமாங்கனி அருகே என்பது அதிகரீணி..தேமாங்கனி என எழுதிப்பார்த்தேன்

    ஆங்கேநிலா ......................... திதிப்பாய்மதி சிரிக்கும்
    I enjoyed this marabuk kavithai. Well done.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #319
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    your dialogue submissions.........

    வஞ்சிவிருத்தம்.

    ஆடும் மயில்களவை அடுத்திருந்தீரோ!
    பாடும் குயில்கள்செவி மடுத்திருந்தீரோ!
    கூடும் இவர்களுரை எடுத்துரைத்தீரே
    தேடும் முயற்சியறத் தொடுத்துவைத்தீரே.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #320
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஈரா யிரத்துப் பன்னிரண்டு --யார்க்கும்
    இனிய ஆண்டாய் மலரட்டும்.

    யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Note: Please do not p-m me, I cannot access my message folders,
    B.I. Sivamaalaa (Ms)

Page 32 of 51 FirstFirst ... 22303132333442 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •