-
7th November 2012, 10:08 AM
#1161
Junior Member
Seasoned Hubber
Mr Gopal Sir,
Wish you many more happy returns of the day.
-
7th November 2012 10:08 AM
# ADS
Circuit advertisement
-
7th November 2012, 10:14 AM
#1162
Junior Member
Newbie Hubber
Dear Mr.Sivaji senthil,
Thank you for your wishes. I am dreaming about the day of conferring life time achievement Oscar for our God.
Parthasarathy Sir,
Many thanks for your kind wishes.
Thank you vasudevan sir.
-
7th November 2012, 11:50 AM
#1163
Senior Member
Senior Hubber
Happy Birthday to S.Gopal
Wish you many more happy returns of the day to S.Gopal.
-
7th November 2012, 11:55 AM
#1164
Senior Member
Diamond Hubber
Happy birthday Gopal, S. Great that you share same birthdate with Kamal.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
7th November 2012, 12:17 PM
#1165
Junior Member
Newbie Hubber
Thanks a lot Rakesh, Kalnayak .
-
7th November 2012, 01:34 PM
#1166
Senior Member
Devoted Hubber
Dear gopal sir,
wish you a very happy and cheerful birthday
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
7th November 2012, 02:53 PM
#1167
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் சாரதி,
உண்மையிலேயே மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து எழுதப் பட்ட பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் படத்தைப் பற்றி ஒரு பத்திரைகயில் அந்தக் காலத்தில் விமர்சிக்கும் போது இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதே கிருதா நீளம் குறைவாக ஒரு சில பிரேம்களில் வருவதைக் குறை கூறி விமர்சித்து எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தொழில் நுட்பம், அதாவது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாக எடுத்திருக்கக் கூடிய விஷயம் தெரியாமலிருந்திருக்காது. என்றாலும் விமர்சித்திருந்தார்கள். இதுவே வேறொரு நடிகராயிருந்திருந்தால் ஆஹா என்னே அவருடைய ஆற்றல், என்று வானளாவ பாராட்டியிருப்பார்கள்.
ஒரு வேளை பார்த்தசாரதி என்கிற ரசிகர் இதையெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதுவார் என்று விட்டு விட்டார்களோ...
இதோ அந்தக் காட்சி நமக்காக
அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அதை விட என் வேண்டுகோளை ஏற்று "அன்னை இல்லம்" படத்தில் இடம் பெற்ற அந்த அரிய காட்சியைப் பதிந்ததற்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
7th November 2012, 03:09 PM
#1168
Senior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சாரதி,
நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.
மீண்டும் நன்றி சாரதி.
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. கூடவே, முதல் மரியாதை படத் தகவலையும் அளித்து, சுவையைக் கூட்டி விட்டீர்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
7th November 2012, 03:18 PM
#1169
Senior Member
Senior Hubber

Originally Posted by
Vankv
இப்போது தான் நான் bloggers ஆல் முன்பு எழுதப்பட்ட write-ups களை படித்து வருகிறேன். சிலவற்றை open பண்ணமுடியாமல் இருக்கிறது. ஆனாலும் அதிலுள்ள தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் சிவாஜி கணேசன் பற்றிய எனது ரசனையைப் பிரதிபலிப்பவையாகவுமுள்ளன. உதாரணமாக திரு பார்த்தசாரதியின் பதிவுகள் மிகவும் நன்று. மற்றும் திரு ராகவேந்திரா, திரு முரளி திருமதி சாரதா, பம்மலார் போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது நடிகர் திலகம் பற்றிய அறிவில் நான் இன்னும் ஆரம்பப்பாடசாலையைத் தாண்டவில்லை (in terms of the knowledge of his nuances as well as the behind the scene info). நான் எனது பல்கலைக்கழக நாட்களில் சிவாஜி பற்றி யாருடனாவது பேசுவதற்கு ஆவல் இருந்தாலும் சரியானவர்கள் கிடைக்கவில்லை. எனது வீட்டினர் சிவாஜி ரசிகர்களாக இருந்தாலும், அவரது நடிப்பைப்பற்றிப் பேசுவதற்கு சரியானவர் கிடைக்கவில்லை. எங்கள் நாட்டின் சூழ்நிலையில் எண்பதுகளில் சிவாஜியின் முழுப்படங்களும் யாழ்ப்பாணத்துக்கு வருவதுமில்லை . 70 களில் 10, 12
வயதாக இருந்தபோது நல்ல சிவாஜி படங்களை அதுவும் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ பார்த்ததுடன் சரி. அதற்கும் கூட கண்டிப்பான அப்பாவிடம் அனுமதி கேட்பது கடினமான காரியம்.! நான் ஒழுங்காக சிவாஜி படங்களைப் பார்க்கவும் சேர்க்கவும் ஆரம்பித்தது 90 ல் நான் லண்டன் சென்றபின் தான். ஒரு 100 சிவாஜி படங்கள் (எல்லாம் vhs) சேர்த்தேன். இப்போது அவைகள் பழுதடைந்ததும் dvd, pendrive, external hard disk போன்றவற்றில் மறுபடியும் சேர்த்து வருகிறேன். நீங்கள் எல்லோரும் எப்படி சிவாஜி படங்களை சினிமா தியேட்டர்களில் விசில் அடைத்து ஆரவாரத்துடன் பார்த்தீர்கள் என்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது! எனக்கு அப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்ததன. லண்டனில் once more மற்றும் பசும்பொன் திரையிடப்பட்டன. அப்போது ரசிகர்களின் விசில் சத்தம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, once more சிவாஜி ஒரு கையில் mobile phone உடன் தனக்கேயுரிய கம்பீரமான நடையில் வரும்போது ஒரே விசில் ஆரவாரம்!! இதே போல் சிவாஜியின் பழைய படங்களை சக ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்க்க ஆசை. நான் தமிழில் பதிவை இடுவதற்கு திரு ராகவேந்தர் மற்றும் திரு முரளியின் குறிப்புகள் உதவின, நன்றி.
அன்புள்ள திரு. Vankv அவர்களே (தங்களது பெயர்?),
உங்களுடைய பாராட்டுக்கு நன்றி.
நடிகர் திலகத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் / இருப்பார்கள்.
பத்து நாட்களுக்கு முன், வட இந்தியாவில் உள்ள லக்னோவுக்கு ஒரு வேலையாக என் குடும்பத்துடன் சென்றிருந்தோம். என்னுடைய நண்பர் மூலம் அங்குள்ள ஒருவருடைய உதவியால் சென்ற இடத்தில் சில வேலைகளை சுலபமாக முடிக்க முடிந்தது. மாலை அவருடைய வீட்டிற்குச் சென்று உரையாடிக் கொண்டிருந்த போது, அவ்வீட்டின் குடும்பத்தலைவி (அரசு உயர் பதவியில் வேலை செய்பவர்), நடிகர் திலகத்தைப் பற்றி பேசி, குறிப்பாக, "கர்ணன்" படத்தை சிலாகித்து நினைவு கூர்ந்தார்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
7th November 2012, 03:44 PM
#1170
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
பார்த்தசாரதி சார்,
உங்கள் அன்னை இல்லம் பதிவை மிக மிக ரசித்தேன். என்ன ஒரு நுணுக்கமான கவனிப்பு!! பிரத்யேக ரசனையின் சொந்தக்காரரே! நாங்கள் பிரம்மாண்டத்தை சுருக்கி வரையும் சாதாரணர்கள். நீங்கள் குறுகியதை விரித்து விவரிக்கும் உன்னத கற்பனையாளர். நீங்கள் குறிப்பிட்ட படியே,
பல பொருளாதார தடைகள், நடிக நடிகையர் கால்ஷீட் பிரச்சினை(எல்லோரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் அதிக பிரச்னை),ஒரே நடிகர் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு படப்பிடிப்புகள்,நேர பற்றாக்குறை,பிலிம்-ரோல் பற்றாக்குறை என்ற பல்வேறு கஷ்டங்களிலும்,
கஷ்டமேயில்லாத ஒரே விஷயம், நடிகர் திலகத்தின் continuity shots தான்.மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
இந்தக் காட்சியைப் பற்றி அலை பேசியில் உங்களுடனும், திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. முரளி அவர்களிடமும் சொன்ன அதே விஷயம் தான்.
எப்படி இந்த விஷயம் சாத்தியப் பட்டது? கற்பனையும், நடித்துக் காட்டும் திறனும் மட்டும் இருந்தால் போதுமா? தொழில் நுட்ப விஷயங்களும் நுணுக்கங்களும் கூட தேவைப் படுகிறதே! இந்தக் காலக் கலைஞர்களுக்கு தொழில் நுட்பம் கிட்டத்தட்ட என்பது சதவிகிதம், நடிப்பும் திறமையும் தான்!!).
அந்த இரண்டு நிமிடக் காட்சியில், கடைசி சில நொடிகளுக்கு முன், ஒரு பத்து நொடிகள் மட்டுமே, வேறு முக ஒப்பனையில் வரும் காட்சியை மட்டும் பார்த்தோமேயானால், க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். லாங் ஷாட்டில் எடுத்திருந்தால், அது சாத்தியப் பட்டிருக்காது. ஆகவே, ரொம்பவும் சாதுர்யமாக யோசித்து, க்ளோசப்பில், எடுக்க வைத்து, அதற்கு முன் வரும் ஒன்றே முக்கால் நிமிடங்களுக்கு என்ன மாதிரியான எனர்ஜியையும், பாவனையையும் கையாண்டாரோ, அந்த எனர்ஜியையும், உணர்ச்சிகளையும் மட்டும் maintain செய்து எந்த உறுத்தலும் இல்லாமல் அந்த இரண்டு நிமிடக் காட்சியை யாரும் பெரிய அளவிற்கு கவனித்துக் குறை காண முடியாமல் செய்திருப்பார்.
இந்தக் காட்சியின் வெற்றிக்கு, படத் தொகுப்பாளரின் அறிய பங்களிப்பையும் நாம் பாராட்டியே தீர வேண்டும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks