-
5th February 2013, 01:58 PM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
P_R
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.
பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.
முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).
ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.
ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.
Vankv, உங்கள் இளைய மகன்-அப்பா insightஐ ரசித்தேன். கமலும் ஒரு கடைசிப்பிள்ளை.
அப்பாடா,
வந்தாரப்பா இந்த திரியின் கடை குட்டி செல்ல பிள்ளை.
உன்னுடன் 100% உடன் படுகிறேன். நடிகர்திலகத்தின் நடிப்பு, herzog இயக்கிய nosferatu போன்ற படங்களில் உபயோக படுத்த பட்டிருந்தால்,எத்தனை எத்தனை depth கிடைத்திருக்கும். நானே, அவரின் வித விதமான scene களை தொகுத்து ஒரு multi -layered திரைகதையில் கற்பனையில் பொருத்தி பார்ப்பேன்.
Last edited by Gopal.s; 5th February 2013 at 02:02 PM.
-
5th February 2013 01:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks