-
16th March 2013, 11:46 PM
#1
Junior Member
Newbie Hubber
தொலைத்துவிட்டு தேடுகிறேன்
எதையும் மறக்கவில்லை...
நாம் பார்த்த முதல் நாள்,
நீ எனக்களித்த விநாயகர் பொம்மை...
இருவரும் மாலையில் ,
கனாக்கண்டு கட்டி விளையாடும் மணல் வீடுகள்...
தினம் சாப்பிடும் நேரம்,
அடம்பிடித்து ஒன்றாக பசியாறும் நேரங்கள்...
நான்அங்கிருந்து கிளம்பும்போது,
"எப்படா வருவ?" என்று நீ அழுது கதறியதற்கு...
மௌனமும் கண்ணீரும் மட்டுமே நான் தந்த பதில்...
நாம் இணைந்திருந்த நொடிகளை,
நினைத்துப் பார்த்து எழுத கூட முடியவில்லை...
கண்ணீர் தான் முட்டுகிறது என் விழிகளை...
எதையும் நான்
மறக்கவில்லை தோழனே...
இன்னும் உன்னை
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்...
ஒவ்வொரு சாரலின் போதும்,
இந்த நகரத்து வாழ்க்கையில்
எங்கோ தொலைத்துவிட்ட...
மண்வாசனையைத்
தேடுவதைப் போல...
என்னை
மன்னித்துவிடு தோழனே...
உன்னை நான்
தொலைத்துவிட்டு...
இன்னும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்...
-
16th March 2013 11:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks