-
26th March 2013, 08:48 AM
#11
Senior Member
Seasoned Hubber
வணங்காமுடி திரைப்படத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையில் வெளிவந்த கதைச் சுருக்கம்
ஏப்ரல் 1958 ஆண்டு மலர். பக்.144
இளவரசி தேவசுந்தரியும் அவளது தோழியும் உலாவப் போகும் போது ஒரு சிற்பியைக் காணுகின்றனர். இளவரசிக்குக் காதல் பிறந்து விடுகிறது. அந்தஸ்து வித்தியாசம் காரணமாக அவளது காதலை அங்கீகரிக்க மறுக்கிறான் மன்ன்ன். சிற்பியின் தந்தை மன்னனின் மெய்க் காப்பாளன். இளவரசியைக் காதலித்த குற்றத்துக்காக நாடு கடத்தப் பட்ட சிற்பி, வேறொரு இடத்திலே மக்கள் தலைவனாகிறான். மன்னனுக்கு எதிராக படை திரட்டுவதாக பொய்க் குற்றம் சாட்டி, சிற்பியை அவன் தந்தையாலேயே கைது செய்து வர ஏற்பாடு செய்கிறான் தளபதி. மீண்டும் திரும்பி வந்து, இளவரசியை மணப்பதற்காக இத்தனை சதிகளும் புரிந்து மன்னனைக் கைப் பொம்மையாக்கிய தளபதியைக் கொன்று, காதலியின் உதவியுடன் மன்னனின் நல்லெண்ணத்தைப் பெற்று, இளவரசியை மணந்து சுகிக்கிறான் கதாநாயகனான சிற்பி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th March 2013 08:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks