-
10th June 2013, 08:37 AM
#11
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
யாத்ரா மொழி பற்றிய உங்கள் குறிப்புகள் சுவாரஸ்யம் . இந்த படத்தில் நடித்த மலையாள சினிமாவின் சரித்திர கலைஞன் திலகன் ஒரு தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர் என்பது பலருக்கும் தெரிந்தது தான் . மலையாள சினிமாவில் தன்மானத்தின் அடையாளமாக , சூப்பர் ஸ்டார்களையே தண்ணி காட்டிய , தனக்கு Best supporting actor விருது கிடைத்த போது "supporting actor என்ற ஒன்றே கிடையாது . நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு நான் நாயகனே தவிர யாருக்கும் சப்போர்ட் செய்வதற்காக நான் நடிக்கவில்லை என சொல்லி அந்த விருதை மறுத்த தெளிவும் துணிவும் உள்ள கலைஞன் திலகன் மனதார பணிந்து வணங்குது தான் குருவாக நினைக்கும் நடிகர் திலகத்தை தான் .யாத்ரா மொழியில் கூட தான் நடிகர் திலகத்தை பணிந்து வணங்குவது போல காட்சியமைப்பை வைக்கச் சொன்னதே திலகன் தானாம் ..இது குறித்து மேலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
10th June 2013 08:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks