Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தர்மம் எங்கே -1972

    சிவந்த மண் நவீன மயமாக்கப்பட்ட ஒரு ராஜா கதை. அதன் மிக மிக பிரம்மாண்ட வெற்றி (பத்து திரையரங்குகளில் நூறு தாண்டியது) வீரத்திருமகன் திருலோகச்சந்தரை(ஒரு ஆங்கில பட பாதிப்புடன்) தூண்டியிருக்கலாம். சிவந்த மண்ணின் வெற்றியின் ரகசியம் defined character establishment &Identity ,சுவாரஸ்யமான திரைக்கதை(கதாநாயகன் திட்டமிட்டு வில்லனை ஒழிக்க பார்க்கும் ),திருப்பங்கள், பிரம்மாண்டம், மிக மிக சிறந்த இசையமைப்பு,சிவாஜி-காஞ்சனா இளமை,சிறந்த நடிப்பு, மிதமான வசனங்கள் இன்னும் பல பல அடுக்கலாம்.

    தர்மம் எங்கே படத்தில் அக்கிரமம் புரியும் ராஜபிரதிநிதியை எதிர்க்கும் சாமான்யன் ராஜசேகர் (தன் தங்கையை மணமுடிக்க போகும் பூபதி கொலை பழியில் இருந்து தப்பிக்க)ஆபத்தில் இருந்து தப்பி ,நாடோடி ரூபா,பூபதி துணையுடன் ராஜப்ரதிநிதியை துரத்தி விட்டு ஆட்சியை பிடிக்கிறான். பதவியை எதிர்பார்க்கும் பூபதி பதவி கிடைக்காத ஆத்திரத்தில் உள்ளபோது பழைய ஆட்சியாளரின் நண்பர்கள் தூண்டுதலால் ராஜசேகரை எதிர்க்க, இது தப்பித்த ராஜபிரதிநிதியின் சதி என்று கண்டு கடைசி காட்சியில் சுபமாக முடியும் சுலப கதை.

    சுதந்திர பூமியில் பல வகை என்று NT ராஜசெகரனாய் பூ விற்பதில் தொடங்கி நம் காதில் வாடிய பூக்களை சரம் சரமாய் சுற்றுவார்கள்.காமா சோமா பாத்திரங்கள் ,சுவாரஸ்யம் இல்லா ஏனோ தானோ திரைக்கதை, யாருக்கு என்ன ஆனால் என்ன என்று நாம் கதைக்குள்ளே நுழையவே தோன்றாமல் நெளிய ஆரம்பிப்போம். ஒரு நகைச்சுவை காட்சி வந்து நம்மை நிமிர வைக்கும்.அது ராஜசேகரன் வடக்கு பகுதியை வீரசிம்ம வல்லவராயருக்கும்,தெற்கு பகுதியை திருவுடையானுக்கும்,கிழக்கு பகுதியை அறிவுடை நம்பிக்கும்,மேற்கு பகுதியை நல்ல தம்பிக்கும் கொடுத்து பூபதிக்கு பெப்பே காட்டும் காட்சி.பதவி பெறுவோர் தோளோடு தோள் நின்றவர்கள் என்று வசனத்தில் சொல்ல பட்டாலும் ,அதுவரை படத்தில் காட்ட பட்டிருக்கவே மாட்டார்கள்.முத்துராமனை விட அதிக வெறி பார்வையாளர்களுக்கு வரும்.

    நடிகர்திலகத்திற்கு விக் பொருந்தாவிட்டாலும் அந்த முக அமைப்பு மிக அருமையாய் இளமையாய் இருக்கும்.மேற்சட்டை மட்டும் பிரபுக்கள் கால மோஸ்தரில் இருக்கும்.கால்சட்டை நார்மல்.

    இந்த படத்தில் சில மின்மினிகள் இல்லாமல் இல்லை.(திருலோக சந்தர் ஆயிற்றே?)நடிகர்திலகம்-கலைச்செல்வி(உதவி புரியும் நாடோடி பெண் ) chemistry அவ்வளவு அருமையாக வந்திருக்கும். பதவி கொடுக்கும் காட்சியில் அங்கு அமர்ந்திருக்கும் ரூபா ,ராஜசேகரனை அதே பாவனைகளை மிமிக் செய்து கலாய்த்து ,கவனம் தவற செய்வது, ஒவ்வொரு முறை காதலை சொல்ல வரும் போதும் யாராவது இடைஞ்சல் செய்வது, டீசிங் செய்து காதலை வெளியிடும் போது ஒருவரையொருவர் பலமாகவே அடித்து கொண்டாடுவது ,பள்ளியறைக்குள் பாடல் காட்சி இவையெல்லாமே படு பிரமாதமாய் வந்திருக்கும்.நடிகர்திலகம் ஒரு கலீபா பாணியில் ஆட்சி புரிந்து (பழைய சட்டையை தானே தைப்பது)வரும் போது தன் மைத்துனன் பூபதி மேல் குற்றம் சாட்டும் மார்த்தாண்டன் என்பவன் மேல் ஆத்திரப்பட்டு ஒரு கணம் பழைய ஆட்சியாளன் போலவே நடக்க முற்படும் இடம் அருமையான ஒன்று.

    என் தம்பிக்கு பிறகு கத்தி சண்டையில் நன்கு perform பண்ணினாலும், highlight சண்டை காட்சி நம் வாசு சார் போட்ட முதலில் பிடி பட்டு தப்பி ஓடும் காட்சி மிக அருமையாய் நடிகர்திலகம் ரிஸ்க் எடுத்து செய்திருப்பார்.

    மெல்லிசை மன்னர் பாடல்களில் சுதந்தர பூமியில் ,வீரமென்னும் பாவை,பள்ளியறைக்குள் மூன்றும் சுமாரை விட மேல் ரகம். Re -Recording வழக்கம் போல. தர்மம் எங்கே, நான்கு காலங்களும் (காலத்தை வென்ற counter ?) படுத்தல்.

    1972 முழுவதும் நாம் அதிகம் எதிர்பார்ப்பு வைக்காமல் மெகா ஹிட் ஆனவை வசந்த மாளிகை,பட்டிக்காடா பட்டணமா என்ற வைரங்கள்.எதிர்பார்த்த படி எதிர்பார்த்த வெற்றி கோட்டை தொட்ட படங்கள் ராஜா,ஞான ஒளி, தவப்புதல்வன்,நீதி ஆகியவை.நிறைய எதிர்பார்ப்பு வைத்து ,பிரம்மாண்ட opening பெற்றும் சுமார் வெற்றியடைந்தது தர்மம் எங்கே?

    இவ்வளவு பிரம்மாண்ட தயாரிப்பு (பெரியண்ணாவின் முதல் கலர் படம்) ,நட்சத்திர குவியல்,சிறந்த வசனகர்த்தா,நல்ல டீம் அமைந்தும் திருலோகச்சந்தரின் பொறுப்பற்ற சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் கோட்டை விட்ட படம்.
    Last edited by Gopal.s; 28th August 2013 at 10:35 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •