Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (10)

    அன்று பிரபலமாய் ஒலித்த இன்னொரு சுறுசுறு பாடல். எல்லோர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட பாடல்.

    'மழை மேகம்' படத்தில் அழகான ஒரு பாடல்



    அப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரியாது. முத்துராமன், சாரதா இணை.

    புலமைப்பித்தன் வரிகளுக்கு 'திரை இசைத் திலகம்' மியூசிக்.

    யாரோ இளசுகள் ரெண்டு ஆடும் என்று நினைத்திருந்தால் கொஞ்சமும் எதிர்பாராமல் நம் முத்துராமனும், சாரதாவும் இளமை புத்துணர்ச்சியுடன் டூயட் பாடுகிறார்கள்.

    முத்துராமன் பொதுவாக டூயட் பாடல்களில் 'எனக்கென்ன' என்று மசமசவென இருப்பார். இப்பாடலில் பரவாயில்லை. சாரதாவுடன் ஓடுகிறார்...துரத்துகிறார்... சாரதா நெஞ்சத்தில் வாசனை பிடிக்கிறார்.... குதிரையெல்லாம் ஓட்டி சாரதாவை ஓட்டுகிறார்.

    நம் 'புவனேஷ்ஷ்.......வரி'க்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஸ்ரீகாந்திடம் ஏமாந்து போய் கண்ணீர் விடத்தான் மிகப் பொருத்தமானவர்.

    கே.வி.எம்மிடம் ஒரு குறை. அவரது வாத்தியக் கருவிகளின் இசையைக் மிக ஈஸியாக கண்டு பிடித்துவிடலாம். 'வாணிராணி' 'வசந்தமாளிகை' 'எங்கள் தங்க ராஜா' படப்பாடல்களின் இடையிசை நமக்கு அப்படியே ஞாபகத்திற்கு வருகிறது. மனிதர் மாற்றவே மாட்டார். ஆனால் டியூனில் மட்டும் ஏமாற்றவே மாட்டார்.

    வழக்கமான அதே சமயம் துறுதுறுப்பான சுலீலா, பாலாவின் வளமையான குரல்களின் பின்னணியில்.

    இனி பாடல் வரிகளில் சங்கமிப்போம்.


    ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
    ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
    உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
    ஒன்றில் ஒன்று கூடட்டும்
    ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.

    ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
    ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
    உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
    ஒன்றில் ஒன்று கூடட்டும்
    ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.

    மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
    மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து

    மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
    மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து

    வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
    மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து

    பாடம் சொல்லக் கூடாதோ
    பார்வை ஒன்று போதாதோ

    ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
    ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது

    எண்ணிரண்டு ஆண்டுகள் எழுதிய பாட்டு
    என்னை உன் இடையென்னும் சிறையினில் பூட்டு

    மங்கள இசை தரும் வீணையை மீட்டு
    மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு

    மாலைத் தென்றல் தீயாக
    காணும் இன்பம் நீராக

    உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
    ஒன்றில் ஒன்று கூடட்டும்
    ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா

    ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
    ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
    உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
    ஒன்றில் ஒன்று கூடட்டும்
    ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா...ம்ம்ஹுஹும்...


    பாடலில் பாலா பாடிக்கொண்டிருக்க அவரோடு சேர்ந்து சுசீலா ஹம்மிங்கில் இணைந்து இழைய, பின் சுசீலா பாட, அவரோடு சேர்ந்து பாலா ஹம்மிங் தர நாம் அனுபவிப்பது கோடைக்கால தென்றலின் சுகம்.

    கிருஷ்ணா சார்,

    'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் 'மெல்லிசை மன்னர்' இசையில் ஒலிக்கும்

    'Look Love Me Dear
    Lovely Figure
    lasting colour
    வெண்மேகமே ஓடிவா
    என் உள்ளத்திலே வெள்ளிப்பனி அள்ளித்தெளி
    சங்கீதமே பாடி வா'

    பாடலின் டியூனும், 'ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாட்டின் ஆரம்ப இசையும்' அப்படியே ஒன்றாக இருக்கும்.


    மேல்கொண்டு எழுதினால் வம்பு வளப்பதற்கென்றே ஒரு கேஸ் அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு தீனி போட்டாற்போன்று ஆகிவிடும்.

    பாடலை ஒருமுறை பார்த்து விடலாமா!


    Last edited by vasudevan31355; 22nd June 2014 at 01:09 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •